Thread Rating:
  • 2 Vote(s) - 2.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
#83
அம்மா.. அழாதம்மா.. நீ அழற சத்தம் கேட்டா சித்தார்த் எழுந்துடுவான் 

இவ்ளோ நாள் ஒன்னும் தெரியல யமுனா.. 

ஆனா பிரியும் போது தான் மனசுக்கு கஷ்டமா இருக்குடி.. 

என்னம்மா.. இது.. அந்த காலத்துலதான் வெளிநாடு போனா.. வருஷக்கணக்குல பேச முடியாது.. பார்க்க முடியாது.. 

இப்போதான் கைல மொபைல் வச்சி இருக்கோம்ல.. 

நினைச்ச நேரம் வீடியோ கால் போட்டு பேசப்போறோம்.. 

நீ என்ன சொன்னாலும்.. எனக்கு மனசுக்கு சமாதானம் ஆக மாட்டேங்குது யமுனா 

எல்லாம் நல்லதுக்குதானேம்மா போறேன்..

எவ்ளோ நாள் தான் இங்கேயே இருந்து கடன்ல கஷ்டப்படணும்.. 

எதோ.. கடவுளா பார்த்து என் வாழ்க்கைல எனக்கு உதவி செய்ய அண்ணாவை அனுப்பி இருக்கார் போல 

சித்தார்த்தை நல்லா பார்த்துக்கம்மா.. 

நான் போறது அவனுக்கு தெரியாது.. 

அதனாலதான் அவன் தூங்கும் போதே கிளம்புறேன்..

இல்லனா அவன் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி என்னை போகவிடமாட்டான்  

டெயிலி அவனுக்கு வீடியோ கால் போட்டு குடும்மா.. நான் பேசுறேன் 

நான் அங்கே போய் சம்பாதிச்சாதான்.. அவனை நல்லா படிக்க வைக்க முடியும்.. 

அவன் விருப்பப்பட்டு கேக்குறதை எல்லாம் வாங்கி கொடுக்க முடியும்.. 

ம்ம்.. சரி யமுனா.. பத்திரமா போயிட்டு வாம்மா.. 

மலேஷியா ரீச் ஆனதும் உடனே எனக்கு போன் பண்ணுடி.. 

தம்பி.. யமுனாவை உன்னை நம்பிதான்ப்பா அனுப்புறேன்.. 

அவளை கண்கலங்காமா பார்த்துக்கப்பா.. 

ஐயோ.. என்னம்மா நான் என்ன புதுசா கல்யாணம் பண்ணி புது புருஷன் கூடவா போறேன்..

அண்ணா கூடத்தான் போறேன்.. 

என் புருஷனை விட அண்ணா என்னை நல்லா பார்த்துக்குவாருன்னு நான் நம்புரேன்ம்மா.. 

வெளியே வாசலுக்கு ஏர்போர்ட் போக புக் பண்ண டாக்சி வந்துடுச்சி.. 

நாங்க கிளம்புறேம்மா.. பை

அண்ணா வாண்ணா கிளம்பலாம்.. 

தொடரும் 47
[+] 2 users Like Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by Vandanavishnu0007a - 14-09-2023, 08:01 AM



Users browsing this thread: 4 Guest(s)