Romance திமிருக்கு மறுபெயர் நீதானே...!
#69
திமிருக்கு மறுபெயர் நீதானே...!

5


நான் எவ்வளவு பெரிய தவறை செய்துவிட்டேன். மதுமிதாவிடம் இனி எப்படி பேச போகிறேன் என்று புரியாமல் தயக்கத்துடன் அவளது முகத்தை பார்த்தேன்.

அவளுடைய கோபம் கொஞ்சம் கூட குறையவில்லை என்பதை அவளது கண்களே எனக்கு காட்டிக்கொடுத்தது.
 
இப்போதும் பேசவில்லை என்றால் பிரச்சனை வேறு விதமாக சென்றுவிடும் என்பதால் பேசிவிடலாம் என்று ஆரம்பித்தேன்.
 
"ஹே... மதுமிதா நீதான் அந்த பொண்ணுன்னு சத்தியமா எனக்கு தெரியாது! என்னோட அப்பாவுக்கு ஆபீஸ்ல ட்ரேன்ஸ்பர் பண்ணிடாங்க! அதுனாலதான் இந்த ஊருக்கு வந்தோம்! நான் உன்னைய பழிவாங்கணும்னு எதுவுமே பண்ணல!”
 
"போடா! நீ எதுவும் பேசாத! ஃபர்ஸ்ட் டே உன்னைய இங்க பாத்ததுமே, எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வந்துச்சு! அதை கஷ்டப்பட்டு அடக்கிட்டு இருந்தேன்! ஆனா என்னையவிட அதிகமா மார்க் வாங்கி அசிங்கப்பட வச்சுட்ட! அதுக்கு என்ன பண்றதுன்னு தெரியாமதான் இப்படியெல்லாம் உனக்கு தொல்லை கொடுத்துட்டு இருந்தேன்! அதையும் இப்ப கண்டுபிடிச்சுட்டே!" என்று வருத்தம் அடைந்தாள்.
 
அவள் முதல்நாள் எதற்காக என்னை பார்த்து முறைத்தாள் என்று இப்போதுதான் எனக்கு நன்றாக புரிந்தது.
 
"ப்ளிஸ் மதுமிதா இனிமே நாம ப்ரண்ட்ஸா இருக்கலாம் என்னைய மன்னிச்சுடு" என்று கெஞ்சினேன்.
 
“என்னது ப்ரெண்ட்ஸா? அதெல்லாம் இனிமே நடக்காது!”
“இனிமே நடக்காதா? என்னடி சொல்றே?”
 
“ஆமா! எல்லாமே நாலு வருசத்துக்கு முன்னாடியே முடிஞ்சு போச்சு”
 
“ப்ளீஸ் மதுமிதா ஏன் இப்படியெல்லாம் பேசுறே? நீதான் அந்த பொண்ணுன்னு இப்ப தெரிஞ்சதும் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு”
 
“ரொம்ப சீன் போடாத விக்ரம்! கண்காட்சில என் பக்கத்துல உன்னைய பாத்ததும் பேசணும்னு தோனுச்சு! அப்பறம் ப்ராஜெக்ட் பாத்ததும் உன்கிட்ட எவ்வளவு ஆசையா பேசலாம்னு வந்தேன் தெரியுமா? ஆனா நீ என்னைய புரிஞ்சுக்காம மனசை காயப்படுத்துனே! அதுனாலதான் அந்த வயரை எடுத்து வச்சேன்! அப்புறமா அந்த தப்ப உணர்ந்து எனக்கு கொடுத்த ப்ரைஸ உன்கிட்ட கொடுக்க வந்தேன்! அதையும் நீ புரிஞ்சுக்காம அடிச்சு என்னைய அசிங்கப்படுத்தி உன்னோட ஆத்திரத்தை தீர்த்துகிட்டே”
 
மதுமிதா கண்களை துடைத்துக்கொண்டு கூறினாள்.
 
"இல்ல மதுமிதா! நான் எல்லாமே லேட்டாதான் புரிஞ்சுகிட்டேன்! என்னைய மன்னிச்சுடு ப்ளீஸ்" என்று கெஞ்சினேன்.
 
என்னுடைய கெஞ்சலை பொருட்படுத்தாமல் மேலும் பேசத்தொடங்கினாள்.
 
"எனக்குதான் முதல் பரிசுன்னு அறிவிக்கும்போது நான் என்ன பண்ணேன்னு உனக்கு தெரியுமா விக்ரம்?
 
"என்ன பண்ணுனே?
 
நான் துயரம் நீங்காமல் கேட்டேன்.
[+] 2 users Like feelmystory's post
Like Reply


Messages In This Thread
RE: திமிருக்கு மறுபெயர் நீதானே...! - by feelmystory - 12-02-2024, 01:04 AM



Users browsing this thread: 1 Guest(s)