Thread Rating:
  • 2 Vote(s) - 2.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
தண்ணியெல்லாமா ஆர்டர் பண்ணனும் என்று நினைத்து கொண்டே சாப்பிட ஆரம்பித்தாள் யமுனா

ஆவலாய் எடுத்த ஐட்டம் எதையும் முழுவதுமாய் அவளால் சாப்பிட முடியவில்லை

சிக்கன் பீசில் லேசாய் கிள்ளி சாப்பிட்டாள்

எராவில் ஒரு சின்ன பீஸ்

சப்பாத்தியில் பாதி

நூடுல்ஸ் கொஞ்சம்

வெள்ளை சாதத்தில் மீன் குழம்பு ஊத்தி கொஞ்சம்

அவளுக்கு டேஸ்ட் சுத்தமாக பிடிக்கவே இல்லை

நம்ம ஊரு டேஸ்ட்க்கும் இங்கே மலேஷியா உணவு சுவைக்கும் சம்பந்தமே இல்லை

ரொம்ப கண்றாவியாக இருந்தது

இருவரும் சாப்பிட்டு முடித்தார்கள்

பில் பே பண்ண போனார்கள்

விஷ்ணு சாப்பிட்ட சப்பாத்திக்கும் சிக்கன் கிரேவிக்கும் 3 வெள்ளிதான் பில் வந்தது

அதாவது நமது இந்திய பணத்திற்கு 50 அல்லது 60 ரூபாய் வரும்

யமுனாவுக்கு தனி பில் போட்டார்கள்

150 வெள்ளி என்று காட்டியது

ஓ இவ்ளோ சாப்பிட்டும் வெறும் 150 ரூபாய்தானா என்று நினைத்து சந்தோசப்பட்டு கொண்டாள் யமுனா

விஷ்ணு 153 வெள்ளி கேஷ் கவுண்ட்டரில் இருவருக்கும் சேர்த்து கட்டினான்

இருவரும் ரெஸ்டாரண்ட் விட்டு வெளியே வந்தார்கள்

அண்ணா நான் சாப்பிட்டது வெறும் 150 ரூபாய் மட்டும்தானா..

நீ வெறும் 3 ரூபாய்க்குத்தான் சாப்பிட்டு இருக்க

நம்ம ஊரு டேஸ்ட் இல்லனாலும் 3 ரூபாய்க்கு சப்பாத்தி கிரேவி ரொம்ப சீப்தாண்ணா.. என்று சொல்லி கொண்டே அவனோடு வெளியே நடந்து வந்தாள்

யமுனா.. மலேஷியா வெள்ளியும் இந்தியா ரூபாயும் ஒரே வேல்யூ இல்ல

1 வெள்ளி 18 ரூபாய்க்கு சமம்

நான் சாப்பிட்ட 3 வெள்ளி நம்ம ஊரு 50 ரூபாய்க்கு சமம்

ஐயோ அண்ணா அப்படியா

அப்படின்னா நான் 150 வெள்ளிக்கு சாப்பிட்டு இருக்கேனே

இந்திய மதிப்பு ரூபாய் எவ்ளோ அண்ணா.. பயந்து கொண்டே கேட்டாள்

2595.20 ரூபாய் என்றான் விஷ்ணு

அதை கேட்டதும் யமுனாவுக்கு மயக்கமே வந்து விடும் போல இருந்தது

காலை சிற்றுண்டிக்கே இவ்ளோவா..

இதுக்கே பயந்துட்டா எப்படி

தண்ணி வேணுமான்னு கேட்டேனே..

ஆமாண்ணா.. அதுக்கென்ன இப்போ

அந்த ஒரு கிளாஸ் தண்ணி 1 வெள்ளி என்றான்

அவ்ளோதான் யமுனா உண்மையிலேயே தடுமாறி மயங்கி அவன் மேல் விழுந்தாள்

தொடரும் 75
[+] 3 users Like Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by Vandanavishnu0007a - 25-10-2023, 03:52 PM



Users browsing this thread: 5 Guest(s)