26-02-2026, 09:02 AM
பெட்டிக் கடையை ஒட்டின மாதிரி ஒரு தார்சாலை சென்றது. அதில் நடக்கத் தொடங்கினான் மனோ.
நன்றாக வெயில் அடித்தது. சில நிமிட நடைக்கே வியர்த்து விட்டது.
வீட்டை அடைந்தான். வீட்டின் முன்பாக, சற்று தள்ளி அகலப் படர்ந்த ஒரு அரச மரம். அதனடியில் பிள்ளையார் கோவில்.
கோவில் மேடை காலியாக இருந்தது. யாரையும் காணவில்லை.
மர நிழலில் இரண்டு நாய்கள் படுத்திருந்தன. அவனை அறிந்த நாய்கள் அவை. அதனால் அவனை லட்சியம் பண்ணவில்லை.
அவன் வந்ததை தலையை தூக்கிப் பார்த்த நாய்கள் அவனைப் பார்த்து வாலை மட்டும் ஆட்டிவிட்டு மீண்டும் தலையை சரித்துப் படுத்துக் கொண்டது.
வீட்டைப் பார்த்தான். முன்பக்க வேலிப் படல் சாத்தியிருந்தது. முன்பக்க வீட்டுக் கதவு பூட்டியிருந்தது.
வீட்டுச் சாவி இருக்கும் இடம் அவனுக்கு தெரியும்.
வீட்டு வாசல் படலை நோக்கி நடந்தான்.
“அண்ணா..” பக்கவாட்டு வீதியிலிருந்து குரல் கேட்டது.
குரல் வந்த திசையில் பார்த்தான்.
கான்க்ரீட் வீதி. அரச மரத்துக்கு அந்தப் பக்கம் இருந்த இன்னொரு வீட்டு வேலிப் படலுக்குள் அந்தப் பெண் நின்றிருந்தாள்.
முத்தமிட்ட உதடுகள்
https://xossipy.com/thread-13529.html
இச்சை மனது
https://xossipy.com/thread-69791.html
இச்சைப் புல்வெளி
https://xossipy.com/thread-70816.html
https://xossipy.com/thread-13529.html
இச்சை மனது
https://xossipy.com/thread-69791.html
இச்சைப் புல்வெளி
https://xossipy.com/thread-70816.html


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)