12-02-2024, 01:05 AM
தினேஷ்தான் முதலில் பேச ஆரம்பித்தான்.
"ஹ்ம்ம் சொல்லுடா!"
"இருடா சொல்லுறேன்! இதபத்தி யாருக்கும் தெரியக்கூடாதுடா"
"நான் யாருகிட்டயும் சொல்லமாட்டேன்! நீ தைரியமா சொல்லு" என்று கார்த்தி கூறினான்.
"ஓகே கார்த்தி! டேய் தினேஷ் நீ எதுவுமே பேச மாட்டேங்குறே? உனக்கும்தான் சேத்து சொல்றேன்!"
"நானும் சொல்லமாட்டேன் போதுமா! முதல்ல விஷயத்தை சொல்லுடா" என்று தினேஷ் அலுத்துக்கொண்டான்.
உடனே எனக்கு தைரியம் வந்தது.
முதலில் நான் அவளை விட அதிக மதிப்பெண் வாங்கிய காரணத்தால் அவள் என்னிடம் செய்த சேட்டைகளை பற்றி கூறினேன்.
மேலும் அவளை கையும் களவுமாக பிடிக்கவேண்டும் என்பதற்காகத்தான் சைக்கிள் ஸ்டாண்டில் மறைந்திருந்தேன் எனக் கூறி முடித்தேன்.
இதை கேட்டதும் இருவரும் விழுந்து விழுந்து சிரித்து கேலி செய்தனர்.
"இங்க பாருடா கார்த்தி! நாம ஒரு பிளான் பண்ணா அவ வேற மாதிரி பிளான் பண்ணுறா சரியான திமிரு பிடிச்சவதான்! நம்ம பையன்தான் ரொம்ப பாவம்! என்ன பண்றதுனு தெரியாம ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கான்"
அவன் ஏளனமாக என்னை பார்த்து சிரித்தான்.
"இதுக்காகத்தான் டெய்லி எங்கள ஏமாத்திட்டு போனியா?" என கேட்டுவிட்டு என்றுமே என்னை கிண்டல் செய்யாத கார்த்தியும் சேர்ந்து சிரித்தான்.
எனக்கு மிகுந்த அவமானமாக இருந்தது.
"டேய்! ரெண்டு பேரும் சிரிக்கிறத முதல்ல நிறுத்துங்கடா!"
எரிச்சலுடன் கத்தினேன்.
"நீ சொன்னது செம காமெடியா இருக்குது மச்சி! அப்புறம் எப்படி சிரிக்காம இருக்குறது?" என்று தினேஷ் பதில் அளித்தான்.
"டேய் அங்க என்ன நடந்துச்சுன்னு இன்னும் முழுசாவே சொல்லி முடிக்கல! அதுக்குள்ள ஏன்டா இப்படி சிரிச்சு என்னோட மனச இன்னும் நோகடிக்கிறீங்க!" என்று கத்தினேன்.
இப்போது இருவரும் மெதுவாக சிரிப்பை நிறுத்திவிட்டு என்னை பார்த்தனர்.
"என்னடா சொல்லுற வேற என்ன நடந்துச்சு?"
கார்த்தி அதிர்ச்சியுடன் கேட்டான்.
நான் அமைதியாக இருவரது முகத்தையும் பார்த்தேன்.
"ஹ்ம்ம் சொல்லுடா!"
"இருடா சொல்லுறேன்! இதபத்தி யாருக்கும் தெரியக்கூடாதுடா"
"நான் யாருகிட்டயும் சொல்லமாட்டேன்! நீ தைரியமா சொல்லு" என்று கார்த்தி கூறினான்.
"ஓகே கார்த்தி! டேய் தினேஷ் நீ எதுவுமே பேச மாட்டேங்குறே? உனக்கும்தான் சேத்து சொல்றேன்!"
"நானும் சொல்லமாட்டேன் போதுமா! முதல்ல விஷயத்தை சொல்லுடா" என்று தினேஷ் அலுத்துக்கொண்டான்.
உடனே எனக்கு தைரியம் வந்தது.
முதலில் நான் அவளை விட அதிக மதிப்பெண் வாங்கிய காரணத்தால் அவள் என்னிடம் செய்த சேட்டைகளை பற்றி கூறினேன்.
மேலும் அவளை கையும் களவுமாக பிடிக்கவேண்டும் என்பதற்காகத்தான் சைக்கிள் ஸ்டாண்டில் மறைந்திருந்தேன் எனக் கூறி முடித்தேன்.
இதை கேட்டதும் இருவரும் விழுந்து விழுந்து சிரித்து கேலி செய்தனர்.
"இங்க பாருடா கார்த்தி! நாம ஒரு பிளான் பண்ணா அவ வேற மாதிரி பிளான் பண்ணுறா சரியான திமிரு பிடிச்சவதான்! நம்ம பையன்தான் ரொம்ப பாவம்! என்ன பண்றதுனு தெரியாம ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கான்"
அவன் ஏளனமாக என்னை பார்த்து சிரித்தான்.
"இதுக்காகத்தான் டெய்லி எங்கள ஏமாத்திட்டு போனியா?" என கேட்டுவிட்டு என்றுமே என்னை கிண்டல் செய்யாத கார்த்தியும் சேர்ந்து சிரித்தான்.
எனக்கு மிகுந்த அவமானமாக இருந்தது.
"டேய்! ரெண்டு பேரும் சிரிக்கிறத முதல்ல நிறுத்துங்கடா!"
எரிச்சலுடன் கத்தினேன்.
"நீ சொன்னது செம காமெடியா இருக்குது மச்சி! அப்புறம் எப்படி சிரிக்காம இருக்குறது?" என்று தினேஷ் பதில் அளித்தான்.
"டேய் அங்க என்ன நடந்துச்சுன்னு இன்னும் முழுசாவே சொல்லி முடிக்கல! அதுக்குள்ள ஏன்டா இப்படி சிரிச்சு என்னோட மனச இன்னும் நோகடிக்கிறீங்க!" என்று கத்தினேன்.
இப்போது இருவரும் மெதுவாக சிரிப்பை நிறுத்திவிட்டு என்னை பார்த்தனர்.
"என்னடா சொல்லுற வேற என்ன நடந்துச்சு?"
கார்த்தி அதிர்ச்சியுடன் கேட்டான்.
நான் அமைதியாக இருவரது முகத்தையும் பார்த்தேன்.