12-02-2024, 01:04 AM
“எதுக்குன்னு சரியா தெர்ல! பட் சென்னைல படிக்கும்போது ஒரு சைன்ஸ் எக்சிபிஷனுக்கு அவ போயிருந்தா! அங்க போயிட்டு வந்ததுக்கு அப்புறம் அவளோட முகமெல்லாம் ரொம்ப சோகமா இருந்துச்சுன்னு பெரியப்பா சொன்னாங்க!"
இப்போது என்னுடைய முகமெல்லாம் வேர்த்து உடலில் நடுக்கம் ஏற்ப்பட்டது.
"அதுக்கப்புறம் என்னடா ஆச்சு" கரகரத்த குரலில் கேட்டேன்.
"நீயேண்டா அதுக்கு இப்படி பயந்துகிட்டு கேக்குற?" என்று சிரித்தான்.
"ஒன்னும் இல்ல மேல சொல்லு!"
"அதுக்கு அப்புறம் அவளுக்கு அங்க இருக்கவே பிடிக்கலன்னு சொல்லி ஊருக்கு வந்து படிக்குறேன்னு சொன்னா! அதுனால அப்பாவும் நான் படிக்குற ஸ்கூல்ல சேர்த்து விட்டாங்க!"
"ஹ்ம்ம் சின்ன வயசுல இருந்தே இப்படிதான் மதுமிதா பண்ணுவாளா? ஐ மீன் உன்னைய ஜியோமெட்ரி பாக்ஸ் வச்சு அடிச்சானு சொன்னியே அது மாதிரி?"
"இல்ல விக்ரம்! சென்னைல படிக்கும் போது லீவ் விட்டதும் ஊருக்கு வருவா! அப்போ என்கிட்ட ரொம்ப பாசமா இருப்பா! எனக்கு சாப்பாடுல்லாம் ஊட்டி விடுவா! அண்ணா அண்ணானு ரொம்ப அன்பு காட்டுவா! அது எல்லாமே இங்க வந்து நம்ம ஸ்கூல்ல சேந்ததும் மொத்தமா சேஞ்ச் ஆகிடுச்சு!!
“என்னடா சொல்றே?” என்று அதிர்ந்தேன்.
“ஆமாடா! அவளுக்கு என்னைய சுத்தமா பிடிக்காம போயிருச்சு! அதோட பசங்கள பாத்தாளே அடிச்சு விரட்ட ஆரம்பிச்சுட்டா!"
இதை கேட்டதும் என்னுடைய நெஞ்சில் ஈட்டி பாய்ந்தது போன்ற உணர்வு ஏற்ப்பட்டது.
அப்படியென்றால் அடக்கமாக இருந்த மதுமிதா நான் அடித்தவுடன்தான் அனைவரையும் வெறுக்க ஆரம்பித்திருக்கிறாள்.
குறிப்பாக ஆண்களை கண்டாளே அவளுக்கு ஒரு வித கோபம் வருவதற்கு மூல காரணமே நான்தான் என்று புரிந்தவுடன் எனக்கு பேச்சே வரவில்லை.
சில நொடிகள் அப்படியே மெளனமாக இருந்தேன்.
"டேய் விக்ரம்! என்னாச்சு? பேசுடா!" என்று அவன் என் தோளை பிடித்து உலுக்கியவுடன்தான் நினைவுக்கு வந்தேன்.
"சொல்லு மச்சி!"
"என்ன சொல்றது? நான்தான் எல்லாத்தையும் சொல்லிட்டேனே! நீ ஏன் இப்படி பயந்துபோன மாதிரி இருக்குற?"
"ஒன்னும் இல்ல வெங்கி கொஞ்சம் தலைவலி! அது இருக்கட்டும் அவ இப்படி நடந்துகிறதுக்கு எல்லாம் நீ என்ன காரணம்னு நினைக்குறே?"
நான் அதே பயத்துடன் கேட்டேன்.
இப்போது என்னுடைய முகமெல்லாம் வேர்த்து உடலில் நடுக்கம் ஏற்ப்பட்டது.
"அதுக்கப்புறம் என்னடா ஆச்சு" கரகரத்த குரலில் கேட்டேன்.
"நீயேண்டா அதுக்கு இப்படி பயந்துகிட்டு கேக்குற?" என்று சிரித்தான்.
"ஒன்னும் இல்ல மேல சொல்லு!"
"அதுக்கு அப்புறம் அவளுக்கு அங்க இருக்கவே பிடிக்கலன்னு சொல்லி ஊருக்கு வந்து படிக்குறேன்னு சொன்னா! அதுனால அப்பாவும் நான் படிக்குற ஸ்கூல்ல சேர்த்து விட்டாங்க!"
"ஹ்ம்ம் சின்ன வயசுல இருந்தே இப்படிதான் மதுமிதா பண்ணுவாளா? ஐ மீன் உன்னைய ஜியோமெட்ரி பாக்ஸ் வச்சு அடிச்சானு சொன்னியே அது மாதிரி?"
"இல்ல விக்ரம்! சென்னைல படிக்கும் போது லீவ் விட்டதும் ஊருக்கு வருவா! அப்போ என்கிட்ட ரொம்ப பாசமா இருப்பா! எனக்கு சாப்பாடுல்லாம் ஊட்டி விடுவா! அண்ணா அண்ணானு ரொம்ப அன்பு காட்டுவா! அது எல்லாமே இங்க வந்து நம்ம ஸ்கூல்ல சேந்ததும் மொத்தமா சேஞ்ச் ஆகிடுச்சு!!
“என்னடா சொல்றே?” என்று அதிர்ந்தேன்.
“ஆமாடா! அவளுக்கு என்னைய சுத்தமா பிடிக்காம போயிருச்சு! அதோட பசங்கள பாத்தாளே அடிச்சு விரட்ட ஆரம்பிச்சுட்டா!"
இதை கேட்டதும் என்னுடைய நெஞ்சில் ஈட்டி பாய்ந்தது போன்ற உணர்வு ஏற்ப்பட்டது.
அப்படியென்றால் அடக்கமாக இருந்த மதுமிதா நான் அடித்தவுடன்தான் அனைவரையும் வெறுக்க ஆரம்பித்திருக்கிறாள்.
குறிப்பாக ஆண்களை கண்டாளே அவளுக்கு ஒரு வித கோபம் வருவதற்கு மூல காரணமே நான்தான் என்று புரிந்தவுடன் எனக்கு பேச்சே வரவில்லை.
சில நொடிகள் அப்படியே மெளனமாக இருந்தேன்.
"டேய் விக்ரம்! என்னாச்சு? பேசுடா!" என்று அவன் என் தோளை பிடித்து உலுக்கியவுடன்தான் நினைவுக்கு வந்தேன்.
"சொல்லு மச்சி!"
"என்ன சொல்றது? நான்தான் எல்லாத்தையும் சொல்லிட்டேனே! நீ ஏன் இப்படி பயந்துபோன மாதிரி இருக்குற?"
"ஒன்னும் இல்ல வெங்கி கொஞ்சம் தலைவலி! அது இருக்கட்டும் அவ இப்படி நடந்துகிறதுக்கு எல்லாம் நீ என்ன காரணம்னு நினைக்குறே?"
நான் அதே பயத்துடன் கேட்டேன்.