07-02-2026, 01:44 PM
இரண்டு நாட்கள் கழித்து, காலை நேரம். பத்து மணி இருக்கும்.
அவளுக்கு திக்கென்றானது. அய்யய்யோ என்று பதறியது. உடனே மிரண்டவளாகப் பின்னால் நகர்ந்தாள்.
சூளையில் அப்போது பிரியா மட்டும்தான் இருந்தாள். அவளுக்கு எந்த வேலையும் இருக்கவில்லை. பாயை விரித்து படுத்துக் கொண்டிருந்தாள்.
வெளியே லேசான மழை பெய்து கொண்டிருந்தது.
வீட்டு வாசலில் இருந்து செங்கல் சூளை முதலாளியின் குரல் கேட்டது.
“மருதாம்புள்ள”
உள்ளே பாயில் படுத்துக் கொண்டிருந்த பிரியா திடுக்கிட்டு எழுந்தாள்.
“மொதலாளி” என்றாள் குரலே எழாமல்.
“என்ன பண்ற உள்ள?” அவர் குரல் அதிகாரமாக வந்தது.
“இருக்கங்” என்றாள்.
“உங்கொப்பன் இல்லயா?”
“தோட்டத்துக்கு போய்ட்டாப்டிங்” அவசரமாக நைட்டியை சரி செய்து கொண்டாள்.
கொடியில் கிடந்த ஒரு துண்டை எடுத்து மார்பில் போட்டு மறைத்துக் கொண்டு கதவு பக்கத்தில் வந்து நின்றாள்.
பாதிதான் தெரிந்தாள். அவளின் மீதி உடம்பு அவர் பார்வைக்கு தெரியவில்லை. ஆனாலும் அவளது கொலுசணிந்த கால்கள் அவரை ஈர்த்தன.
“எங்க இந்த வடிவயும் காணமாட்டக்குது” என்று கேட்டார்.
“அந்தக்காவும் தோட்டத்துக்குதாங்க போயிருக்கு” என்று அவரின் முகம் பார்க்காமலே சொன்னாள்.
“நான் தோட்டப் பக்கம் போகவே இல்ல” என்றார்.
அவள் ஒன்றும் பேசாமல் நின்றாள். அவர் முகத்தை பார்க்கவில்லை.
பாதி மறைவில் இருப்பதால் அவராலும் அவளை நன்றாக பார்க்க முடியாது.
“என்ன பண்ற நீ?” என்று கேட்டார்.
“சும்மாதான்ங்க இருக்கேன்”
“வேலை ஒன்னும் இல்லயா?”
“இல்லீங்”
“அந்த மாப்பிள்ளைய புடிச்சுருக்குதான உனக்கு?”
வெறுமனே தலையை மட்டும் ஆட்டினாள்.
“வாயத் தெறந்து சொல்லு புள்ள?” மிரட்டலாகக் கேட்டார்.
“புடிச்சுருக்குங்” சிரிப்பை காட்டினாள்.
“நல்ல ஆளுதான். நல்ல எடம். உன்னை நல்லா பாத்துக்குவான். அப்படி ஏதாவது கொஞ்சம் செரியில்லேன்னாலும் என்கிட்ட சொல்லு.. அவனை நான் பாத்துக்கறேன்”
தலையாட்டியபடி நின்றாள்.
“ஒத்த ஆளு. கூட ஒரு கெழவி மட்டும்தான் இருக்கு. அதுவும் இன்னிக்கோ நாளைக்கோனு இருக்கு. அதும் போச்சுன்னா அப்பறம் அந்த வீட்ல உன்னை ஏன்னு கேக்க யாருமில்ல”
அவள் அமைதியாகவே நின்றாள்.
“சரி.. ஆபீஸ் ரூம் பூரா ஒரே குப்பையா இருக்கு. வந்து கொஞ்சம் கூட்டியுடறியா?” என்றார்.
அதை மறுக்க முடியாது. ஆனால் தனியாகப் போகவும் பயமாக இருந்தது. அவர் எப்படிப்பட்ட எண்ணத்தில் இருக்கிறாரோ தெரியாதே.
“என்ன வரயா இல்லயா?” எனக் கேட்டபடி கதவுப் பக்கத்தில் வந்தார்.
“வரங்” என்று பதறிக் கொண்டு சொன்னாள்.
“என்கிட்ட இன்னும் பயந்துக்கறியா?”
“இல்லீங்”
“ஏம்புள்ள.. நான் என்ன உன்னை கடிச்சா தின்றப் போறேன். எதுக்கு இப்படி பயந்துக்கற?”
“இல்லீங்..”
“வடிவெல்லாம் பாரு. தைரியமா வருவா. என்கூட இருப்பா. அவ எப்படி இருப்பானு உனக்கே தெரியும். இப்ப அவ மகளுக்கு நல்லா நகை நட்டுனு போட்டு நல்லபடியா கல்யாணமும் பண்ணிக் குடுத்துட்டா. பொம்பளைனா அந்த மாதிரி தைரியமா இருக்கணும். எதுக்கு பயம்”
“செரிங்”
“அவளோட மகளுக எல்லாம் எங்க ஒருத்தியும் காணம்?” எனக் கேட்டபடி அவரே கதவைத் தள்ளி உள்ளே வந்தார்.
அவளுக்கு திக்கென்றானது. அய்யய்யோ என்று பதறியது. உடனே மிரண்டவளாகப் பின்னால் நகர்ந்தாள்.
செங்காச்சி
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)