10-01-2026, 02:18 AM
(10-01-2026, 12:17 AM)Chellapandiapple Wrote: ஐயா +2 படிக்கும் போதே பரிட்சையில் எழுத முடியாதவன் நான்...
உங்க கதைகள் அவ்வளவு பிடிக்கும்
ஆனால் உங்களை பாராட்டி எழுத பெரியதாக முடியவில்லை
எங்களின் நிலையே ஒரு வரி இரு வரி எழுதுவது தான்
எங்களுக்கு பெரிதாக எழுத வராது
அதற்காக எங்களை கோபித்து கொள்ளாதீர்கள்
ஹாஹா.. எளிமையான விளக்கம் நண்பரே.
பெரியதாக பாராட்டை எதிர்பார்ப்பதில்லை. ஒரே கமெண்டை காபி பேஸ்ட் செய்து பல கதைகளுக்கும் போட வேண்டாமே என்பதுதான் என் வேண்டுகோள்.
நான் குறிப்பிட்டது அதை மட்டுமே. அது எவரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.
ஒரே கமெண்ட்டை பல கதைகளில் பல இடத்தில் படித்ததால் இவர்களின் மீது உண்டான வருத்தம் அது.
சுயமாக.. கதைக்கு தகுந்த மாதிரி.. ஒரு வரிகூட எழுத முடியாத அளவுக்கு அவ்வளவு பலஹீனமானவர்களா இவர்கள் என்கிற எண்ணமே அது.
இணைய உலகம் இல்லாத காலத்திலேயே பக்கம் பக்கமாக போஸ்ட் கார்டில் விமர்சனம்
எழுதிய வாசகன் நான்.
அன்று வெறும் வாசகன்தான். ஆனால் அதுவே இன்று என்னையும
ஒரு கதை சொல்லியாக மாற்றியிருக்கிறது.
இதை ஒரு சிறு விளக்கத்துக்காக மட்டுமே இங்கு குறிப்பிட்டேன்.
படிப்பவர்களை குறை சொல்வது என் நோக்கம் அல்ல.
மற்றபடி பள்ளிப் படிப்புக்கும் திறமைக்கும சம்பந்தமே இல்லை நண்பரே.
ஆர்வம் கூடவே எதிலும் ஒரு முயற்சி. அதுதான் தேவை.
நானெல்லாம் நடுநிலை பள்ளி தாண்டாதவன்.
நன்றி..!
செங்காச்சி
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)