13-03-2023, 05:34 PM
அவளும் ஒரு கையில் தட்டை பிடித்துக்கொண்டு.. இன்னொரு கையை உயர்த்தி ஹாய் காட்டினாள்
வெளியே வந்து விட்டால் நம் உள்ளம் தானாக ஒரு புது உலகிற்கு மாறி விடுகிறது..
இங்கே ஏற்ற தாழ்வு கிடையாது..
நம்மை யாரவது நோட்டம் விடுகிறார்களா என்ற பயமோ.. கவலையோ இருக்காது..
சொந்த ஊரில்.. சொந்த ஏரியாவில்.. சொந்த தெருவில் நடமாடும்போது நம்மை சுற்றி 1000 கண்கள் வேவு பார்க்கும்..
பார்த்து பார்த்து நடந்துகொள்ள வேண்டும்..
இதே வெளியூருக்கோ.. வேறு ஊருக்கோ.. நமக்கு தெரியாத புது இடத்துக்கு வரும்போது ஒரு வித சுதந்திரம் கிடைக்கும்..
யாரைப்பற்றியும் கவலைப்படவேண்டாம்.. சொந்த ஊர் திரும்பும் வரை ஆட்டம் போடலாம்..
இப்போது தன்னிச்சையாய் வனிதாவின் கைகள் உயர்ந்து டிரைவர் வாசுவுக்கு ஹாய் காட்டியதும்.. அந்த குதூகலத்தில் தான்..
ஒருவித புது புன்னகையுடன் வாசுவை நெருங்கினாள்