Thriller ஒரு பத்தினியின் தனிமை இரு குற்றவாளிகளின் இனிமை (முடிக்கப்பட்டது)
காவல்துறையின் மூலம் தகவல் அறிந்த என் கணவரும் மகனும் அந்த இரவே வீட்டிற்கு வந்தார்கள். அவர்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் என் நிலையை பார்த்து திகைத்தார்கள். என் கணவர் விரைந்து வந்து என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டு, என் தலையை தனது கைகளில் தாங்கி, என் கண்களில் வழிந்த கண்ணீரை மெதுவாக துடைத்தார்.
 
"நந்துமா… எல்லாம் சரியாகிவிடும், நான் இருக்கேன்" என்று அவர் சொன்னார். அவரது நடுங்கும் குரல், என் உடைந்த மனத்தின் துயரத்தை ஒரு கணம் தணித்தது. என் மனத்தில் தேங்கியிருந்த சுமையையும் துன்பத்தையும் அவரிடம் வெளிப்படுத்தினேன். என் கணவர் கண்களை முறுக்கி அழுதாலும், என் வலியை அவர்களுடன் பகிர்ந்ததே எனக்கு ஒரு புதிய தெம்பை அளித்தது.
 
என் மகன் எதுவும் சொல்லாமல் அருகே வந்து என்னை கட்டிப்பிடித்தான். அந்த பணிவான அணைப்பு, என் முறிந்த மனதிற்கு ஓரளவு சமநிலையைத் தந்தது. நான் இன்னும் முழுமையாக உடைந்து போகவில்லைஏனெனில், எனக்காக என் குடும்பம் இருக்கிறது. என் கணவர் என் கைகளை உறுதியாகப் பிடித்தபோது, நான் தனியாக இல்லை என்பதை உணர்ந்தேன்.
 
“நீ இப்போது தனியாக இல்லை… நாங்கள் இருக்கிறோம். நான் உன்னை விட்டு எங்கும் போக மாட்டேன். நடந்ததை ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்து விடு,” என்று அவர் சொன்னார். அந்த வார்த்தைகள் என் உடைந்த மனத்தின் ஆழத்தில் மெதுவாக இறங்கி, ஒரு கணம் அமைதியின் நிழலை பரப்பின. அந்த நிமிடம், என் உள்ளம் முழுவதும் சிதைந்திருந்தாலும், நான் முழுமையாக தனியாக இல்லை என்ற உணர்வு எனக்கு ஓரளவு ஆறுதலாக இருந்தது.
 
“அம்மா, அழாதம்மா… நான் உன்னை எப்போதும் அழவிட மாட்டேன்,” என்று என் மகன் ஆரவ் என் அருகில் நின்று தனது மழலைக் குரலில் சொன்னான். அந்த சிறிய குரலில் இருந்த அக்கறையும் அன்பும் என் இதயத்தை நெகிழச் செய்தது. அவன் வார்த்தைகள் எளிமையானவை தான்ஆனால் அந்த நிமிடத்தில் அவை எனக்கு உலகிலேயே பெரிய ஆறுதலாக இருந்தன.
 
என் கணவனின் அரவணைப்பும், என் மகனின் தூய்மையான அன்பும், என் இதயத்தில் குவிந்திருந்த நெருப்பான வலியை மெதுவாகத் தணித்து, ஒரு சிறிய நம்பிக்கையின் தீப்பொறியை ஏற்றின. இன்னும் என்னுள் வலி இருந்தது… சோகமும் ஆழமாக பதிந்திருந்தது. ஆனால் நான் முற்றிலும் நொறுங்கி விழவில்லை.  இரவின் அடர்ந்த இருளுக்குள்ளும், என் குடும்பம் எனக்கொரு ஒளியாக இருப்பதை நான் உணர்ந்தேன். அந்த ஒளி சிறியது தான்… ஆனால் அது என்னை மீண்டும் எழுந்து நிற்கத் துணை செய்யும் அளவுக்கு வலிமையாக்கியது.
 
என் மகன் என் கைகளைப் பிடித்துக் கொண்டிருந்தான்; என் கணவன் என்னை கட்டிபிடித்து தோளில் சாய்ந்தார். அவர்கள் இருவரின் மூச்சின் சூடும் அருகாமையும் என்னை சுற்றி இருந்தது. அந்த அன்பும் பராமரிப்பும் என் உடைந்த இதயத்தின் இருளில் ஒரு சிறிய தீபமாக ஒளிர்ந்தது. முறிவு இன்னும் இருந்தது; ஆனால் அந்த முறிவுக்குள் ஒரு மென்மையான தைரியம் முளைத்தது.
 
“நீ ஒருபோதும் தனியாக இல்லை,” என்று மீண்டும் என் கணவன் என் கைகளை உறுதியாகப் பிடித்தபடி சொன்னார். மகன் அருகில் நின்று மெதுவாக சிரித்தான். அந்த சிரிப்பில் என் இதயத்தில் நம்பிக்கை சிறிது வளர்ந்தது. நான் ஆழமாக மூச்சை இழுத்து, அவர்களுடன் அருகில் அமர்ந்தேன். அந்த அமைதி, என் முறிந்த மனத்துக்கு ஒரு மருந்தைப் போல இருந்தது. மகனின் முகத்தில் இருந்த சிரிப்பு என் உள்ளத்தை மென்மையாக்கியது.
 
அந்த இரவு, முறிந்தவள் என்ற உணர்வோடு இருந்தாலும், குடும்பத்தின் அன்பின் சக்தியால் நான் மீண்டும் எழுந்தேன். யாருக்கும் காட்டாத வலியையும் துக்கத்தையும் நான் ஏற்றுக் கொண்டேன்; மறைக்காமல் வெளிப்படுத்தினேன். அதே நேரத்தில்,  கண்ணீர் வழிந்தது… ஆனால் அது இனி பயத்தால் அல்ல; விடுபட்ட துக்கத்தால். நான் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. ஆனால் இந்த இருளுக்குள்ளும், என் குடும்பம் என் ஒளி. நான் உயிருடன் இருக்கிறேன். அதுவே இப்பொழுது எனக்கு அர்த்தம்.
 
அடுத்த நாள் காலை, வெளிச்சம் மெதுவாக வீடு முழுவதும் பரவியது. ஜன்னல் வழியாக வந்த சூரியஒளி சுவர்களில் படர்ந்தது. பறவைகளின் குரல் கேட்கத் தொடங்கியது. வெளியுலகம் ஒரு புதிய நாளைத் தொடங்கியது. ஆனால் என் உள்ளத்தில் இருள் இன்னும் சுருண்டே இருந்தது.
 
நான் மெதுவாக எழுந்து கண்ணாடி முன் நின்றேன், என் முகம் சோர்வாக இருந்தது, கண்களில் நேற்று இரவு உறங்காததின் சாட்சி இருந்தது. ஒரு கணம், நினைவுகள் வெள்ளம்போல் வந்து மனதை உரசின. நேற்று நடந்த பாலியல் பலாத்காரம் செய்யும்போது ஏற்பட்ட சத்தம் அனைத்தும் காதுகளில் மீண்டும் ஒலித்தது. மூச்சு எடுக்கவே சிரமமான உணர்வு. என் இரண்டு காதுகளையும் போத்தி  கண்ணீர் வடித்தேன், மனம் நொறுங்கியது
 
அந்த நேரத்தில், என் கணவன் பின்னால் அமைதியாக நின்றிருந்தார். எதுவும் பேசவில்லை. சில வலிகள் வார்த்தைகளைத் தாண்டி இருக்கும். அவரது இருப்பு மட்டும் என்னை நிலத்தில் நிலைநிறுத்தியது.
 
“என்னால் மறக்க முடியல…” என் குரல் உடைந்தது.
“என்னால் மறந்து பழைய மாதிரி வாழமுடியாது, நான் உனக்கு தகுதியானவள் இல்லை… என்னை மன்னிச்சுடு…” அந்த கயவர்கள் என்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யும்போது என் நிலை உடைந்து அவர்களுக்கு மறைமுகமாக ஒத்துழைத்ததையும், மற்றும் சமையல் செய்து அவர்களுக்கு சாப்பாடு போட்டதையும், என்னை வழுக்கட்டாயமாக மது அருந்த வைத்து அவர்களுடன் குடித்ததையும் மறைக்காமல் சென்னேன்.
 
அப்போ நடந்த விவரங்களை என் கணவரிடம் மறைக்காமல் சொன்னதும், என் மார்பில் அடைத்திருந்த சுமை உடைந்தது. அழுகை கட்டுப்பாடின்றி வந்தது.  பயம், சோர்வு எல்லாம் கலந்த ஒரு பெரும் பாரம் கரைந்து வழிந்தது. ஆனால் குற்ற உணர்ச்சி மட்டும் என் மனதை உறுத்தியது.
 
என் கணவன் என் கையை இறுக்கமாகப் பிடித்தார்.
“நந்து, நீ இப்போ என் கூட இருக்கிறதே போதும். அது உன்னோட தப்பு எதுவும் இல்லை, எல்லாம் நடந்ததால உன் மதிப்பு குறையாது. நான் உன்னை விட்டு எங்கயும் போக மாட்டேன்,” என்றார். அந்த ஒரு வாக்கியம் என்னை உடைத்தது… அதே நேரத்தில் தாங்கியும் பிடித்தது. நான் கண்ணீர் சிந்தி அவரை அணைத்துக் கொண்டேன். அருகில், என் மகன் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் மூச்சின் ஒலி, என்னை இந்த உலகத்துடன் இணைத்திருந்த ஒரு மென்மையான நூல் போல. அந்த நூல் அறுந்துவிடவில்லை. அதுவே என் அடையாளம். மெல்ல மெல்ல, முறிந்த மனமும் காயமடைந்த இதயமும் சுவாசிக்க சீர்ராகிக்கொண்டது. ஆனாலும் எனக்குள் அந்த ரனம் ஆறாமல் இன்னும் இருந்தது. நினைவுகள் அழியவில்லை. ஆனால் அவை இனி என்னை முழுவதுமாக உடைக்கவில்லை.
 
அப்போ ஒரு முடிவு மட்டும் எடுத்தேன், நான் இந்த வலியை மறைக்க முடியாதது. நான் அதை எதிர்கொண்டு வாழனும். எவனோ செஞ்ச தப்புக்கு நான் ஏன், என் வாழ்கையையும், என்னை நேசிக்கிறவங்களையும் நிம்மதி இழக்க செய்யனும். இனி என் வாழ்கையை நான் எச்சரிக்கையுடனும், சந்தோசமாகவும் வாழ வேண்டும்.
 
என்னை இரக்கமில்லாமல் பலாத்காரம் செய்த தவமணி மற்றும் ஃபாஹிம் இருவருக்கும் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இரண்டு சிறைக்காவல் அதிகாரிகளை கொலை செய்ததற்கும், என்னை கற்பழித்ததற்கும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
 
 IPC பிரிவு 302 மற்றும் 353 படி அரசு பணியாளரை கொலை செய்ததற்கும், IPC பிரிவு 224 படி சிறையில் இருந்து தப்பித்ததற்கும், IPC பிரிவு 34 படி ஒரே நோக்கத்துடன் சேர்ந்து காவல் அதிகாரியின் துப்பாக்கியை திருடியதற்கும், IPC பிரிவு 376D படி என்னை குழுவாக கற்பழித்ததற்கும், 15 ஆண்டு ஆயுள் தண்டனை மற்றும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
 
அவர்களுக்கு தண்டனை கிடைத்ததில் என் மனதில் இருந்த வேதனைக்கும், அநியாயத்திற்கும் ஓரளவு நீதி கிடைத்ததென. நான் அனுபவித்த துயரமும் அவமானமும் எப்போதும் அழியாத காயமாக இருந்தாலும், நீதிமன்றத்தின் தீர்ப்பு என் மனத்திற்கு ஒரு சிறிய ஆறுதலாக அமைந்தது. அது எனக்கு நீதியின் மீது இருந்த நம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பித்தது.
 
சில நாட்களில், என் வீட்டில் வழக்கமான இயல்பிற்கு நான் மெதுவாக திரும்பினேன். சமையலறையில் காபியின் வாசனை  மகன் பள்ளிக்குச் செல்லத் தயாராகும் அவசரம், கணவன் என்னை கவனமாக பார்த்துக்கொண்டே அமைதியாக உதவினார். எதுவும் நடக்காததை போல நடிக்க யாரும் முயற்சிக்கவில்லை. ஆனால் என் உள்ளத்தில் இன்னும் அலைகள் அடங்கவில்லை. சில வாசனைகள் அந்த நினைவுகளைத் தூண்டும். சில நொடிகளில் என் உடல் உறைந்து போகும். மகனுடன் நான் அதிக நேரம் செலவிடத் தொடங்கினேன். அவன் சிரிப்பில் எந்தக் கலப்படமும் இல்லை. அவன் அன்பில் எந்தக் கேள்வியும் இல்லை. ஒரு நாள், அவன் என் முகத்தைப் பார்த்துக் கேட்டான்.
 
“அம்மா, நீ இப்போ ஹேப்பியா?”
அவன் அந்த கேள்வியை கேட்ட அந்த நொடியில் என் இதயம் ஒரு துடிப்பைத் தவறவிட்டது. சில விநாடிகள் பேச முடியாமல் அவன் கண்களைப் பார்த்தேன். அந்தக் கண்களில் குற்றச்சாட்டு இல்லை… பயம் இல்லை… வெறும் அன்பும் அக்கறையும் மட்டும்.
 
நான் மெதுவாக சிரிக்க முயன்று,“ம்ம்… நான் முயற்சி செய்கிறேன்,” என்றேன். அவன் திருப்தியாக சிரித்தான். அவனுக்கு அதுவே போதுமானது. அவன் உடனே என்னை அணைத்துக் கொண்டான். அந்தச் சிறிய அணைப்பில் ஒரு பெரிய ஆறுதல் இருந்தது. என் வாழ்க்கை முழுவதும் சிதறி போகவில்லை என்பதற்கான நினைவூட்டல் அது. இன்னும் என்னிடம் அன்பு இருக்கிறது. இன்னும் என்னை தேடும் கைகள் இருக்கின்றன. அந்த நொடியில், நான் உணர்ந்த காயங்கள் முழுமையாக ஆற நேரம் எடுக்கலாம். ஆனால் அன்பு இருந்தால், வாழ்வை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.
 
அன்று மாலை, ஜன்னல் அருகே நின்றபோது நான் இன்னும் காயங்களுடன் இருக்கிறேன். ஆனால் அந்த காயங்கள் இப்போது குணமடையும் பாதையில் உள்ளன. கண்ணாடியில் என்னைப் பார்த்தேன். என் பழைய அழகு முழுவதுமாக திரும்பவில்லை. ஆனால் அந்த முகத்தில் ஒரு உறுதி இருந்தது. என் கணவன் பின்னால் வந்து நின்றார். எதுவும் பேசவில்லை. அவரது கை மெதுவாக என் தோளில் வந்தது. நான் மெதுவாக அவரது கையை என் கையால் மூடினேன். மெதுவாக அவரை நோக்கி சொன்னேன்.
 
என்னால் அந்த சம்பவங்களை, இன்னும் மறக்க முடியலை.”அவர் உடனே பதில் சொல்லவில்லை. என் கையை மட்டும் பிடித்தார். நான் திரும்பி அவரை கண்டேன், அவரது கண்களில் நான் பார்த்தது அன்பும், பொறுமையும், என்னை விட்டுக் கொடுக்காத உறுதியும் இருந்தது. அந்த அமைதியில், எங்களுக்குள் ஒரு புதிய தொடக்கம் பிறந்தது. பிறகு அவர் மெதுவாகச் சொன்னார்.
 
மறக்க வேண்டிய அவசியமில்லைஆனால் அதை நீ ஒருத்தியாக சுமக்க வேண்டியதில்லை.” அந்த வார்த்தைகள் என் உள்ளத்தில் ஏதோ ஒன்றை உடைத்தது பயத்தை அல்ல, தனிமையை.
 
நான் மெதுவாக சுவாசித்தேன். முதல் முறையாக, அந்த நினைவுகளுக்கு நடுவிலும் நான் முற்றிலும் உடைந்தவள் இல்லை என்று உணர்ந்தேன். காயங்கள் இன்னும் உள்ளன. நினைவுகள் இன்னும் துரத்துகின்றன. ஆனால் இப்போது, என் கையில் ஒரு கை இருக்கிறது. அதுவே எனக்கு முன்னேற போதுமானது.
 
“நாம வேற விட்டுக்கு மாறிடலாம், மெயின் சிட்டியில வீடு தேடுவோம். இங்க இருந்தா உனக்கு நடந்த கொடுமை தான் நியாபகம் வரும். இந்த வீட்டையும் வித்துடலாம்” என்றார்.
 
என்னை மன்னிச்சிடுங்கஎன்னால தான் நீங்க கஷ்டப்பட்டிருக்கிறீங்கஉங்க ஆசையா கட்டுன வீடு இப்படி…” என் குரல் உடைந்து, கண்கள் கண்ணீர் ஊறிக் கலங்கினது.
 
உன்னையும் ஆரவ்வையும் விட எனக்கு எதுவும் பெருச்சில்லை. நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி நாம செய்த சத்தியம் நினைவில் இருக்கா?” நானும் ராகுலும் நேருக்கு நேராகக் கண்களைப் பார்த்து, எங்கள் கைகளை கோர்த்துக் கொண்டோம்.
 
" காலம் கரையும் வரை,
வானம் விழியும் வரை,
நம் கைகள் இணைந்தே இருக்கும்.
இரண்டு உடல்கள், ஒரு உயிராய் வாழ்வோம்.
மழைத் துளி பூமியை அடையும் போல்,
நம் உயிர்கள் இணைந்தே இருக்கும்.
இன்பம் வந்தால் ஒன்றாக சிரிப்போம்,
துன்பம் வந்தால் ஒன்றாக நின்று போராடுவோம்.
உயிர் பிறியும் வரை,
 நம் காதல் மாறாது,
நிலாவின் சாட்சியாக,
நட்சத்திரங்களின் சாட்சியாக,
 நமது வாழ்க்கை ஆரம்பம் முதல் நமது இறுதி முடிவு வரை.
என்றென்றும்… என்றும்… ஒன்றாக இருப்போம்."
 
நாங்கள் எடுத்த காதல் சத்தியத்தை மீண்டும் ஒன்றாகக் கோரஸாகப் பாடினோம். பாடலை முடித்தபோது, இருவரது முகத்திலும் மென்மையான புன்னகை மலர்ந்தது.
[Image: 98.png]
அடுத்த வாரம், நான் முதன்முறையாக மனநல ஹாஸ்பிடலுக்கு, கவுன்சிலிங் போனேன் சில நாட்களில் வேற வீட்டுக்கு மாறினோம். எனக்குள் சில மாற்றம் வந்தது. ஒரு இரவு, மகன் தூங்கியபின், வீடு அமைதியில் மூழ்கியது. மழை வெளியில் மெதுவாக பெய்தது, விடு முழுவதும் குளிர் சூழ்ந்தது. ராகுல் என் கண்களைப் பார்த்தார்.

 
 “நந்து...! எனக்கு பசிக்குது ரொம்ப நாள் ஆச்சு பன்னலாமா? " என்று கேட்டார். அந்த கேள்வி என் உடலுக்கு சங்கடமான உணர்வை அளித்தது. முன்பு என்னை அழைக்க கழுத்தில் முத்தமிடுவார், அதுவே என்னை காமத்திற்க்கு அழைக்கும் ரகசிய குறியிடு. என் கணவர் அந்த சம்பவத்திற்கு பிறகு, என்னை உடலுறவுக்கு அழைக்கவில்லை. கடைசியாக நாங்கள் ஒன்றாக சேர்ந்து நான்கு மாதங்கள் ஆனது, அந்த நேரத்தில், என் மனதில் கலந்த உணர்வுகள், வலி, பயம் அனைத்தும் இணைந்து இருந்தன. இப்போது அது நீங்கி விட்டது.
 
ம்ம்ம்…” நான் அவரிடம் நானத்துடன் சொன்னேன்.
 
உனக்கு ஓகே தானே? அதுக்கு அவசரம் எதுவும் இல்லை,” அவர் மெதுவாகச் சொன்னார். அந்த பதில் என் உள்ளத்தில் நம்பிக்கையை விதைத்தது. வலி இருந்த இடத்தில் இப்போது விழிப்புணர்வு உள்ளது, குற்ற உணர்ச்சி இருந்த இடத்தில் இப்போது உண்மை உள்ளது.
 
நான் அந்த கயவர்களால் கற்ப்பழிக்கப் பட்டவள். அதைத் தாண்டியும், என் கணவர் என்னை முழுமையாக ஏற்றுக்கொண்டார். என்னை இழக்கக்கூடாது என்பதற்காக, தாங்கி பிடிக்கும் அவருடைய அந்த மனவலிமை என் மனதிற்கு நம்பிக்கையைத் தந்தது. அவருக்காக, நான் என் உயிரையே தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன்; அந்த அளவுக்கு என் மனதை வென்றவர் அவர்.
 
இந்த முறையெல்லாம், அவருக்கு என்ன இல்லாததோ என்று உறுதியாக உணர்ந்தபோது, நான் சிரியென கூச்சத்துடன் தலையசைத்தேன்.  என் மனதில் புதிதாக பிறந்த உறுதியையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்தியது
 
“நான் உன்னைத் தொடும் போது, உனக்கு பயம் வரக் கூடாது. நாம சேரும்போது உனக்கு பதட்டம் இருந்தா சொல்லிடு,” அவர் மெதுவாக சொன்னார்.
 
ம்ம்ம…” என்றேன். அவர் அருகே வந்து என் தலைமுடியை மெதுவாக வருடினார். எந்த அவசரமும் இல்லை. எந்த பயமும் இல்லை. அந்த நிமிடம், நான் பாதுகாப்பு மட்டுமே உணர்ந்தேன்.
 
நான் மெதுவாக அவரை கட்டி அணைத்து, அவரின் மார்பில் தலையசாய்த்தேன். அவர் இதயம் மெதுவாகத் துடித்ததைக் கேட்டேன். அந்த ஒலி என் உள்ளத்தில் அமைதியையும் நம்பிக்கையையும் பிறப்பித்தது. அவர் தன் கையால் என் கன்னத்தை மெதுவாக தடவி என்னை நிமிர்த்தினார். நான் விரைவாக அவர் உதட்டை நெருங்கி கவ்வினேன்.
 
அந்த இரவு, நாங்கள் ஒன்றாக சேர்ந்தோம் உடலால் மட்டும் அல்ல, இதயத்தாலும் ஒன்றாக. முன்பு இருந்த காதல் இப்போது இன்னும் ஆழமாக இருந்தது. நான் அவரை அணைத்தபோது, என் உள்ளத்தில் முழுமையான பாதுகாப்பையும் நிம்மதியையும் உணர்ந்தேன்.
 
அந்த நிமிடம்,  உண்மையான வலிமையை உணர்த்தியது. வலி கடந்திருந்தாலும், நம்பிக்கை, அன்பு, மற்றும் பராமரிப்பு மூலம் மீண்டு மறந்து என் பழைய வாழ்க்கைக்கு திரும்பினேன் என்பதை உணர்ந்தேன்.
 
அந்த இரவுக்குப் பிறகு, என் நாட்கள் மெதுவாக மாற்றத் தொடங்கின. காலை விழித்ததும், மகன் பள்ளிக்குச் செல்ல தயாராகும் அவசரத்தைப் பார்த்து சிரித்தேன். கணவன் என் அருகில் அமைதியாக காபி ஊற்றி, என் கை பிடித்தார். அந்தச் சாதாரணக் காட்சியில் கூட எனக்கு ஒரு புதிய உறுதியும் நிம்மதியும் இருந்தது, இந்த இரவு, எங்களது மனங்கள் ஒன்றிணைந்து.
 
வாழ்க்கை சில நேரம் நம்மை சோதிக்கும். வலிகள் நம்மை உடைக்க முயலும். எவ்வளவு பெரிய வலிகள் இருந்தாலும், அன்பும் நம்பிக்கையும் இருந்தால்  மீண்டும் நமக்கு ஒரு புதிய வாழ்கைகை பிறக்கும்.

.............முடிவு.............
[+] 6 users Like Blacktail's post
Like Reply


Messages In This Thread
RE: ஒரு பத்தினியின் தனிமை இரு குற்றவாளிகளின் இனிமை - by Blacktail - 14-02-2026, 09:36 PM



Users browsing this thread: 1 Guest(s)