16-03-2023, 08:53 PM
வாசு நினைத்து கூட பார்க்கவில்லை..
அவ்வளவு பெரிய பணக்காரி.. பெரிய அந்தஸ்தில் உள்ளவள்.. அழகில் சிறந்தவள்.. இவைகளை எல்லாம் காட்டிலும் தான் கை நீட்டி சம்பளம் வாங்கும் எஜமானி அம்மா..
இப்போது தனக்கு சோறு ஊட்ட.. கை நீட்டிக்கொண்டு இருக்கிறாள்
காண்பது கனவா நினைவா என்று புரியாமல் வாயை பிளந்து கொண்டு அவள் கண்களையே சிமிட்டாமல் பார்த்தான்
அவன் அப்படி வாய் பிளந்த கேப்பில் சோற்றை எடுத்து ஊட்டி விட்டாள்
வாசு கண்கள் கலங்கி விட்டது..
ஆனந்த கண்ணீருடன் அவள் ஊட்டிவிட்ட சாதத்தை மென்று சாப்பிட்டு விழுங்கினான்..
ஏன் வாசு அழுற..
ஒன்னும் இல்ல மேடம்.. ஆனந்த கண்ணீர் மேடம்..
நீங்க என்னோட எஜமானியம்மா.. நான் உங்க வீட்டு டிரைவர்.. சாதாரண வேலைக்காரன்..
எனக்கு போய் நீங்க உங்க கையாள ஊட்டி விடுறீங்களே..