27-01-2023, 10:12 AM
விஷ்ணு அண்ணனின் முகவரியை சொன்னதுமே.. ஆட்டோகாரன் அழுது விட்டான்..
தம்பிங்களா... நீங்க விஷ்ணுவுக்கு என்ன உறவு என்று அழுதுகொண்டே கேட்டான்..
நாங்க அவரோட தம்பிங்க என்று வினோத்தும் ஆனந்தும் சொன்னார்கள்..
அதான் முக ஜாடை உங்க அண்ணன் மாதிரியே அச்சு அசல் அப்படியே இருக்கு.. என்றார் ஆட்டோக்காரர் அழுதுகொண்டே..
அதுசரி.. விஷ்ணு அண்ணன் பெயரை சொன்னதும் எதுக்கு ஆட்டோக்காரரே.. இப்படி தேம்பி தேம்பி அழறீங்க என்று கேட்டான் ஆனந்த்
சொல்றேன் தம்பி.. சொல்றேன்.. ஆட்டோல ஏறி உக்காருங்க.. என்று சொல்லி ஆட்டோகாரன் அழுதுகொண்டே ஆட்டோவை ஸ்டார்ட் பண்ணான்
வினோத்தும் ஆனந்தும் ஒன்றும் புரியாமல் ஆட்டோவில் ஏறி அமர்ந்தார்கள்..
24 ப்ளாக்கில் வந்து ஆட்டோ நின்றது..
ஏன் அழுதீங்கன்னு கடைசிவரை சொல்லலியே ஆட்டோக்காரே.. என்றான் வினோத்...
அண்ணன் வீட்டுக்குள்ள போங்க தம்பிங்களா.. நான் அழுத காரணம் உங்களுக்கே புரியவரும்ன்னு சொன்னார் ஆட்டோக்காரர் அழுதுகொண்டே