26-09-2023, 01:39 PM
ஓடும் ரயிலில் ஏறியதால் மாயாண்டிக்கும் பிந்து தாமஸ்க்கும் உக்கார இடம் கிடைக்கவில்லை..
கக்கூஸ் ஓரமாக தரையில் உக்காந்து பிரயாணம் செய்து கொண்டு இருந்தார்கள்..
ஐயோ நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் பிந்துமா.. நீங்க எப்படி வாழவேண்டியவங்க.. நானே உங்க வாழ்க்கையை கெடுத்துட்டேனே.. என்று தலை தலையாய் அடித்து கொண்டு அழுதான் மாயாண்டி
நீ என் வாழ்க்கையை கெடுக்கல மாயாண்டி.. என் உடம்பைதான் நீ கெடுத்த..
ஐயோ இந்த சமயத்துல ரைமிங்கா பேசுறீங்களேம்மா.. நாளைக்கு விடிஞ்சா என்னையும் உங்களையும் காணம்னு ஆனந்த்ராஜ் ஐயா தேடுவாரேம்மா..
நம்ம ரெண்டு போரையும் கண்டு புடிச்சி கொன்னு புதைச்சிடுவாரும்மா.. என்று அழ ஆரம்பித்தான் மாயாண்டி
நம்மதான் அந்த ஊரை விட்டே எங்கேயோ போயிட்டு இருக்கோமே மாயாண்டி.. நீ ஏன் இப்படி பயந்து சாகுற.. என்று அவனுக்கு ஆறுதல் சொன்னாள் பிந்து
அப்போது டி.டி.ஆர் அந்த பக்கம் வந்தார்
டிக்கட் டிக்கட்.. என்று ஒவ்வொருத்தராக செக் பண்ணிக்கொண்டே வந்தார்
பிந்துவும் மாயாண்டியும் அமர்ந்து இருந்த கக்கூஸ் பக்கம் வந்தார்
என்ன அன்ரிசர்வுடுல ஏறிட்டிங்களா.. டிக்கெட் எடுத்தீங்களா.. என்று மிரட்டலை கேட்டார்
இல்ல நாங்க டிக்கெட் எடுக்கல சார்.. என்றாள் பிந்து
டிக்கெட் விலை 350.. உங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து 700 ஆகுது..
பைன் அமவுண்ட் ஒரு 300.. மொத்தம் 1000 ரூபாய் எடுங்க.. என்றார் டி.டி.ஆர் அவர்களிடம் கேட்டார்
சார் எனக்கு நாளைக்கு விடிஞ்சா கல்யாணம்.. எனக்கு அந்த கல்யாணத்துல கொஞ்சம் கூட விருப்பம் இல்ல.. கட்டாய கல்யாணம்.. அதனாலதான் நானும் மாயாண்டியும் தப்பிச்சி ஓடி வந்து இந்த ரயில்ல ஏறிட்டோம்.. என்று சொன்னாள் பிந்து..
என்கிட்ட இந்த செய்யின்தான் இருக்கு.. டிக்கெட் பணத்துக்கும் பைன் பணத்துக்கும் இந்த செயினை வச்சுக்கங்க சார்.. என்று சொல்லி பிந்து தாமஸ் தன் கழுத்தில் போட்டு இருந்த தங்க சங்கிலியின் கொக்கியை கழட்ட முற்பட்டு கொண்டு இருந்தாள்
கல்யாண மாப்பிள்ளை யாரு? என்று கேட்டார் டி.டி.ஆர்
மாப்பிள்ளை பேரு ஆனந்த்ராஜ் சார்.. பழைய சினிமா வில்லன் ஆனந்த்ராஜ் மாதிரியே இருப்பாரு.. என்றாள் பிந்து..
என்னது ஆனந்த்ராஜா? அந்த பெயரை கேட்டது அதிர்ச்சி அடைந்தார் டி.டி.ஆர்
இரும்மா.. இரும்மா.. உன் செயினை கழட்டாத.. என்று பிந்து தாமஸை தடுத்தார் டி.டி.ஆர்
ஏன் அவர் அதிர்ந்தார்.. ஏன் அவர் டிக்கெட் பணத்துக்கு பதிலாக தங்க செயினைகூட வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்று புரியாமல் அவரையே உற்று பார்த்தார்கள் பிந்துவும் மாயாண்டியும்
கூ.. சிக்கு புக்கு
கூ.. சிக்கு புக்கு
என்று ரயில் இன்னும் வேகம் எடுத்து அந்த இருட்டை கிழித்து கொண்டு பறந்தது..