10-01-2026, 10:16 AM
(10-01-2026, 02:03 AM)Piriya s Wrote: ரஙகராஜன்.. எழுத்தாளர் சுஜாதாவானதுக்கு காரணமாக, அவருக்கு முன்னோடியாக ஒரு எழுத்தாளர் இருந்தார்.
அவரைப் பற்றி சுமாராக தெரியுமா நண்பா?
(எழுத்தாளுமையில் என்னோட ஃபேவரிட் சுஜாதாதான்.)
(இலக்கியத்தில் ஜெயகாந்தன்.)
சுஜாதா இலக்கியம் தெரிந்த கமர்ஷியல் எழுத்தாளர்.
ஜெயகாந்தன் கமர்ஷியலை ஏற்காத இலக்கியவாதி.
நம் தமிழ் எழுத்தாளுமை கொண்ட சமூகத்தில் இந்த இரு பிரம்மரிஷிகளுக்கும் முன்னோடிகளாக குருநாதர்கள் உண்டு.
முடிந்தால் அவர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு சின்ன வாய்ப்பு.. சொல்லிவிட்டேன்.
நன்றி.!
நன்றி. தலைவர் சுஜாதா அவர்களின் ரசிகர்களை சந்திப்பது மகிழ்ச்சி..!! நீங்கள் சொன்னது 100 % உண்மை. சுஜாதா அவர்களின் குருமார்கள் உண்டு.
ஆனால் கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளை தமிழ் மொழியில் கட்டிப்போட்ட பெருமை நம் தலைவருக்கே உண்டு..!! இன்று நம்மில் பலபேர் இந்த தளத்தில் தமிழில் சுவையாக எழுதுவதற்கும், அதை தமிழில் படித்து ரசிப்பதற்கும், அவரின் படைப்பின் தாக்கம் இருக்கிறது!
தலைவனை பற்றி ஒரு blog create செய்து உருவாக்கி ரசித்தவன் நான். http://writersujatha-tribute.blogspot.com/. ஆனால் திடீரென்று நம் xossippy இல் தலைவரை பற்றி பேச வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)