Misc. Erotica ஷாரதா - குறு நாவல்
#22
கொலு வீடு...!

சிறிது நேரத்தில் கார் நகரத்தின் பரபரப்பான சாலைகளை விட்டு அமைதியான, செழிப்பான குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது.
வீட்டின் வாசலில் ஏற்கனவே விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன.
மலர் தோரணங்கள்.
வாசலில் பெரிய கோலம்.
உள்ளிருந்து மெல்லிய நாதஸ்வர இசை.

வாசற்படியில் நின்றிருந்தவர்கள் ஷாரதாவையும், ராமையும்  வரவேற்க,.
“ஷாரதா மேடம் வந்துட்டாங்க!”
அவளை வரவேற்க மாணவியின் பெற்றோரும், உறவினர்களும், குடும்ப நண்பர்களும் முன்வந்தனர்.
“வாங்க மேடம். உங்களை எதிர்பார்த்துக்கிட்டே இருந்தோம்.”
ஷாரதா அனைவரிடமும் புன்னகையுடன் பேசினாள்.
“ரொம்ப அழகா ஏற்பாடு பண்ணியிருக்கீங்க.”

[Image: 18810d95f5272df99e5b55e4bfc316d0.jpeg]


ஷாரதா உள்ளே வந்ததும், அவளை வரவேற்கச் சுற்றி வந்தவர்களின் பேச்சுக்கிடையே சில பார்வைகள் அவளிடம் சற்றே நீண்டன. வெளிர்  நீலப் பட்டுப்புடவை அவளுடைய செழுமையான உடல்வாகை அழகாக எடுத்துக்காட்டியது. மதர்ப்பான இடுப்பிலிருந்து பின்பக்கம் விரிந்திருந்த வளைவுகள், அவள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் புடவைக்குள் அழகாக அசைந்தன. மல்லிகைப்பூ, சிறிய ஜிமிக்கி, கழுத்தில் மெலிதான சங்கிலி... மேலே அவள் அணிந்திருந்த டிசைனர் பிளவுஸுடன் சேர்ந்து, அவளுக்கு ஒரு தனி ஸ்டைலைக் கொடுத்திருந்தது. அவள் உள்ளே நடந்து வந்த அந்தச் சில நொடிகளில், அருகிலிருந்தவர்களின் கவனம் இயல்பாகவே அவள் பக்கம் திரும்பியது. அவள் கடந்து சென்ற பின்னரும், ஓரிரு பார்வைகள் அவளைத் தொடர்ந்து சென்றன

ஷாரதா அதை கவனிக்காமல் இல்லை.

ஆனால் அவளுக்கு அந்தப் பார்வைகள் புதிதல்ல. ஒரு சிறிய புன்னகையுடன், “வணக்கம்... எப்படி இருக்கீங்க?” என்று இயல்பாகப் பேசிக்கொண்டே அவள் உள்ளே சென்றாள்.

கொலு படிகள் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தன.

பொம்மைகளின் வரிசைகள், சிறிய விளக்குகள், மலர் அலங்காரங்கள், குங்குமச் சந்தனத்தின் மணம்... வீடு முழுவதும் பண்டிகை உணர்வு நிறைந்திருந்தது.
ஷாரதாவிற்கோ, யாரோ ஒருவரின் பார்வை தன்னையே சுற்றிச் சுற்றி வருவது போன்ற ஒரு மெல்லிய உணர்வு ஏற்பட்டது.
ஷாரதாவின் மாணவிகள் அவளைச் சுற்றி வந்தனர்.
“மேடம், பாடலுக்கு ரெடியா?”
“ரெடி.”
அவள் சிரித்தாள்.

[Image: 4202542cdfe9cb6243c646bbf507f537.jpeg]

கொலுவின் முன்பு மைக்குகள் அமைக்கப்பட்டு,  ஷாரதாவின் குட்டி மாணவிகள் அவளை சுற்றி அமர, ராம் அருகில் தனி இருக்கையில் இருக்க, சில நிமிடங்களில் பாடல் தொடங்கியது.

“ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…
ஸ்ரீதேவி ரங்க நாயகி…..”
முதல் ஸ்வரம் எழுந்ததும், அந்த வீட்டின் சலசலப்பு மெதுவாக அடங்கியது.
அவளுடைய குரலில் இருந்த நிதானம், தெளிவு, பழக்கப்பட்ட கம்பீரம் மீண்டும் வெளிப்பட்டது.
மாணவிகள் அவளுடன் இணைந்தனர்.
கொலு பாடல் வீட்டின் முழு வளாகத்தையும் நிரப்பியது.
பாடிக்கொண்டிருந்த ஷாரதாவுக்கு, அந்தப் பார்வை இன்னும் தன்னைத் தொடர்ந்து வருவது போலவே இருந்தது. யார் என்று பார்க்க அவள் முயற்சி செய்யவில்லை. ஆனால் அந்தப் பார்வை தற்செயலானதல்ல என்பது மட்டும் அவளுக்குத் தெளிவாக இருந்தது.
பாடலின் இறுதி வரியை, ராமை பார்த்து கொண்டே ஷாரதா பாடி முடிக்க,
பாடல் முடிந்ததும் அனைவரிடமிருந்தும் கைதட்டல் எழுந்தது. ஷாரதா மாணவிகளைப் பார்த்து திருப்தியுடன் சிரித்தாள்.  அந்த கண்கள் ஏக்கத்துடன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தது!
[Image: cdee82faf2a1d22cf3aef8f43fd1926f.jpeg]


பின்னர் குடும்பத்தினர் அவளுக்கு தாம்பூலம் வழங்கி, புடவை மற்றும் பழங்கள் வைத்து மரியாதை செய்தனர்.

“நீங்க வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம், மேடம்.”

“எனக்கும் ரொம்ப சந்தோஷம்.”

ஷாரதா அனைவருக்கும் நன்றி கூறினாள்.

ராமும் எழுந்து நின்றான்.

“போலாமா?” என்று அவள் கேட்டாள்.

“போகலாம்.”

வாசல் வரை வந்த குடும்பத்தினர் மீண்டும் அவர்களை வழியனுப்பினர்.

புறப்படும்போதும் , ஷாரதாவிற்கு யாரோ தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை போன்ற ஒரு உள்ளுணர்வு, ஒரு வித தவிப்பை அவள் உணர்தாள்.

“அடுத்த வருடமும் கண்டிப்பா வரணும்.”

“நிச்சயமாக.”
ஷாரதா காரில் ஏறினாள்.

[Image: 7108d475fac2087dfcd282429a124d50.jpeg]

ராமிற்கோ, இந்த சின்ன நிகழ்ச்சியின் பிரம்மாண்டம் இன்னும் விட்டுப்போகவில்லை..கார் மெதுவாக வீட்டை விட்டு நகர்ந்தது.

வாசலில் இருந்த விளக்குகள் பின்னால் சிறிது சிறிதாக மறைந்தன.

ஷாரதா ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள்.
அவள் மனதில் ஒரு மகிழ்ச்சி, ராம் தனக்காக வந்ததற்கான மகிழ்ச்சி. இன்று இரவு அவனுக்குப் பிடித்தபடி, அவனுக்காக இருக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள்!!

அத்தியாயம் - 2 நிறைவு.!
ஷாரதா - குறு நாவல்  
ஷாரதா - குறு நாவல்
[+] 2 users Like budbed's post
Like Reply


Messages In This Thread
RE: ஷாரதா - குறு நாவல் - by budbed - 19-08-2026, 09:21 AM



Users browsing this thread: 1 Guest(s)