12-02-2023, 01:01 PM
ஐயோ.. அழாதீங்க.. அண்ணனுக்கு என்ன ஆச்சி.. என்று வினோத் கேட்டான்..
உள்ள வாங்க தம்பி.. என்று சொல்லி ஹாலை தாண்டி ஒரு சின்ன பூஜை அறைக்கு அழைத்து சென்றாள் பிந்து மோல்
விஷ்ணுவின் புகைப்படம் பிரேம் போட்டு.. பொட்டு வைத்து பூமாலை மாட்டி இருந்தது..
புகைப்படத்தின் இரண்டு பக்கமும் இரண்டு வாழைப்பழத்தில் ஊதுபத்தி குத்தி வாசனை புகை அந்த அறை முழுவதும் புகை நிரம்பி இருந்தது..
போட்டோ பிரேமில் விஷ்ணு அண்ணன் படத்தை பார்க்கவும் ஆனந்துக்கும் வினோத்துக்கும் கூட தானாக கண் கலங்க ஆரம்பித்தது..
நீங்க ரெண்டு பேரும் யாரு..? என்று கேட்டாள் பிந்து அண்ணி தன் புடவை முந்தானையால் தன் கண்ணீரை துடைத்துக்கொண்டே..
அண்ணி நான் ஆனந்த்.. இவன் வினோத்.. நாங்க ரெண்டுபேரும் விஷ்ணு அண்ணனோட சித்தப்பா பசங்க என்றான் ஆனந்த்..
ஓ உங்க ரெண்டு போரையும் பத்தி நிறைய சொல்லி இருக்காரு.. உங்க ரெண்டு பேரு மேலயும் அவருக்கு அவ்ளோ இஷ்டம்.. என்றாள்
என்ன விஷயமா இத்தனை வருஷம் கழிச்சி இப்போ இங்கே வந்து இருக்கீங்க.. என்று அண்ணி கேட்டாள்
அண்ணன் உங்களை கல்யாணம் பண்ணிகிட்டார்ன்னு எங்க பெரியப்பா குடும்பம் அண்ணனை ஒரேடியா ஒதுக்கி வச்சிட்டாங்க.. பெரியப்பா சாகுறத்துக்கு முன்னாடி கடைசி நேரத்துல எங்க ரெண்டு போரையும் கூப்பிட்டு.. மனசு மாறி விஷ்ணு அண்ணனை எப்படியாவது கண்டு புடிச்சி.. அவங்க பூர்வீக சொத்தையும் அதுக்குண்டான பாத்திரங்களையும் அண்ணன்கிட்ட ஒப்படைக்க சொல்லிட்டு செத்துட்டாரு.. என்றான் ஆனந்த்