காம கதைகள் - என்னுடைய பார்வையில்
#1
Thumbs Up 
வணக்கம் நான் முகிலா. கடந்த சில மாதங்களாக இந்த தளத்தில் எழுதப்படும் கதைகளை படித்து வருகிறேன். பெரும்பாலும் கதைகளை ஆண்கள் தான் எழுதுகின்றனர். அதுவும் ஆண்களின் பார்வையில் இருந்து எழுதும் போது அவர்களின் காமம் பற்றி எண்ணங்கள் செயல்கள் எல்லாம் எப்படி இருக்கும் என்பது தெளிவாக அவர்களின் எழுத்தில்  தெரிகின்றது. 

என்னை பொறுத்தவரையில் காமகதைகள் என்பது எழுதுபவர் மற்றும் படிப்பவரின் கண்களுக்கு மட்டும் புலப்பட கூடிய நிழல். அந்த நிழல் எல்லாருக்கும் ஒரே மாதிரியானதாக இருக்காது. அப்படி இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. 

காமகதைகள் நிழல் மாதிரி என்றாலும் அதை மற்ற நபர்கள் பக்கத்தில் வந்து பார்த்து ரசிக்கும்படி இருக்க வேண்டும் தவிர முகம் சுழிக்கும் அளவிற்கு இருக்க கூடாது. 

இந்த தளத்தில் எழுதப்படும் பெரும்பாலான கதைகள், அதன் தலைப்புகள் எல்லாம் பெண்களை மட்டும் இழிவுபடுவதாக இருக்கிறது. அது ஏன் என தெரியவில்லை. ஏதோ பெண்களுக்கு மட்டுமே கற்பு இருப்பது போல் அதை அவர்களாகவே மற்ற ஆண்களுக்கு காமத்திற்காக தானாக வந்து தாரை வார்ப்பது போல் சித்தரித்து எழுதபடுகிறது. அது மாதிரி நடக்க வாய்ப்பு இருக்கிறது அல்லது நடந்தால் அதற்கு அந்த பெண் மட்டும் எப்படி காரணமாவாள். அவளுடைய கற்பை வேறொரு ஆணிடம் தான் இழக்கிறாள். அப்படி இழந்தால் அந்த மாதிரியான பெண்ணிற்கு ஒரு பெயரையும் வைத்து அவளை தகாத வார்த்தைகளால் இழிவாக பேசுவது போல் கதைகள் எழுதபடுகிறது. 

தனக்கு சொந்தமில்லாத பெண்ணின் உடலை அனுபவித்த அந்த ஆண் மட்டும் என்ன தீர்க்கதரிசியா? அவனும் உடல் சுகத்திற்க்காக வந்தவன் தானே. அந்த ஆணை பற்றி கதை எழுதும் எந்த ஆணும் ஏன் எழுதமாட்டீறீர்கள் என தெரியவில்லை.

இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால் பெண்களை கற்பை இழந்தவள், தேவிடியாவாக மாறினாள் என எழுத தெரிந்தவர்களுக்கு அதில் வரும் ஆணும் கற்பை இழந்திருக்கிறான், அவனும் ஒரு விமனைசர் என ஏன் எழுத தயங்குகிறார்கள் என தெரியவில்லை. இது மாதிரியான பெண் கதாபாத்திரம் இழிவுபடுத்தும் வகையில் தான் இருக்கிறது. அதற்கு காரணம் ஆண் தான் என எந்த ஒரு இடத்திலும் சுட்டி காட்டி இருக்கமாட்டார்கள். 

"என்னோடு நீ இருந்தால்" இந்த கதையின் முதல் பாகம் நேற்று இரவு தான் படித்தேன். இந்த கதையை எழுதிய சமரின் பல கதைகளை வேறொரு தளத்தில் படித்திருக்கிறேன். பாராட்டியும் இருக்கிறேன்.. இவருடைய கதைகள் மட்டுமல்ல நிருதி, காமராசன் போன்றோரின் கதைகளும் படித்து பாராட்டி ஒரு பதிவை போட்டுயிருக்கிறேன்.

என்னோடு நீ இருந்தால் கதையில் எல்லா கதாபாத்திரமும் ஏற்ற தாழ்வு இல்லாமல் கையாளபட்டிருக்கும். எந்த ஒரு கதாபாத்திரமும் இழிவுபடுத்த பட்டியிருக்காது. எதிர்மறையான நிகழ்வுகள் கூட மிக நேர்த்தியாக எழுதபட்டியிருக்கும். 

ஒரு கதாயாசிரியரை உயர்த்தி மற்றவர்களை தாழ்த்தி சொல்லவில்லை. ஒரு காமகதையை எப்படி எழுதினால் என்னை போன்ற பெண்களும் ரசிப்பார்கள் என்பதை தான் இந்த பதிவில் சொல்லியிருக்கிறேன்.. 

நிருதி எழுதிய எல்லா கதைகளும் எல்லோர்க்கும் கண்டிப்பாக பிடிக்கும் என நம்புகிறேன். காரணம் அதில் எந்த கதாபாத்திரம் இழிவுபடுத்தும் வகையில் இருக்காது. பெரும்பாலான கதைகளில் நிருதி என்ற கதாபாத்திரம் தான் விமனைசராக இருக்கும். அந்த கதாபாத்திரம் அனுபவிக்கும் பெண்களை எந்த ஒரு இடத்திலும் இழிவுபடுத்தி எழுத இருக்கமாட்டார். இதை தான் நான் எதிர்பார்க்கிறேன்.. 

 ஆண், பெண் யார் காமகதைகள் எழுதினாலும் எவரையும் இழிவுபடுத்தி எழுத வேண்டாம்.. எதிர்மறையான கதாபாத்திரம் கதைகளில் இருக்கலாம். ஆனால் அந்த கதாபாத்திரத்தை இழிவுபடுத்தி எழுதாமல் சிறிது நேர்த்தியாக எழுதினால் நன்றாக இருக்கும். 

என்னுடைய பார்வையில் காமகதைகள் எப்படி இருக்க வேண்டும்?

1. கதையின் தலைப்பை சொன்னவுடன், கதையின் மைய கரு இது தான் என்று சொல்லும் அளவுக்கு, படிப்பவரகன் மனதில் நிலைத்து நிற்க வேண்டும்..

2. கதையின் தலைப்பு மறைமுகமாகவே இருக்க விரும்புவேன். அது தான் என்னை படிக்க தூண்டும். சில சமயங்களில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் இருக்கும். அது எனக்கு இரண்டாம் பட்சம்தான். 

3. கதை எழுதுபவர் எந்த ஊரை சேர்ந்தவராக இருந்தாலும் அவரின் நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தும் சொற்களே கொண்டு எழுதினால் நன்றாக இருக்கும் என்று நினைப்பேன்.

4. இது உரையாடல்களுக்கு பொருந்தும்.. உரையாடல் மிகைப்படுத்தாமல் இருந்தால் ஒரு இயற்கை தன்மையோடு நன்றாக இருக்கும். சங்க தமிழ் அல்லது ஒப்பனை தமிழில் எழுதினாலும் நன்றாக  தான் இருக்கும். ஆனால் அது எழுதுபவரின் திறமை மற்றும் பயன்படுத்தும் வார்த்தைகளை பொறுத்தே அமையும். 

5. கதைக்கு மிக முக்கியமான ஒன்று. கதைக்கான சூழல்.. கிராமமா? அல்லது நகரமா? இதை பொறுத்தே உபயோகபடுத்தபடும் வார்த்தைகளின் தன்மை மாறுபடும். அடுத்து அந்த கதையின் கதாபாத்திரம் எந்த வயதுடைய ஆணோ அல்லது பெண்ணோ எப்படி வார்த்தைகளை நடைமுறை வாழ்வில் பயன்படுத்துவார்கள் என்று தெரிந்து வைத்து கதை எழுதினால் சிறப்பாக இருக்கும்.

இறுதியாக, கதையின் தலைப்பு கதையின் கரு, சூழல் மற்றும் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் குடுத்து கதை எழுதினால் கண்டிப்பாக சிறப்பானதாக இருக்கும் என் தனிப்பட்ட கருத்து.. 

நான் இதுவரை சொன்ன அனைத்து கருத்துகளுக்கும் என் மனதில் தோன்றிய  சொந்த கருத்துக்கள் தான். மற்ற பெண்களும் இதை தான் எதிர்பார்பார்களா? அல்லது இது போன்று இருக்கும் கதைகளை தான்  விரும்புவார்களா? என்று என்னிடம் வந்து கேட்க கூடாது.. 

நான் கதை எழுதும் ஆண் அல்லது பெண்ணிடம் இருந்து எந்த மாதிரியான கதையை எதிர்பார்க்கிறேன் என்பதை தான் இந்த பதிவில் சொல்லி இருக்கிறேன். 

எந்த ஒரு குறிப்பிட்ட நபரை வைத்தோ அல்லது அவர்கள் எழுதிய கதைக்கோ இந்த பதிவு போடவில்லை. யாரையும் குறையோ, குற்றமோ கூறவில்லை. 

இதை பின்பற்றுவது அவரவரின் மனநிலையை பொறுத்தது என தெரியும். இருந்தாலும் சொல்ல வேண்டும் என மனதில் தோன்றியதை சொல்லிவிட்டேன்.

நன்றி.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
நீங்கள் சொல்வது உண்மை தான், ஒரு கதை பாத்திரத்தை மிகையுடன் ஏற்றியோ தாழ்த்தியே இருப்பதை படிக்கும் போது ஒருவித சலிப்பு ஏற்படுவது உண்மை தான் அதற்காக படைக்கும் ஆசிரியர்களை குறை சொல்வது ஏற்புடையதாக இருக்காது இங்கு புதுவிதமான கதைகள் வருவதே அரிது, அப்படி இருக்கையில் கதைகளில் இருக்கும் குறைகளை கடந்து செல்வதே நன்று

கணவனை விட்டு வேறு ஒருவருடன் கள்ள உறவு கொள்ளும் கதைகளில் கணவனை ஒன்றுக்கும் உதவாத ஆண் என்று அவமானப்படுத்துவதை போன்று எழுதி இருப்பதை படிக்கவில்லை என்று நினைக்கிறன்.

காம கதை என்று வரும் போது அவரவர் வயது அனுபவத்தை பொறுத்து பாத்திரங்களின் சித்தரிப்பு இருக்கும் என்பது என் கருத்து, அவர்களின் அனுபவம் பெறுக அவர்களின் படைப்பு திறமையும் பெருகும்
Like Reply
#3
(30-05-2022, 01:52 PM)rojaraja Wrote: நீங்கள் சொல்வது உண்மை தான், ஒரு கதை பாத்திரத்தை மிகையுடன் ஏற்றியோ தாழ்த்தியே இருப்பதை படிக்கும் போது ஒருவித சலிப்பு ஏற்படுவது உண்மை தான் அதற்காக படைக்கும் ஆசிரியர்களை குறை சொல்வது ஏற்புடையதாக இருக்காது இங்கு புதுவிதமான கதைகள் வருவதே அரிது, அப்படி இருக்கையில் கதைகளில் இருக்கும் குறைகளை கடந்து செல்வதே நன்று  

கணவனை விட்டு வேறு ஒருவருடன் கள்ள உறவு கொள்ளும் கதைகளில் கணவனை ஒன்றுக்கும் உதவாத ஆண் என்று அவமானப்படுத்துவதை போன்று எழுதி இருப்பதை படிக்கவில்லை என்று நினைக்கிறன்.

காம கதை என்று வரும் போது அவரவர் வயது அனுபவத்தை பொறுத்து பாத்திரங்களின் சித்தரிப்பு இருக்கும் என்பது என் கருத்து, அவர்களின் அனுபவம் பெறுக அவர்களின் படைப்பு திறமையும் பெருகும்



மிக சரியாக சொன்னீர்கள் நண்பா 
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)