05-01-2026, 08:36 PM
சந்திராவின் கல்யாண காரியங்கள் உடனடியாக நடக்கத் தொடங்கி விட்டது.
“அப்பாகிட்ட பேசிக்கங்க” எனச் சொல்லி விட்டு உடனே அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டாள்.
அடுத்தது பெண் வீட்டிலிருந்து பையன் வீட்டுக்கு விருந்துக்குப் போவது பத்திரிக்கை அடிப்பது ஜவுளி எடுப்பது என்கிற கட்டத்துக்குப் போனது.
பிரியாவும் மருதுவும் அந்த சுப காரியங்கள் அனைத்திலுமே கலந்து கொண்டனர். எப்போதும் அந்தப் பேச்சாகவே இருந்தது.
ஒரு மாத இடைவெளியிலேயே சந்திராவின் திருமணம் நடந்து விட்டது.
செங்கல் சூளை முதலாளியின் தலைமையில் அருகில் இருந்த ஒரு குமரன் கோவிலில் வைத்து திருமணம்.
பிரியாவும் புதிதாக ஒரு பட்டுப் புடவை எடுத்துக் கட்டிக் கொண்டாள்.
பட்டுப் புடவை, மேக்கப், தலை நிறைய பூ என்று அவளே ஒரு மணப்பெண் போலத்தான் சுற்றிக் கொண்டிருந்தாள்.
அந்தக் கல்யாணத்தில்தான் அந்த நபரை சந்தித்தாள் பிரியா.
உணவு நேரத்தின் போது சூளை முதலாளி அவளைக் கூப்பிட்டார்.
“ஏ புள்ள பிரியா.. இங்க வா”
தயங்கி அவரிடம் போனாள் பிரியா.
சுந்தரி பக்கத்தில் வரவில்லை. சற்று தள்ளி நின்று விட்டாள். அவளை கூட அழைத்துப் போக வழியில்லாமல் எதுவும் பேசாமல் முதலாளியின் முன்பாகப் போய் நின்றாள் பிரியா.
முதலாளியின் பக்கத்தில் பேண்ட் சர்ட் போட்டிருந்த ஒரு மத்திம வயது கடந்த புதிய ஆள் இருந்தான்.
அவரது பக்கத்தில் இருந்த ஆளிடம் அவளைக் காட்டினார்.
“இதுதான் அந்தப் புள்ள. பேரு பிரியா. அப்பன் மட்டும்தான். அம்மா இல்ல. வேற எந்த சொந்த பந்தமும் இல்ல.”
பிரியாவைப் பார்த்து, “இந்தா புள்ள.. இது நமக்கு தெரிஞ்ச பையன்தான். புடிச்சிருக்கா பாரு. என்ன.. கல்யாணமாகி இப்ப பொண்டாட்டி கூட இல்ல. உன்னை மாதிரிதான். மத்தபடி நல்ல பையன். நான் கேரண்டி தரேன். நீ நம்பி கல்யாணம் பண்ணிக்கலாம். உனக்கு புடிச்சா சொல்லு. உன் கல்யாணத்தை நானே நடத்தி வெக்கறேன்” என்றார்.
அதிர்ந்து போய் அவரைப் பார்த்தாள் பிரியா. கண்கள் உடனடியாக மிரண்டன. முகம் சுண்டிப் போனது.
‘எனக்கு மாப்பிளையா? எனக்கு இன்னொரு கல்யாணமா? அதுவும் இந்த ஆளுடன். யார் இவன்?’
அந்த ஆளைப் பார்த்தாள் பிரியா.
அந்த ஆளும் அவளது முகத்தைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் உடனே திடுக்கிட்டு பார்வையை மாற்றினாள். முதலாளியைப் பார்த்தாள்.
அவள் முகம் மிரண்டு போயிருந்தது. முகத்தில் உடனடியாக வியர்க்கத் தொடங்கியிருந்தது.
“புடிச்சுருக்கா?” முதலாளி நேரடியாகவே கேட்டார்.
அவளுக்கு தொண்டை அடைத்துக் கொண்ட மாதிரி இருந்தது.
“நல்லா பாத்துக்க புள்ள” என்றார்.
தயங்கி மீண்டும் அந்த ஆளைப் பார்த்தாள். மோசமில்லை. ஆனால் எதுவோ அவளை அதிர வைத்தது.
உடனே பார்வையை மாற்றிக் கொண்டாள். சட்டென்று தோன்றியது.
“அப்பாகிட்ட பேசிக்கங்க” எனச் சொல்லி விட்டு உடனே அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டாள்.
செங்காச்சி
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)