Thread Rating:
  • 2 Vote(s) - 2.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
அடுத்து இருவரும் ஒரு ஹோட்டலுக்கு போனார்கள் 

மலேசியாவில் ஹோட்டல் என்று சொன்னால் யாருக்கும் சற்றென்று புரியாது தெரியாது 

ரெஸ்ட்டாரண்ட் என்று சொல்வார்கள் அல்லது சாப்பாட்டு கடை என்று சொல்வார்கள் 

சின்ன குடிசை கடை ஹோட்டல் என்றால் கூட அது ரெஸ்ட்டாரண்ட் தான் 

விஷ்ணு யமுனாவை ஒரு சின்ன ஹோட்டலுக்குள் அழைத்து சென்றான் 

காலைலயே சிக்கன் மட்டன் மீன் நண்டு காடை கவுதாரி நூடுல்ஸ் பிரியாணி பிரைடு ரைஸ் சிக்கன் பிரை சிக்கன் வறுவல் என அனைத்து ஐட்டமும் செய்து வைத்து இருந்தார்கள் 

எல்லா உணவு வகைகளும் ஒரு பெரிய டிஸ்பிளேவில் வைத்து இருந்தார்கள் 

நம்ம ஊரு பெரிய டின்னர் பார்டிகளில் வைக்கும் பப்பட் பப்பே சிஸ்டம் போல இருந்தது 

யமுனா ஒரு எம்டி பிளேட் எடுத்துக்க என்றான் விஷ்ணு 

விஷ்ணுவும் ஒரு எம்டி பிளேட் எடுத்து கொண்டான் 

என்னவேணுமோ எடுத்துக்கோ என்று சொல்லி விஷ்ணு ஒரே ஒரு சப்பாத்தியும் சிக்கன் கிரேவி மட்டும் தன் தட்டில் போட்டு கொண்டான் 

யமுனாவுக்கு அந்த அத்தனை ஐட்டங்களை அந்த அதிகாலையில் பார்க்க வாய் ஊறியது 

அவள் தட்டில் எல்லா ஐட்டத்திலும் ரெண்டு ரெண்டாக எடுத்து போட்டு கொண்டாள் 

சிக்கன் பீஸ் ஒன்னு ஒன்னும் பெருசு பெருசாக இருந்தது 

இருவரும் ஒரு டேபிளில் எதிர் எதிரே அமர்ந்தார்கள் 

டேபிள் துடைப்பவன் அண்ணே.. தண்ணி வைக்கவா வேண்டாமா.. என்று கேட்டான் 

அதை பார்த்து யமுனா ரொம்பவும் ஆச்சரிய பட்டாள் 

நம்ம ஊர் சர்வர்கள் சாப்பாடு ஆர்டர் பண்ணுவதற்கு முன்பாக கிளாசில் தண்ணீர் முதலில் வைத்து விட்டு தான் அடுத்து என்ன சாப்பிடுகிரோம் என்று கேட்டு ஆர்டர் எடுப்பார்கள் 

இங்கே என்னடான்னா தண்ணி வேணுமான்னு லாஜிக் இல்லாம கேக்குறானே என்று யோசித்தாள் யமுனா 

ரெண்டு தண்ணி கொண்டு வான்னு விஷ்ணு ஆர்டர் பண்ணதை பார்த்து இன்னும் வியந்தாள் 

தொடரும் 74
[+] 3 users Like Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by Vandanavishnu0007a - 23-10-2023, 10:59 PM



Users browsing this thread: 2 Guest(s)