07-01-2026, 01:31 AM
கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தாள் திவ்யா. மூக்கை உறிஞ்சினாள்.
ஆனால் திவ்யாதான் கண்களைத் துடைத்துக் கொண்டு கனத்துப் போன மனதுடன் போய் படுக்கையில் விழுந்தாள்..!!
அழுததால் அவள் மனதின் பாரம் சற்று குறைந்திருந்தது.
கிழக்கு திசையைப் பார்த்தாள். பாறைகள் தெரிந்தன. அதன் மேல் அவரகளைக் காணவில்லை.
ஒரு நெடுமூச்சு விட்டு மெதுவாக எழுந்தாள். புடவை முந்தானையை இழுத்து விட்டாள். மார்பில் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டாள்.
புடவைத் தலைப்பை சுருட்டிப் பிடித்தபடி தண்ணீர் தொட்டியின் அருகே போனாள்.
இடது கையில் புடவையைச் சுருட்டி தொடைகளுக்கிடையில் சொருகிக் கொண்டு பைப்பை திருகினாள்.
வெயிலின் சூட்டில் தண்ணீர் கொதித்தது. சிறிது நேரம் தண்ணீரை கீழே போக விட்டாள்.
தொட்டுப் பார்த்து தண்ணீர் குளிர்ச்சியாக வரத் தொடங்கிய பின்னர் முகம் கழுவினாள். கால்களை நனைத்தாள்.
இரு கைகளையும் ஏந்தி தண்ணீர் அள்ளி குடித்தாள். கொஞ்சம் வயிறு நிறைந்தது.
முந்தானையால் முகம் துடைத்தபடி.. தண்ணீரை நிறுத்தி விட்டு வேப்ப மர நிழலுக்குப் போய் நின்று.. மலையடிவரத்தில் தெரியும் சத்தியங்கலம் சாலையில் செல்லும் வாகனங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
திரும்பி வந்த பிரமிளா நேராகப் போய் முகம் கழுவினாள்.
அவளுக்குப் பின்னால் சிறிது இடைவெளி விட்டு வந்த நவநீதன் ஒரு விதமான குற்ற மனப்பான்பையுடன் திவ்யாவைப் பார்த்தான்.
அவளே இப்போது புன்னகைத்தாள். அவனும் புன்னகைத்தான்.
"பூசாரி வந்தாரா?" என்று மெல்லிய குரலில் கேட்டான்.
உதட்டைப் பிதுக்கி தலையை குறுக்காக ஆட்டினாள் திவ்யா.
"ம்கூம்"
"போலாமா ?"
" ம்ம் "
திரும்பி பிரமிளாவைப் பார்த்தான்.
அவள் மார்பு தெரிய தாவணி தலைப்பை இழுத்து சொருகியபடி.. கிட்டத்தட்ட ஒரு மினி குளியல் போட்டுக் கொண்டிருந்தாள்.
அவள் கழுவி வந்த பின்.. அவன் போய் கை கால் முகம் எல்லாம் கழுவினான்.. !!
திவ்யா இப்போது மனசு தேறியிருந்தாள். அதனால் பிரமிளா சிரித்து பேசியபோது அவளும் சிரித்தாள்.
“நீயும் வந்துருக்கலாண்டி நல்லாருந்துச்சு” என்றாள் பிரமிளா.
‘'ஏதாவது பேசினிங்களா?" திவ்யா ரகசியம் போலக் கேட்டாள்.
“என்னது?"
“என்னைப் பத்தி.. ஏதாவது?"
"ம்.. பொதுவா கேட்டேன்"
“என்ன சொன்னாப்ல?
"எனக்கு நம்பிக்கை இல்ல"
“ஏன்..?"
‘'உங்கண்ணனோட நட்பு தடுக்குது"
“சினிமாத்தனமா இருக்கு இதெல்லாம்"
'’என்ன பண்றது அதுக்கு.? இதெல்லாம் அவங்கவங்க மனசை பொறுத்த விஷயம். இதே உன் மேல லவ் வந்திருந்தா உங்கண்ணன் எல்லாம் ஒரு காரணமாவே இருந்துருக்க மாட்டான். இதுக்கு மேல நான் சொல்ல விரும்பல.. சொன்னா நீ என் மேலதான் கோபப் படுவ. நீயே புரிஞ்சிக்க.." என்றாள் பிரமிளா.
நவநீதன் வந்த பிறகு.. மூன்று பேரும் பேசியபடியே மலையை விட்டு இறங்க ஆரம்பித்தனர்..!
அன்று இரவு, திவ்யாவின் வீட்டில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள் தோழிகள் இருவரும்.
“எனக்கு மனசே செரியில்லடி" என்றாள் திவ்யா.
ஆனால் பிரமிளா மகிழ்ச்சியாக இருந்தாள். நவநீதன் மேல் அவளை அறியாமலே ஒரு ஆழமான ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது அவளுக்கு.
“ஏன்?” பிரமிளா கேட்டாள்.
“என்னமோ தெரியல. மனசு ரொம்ப பாரமா இருக்கு "
“ரொம்ப அலட்டிக்காத விடு"
“மனசு அவனையேதான் சுத்தி சுத்தி வந்துட்டிருக்கு”
“ஏய் அது வேஸ்ட்ப்பா"
"புரியுதுடி. ஆனா" என்றபோது வாசலில் பைக் சத்தம் கேட்டது.
அன்பு வந்து விட்டான்.
"உங்கண்ணன் வந்துட்டான்" என்றாள் பிரமிளா.
அன்பு விசிலடித்தபடி உள்ளே வந்தான். அவன் தலைமுடி கலைந்திருந்தது.
"ஹாய் பல்லி" பிரமிளாவைப் பார்த்து சிரித்தான்.
அவனை முறைத்தாள் பிரமிள.
“என் பணம் எங்க?"
“உன் பணமா..? நீ எப்ப குடுத்த?"
“அடப்பாவி.. நல்லாருப்பியா நீ..?"
"ஏய்.. ஒடனே சாபம் குடுக்காதடி. இப்பல்லாம் பத்தினிக சாபம்தான் பழிக்கறது இல்ல" என்று சிரித்தான்.
“அடத் தூ" வெறுப்புடன் திவ்யா எழுந்து வெளியே போனாள்.
என் காசை குடுடா " என்றாள் பிரமிளா.
"தரேன்டி. இன்னும் சம்பளம் வாங்கல"
" தந்துருவ இல்ல?"
"உன் அது மேல சத்தியமா தந்துருவேண்டி" என்று சிரித்தான்.
அவன் பார்வை அவள் மார்பைக் காட்டியது.
"என்ன இன்னிக்கு தாவணி எல்லாம் கட்டியிருக்க.. ஏதாவது விஷேசமா ?"
"உன் தங்கச்சிக்கு பொறந்த நாள்டா. அதுகூட தெரியாதா?"
"அதெல்லாம் தெரியும். என் கேள்வி நீ எதுக்கு தாவணி கட்டியிருக்கேனுதான்"
'கோயிலுக்கு போனோம்."
திவ்யா பாத்ரூம் போய் விட்டதை எட்டிப் பார்த்துவிட்டு பிரமிளவின் கன்னத்தில் முத்தம் கொடுத்து இடுப்பில் கிள்ளினான் அன்பு.
"உனக்கு எப்ப டி பொறந்த நாளு ?"
“ஏன்.. என்ன தரே எனக்கு ?"
“நாம ரெண்டு பேரும் உன் பொறந்த நாளை கொண்டாடலாம்... பொறந்த மேனியா.!! என்ன சொல்ற..? கிருகிளுப்பா இருக்கும்"
சிரித்தாள் பிரமிளா.
"போடா நாயே.."
“ம்ம் சொல்லுடி. செமையா கொண்டாடிரலாம்”
"போடா" என்று விட்டு எழுந்து வெளியே போனாள்.
திவ்யா வெளியே போய் நின்று வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாள்..!!
"வானத்துல யாரு ஆடறா.?" எனக் கேட்டபடி திவ்யாவின் பக்கத்தில் போய் நின்றாள் பிரமிளா.
திரும்பிப் பார்த்தாள் திவ்யா. உடனே ஒரு ஆழமான நெடுமூச்சை வெளியேற்றினாள்.
"வேற யாரு.. நெலாதான்"
“தனியாவா?"
“பின்ன..? அதுக்கு யாரு ஜோடி?"
இருவரும் மெல்ல புன்னகைத்தனர்.
"ஏய் பல்லி" என்றபடி அவர்களுக்கு பின்னால வந்தான் அன்பு.
பிரமிளா திரும்பி அவனைப் பார்த்தாள்.
" என்ன?
“இந்தா காசு”
" என்ன காசு?"
"நான் உனகிட்ட வாங்கினதுடி, வேண்டாமா..?"
"நீ இன்னும் சம்பளம் வாங்கலேன்ன.?"
"சும்மா " சிரித்தான்.
"செரியான பிராடுடா நீ " என்று விட்டு அருகில் போய் அவன் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டாள்.
“எண்ணி பாத்துக்கோ" என்றான்.
எண்ணிப் பார்த்தாள். இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்கள் அதிகமாகவே இருந்தது.
லேசாக வியந்தபடி,
"எவ்ளோ குடுத்த?” என்று அவனைப் பார்த்தாள்.
"எறநூறு அதிகமா இருக்கா?"
“ஆமா.. ஏன்?
"வட்டி" என்று சிரித்தான் "கேட்டதும் குடுத்த இல்ல. அதுக்கு.”
வியப்புடனே தலையசைத்தாள். பணத்தை சுருட்டி ரவிக்கைக்குள் திணித்தாள்.
"ஏன்டி பணத்த வெக்றதுக்கு உங்களுக்கெல்லாம் ஒரு நல்ல எடமே கிடைக்காதா?" என்று கேட்டு விட்டு திரும்பி உள்ளே போய் விட்டான்.
‘'நம்பவே முடியலடி" என்றாள் பிரமிளா.
"என்ன?" திவ்யா கேட்டாள்.
"எறறுரு ருபா அதிகமா குடுத்துட்டான்"
"அவன்லாம் குடுக்கறதே பெருசு. கெடைச்சவரை லாபம்னு வெச்சுக்கோ.." என்றாள் திவ்யா.
மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின்னர் விடை பெற்றுப் போனாள் பிரமிளா.
அவளைப் பொறுத்தவரை இன்றைய நாள் சிறப்பான ஒரு நாள்தான்.
ஆனால் திவ்யாதான் கண்களைத் துடைத்துக் கொண்டு கனத்துப் போன மனதுடன் போய் படுக்கையில் விழுந்தாள்..!!
முத்தமிட்ட உதடுகள்
https://xossipy.com/thread-13529.html
இச்சை மனது
https://xossipy.com/thread-69791.html
இச்சைப் புல்வெளி
https://xossipy.com/thread-70816.html
https://xossipy.com/thread-13529.html
இச்சை மனது
https://xossipy.com/thread-69791.html
இச்சைப் புல்வெளி
https://xossipy.com/thread-70816.html


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)