Adultery கால்பாய் கதிரவன்
#1
கதிரவா.... கதிரவா...
தூங்கியது போதம் எழுந்திரிடா...

கத்தியப்படியே வந்தாள் அம்மா சரசு...

ஏன் ஆத்தா இப்படி கத்துற? தூக்கத்தில் இருந்து எழுந்து கண்களை கசக்கியப்படி எழுந்தான் கதிரவன்.

மணி 11:00 ஆச்சு. கதிரவன் உதிச்சி 5 மணி நேரம் ஆச்சு. இன்னு நீ எந்திரிக்கலை.. பேருல மட்டும் சூரியனா இருந்தா போதுமா?

கதிரவன் : ஏன் ஆத்தா... நான் என்ன சும்மாவா தூங்குறேன்? ரா பகலா உழைக்கிறேன். இன்னைக்கு அசதில தூங்கிட்டேன்.

சரசு : சரி சரி வெரசா கிளம்பி கதிரேசன் வீட்டுக்கு போ...

கதிரவன் : ஏன் ஆத்தா? கதிருக்கு என்ன ஆச்சு?

சரசு : அவன் நல்லாதான் இருக்கான். காலைலதான் பட்டனத்துலேந்து வந்துருக்கான். அவன் கிட்ட வேலை இருந்தா போய் கேளு

கதிரவன் : என்ன ஆத்தா.. அவன் எல்லாம் ஒரு ஆளுன்னு அவன்ட்ட போய் நிக்க சொல்றியா?

சரசு : நின்னுதான் ஆகனும். நம்ம நிலமை அப்படி. காலத்துக்கும் கூலி வேலை செய்யலாம்னு நினைப்பா? தங்கச்சிக்கு கல்யாணம் செய்யனும். உனக்கும் வயசு எகிறுது. நீயும் கண்ணாலம் கட்டனும்ல.
நம்ம கதிரேசனும் உன்ன மாதிரிதான். பள்ளி கூடம் போகாம ஊரை சுத்தி பொட்ட புள்ளைங்களை வம்புக்கு இழுத்துக்கிட்டு கிடந்தான்.

அவள் ஆத்தாக்காரி வலக்கமாத்தால நாளு மொத்து மொத்தி பட்டனதுக்கு துரத்திவிட்டாள்.
பட்டணம் போன கதிரேசன் ஒரே வருஷத்துல ஊருக்கு வந்து குடிசை வீட்ட கலைச்சிட்டு மாடி வீடு கட்டிபுட்டான். வீட்டுலயே கக்கூஸ் வச்சி கட்டிருக்கான். நம்ம கிராமத்துலையே கக்கூஸ் இருக்குற வீடு நம்ம கதிரேசன் வீடுதானே. அது மட்டுமா? அவன் அக்கா கனகவள்ளிக்கு 10 பவுன் நகை நட்டு போட்டு, மாப்பிள்ளைக்கு மோட்டார் சைக்கில் கொடுத்து கண்ணாலம் கட்டி வச்சிட்டு போனவன். இப்போ அவன் கல்யாணத்துக்காக ஊருக்கு வந்துருக்கான்.

நீயும் அவன் கூட பட்டனத்துக்கு போனாத்தானே உன் தங்கச்சி மேகலைக்கு ஒரு நல்லது நடக்கும்.
இப்போ வரைக்கும் ஆத்திர அவசரத்துக்கு ஆத்துபக்கமோ , கருவக்காட்டு பக்கமோ ஒதுங்க வேண்டி இருக்கு. வயசுக்கு வந்த பொண்ணு அவசரத்துக்கு பொதுவுல ஒதுங்க சங்கடபடாது? அதுக்கு நாமலும் கக்கூஸ் வச்ச வீடு கட்டுறதுதானே உசிதம். அப்பறம் உனக்கு வேற கண்ணாலம் கட்டனும்.
என் பேர பசங்கல பாக்காம என் கட்டை வேகாது கதிரவா....
கண்களை துடைத்தாள் சரசு.

கதிரவன் : சரி சரி அழாத ஆத்தா.. இப்போ என்ன? கதிரேசனை போய் பார்க்கனும் அதானே? போய் பாக்குறேன்.

கதிரவன் கதிரேசனை காண அவன் வீட்டுக்கு சென்றான் செல்லும் வழியில் மனதில் நடந்தவைகளை அசை போட்டான்.

கதிரவன் 6 அடி உயரம் , கருத்த நிறம். 50வயது. திருமணம் ஆகவில்லை. அப்பா இல்லை. அம்மா சரசு மட்டும். தங்கை மேகலை 37 வயது. அவளும் கருத்த நிறத்தழகி.

அண்ணன் தங்கை இருவரும் தங்கள் துணைத்தேடி பருவமடைந்த நாள்முதல் முதிர்கண்ணிகளாக வாழ்கிறார்கள்.
தனக்கு 50 வயது. இனி பணம் வந்தாலும் இந்த கிழவனை கட்டிக்க பெண் கிடைக்குமா என்பது கேள்வி குறி. ஆனால் எப்படியாவது மேகலைக்கு ஒரு வாழ்க்கை அமைத்து கொடுக்கனும். அந்த ஒரே காரணத்துக்காகத்தான் இப்போ அந்த கதிரேசன் வீட்டுக்கு செல்கிறேன்.


கதிரேசன் வீடு வந்தடைந்தான் கதிரவன்.


கதிரவன் : கதிரு... டேய் கதிரு.... ஏலேய் கதிரேசா ... உள்ளே இருக்கியாடா?


யாருயா இது காலங்காத்தாலை.. புலம்பிக்கொண்டே அறை தூக்கத்தில் வெளியே வந்தான்.

கதிரேசன் : டேய் கதிரவா.... என்னடா காலைலயே வீட்டு பக்கம்? சரசு கெலவி எப்படி இருக்கு?

கதிரவனுக்கு கதிரேசன் டேய் என அழைத்தவுடன் சுல்லென தலைக்கு கோவம் ஏறியது.

கதிரேசன் கதிரவனை விட 15 வயது இளையவன். ஊரில் வெட்டியாக போக்கிரித்தனம் செய்து கொண்டிருந்த காலத்தில் கதிரவன் அண்ணா கதிரவன் அண்ணா என வார்த்தைக்கு வாரத்தை அண்ணா என சொல்லுவான். பட்டணம் போய் நாலு காசு பாத்தபிறகு அண்ணன் என்ற சொல் மறந்து டேய் என்கிறான். ஆத்தாவை மரியாதை இல்லாமல் கிளவி என்கிறான். காசு மனிதனை எப்படி எல்லாம் மாற்றுகிறது!!
கோவத்தை காட்ட இது நேரமில்லை. கதிரேசன் மூலம் நமக்கு காரியம் ஆக வேண்டி இருக்கு. காரியமா வீரியமா? காரியம்தான். கோவத்தை கட்டுபடுத்தி இயல்பு நிலைக்கு வந்த கதிரவன் பேசினான்.


கதிரவன் : என்னது காலையா? இது நண்பகல்டா மணி 12 ஆகுது.

கதிரேசன் : ராத்திரி லேட்டாதான்டா வந்தேன் கதிரவா... அதான் டயர்டுல தூங்கிட்டேன்.
என்ன விஷயமா வந்துருக்க???

கதிரவன் : அது... வந்து...

கதிரேசன் : வேணா.. வேணாம்... நீ எதையும் சொல்ல வேண்டாம். நானே கண்டுபிடிக்கிறேன்.

பட்டணத்து சரக்கு கேக்க வந்துருக்க... சரியா??? இல்லையே.... நீ சரக்கு தம்மு பக்கம்லாம் போக மாட்டியே...

ம்ம்ம் புடிச்சிட்டேன் மேகலை கல்யாண செலவுக்கு பணம் கேட்டு வந்துருக்க ... சரியா???


கதிரவன் : மேகலை கல்யாணத்துக்கு பணம் தேவைதான். ஆனால் அதை நீ தர வேணாம்.

கதிரேசன் : நீ கேட்டாலும் தர மாட்டேன். இப்போ எல்லாம் பட்டணத்துல எல்லாத்துக்கும் ஜிஎஸ்டி போடுறாங்க கதிரவா பணம் கைல நிக்க மாட்டுது.

கதிரவன் : கதிரேசா எனக்கு பட்டனத்துல எதாவது வேலை வாங்கிகுடேன்...

கதிரேசன் : உனக்கு பட்டனத்தை பத்தி என்னடா தெரியும்?
அங்க வந்து கஷ்ட்டபடாதே.

கதிரவன் : அதான் நீ இருக்கியே. ஒரு வேலை மட்டும் வாங்கி கொடு..

கதிரேசன் : சொன்னா கேக்க மாட்ட.. சின்ன புள்ளை மாதிரி அடம் பிடிப்ப.. சரி சொல்லு என்ன வேலை வேணும்?
சித்தாள் வேலைக்கு போறியா? ஒரு நாளைக்கு கூலியே 700லிருந்து 800 வரைக்கும் கிடைக்கும்.
இல்லை ஹோட்டல் வேலைக்கு போறியா? மாசம் 5000த்துலேந்து 7000வரைக்கும் கிடைக்கும்.
தங்குறது திங்கிறதுலாம் போக ஹோட்டல்லையே இடமிருக்கும் மாசம் 7000த்தை அப்படியே ஊட்டுக்கு அணப்பிடலாம். என்ன சொல்ற?

கதிரவன் : அதெல்லாம் வேண்டாம் கதிரேசா... ஒருநாளைக்கு 10000லேந்து 15000 வரைக்கும் சம்பளம் வருமே அந்த வேலை வாங்கி கொடு.

கதிரேசன் சிரித்தான் ... டேய் கதிரவா.. எந்த உலகத்துலடா இருக்க? எந்த ஊர்லடா வேலை செய்ய ஒரு நாளைக்கு 10லேந்து 15 ஆயிரம் வரைக்கும் சம்பளம் தரான்??

கதிரவன் : பட்டனத்துல உன் ஊர்லதான்டா.. உனக்குத்தான். நீதான சொன்ன நீ வேலை செய்யிற இடத்துல ஒரு நாளைக்கு பத்தாயிரம்லேந்து பதினஞ்சாயிரம் வரைக்கும் வரும்னு... அந்த வேலையை வாங்கி கொடு.

கதிரவன் பேச்சை கேட்ட கதிரேசன் அதிர்ந்தான். தலை கிறுகிறுத்தது.
என்ன பதில் சொல்வது என புரியாமல் பதறினான்.


-தொடரும்
[+] 3 users Like Ishitha's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Incest story யாக இருக்கும் என நினைத்தால்....
gigolo story போல
[+] 1 user Likes jspj151's post
Like Reply
#3
மிகவும் அருமையான கதையை தொடங்கியதற்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#4
(21-05-2023, 02:21 PM)jspj151 Wrote: Incest story யாக இருக்கும் என நினைத்தால்....
gigolo story போல

Call Boy nu Title irukkumbothu Incest eppadi ethirpaarkalaam?
Like Reply
#5
வாழ்த்துக்கள் நண்பா மிகவும் அருமையான தொடக்கம் நீங்கள் ஒவ்வொரு கதாபாத்திரம் சொல்லிய பார்க்கும் போது இனிமேல் தான் கதை ரொம்ப திருப்பங்கள் வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
#6
கதிரவன் பேச்சை கேட்ட கதிரேசன் அதிர்ந்தான். தலை கிறுகிறுத்தது.
என்ன பதில் சொல்வது என புரியாமல் பதறினான்.

டேய் கதிரவா... அந்த வேலை ரொம்ப கஷ்ட்டமா இருக்குமடா...
உன்னால முடியாது.


கதிரவன் : தெரியும்டா. ஒரு நாளைக்கு பத்தாயிரம் பதிநஞ்சாயிரம்னா சும்மாவா? கஷ்ட்டம் இருக்கும்னு தெரியும் கதிரேசா.
எதாவது செஞ்சு எனக்கும் உன் வேலை வாங்கி கொடு.

கதிரேசன் யோசித்தான். கதிரவன் குணம் தெரிந்ததுதான் கதிரேசனுக்கு. அவன் ஒரு விஷயத்தை பிடித்துவிட்டால் அவன் மனதை மாற்ற முடியாது. அதனால் இப்போதைக்கு கொஞ்சம் அலையவிடலாம் என முடிவு செய்தான் கதிரேசன்.


கதிரேசன் : சரி கதிரவா... எனக்கு இன்னும் பத்து நாள்ல கல்யாணம், கல்யாணம் முடிச்சு ஒரு 20 நாள் தேன் நிலவுக்கு வெளிநாடு போறன். போய்ட்டு வந்து மறு வீடு , அழைப்பு சடங்குன்னு அது ஒரு 20 நாள் போகும். ஒரு ஒன்றறை மாசம் கழிச்சி வாடா.. வேலை பத்தி பேசுவோம். இப்போ போய் மாடு மேய்க்கிற பொழப்பை பாரு.

கதிரவன் ; சரி கதிரேசா. நான் வாரேன்.


கதிரேசா : டேய் கதிரவா... மறக்காமல் கண்ணாலத்துக்கு வந்துடுடா... கறி சோறு போடுறேன் என சொன்னான்.

கதிரவன் அதிசயித்தான். அவன் ஊரில் கறிசோறு போடும் முதல் கலயாணம் கதிரேசன் கல்யாணம்தான்.
அவன் கூடவே வேலைக்கு சென்று நல்லா கடினமாக உழைத்து நாமலும் நம்ம கண்ணாலத்துக்கு பல வகை கறி சோறு போடனும்.

என்ன என் கல்யாணம்? என் தங்கை மேகலை கல்யாணத்துல ஆடு, மாடு, கோழி, காடை, கவுதாரி, இறால்,சுறா , நண்டு, மீன், முட்டைன்னு கல்யாண விருந்து வச்சி அசத்தி புடுறேன்.

மனசுல காசு ஆசை வந்துடுச்சி. ஆனால் வேலைதான் எப்படி இருக்கும்னு தெரியலை. கதிரேசனும் சரியா சொல்ல மாட்டுறான். வெயில்ல நின்னு வேகனுமா? இல்லை தூங்காமல் பணியில நின்னு காயனுமா? 
வேலை எவ்வளவு நேரம் இருக்கும்? காலை 10 லேந்து மாலை 5 வரைக்குமா? 

இல்லை 12 மணிநேரம் 14 மணி நேரம் வேலை செய்ய சொல்வாரக்ளா?

எவ்வளவு கஷ்ட்டமான வேலையாக இருந்தாலும் எந்த குறையும் இல்லாமல் வேலை செஞ்சி முதலாளிக்கிட்ட நல்ல பேரு வாங்கனும். அப்போதான் நமக்கு காசு நிறைய கிடைக்கும்  என தனக்குள் மனகணக்கு போட்டு கொண்டே அவன் பிழைப்பை பார்க்க சென்றான் கதிரவன்.

-தொடரும்
[+] 3 users Like Ishitha's post
Like Reply
#7
50 வயது ஆள் gigolo va?
Old vs young story யாக இருக்கும் என நினைக்கிறேன்
இ இப்படி கதை புதிது
பாராட்டுகள்
[+] 1 user Likes jspj151's post
Like Reply
#8
Super update bro
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#9
nice update small request weekly one update kuduga bro athuvum sema twist erukum pola
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
#10
(16-06-2023, 08:18 AM)karthikhse12 Wrote: nice update small request weekly one update kuduga bro athuvum sema twist erukum pola

Free time la kandipa update pandren bro
Like Reply
#11
அருமையான தொடக்கம்...

அடுத்த காதபாத்திரம் ஆணோ பெண்ணோ
வேற்று மதமாக பிணைத்து எழுதுங்களேன் கதை கொஞ்சம் சுவாரஷ்யமாக இருக்கும்
sex *** உச்சம் தேவா ***    : banana

[+] 1 user Likes utchamdeva's post
Like Reply
#12
(16-06-2023, 07:38 PM)utchamdeva Wrote: அருமையான தொடக்கம்...

அடுத்த காதபாத்திரம் ஆணோ பெண்ணோ
வேற்று மதமாக பிணைத்து எழுதுங்களேன் கதை கொஞ்சம் சுவாரஷ்யமாக இருக்கும்

வேற்று மதமென்றால்? எந்த மதம்?
Like Reply
#13
(28-06-2023, 08:00 PM)Ishitha Wrote: வேற்று மதமென்றால்? எந்த மதம்?

தங்களுக்கு எப்படி  வசதியோ[விருப்பம் போல்] அப்படி எழுதுங்கள் ... clps clps
12000+ காமக்கதைகள் PDF link
காமக்கதைகள்[12000] உள்ளன விருப்பமுள்ளவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
link
12000+ காமக்கதைகள் உள்ளன விருப்பமுள்ளவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் லிங்க் கொடுக்கப்பட்டு உள்ளது
Idhaya poovum Illamai Vandum-இதயப் பூவும் இளமை வண்டும்[INBHALOGAM]-1.pdf - 1.7 MB
Idhaya poovum Illamai Vandum-இதயப் பூவும் இளமை வண்டும்[INBHALOGAM]-2.pdf - 1.6 MB
Idhaya poovum Illamai Vandum-இதயப் பூவும் இளமை வண்டும்[INBHALOGAM]-3.pdf - 1.6 MB

12000+ காமக்கதைகள் link
INBHALOGAM

12000+ காமக்கதைகள் link
INBHALOGAM

12000+ காமக்கதைகள்link
INBHALOGAM
[+] 1 user Likes inbhalogam's post
Like Reply
#14
hi nanba

plz continue
[+] 1 user Likes Kingofcbe007's post
Like Reply
#15
(28-06-2023, 08:00 PM)Ishitha Wrote: வேற்று மதமென்றால்? எந்த மதம்?

முஸ்லீம் பாய் or கிறிஸ்துவ ஆண்... ஏதாவது நுழைத்து திரித்து எழுதுங்கள்
sex *** உச்சம் தேவா ***    : banana

[+] 1 user Likes utchamdeva's post
Like Reply
#16
(15-06-2023, 10:27 PM)jspj151 Wrote: 50 வயது ஆள் gigolo va?
Old vs young story யாக இருக்கும் என நினைக்கிறேன்
இ இப்படி கதை புதிது
பாராட்டுகள்

Thank You
Like Reply
#17
கதிரேசன் சொன்னது போல பத்து நாள்ல கல்யாணம், கல்யாணம் முடிச்சு 20 நாள் தேன் நிலவு,  மறு வீடு , அழைப்பு சடங்குன்னு  20 நாள் கடந்தது. ஒரு ஒன்றறை மாசம் கழிச்சி கதிரவன் கதிரேசனை பார்க்க சென்றான்.

கதிரவன் : கதிரேசா.... கதிரேசா...

என்ன கதிரவா இந்த பக்கம் என கேள்வியை இழுத்து கொண்டு வந்தாள் கதிரேசன் பாட்டி.

கதிரவன்: கதிரேசனை பார்க்க வந்தேன் பாட்டி.

பாட்டி : கதிரேசன் இப்போதான் பட்டனத்துக்கு கிளம்புனான். கொஞ்சம் வெரசா வந்துருந்தா பார்த்திருக்கலாம்.

கதிரவன் : ஐயோ பாட்டி.. எந்த பஸ்சுக்கு கிளம்பினான்?

பாட்டி : இங்க என்ன ஆயிரம் பஸ்ஸா ஓடுது? ஓடுவது ஒரே பஸ்சு அதான் அஞ்சரை பஸ்சு.

கதிரவன் : அஞ்சரை ஆக 10 நிமிஷம் தான் இருக்கு. ஓடினான் கதிரவன். பஸ்டான்டை வந்தடையவம் , பேருந்து கிளம்பவும் சரியாக இருக்க , ஓடி சென்று பேருந்தில் ஏறினான்.

நீண்ட தூரம் ஓடியதால் கடைசி இருக்கையில் சாய்ந்து ஓய்வு எடுத்தான் கதிரவன்.

பத்து நிமிடம் ஓய்வுக்கு பின் தெளிவானான் கதிரவன்.

ஓட்டத்தில் இழந்த தெம்பு ஓய்வில் கிடைத்தது.

இருக்கையை விட்டு எழுந்து கதிரேசனை தேடினான் கதிரவன்.

கதிரவனை ஊரிலேயே விட்டு விட்டு சொல்லாமல் தப்பி வந்ததில் நிம்மதியாக ஜன்னல் ஓர காட்சியை ரசித்த வண்ணம் கதிரேசன் உட்கார்ந்து இருக்க, அவன் அருகில் இருந்த காலி இடத்தில் அமர்ந்தான் கதிரவன்.

யாருடா நம்ம பக்கத்துல உட்காருவது என தலையை திருப்பிய கதிரேசன் கதிரவனை பார்த்து அதிர்ந்தான்.

கதிரேசன் : டேய்... என்னடா திடீர்னு இங்க? 

கதிரவன் : நீதானே இன்னைக்கு என்ன பார்க்க வர சொன்ன?

கதிரேசன் : டேய் உன்னை வீட்டுக்கு வர சொன்னேன்.

கதிரவன் : வீட்டுக்குத்தான் வந்தேன், நீதான் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிட்டியே.

கதிரேசன் : கதிரவா . இப்போ உனக்கு வேலை இல்லை. நான் பட்டனம் போய் உனக்கு வேலை தயார் செஞ்சிட்டு உன்னை கூட்டி போறேன். இப்போ பஸ்சை விட்டு இறங்கி ஊட்டுக்கு போ.

கதிரவன் : முடியாது கதிரேசா , நான் உன் கூட பட்டனம் வருவேன்.

கதிரேசன் நிலமையை உணர்ந்தான். இனிமேல் இவனை தடுக்க முடியாது.
நடப்பது  நடக்கட்டும் என கதிரவனுக்கு பட்டனம் செல்ல டிக்கெட் எடுத்தான்.

-தொடரும்.
[+] 2 users Like Ishitha's post
Like Reply
#18
Super nanba kojam weekly 1 update poduga nanba
[+] 2 users Like karthikhse12's post
Like Reply
#19
சூப்பர் பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#20
கால்பாய் கதிரவன்

அன்புள்ள நண்பர் உயர்திரு Ishitha அவர்களுக்கு வணக்கம் 

உங்கள் பதிவில் என்னை மிகவும் கவர்ந்த சுவாரசியமான சில வரிகள் குறித்து என்னுடைய கருத்தை கூற விரும்புகிறேன் நண்பா 

1. கொஞ்சம் வெரசா வந்துருந்தா

"வெரசா" வார்த்தை தேர்வு மிக அருமை நண்பா 

வட்டார மொழி கதைகளில் நீங்கள் மிக தேர்ச்சி பெற்றவர் என்பது இந்த ஒற்றை வார்த்தையில் மிக தெளிவாக தெரிகிறது நண்பா 

அருமை அருமை மிக மிக அருமை 

2. அதான் அஞ்சரை பஸ்சு.

இதுவும் ரொம்ப எதார்த்தமாக அன்றாட கிராமப்புறங்களில் தொன்றுதொட்டு உபயோகப்படும் வார்த்தை.. 

சூப்பர் நண்பா நீங்க 

3. ஓட்டத்தில் இழந்த தெம்பு ஓய்வில் கிடைத்தது.

ரொம்ப எனர்ஜிடிக் வரிகள் நண்பா.. படிக்க தெம்பா இருக்கு நண்பா.. 

அவன் ஓடியதும்.. பஸில் ஏறியதும்.. ஓய்வெடுக்க கடைசி சீட்டில் விழுந்து அமர்ந்ததும்.. 

ஆஹா.. உங்கள் வர்ணனையில் மூலம் காட்சி அமைப்பு கண் முன் தெரிந்தது நண்பா 

மிக அற்புதமான விவரிப்பு 


நண்பர்கள் பட்டணத்துக்கு போய் என்ன பண்ண போகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள மிக மிக ஆவலாய் உளது நண்பா 

நேரம் கிடைக்கும்போது தயவு செய்த்து தொடருங்கள் நண்பா பிளீஸ் 

வாழ்த்துக்கள்
[+] 2 users Like Vandanavishnu0007a's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)