10-06-2023, 06:37 PM
(06-06-2023, 03:24 PM)Vandanavishnu0007a Wrote:
இல்ல அங்கிள்.. பிந்துகிட்ட ஒரு வார்த்தைகூட புடிச்சி இருக்க புடிக்கலியான்னு கேக்காம நீங்களே முடிவு எடுத்து இருக்கீங்களே.. அதை பத்திதான் யோசிச்சிட்டு இருக்கேன்..
இதுல யோசிக்கிறதுக்கு என்னம்மா இருக்கு..
அவ அப்பா அம்மா அவ சின்னவயசா இருக்கும்போதே போய் சேர்ந்துட்டாங்க..
என்னோட சொந்த மக மாதிரி வளர்த்து இருக்கேன்..
நான் எது செஞ்சாலும் அவ நல்லதுக்குதான் செய்வேன்னு அவளுக்கே தெரியும்..
நிச்சயம் அவளுக்கும் நான் பார்த்த மாப்பிள்ளை பிடிச்சிதான் இருக்கும்..
இன்னும் ரெண்டே நாள்ல கல்யாணத்தை வச்சிக்கலாம்னு அவசர படுறாரு மாப்ள..
நானும் ஓகே சொல்லிட்டேன்..
நீ உடனடியா பிந்துவை கடைக்கு கூட்டிட்டு போய் முகுர்த்த புடவையும்.. அப்படியே உங்களுக்கு எல்லாம் என்ன என்ன துணிமணி வேணுமோ வாங்கிக்கங்க.. என்று ரெண்டு மூணு ரூபாய் கட்டுக்களை உஷா கையில் திணித்தார்
அந்த பணத்தை பார்த்ததும் உஷா அதிர்ந்தாள்
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஜார்ஜ் தாமஸ்க்கு இவ்ளோ பணம் எப்படி வந்தது என்று யோசித்தாள் உஷா
பணத்தை வாங்கிக்கொண்டு தன்னுடைய தோழிகளுடன் வீட்டை விட்டு வெளியே வந்தாள்
கூடவே பிந்துவையும் கூட்டிக்கொண்டு போனாள்
ஜார்ஜ் சித்தப்பா கேட்டதற்கு கல்யாணத்துக்கு ஷாப்பிங் செல்கிறோம் என்று சொல்லிவிட்டு கிளம்பினார்கள்..
ஏய் பிந்து நிலமை ரொம்ப எல்லை மீறி போயிடுச்சிடி..
இதுக்கு மேல உன் சித்தப்பாகிட்ட சொல்லி இந்த கல்யாணத்தை கண்டிப்பா நிறுத்த முடியாது..
அதனால இந்த பணத்தை எடுத்துட்டு நீ விஷ்ணு கூட கல்யாணம் பண்ணிட்டு எங்கேயாவது ஓடி போய் வாழுங்க.. என்றாள் உஷா..
ஏய் உஷா என்ன பைத்தியம் மாதிரி பேசுற..
நான் இதுவரை விஷ்ணு கூட பேசுனதுகூட இல்ல.. அவன்கூட எப்படி திடுதிப்புன்னு போய் கல்யாணம் பத்தி பேசுறது..
அதெல்லாம் நாங்க பார்த்துக்குறோம்..
இப்போவே நம்ம எல்லோரும் கோவில்பட்டி புறப்படுவோம் என்றாள் உஷா
தோழிகள் எல்லோரும் கோயில்பட்டிக்கு செல்லும் நெய்வேலி பெரிய பஸ் ஸ்டாண்டுக்கு போனார்கள்..
அங்கே பிந்துவை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையும் அவன் அடியாட்களும் நின்று கொண்டு இருந்தார்கள்..
தெரியும் நீங்க எல்லாம் தப்பிச்சி போக பஸ் ஸ்டாண்டுக்குதான் வருவீங்கண்னு தெரியும்..
டேய் இவளுங்களை பிடிச்சி நம்ம ஜீப்ல ஏத்துங்கடா.. என்றான் கருப்பு மாப்பிள்ளை..
அடியாட்கள் ஒவ்வொரு குட்டிகளையும் அலேக்காக தூக்கி தூக்கி ஜீப்பில் போட்டார்கள்..
ஜீப் மாப்பிள்ளையின் தனி பங்களா நோக்கி வேகமாக பறந்தது..
மாப்பிள்ளை ஜார்ஜ் தாமஸ்க்கு போன் போட்டான்
யோவ் மாமா.. உன் பொண்ணு அவ பிரண்ட்ஸோட தப்பிச்சி ஓட பார்த்தாயா..
குட்டிங்க அத்தனை போரையும் தூங்கிட்டேன்..
நாளைக்கே பிந்துவுக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிற..
நாளைக்கு காலைல 6 மணிக்கெல்லாம் என் பங்களாவுக்கு வந்துடு..
அங்கேயே கல்யாணத்தை வச்சிக்கலாம்.. என்று மிரட்டலாய் சொல்லி போனை வைத்தான் மாப்பிள்ளை..