29-12-2025, 01:58 AM
இருட்டுவதற்கு சற்று முன்பாக பிரியாவைத் தேடிக் கொண்டு வடிவு வந்தாள்.
அதேபோல அவர் தனக்கும் கேட்டால் செய்வார் என்று பிரியாவுக்கு தோன்றியது. ஆனால் அதற்காக அவருடன் போய் படுப்பது என்பது மட்டும் அவள் மனசு ஒத்துக் கொள்ளாததாகவே இருந்தது.
“செங்கா” என்று வாசலில் நின்று கூப்பிட்டாள்.
“அக்கா?” வீட்டுக்குள் இருந்து கேட்டாள் பிரியா.
சுந்தரியும் அவளும் உள்ளே போய் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
“வா கொஞ்சம் போய்ட்டு வரலாம்” என்றாள் வடிவு.
“எங்கேக்கா?”
“மொதலாளியை போய் பாத்து பணத்துக்கு கொஞ்சம் ஏற்பாடு பண்ணனும் வா”
முதலாளி என்றதுமே பிரியாவுக்கு திக்கென்றானது.
இன்று அவர் பார்த்த பார்வையே சரியில்லை. அப்படியிருக்க அவர் வீட்டுக்குப் போனால் என்னாகும் நிலமை.?
நல்ல காலத்துலேயே இவர்களது ஆட்டம் சொல்லி மாளாது. இப்போது போனால் சொல்லவா வேண்டும்.?
ஆனால் முதலாளியம்மா வீட்டில் இருப்பாள். அதனால் வம்பு வராது என்று நம்பினாள் பிரியா.
வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தாள் பிரியா.
“அக்கா.. அது பேசறதுக்கு நான் எதுக்குக்கா?” என்று தயங்கிக் கேட்டாள்.
“நீ சும்மா என் கூட வா. நான் பேசிக்கறேன்” என்றாள் வடிவு.
சுந்தரியும் வெளியே வந்தாள்.
“நானும் வரேன்மா”
“நீ வேண்டாம்டி. அந்தாளு ஏதாவது சொல்லுவான்”
“வரட்டும்க்கா” என்றாள் பிரியா.
அரை மனதாக தலையை ஆட்டினாள் வடிவு.
“செரி வாங்க”
பிரியா வீட்டுக்குள் போய் கண்ணாடியில் பார்த்து விட்டு புடவையை உதறி சரி செய்து கொண்டு வெளியே வந்து கதவைச் சாத்தினாள்.
மூவரும் பேசியபடியே முதலாளியின் வீட்டுக்குச் சென்றனர்.
முதலாளியம்மா இருந்ததால் முதலாளி வம்பாக எதுவும் செய்யவில்லை.
உட்கார வைத்து பேசினார்.
வடிவு பணம் அட்வான்ஸாக வேண்டும் என்று கேட்டாள்.
“எப்ப வேணும்?” என்று கேட்டார்
“உப்பு ஜவுளி எடுக்க போறன்னிக்கு கைல இருக்கணும் மொதலாளி”
“நானே கொண்டு வந்து தரேன்” என்றார்.
அப்போதும் பிரியாவைப் பற்றி பேசாமல் விடவில்லை.
“உனக்கு ஏதாவது பணம் வேணுமா மருதாம் புள்ள?” என்று சிரித்தபடி கேட்டார்.
“அது.. அப்பாவ கேட்டுக்குங்க” என்றாள் பிரியா.
“உங்கப்பன் குடிக்க வாங்குவான்”
“குடிச்சாலும் பணத்தை அழிக்காதுங்க. அளவாத்தான் குடிக்கும்”
“ம்ம்.. உங்கொப்பனை விட்டுக் குடுக்க மாட்ட”
சிரித்தாள்.
“அப்பா குடிச்சே பழகிருச்சுங்க. குடிச்சாலும் வம்பு சண்டை எதுவும் இல்லாமத்தாங்க இருக்கு. அதுக்கு சந்தோசம் இத்தனை குடிக்கறது. குடிச்சுட்டு போகட்டுங்க”
“பாத்தியா வடிவு. இப்படி ஒரு மக கெடைக்க அவன் குடுத்து வெச்சுருக்கணும்”
“ஆமாங்க மொதலாளி” என்றாள் வடிவு.
இந்த முறை அதிகம் பயப்படாமல் முதலாளியின் முகத்தைப் பார்த்துப் பேசினாள் பிரியா.
அவர்கள் விடைபெற்று திரும்பி வந்தபோது இருட்டி விட்டது.
கேட்ட பணத்தை மறுக்காமல் கொடுக்கிறேன் என்று முதலாளி சொன்னதில் வடிவு பூரித்துப் போயிருந்தாள்.
அவளது உழைப்பு வீண் போகவில்லை என்கிற சந்தோசம் உண்டாகியிருந்தது அவளிடம்.
“இத்தனை வருசமா ஒரே காலவாய்ல இருந்து கஷ்டப்படது வீண் போகல செங்கா. உழைச்ச உழைப்புக்கு பணம் தரேனு சொல்லிட்டாரு” என்றாள்.
அவள் எதைக் குறிப்பிட்டுச் சொல்கிறாள் என்பது பிரியாவுக்கு நன்றாகவே புரிந்தது.
அதேபோல அவர் தனக்கும் கேட்டால் செய்வார் என்று பிரியாவுக்கு தோன்றியது. ஆனால் அதற்காக அவருடன் போய் படுப்பது என்பது மட்டும் அவள் மனசு ஒத்துக் கொள்ளாததாகவே இருந்தது.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)