Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Fantasy முத்துக்கள் மூன்று
#26

விஷ்ணு அரண்மனை சமையல் கூடம் பக்கம் போகிறான்.. 

அங்கே ராஜபோகம் நிறைந்த இரவு உணவு பரிமாறப்பட்டுக்கொண்டு இருக்கிறது.. 

ஒரு பெரிய உணவு உண்ணும் மேடை அதில் இரண்டு ரம்பை மேனகை போன்ற அழகிய சவுண்டரியம் உள்ள இரண்டு உயர்குல பெண்கள் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.. 

விஷ்ணு ஒரு பெரிய கல்தூண் மண்டபத்தின் மறைவில் இருந்து அந்த விருந்து உண்ணும் பெண்களை நோட்டம் விடுகிறான்.. 

அவர்கள் இருவரும் சிரித்துக்கொண்டும்... பேசிக்கொண்டும் அருஞ்சுவை உணவை உண்கிறார்கள்.. 

விஷ்ணுவுக்கு நாக்கில் எச்சில் ஊறுகிறது.. 

அவர்கள் பேச்சில் இருந்தே.. இருவரில் ஒருவள்.. பெயர் பவளச்செல்வி என்றும்.. அவள் அந்த விஜயபுரி அரண்மனையின் ராஜகுருவின் மருமகள் என்பதையும் அறிந்துகொள்கிறான் விஷ்ணு.. 

மற்றொருத்தி விஜயபுரி மன்னன் விஜயவர்மனின் அழகு மனைவி மஹாராணி சங்கீதா தேவியும் என்பதையும் தெரிந்து கொள்கிறான்.. 

இருவரும் வயிறு புடைக்க இரவு உணவை உன்றுவிட்டு.. பசி அடங்கிய போதையில் சற்று தள்ளாடியபடி தங்கள் அந்தப்புர அரண்மனைக்கு தள்ளாடி தள்ளாடி செல்கிறார்கள்.. 

அவர்கள் இருவரும் அந்த இடத்தை விட்டு போன பிறகு விஷ்ணு மெல்ல அந்த கல் தூணின் மறைவில் இருந்து வெளிப்பட்டு அந்த சாப்பிட்டு கல் மேஜைக்கு அருகில் வருகிறான்.. 
Like Reply


Messages In This Thread
RE: முத்துக்கள் மூன்று - by Vandanavishnu0007a - 10-01-2023, 11:30 PM



Users browsing this thread: 10 Guest(s)