11-04-2024, 12:10 PM
எல்லா விவரமும் அப்புறம் சொல்றேன் சுஜாதா.. முதல்ல மாப்பிள்ளைக்கு போன் போடு.. என்றார்
என்னைக்கு தன்னுடைய மகள் பூர்ணிமாவை வாழா வெட்டியாக தன்னுடைய வீட்டை விட்டு துரத்தி விட்டானோ.. அன்றிலிருந்து ஸ்டேஷன் மாஸ்டர் தன்னுடைய மருமனிடம் பேச்சு வார்த்தை வைத்து கொள்வதை நிறுத்தி விட்டார்
மாமியார் சுஜாதாதான் எப்போதாவது தன்னுடைய மாப்பிள்ளைக்கு போன் போட்டு வந்து பொண்ணை கூட்டிட்டு போங்க மாப்பிள்ளை என்று கெஞ்சுவாள் அழுவாள்
அதனால் சுஜாதாவிடம்தான் மாப்பிள்ளை நம்பர் இருந்தது..
ஸ்டேஷன் மாஸ்டர் தன்னுடைய மாப்பிள்ளை நம்பரை கூட சேவ் பண்ணி வைத்து கொள்ளவில்லை..
அவ்வளவு கோவம் தன் மாப்பிள்ளை மேல்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
போன் ரிங் போனது..
அத்த.. எத்தனை முறை நான் உங்களுக்கு சொல்லி இருக்கேன்..
பொண்ணை கூட்டிட்டு போ பொண்ணை கூட்டிட்டு பொண்ணு ஒப்பாரி வைக்காதீங்கன்னு..
பணத்தை ரெடி பண்ணிட்டு போன் பண்ணுங்க நான் எப்போவேனாலும் தாராளமா வந்து உங்க பொண்ணை கூட்டிட்டு போறேன்..
எடுத்தவுடன் மாப்பிள்ளை கடுமையாக பேசினார்
மாப்பிள்ளை.. பணம் ரெடி மாப்பிள்ளை.. என்றாள் சுஜாதா சந்தோசமாக..
என்ன அத்த சொல்றீங்க.. உண்மையாவா..
ஆமாம் மாப்பிள்ளை.. இப்போ வீட்டுக்கு வாரீங்களா..
ஐயோ அத்த.. நான் இப்போ மும்பை வரை 1 வாரம் ஆபிஸ் கேம்ப் வந்து இருக்கேனே..
நான் வர்றதுக்கு எப்படியும் 1 வாரம் இல்ல 10 நாள் ஆயிடுமே..
சரி மாப்ள.. அப்போ நீங்க வரும்போது வந்து பணத்தை வாங்கிட்டு எங்க பொண்ணை கூட்டிட்டு போங்க மாப்ள..
இல்ல இல்ல.. அத்த.. அப்படி அவ்ளோ நாள் பணத்தை நீங்க வச்சி இருக்க வேண்டாம்..
எங்க வீட்டுக்கு போன் போட்டு சொல்றேன்..
என்னோட தம்பி சிவா வந்து பணத்தை வாங்கிட்டு பூர்ணிமாவை கூட்டிட்டு போவான்.. என்று சொல்லி போனை வைத்தார் மாப்பிள்ளை..