Thread Rating:
  • 6 Vote(s) - 3.33 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Incest கடனால் கை மாறிய காயத்ரி
#45
5. காயத்ரி 

முதல் இரண்டு நாள் வேலை ரொம்ப புதிதாகவும் கொஞ்சம் கஷ்டமாகவும் இருந்தது 

ஆனால் போக போக ஈஸியாக பிக் அப் பண்ணிக்கொண்டேன் 

ஒரு நாளைக்கு 10-15 விளம்பரம் சார்ந்த போன் கால்ஸ் வந்துகொண்டே இருக்கும் 

போத்தீஸ் சாமுத்திரிகா பட்டு புடவை விளம்பரம் ரெடி ஆயிடுச்சாமா.. குடுத்து 2 வாரம் ஆகுதும்மா.. இன்னும் முதல் பிரிவியூ கூட காட்டல.. விநாயகத்திடம் சொல்லிவைம்மா என்று போத்தீஸ் கடை ஓனர் போன் பண்ணுவார் 

சரி சார் நான் விநாயகம் சார் கிட்ட சொல்லி உடனே அந்த விளம்பரத்தை முடிக்க சொல்றேன் என்று இனிப்பாக பேசி நோட் பண்ணிக்கொள்வேன் 

உடனே ஷூட் குரூப்புக்கு ஒரு வாட்ஸாப்ப் மெசஜ் போட்டுவிடுவேன் 

அந்த குரூப்பில் விநாயகம் சார்.. ரஞ்சித்.. எடிட்டர்... டைரக்டர் வசந்த் .. இன்னும் சில சில அலுவலக வேலையாட்கள் அந்த குரூப்பில் இருப்பார்கள் 

யார் என்னுடைய மெஸேஜ்ஜை முதலில் பார்க்கிறார்களோ உடனே எனக்கு டேக் பண்ணி பதில் அளிப்பார்கள்..

நான் மீண்டும் பர்டிகுலர் கிளைண்டுக்கு போன் பண்ணியோ.. அல்லது வாய்ஸ் மெஸேஜிலோ தகவல் அனுப்பிவிடுவேன் 

ஹலோ நாந்தாம்மா தீப்பொறி மேட்ச் பாக்ஸ் கம்பெனி மேனஜர் பேசுறேன்.. 

சொல்லுங்க சார் 

நீதான் புதுசா சேர்ந்து இருக்க காயத்ரியா.. 

ஆமாம் சார் ..

என்னம்மா.. உங்க விநாயகம் சார் எப்போ போன் போட்டாலும் எடுக்கவே மாட்றாரு 

ஒன்னு பிஸின்னு வருது இல்லனா தொடர்பு எல்லையில் இல்லைன்னு வருது 

எங்க கம்பெனி விளம்பரம் முடிச்சி 3 மாசம் ஆகுது.. முதல் பிரதி திரைல காட்டுனத்தோட சரி.. 

ரீ-ரெக்காடிங் பண்ணி பினிஷ் பண்ணி தர்றேன்னு சொன்னாரு.. 

இன்னும் டேப் எங்களுக்கு வந்து சேரல.. 

அட்வான்ஸ் மட்டும் 75%க்கு மேல கேட்டு வாங்க தெரியுது.. விளம்பர படத்த முடிச்சி குடுக்க முடியாதம்மா.. 

புதுசா சேர்ந்து இருக்க.. பொறுப்பா எதையாவது செஞ்சி எங்க விளம்பரத்தை முடிச்சி அனுப்ப சொல்லும்மா.. என்றார் கோபமாக 

சார் கோபப்படாதிங்க பிளீஸ்.. சார் உங்க விளம்பரம் தான் இப்போ பைனல் எடிட் போயிட்டு இருக்கு 

ராத்திரி பகலா உங்க விளம்பரத்தை தான் எங்க டீம் எடிட் பண்ணி முடிக்கிற ஸ்டேஜ்ல இருக்காங்க.. 

நாளைக்கு மதியானதுக்குள்ள கண்டிப்பா நானே உங்களுக்கு பைனல் காப்பி அனுப்பி வைக்கிறேன் சார் பிளீஸ் .. என்று ரொம்ப இதமாக பதமாக அன்பாக பேசி அவரை கூல் படுத்தி போனை வைக்க செய்தேன் 

வாட்சாப் குரூப் ஒரு மெசஜ் தட்டிவிட்டேன் 

@ காயத்ரி மேடம்.. எடிட்டிங் முடிஞ்சிடுச்சி மேடம்.. ரெண்டரிங் போயிட்டு இருக்கு.. கண்டிப்பா இன்னைக்கு ராத்திரிக்குள்ள முடிஞ்சிடும்.. காலைல கிளைண்ட்டுக்கு அனுப்பிடலாம்.. என்று எடிட்டர் உடனே ஒரு டெக்ஸ்ட் மெசஜ் பண்ணார் 

எனக்கு ரொம்ப திருப்தியாக இருந்தது 

அப்பாடா நம்ம கிளையண்ட்டையும் சமாளிச்சாச்சி.. எடிட்டிங் டீம்மும் நல்ல கோ ஆபரேட் பண்றங்க என்னையும் மதிச்சு சரியா ரிப்ளை பண்றங்க என்று ரொம்ப திருப்தியாக இருந்தது 

விநாயகம் சார் என்னை அந்த குரூப்க்கு அறிமுகம் செய்து வைத்து.. நான் போடும் கோரிக்கை மெசெஜ்க்கெல்லாம் உடனே உடனே பதில் அளிக்க வேண்டும் என்று ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாக சொல்லி இருந்தார் 

அந்த பயமும் மரியாதையும் மற்ற வேலையாட்களுக்கு இருந்தது 

நான் வேலை செய்யும் கம்பெனியில் மொத்தம் 40க்கு மேல் ஆட்கள் வேலை செய்கிறார்கள் ..

ஒவ்வொருவரும் ஒவ்வொரு டிபார்ட்மென்ட் 

யாரையும் யாருக்கும் அவ்வளவாக தெரியாது 

ஆனால் என்னை இந்த ஒரு மாதத்தில் எல்லாருக்கும் நன்றாக தெரிந்து விட்டது 

காரணாம் அந்த 40 பேர் செய்யவேண்டிய வேலைகளும் என் கட்டளைகளின் வழியாகத்தான் செயல் படக்கூடிய நிலையில் நான் கொண்டு வந்துவிட்டேன.. எனக்கு கொடுக்கப்பட்ட வேலையும் அது தான் 

என்னுடைய குடும்ப வறுமை ஒரு பக்கம் இருந்தாலும்.. நான் இந்த வேலையை ரொம்ப கவனமாக ஆர்வமாக சீக்கிரம் கற்றுக்கொண்டேன் 

அதற்க்கு ரொம்ப உறுதுணையாக இருந்தவர் ரஞ்சித்தான்.. 

வினாயகம் சார் ரஞ்சித்தையும் பயமுறுத்தி வைத்து இருந்தார் 

காயத்ரி எதுக்கேட்டாலும் நம்ம ஆட்களை உடனே செஞ்சி முடிக்க வைக்க வேண்டியது உன்னோட பொறுப்பு ரஞ்சித்.. என்றும் விநாயகம் சார் சொல்லி வைத்து இருந்தார் 

என்னுடைய சம்பளம் தான் ரொம்ப குறைவாக இருந்ததே தவிர வேலை எனக்கு ரொம்ப மனநிறைவாக இருந்தது 

முன்பெல்லாம் கடன் வாங்கி கடன் கட்டுவதும்.. புது புது ஆட்களிடம் வட்டிக்கு வாங்கி வட்டி கட்டுவதுமாக காலம் தள்ளிக்கொண்டு இருந்தோம் 

ஆனால் வேளையில் சேர்ந்து சம்பளம் வரவும்.. புது கடன் வாங்குவதை அடியோடு நிறுத்திவிட்டோம் 

பழைய கடன்களையும் வட்டிகைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக கட்டகூடிய நல்லநிலைமைக்கு வந்தது விட்டோம்  

அதனால் முன்பு வந்த பயமுறுத்தும் போன் கால்களிடம் இருந்து நானும் என் கணவர் கோபாலும் தப்பித்துவிட்டோம் 

ஒரு மாதம் ஆனது.. ரெண்டு மாதம் ஆனது.. மூன்று மாதம் ஆனது 

ஒரு நாள் மாலை வேலை விட்டு பஸ்டாண்டுக்கு நடந்து போய் கொண்டிருந்தேன் 

பாம்ப் பாம்ப் பாம்ப் 
பாம்ப் பாம்ப் பாம்ப் 

பாம்ப் பாம்ப் பாம்ப் 
பாம்ப் பாம்ப் பாம்ப் 

என்று பின் பக்கம் பலமான கார் ஹாரன் அடிக்கும் சத்தம் 

ரோட்டின் ஓரமாக நான் நடந்து போய் கொண்டிருந்தாலும் என்னை ரொம்ப ஓட்டினது போல அந்த ஹாரன் சத்துமும் காரும் என்னை உரசும் வகையின் வந்து நின்றது 

நான் பதறி போய் கார் ஓட்டிவந்தவரை கோபமாக பார்க்க 

பற்கள் பளிச் என்று தெரிய அழகாக சிரித்து கொண்டே சாரதா ட்ரிவிங் சீட்டில் இருந்து இறங்கி வந்தாள் 

ஹாய் காயூ.. எப்படி இருக்கீங்க.. நம்ம ஒரே ஒரு முறை தான் பார்த்து இருக்கோம் 3 மாசத்துக்கு முன்னால இன்டெர்வியூ வந்தப்போ.. 

அதுக்கு அப்புறம் இப்போ தான் பார்க்கிறோம்.. என்னை நியாபகம் இருக்கா என்று அவளாகவே வழிய வந்து பேசினாள் 

உண்மையிலேயே எனக்கு ஆரம்பத்தில் சாரதாவை அடையாளம் தெரியவில்லை தான் 

காரணம் அன்று இன்டெர்வியூ வந்த போது ரொம்ப சிம்பிளாக எளிமையாக வந்திருந்தாள் 

அந்த எளிமையிலும் ரொம்ப அழகாக இருந்தாள் 

ஆனால் இப்பொது அவள் அழகும் பொலிவும் இரட்டை மடங்கு கூடி.. சினிமா ஸ்டார் போல பளபளப்பாக இருந்தாள் 

நானும் இவளும் ஒன்றாக ஒரே நாட்களில் தான் வேலைக்கு சேர்ந்தோம் 

ஆனால் இன்னும் நான் கடன்காரியாகவே.. கால் நடந்து பஸ்ஸில் தான் போய் கொண்டு இருக்கிறேன் 

சாரதா காரில் வந்திருக்கிறாள் 

ஹலோ காயத்ரி.. என்னங்க பலத்த யோசனை.. என்று என்னை பிடித்து உலுக்கினாள் 

நடிகை கீதாவின் அதே சிங்கப்பல் தெரிய என்னை பார்த்து கவர்ச்சியாக சிரித்தாள் 

சாரதா.. நம்ம நிறைய குரூப் மெசஜ்ல பேசி இருக்கோம்.. ஆனா உங்களை அவ்ளோவா பார்த்தது இல்ல.. 

நீங்க சொன்ன மாதிரி ஒரே ஒரு முறை நேர்முக தெருவுல பார்த்தோம்.. முகம் கூட எனக்கு மறந்துடுச்சி.. என்று சமாளித்தேன்.. 

ம்ம் கரெக்ட்.. காயத்ரி.. நம்ம ரெண்டு பேருமே ஒரே கம்பெனியில ஒரே போஸ்ட்க்கு அப்ளை பண்ணோம் 

ஆனா எனக்கு ரிசெப்ஷன் வேலை கிடைக்கல.. என்னை எடிட் ஷூட் ல போட்டுட்டாங்க.. உங்களை ரிஷபச்சன்ல உக்கார வச்சிட்டாங்க 

எப்படி நம்மளை பிரிச்சிட்டாங்க பார்த்திங்களா காயத்ரி.. என்று சாரதா சிரித்துக்கொண்டே சொன்னாள் 

நீங்க எப்படி கார்ல என்று சாரதாவை பார்த்து வேண்டுமென்றே கேட்டேன்.. 

என்னோட கார் தான் என்னோட முதல் மாச சம்பளத்தில் வாங்கியது.. கார் வாங்கி 3 மாசம் ஆகுது.. என்று சொன்னாள் 

என்னது முதல் மாத சம்பளத்தில் காரா என்று வாய் பிளந்தேன்.. 

வாங்க கார்ல ஏறுங்க காயத்ரி.. உங்ககிட்ட நிறைய பேசணும்.. என்று என் சம்மதம் கூட எதிர்பார்க்காமல் என் கையை பிடித்து இழுத்துக்கொண்டு காருக்குள் உட்காரவைத்தாள் 

கார் புறப்பட்டது.. 

முதல் மாத சம்பளத்தில் காரா 
முதல் மாத சம்பளத்தில் காரா 

முதல் மாத சம்பளத்தில் காரா 
முதல் மாத சம்பளத்தில் காரா 

என் மண்டைக்குள் இந்த கேள்விகளும் சேர்ந்து புறப்பட்டது
[+] 6 users Like Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: கடனால் கை மாறிய காயத்ரி - by Vandanavishnu0007a - 29-03-2022, 02:19 PM



Users browsing this thread: