22-03-2019, 05:06 PM
“இந்திய கிரிக்கெட்டுக்கு இழப்பு ஐபிஎல் தொடர் ஒளிபரப்ப பாகிஸ்தான் தடை - பாகிஸ்தான் அமைச்சர்
![[Image: 60778.jpg]](http://cms-img.puthiyathalaimurai.com/uploads/news-image/2019/03/22/800x400/60778.jpg)
இந்திய கிரிக்கெட் லீக் போட்டியான ஐபிஎல் பாகிஸ்தானில் ஒளிபரப்பப்படாது என அந்நாட்டின் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஃபேவாட் அகமது தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரை பாகிஸ்தானில் ஒளிபரப்பமாட்டோம் என அந்நாட்டின் அமைச்சர் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) நடைபேறும்போது, அதை இந்திய நிறுவனங்களும், அரசும் பாகிஸ்தானின் கிரிக்கெட் என பிரித்துப்பார்த்தன. எனவே எங்களால் ஐபிஎல் தொடரை பாகிஸ்தானில் ஒளிப்பரப்ப முடியாது. நாங்கள் அரசியலையும், கிரிக்கெட்டையும் பிரித்து பார்க்கிறோம். ஆனால் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடும் போது, ராணுவ தொப்பியுடன் விளையாடினர். அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
![[Image: 103339_IPL%20Pakistan%201.jpeg]](http://cms-img.puthiyathalaimurai.com/uploads/common/2019/03/22/103339_IPL%20Pakistan%201.jpeg)
ஐபிஎல் தொடரை பாகிஸ்தானில் ஒளிபரப்பவில்லை என்றால், அது ஐபிஎல்-லுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் இழப்பு தான் என நான் நினைக்கிறேன். சர்வதேச அளவில் நாங்கள் கிரிக்கெட் சூப்பராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட்டை இந்தியாவில் ஒளிப்பரப்ப இந்திய அரசு தடை விதித்தது. புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்ததை கண்டித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
![[Image: 60778.jpg]](http://cms-img.puthiyathalaimurai.com/uploads/news-image/2019/03/22/800x400/60778.jpg)
இந்திய கிரிக்கெட் லீக் போட்டியான ஐபிஎல் பாகிஸ்தானில் ஒளிபரப்பப்படாது என அந்நாட்டின் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஃபேவாட் அகமது தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரை பாகிஸ்தானில் ஒளிபரப்பமாட்டோம் என அந்நாட்டின் அமைச்சர் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) நடைபேறும்போது, அதை இந்திய நிறுவனங்களும், அரசும் பாகிஸ்தானின் கிரிக்கெட் என பிரித்துப்பார்த்தன. எனவே எங்களால் ஐபிஎல் தொடரை பாகிஸ்தானில் ஒளிப்பரப்ப முடியாது. நாங்கள் அரசியலையும், கிரிக்கெட்டையும் பிரித்து பார்க்கிறோம். ஆனால் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடும் போது, ராணுவ தொப்பியுடன் விளையாடினர். அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
![[Image: 103339_IPL%20Pakistan%201.jpeg]](http://cms-img.puthiyathalaimurai.com/uploads/common/2019/03/22/103339_IPL%20Pakistan%201.jpeg)
ஐபிஎல் தொடரை பாகிஸ்தானில் ஒளிபரப்பவில்லை என்றால், அது ஐபிஎல்-லுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் இழப்பு தான் என நான் நினைக்கிறேன். சர்வதேச அளவில் நாங்கள் கிரிக்கெட் சூப்பராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட்டை இந்தியாவில் ஒளிப்பரப்ப இந்திய அரசு தடை விதித்தது. புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்ததை கண்டித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)