Posts: 18
Threads: 1
Likes Received: 36 in 11 posts
Likes Given: 1
Joined: Jul 2026
Reputation:
0
ஹாய் வணக்கம்
நான் விமலா தயாளன்.
இது எனது நிஜ பெயர்தான்.
நீண்ட நாள்களாய் கதை எழுதுகிறேன்.
ஆனால் இந்த ஜானரில் இப்போது தான் கதை எழுதுகிறேன்.
சொல்லக்கூடாத கதைகள் எனது முதல் கதை.
அதை இதில் பதிவிடலாமா?
Posts: 1,167
Threads: 1
Likes Received: 509 in 394 posts
Likes Given: 767
Joined: Dec 2018
Reputation:
8
(16-07-2026, 04:57 PM)Vimala Dayalan Wrote: ஹாய் வணக்கம்
நான் விமலா தயாளன்.
இது எனது நிஜ பெயர்தான்.
நீண்ட நாள்களாய் கதை எழுதுகிறேன்.
ஆனால் இந்த ஜானரில் இப்போது தான் கதை எழுதுகிறேன்.
சொல்லக்கூடாத கதைகள் எனது முதல் கதை.
அதை இதில் பதிவிடலாமா?
தாராளமா எழுதுங்க
•
Posts: 735
Threads: 0
Likes Received: 294 in 253 posts
Likes Given: 485
Joined: Aug 2019
Reputation:
3
You are selling your story in NV website. Why are you posting here. Will it not affect the sales
•
Posts: 1,410
Threads: 2
Likes Received: 676 in 520 posts
Likes Given: 155
Joined: Feb 2019
Reputation:
15
(16-07-2026, 04:57 PM)Vimala Dayalan Wrote: ஹாய் வணக்கம்
நான் விமலா தயாளன்.
இது எனது நிஜ பெயர்தான்.
நீண்ட நாள்களாய் கதை எழுதுகிறேன்.
ஆனால் இந்த ஜானரில் இப்போது தான் கதை எழுதுகிறேன்.
சொல்லக்கூடாத கதைகள் எனது முதல் கதை.
அதை இதில் பதிவிடலாமா?
இங்கே பதிவிடலாம். சீக்கிரமே தங்கள் கதைகளுக்கு காத்திருக்கிறேன்.
•
Posts: 893
Threads: 0
Likes Received: 315 in 280 posts
Likes Given: 570
Joined: Oct 2019
Reputation:
0
18-07-2026, 02:39 PM
(This post was last modified: 18-07-2026, 02:39 PM by Gilmalover. Edited 1 time in total. Edited 1 time in total.)
Will you complete the story if you start. If you can promise you can start.
Many start and stop in middle
•
Posts: 18
Threads: 1
Likes Received: 36 in 11 posts
Likes Given: 1
Joined: Jul 2026
Reputation:
0
இந்தக் கதை எப்படி இருக்கிறது? ரொம்ப இழுவை என்றால் சொல்லுங்க
திருத்திக் கொள்கிறேன்..
•
Posts: 18
Threads: 1
Likes Received: 36 in 11 posts
Likes Given: 1
Joined: Jul 2026
Reputation:
0
24-07-2026, 01:23 PM
(This post was last modified: 24-07-2026, 01:40 PM by Vimala Dayalan. Edited 1 time in total. Edited 1 time in total.)
விமலா பேசுகிறேன்!
நான் வெவ்வேறு சமயத்தில் வெவ்வேறு விதமான பத்திரிகைகளில் பல சமூக கட்டமைப்பு கதைகளை எழுதி இருக்கிறேன் .
ஆனால், முழுக்க முழுக்க பாலியல் உறவு மற்றும் அதன் பின்னணியை எழுத எனக்கு பயங்கர பயம். பருவம் வந்தது முதல் இந்த வயது வரை நான் பல சந்தர்ப்பங்களில் இந்த பாலியல் முகாந்திரங்களை கண்டதுண்டு, பார்த்ததுண்டு, கேட்டதுண்டு. இன்னும் சொல்லப்போனால் மற்ற ஜானர் வகை கதைகளை விட, இந்த கதைகளை எழுதத் தான் என்னிடம் அதிகப்படியான அறிவு இருப்பதாக நம்புகிறேன். நவீன வாத்சாயனா போன்றோர்கள் இங்கே சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் , ஒரு ஆணை விட பல மடங்கு ஒரு பெண்ணால் தான் இதை சுத்தமாக நாகரிகமாக உளவியில் ரீதியாக அணுக முடியும் என நினைக்கிறேன் . ஆனால் இங்கே இந்த ஜானரில் கொடி கட்டிப் பறப்பது பெரும்பாலும் ஆண்கள் தான்.
நான் எனது வாழ்வில் அனுபவத்தில் பார்த்த கேட்ட பல அனுபவங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றே ஒன்றை மட்டும் எடுத்து இந்த ஜானரில் எனது முதல் கதையை எழுதுகிறேன். இதற்கு கிடைக்கும் வரவேற்பு பொறுத்து நான் ஒவ்வொன்றாக எழுதலாம் என நினைக்கிறேன்.
ஒரு பெண்கள் பத்திரிகையில் தொடர் கதையை எழுதிய போது., ஒரு குடும்ப பெண்ணை அவளது முன்னாள் காதலன் மிரட்டுவான்.
' அவன் கூப்பிடும்போதெல்லாம் இந்துமதி போய் படுத்தாள். அவன் கேட்டதை விட அதிகமாகவே படுக்கையில் வாரி கொடுத்தாள்' என எழுதினேன். அதற்கே அந்த பத்திரிகை ஆசிரியர் ஒத்துக் கொள்ளவில்லை.
ஏனென்றால் பாலியல் கூச்செறியும் வார்த்தைகள் அவை. அவர் மறுத்ததற்காகவே அது போன்ற கதைகளை எழுத எனக்கு வீம்பு ஆசை துளிர் விட்டது.
ஒரு பெண் பாலியல் சிந்தனைகளை மற்றும் தான் காமம் துறந்தததை அல்லது காமவயபட்டதை சொல்லக்கூடாதா? எழுதக் கூடாதா?
ஒரு பெண் பாலியலை மட்டும் அல்ல அவள் மீதான் சமூக வன்முறையை, உறவுகளால் உண்டான உளப் பிறழ்வுகளை, சக ஆட்களுடனான அருவருப்பை, துயரை, சங்கடங்களை என எதை வேண்டுமென்றாலும் எவ்வளவு வேண்டுமென்றாலும் பெண் எழுதலாம்.
எழுத்தின் தரமோ, தரமின்மையோ அதனால் முடிவாவதில்லை. எழுதுபவர்கள் எதை எவ்வளவு எப்படி எழுதவேண்டும் என்பதை அவர்களின் தேடலும், இலக்கும் மட்டுமே முடிவுசெய்யவேண்டும்.
பேர் ஊர் தெரியாத ஒரு சில பத்திரிகைகளில் காசுக்காக இல்லயென்றாலும் சுய திருப்திக்காவே நான் முன்னரும் இந்த கதைகளை மேலோட்டமாக எழுதியிருக்கிறேன், ஆனால், அவற்றுள் பாலியல் அம்சம் பெரிதாக பதிக்கப்படவில்லை. அது அந்த பதிப்பாளரின் அனுமதியும் கூட ஒரு காரணம். மேலும், நான் சில காலம் கேரளாவில் வசித்த அந்த காலங்களில் தெரிந்தோ தெரியாமலோ ஒரு வரைமுறை தாண்டி செல்ல கூடாது என்ற விதியும் காரணமாக இருக்கலாம்.
எப்போது கடல் தாண்டி இந்த அயல்தேசம் (மலேசியா) வந்தேனோ., அப்போது எனக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. கே.டி.பி யும் கூட எனக்கு கட்டுப்பாட்டினை விதிக்கவில்லை.
நாண் கண்ட, கேட்ட, உணர்ந்த எனக்கே நிகழ்ந்த கதைகளை சொல்ல எனக்கு பல யுகங்கள் அல்லது மின் புத்தகங்கள் தேவைப்படுகின்றன. இதில்லாமல் என் தோழிகள், உறவுகளின் கதைகளை எழுதினால் நூலகம் வைக்கலாம்.
ஆகவே, பாலியலை எழுதுவதொன்றும் அதிர்ச்சியோ புதிய புரட்சியோ, சமூக மீறலோ அல்ல. இன்றைய தமிழ்கூறும் நல்லுலகில் செல்பேசியில் பத்தாம் வகுப்பு மாணவன் பார்க்கும் பாலுறவுக்காட்சிகளுக்கு, பாலுறவுசார்ந்த மீறல்களுக்கு நிகராக எதுவும் இங்கே இல்லை.
ஒரு மெல்லிய கிளுகிளுப்புக்காக நரம்புகளின் எழுச்சிக்காக இலக்கியத்திலும் பாலியலையே வாசிக்க விரும்புவது ஒவ்வொரு தனிமனித விருப்பம்.
பாலியல் நெறியை மீறியும் மீறாமலும் ஒரு மீட்டர்க்குள் எழுதுவது பெரிய கலை. பாலியல் நெறிகள் என்பவை குடும்பநெறிகள், குலநெறிகள்தானே ஒழிய ஒவ்வொரு தனிமனிதரும் உணரும் பொதுவான மனச்சிக்கல்களாக அவை இல்லை.
ஏனென்றால் இங்கே மதம், ஜாதிகள் பாலியல் தொடர்பாக எந்த ஆழ்ந்த கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை.
ஒரு வட்டாரத்தில் தப்பான சொல்லாக இருப்பது, இன்னொரு இடத்தில் வழக்கமான சொலவடை ஆகும். இதுவே பல ஆண்டுகளுக்கு முன் அதெல்லாம் சாதாரண சொல்லே ஆகும்.
என்னை போன்ற பெண் எழுத்தாளரின் தேடலும் பதிவும் ஆக்கமும் காமம் சார்ந்தவை மட்டும் என்றால் அதை அவளோடு பொருத்தி வைக்க கூடாது. அதை தன் எழுத்து தேடலின் எல்லைவரை கொண்டுசெல்லலாம்.
என் எழுத்தைப் படிப்பவர்களுக்குத் தெரியும், என் மன உணர்வுகளும் வாழ்வியல் சூழ் நிலைகளும் வெறும் காமம் சார்ந்தவை அல்ல. என் வாழ்க்கை அவ்வாறு அமைந்தது.
இங்கே எந்தத் தமிழ் எழுத்தாளரும் காணாத அளவுக்கு கட்டற்ற காமத்தை, காமத்திற்கான வன்முறையை நான் என் வாழ்வியல் உற்று நோக்குதல்களில் கண்டிருக்கிறேன். அவற்றை இங்கே விரிந்திருக்கும் மானுடவாழ்க்கையின் இயல்பான பக்கங்களாக மட்டுமே நான் பார்க்கிறேன்.
மானுடக் காமம் என்பது அவன் அகத்தில் 24 மணி நேரமும் நிகழ்வதுதான். ஆனால் புணர்ச்சியின் போது உடலில் நிகழ்வது மிகமிகமிகக் குறைவே.
வெறுமனோ உடலை வர்ணித்துக்கொண்டிருப்பவனுக்கு இன்னமும் காமம் வசப்படவில்லை என்பது என் கருத்து.
இனிவரும் என் படைப்புகளில் காமம் உண்டு, ஆனால் அதன்பொருட்டு மட்டுமே எவரும் என்னை வாசிக்க வேண்டாம். நான் காமத்தில் எழுதவிரும்புவது மனித உடல் அதில் என்னவாகிறது என்று அல்ல. பலர் சொல்லிக் கொண்டிருப்பதுபோல மனிதக் காமம் உடல்சார்ந்ததும் அல்ல. அதையே தூக்கி கொண்டாடுவதும் அல்ல.
அது தான் இலவசமாக, இணையத்திலும் பழைய புத்தகடையிலும் மலையாகக் குவிந்துகிடக்கிறதே, மேலதிகமாக நீ என்ன சொல்கிறாய்? எனலாம்.
அதிலிருந்து தனி முத்துக்களாக, ரத்தினங்களாக தேர்ந்த நாவல்களை படைப்பது என்னை போன்ற தேர்ந்த எழுத்தாளர்களின் கடமையாக இருக்கலாம். அதாவது பத்தோடு ஒன்று அல்ல, பத்தில் ஒன்று.
பெண் பேரில் இது போன்ற கதையை எழுதும் ஆண் எழுத்தாளர்களை மத்தியில் பெண்ணாகவே நான் எழுதும் இது போன்ற கதைகள் உச்சத்தை தொடும் என பெரிதும் எதிர்பார்க்கிறேன்.
இந்த நாவல் திருமணத்தை தாண்டிய உறவைப் பற்றி பேசுகிறது என்றாலும் இதனுடைய இந்த கதாபாத்திரத்திற்கு வாய்த்திருக்கக்கூடிய சம்பவங்களும் நெருக்கடியும் புதுவிதமானவை. வேறுவிதமானவை.
எனது எல்லா கதைகளையும்
"சொல்லக் கூடாத கதைகள்" என்ற பேரிலேயே எழுதலாம் என நினைக்கிறேன்.
மிக்க நன்றி!
விமலா ராணி என்னும் விமலா தயாளன்
Posts: 18
Threads: 1
Likes Received: 36 in 11 posts
Likes Given: 1
Joined: Jul 2026
Reputation:
0
CHAPTER 1
ஹலோ!
இது என் சுய சரிதை கதை இல்லை.
இல்லத்தரசியாகிய நான். என் சுயமாகிய கற்பு ஒரு இக்கட்டான நெருக்கடியில் சரிந்த கதை.
நான் விமலா. வயசு? அது என்னாத்துக்கு இப்போ?.
எனது கணவர் தயாளன்.
எனது திருமண வாழ்க்கை ஒன்றும் அத்தனை சிறப்பானதாக இல்லை. தென் தமிழ் நாட்டில் ஒரு ஊரில் தான் என்னை கல்யாணம் செய்து கொடுத்தார்கள் . அந்த ஊரின் பெயரை சொல்ல வேண்டாம் என நினைக்கிறேன். இந்த கதையை படித்தாலோ அல்லது அந்த ஊர் இந்த கதையில் அந்த ஊர் பெயரை சொன்னாலும் இன்னமும் அங்கிருக்கும் பேருக்கு என் மீது ஆத்திரம் ஒருவேளை இன்னும் பகை நெருப்பாகி விடும் ஆபத்து உள்ளது.
அது தவிர என்னை அறிந்தோர்க்கு, அட இவள் இது மாதிரியா? என்றும் நினைக்க கூடும். இது நாள் வரையிலான அவைகளின் கட்டமைக்கப்பட்ட பிம்பம் மாறி விடும்.
சோ.. ஊர், சரியான பேர் வேண்டாம். ஆனால் சம்பவங்கள் மட்டும் உண்மை தான்.
என் 19 வயதில் கல்லூரி படிப்பை கூட முடியாமல் பாதியிலே நிறுத்திவிட்டு அந்த தாயளனுக்கு என்னை கட்டிக் கொடுத்தார்கள். எனது அப்பா சென்னைக்காரர் தான்.
ஆனால் இபி டிபார்ட்மென்டில் ஏ.இ யாக இருந்தவர். அவர் வாங்கிய கணக்கில்லாத லஞ்சத்தின் காரணமாக சென்னைக்கு வெளியே ஸ்ரீபெரும்புதூரில் பல ஏக்கரில் நிலங்கள் சொந்தமாக இருந்தன. ஒரு பெரிய அரசியல் தலைவர் அங்கே இறந்த பின், நிலத்தின் விலை தாறு மாறாக உயர எங்கப்பாவை கையிலேயே பிடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு சொத்து மதிப்பு உச்சத்துக்கு போனது.
நான் எனது அப்பாவுக்கு ஒரே மகள் தான். ஆனால் என் கூட இரண்டு உதவாக்கரை தம்பிகள் இருந்தார்கள். ஒருவன் செந்தில் இன்னொருவன் லஷ்மணன்.
ஏன் அவர்களை உதவாக்கரை என்கிறேன் என்றால், எனது வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் வந்த போதும் ஒரு போதும் அவர்கள் எந்த உதவி எனக்கு செய்யவில்லை .
எனது அப்பா என் கனவன் தாயளானை என்னமோ ' பெரிய பணக்காரன் நன்றாக சம்பாதிக்கிறான் நான்கு ஐந்து மளிகைக் கடைகளை டவுனில் வைத்து சம்பாதிக்கிறான். எங்க ஜாதிக்காரனிலேயே நல்ல வசதி' என கேள்விப்பட்டு இந்த ஸ்ரீபெரும்புதூர் நிலங்களில் பாதியை விற்று அதை தங்கமாக்கி பெரும் செலவு செய்து அவனுக்கு கட்டி கொடுத்தார்கள்.
எல்லா பெண்களையும் போலவே ஆசையாக போனேன். கணவர் கருப்புதான். ஆனாலும் லட்சணமாக இருந்தார். அவருடன் உடன் பிறந்தான்கள் மூன்று அண்னண்கள். இவர் கடைக்குட்டி.
அந்த ஊரில் பெரிய கோயில் ஒன்றில் எங்கள் திருமணம் நடந்தது.
முதல் இரவுக்கு அவரது வீட்டிற்கு போனோம் . கிராமத்தின் பிரம்மாண்டமான வீடு. அந்த வீட்டின் அவருக்கு மூன்று அண்ணன்கள். சகோதரிகள் யாரும் கிடையாது. எல்லாமே வந்தேறிகள். அண்ணிகள்.
ரிஷப்சன் என்கிற மண்ணாங்கட்டியெல்லாம் இல்லை. காசு வீணாக்க்கும் சமாச்சாரம் எல்லாம் அங்கே மிஸ்ஸிங்,. சோ, கல்யாணம் முடிந்த அந்த இரவே முதலிரவு.
எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் முதலிரவு நடந்தது அதற்கு முன்பு இல்லற தாமத்தியம் பற்றி எதுவும் நான் பெரிதாக அறிந்திருக்கவில்லை.
கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவர் பி.காம் என கல்யாண பத்திரிகையில் போட்டிருந்தார். ஆனால் அப்படி ஒரு வாசனையே அவரிடமிருந்து வரவில்லை. கேட்டதற்கு 'டிஸ் கண்ட்டினியூ' என்றார். என்னை போலத்தான் என நினைத்து கொண்டேன்.
நான் சென்னை அடையாரில் அந்த பிரபல பெண்கள் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்த போது தானே இந்த திருமணக் கூத்து நடந்தது.
நாங்கள் தொடர்ந்து பேசினோம். ஆனால் அவர் பேச விருப்பப்பட வில்லை. என்னை தொட்டுக் கொண்டே இருந்தார்.
எனது அழகோ எனது இளமையோ அல்லது என் வாசமோ, பொங்கி வழியும் பூரிப்போ எது தெரியவில்லை அவரை என்பாற் இழுத்தது. ஆடைகளை களைந்து என் நிர்வாண மேனியை கான அவர் விழைந்தார். நான் அவர் பற்றியும் ஒரு முழு ஆணை பற்றியும் புரிதல் கொள்வதற்கு முன்பே அவர் என்னை ஆக்கிரமித்தார். நானும் அவரை ஏற்றுக் கொன்டேன்.
Posts: 462
Threads: 6
Likes Received: 4,125 in 574 posts
Likes Given: 603
Joined: Jun 2024
Reputation:
409
24-07-2026, 01:38 PM
(This post was last modified: 24-07-2026, 02:40 PM by rathibala. Edited 5 times in total. Edited 5 times in total.)
வெறுமனோ உடலை வர்ணித்துக்கொண்டிருப்பவனுக்கு இன்னமும் காமம் வசப்படவில்லை என்பது என் கருத்து.
நான் காமத்தில் எழுத விரும்புவது மனித உடல் அதில் என்னவாகிறது என்று அல்ல. பலர் சொல்லிக் கொண்டிருப்பதுபோல மனிதக் காமம் உடல்சார்ந்ததும் அல்ல. அதையே தூக்கி கொண்டாடுவதும் அல்ல.
"ப்பா.." இப்படி தமிழ் படித்து ரொம்ப நாள் ஆகிறது.
என் கதைகளில்... இந்த தவறை பல இடங்களில் செய்து கொண்டுதான் இருக்கிறேன். இதை உள்வாங்கி என் அடுத்த கதையை எழுத முயற்சிக்கிறேன்.
நன்றி.
Posts: 18
Threads: 1
Likes Received: 36 in 11 posts
Likes Given: 1
Joined: Jul 2026
Reputation:
0
CHAPTER 2
அன்று இரவு என் கணவருடன் நான் ஒரு நிறைவான சுகத்தை தான் பெற்றதாக உணர்ந்தேன் .
அவ்வளவு தான் என்னால் வெகு நாகரிகமாக சொல்ல முடியும்.
பாத்ரூமில் கூட நான் நிர்வாணமாக என்னை ஆக்கி கொண்டு குளித்ததேயில்லை. உள்ளாடைக் கவசங்களுடன் தான் நானே எனக்கு காட்சியளிப்பேன். ஆனால் இப்போது ஒரு ஆணுடன் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் நிர்வாணமாய் கிடப்பது என்பதையே என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அது தான் தாம்பத்ய நிஜம். ஆண்மை உறுப்பை தெரிந்து கொள்வதற்கு முன்னே அதை கண்ணால் பார்த்து தீர வேண்டும்.
உடலுறவில் பிரச்சனை என்றால் அது திருமண வாழ்க்கையில் பிரதிபலிக்கும். பெரும்பாலும் காதல் திருமணங்களில் இது பிரச்சனையாக இருக்காது. அங்க இங்க தொட்டு பேசி உருகி எப்போ எப்போ என எதிர்பார்த்து ஏங்கி பொங்கி வழியும்.
ஆனால், என்னைப் போல வீட்டில் பார்த்து வைக்கப்படும் திருமணங்களில் முன்பின் தெரியாத ஒருவனுடன் திடீரென கட்டிலைப் பகிர்வது என்பது கிட்டத்தட்ட ஒரு சூதாட்டம் போல்தானே? எல்லாருக்கும் ஜாக்பாட் அடித்துவிடுமா என்ன?
எனக்கு அடித்தது ஜாக்பாட்டா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ளும் யாதொரு முன் தரவும் என்னிடமில்லை.,
தயாளன் தயாளனாக வாரி கொடுத்தானா? அல்லது காமக் கருமியா? என்பதெல்லாம் புரிந்து கொள்ளும் வயதும் அப்போது எனக்கில்லை.
எப்போதும் ஆண் பெண் புணர்ச்சி, காமச்சித்தரிப்பு, ஆகியவை மனதுக்கு மனம் வேறுபடும்.
ஏண் காமமே உடலுக்கு உடல் வேறானது.
உச்சக்கட்ட இன்பம் துய்க்காமளேயே மரித்து போகும் பெண் ஜென்மங்கள் இங்கே ஏராளம்.
ஆண் காமம் அல்லது பெண் காமம் உடல்சார்ந்ததாக ஆகும்போது அது மிக எளிதில் 'அடிக்ட்' சார்ந்ததாக மாறக்கூடும்.
ஒரு மானுட உடலுக்கும் இன்னொன்றுக்கும் வேறுபாடு ஏதுமில்லை. இரண்டுக்குமான வேறுபாட்டை உருவாக்குவது உள்ளம். அதன் அதீத கற்பனை அவ்வளவே.
என்னை போன்ற புதுக்கல்யாணமனவளுக்கு காமமும் புதிது. ஆணும் புதிது. ஆனால் அதெல்லாம் அந்த ஆண் எங்கே உணர்ந்தான். வெடிப்புல் துடிப்படங்குவது தான் அவனை போன்றவர்களின் அதிகபட்ச ஆண்மைத் தனம். காதலே இல்லாமல் காமமே பொங்காமல் வத வதவென பிள்ளை குட்டி பெற்றுப் போடுவோர்கள் இங்கே உண்டுதானே!
என்னமோ ஏதோ என ஒப்புக்கு நடந்த அந்த கூடலுக்குப் பின் அசந்து தூங்கினேன். கூடலின் தாக்கத்தை விட, மனமெல்லாம் புது உறவுகள், புது இடம், புது சூழ் நிலை. புது கட்டில் அனுபவம்.
மறுநாள் காலை பக்கத்தில் அவர் இல்லை. என் ஆடைகள் விலகி இருந்தது. அப்படியே துணிகள் தூக்கி என் வெளுத்த தொடைகளை நாணே பார்த்தேன். திடுக்கிட்டு, நான் எழுந்து என்னை சுத்தமாக்கி கொண்டு வெளியே வந்தால் எனக்கு பெரிய அதிர்ச்சி.
Posts: 18
Threads: 1
Likes Received: 36 in 11 posts
Likes Given: 1
Joined: Jul 2026
Reputation:
0
CHAPTER 3
அந்த அறையின் வாசலிலேயே என் பொருட்கள் குவிக்கப்ப்ட்டிருந்தன.
'வாம்மா மகராணி. இப்ப தான் விடிஞ்சதா? அவரது அண்ணிகள்.
" இன்னையலிருந்து நீ உங்க வீட்டுக்கு போலாம்"
"எ..என்வீட்டுக்கா?"
"ஏன் ன் சொல்லலியா?'
"இவ சொல்ல விட்டிருக்கா மாட்டா போலியே?' அவர்களின் விட்டேத்தியான பேச்சு என்ன சூடாக்க.,
என் சம்பந்தப்பட்ட பொருட்கள் சிலவற்றை மட்டும் கொடுத்து அந்த பெரிய வீட்டுக்கு எதிரில் இருக்கக்கூடிய சிறிய ஓட்டு வீட்டில் என்னை தங்க சொன்னார்கள். அவர்களின் மூன்று அண்ணிகள்.
அதாவது இனிமேல் நான் அங்கதான் இருக்க வேண்டுமாம். இந்த பெரிய வீட்டிற்குள் வரக்கூடாதாம். ஏன்? என்று கேட்டதற்கு அவனுக்கு பாகமாக கொடுத்த எல்லா பணத்தையும், அதாவது எனது கணவருக்கு கொடுத்த எல்லா பணத்தையும் அவர் குடித்து சீரழைத்து விட்டாராம்.
அவருக்கு இந்த வீட்டில் சொத்தில் எதிலும் பங்கு இல்லையாம்
'அய்யோ அப்ப அஞ்சு கடை இருக்குது என்று சொன்னார்களே "
'அஞ்சு கடை இல்லடி. ஆறு கடை டவுனில் இருக்கு. என்ன இப்போ? ஆனா அது எல்லாம் எங்களுக்கு தான் . உன் புருஷன் அந்த கடையில் வேலை செய்றான். மாசம் நாலாயிரம் ரூபா சம்பளம். தரோம் அவனுக்கு, இப்ப நீ வந்துட்டே. இனிமே அஞ்சாயியரம் தரோம்.' என்றதும் எனக்கு தூக்கி வாரி போட்டது.
" ஒரு நாளைக்கு ஒரு வீட்டுல சாப்பிடுவான்., இனி நீயே பொங்கி போட்டுக்க" வெடுக்கென பேசி வெட்டி விட்டார்கள்.
என் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்/ வெறும் 10 சவரன் பதினஞ்சு சவரன் போட்டவர்கள் எல்லாம் அந்த பெரிய வீட்டில் உட்கார்ந்து நாட்டாமை செய்வார்களாம். நான் 100 சவரன் போட்டுக் கொண்டு வந்து அந்த சின்ன ஓட்டு வீட்டில் இருக்க வேண்டுமாம்.
அதுவும் இல்லாமல் எனக்கு போட்ட 100 சவரனில் தாலி தவிர, மீதி எல்லா நகைகளும் வாங்கிக் கொண்டார்கள்.
கேட்டால் உன் வீட்டுக்காரன் ' எனக்கு கல்யாணமாகி வர பொண்ணு கிட்ட நகையை வாங்கி ஈடு கட்டுறேன்' னு சொல்லி தான் எக்கச்சக்கமான கடன் வாங்கி இருக்கான். அவன் சூதாட்டத்திலயும், குடியிலும் பட்ட கடன் இந்த 90 சவரன் நகையால, ஒரு வழியா அடைஞ்சாச்சு ' என்றார்கள் அவரின் அண்ணிகள்.
என் தலை சுற்றி வேர்த்து முகம் இருண்டு அதிர்ச்சி ஆக, எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை . கல்யாணம் என ஒரு விஷயம் நடந்த சந்தோஷமே போய் விட்டது.
முதலிரவு நடந்த பொண்ணாச்சே., பாவம் எடுத்த உடனேயே முத நாளே வெளியே குடி வைக்கக் கூடாது.ன்னு தான் உன்னை இங்க பெரிய வீட்டுக்குள்ள வர விட்டு முதலிரவை இந்த வீட்டுல பெருந்தன்மையா நடக்க வச்சோம் ' என அவர்களது தியாகத்தை உரக்கச் சொன்னார்கள்.
ஒரே நாளில் எனது எதிர்காலமே இருண்டு போனது போல ஒரு உணர்வு. என்னுடைய பணம், சீர்செனத்தி, தங்க நகைகள் போனது கூட பிரச்சனை இல்லை. அதை எல்லாமே நாம் எதிர்காலத்தில் சம்பாதித்துக் கொள்ளலாம்.
ஆனால், ஆசை ஆசையாக ஒரு வீட்டில் வாழ வந்த பெண்ணை ஒரே நாளில் 'நீ இந்த வீட்டில் இருக்கக் கூடாது வெளியே போ' என சொன்னால் இப்படி வக்கிரமம் கேவலமும் பிடித்த கணவன் வீட்டு ஜனத்தில் நான் எப்படி காலமெல்லாம் வாழ முடியும்?
நாளை பின்னே எனக்கு பணம் காசு சேர்ந்தால் கூட, இந்த சொந்தங்கள் நடுவே என்னால் எப்படி சேர்ந்திருக்க முடியும் . ஒரே நாளில் இந்த கண்ணாடி குடுவை உடைந்து விட்டதே.
ஒரு பக்கம் ஆத்திரம் இன்னொரு பக்கம் அவமானம் எல்லாம் சேர்ந்து என்னை அழுகையாக வெடித்தது. ஆனால் அவர்கள் இரக்கம் காட்டவில்லை.
'ஏய்ய் முனியா' என ஒரு பையனை அழைத்தார்கள். அவன் வேலைக்கார பையன்.
"டேய்ய்ய் . முனியா .இந்த பாய் படுக்கையெல்லாம் அங்க ஓட்டு வீட்டுல போடு., இனிமே தயாளு அங்க தான் இருப்பான் " என உத்தரவிட்டார்கள்.
அந்த பாழாப்போன தயாளன் பக்கத்தில் இல்லை . அவ்வளவு காலையில் எங்கே போனான்? என்று கூட தெரியவில்லை . கடை திறக்க போய்விட்டானா? இவனுக்கெல்லாம் எதுக்கு பொண்டாட்டி?
என்னை கேட்காமலேயே என் பொருட்களை எல்லாம் அந்த ஓட்டு வீட்டில் போட்டு விட்டார்கள் .
காலையில் எனக்கு ஒரு காப்பி இல்லை. டிபன் இல்லை.
எழுந்தவுடனே பல்லை கூட துலக்காமல் அம்மாவிடம் காப்பி கேட்டதும், 'காபி வர கொஞ்சம் லேட்' ஆனால் ஆ ஊ என கத்தியதும் எனக்கு நினைவுக்கு வந்து அழுகையாக பொங்கியது.
அந்த வீட்டிலிருந்த ஒரு குட்டிப் பெண் தான். என் கணவரின் அண்ணன் மகள் அவள் பெயர் ராஜி. அவள் தான் எனக்கு ஒரு டிபன் பாக்ஸில் இரண்டு இட்லியை போட்டு எடுத்து வந்தாள். எனக்கு அதை சாப்பிடக் கூட பிடிக்கவில்லை . நான் வைராக்கியமாக எதுவும் சாப்பிடாமல் இருந்தேன்.
இந்த நாய் சாயங்காலம் தான் வந்தான். பெரிய வீட்டில் போய் என்னை தேடி பார்த்து விட்டு இந்த ஓட்டு வீட்டிற்கு வந்தான் . எனது கால்களை பிடித்து அழுதான்.
' எல்லாம் என் தப்புதான் மன்னிச்சிடு. உங்க அப்பா கிட்ட எதுவும் சொல்லாதே " என்றான் யோசித்துப் பாருங்கள். அது ஒரு நகரம் இல்லாத கிராமம் . எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. என்னிடம் எனது அப்பா கொடுத்து விட்டுப் போன ஆயிரம் ரூபாய் மட்டும் தான் இருந்தது. இந்த நாயை நம்பி தான் என்னை விட்டுப் போய் இருக்கிறார்கள். ஆனால் இந்த நாயோ காலையிலேயே போய் எங்கெங்கெல்லாம் சுற்றி திரிந்துவிட்டு, கடையில் வேலை செய்துவிட்டு, சாய்னதிரமாய் வயிறு முட்ட குடித்துவிட்டு வந்திருக்கிறது. காலை பிடித்து கோழை போல அழுகிறது. பொண்ட்டாட்டி என்ன செய்தாள்? என்ன சாப்பிட்டாள் என்ற அக்கறை கூட இல்லை.
எவனை நம்பியும் கழுத்தை நீட்டலாம். ஆனால் குடிகார நாய்களை நம்பி கழுத்தை நீட்ட முடியாது . 'இவன் குடிக்க காசு கேட்டால், உன் பொண்டாட்டியை அனுப்பு தருகிறேன் ' என்று யாராவது சொன்னால் நம்மை சீவி சிங்காரித்து அவனுக்கு அனுப்பி விடுவான். அது தான் மூச்சு முட்ட குடிக்கும் குடிகாரனின் மனநிலை. அவனுக்கு குடிக்க சாராயம் வேண்டும். அது தான் அவன் இலக்கு. இப்படிபட்டா குடிகாரன் கிட்ட போய் என்னை மாட்டிவிட்டார்களே? அய்யோ..! எனக்கு என்ன செய்வது? என தெரியவில்லை.
இப்படி வந்து இவனிடம் மாட்டிக் கொண்டேமே?
அங்கே பண்ணை வேலை செய்து கொண்டிருந்த அந்த முனியனை கூப்பிட்டு 200 ரூபாய்க்கு மளிகை சாமான்களை வாங்கி வர சொன்னேண்.
அரிசி, உட்பட மளிகை பொருட்களை வாங்கி வரச் சொல்லி அன்று உணவு செய்து பொங்கி போட்டேன்.
ஒரு வாரம் கஷ்டப்பட்டு கழிந்தது. கண்ணக் கசக்கி கொண்டு வீட்டுக்கு போய் நிற்க முடியாது. உறவுகள் மத்தியில் அசிங்கப்பட்டு போய் விடுவோம். தயாள் எனும் எனது கணவனை எப்படியாவது மாற்ற வேண்டும் என்பதுதான் எனது வைராக்கியமாக இருந்தது.
அந்த மூன்று அண்ணனுக்கும் சொந்தமான ஆறு கடைகளில் மாறி மாறி எனது கணவன் வேலை செய்தான். என்னையும் ஒரு கடையில் வந்து வேலை செய்ய சொன்னார்கள். எனது தன்மானம் அதற்கு இடம் கொடுக்கவில்லை.
அங்கிருந்து டவுனுக்கு போய் வீம்புக்காக ஒரு துணிக்கடையில் சேல்ஸ் கேர்ளாக வேலை செய்தேன். எனது அப்பா, அம்மாவிடம் எதையும் சொல்லவில்லை. நாட்கள் ஓடின. இந்த கொஞ்ச நாளிலேயே என்னையும் எனது கணவரை பற்றியும் தெரிந்து கொண்ட எத்தனையோ ஆண்கள் என்னை எப்படியாவது அபகரித்து விட துடித்தார்கள்.
அந்த கிராமத்திலேயே யாரும் இல்லாத அழகிலும், நிறத்திலும் இளமை பூரிப்பிலும் இருந்த என்னை எனது கணவனின் கையாலாகாத தனத்தினால் எப்படியாவது என்னை அனுபவித்து விட பல ஆண்கள் துடித்தார்கள் .
ஏன்? எனது துணிக்கடை முதலாளியும் சரி, முதலாளி மகனும் சரி என்னை சுற்றி வந்தார்கள். எப்படியாவது என்னை வசியப்படுத்தி ஏமாற்றி ஆசை வார்த்தைகளை சொல்லி பால் குடித்து விட முடியுமா? என்ற நினைப்பில் பல பூனைகள் என்னை சுற்றி வந்தன .
வெளியே இருக்கும் பூனைகள் மட்டுமல்ல, வீட்டிலிருந்த பூனைகளும் தப்பவில்லை. எனது கணவனின் மூன்று அண்ணன்களும் அவரவர் மனைவிமார்களுக்கு தெரியாமல் எனக்கு பலவிதமாக உதவ முன் வந்தார்கள்.
ஆனால், அவர்கள் அப்படி உதவுவதற்கு காரணம் எனது உடம்பு தான் என்பது எனக்கு தெரிந்ததுமே அவர்களது உதவிகளை நான் புறக்கணித்து விட்டேன்.
அதில் பெரிய அண்ணன் வா உன்னை டவுன்ல வீடு பாத்து வெக்கறென். என வெட்கமில்லாமல் கூப்பிட்டான். நான் செருப்பைக் கழட்டி காட்டினேன்.
என்னை சுற்றி இருந்த எந்த ஒரு ஆண்களையும் நான் ஏறெடுத்து பார்க்காமல் எனது கணவனே கண்கண்ட தெய்வமாய் இருந்தேன் . நடுவில் ஒரு நாள் எனது அப்பா வந்து பார்த்துவிட்டுப் போனார். எனது நிலையைக் கண்டு அழுதார். அவரால் அதை மட்டும் தான் செய்ய முடியும்.
'வேண்டுமென்றால் ஒரு அஞ்சு லட்சம் ரெடி பண்ணி கொடுக்கிறேன்' மாப்பிள்ளையை சென்னைல வந்து கடை போடச் சொல்லலாம். நீயும் வந்துடும்மா' என்றார்.
" வேண்டாம்பா, அந்தக் காசு இருந்தால் அதையும் இந்த படுபாவி குடித்து தீக்கத்தான் போகிறான் , மொதல்ல இவன் மாறனும். இவனுக்கு சுரணை வரனும். குடியை விடனும்., "
"சரிம்மா"
"எனக்கு நீ உதவி செய்றதா இருந்தா தயவுசெஞ்சி பணத்தை மட்டும் கொடுக்காத" என சொல்லி அவரை அனுப்பி விட்டேன். கை செல்வௌகு மட்டும் காசு தந்து விட்டு போனார்.
'கூட வந்த அம்மா மட்டும் ஏதாச்சும் விசேஷமா?" என கேட்டாள். என்னவென்று சொல்வது?
Posts: 18
Threads: 1
Likes Received: 36 in 11 posts
Likes Given: 1
Joined: Jul 2026
Reputation:
0
(18-07-2026, 08:12 AM)AjitKumar Wrote: You are selling your story in NV website. Why are you posting here. Will it not affect the sales
இப்போது இல்லை. நீக்கப்பட்டு விட்டது. ஆனால் அமேசானில் உண்டு.
•
Posts: 25
Threads: 0
Likes Received: 14 in 10 posts
Likes Given: 96
Joined: May 2024
Reputation:
0
Na NV site la story vangunen. Next part epo?
•
Posts: 59
Threads: 3
Likes Received: 60 in 37 posts
Likes Given: 34
Joined: Mar 2023
Reputation:
1
ஒவ்வொரு எலுத்தும் மிக அலுத்தமாய் அழகாய் உதிர்த்திருக்கிறீர்கள். தொடர்ந்து எலுதவும்
•
Posts: 307
Threads: 4
Likes Received: 158 in 102 posts
Likes Given: 207
Joined: Dec 2022
Reputation:
4
கதையை எழுத உங்கள் கடின உழைப்புக்கு பாராட்டுக்கள்.
•
Posts: 1,145
Threads: 0
Likes Received: 431 in 377 posts
Likes Given: 653
Joined: Jul 2019
Reputation:
3
Purusana pathi mattama solra neenga avaroda pera unga perukku pinnala yen pottu irukkinga nu than puriyala. Purusanukkaga mann soru sapudura manjula mathiriya
•
Posts: 125
Threads: 6
Likes Received: 156 in 67 posts
Likes Given: 1
Joined: Jun 2020
Reputation:
3
(18-07-2026, 08:12 AM)AjitKumar Wrote: You are selling your story in NV website. Why are you posting here. Will it not affect the sales
Adhu enna website?
•
Posts: 5
Threads: 0
Likes Received: 0 in 0 posts
Likes Given: 1
Joined: Mar 2022
Reputation:
0
இங்கு பெண்கள புனை பெயரில் தான் எழுதுவார்கள், கால மாற்றம், பெண்ண நோக்கி தவறு என்று சொல்வதட்கு இந்த காலகட்டத்தில் அது சொல்ல கூடாத வார்த்தை, வந்தாகிவிட்டது வாழ்தகிவிட்டயது இந்த உலகத்தில் செய்யாமல் வேறு எங்கு போக, உங்கள் பெயர் பற்றி கூட சொல்லிருக்க வேண்டாம், யாரும் கேட்க போவதில்லை, தொடருங்கள.
•
Posts: 18
Threads: 1
Likes Received: 36 in 11 posts
Likes Given: 1
Joined: Jul 2026
Reputation:
0
CHAPTER 4
குடி ஒரு பக்கம், அன்றாட பிரச்சனைகள் ஒரு பக்கம் இருந்து கொண்டு இருக்கம் மறுபக்கம் தாம்பத்ய வாழ்க்கையும் சுமராக போய்க் கொண்டு தான் இருந்தது.
கணவர் தினமும் இல்லை என்றாலும் வாரத்துக்கு ஒன்று இரண்டு முறை அவரையே கட்டுப்படுத்த முடியாமல் என்னை துகிலுரித்து அனுபவிக்க தான் செய்கிறார் . நானும் எவ்வளவோ இந்த திருமண வாழ்க்கையில் ஏமாற்றம், வெறுப்பு இருந்தால் கூட அவர்க்கு இணங்கி தான் போகிறேன்,. ஆனால் நிலம் நன்றாக இருந்து என்ன பலன்? விதை வீரியமாக இருக்க வேண்டும் அல்லவா? பெரிய விளைச்சல் இல்லை.
அவர் காலம் காலமாக உட்கொண்ட ஆல்கஹால், சிகரெட் போதை வஸ்துக்கள் அவரது விந்தணுக்களை பலம் இழக்க செய்ததோ என்னவோ தெரியவில்லை. எனது கர்ப்பம் தாமதித்து கொண்டே போய் ஆறு மாதத்திற்கு பிறகு தான் நல்ல செய்தியே வந்தது.
' பரவால்லடா லேட் ஆனா கூட பரவால்ல ஒரே வருஷத்துல வயிறு வீங்கி வச்சிட்டியே" அவனது அண்ணன்களே என்னை அருகில் வைத்து கொண்டே அவரை ஒரு மாதிரியாக பேசினார்கள்.
ஒரு தம்பியின் மனைவி நேரில் இப்படி பேசுகிறோம் என்ற வெட்கமே இல்லாமல் அவர்கள் பேசினார்கள்.
அது இந்தாளுக்கு உறைக்க கூட இல்லை. அசடு வழிய சிரித்துக் கொண்டே நின்றார். எனக்கு பற்றிக் கொண்டுதான் வந்தது.
அதுவுமில்லாமல், "இவன் குடிச்ச குடிக்கு இவனுக்கு எல்லாம் புள்ள பொறக்குதே பெரிய விஷயம் தான் " என கணவனின் அண்ணிமார்கள் ஜாடை மாடையாக சொன்னது தான் எனக்கு எரிச்சலும் கோவமாக வந்தது.
நான் அதற்கு எந்த எதிர்வினையும் காட்டாமல் இருந்ததால், அந்த நாய்கள் வேறு ஒரு பழியை தூக்கி போட்டார்கள் .
" எனக்கு என்னமோ அந்த முனியன் வேலையா தான் இருக்கும்" என அந்த வீட்டின் மூத்த அண்ணி சொல்லவே எனக்கு தூக்கி வரி போட்டது. அவன் தானே அவ புருஷனை விட அந்த ஓட்டு வீட்டுல ஜாஸ்தி புழங்கறான். ஒத்தாசைக்கு அவனை விட்டா அவளுக்கு யார் இந்த வூட்டுல? முனியன் கை வெச்சி தான் இவ பூத்து குலுங்குனாளோ? என்னமோ?" என் தலையில் இடி விழாத குறைதான்.
முனியன் என்பவன் அந்த பண்ணைகளில் வீட்டு வேலை செய்யக்கூடியவன் நான். சிறு வயதுக்காரன், கல்யாணம் ஆகாத பையன். அவனை நான் ஆத்திர அவசரத்திற்கு ஏதேனும் ஒரு வேலையை கொடுத்து அனுப்புவேன். பெரும்பாலும் அவன் வீட்டு வாசலுக்கு வெளியே தான் குழைந்து நிற்பான்.
போயும் போயும் அந்த பையன் கூடவா என்னை வைத்து பேசுவது? இவர்களின் அக்கிரமத்துக்கு அளவே இல்லையா?
அவனை நான் எனது சொந்த தம்பியாக நினைத்தேன் . அவனும் என்னை அம்மா இல்லை அக்கா என்று கூப்பிடுவான்.
'சீ இந்த மானங்கெட்ட ஜென்மங்கள் என்னென்ன பழி எல்லாம் போடுகிறது?. இனி பொறுத்துக் கொள்ளக் கடாது' என்று புள்ளத்தாச்சியாக இருந்தும், அந்த பெரிய வீட்டு படி ஏறி அந்த குடும்பத்துக்கே சாபமிட்டு வந்தேன்.
அது மட்டும் இல்லை, அந்த வீட்டு ஆண்கள் ஜொல்லு வழிய என்னிடம் என்னவெல்லாம் பேசினார்கள் என்பதையும் சப்ஜாடாக புட்டு புட்டு வைத்து திட்டினேன். ஒட்டு மொத்த பண்ணை ஜனங்களும் வேடிக்கை பார்த்தது.
நான் திட்டிய திட்டில் அவர்கள் கூனி குறுகிப் போய் மன்னிப்பு கேட்பார்கள் எனப் பார்த்தால், அதுதான் இல்லை.
சுற்றிலும் அத்தனை பண்ணை ஆட்கள் எதிரில் நான் இப்படி திட்டவே அவர்கள் வேறு விதமாக உபாயம் செய்தார்கள்.
அந்த கொடுமைக்கார சிறுக்கிகள் அவரவர் புருஷங்களிடம் வாய்க்கு வந்தபடி ஒப்பிக்க., மூன்று அண்ணனும் சேர்ந்து எனது கணவனை சாராயக்கடைக்கு அழைத்து போய் வயிறு முட்ட சாராயம் கொடுத்து விட்டு
" தம்பி டேய்ய் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத, எனக்கு என்னமோ உன் பொண்டாட்டிக்கும் முனியனுக்கும் ஏதோ பழக்கம் இருக்குன்னு நினைக்கிறேன் "
'என்னண்ணா சொல்றே?"
"அவன் தான் அவ வயித்துல புள்ள கொடுத்து இருப்பான்னு ஊரெல்லாம் பேசிக்கிறாங்கடா. அவமானமா இருக்குடா '
" அண்ணா"
" ஒருவேளை அந்த கொழந்தை பிறந்து அது முனியன் ஜாடையா இருந்தா, நம்ம ஊர்ல யாருமே நம்ம வீட்ல யாருமே நிம்மதியா வாழ முடியாது. குடும்பமே தூக்கு போட்டு தான்டா சாகணும் " என சொல்ல அந்த விருந்தாளிக்கு பொறந்த ஈன மகன் அதை உண்மையென நம்பி,
அதே குடிபோதையில் வந்து வீட்டுக்குள் நுழைந்து என்னை அடித்த அடியும், திட்டிய வசவும் என்னால் காலத்துக்கும் மறக்கவே முடியாது. இப்போது நினைத்தால் கூட உடல் நடுங்குகிறது. எப்படி அதெல்லாம் தாங்கினேண்?
கணவனின் அண்ணனகளும், அண்ணியும் கைக்கட்டி வேடிக்கை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிக்க நான் தூள் தூளாக நொறுங்கி விட்டேன்.
Posts: 28
Threads: 0
Likes Received: 10 in 8 posts
Likes Given: 415
Joined: Sep 2024
Reputation:
0
Nice super story.
Update regularly
•
|