18-01-2024, 06:24 PM
யாருப்பா நீ.. இங்க கக்கூஸ்கிட்ட வந்து உக்காந்து இருக்க.. வித் அவுட்டா.. என்று மிரட்டலாய் கேட்டார் டி டி ஆர்
வித் அவுட்டா.. நான்தான் பேண்ட் சட்டை போட்டு இருக்கேனே சார் என்றான் ஆனந்த் ராஜ்
அந்த வித் அவுட் இல்லப்பா.. டிக்கெட் இல்லாம பயணம் பண்ணுவாங்களே.. அந்த வித் அவுட்டான்னு கேட்டேன்
ஆமாங்க அவசரத்துல ஓடி வந்து ரயில் ஏறினேன் சார் டிக்கெட் எடுக்க நேரம் இல்ல.. என்று நியாயமாக சொன்னான் ஆனந்த் ராஜ்
அதெல்லாம் எனக்கு தெரியாது.. திருட்டு ரயில் ஏறி இருக்க..
அதனால அடுத்த ஸ்டேஷன் வந்ததும் ரயில்வே போலீஸ்கிட்ட உன்னை புடிச்சி கொடுத்துடுவேன்
அவங்க உன்னை ஜெயில்ல போட்டு கம்பி என்ன வைப்பாங்க என்று சொல்லி விட்டு டிக்கெட் டிக்கெட் என்று அடுத்தடுத்த கம்பார்ட்மெண்ட்டுக்கு சென்று டிக்கெட் பரிசோதிக்க ஆரம்பித்தார்
ரயிலை விட்டு இறங்கி தப்பித்து விடலாமா என்றுகூட ஒரு கணம் யோசித்தான் ஆனந்த் ராஜ்
ஆனால் ஓடும் ரயிலில் ஏறுவது எளிது.. ஆனால் ஓடும் ரயிலில் இருந்து குதிப்பது கடினம் + ஆபத்து என்று நினைத்தான் ஆனந்த் ராஜ்
சரி டி டி ஆர் மற்ற பயணிகளை செக் பண்ணிவிட்டு அப்படியே தன்னை மறந்து விடுவார் என்று எண்ணினான் ஆனந்த் ராஜ்
ஆனால் டி டி ஆர் நியாபகமாக அடுத்த ஸ்டேஷன் வந்ததும் ஆனந்த் ராஜ்ஜை ரயில்வே போலீசில் ஒப்படைத்தார்
ரயில்வே போலீஸ் ஆனந்த் ராஜ்ஜை ஜெயிலில் வைத்து நெய்ய புடைத்தார்கள்
அடி பின்னி எடுத்து விட்டார்கள்
அடித்தாங்க முடியாத ஆனந்த் ராஜ் நைசாக ஜெயிலில் இருந்து தப்பி ஓடிவிட்டான்
அப்படி தப்பி ஓடியவன் நேராக அருகில் இருந்த ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றான்
அங்கே ஸ்டேஷன் மாஸ்டர் மட்டும் இருந்தார்
அவரை சென்று சந்தித்தான்
சார் நான் டி டி ஆர் மச்சான் ஆனந்த் ராஜ் துபாய்ல இருந்து இப்போதான் இந்தியாவுக்கு வந்தேன்
எங்க அக்கா கீதாவை பார்த்து இந்த நகை பணத்தையெல்லாம் குடுத்துட்டு போலாம்னு வந்தேன் என்று அந்த திருட்டு நகைகளை ஸ்டேஷன் மாஸ்டரிடம் காட்டினான்
எங்க மாமா டி டி ஆர் அட்ரஸ் மறந்து போச்சி..
கொஞ்சம் அவர் அட்ரஸ் குடுக்க முடியுமா என்று நைசாக கேட்டான்
ஸ்டேஷன் மாஸ்டர் அவன் காட்டிய நகைகளையும் பணத்தையும் பார்த்து அவன் சொல்வது உண்மை என்று நம்பினார்
அவனுக்கு டி டி ஆரின் அட்ரெஸ்ஸை கொடுத்தார்
வித் அவுட்டா.. நான்தான் பேண்ட் சட்டை போட்டு இருக்கேனே சார் என்றான் ஆனந்த் ராஜ்
அந்த வித் அவுட் இல்லப்பா.. டிக்கெட் இல்லாம பயணம் பண்ணுவாங்களே.. அந்த வித் அவுட்டான்னு கேட்டேன்
ஆமாங்க அவசரத்துல ஓடி வந்து ரயில் ஏறினேன் சார் டிக்கெட் எடுக்க நேரம் இல்ல.. என்று நியாயமாக சொன்னான் ஆனந்த் ராஜ்
அதெல்லாம் எனக்கு தெரியாது.. திருட்டு ரயில் ஏறி இருக்க..
அதனால அடுத்த ஸ்டேஷன் வந்ததும் ரயில்வே போலீஸ்கிட்ட உன்னை புடிச்சி கொடுத்துடுவேன்
அவங்க உன்னை ஜெயில்ல போட்டு கம்பி என்ன வைப்பாங்க என்று சொல்லி விட்டு டிக்கெட் டிக்கெட் என்று அடுத்தடுத்த கம்பார்ட்மெண்ட்டுக்கு சென்று டிக்கெட் பரிசோதிக்க ஆரம்பித்தார்
ரயிலை விட்டு இறங்கி தப்பித்து விடலாமா என்றுகூட ஒரு கணம் யோசித்தான் ஆனந்த் ராஜ்
ஆனால் ஓடும் ரயிலில் ஏறுவது எளிது.. ஆனால் ஓடும் ரயிலில் இருந்து குதிப்பது கடினம் + ஆபத்து என்று நினைத்தான் ஆனந்த் ராஜ்
சரி டி டி ஆர் மற்ற பயணிகளை செக் பண்ணிவிட்டு அப்படியே தன்னை மறந்து விடுவார் என்று எண்ணினான் ஆனந்த் ராஜ்
ஆனால் டி டி ஆர் நியாபகமாக அடுத்த ஸ்டேஷன் வந்ததும் ஆனந்த் ராஜ்ஜை ரயில்வே போலீசில் ஒப்படைத்தார்
ரயில்வே போலீஸ் ஆனந்த் ராஜ்ஜை ஜெயிலில் வைத்து நெய்ய புடைத்தார்கள்
அடி பின்னி எடுத்து விட்டார்கள்
அடித்தாங்க முடியாத ஆனந்த் ராஜ் நைசாக ஜெயிலில் இருந்து தப்பி ஓடிவிட்டான்
அப்படி தப்பி ஓடியவன் நேராக அருகில் இருந்த ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றான்
அங்கே ஸ்டேஷன் மாஸ்டர் மட்டும் இருந்தார்
அவரை சென்று சந்தித்தான்
சார் நான் டி டி ஆர் மச்சான் ஆனந்த் ராஜ் துபாய்ல இருந்து இப்போதான் இந்தியாவுக்கு வந்தேன்
எங்க அக்கா கீதாவை பார்த்து இந்த நகை பணத்தையெல்லாம் குடுத்துட்டு போலாம்னு வந்தேன் என்று அந்த திருட்டு நகைகளை ஸ்டேஷன் மாஸ்டரிடம் காட்டினான்
எங்க மாமா டி டி ஆர் அட்ரஸ் மறந்து போச்சி..
கொஞ்சம் அவர் அட்ரஸ் குடுக்க முடியுமா என்று நைசாக கேட்டான்
ஸ்டேஷன் மாஸ்டர் அவன் காட்டிய நகைகளையும் பணத்தையும் பார்த்து அவன் சொல்வது உண்மை என்று நம்பினார்
அவனுக்கு டி டி ஆரின் அட்ரெஸ்ஸை கொடுத்தார்