22-01-2023, 09:51 PM
ஜல் ஜல் ஜல் ஜல் என்ற சலங்கை சத்தத்துடன் மாட்டுவண்டி பொத்தாரி தாத்தா வீட்டை நோக்கி போனது
அந்த கிராமத்திலேயே பொத்தாரி தாத்தா வீடு தான் மிகப்பெரிய வீடு
கல்லுவீடு
வீடு முழுவதும் தோரணங்களும் அலங்காரமுமாக கல்யாண களைகட்டியது
வினோத் ஆனந்த் விஷ்ணு மூவரும் மாட்டுவண்டியை விட்டு கோபமாக இறங்கினார்கள்..
வீடுமுழுக்க ஒரே சொந்தகார கூட்டம் அலைமோதியது..
அத்தை சித்தி அண்ணி எல்லாரும் வாசல்வரை வந்து இவர்கள் மூவரையும் அன்புடன் வரவேற்றார்கள்..
அத்தை.. இந்த தள்ளாத வயசுல இந்த கிழவனுக்கு இந்த கல்யாணம் தேவையா.. என்று ஆனந்த் கோபமாக கத்தினான்
ஆனந்த்.. பெரியவர்களை அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுப்பா.. என்று அத்தை அவனை அடக்க பார்த்தாள்
யாரைக்கேட்டு இந்த கல்யாணத்தை ஏற்ப்பாடு பண்ணீங்க.. என்று வினோத்தும் தன் பங்குக்கு எகிறினான்..