Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Fantasy முத்துக்கள் மூன்று
#38
கொர்ர்ர்ர்ர்ர் கொர்ர்ர்ர்ர் என்ற சத்தம் எங்கிருந்து வருகிறது என்று படுக்கை முழுவதும் தேடி பார்த்தாள் மஹாராணி சங்கீதா தேவி 

கொர்ர்ர்ர்ர்ர் கொர்ர்ர்ர்ர் என்று குறட்டை சத்தம் மட்டும்தான் வந்ததே தவிர அவள் மஞ்சத்தில் யாரும் படுத்து இருப்பதாக தெரியவில்லை 

சற்றென்று ஒரு யோசனை வந்து அந்த தங்க கட்டிலுக்கு அடியில் குனிந்து பார்த்தாள் 

கொர்ர்ர்ர்ர் கொர்ர்ர்ர்ர்ர் 

வினோத் நன்றாக குறட்டை விட்டு நிம்மதியாக தூங்கி கொண்டு இருந்தான் 

ஆரம்பத்தில் பயந்தாலும்.. அரண்மனை அந்தப்புரத்தில் உள்ளேயே இவ்வளவு தைரியமாக ஒருவன் மஞ்சத்துக்கு அடியில் மல்லாக்க படுத்து தூங்கி கொண்டு இருக்கிறான் என்றால் அவனுக்கு எவ்வளவு துணிவு இருக்க வேண்டும் என்று நினைத்தாள் 

இந்நாட்டு மன்னன் விஜயவர்மனுக்குதான் ஒரு வாரிசு உருவாக்க நேரமில்லை 

அட்லீஸ்ட் இந்த அந்தப்புர அரண்மனைக்கு ஒரு கடினமான காவலாவது போட்டு இருக்கலாம் 

அப்படி காவல் போட்டு இருந்தால் இப்படி துணிவுடன் எவனும் உள்ளே நுழைந்து இருக்க மாட்டான்.. என்று எண்ணினாள் சங்கீதா தேவி 

கட்டிலுக்கு அடியில் யார் படுத்து இருப்பது என்று உற்று நோக்கினாள்
Like Reply


Messages In This Thread
RE: முத்துக்கள் மூன்று - by Vandanavishnu0007a - 25-01-2023, 03:35 PM



Users browsing this thread: