Posts: 1,277
Threads: 24
Likes Received: 4,239 in 861 posts
Likes Given: 648
Joined: Feb 2022
Reputation:
75
14-01-2024, 06:57 PM
(This post was last modified: 20-10-2024, 08:39 PM by Kokko Munivar 2.0. Edited 2 times in total. Edited 2 times in total.)
வணக்கம் நண்பர்களே.. கதை படிக்கும் வாசகர்களுக்கு என் மனதில் தோன்றிய ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக தான் இந்த திரியை ஆரம்பித்தேன்.
நான் சொல்லப்போகும் விசயத்தை ஆதரிப்பவர்களும் இருப்பார்கள். நான் சொல்வதை புரிந்து கொள்ளாமல் எதிர்ப்பவர்களும் கண்டிப்பாக இருப்பார்கள்.
பல வருடங்களாக கதை எழுதுபவர்களும் இங்கு கதை எழுதுகிறார்கள். புதிது புதிதாக கதை எழுதும் ஆர்வத்துடன் திரியை ஆரம்பித்து எழுதுபவர்களும் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை எழுதும் பாணியும் இருக்கிறது. சிலர் எழுதும் போது மற்ற கதைகளின் தாக்கமும் இருக்கத்தான் செய்கிறது.
சரி கதை எப்படி எழுதினாலும் அவர்களை ஊக்கப்படுவது ஒன்றும் தவறில்லை. நன்றாக ஊக்கப்படுத்தலாம்..
ஆனால் கதையில் ஆழமான விசயம் எதுவும் இல்லாமல் இருந்தாலும் பரவாயில்லை,, எங்களுக்கு அப்டேட் வந்தால் மட்டும் போதும் என்பது போல நிறைய கமெண்ட்டுகளை பார்க்க முடிகிறது.
சிரத்தை எடுத்து எழுதும் கதைகளுக்கு கூட கிடைக்காத பாராட்டுகளை சாதாரணமாக போடப்பட்டும் பதிவுகளுக்கு வாரி வழங்குகிறீர்கள்.
உடனே இவன் பொறாமைல பேசுறான்டானு நினைக்க வேணாம்.. கண்டிப்பாக கிடையாது..
கண்டிப்பாக ஒவ்வொரு கதை ஆசிரியரையும் உற்சாகப்படுத்துங்கள்.. அதே போல கதைகளில் உள்ள குறை நிறைகளை எடுத்துச் சொல்லுங்கள்...
கதைக்கு அப்டேட் போட தாமதம் ஆவது என்பது கதைக்கான குறை கிடையாது.. கதையில் எழுதப்படும் காட்சிகளில் தவறு இருப்பது தான் குறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். அது என்னுடைய கதையாக இருந்தாலும் தவறு இருந்தால் ஏற்றுக் கொள்வேன்..
மாங்கு மாங்கு என்று கதை எழுதி அதற்கு சரியான வரவேற்பு கிடைக்காமல் பாதியில் நிறுத்தப்பட்ட கதைகள் இங்கு நிறைய இருக்கிறது..
ஆனால் சாதாரணமாக ஒரு காம காட்சியை மட்டும் பதிவிட்டால் அந்தக் கதைக்கு விழுந்து விழுந்து கமெண்ட் செய்கிறீர்கள்..
"மிகவும் வித்தியாசமான பதிவு"
"ஆஹா.. அற்புதமான பதிவு"
"அட்டகாசமான பதிவு"
"கதை அற்புதமாக செல்கிறது"
"மிகவும் நம்பகதன்மையோடு எழுதுகிறீர்கள்"
"எதார்த்தமாக எழுதுகிறீர்கள்.."
இது போன்ற கமெண்டுகளை படிக்கும் போது சிரிப்பதா இல்லை கோவப்படுவதா என்று தெரியவில்லை.....
இப்படியெல்லாம் கமெண்ட் போடும் போது உங்களுடைய கமெண்ட்டுக்கு மதிப்பே இல்லாமல் போய்விடுகிறது...
உங்களுடைய கணிப்பும், ரசனையும் இவ்வளவு தானா என்று தோன்றுகிறது...
ஒரு கமெண்ட்டை படிக்கும் போது அந்த நபர் அந்தக் கதையை எந்த அளவிற்கு ரசித்து படித்திருக்கிறார் என்று தெரிய வேண்டும்..
ஆனால் இப்போதெல்லாம் போடப்படும் கமெண்ட்டுகள் கண்ணை மூடிக்கொண்டு எதையாவது போட்டு வைப்போம் இல்லைன்னா கதையை நிப்பாட்டிற போறான் என்பது போல இருக்கிறது..
அதாவது அந்த ஆசிரியரை பாராட்டி அப்டேட் போட வைப்பது போல இருக்கிறது..
"அப்போ எங்களை பாராட்டவே வேணாம்னு சொல்றீங்களா...? கமெண்ட் போடலனாலும் திட்டுறீங்க.. கமெண்ட் போட்டாலும் திட்டுறீங்க.. எங்களை என்ன தான் பண்ண சொல்றீங்க....?? "
கண்டிப்பா இந்த மாதிரி கமெண்ட் இங்கே வரும்.. அதனால தான் நானே அதை போட்டுட்டேன்...
கமெண்ட் போடுறது தப்பு இல்ல.. கண்மூடித்தனமா போடாதீங்கனு தான் சொல்றேன்... உங்களோட கமெண்ட்டு தான் அந்தக் கதைக்கு கிடைக்கிற விமர்சனம்.. அது தரமா இருக்கனும்னு நினைக்கிறேன்..
அதே போல தான் வியூஸ் கிடைக்கிறதும்.... ஒரு கதைக்கு கமெண்ட் வரலனாலும் வியூஸ் வர்றதை வச்சு தான் அந்த ஆசிரியர் கதையை தொடருவதா வேணாமா என்று முடிவு செய்கிறார்..
என்னுடைய கதைக்கு கூட ஒரு கதையில் வியூஸ் வராமல் நிறுத்திவிட்டேன்.. அது ஒரு உண்மைக்கதை...
உண்மைக்கதை என்று சொல்லிவிட்டு எதையோ எழுதி வைப்பது என் பழக்கம் இல்லை..
அத்தினி என்ற தலைப்பில் நான் எழுதிய கதை 100% உண்மை கதை.. அதற்கு ஆதரவு சுத்தமாக இல்லை.. காரணம் இங்கு காமம் மட்டும் தான் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது..
காமக்கதைக்கு காமம் தேவை தான்.. அதற்காக வெறும் காமம் மட்டுமே இருந்தால் அது சுவைக்காது..
உப்பு, புளி, காரம், என்று அனைத்தும் கலந்தால் தான் உணவு சுவையாக இருக்கும்.. வெறும் உப்பையோ, வெறும் புளியையோ , வெறும் காரத்தையோ அள்ளி கொட்டினால் சாப்பிட முடியுமா....
இறுதியாக நான் சொல்ல விரும்புவது...
நீங்கள் பக்கம் பக்கமாக விமர்சனம் எழுதாவிட்டாலும் நீங்கள் பதிவிடும் சிறிய கமெண்ட் நியாயமானதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
அனைத்து கதை ஆசிரியரையும் உற்சாகப்படுத்துங்கள்.. கதையில் தவறு இருந்தால் எடுத்து சொல்லுங்கள்.. அது அந்தக் கதையை மேலும் மெறுகேற்ற உதவியாக இருக்கும்..
❤️ காமம் கடல் போன்றது ❤️
Posts: 838
Threads: 8
Likes Received: 1,635 in 682 posts
Likes Given: 616
Joined: Mar 2021
Reputation:
29
17-01-2024, 10:52 AM
(This post was last modified: 17-01-2024, 10:54 AM by GEETHA PRIYAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
மேலே சொன்ன அத்தனை விஷயங்களும் உண்மை.சரியான அளவிற்கு கமெண்டில்லாத காரணத்தால் நானே கதையை பாதியில் நிறுத்தியிருக்கிறேன்.கஷ்டப்பட்டு கதை எழுதி விட்டு அதற்கு சரியான கமெண்ட் இல்லை என்கின்ற போது ஸ்டோரி ரைட்டர் மனம் உடைந்து போகிறார்கள்.
இன்னொரு விஷயம் ...... இங்கே எழுதப்படும் கதைகள் அடுத்த நாளே வேறு ஒரு சைட்டில் பதிவிடப்படுகிறது.
https://fap.desi/hot/tamil
Posts: 17
Threads: 0
Likes Received: 54 in 29 posts
Likes Given: 4
Joined: Jan 2024
Reputation:
1
(17-01-2024, 10:52 AM)GEETHA PRIYAN Wrote: கதை எழுதி விட்டு அதற்கு சரியான கமெண்ட் இல்லை என்கின்ற போது ஸ்டோரி ரைட்டர் மனம் உடைந்து போகிறார்கள்.
அக்கவுண்ட் ஓபன் பண்ணாமல் கதை படிப்போர் அதிகம். கமெண்ட்ஸ் குறைவாக இருப்பதன் காரணம் புரிந்து கொள்ள முடிகிறது.
தலைப்பு கவர்ச்சிகரமாக அல்லது அம்மா இருந்தால் வியூ வருகிறது. கதைக்கு பொருந்தும் தலைப்பை வைத்தால் அதை ஓபன் செய்து பார்ப்பவர் குறைவு.
ஒருவர் தான் படிக்க விரும்பும் கதையை அதன் தலைப்பை வைத்து அல்லது மொத்த வியூஸ் வைத்து படிக்க முடிவு செய்வதால் தான் நிறைய வித்யாசமான கதையமைப்பு கொண்ட கதைகளுக்கு வியூஸ் இல்லை.
ஒரு நேரம் கூட தன் கதையை ஓபன் செய்யாத ஒரு வாசகரை எப்படி ஒருவர் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதே என் கருத்து...
Posts: 203
Threads: 2
Likes Received: 102 in 64 posts
Likes Given: 124
Joined: Jun 2022
Reputation:
2
உங்கள் கருத்து நூற்றுக்கு நூறு. இங்கே நல்ல கதைகள் சீக்கிரமாக கவனிப்பார் இல்லாமல் பின்னால் போய் விடுகின்றன. ஆனால் ஒவ்வொரு முறையும் இதைச் சொல்லி சொல்லி நமக்கு தான் சலிக்கிறதே ஒழிய நிலைமை மாறுவதில்லை. தொடர்ந்து எழுதுபவனை சீந்துவாரில்லை.
J.Z.Antony
அழகின் ரசிகன்
Posts: 1,277
Threads: 24
Likes Received: 4,239 in 861 posts
Likes Given: 648
Joined: Feb 2022
Reputation:
75
(17-01-2024, 10:52 AM)GEETHA PRIYAN Wrote: மேலே சொன்ன அத்தனை விஷயங்களும் உண்மை.சரியான அளவிற்கு கமெண்டில்லாத காரணத்தால் நானே கதையை பாதியில் நிறுத்தியிருக்கிறேன்.கஷ்டப்பட்டு கதை எழுதி விட்டு அதற்கு சரியான கமெண்ட் இல்லை என்கின்ற போது ஸ்டோரி ரைட்டர் மனம் உடைந்து போகிறார்கள்.
இன்னொரு விஷயம் ...... இங்கே எழுதப்படும் கதைகள் அடுத்த நாளே வேறு ஒரு சைட்டில் பதிவிடப்படுகிறது.
https://fap.desi/hot/tamil
Nanbarey antha innoru site yarudaythu.. intha site admin than antha site vachurukara....
❤️ காமம் கடல் போன்றது ❤️
Posts: 1,277
Threads: 24
Likes Received: 4,239 in 861 posts
Likes Given: 648
Joined: Feb 2022
Reputation:
75
(18-01-2024, 08:24 AM)jzantony Wrote: உங்கள் கருத்து நூற்றுக்கு நூறு. இங்கே நல்ல கதைகள் சீக்கிரமாக கவனிப்பார் இல்லாமல் பின்னால் போய் விடுகின்றன. ஆனால் ஒவ்வொரு முறையும் இதைச் சொல்லி சொல்லி நமக்கு தான் சலிக்கிறதே ஒழிய நிலைமை மாறுவதில்லை. தொடர்ந்து எழுதுபவனை சீந்துவாரில்லை.
வருத்தமான விசயம் தான் நண்பரே.. எனக்கே வர வர ஆர்வம் குறைகிறது.. சிலர் தேர்வு எழுதும் போது கதையாக கதையாக எதையாவது எழுதி வைத்துவிட்டு வருவார்கள்.. அதுக்கும் அவர்களுக்கு மார்க் போடுவார்கள்.. நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் அது போல நடந்திருக்கிறது.. எனக்கு அது தான் நியாபகம் வருகிறது...
❤️ காமம் கடல் போன்றது ❤️
Posts: 1,277
Threads: 24
Likes Received: 4,239 in 861 posts
Likes Given: 648
Joined: Feb 2022
Reputation:
75
(17-01-2024, 11:23 AM)MyPaayam Wrote: அக்கவுண்ட் ஓபன் பண்ணாமல் கதை படிப்போர் அதிகம். கமெண்ட்ஸ் குறைவாக இருப்பதன் காரணம் புரிந்து கொள்ள முடிகிறது.
தலைப்பு கவர்ச்சிகரமாக அல்லது அம்மா இருந்தால் வியூ வருகிறது. கதைக்கு பொருந்தும் தலைப்பை வைத்தால் அதை ஓபன் செய்து பார்ப்பவர் குறைவு.
ஒருவர் தான் படிக்க விரும்பும் கதையை அதன் தலைப்பை வைத்து அல்லது மொத்த வியூஸ் வைத்து படிக்க முடிவு செய்வதால் தான் நிறைய வித்யாசமான கதையமைப்பு கொண்ட கதைகளுக்கு வியூஸ் இல்லை.
ஒரு நேரம் கூட தன் கதையை ஓபன் செய்யாத ஒரு வாசகரை எப்படி ஒருவர் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதே என் கருத்து...
நண்பரே.. நீங்கள் சொல்வது போல அக்கவுண்ட் இல்லாமல் கதை படிப்பவர்களும் இருக்கிறார்கள்.. அதனால் கமெண்ட் வராமல் போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது..
ஆனால் நான் இங்கு சொன்ன விசயமே வேறு.. கண்ணாபின்னாவென்று கமெண்ட் செய்யும் போது அந்த கமெண்ட்டுக்கு மதிப்பில்லாமல் போய்விடுகிறது.. தரமான கமெண்ட்டுகளை பதிவிட வேண்டும் என்பதே என் கோரிக்கை..
❤️ காமம் கடல் போன்றது ❤️
Posts: 17
Threads: 0
Likes Received: 54 in 29 posts
Likes Given: 4
Joined: Jan 2024
Reputation:
1
உண்மை, புரிகிறது. போற போக்கில்
Super
Good Update
Nice
Please continue
என்ற பதிவுகளை பார்க்கும் போது கோபம் வருகிறது.
அதிலும் posting freak tag இருக்கும் நபர்கள் ஒரே நேரத்தில் 10 கதைகளுக்கு மேல் பதிவு செய்வது. அதிலும் குறிப்பாக ஒரே கமெண்ட் காப்பி பேஸ்ட் செய்வது இன்னும் எரிச்சலை தருகிறது..
கதையை படித்து ஒருவேளை குறை ஏதும் சொன்னால் கதாசிரியர்கள் கூட ஒருவேளை ஏற்றுக் கொள்வார்கள்.
ஆனால் ரசிகன் என்ற பெயரில் ஒற்றை வரி போடும் நபர்களுக்கு கடுப்பு வருகிறது..
எனக்கு இங்கே சில கதைகளில் நிறைய முரண்பாடுகள். அதைபற்றி பதிவிட தயக்கம்..
"கடிச்சு வச்சுருவானுங்க" பீல்..
Posts: 1,188
Threads: 1
Likes Received: 520 in 393 posts
Likes Given: 77
Joined: Feb 2019
Reputation:
10
கதாசிரியரின் ஆதங்கம் புரிகிரது ! என்ன செய்வது ? அந்த மாதிரி சூழ்லையில் இந்த பின்னூட்டங்களை அதிகம் எதிர்பார்க்காமல் தங்களது பாணியில் கதையை நடத்தி செல்லுங்க. குறைவான எண்ணிக்கையில் பின்னூட்டம் வந்தாலும் போது. தரமானதாக இருக்கட்டும்.
எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்தால், ஏமாற்றங்கள் அதிகமாக வரும் !
Posts: 3
Threads: 0
Likes Received: 2 in 2 posts
Likes Given: 1
Joined: Feb 2024
Reputation:
0
நியாயமான கருத்து முனிவரே... ஒற்றை வரியில் ஆங்கில பின்னுட்டம் இடுவதால் கதாசிரியருக்குநிச்சயம் ஏமாற்றமே.
வெறும் மசாலா கதைகளை மட்டுமே வாசிப்பவர்கள் நிச்சயம் காமக்கதைகள் வாசிப்பதில் புதியவராகத்தான் இருக்க வேண்டும். அதே நேரம் நல்ல அனுபவம் மிக்க வாசகர்கள் நிச்சயம் யதார்த்தம் கலந்த கதைகளை விரும்புவர்.
"_" தளத்தில் இருப்பது போல இங்கு கதைகளுக்கும் கதாசிரியருக்கும் ஊக்க படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவரும் கருதிட்டால் ஒழிய இந்த பிரச்னை தொடரும். அங்கு இருப்பதை போல நல்ல கதாசிரியர்கள் இங்கும் உள்ளனர். நிச்சயம் புதிய வாசக வட்டங்கள் அவர்களை அடையாளம் கண்டு தரமான கதைகளை அடையாளம் கண்டு அவற்றிற்கு தங்கள் பின்னுட்டத்தின் மூலம் அவர்கள் உழைப்பிற்கு ஊதியம் வழங்குதல் என்றும் நலம்
Posts: 471
Threads: 6
Likes Received: 2,358 in 378 posts
Likes Given: 407
Joined: Nov 2021
Reputation:
203
காம கதை எழுதுபகர்களின் நோக்கம் மிகவும் சிறிய விஷயம்
தன சிந்தனையின் வடிகால், நாம் ரசித்த விஷயத்தை அடுத்தவனும் ரசித்து ஒரு ஆமோதிப்பு, ஒரு வரவேற்பு கிடைக்குமா? என்கிற ஒரு மிக நியாயமான எதிர்பார்ப்பு மட்டும் தான். பணம் என்பது பிரதானம் அல்ல, அப்படி பணம் தான் பிரதானம் என்றால் அவர்கள் செய்யும் வேளையில் முழு கவனமும் செலுத்தினால் போதும், அங்கே அவர்கள் சம்பாரிக்க முடியும் (அதாவது நமது வாசகர்கள் போல) படிக்க மட்டும் வருவார்கள், ஒரு அக்கௌன்ட் உருவாக்கி, விமர்சனம் எழுதுவது என்பது பெரும்பான்மையோருக்கு (வாசகர்களுக்கு) அது ஒரு வெட்டி வேலை.
நானும் காம கதைகளை, ரசித்து ருசித்து எழுதுபவன், ஆங்கிலத்தில் ISS தலத்தில் எழுதி இருக்கிறேன். பிறகு ஒரு தருணத்தில், என் கதைகள் படமாக்க படவேண்டும் என்று ரொம்ப முயற்சித்து, இப்போது அதில் வெற்றியும் அடைந்திருக்கிறேன், நான் கற்பனையில் உருவாக்கிய கதா பாத்திரங்கள் உயிரோட்டதோடு, நான் எழுதிய வசனங்களை பேசி காட்சிகளாக விரியும் பொது அது ஒரு மிக பெரிய சந்தோஷம். இன்னும் வெளியாக வில்லை, போஸ்ட் production வேலைகளுக்காக காத்திருக்கிறது
என் கதைகளை படமாக எடுப்பதால், நான் தளங்களில் எழுதுவதை நிறுத்தி விட்டேன். அனால் அதற்கு முன்பு அமேசான் கிண்டியில் என் ஆங்கில கதைகளை பதிவிட்டேன். தமிழிலும் ஒன்று வெளியிட்டேன்.
அமேசான் கிண்டியில் பணம் கொடுத்து நம் கதையை யாரும் படிக்க வேண்டாம், அவர்கள் கிண்டில் மம்பர்ஷிப் வைத்திருந்து நமது கதையில் எதனை பக்கம் படிக்கிறாரார்களோ அதற்கு தகுந்த மாதிரி பணம் வரும்.
நான் எழுதிய கதைகளுக்கு ஒரு நாளைக்கு சுமார் 8 முதல் 10 அமெரிக்க டாலர் வருமானம் வந்தது. ஒரு paasion கு அந்த வருமானம் என்பது நல்ல விஷயம் தான். அனால், வீட்டிற்கு தெரியாமல் எழுதும் எனக்கு பேங்க் கணக்கு, ஒன்லைன் அமேசான் கணக்கு இதையெல்லாம் யாருக்கும் தெரியாமல் பராமரிப்பது என்பது சாதாரணமான விஷயம் கிடையாது, அதனால் நண்பனின் பெயரில் செய்தென்.
அனால் ஒரு மாதத்திற்குள், அமேசான், என் கதைகள் ஆபாசம் அதிகம் உள்ளதாக ஒவ்வொன்றாக நீக்கி விட்டது. ஆனால் அதே அமேசான் கிண்டிலில் ரவி ஷிக்கா போன்ற பல எழுத்தாளர்களின் காம கதைகள் எந்த பிரச்னையும் இன்றி வெற்றிகரமாக உள்ள போது, என் கதை மட்டும் ஏன் நிராகரிக்கப்பட்டது எங்கிருந்த கேள்வி எழுந்தது.
ஆனால் விரத்தி காரணமாக அதற்கான பதிலை தேடாமல், மேற்க்கொண்டு எந்த முயற்சியும் செய்யாமல் விட்டுவிட்டேன். பிறகு, ஆழ்ந்து அடுத்தவர்கள் கதைகளை படிக்கும் பொது ஒன்று புரிந்தது.
நேரடி ஆபாசமான வார்த்தைகள் இருந்தால், தூக்கி விடுகிறார்கள், மறைமுகமாக நாசூக்காக இருந்தால் தடுப்பதில்லை. நீங்கள் என்ன வேணாலும் எழுதலாம் நீங்கள் உபயோகிக்கும் வார்த்தைகள் தான் கதையை அனுமதிப்பதா அல்லது நிராகரிப்பதா என்பதை தீர்மானிக்கிறது. அதாவது key words தான்.
உதாரகணமாக "boobs" தவிர்த்து "bossoms"
pussy தவிர்த்து "golden triangle"
இந்த சூட்சுமம் அறிய ரவி ஷிக்கா அல்லது ஒரு ஆசிரியரின் ஒரு கதையை கிண்டிலின் படித்தால் உங்களுக்கு புரிந்துவிடும்.
நான் இதற்கு முன்பு பதிவிட்ட கதையை திரு குரலாய் மாற்றியதற்கு காரணம், அந்த நேரத்தில் அந்த கதை கிண்டியில் வெற்றிகரமாக உலாவி கொண்டிருந்தது, அதனால் இங்கே நீக்கி விட்டேன்.
ஒரு கதையில், கதா பாதத்திரங்கள், whatsapp chat செய்வதாக வரும், அதில் நம்பகதன்மை அதிகரிக்க, whatsapp சட்ட ஐ உருவாக்கி போஸ்ட் ஆக போட்டிருக்கிறேன், திரி கீழே, ஒரு இரண்டே லைக்.
எழுதாளர்களை பாரது சுருக்கமாக சொல்லணும்னா, கமல் பாணியில் "போய் புள்ள குட்டீங்கல படிக்க வைங்கப்பா"
https://xossipy.com/thread-42925.html
Posts: 102
Threads: 0
Likes Received: 64 in 47 posts
Likes Given: 410
Joined: Mar 2024
Reputation:
0
Posts: 280
Threads: 5
Likes Received: 468 in 188 posts
Likes Given: 39
Joined: Jun 2023
Reputation:
17
இந்த தளத்தில் பாதியில் விட்ட கதைகளை விட, முடிந்த கதைகள் மிக சொற்பம். ஆனால் முடிந்த கதைகளை தேடி எடுப்பதில் இந்த Forum-இல் கடினமாக இருக்கிறது.
ஏதாவது வழி இருக்கிறதா?
Posts: 40
Threads: 0
Likes Received: 38 in 31 posts
Likes Given: 0
Joined: Jun 2024
Reputation:
0
லாஸ்ட் போஸ்ட் "Vandanavishnu0007a" என காட்டினால் அந்த கதையை நீங்கள் ஓபன் செய்து அப்டேட் இருக்கிறதா என பார்க்க தேவையில்லை.
கடைசி போஸ்ட் ஒரு வாரம் ஆன பிறகு அந்த கதைகளுக்கு ஆதரவு கொடுக்கிறேன் என எதையாவது எழுதி போஸ்ட் போட்டு முதல் பக்கத்திற்கு கொண்டு வருவான்.
அதுவும் 3-5 கதைகள் ஒரே நேரத்தில். சில மணி நேரங்களுக்கு பிறகு புது கதைகளுக்கு. ஒரு நாளில் இந்த மாதிரி இரண்டாவது அல்லது மூன்றாவது பக்கத்தில் இருக்கும் பல கதைகளை முன் பக்கத்திற்கு தள்ளுவதே வேலை...
Posts: 12,179
Threads: 98
Likes Received: 6,062 in 3,574 posts
Likes Given: 11,830
Joined: Apr 2019
Reputation:
40
(23-07-2024, 06:33 PM)KaamamInithu Wrote: லாஸ்ட் போஸ்ட் "Vandanavishnu0007a" என காட்டினால் அந்த கதையை நீங்கள் ஓபன் செய்து அப்டேட் இருக்கிறதா என பார்க்க தேவையில்லை.
கடைசி போஸ்ட் ஒரு வாரம் ஆன பிறகு அந்த கதைகளுக்கு ஆதரவு கொடுக்கிறேன் என எதையாவது எழுதி போஸ்ட் போட்டு முதல் பக்கத்திற்கு கொண்டு வருவான்.
அதுவும் 3-5 கதைகள் ஒரே நேரத்தில். சில மணி நேரங்களுக்கு பிறகு புது கதைகளுக்கு. ஒரு நாளில் இந்த மாதிரி இரண்டாவது அல்லது மூன்றாவது பக்கத்தில் இருக்கும் பல கதைகளை முன் பக்கத்திற்கு தள்ளுவதே வேலை...
நன்றி நண்பா !
Posts: 410
Threads: 8
Likes Received: 456 in 201 posts
Likes Given: 723
Joined: Apr 2023
Reputation:
25
(04-03-2024, 12:35 AM)lifeisbeautiful.varun Wrote: காம கதை எழுதுபகர்களின் நோக்கம் மிகவும் சிறிய விஷயம்
தன சிந்தனையின் வடிகால், நாம் ரசித்த விஷயத்தை அடுத்தவனும் ரசித்து ஒரு ஆமோதிப்பு, ஒரு வரவேற்பு கிடைக்குமா? என்கிற ஒரு மிக நியாயமான எதிர்பார்ப்பு மட்டும் தான். பணம் என்பது பிரதானம் அல்ல, அப்படி பணம் தான் பிரதானம் என்றால் அவர்கள் செய்யும் வேளையில் முழு கவனமும் செலுத்தினால் போதும், அங்கே அவர்கள் சம்பாரிக்க முடியும் (அதாவது நமது வாசகர்கள் போல) படிக்க மட்டும் வருவார்கள், ஒரு அக்கௌன்ட் உருவாக்கி, விமர்சனம் எழுதுவது என்பது பெரும்பான்மையோருக்கு (வாசகர்களுக்கு) அது ஒரு வெட்டி வேலை.
நானும் காம கதைகளை, ரசித்து ருசித்து எழுதுபவன், ஆங்கிலத்தில் ISS தலத்தில் எழுதி இருக்கிறேன். பிறகு ஒரு தருணத்தில், என் கதைகள் படமாக்க படவேண்டும் என்று ரொம்ப முயற்சித்து, இப்போது அதில் வெற்றியும் அடைந்திருக்கிறேன், நான் கற்பனையில் உருவாக்கிய கதா பாத்திரங்கள் உயிரோட்டதோடு, நான் எழுதிய வசனங்களை பேசி காட்சிகளாக விரியும் பொது அது ஒரு மிக பெரிய சந்தோஷம். இன்னும் வெளியாக வில்லை, போஸ்ட் production வேலைகளுக்காக காத்திருக்கிறது
என் கதைகளை படமாக எடுப்பதால், நான் தளங்களில் எழுதுவதை நிறுத்தி விட்டேன். அனால் அதற்கு முன்பு அமேசான் கிண்டியில் என் ஆங்கில கதைகளை பதிவிட்டேன். தமிழிலும் ஒன்று வெளியிட்டேன்.
அமேசான் கிண்டியில் பணம் கொடுத்து நம் கதையை யாரும் படிக்க வேண்டாம், அவர்கள் கிண்டில் மம்பர்ஷிப் வைத்திருந்து நமது கதையில் எதனை பக்கம் படிக்கிறாரார்களோ அதற்கு தகுந்த மாதிரி பணம் வரும்.
நான் எழுதிய கதைகளுக்கு ஒரு நாளைக்கு சுமார் 8 முதல் 10 அமெரிக்க டாலர் வருமானம் வந்தது. ஒரு paasion கு அந்த வருமானம் என்பது நல்ல விஷயம் தான். அனால், வீட்டிற்கு தெரியாமல் எழுதும் எனக்கு பேங்க் கணக்கு, ஒன்லைன் அமேசான் கணக்கு இதையெல்லாம் யாருக்கும் தெரியாமல் பராமரிப்பது என்பது சாதாரணமான விஷயம் கிடையாது, அதனால் நண்பனின் பெயரில் செய்தென்.
அனால் ஒரு மாதத்திற்குள், அமேசான், என் கதைகள் ஆபாசம் அதிகம் உள்ளதாக ஒவ்வொன்றாக நீக்கி விட்டது. ஆனால் அதே அமேசான் கிண்டிலில் ரவி ஷிக்கா போன்ற பல எழுத்தாளர்களின் காம கதைகள் எந்த பிரச்னையும் இன்றி வெற்றிகரமாக உள்ள போது, என் கதை மட்டும் ஏன் நிராகரிக்கப்பட்டது எங்கிருந்த கேள்வி எழுந்தது.
ஆனால் விரத்தி காரணமாக அதற்கான பதிலை தேடாமல், மேற்க்கொண்டு எந்த முயற்சியும் செய்யாமல் விட்டுவிட்டேன். பிறகு, ஆழ்ந்து அடுத்தவர்கள் கதைகளை படிக்கும் பொது ஒன்று புரிந்தது.
நேரடி ஆபாசமான வார்த்தைகள் இருந்தால், தூக்கி விடுகிறார்கள், மறைமுகமாக நாசூக்காக இருந்தால் தடுப்பதில்லை. நீங்கள் என்ன வேணாலும் எழுதலாம் நீங்கள் உபயோகிக்கும் வார்த்தைகள் தான் கதையை அனுமதிப்பதா அல்லது நிராகரிப்பதா என்பதை தீர்மானிக்கிறது. அதாவது key words தான்.
உதாரகணமாக "boobs" தவிர்த்து "bossoms"
pussy தவிர்த்து "golden triangle"
இந்த சூட்சுமம் அறிய ரவி ஷிக்கா அல்லது ஒரு ஆசிரியரின் ஒரு கதையை கிண்டிலின் படித்தால் உங்களுக்கு புரிந்துவிடும்.
நான் இதற்கு முன்பு பதிவிட்ட கதையை திரு குரலாய் மாற்றியதற்கு காரணம், அந்த நேரத்தில் அந்த கதை கிண்டியில் வெற்றிகரமாக உலாவி கொண்டிருந்தது, அதனால் இங்கே நீக்கி விட்டேன்.
ஒரு கதையில், கதா பாதத்திரங்கள், whatsapp chat செய்வதாக வரும், அதில் நம்பகதன்மை அதிகரிக்க, whatsapp சட்ட ஐ உருவாக்கி போஸ்ட் ஆக போட்டிருக்கிறேன், திரி கீழே, ஒரு இரண்டே லைக்.
எழுதாளர்களை பாரது சுருக்கமாக சொல்லணும்னா, கமல் பாணியில் "போய் புள்ள குட்டீங்கல படிக்க வைங்கப்பா"
https://xossipy.com/thread-42925.html
உண்மைதான். வாசிக்கிறவங்க அட்லீஸ்ட் ஒரு லைக் ஆவது போடனும், வாசிக்கும் வரிகளுக்கு அவரவருக்கு ஏற்படும் புன்னகையை விட அதை வார்த்தைகளில் சொல்வது நலம். ஆனால் எல்லாரும் எழுதும் திறன் உள்ளவர்கள் கிடையாதே...அதனால் எழுதும் நாம் வேண்டு கோள் வைக்கும் நிலையில் தான் இருக்கிறோம். பதிலாக எழுத்தாளர்கள் ஒருவருக் கொருவர் வாழ்த்தி பதிவிடுவதுதான் சரி அது மற்றவர்களுக்கு ஒரு உத்வேகம் கொடுக்கும். இதில் வந்தனா விஷணு சிறப்பாக செயல்படுகிறார்! வாழ்த்துகள்!
Posts: 211
Threads: 2
Likes Received: 655 in 447 posts
Likes Given: 134
Joined: Dec 2024
Reputation:
10
31-12-2024, 08:44 AM
(This post was last modified: 31-12-2024, 08:44 AM by SilkShalini. Edited 1 time in total. Edited 1 time in total.)
இந்த கவலை எனக்கும் உள்ளது.
இருந்தாலும் நான் தினமும் கதைகளை பகிர்ந்து கொண்டுதான் இருக்கிறேன். ஏனெனில் எனது கதைகள் அனைத்தும் முன்பே எழுதி முடிக்கப்பட்டவை. எழுதி முடித்த பாகங்களை தினமும் வெளியிடுவேன்.
எதிர்காலத்தில் எனக்கு ஆதரவு இருந்தால், தொடர்ந்து கதைகளை எழுதி வெளியிடுவேன். ஆதரவு கிடைக்கவில்லையெனில், எழுதி முடித்த பாகங்களை மட்டும் வெளியிட்டு விட்டு, அதற்கு மேல் போஸ்ட் போடுவதை நிறுத்தி விடலாம் என முடிவு செய்துள்ளேன்.
அனைவருக்குமே நன்றாக தெரியும். இந்த தளத்தில் வெளியிடும் கதைகள் அனைத்தும், லாப நோக்கத்திற்காக வெளியிடப்படுபவை அல்ல.
இதன் மூலம் நமக்கு ஒரு பைசா கூட பிரயோஜனம் இல்லை. நமக்கு கிடைக்கும் பாராட்டுக்களுக்காக மட்டும்தான் இங்கு கதைகளை வெளியிடுகிறோம். அதுவும் கிடைக்கவில்லை என்றால், எதற்காக இங்கு கதைகளை வெளியிட வேண்டும்...?
Posts: 12,179
Threads: 98
Likes Received: 6,062 in 3,574 posts
Likes Given: 11,830
Joined: Apr 2019
Reputation:
40
(31-12-2024, 08:44 AM)SilkShalini Wrote: இந்த கவலை எனக்கும் உள்ளது.
இருந்தாலும் நான் தினமும் கதைகளை பகிர்ந்து கொண்டுதான் இருக்கிறேன். ஏனெனில் எனது கதைகள் அனைத்தும் முன்பே எழுதி முடிக்கப்பட்டவை. எழுதி முடித்த பாகங்களை தினமும் வெளியிடுவேன்.
எதிர்காலத்தில் எனக்கு ஆதரவு இருந்தால், தொடர்ந்து கதைகளை எழுதி வெளியிடுவேன். ஆதரவு கிடைக்கவில்லையெனில், எழுதி முடித்த பாகங்களை மட்டும் வெளியிட்டு விட்டு, அதற்கு மேல் போஸ்ட் போடுவதை நிறுத்தி விடலாம் என முடிவு செய்துள்ளேன்.
அனைவருக்குமே நன்றாக தெரியும். இந்த தளத்தில் வெளியிடும் கதைகள் அனைத்தும், லாப நோக்கத்திற்காக வெளியிடப்படுபவை அல்ல.
இதன் மூலம் நமக்கு ஒரு பைசா கூட பிரயோஜனம் இல்லை. நமக்கு கிடைக்கும் பாராட்டுக்களுக்காக மட்டும்தான் இங்கு கதைகளை வெளியிடுகிறோம். அதுவும் கிடைக்கவில்லை என்றால், எதற்காக இங்கு கதைகளை வெளியிட வேண்டும்...?
100% இல்லை 1000% நீங்க சொல்வது உண்மை நண்பா
எவருக்கும் எந்த லாபமும் இல்லை
ஆனால் விமர்சிப்பவர்கள் எழுத்தாளர்களை உண்டு இல்லை என்று பண்ணி விடுகிறார்கள்
உங்கள் திறமை சற்று வித்தியாசமாக உள்ளது
கதையை முழுவதுமாக எழுதி முடித்து விட்டு பதிவிடுவது என்பது அசாத்தியமான காரியம்
நீங்கள் அதை சிறப்புற செய்வது மிகுந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது
தொடர்ந்து பதிவிட வாழ்த்துக்கள்
உங்கள் கருத்துக்களுக்கு மிகுந்த நன்றி நண்பா !
Posts: 155
Threads: 1
Likes Received: 507 in 135 posts
Likes Given: 98
Joined: Nov 2024
Reputation:
11
வணக்கம்.
இங்கே வாதாடுவது வழக்கமாகிவிட்டது.எழுத்தாளர் எழுதுகிறார் நன்றாக இருந்தால் வாழ்த்துங்கள். இல்லயேல் கடந்து செல்லுங்கள்.யாரையும் யாருக்கும் தெரியாது.முகம் தெரியாது பெயர் தெரியாது.ஊர் தெரியாது.சரிதானே ? உலகமே ஒன்றுமில்லை ..ஒன்றுமில்லை... ஒன்றுமில்லை..
என்று யோசித்து பாருங்களேன் .ஆமா ..ஒண்ணுமே இல்ல.... .ஒண்ணுமில்ல இல்லங்கறதும்.இருக்காது. அது போலத்தான் இந்த தளமும் இதிலும் ஒன்றும் இல்லை .ஒரே ஆறுதல் நம் போல மானிடர் நமக்காக,கதை எழுகிறார்.படிக்கலாம் அன்பை பகிரலாம் எழுத்து மூலமாக அவளவுதான்.
எதோ என் மனதில் தோன்றியது.
நன்றி
Posts: 359
Threads: 4
Likes Received: 1,643 in 254 posts
Likes Given: 1,020
Joined: Jun 2024
Reputation:
62
04-03-2025, 01:03 PM
(This post was last modified: 04-03-2025, 01:04 PM by Kavinrajan. Edited 1 time in total. Edited 1 time in total.)
பல நண்பர்களை பார்த்திருக்கிறேன். வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு ஒரு முறையாவது அப்டெட் கேட்டு விடுகிறார்கள்.
இதிலென்ன தவறு இருக்கிறது என்கிறிர்களா?
தவறு இல்லை தான். ஆனால் பல மாதம் ஆன பின்னும் ஆக்டிவ் இல்லாத கதைகளுக்கு மீண்டும் மீண்டும் கேட்பதை என்னவென்று சொல்வது?
பல நல்ல கதைகள்..ஆக்டிவாக அப்டெட் கொடுக்கும் கதை பதிவுகள் எல்லாம் அவர்கள் கண்ணில் ஏனோ படுவதில்லை. அது தான் வருத்தமாக உள்ளது.
அதனால் தானோ பல நல்ல எழுத்தாளர்கள் இத்தளத்தில் தொடர்ந்து எழுத வருவதில்லை என எண்ணத் தோன்றுகிறது.
Update வேணும் என பொதுவாக கேட்பதை விட.. ஆக்டிவான கதை பதிவுகளில் நல்ல விஷயங்கள் எடுத்து சொல்லுங்கையா.. அதை பார்த்து எழுத்தாளர்கள் உற்சாகமாக வருவார்கள். தளமும் களை கட்டும். கூட்டமும் அதிகமாகும்.
நீங்க விரும்புற எழுத்தாளர்களும் கண்டிப்பா தானாகவே வந்து அப்டெட் போடுவாங்க..
நல்ல விமர்சனமே இத்தளத்திற்கு விமோசனம். அதை அவ்வாசக நண்பர்கள் புரிந்து கொள்வார்களா?
|