08-06-2026, 02:42 AM
“ஊருக்கு போறியா?” அம்மா கேட்டாள்.
“ம்” முனகினான் மனோ. அவன் முகம் இறுகியிருந்தது.
“எப்ப வருவ?” அம்மா அவனையே பார்த்தாள்.
அவன் எதுவும் சொல்லவில்லை.
“கொஞ்ச நாளைக்கு அங்கயே இரு. இங்க நெலமை செரியில்ல. எல்லாம் செரியானதுக்கு அப்பறம் வருவியாம்” அம்மாவே ஆறுதலாக சொல்லிக் கொண்டாள்.
“ம்” தலையை ஆட்டினான்.
“சாப்பிட்டு போ”
அவன் பேசவில்லை.
அம்மா விலகிச் சென்றாள். அவளது கடமை முடிந்து விட்டது.
பெயருக்கு சாப்பிட்டான். கொஞ்சமாக உடைகளை எடுத்துக் கொண்டான். பேகை தூக்கிக் கொண்டு கிளம்பி விட்டான்.
பஸ் ஸ்டாண்ட் கூட்டமாக இருந்தது. அவன் செல்ல வேண்டிய கிராமத்துக்கு உடனே பஸ் கிடைக்கவில்லை. காத்திருந்தான்.
மக்கள் கூட்டத்தை வேடிக்கை பார்த்தான். பெண்களை ரசித்தான்.
பஸ் வந்தது. திப்திபுவென கூட்டம் கூடியது. கூட்டத்தை ஏற விட்டு கடைசியாக அவன் ஏறினான்.
கடைசி இருக்கைதான் கிடைத்தது. உட்கார்ந்து கொண்டான்.
பயணம் மெதுவாகத்தான் இருந்தது. ஆனாலும் வெளியே வேடிக்கை பார்க்கப் பார்க்க அவனது மனதின் பாரம் குறையத் தொடங்கியது.
ஒரு மணி நேர பயணம். பல ஊர்களை கிராமங்களை கடந்து அந்த ஊரை அடைந்தான்.
பாட்டியின் ஊர். அம்மாவைப் பெற்ற அம்மா. இவன் என்றால் பாட்டிக்கு உயிர்.
அவன் இந்த ஊருக்கு வந்து ஒரு வருடம் ஆகி விட்டிருந்தது.
அது நாகரீக வளர்ச்சியை இன்னும் முழுமையாக எட்டாத, எளிமையான மனிதர்கள் வாழும் சிறிய கிராமம். அந்த ஊர் முழுக்க அவர்களது சொந்தம்தான்.
பெட்டிக்கடை முன்பாக பஸ் நின்றது. இறங்கிக் கொண்டான். அவன் மட்டும்தான் இறங்கினான். விசில் ஊதப் பட்டது. உடனே பஸ் டர் டர்ரென உருமிவிட்டு நகர்ந்தது.
நேரம் பார்த்தான். பனிரெண்டு மணி பத்து நிமிடம்.
பெட்டிக் கடையை ஒட்டின மாதிரி ஒரு தார்சாலை சென்றது. அதில் நடக்கத் தொடங்கினான் மனோ.
நன்றாக வெயில் அடித்தது. சில நிமிட நடைக்கே வியர்த்து விட்டது.
வீட்டை அடைந்தான். வீட்டின் முன்பாக, சற்று தள்ளி அகலப் படர்ந்த ஒரு அரச மரம். அதனடியில் பிள்ளையார் கோவில்.
கோவில் மேடை காலியாக இருந்தது. யாரையும் காணவில்லை.
மர நிழலில் இரண்டு நாய்கள் படுத்திருந்தன. அவனை அறிந்த நாய்கள் அவை. அதனால் அவனை லட்சியம் பண்ணவில்லை.
அவன் வந்ததை தலையை தூக்கிப் பார்த்த நாய்கள் அவனைப் பார்த்து வாலை மட்டும் ஆட்டிவிட்டு மீண்டும் தலையை சரித்துப் படுத்துக் கொண்டது.
வீட்டைப் பார்த்தான். முன்பக்க வேலிப் படல் சாத்தியிருந்தது. முன்பக்க வீட்டுக் கதவு பூட்டியிருந்தது.
வீட்டுச் சாவி இருக்கும் இடம் அவனுக்கு தெரியும்.
வீட்டு வாசல் படலை நோக்கி நடந்தான்.
“அண்ணா..” பக்கவாட்டு வீதியிலிருந்து குரல் கேட்டது.
குரல் வந்த திசையில் பார்த்தான்.
கான்க்ரீட் வீதி. அரச மரத்துக்கு அந்தப் பக்கம் இருந்த இன்னொரு வீட்டு வேலிப் படலுக்குள் அந்தப் பெண் நின்றிருந்தாள்.
சாவித்திரி.
செங்காச்சி
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)
![[Image: Screenshot-20260614-022155-Chrome-Beta.jpg]](https://i.ibb.co/Dm3s6d6/Screenshot-20260614-022155-Chrome-Beta.jpg)