30-12-2025, 02:00 AM
பத்து மணிக்கு அவனது அம்மா போன் செய்தாள்.
எடுத்து, “அம்மா” என்றான்.
“நான் கிளம்பிட்டேன் ரஞ்சி” என்றாள் அம்மா. அவள் குரலில் மெலிதான உற்சாகம் தெரிந்தது.
“ம் சரிமா. வந்துருவ இல்ல?”
“வந்துருவேன்டா. வால்பாறை வந்துட்டு கூப்பிடறேன்”
“வால்பாறை வந்துட்டு கூப்பிடாத. அதுக்கு மொதவே கூப்பிடு. பொள்ளாச்சி வந்து பஸ் ஏறினதும் மறக்காம எனக்கு கால் பண்ணு”
“சரி.. சரி.. நீ சாப்டியா?”
“ஹ்ம் சாப்டேன்”
“என்ன செஞ்ச?”
“உப்புமா”
“கவலைப்படாதடா கண்ணா நான் வந்துருவேன். உனக்கு சமையலுக்கு ஆள் கெடைக்கறவரை உன்கூட இருந்து வாய்க்கு ருசியா சமைச்சு போடறேன்”
“நீதான் மெனக்கெடற. எனக்கு அப்படி ஒன்னும் ரொம்ப கஷ்டமா தெரியல”
“டேய்.. உன் சமையல் பத்தி எனக்கு தெரியாதா? ஒன்னுக்கு ரெண்டா செஞ்சு சாப்டுவ. அப்படி இல்லேனா பன்னு ரொட்டி ஜாம் பழம்னு வாங்கி வெச்சு சாப்டுட்டிருப்ப. உனக்கு நான்வெஜ் புடிக்கும். அதை யாரு செஞ்சு தருவா?”
“அதுக்குத்தான் மாசத்துக்கு ஒருக்கா அங்க வந்து உன் கையாலயோ இல்ல பாட்டி கையாலயோ சாப்பிட்டு வரேனே.. அப்புறம் என்ன?”
“வாரா வாரம் சாப்டறவன் மாசத்துக்கு ஒருக்கா சாப்ட்டா போதுமாடா? நான் இல்லாட்டியும் உங்க பாட்டி செஞ்சு போடுமில்ல?”
“சரிம்மா. பாத்து வா. அப்பப்ப போன் பண்ணிட்டே இரு”
“தெரியும்டா. நான் என்ன அங்க வராதவளா? வால்பாறைவரை நான் வந்துருவேன். அங்கிருந்துதான் என்னை நீ வந்து கூட்டிட்டு போகணும்”
“சரிம்மா. நான் வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கறேன். நீ வந்துரு. உனக்கு முன்ன நான் வால்பாறைல இருப்பேன்”
“டேய்.. அப்பறம் உன்கிட்ட ஒன்னு சொல்லனும்”
“ம் சொல்லுமா. என்ன?”
“அதை நேருல வந்து சொல்றேன்” சிரித்தாள் அம்மா.
“அப்றம் இப்ப எதுக்கு அந்த பேச்சு. வா.. வந்து சேரு”
“இப்பவே சொன்னா நீ என்கூட சண்டை போடுவ? அதெல்லாம் நேருலதான் பேசனும்”
“உன்னை.. வா பேசிக்கறேன்”
“எருமை மாடே.. அம்மாவையே மெரட்டற அளவுக்கு பெரியாளாகிட்ட நீ”
“இத பார் பிரேமா. இப்பவே சண்டைய ஆரம்பிக்காத. எனக்கு வேலை கெடக்கு. நீ இங்க வந்து உன்னை பிக்கப் பண்றதுக்குள்ள.. சில வேலைகளை முடிக்கனும்”
“அப்படியா? சரிடா. நீ வேலைய பாரு. நான் வந்துட்டு கால் பண்றேன்”
“பாத்து வாம்மா. பை”
“பை டா”
அம்மாவுடன் பேசிவிட்டு போனை கட் பண்ணியபோது அவன் நெஞ்சுக்குள் ஓர் இனிய உணர்வு உண்டாகியிருந்தது.
அவனுக்கு சமைத்துப் போட்டு வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்வதற்காகவே அவனது அம்மா கோவையிலிருந்து வால்பாறையிலிருக்கும் எஸ்டேட்டுக்கு வரப் போகிறாள்.
இதற்கு முன்பாக அவனது அம்மா சென்னையில் ஒரு வீட்டில் தங்கி வேலை செய்து கொண்டிருந்தாள்.
படுக்கையில் கிடந்த வயதான பெரியவர் ஒருவரை கவனித்துக் கொள்ளும் வேலை. கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கும் மேலாக அந்த வேலையில் இருந்து கொண்டுதான் அவனைப் படிக்க வைத்தாள்.
இப்போது அந்தப் பெரியவர் இறந்து விட்டார். அதனால் அம்மா கோவைக்கு வந்திருக்கிறாள். அங்கிருந்து இப்போது வால்பாறைக்கு வருகிறாள்.
இந்த எஸ்டேட்டில் தனியாக இருப்பது அவனுக்கு ஒன்றும் கஷ்டமாக இல்லை. என்றாலும் பேச்சுத் துணைக்கும் தன்னை அன்பாக கவனித்துக் கொள்ளவும் அம்மா இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்.
என்ன.. ஒரு பிரச்சினை என்றால்.. அம்மா வந்து விடடால் அதிகமாக. சரக்கு அடிக்க முடியாது. சிகரெட் பிடிக்க முடியாது.
அம்மாவுக்குத் தெரியாமல் கொஞ்சமாக குடித்துவிட்டு தூங்கிவிட வேண்டியதாக இருக்கும்.
அது ஒன்றுதான் பிரச்சினை. மற்றபடி அம்மா வருவது அவனுக்கும் மகிழ்ச்சியே.!
செங்காச்சி
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)