Non-erotic கதை‌ படிக்கும் வாசகர்களின் கவனத்திற்கு....
#1
வணக்கம் நண்பர்களே.. கதை படிக்கும் வாசகர்களுக்கு என் மனதில் தோன்றிய ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக  தான் இந்த திரியை ஆரம்பித்தேன். 


நான் சொல்லப்போகும் விசயத்தை ஆதரிப்பவர்களும் இருப்பார்கள். நான் சொல்வதை புரிந்து கொள்ளாமல் எதிர்ப்பவர்களும் கண்டிப்பாக இருப்பார்கள்.. 


பல வருடங்களாக கதை எழுதுபவர்களும் இங்கு கதை எழுதுகிறார்கள்.. புதிது புதிதாக கதை எழுதும் ஆர்வத்துடன் திரியை ஆரம்பித்து எழுதுபவர்களும் இருக்கிறார்கள்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை எழுதும் பாணியும் இருக்கிறது.. சிலர் எழுதும் போது மற்ற கதைகளின் தாக்கமும் இருக்கத்தான் செய்கிறது.. 

சரி கதை எப்படி எழுதினாலும் அவர்களை ஊக்கப்படுவது ஒன்றும் தவறில்லை.. நன்றாக ஊக்கப்படுத்தலாம்..

ஆனால் கதையில் ஆழமான விசயம் எதுவும் இல்லாமல் இருந்தாலும் பரவாயில்லை.. எங்களுக்கு அப்டேட் வந்தால் மட்டும் போதும் என்பது போல நிறைய கமெண்ட்டுகளை பார்க்க முடிகிறது...


சிரத்தை எடுத்து எழுதும் கதைகளுக்கு கூட கிடைக்காத பாராட்டுகளை சாதாரண அப்டேட்டுக்கு வாரி வழங்குகிறீர்கள்..


உடனே இவன் பொறாமைல பேசுறான்டானு நினைக்க வேணாம்.. கண்டிப்பாக கிடையாது..


கண்டிப்பாக ஒவ்வொரு கதை ஆசிரியரையும் உற்சாகப்படுத்துங்கள்.. அதே போல கதைகளில் உள்ள குறை நிறைகளை எடுத்துச் சொல்லுங்கள்...

கதைக்கு அப்டேட் போட தாமதம் ஆவது என்பது கதைக்கான குறை கிடையாது.. கதையில் எழுதப்படும் காட்சிகளில் தவறு இருப்பது தான் குறையாக எடுத்துக் கொள்ள வேண்டும்‌‌. அது என்னுடைய கதையாக இருந்தாலும் தவறு இருந்தால் ஏற்றுக் கொள்வேன்..


மாங்கு மாங்கு என்று கதை எழுதி அதற்கு சரியான வரவேற்பு கிடைக்காமல் பாதியில் நிறுத்தப்பட்ட கதைகள் இங்கு நிறைய இருக்கிறது.. 

ஆனால் சாதாரணமாக ஒரு காம காட்சியை மட்டும் பதிவிட்டால் அந்தக் கதைக்கு விழுந்து விழுந்து கமெண்ட் செய்கிறீர்கள்.. 

மிகவும் வித்தியாசமான பதிவு..

ஆஹா.. அற்புதமான பதிவு..

அட்டகாசமான பதிவு...

கதை ஆரம்பித்து அற்புதமாக செல்கிறது.. சூப்பர்... 

மிகவும் நம்பகத்தன்மையோடு எழுதுகிறீர்கள்....



இது போன்ற கமெண்டுகளை படிக்கும் போது சிரிப்பதா இல்லை கோவப்படுவதா என்று தெரியவில்லை.....



இப்படியெல்லாம் கமெண்ட் போடும் போது உங்களுடைய கமெண்ட்டுக்கு மதிப்பே இல்லாமல் போய்விடுகிறது...


உங்களுடைய கணிப்பும், ரசனையும் இவ்வளவு தானா என்று தோன்றுகிறது... 

ஒரு கமெண்ட்டை படிக்கும் போது அந்த நபர் அந்தக் கதையை எந்த அளவிற்கு ரசித்து படித்திருக்கிறார் என்று தெரிய வேண்டும்.. 

ஆனால் இப்போதெல்லாம் போடப்படும் கமெண்ட்டுகள் கண்ணை மூடிக்கொண்டு எதையாவது போட்டு வைப்போம் இல்லைன்னா கதையை நிப்பாட்டிற போறான் என்பது போல இருக்ககறது..


அதாவது அந்த ஆசிரியரை உசுப்பேற்றி அப்டேட் போட வைப்பது போல இருக்கிறது..  


"அப்போ எங்களை பாராட்டவே வேணாம்னு சொல்றீங்களா...? கமெண்ட் போடலனாலும் திட்டுறீங்க.. கமெண்ட் போட்டாலும் திட்டுறீங்க.. எங்களை என்ன தான் பண்ண சொல்றீங்க....?? "


கண்டிப்பா இந்த மாதிரி கமெண்ட் இங்கே வரும்.. அதனால தான் நானே அதை போட்டுட்டேன்...


கமெண்ட் போடுறது தப்பு இல்ல.. கண்மூடித்தனமா போடாதீங்கனு தான் சொல்றேன்... உங்களோட கமெண்ட்டு தான் அந்தக் கதைக்கு கிடைக்கிற விமர்சனம்.. அது தரமா இருக்கனும்னு நினைக்கிறேன்..


அதே போல தான் வியூஸ் கிடைக்கிறதும்.... ஒரு கதைக்கு கமெண்ட் வரலனாலும் வியூஸ் வர்றதை வச்சு தான் அந்த ஆசிரியர் கதையை தொடருவதா வேணாமா என்று முடிவு செய்கிறார்..  

என்னுடைய கதைக்கு கூட ஒரு கதையில் வியூஸ் வராமல் நிறுத்திவிட்டேன்.. அது ஒரு உண்மைக்கதை... 

உண்மைக்கதை என்று சொல்லிவிட்டு எதையோ எழுதி வைப்பது என் பழக்கம் இல்லை.. 

அத்தினி என்ற தலைப்பில் நான் எழுதிய கதை 100% உண்மை கதை.. அதற்கு ஆதரவு சுத்தமாக இல்லை.. காரணம் இங்கு காமம் மட்டும் தான் அதாகமாக எதிர்பார்க்கப்படுகிறது..

காமக்கதைக்கு காமம் தேவை தான்.. அதற்காக வெறும் காமம் மட்டுமே இருந்தால் அது சுவைக்காது..

உப்பு, புளி, காரம், என்று அனைத்தும் கலந்தால் தான் உணவு சுவையாக இருக்கும்.. வெறும் உப்பையோ,  வெறும் புளியையோ ,  வெறும் காரத்தையோ அள்ளி கொட்டினால் சாப்பிட முடியுமா....


இறுதியாக நான் சொல்ல விரும்புவது...‌

அனைத்து கதை ஆசிரியரையும் உற்சாகப்படுத்துங்கள்.. கதையில் தவறு இருந்தால் எடுத்து சொல்லுங்கள்.. அது அந்தக் கதையை மேலும் மெறுகேற்ற உதவியாக இருக்கும்..  
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 5 users Like Kokko Munivar 2.0's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
மேலே சொன்ன அத்தனை விஷயங்களும் உண்மை.சரியான அளவிற்கு கமெண்டில்லாத காரணத்தால் நானே கதையை பாதியில் நிறுத்தியிருக்கிறேன்.கஷ்டப்பட்டு கதை எழுதி விட்டு அதற்கு சரியான கமெண்ட் இல்லை என்கின்ற போது ஸ்டோரி ரைட்டர் மனம் உடைந்து போகிறார்கள்.

இன்னொரு விஷயம் ...... இங்கே எழுதப்படும் கதைகள் அடுத்த நாளே வேறு ஒரு சைட்டில் பதிவிடப்படுகிறது.


https://fap.desi/hot/tamil
[+] 4 users Like GEETHA PRIYAN's post
Like Reply
#3
(17-01-2024, 10:52 AM)GEETHA PRIYAN Wrote: கதை எழுதி விட்டு அதற்கு சரியான கமெண்ட் இல்லை என்கின்ற போது ஸ்டோரி ரைட்டர் மனம் உடைந்து போகிறார்கள்.

அக்கவுண்ட் ஓபன் பண்ணாமல் கதை படிப்போர் அதிகம். கமெண்ட்ஸ் குறைவாக இருப்பதன் காரணம் புரிந்து கொள்ள முடிகிறது.

தலைப்பு கவர்ச்சிகரமாக அல்லது அம்மா இருந்தால் வியூ வருகிறது. கதைக்கு பொருந்தும் தலைப்பை வைத்தால் அதை ஓபன் செய்து பார்ப்பவர் குறைவு.

ஒருவர் தான் படிக்க விரும்பும் கதையை அதன் தலைப்பை வைத்து அல்லது மொத்த வியூஸ் வைத்து படிக்க முடிவு செய்வதால் தான் நிறைய வித்யாசமான கதையமைப்பு கொண்ட கதைகளுக்கு வியூஸ் இல்லை. 

ஒரு நேரம் கூட தன் கதையை ஓபன் செய்யாத ஒரு வாசகரை எப்படி ஒருவர் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதே என் கருத்து...
[+] 2 users Like MyPaayam's post
Like Reply
#4
உங்கள் கருத்து நூற்றுக்கு நூறு. இங்கே நல்ல கதைகள் சீக்கிரமாக கவனிப்பார் இல்லாமல் பின்னால் போய் விடுகின்றன. ஆனால் ஒவ்வொரு முறையும் இதைச் சொல்லி சொல்லி நமக்கு தான் சலிக்கிறதே ஒழிய நிலைமை மாறுவதில்லை. தொடர்ந்து எழுதுபவனை சீந்துவாரில்லை.
  J.Z.Antony
அழகின் ரசிகன்
[+] 2 users Like jzantony's post
Like Reply
#5
(17-01-2024, 10:52 AM)GEETHA PRIYAN Wrote: மேலே சொன்ன அத்தனை விஷயங்களும் உண்மை.சரியான அளவிற்கு கமெண்டில்லாத காரணத்தால் நானே கதையை பாதியில் நிறுத்தியிருக்கிறேன்.கஷ்டப்பட்டு கதை எழுதி விட்டு அதற்கு சரியான கமெண்ட் இல்லை என்கின்ற போது ஸ்டோரி ரைட்டர் மனம் உடைந்து போகிறார்கள்.

இன்னொரு விஷயம் ...... இங்கே எழுதப்படும் கதைகள் அடுத்த நாளே வேறு ஒரு சைட்டில் பதிவிடப்படுகிறது.


https://fap.desi/hot/tamil


Nanbarey antha innoru site yarudaythu.. intha site admin  than  antha site vachurukara....
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 1 user Likes Kokko Munivar 2.0's post
Like Reply
#6
(18-01-2024, 08:24 AM)jzantony Wrote: உங்கள் கருத்து நூற்றுக்கு நூறு. இங்கே நல்ல கதைகள் சீக்கிரமாக கவனிப்பார் இல்லாமல் பின்னால் போய் விடுகின்றன. ஆனால் ஒவ்வொரு முறையும் இதைச் சொல்லி சொல்லி நமக்கு தான் சலிக்கிறதே ஒழிய நிலைமை மாறுவதில்லை. தொடர்ந்து எழுதுபவனை சீந்துவாரில்லை.


வருத்தமான விசயம் தான் நண்பரே..  எனக்கே வர வர ஆர்வம் குறைகிறது.. சிலர் தேர்வு எழுதும் போது கதையாக கதையாக எதையாவது எழுதி வைத்துவிட்டு வருவார்கள்.. அதுக்கும் அவர்களுக்கு மார்க் போடுவார்கள்.. நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் அது போல நடந்திருக்கிறது.. எனக்கு அது தான் நியாபகம் வருகிறது...
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 1 user Likes Kokko Munivar 2.0's post
Like Reply
#7
(17-01-2024, 11:23 AM)MyPaayam Wrote: அக்கவுண்ட் ஓபன் பண்ணாமல் கதை படிப்போர் அதிகம். கமெண்ட்ஸ் குறைவாக இருப்பதன் காரணம் புரிந்து கொள்ள முடிகிறது.

தலைப்பு கவர்ச்சிகரமாக அல்லது அம்மா இருந்தால் வியூ வருகிறது. கதைக்கு பொருந்தும் தலைப்பை வைத்தால் அதை ஓபன் செய்து பார்ப்பவர் குறைவு.

ஒருவர் தான் படிக்க விரும்பும் கதையை அதன் தலைப்பை வைத்து அல்லது மொத்த வியூஸ் வைத்து படிக்க முடிவு செய்வதால் தான் நிறைய வித்யாசமான கதையமைப்பு கொண்ட கதைகளுக்கு வியூஸ் இல்லை. 

ஒரு நேரம் கூட தன் கதையை ஓபன் செய்யாத ஒரு வாசகரை எப்படி ஒருவர் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதே என் கருத்து...


நண்பரே.. நீங்கள் சொல்வது போல அக்கவுண்ட் இல்லாமல் கதை படிப்பவர்களும் இருக்கிறார்கள்.. அதனால் கமெண்ட் வராமல் போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது..

ஆனால் நான் இங்கு சொன்ன விசயமே வேறு.. கண்ணாபின்னாவென்று கமெண்ட் செய்யும் போது அந்த கமெண்ட்டுக்கு மதிப்பில்லாமல் போய்விடுகிறது..  தரமான கமெண்ட்டுகளை பதிவிட வேண்டும் என்பதே என் கோரிக்கை..
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 1 user Likes Kokko Munivar 2.0's post
Like Reply
#8
உண்மை, புரிகிறது. போற போக்கில்

Super
Good Update
Nice
Please continue

என்ற பதிவுகளை பார்க்கும் போது கோபம் வருகிறது.

அதிலும் posting freak tag இருக்கும் நபர்கள் ஒரே நேரத்தில் 10 கதைகளுக்கு மேல் பதிவு செய்வது. அதிலும் குறிப்பாக ஒரே கமெண்ட் காப்பி பேஸ்ட் செய்வது இன்னும் எரிச்சலை தருகிறது..

கதையை படித்து ஒருவேளை குறை ஏதும் சொன்னால் கதாசிரியர்கள் கூட ஒருவேளை ஏற்றுக் கொள்வார்கள்.

ஆனால் ரசிகன் என்ற பெயரில் ஒற்றை வரி போடும் நபர்களுக்கு கடுப்பு வருகிறது..

எனக்கு இங்கே சில கதைகளில் நிறைய முரண்பாடுகள். அதைபற்றி பதிவிட தயக்கம்..

"கடிச்சு வச்சுருவானுங்க" பீல்..
[+] 2 users Like MyPaayam's post
Like Reply
#9
கதாசிரியரின் ஆதங்கம் புரிகிரது ! என்ன செய்வது ? அந்த மாதிரி சூழ்லையில் இந்த பின்னூட்டங்களை அதிகம் எதிர்பார்க்காமல் தங்களது பாணியில் கதையை நடத்தி செல்லுங்க. குறைவான எண்ணிக்கையில் பின்னூட்டம் வந்தாலும் போது. தரமானதாக இருக்கட்டும்.

எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்தால், ஏமாற்றங்கள் அதிகமாக வரும் !
[+] 3 users Like raasug's post
Like Reply
#10
நியாயமான கருத்து முனிவரே... ஒற்றை வரியில் ஆங்கில பின்னுட்டம் இடுவதால் கதாசிரியருக்குநிச்சயம் ஏமாற்றமே.

வெறும் மசாலா கதைகளை மட்டுமே வாசிப்பவர்கள் நிச்சயம் காமக்கதைகள் வாசிப்பதில் புதியவராகத்தான் இருக்க வேண்டும். அதே நேரம் நல்ல அனுபவம் மிக்க வாசகர்கள் நிச்சயம் யதார்த்தம் கலந்த கதைகளை விரும்புவர்.

"_" தளத்தில் இருப்பது போல இங்கு கதைகளுக்கும் கதாசிரியருக்கும் ஊக்க படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவரும் கருதிட்டால் ஒழிய இந்த பிரச்னை தொடரும். அங்கு இருப்பதை போல நல்ல கதாசிரியர்கள் இங்கும் உள்ளனர். நிச்சயம் புதிய வாசக வட்டங்கள் அவர்களை அடையாளம் கண்டு தரமான கதைகளை அடையாளம் கண்டு அவற்றிற்கு தங்கள் பின்னுட்டத்தின் மூலம் அவர்கள் உழைப்பிற்கு ஊதியம் வழங்குதல் என்றும் நலம்
Like Reply
#11
காம கதை எழுதுபகர்களின் நோக்கம் மிகவும் சிறிய விஷயம்

தன சிந்தனையின் வடிகால், நாம் ரசித்த விஷயத்தை அடுத்தவனும் ரசித்து ஒரு ஆமோதிப்பு, ஒரு வரவேற்பு கிடைக்குமா? என்கிற ஒரு மிக நியாயமான எதிர்பார்ப்பு மட்டும் தான். பணம் என்பது பிரதானம் அல்ல, அப்படி பணம் தான் பிரதானம் என்றால் அவர்கள் செய்யும் வேளையில் முழு கவனமும் செலுத்தினால் போதும், அங்கே அவர்கள் சம்பாரிக்க முடியும் (அதாவது நமது வாசகர்கள் போல) படிக்க மட்டும் வருவார்கள், ஒரு அக்கௌன்ட் உருவாக்கி, விமர்சனம் எழுதுவது என்பது பெரும்பான்மையோருக்கு (வாசகர்களுக்கு) அது ஒரு வெட்டி வேலை.

நானும் காம கதைகளை, ரசித்து ருசித்து எழுதுபவன், ஆங்கிலத்தில் ISS தலத்தில் எழுதி இருக்கிறேன். பிறகு ஒரு தருணத்தில், என் கதைகள் படமாக்க படவேண்டும் என்று ரொம்ப முயற்சித்து, இப்போது அதில் வெற்றியும் அடைந்திருக்கிறேன், நான் கற்பனையில் உருவாக்கிய கதா பாத்திரங்கள் உயிரோட்டதோடு, நான் எழுதிய வசனங்களை பேசி காட்சிகளாக விரியும் பொது அது ஒரு மிக பெரிய சந்தோஷம். இன்னும் வெளியாக வில்லை, போஸ்ட் production வேலைகளுக்காக காத்திருக்கிறது

என் கதைகளை படமாக எடுப்பதால், நான் தளங்களில் எழுதுவதை நிறுத்தி விட்டேன். அனால் அதற்கு முன்பு அமேசான் கிண்டியில் என் ஆங்கில கதைகளை பதிவிட்டேன். தமிழிலும் ஒன்று வெளியிட்டேன்.

அமேசான் கிண்டியில் பணம் கொடுத்து நம் கதையை யாரும் படிக்க வேண்டாம், அவர்கள் கிண்டில் மம்பர்ஷிப் வைத்திருந்து நமது கதையில் எதனை பக்கம் படிக்கிறாரார்களோ அதற்கு தகுந்த மாதிரி பணம் வரும்.

நான் எழுதிய கதைகளுக்கு ஒரு நாளைக்கு சுமார் 8 முதல் 10 அமெரிக்க டாலர் வருமானம் வந்தது. ஒரு paasion கு அந்த வருமானம் என்பது நல்ல விஷயம் தான். அனால், வீட்டிற்கு தெரியாமல் எழுதும் எனக்கு பேங்க் கணக்கு, ஒன்லைன் அமேசான் கணக்கு இதையெல்லாம் யாருக்கும் தெரியாமல் பராமரிப்பது என்பது சாதாரணமான விஷயம் கிடையாது, அதனால் நண்பனின் பெயரில் செய்தென்.

அனால் ஒரு மாதத்திற்குள், அமேசான், என் கதைகள் ஆபாசம் அதிகம் உள்ளதாக ஒவ்வொன்றாக நீக்கி விட்டது. ஆனால் அதே அமேசான் கிண்டிலில் ரவி ஷிக்கா போன்ற பல எழுத்தாளர்களின் காம கதைகள் எந்த பிரச்னையும் இன்றி வெற்றிகரமாக உள்ள போது, என் கதை மட்டும் ஏன் நிராகரிக்கப்பட்டது எங்கிருந்த கேள்வி எழுந்தது.


ஆனால் விரத்தி காரணமாக அதற்கான பதிலை தேடாமல், மேற்க்கொண்டு எந்த முயற்சியும் செய்யாமல் விட்டுவிட்டேன். பிறகு, ஆழ்ந்து அடுத்தவர்கள் கதைகளை படிக்கும் பொது ஒன்று புரிந்தது.

நேரடி ஆபாசமான வார்த்தைகள் இருந்தால், தூக்கி விடுகிறார்கள், மறைமுகமாக நாசூக்காக இருந்தால் தடுப்பதில்லை. நீங்கள் என்ன வேணாலும் எழுதலாம் நீங்கள் உபயோகிக்கும் வார்த்தைகள் தான் கதையை அனுமதிப்பதா அல்லது நிராகரிப்பதா என்பதை தீர்மானிக்கிறது. அதாவது key words தான்.

உதாரகணமாக "boobs" தவிர்த்து "bossoms"
pussy தவிர்த்து "golden triangle"

இந்த சூட்சுமம் அறிய ரவி ஷிக்கா அல்லது ஒரு ஆசிரியரின் ஒரு கதையை கிண்டிலின் படித்தால் உங்களுக்கு புரிந்துவிடும்.


நான் இதற்கு முன்பு பதிவிட்ட கதையை திரு குரலாய் மாற்றியதற்கு காரணம், அந்த நேரத்தில் அந்த கதை கிண்டியில் வெற்றிகரமாக உலாவி கொண்டிருந்தது, அதனால் இங்கே நீக்கி விட்டேன்.

ஒரு கதையில், கதா பாதத்திரங்கள், whatsapp chat செய்வதாக வரும், அதில் நம்பகதன்மை அதிகரிக்க, whatsapp சட்ட ஐ உருவாக்கி போஸ்ட் ஆக போட்டிருக்கிறேன், திரி கீழே, ஒரு இரண்டே லைக்.

எழுதாளர்களை பாரது சுருக்கமாக சொல்லணும்னா, கமல் பாணியில் "போய் புள்ள குட்டீங்கல படிக்க வைங்கப்பா"



https://xossipy.com/thread-42925.html
என் கதை:
  கொஞ்சம் சதை, மிச்சம் கதை
  என்னை ஞாபகம் இருக்கா?
 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
Like Reply
#12
u r right
Like Reply
#13
இந்த தளத்தில் பாதியில் விட்ட கதைகளை விட, முடிந்த கதைகள் மிக சொற்பம். ஆனால் முடிந்த கதைகளை தேடி எடுப்பதில் இந்த Forum-இல் கடினமாக இருக்கிறது.

ஏதாவது வழி இருக்கிறதா?
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)