16-12-2023, 04:15 PM
ஆனந்த் ராஜின் பிளாஷ் பேக்
ஆனந்த் ராஜ் ஒரு பெரிய திருடன்..
ஒரு வீட்டில் பணம் நகை எல்லாம் கொள்ளை அடிக்கிறான்..
அந்த வீட்டில் இருந்தவர்கள் திருடன் திருடன்.. என்று கத்திகொண்டே ஆனந்த் ராஜை துரத்துகிறார்கள்..
அவர்களிடம் சிக்கினால் தன்னை சின்னாபின்னம் ஆக்கிவிடுவார்கள் என்று பயந்த ஆனந்த் ராஜ் வேகமாக ஓடுகிறான்..
ஒரு ரவியில்வே டிராக் அருகில் ஓடுகிறான்..
அப்போது ஒரு ரயில் வேகமாக அந்த ரயில் டிராக்கில் வருகிறது..
அதில் சட்ரென்று தொத்தி ஏறுகிறான் ஆனந்த் ராஜ்
ரயில் படுவேகமாக ஓடவே.. அவனை துரத்தி வந்தவர்களால் அந்த ரயிலில் என்ற முடியவில்லை..
ஆனந்த் ராஜ் சின்ன வயதில் ஸ்கூல் படிக்கும்போதில் இருந்தே செம ஸ்போர்ட்ஸ் மேன்
அதிவேக ஓட்ட பந்தயத்தில் முதலிடம் வந்து பல பரிசுகள் வாங்கி இருக்கிறான்..
அவன் வீட்டில் மெடல் பரிசு கோப்பைகள் எல்லாம் எக்கச்சக்கமாக குவிந்து கிடைக்கும்
அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரிடம் கூட மெடல் வாங்கி இருக்கிறான்..
காரணம் அவன் அப்பா ஒரு ஸ்போர்ட்ஸ்மென்..
அவனை தினமும் அதிகாலையில் எழுப்பிவிட்டு ஓடுவதற்கு கிரவுண்டுக்கு கூட்டிக்கொண்டு போய் பிராக்டீஸ் கொடுப்பார்
அவருடைய உற்சாகத்தால்தான் ஆனந்த் ராஜ் ஸ்கூல் படிக்கும்போது மிக சிறந்த ஓட்டப்பந்தய வீரனாக திகழ்ந்தான்..
அப்படி ஓடி பிராக்டீஸ் பண்ணியது.. இன்று துரத்தி வந்தவர்களிடம் இருந்து தப்பி ஓடும் ரயிலில் வேகமாக ஏற உதவியது ஆனந்த் ராஜுக்கு ரொம்ப பெருமையாக இருந்தது..
பணம் மற்றும் நகை அடங்கிய ஜெர்கின் பையுடன் ரயிலுக்குள் நுழைந்தான்..
அந்த ரயில் செம கூட்டமாக இருந்தது..
அவனுக்கு உக்கார இடமே இல்லை..
நொந்து போன ஆனந்த் ராஜ் நேராக ரயில் கக்கூஸ் அருகில் சென்று அங்கே ஒரு மூலையில் சென்று அமர்ந்தான்..
அப்போது தான் டிக்கட் டிக்கட்.. என்று டி.டி.ஆர் அந்த பக்கமாக சத்தம் கொடுத்து கொண்டே வந்தார்