Romance திமிருக்கு மறுபெயர் நீதானே...!
#89
"ஸாரி மச்சி! டெக்னிகல் ப்ராப்லம்! என்கிட்ட இன்னொரு பிளான் இருக்கு அப்படி செய்யலாம்!"

"போடா நாயே! நான் ஏற்கனவே அசிங்கப்பட்டது பத்தலயா இன்னும் அவகிட்ட திட்டு வாங்கனுமா?"
 
"இல்ல மச்சி! கோபப்படாத! எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்! இன்னொருவாட்டி முயற்சி பண்ணி பாக்கலாம்!" என்று கெஞ்சினான்.
 
என்ன இவன் நமக்கு உதவி செய்வதற்கு இவ்வளவு தூரம் கெஞ்சுகிறானே என்று மனதில் தோன்றியது.
 
"சரி தினேஷ் வேற என்ன பண்ணலாம்?"
 
"இனி களத்துல நானே இறங்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்!"
 
"என்னடா சொல்லுறே! நீ என்ன பண்ண போறே?"
 
"அத நீ நாளைக்கு நேர்லயே பாத்துக்கோ" என்று சஸ்பென்ஸுடன் சொன்னான்.
 
"டேய்! பிரச்சனை எதுவும் ஆகிடப்போகுது! என்னனு சொல்லுடா ப்ளீஸ்!"
 
"அதெல்லாம் ஒன்னும் ஆகாது! என்னால இதுக்கு மேல எதுவும் சொல்ல முடியாது!" என்று சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்தான்.
 
நிச்சயம் என்னிடம் இவன் சொல்லமாட்டான் என்று எனக்கு புரிந்தது அதனால் நானும் அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு சென்றேன்.
 
அடுத்தநாள் இவன் என்ன செய்யபோகிறானோ என்ற பயத்துடன் பள்ளிக்கு வந்தேன்.
 
"டேய்! என்னதான் பண்ணபோற? ஒழுங்கா சொல்லுடா!" என்று அவனிடம் கேட்டேன்.
 
"மதியம் சொல்லுறேன்! இப்ப அமைதியா பாடத்தை கவனி" என்று எனக்கே அறிவுரை வழங்கினான்.
 
"எல்லாம் என்னோட நேரம்!" என்று கூறிவிட்டு அதற்கு மேல் அவனிடம் எதுவும் கேட்காமல் அமைதியாக இருந்தேன்.
 
மதியம் வந்தது! சாப்பிட்டுவிட்டு வகுப்பறைக்கு வந்ததும் தினேஷ் என்னிடம் பேசினான்.
 
"மச்சி! ஈவினிங் கிளாஸ் முடிஞ்சதும் ரெடியா இருந்துக்கோ! நாமதான் முதல் ஆளா கிளம்பனும்!”
 
ஏதோ பெரிதாக ப்ளான் செய்திருக்கிறான் என்று புரிந்தது.
 
ஆனால் என்ன நடந்தாலும் சரி என்று அதற்கு ஒப்புக்கொண்டேன்.
 
அன்று மாலை வகுப்புகள் முடிந்தது.
 
மதுமிதா எழுந்து செல்வதற்கு முன்பு என்னை அவசரமாக தினேஷ் எழுப்பினான்.
 
நாங்கள் இருவரும் வெங்கட் கார்த்தியிடம் சொல்லிவிட்டு வேகமாக சைக்கிள் ஸ்டாண்ட் வந்து நின்றோம்.
 
இவன் என்ன செய்ய போகிறான் என்று தினேஷை பார்த்தேன்
 
அவன் பள்ளி கட்டிடத்தையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.
 
"தினேஷ்! இப்பவாச்சும் என்ன ப்ளான்னு சொல்லுடா!?"
 
"ஹ்ம்ம் சொல்றேன்! அவ இப்ப கிளாஸ்ல இருந்து வந்ததும் நான் போயி பேச போறேன்! "
 
"என்னடா பேச போற? எனக்கு ரொம்ப பயமா இருக்கு!"
 
"இப்ப பயந்துகிட்டு இருக்குறதுக்கு நேரம் இல்ல! அதோ பாரு அவ வந்துட்டா!"
 
நான் திரும்பி பார்த்தேன்,.
 
மதுமிதா வேகமாக நடந்து வந்தாள். எனக்கு கை கால்கள் எல்லாம் உதறியது.
 
"மச்சி! நான் வரலடா! நீ போயி பேசு!"
 
"நான்தான் பேச போறேன்! நீ சும்மா கூட வந்து நிக்க போற அவ்வளவு தான்!”
 
“அதான் எப்படிடா?”
 
“அதோ அந்த தூரத்துல ஒரு மரம் இருக்குல!”
 
“ஆமா இருக்கு!”
 
“அந்த மரத்துக்கு பக்கத்துல அவ வந்ததும் நிறுத்தி பேசனும்! அப்போதான் நாம பேசுறது வேறயாருக்கும் தெரியாது!" என்று தினேஷ் சொல்லிவிட்டு என்னுடைய பதிலைக் கூட எதிர்ப்பார்க்காமல் கையை பிடித்து இழுத்து சென்றான்.
 
நானும் அவனுடைய வேகத்திற்கு ஈடு கொடுத்து நடந்து சென்றேன்.
 
நாங்கள் அவள் அருகில் செல்வதற்கும் அவள் அந்த மரத்தின் அருகே வருவதற்கும் சரியாக இருந்தது.
 
நானும் தினேஷும் அவளை வழி மறித்து எதிரே நின்றோம்.
 
திடீரென்று இப்படி செய்ததும் எங்கள் இருவரையும் எரிப்பது போன்ற ஒரு பார்வையுடன் பார்த்தாள்.
 
எனக்கு அடிவயிறு கலக்கியது.
 
"உன்கிட்ட கொஞ்சம் பேசணும்!"
 
தினேஷ்தான் அவளிடம் சொன்னான்.
 
அவள் என்ன பேசணும் என்பது போல் முறைத்துக்கொண்டே என்னிடம் கேட்டாள்.
 
"அய்யோ! நான் எதுவும் பேச வரல! இவன்தான் பேசணும்னு வந்தான்" என்று சொல்லிவிட்டு தரையை பார்த்த படி நின்றேன்.
 
இப்போது தினேஷ் அவளிடம் பேச ஆரம்பித்தான்.
 
"மதுமிதா வர வர உன்னோட திமிர் ரொம்ப அதிகமாதான் போயிட்டு இருக்கு! விக்ரம் ஏதோ தெரியாம உன்னைய அடிச்சுடான்! அதுக்காக நீ இப்படி பண்றதெல்லாம் நல்லாயில்ல!"
 
"என்ன விக்ரம்? ஆள கூட்டிக்கிட்டு வந்து ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்கிறியா?" என்று கேட்டாள்.
 
நான் மெதுவாக தலையை நிமிர்த்தி! இல்லை! என்பது போல் தலை அசைத்தேன்.
 
"ஹே! அவன பாத்து எதுக்கு இப்ப முறைச்சுட்டு இருக்கே? அவன் ஒன்னும் என்னைய கூட்டிட்டு வரல! எதுவா இருந்தாலும் என்கிட்ட பேசு" என்றான் தினேஷ்.
 
"உன்கிட்ட இப்ப என்ன பேசணும்?" என்று கத்தினாள்.
 
"இப்படியெல்லாம் சத்தம் போட்டுட்டு இருக்காத! ஒழுங்கா விக்ரம மன்னிச்சுட்டு போ! டேய் விக்ரம் அவகிட்ட மன்னிப்பு கேளுடா!"
 
"ஸாரி மதுமிதா! என்னைய மன்னிச்சுடு" என்று தயக்கதுடன் சொன்னேன்.
 
அவள் என்னை ஒரு கேவலமான பார்வை பார்த்துவிட்டு தினேஷிடம் பேசினாள்.
 
"மன்னிக்க முடியாது! என்னடா பண்ணுவ?"
 
"என்ன பண்ணுவேனா? அப்புறம் நடக்குறதே வேற!"
 
"என்னடா நடக்கும் அதையும்தான் பாக்குறேன்!"
 
"உன்னைய விக்ரம் திரும்ப அடிப்பான்!"
 
அவன் அப்படி சொன்னதும் மதுமிதா என்னை பார்த்தாள்
 
"டேய்! தினேஷ் சும்மா இருடா! மதுமிதா நான் அப்படில்லாம் பண்ண மாட்டேன்" என்றேன்.
 
இப்போது மதுமிதாவிடம் முன்பு இருந்த வேகம் இல்லை.
 
எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
 
அவளுடைய கண்களில் இருந்து நீர் துளிகள் சொட்டு சொட்டாக கசிந்து தரையை நனைத்தது.
 
நானும் தினேஷும் அடுத்து பேச வார்த்தைகள் வராமல் அவளையே ஒரு வித கலக்கத்தோடு பார்த்தோம்.
 
அந்த அமைதியை கலைக்கும் விதமாக தினேஷ்தான் முதலில் பேசினான்.
 
"பாத்தியா மச்சி! இவளுக்கும் அழுகையெல்லாம் வருது! சரியான திமிரு பிடிச்சவ!"
 
அவன் சொன்ன அடுத்த நொடி! சப்பென்று ஒரு பெரிய சத்தம் கேட்டது.

தினேஷின் கன்னத்தில் மதுமிதா ஓங்கி அறைந்தாள்.
 
பிறகு கோபத்துடன் கண்களை துடைத்துக்கொண்டு வேகமாக அங்கிருந்து நடந்து சென்றாள்.
 
நான் அவள் செல்லும் திசையை ஏக்கத்துடன் பார்த்தேன்.
 
"அய்யோ வலிக்குதே!"
 
தினேஷ் கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு கத்தினான்.
 
"உனக்கு இதெல்லாம் தேவையா? நீ சும்மா மூடிட்டு இருந்துருக்கலாம்!" என்று கிண்டல் செய்தேன்.
 
"டேய்! காமெடி பண்ற நேராம இது! அவ என்னைய அடிச்சத வேற யாரும் பாக்கலையே?"
 
நான் சுற்றி முற்றி பார்த்துவிட்டு “அதெல்லாம் யாரும் பாக்கல...” என்று வாயை திறக்கும் நேரத்தில்தான் சற்று தூரத்தில் கவனித்தேன்.
 
அங்கே வெங்கட்! கார்த்தி! ரம்யா! காயத்ரி! நால்வரும் எங்களையே பார்த்துக்கொண்டிருந்தனர்.
 
நான் உடனே பதற்றத்துடன் பேசினேன்.
 
"மச்சி! நீ அடி வாங்குனது நம்ம ப்ரெண்ட்ஸ் பாத்துட்டாங்க!"
 
"சூப்பர்டா!"
 
அவன் கன்னத்தை தடவியபடி சிரித்தான்.
 
நாங்கள் அவர்களை கவனித்தது தெரிந்ததும் எங்களை நோக்கி நடந்து வந்தனர்.
 
"தினேஷ்! என்னடா இப்படி சிரிக்கிறே? இப்ப என்னடா பண்ணுறது?"
 
"ஒன்னும் கவலைப்படாத மச்சி! நான் பாத்துகிறேன்!" என்று தெளிவாக கூறினான்.
 
அவர்கள் நால்வரும் எங்களிடம் வந்து மதுமிதா எதற்கு தினேஷை அடித்துவிட்டு சென்றாள் என்று வினாவினார்கள்.
 
நான் என்ன சொல்வது என்று புரியாமல் குழம்பி நின்றேன் அதனால் தினேஷ் பேச ஆரம்பித்தான்.
 
"எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க! என்ன நடந்துச்சுன்னு நான் சொல்றேன்!"
 
இப்போது அனைவரும் அமைதியாக தினேஷ் பேசுவதை கவனித்தனர். இவன் என்ன சொல்ல போகிறானோ என்ற பயத்தோடு அமைதியாக இருந்தேன்.
 
நான் அதிகமாக மார்க் வாங்கிய காரணத்தால் என்னுடைய சைக்கிள் டயரை மதுமிதா பஞ்சர் செய்தாள். அதை கேட்பதற்கு வந்த என்னை அடித்துவிட்டு சென்றாள் என்று கூறி சமாளித்தான்.
 
"இதுக்குதான் சைக்கிள் ஸ்டாண்ட்ல நேத்து பம்மிகிட்டு இருந்தியா?"
 
ரம்யா அவளது சந்தேகத்தை வெளிப்படுத்தினாள்.
 
"என்ன பண்ணாலும் அவ திருந்தவே மாட்டா!" என்று காயத்ரி திட்டினாள்.
 
நான் பதில் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தேன்.
 
"ஏன்டா! அவகிட்ட பேச்சு வச்சுக்காத உனக்குதான் ஆபத்துன்னு பல தடவ சொல்லிருக்கேன்! எதுக்குடா இப்படி அடிவாங்கிட்டு இருக்கீங்க?"
 
வெங்கட் கோபத்தில் கொந்தளித்தான்.
 
"ஸாரி மச்சி! இனிமே பாத்து நடந்துக்குறோம்" என்றேன்.
 
"எப்படியோ பாத்து இருந்துகோங்க! நான் வீட்டுக்கு கிளம்புறேன்!"
 
"வெங்கி! நீ எதுவும் வீட்டுக்கு போயி இத பத்தி அவகிட்ட கேட்டுட்டு இருக்காதே."
 
"விக்ரம்! அவளா வந்து என்கிட்ட பேசுற வரைக்கும் நான் பேசவே மாட்டேன்! அதனால இத பத்தி நான் கேக்குறதுக்கு சான்ஸே இல்லடா!"
 
வெங்கி தெளிவுடன் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றான்.
 
அதன் பிறகு இங்கு இருந்த கார்த்திக்கு என்னுடைய நிலைமை புரிந்து அமைதியாக இருந்தான். ஆனால் ரம்யாவும் காயத்ரியும் வாய்க்கு வந்தபடி தொடர்ந்து மதுமிதாவை திட்டிக்கொண்டிருந்தனர்.
 
அது எனக்கு மனதில் சுருக் என்று முள் குத்தியதுபோல வலித்தது. இருந்தாலும் மிகவும் சிரமப்பட்டு என்னை கட்டுப்படுத்திக்கொண்டேன்.
 
ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் தாங்க முடியவில்லை.
 
"ஹே! என்ன நடந்துச்சுன்னு தெரியாம இப்படி பேசாதீங்கடி!" என்று கத்தியே விட்டேன்.
 
நான் இப்படி சத்தம் போட்டதை கேட்டு ரம்யாவும் காயத்ரியும் பயத்துடன் அதிர்ந்து நின்றனர்.
 
தினேஷம் கார்த்தியும் நான் இப்படி சொன்னதை பார்த்து அமைதியாக இருந்தனர்.
 
"என்னடா நடந்துச்சு?"
 
காயத்ரி மிரட்சியுடன் கேட்டாள்.
 
"தினேஷுக்கும் கார்த்திக்கும் முன்னாடியே தெரியும்! உங்ககிட்ட சொல்லாம இருந்தது என்னோட தப்புதான் என்னைய மன்னிச்சுடுங்க!”
 
"டேய் மன்னிப்புல்லாம் கேக்காம என்ன நடந்துச்சுன்னு சீக்கிரம் சொல்லுடா"
 
ரம்யா அவசரப்படுத்தினாள்.
 
அதற்கு மேல் காலம் தாழ்த்தாமல் எனக்கும் மதுமிதாவுக்கும் இடையே நடந்த அனைத்து விஷயங்களையும் ஒன்று விடாமல் கூறி முடித்தேன்.
 
இதை அனைத்தையும் கேட்ட இருவரும் உறைந்து போய் நின்றார்கள்.
 
மேலும் மதுமிதாவின் மீது அவர்களுக்கு திடீரென்று அனுதாபம் ஏற்பட்டது.
 
"பாவம்டி மதுமிதா! இது தெரியாம அவள ரொம்ப தான் திட்டிருக்கோம்!" என்றாள் ரம்யா.
 
"ஆமா ரம்யா! இனிமே அவள எதுவுமே சொல்ல கூடாது!" என்றாள் காயத்ரி.
 
"விக்ரம்! அவ கோபத்தை மாத்துறதுக்கு நாங்க ஹெல்ப் பண்ணுறோம்!" என்று இருவரும் உறுதி அளித்தனர்.
 
இருவரும் புரிந்துக்கொண்டதை நினைத்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.
 
"நீங்க எதுவும் ஹெல்ப் பண்ண வேணாம்! தினேஷ் பண்ணதுக்கே அடி கிடைச்சுருக்கு!" என்று தினேஷை பார்த்தேன்.
 
அவன் அமைதியாக இருந்தான்.
 
"இனிமே எல்லாத்தையும் நானே பாத்துக்குறேன்! நீங்க யாரும் எதுவுமே பண்ண வேணாம்!" என்று உறுதியாக சொன்னேன்.
 
"சரிடா! ஆனா ஏதாச்சும் ஹெல்ப் வேணும்னா கண்டிப்பா கேக்கணும்!" என்றாள் ரம்யா.
 
"ஹ்ம்ம்... இப்போதைக்கு ஒரே ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணுங்க! இப்ப நான் சொன்ன விஷயம் யாருக்கும் தெரிய கூடாது! முக்கியமா வெங்கிக்கு தெரியவே கூடாது!" என்றேன்.

"புரியுதுடா வெங்கட் கிட்ட நாங்க கண்டிப்பா சொல்லவே மாட்டோம்" என்று காயத்ரி சொன்னாள். கூடவே ரம்யாவும் அதற்கு சம்மதம் தெரிவித்தாள்.
 
அதன்பின் இருவரும் அங்கிருந்து என்னை விடைப்பெற்று சென்றனர். கார்த்தியும் எனக்கு ஆறுதலான சில வார்த்தைகளை சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பினான்.
 
இப்போது நானும் தினேஷும் மட்டும்தான் இருந்தோம்.
[+] 3 users Like feelmystory's post
Like Reply


Messages In This Thread
RE: திமிருக்கு மறுபெயர் நீதானே...! - by feelmystory - 19-02-2024, 12:11 AM



Users browsing this thread: 1 Guest(s)