20-12-2023, 09:26 PM
“தினேஷ்! இந்த பெஞ்ச்ல உட்காரலாம்டா!”
"டேய்! அதெல்லாம் முடியாது! லாஸ்ட் பெஞ்லதான் உட்காரணும்! முதல் பெஞ்ச் எனக்கு பிடிக்காது!"
இவனை எப்படியாவது சமாதானம் செய்து இங்கே உட்காரவைக்க வேண்டும் என பேசினேன். நான் எது சொன்னாலும் முடியவே முடியாது என்று தீர்மானமாக இருந்தான்.
நாங்கள் இப்படி வாக்குவாதம் செய்துகொண்டிருந்த நேரத்தில் வேறு சில மாணவர்கள் கடைசி பெஞ்சில் அமர்ந்து இடத்தை நிரப்பினார்கள்.
எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.
அப்படியே தினேஷின் முகத்தை பார்த்தேன் என்னை முறைத்து கொண்டு இருந்தான்.
"விடு மச்சி! நாம இங்கதான் உட்காரணும்னு விதி ஏற்கனவே முடிவு பண்ணிருச்சு! டேக் இட் ஈசி!"
"நீ முடிவு பண்ணிட்டு விதி மேல பழி போடாத நாயே!" என்று சொல்லிவிட்டு கோபமாக முதல் பெஞ்சில் அமர்ந்தான்.
நானும் அவன் அருகில் சென்று அமர்ந்துக்கொண்டேன். நீண்ட நேரம் அவன் என்னிடம் பேசாமல் அமைதியாக இருந்தான். அவன் அருகில் இருந்த இரண்டு மாணவர்களும் யார் என்று என்னை விசாரித்தார்கள்.
அவர்களில் ஒருவன் பெயர் வெங்கட்!
இன்னொருவன் பெயர் கார்த்தி!
இருவரும் என்னிடம் நன்றாக பேசினார்கள். நானும் அவர்களிடம் அறிமுகம் செய்துக்கொண்டேன்.
அதன்பின் தினேஷும் கோபத்தை மறந்து என்னை மற்ற மாணவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தான்.
பெண்களிடம் மட்டும் அறிமுகம் செய்து வைக்கவில்லை அது சற்று நிம்மதியாகத்தான் இருந்தது.
இப்படி நாங்கள் பேசிக்கொண்டு இருந்த வேளையில்...
திடீரென்று!
வகுப்பிற்குள் மின்னல் வேகத்தில்!
ஒரு பெண் நுழைந்தாள்!
அவளது வட்டமான வெண்ணிற முகத்தில் இருக்கும் இரண்டு கண்களும் என்னை அப்படியே கவர்ந்து இழுத்தது.
அவள் மெரூன் கலரில் சீருடைதான் அணிந்திருந்தாலும் எனக்கு மட்டும் தேவதைபோல் காட்சி அளித்தாள்.
"டேய்! அதெல்லாம் முடியாது! லாஸ்ட் பெஞ்லதான் உட்காரணும்! முதல் பெஞ்ச் எனக்கு பிடிக்காது!"
இவனை எப்படியாவது சமாதானம் செய்து இங்கே உட்காரவைக்க வேண்டும் என பேசினேன். நான் எது சொன்னாலும் முடியவே முடியாது என்று தீர்மானமாக இருந்தான்.
நாங்கள் இப்படி வாக்குவாதம் செய்துகொண்டிருந்த நேரத்தில் வேறு சில மாணவர்கள் கடைசி பெஞ்சில் அமர்ந்து இடத்தை நிரப்பினார்கள்.
எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.
அப்படியே தினேஷின் முகத்தை பார்த்தேன் என்னை முறைத்து கொண்டு இருந்தான்.
"விடு மச்சி! நாம இங்கதான் உட்காரணும்னு விதி ஏற்கனவே முடிவு பண்ணிருச்சு! டேக் இட் ஈசி!"
"நீ முடிவு பண்ணிட்டு விதி மேல பழி போடாத நாயே!" என்று சொல்லிவிட்டு கோபமாக முதல் பெஞ்சில் அமர்ந்தான்.
நானும் அவன் அருகில் சென்று அமர்ந்துக்கொண்டேன். நீண்ட நேரம் அவன் என்னிடம் பேசாமல் அமைதியாக இருந்தான். அவன் அருகில் இருந்த இரண்டு மாணவர்களும் யார் என்று என்னை விசாரித்தார்கள்.
அவர்களில் ஒருவன் பெயர் வெங்கட்!
இன்னொருவன் பெயர் கார்த்தி!
இருவரும் என்னிடம் நன்றாக பேசினார்கள். நானும் அவர்களிடம் அறிமுகம் செய்துக்கொண்டேன்.
அதன்பின் தினேஷும் கோபத்தை மறந்து என்னை மற்ற மாணவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தான்.
பெண்களிடம் மட்டும் அறிமுகம் செய்து வைக்கவில்லை அது சற்று நிம்மதியாகத்தான் இருந்தது.
இப்படி நாங்கள் பேசிக்கொண்டு இருந்த வேளையில்...
திடீரென்று!
வகுப்பிற்குள் மின்னல் வேகத்தில்!
ஒரு பெண் நுழைந்தாள்!
அவளது வட்டமான வெண்ணிற முகத்தில் இருக்கும் இரண்டு கண்களும் என்னை அப்படியே கவர்ந்து இழுத்தது.
அவள் மெரூன் கலரில் சீருடைதான் அணிந்திருந்தாலும் எனக்கு மட்டும் தேவதைபோல் காட்சி அளித்தாள்.