25-12-2023, 12:09 AM
"டேய்! என்னைய வச்சு விளையாடுறியா ?"
நான் அவனை பார்த்து கத்தினேன்.
"அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை மச்சி" என்று தினேஷ் சிரித்தான்.
அது எனக்கு மேலும் எரிச்சல் அடைய செய்தது.
"ப்ளீஸ்! விக்ரம் இத நீ செஞ்சே ஆகணும்! அப்பதான் எல்லாருக்கும் நல்லது!”
காயத்ரியும் ரம்யாவும் என்னிடம் கெஞ்சினார்கள்.
"ஹே! ரம்யா! என்ன இப்படி சொல்லுறே? பசங்களுக்குதான் பிரச்சனைன்னு நினைச்சேன்! உங்ககிட்டயும் அவ கோபப்படுவாளா?"
"ஆமா விக்ரம்! நாங்களே போயி பேசுனாலும் எங்க யார்கூடயும் அவ பேசவே மாட்டா! கேக்குற கேள்விக்கு ஒரே ஒரு வார்த்தையில் பதில் சொல்லிட்டு அப்புறம் எங்கள கண்டுக்கவே மாட்டா” என்றாள் ரம்யா.
“அப்போ அவளுக்கு ப்ரண்ட்ஸ் யாரும் இல்லையா?”
“யாரும் இல்ல... எப்பவும் தனியா வருவா! தனியாவே சாப்பிடுவா! அப்புறம் தனியாவே வீட்டுக்கு கிளம்பி போயிடுவா!" என்றாள் காயத்ரி.
எனக்கு இப்போது மதுமிதா மீது இனம் புரியாத கவலை வந்தது.
அவள் ஏதோ ஒரு பிரச்சனையில் சிக்கி தவிக்கிறாள்.
அதனால்தான் எல்லோரிடமும் இப்படி நடந்துக்கொள்கிறாள் என்று மனதில் தோன்றியது.
இப்படி நினைக்கும்போதே வெங்கட் என்னிடம் பேசத்தொடங்கினான்.
"மச்சி! என்னோட தங்கச்சி அவளா வந்து என்கிட்டே பேசுவானு ரொம்ப நாளா... இல்ல இல்ல ரொம்ப வருஷமா காத்துட்டு இருக்குறேன்! அதுக்கு நீ இந்த உதவிய பண்ணியே ஆகணும்டா! இல்லனா அவ மாறவே மாட்டா ப்ளீஸ்டா" என்று என்னிடம் கெஞ்சினான்.
நான் அவனை பார்த்து கத்தினேன்.
"அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை மச்சி" என்று தினேஷ் சிரித்தான்.
அது எனக்கு மேலும் எரிச்சல் அடைய செய்தது.
"ப்ளீஸ்! விக்ரம் இத நீ செஞ்சே ஆகணும்! அப்பதான் எல்லாருக்கும் நல்லது!”
காயத்ரியும் ரம்யாவும் என்னிடம் கெஞ்சினார்கள்.
"ஹே! ரம்யா! என்ன இப்படி சொல்லுறே? பசங்களுக்குதான் பிரச்சனைன்னு நினைச்சேன்! உங்ககிட்டயும் அவ கோபப்படுவாளா?"
"ஆமா விக்ரம்! நாங்களே போயி பேசுனாலும் எங்க யார்கூடயும் அவ பேசவே மாட்டா! கேக்குற கேள்விக்கு ஒரே ஒரு வார்த்தையில் பதில் சொல்லிட்டு அப்புறம் எங்கள கண்டுக்கவே மாட்டா” என்றாள் ரம்யா.
“அப்போ அவளுக்கு ப்ரண்ட்ஸ் யாரும் இல்லையா?”
“யாரும் இல்ல... எப்பவும் தனியா வருவா! தனியாவே சாப்பிடுவா! அப்புறம் தனியாவே வீட்டுக்கு கிளம்பி போயிடுவா!" என்றாள் காயத்ரி.
எனக்கு இப்போது மதுமிதா மீது இனம் புரியாத கவலை வந்தது.
அவள் ஏதோ ஒரு பிரச்சனையில் சிக்கி தவிக்கிறாள்.
அதனால்தான் எல்லோரிடமும் இப்படி நடந்துக்கொள்கிறாள் என்று மனதில் தோன்றியது.
இப்படி நினைக்கும்போதே வெங்கட் என்னிடம் பேசத்தொடங்கினான்.
"மச்சி! என்னோட தங்கச்சி அவளா வந்து என்கிட்டே பேசுவானு ரொம்ப நாளா... இல்ல இல்ல ரொம்ப வருஷமா காத்துட்டு இருக்குறேன்! அதுக்கு நீ இந்த உதவிய பண்ணியே ஆகணும்டா! இல்லனா அவ மாறவே மாட்டா ப்ளீஸ்டா" என்று என்னிடம் கெஞ்சினான்.