Romance திமிருக்கு மறுபெயர் நீதானே...!
Super update
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Brother update
Like Reply
Waiting for next episode.
Like Reply
(04-03-2024, 01:50 AM)Lashabhi Wrote: Wow wow wow what a beautiful narration, super brother vaerra level Sago

(04-03-2024, 11:37 AM)Zombieraj60 Wrote: romba nalla kondu poringa brother adutha updateku waiting

(04-03-2024, 04:50 PM)Bala Wrote: Sema story... Continue

(04-03-2024, 09:43 PM)Anisdk Wrote: சூப்பர் update bro, அதே போல் நெஞ்சை தீண்டும் அம்பு கதைக்கும் update podunga bro.அந்த கதையும் இதே போல வீருவீருப்பாக போகும்.

(05-03-2024, 07:11 AM)Yesudoss Wrote: Extraordinary update

(05-03-2024, 12:47 PM)Fun_Lover_007 Wrote: "சிறிது நேரத்தில் சைக்கிள் ஸ்டாண்ட் சென்றடைந்தேன்.
 
அங்கே என்னுடைய சைக்கிள் மட்டும் தனியாக இருந்தது.
 
இனி எப்போதும் தனியாகத்தான் இருக்க வேண்டும் என்பதை அது உணர்த்துவது போல் எனக்கு தெரிந்தது."



அருமையான வரிகள்!!

(05-03-2024, 09:12 PM)Ananthukutty Wrote: Marvelous

(06-03-2024, 06:52 AM)Gandhi krishna Wrote: Super update

(11-03-2024, 02:37 AM)Lashabhi Wrote: Brother update

(11-03-2024, 08:36 AM)Fun_Lover_007 Wrote: Waiting for next episode.

கதைக்கு ஆதரவு தரும் அனைத்து நண்பர்களுக்கும் மிக மிக நன்றி!

ஆனால் கதையின் நிறை குறைகளை விரிவாக தெரிவிக்காமல் இருப்பது சற்று வருத்தம் அளிக்கிறது.

அதனால்தான் அடுத்த பதிவு அப்டேட் செய்வதற்கு தாமதம் ஆகிறது.
[+] 1 user Likes feelmystory's post
Like Reply
Story la yaentha lagoom illai yaenna poruthavaraikoom, while reading I got connected so write according to mind and heart says, i really liked all your stories

So each and every line and character I liked it iam eagerly waiting for next part
Like Reply
Super update
Like Reply
Story heart touch feel...
U continue
Like Reply
Hero ku friends romba mukkiyum likewise heroine koom friends romba mukkiyum oru romantic story nu vanthutalae friends romba mukkiyum. Because friends thaan yaeppaiyumae difficult situation la help pannuvaanga. So the characterization of this particular story is fantastic. So no worries continue and iam waiting for next update.
Like Reply
Good one
Like Reply
Super continue
Like Reply
Update varooma ?
Like Reply
Waiting bro.
Like Reply
I'm big fan of you bro @feelmystory
Like Reply
adutha update eppo
Like Reply
Update varooma varatha sollunga Writer
Like Reply
Waiting for next episode.
Like Reply
ஏன் அடுத்த பதிவிற்கு இவ்வளவு தாமதம் என்று புரியவில்லை?
Like Reply
திமிருக்கு மறுபெயர் நீதானே!

8


"நாம ரெண்டு பேரும் பிரண்ட்ஸா இருக்கலாமா...?"

இதற்குத்தானே இவ்வளவு நாட்கள் ஏங்கிக்கொண்டு இருந்தேன் என்று நினைக்கும்போதே என் கண்களின் ஓரத்தில் இருந்து நீர் துளிகள் எட்டிப்பார்த்து மெல்ல வழிந்தது.

மதுமிதா அதை பார்த்து கொஞ்சம் பதறிவிட்டாள்.

"என்ன விக்ரம் இதுக்கு போயி அழுதுட்டு இருக்கே?"

அவள் கண்ணீரை துடைக்க வந்தாள்.

“இல்ல மதுமிதா! சென்னைல உன்னைய அடிச்சது தப்புன்னு தெரிஞ்சதும் ரொம்ப கஷ்டப்பட்டேன்! அதோட இங்க வந்தும் உன்னைய திரும்ப அடிச்சுருக்கேன்! கடைசில நீதான் அந்த பொண்ணுன்னு தெரிஞ்சதும் பல நாள் ராத்திரில தூங்காமயே இருந்துருக்கேன் தெரியுமா?"

மனதில் தேங்கி இருந்த வலியை மொத்தமாக வெளிப்படுத்தினேன்.

"விக்ரம்! நீ இப்ப எதுக்கு நடந்து முடிஞ்சத பத்தி பேசிட்டு இருக்கே? நான் எல்லாத்தையும் மறந்துட்டேன்டா! ஃப்ரீயா விடு!"

"நீ என்ன வேணாலும் சொல்லு! எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு!"

நான் விடாமல் அழுது புலம்பினேன்.

"ஏன்டா! நான் எல்லாத்தையும் மறந்துட்டேன்னு சொல்லுறேன்ல! சும்மா இருடா! இல்லனா திரும்ப அடிக்கவா?”

மதுமிதா சொல்லிக்கொண்டே செல்லமாக முறைத்தாள்.

"என்னது திரும்ப அடிப்பியா?"

நான் பயந்தவாறு கண்களை துடைத்தேன்."

"ஆமா அடிப்பேன்! அழாம இருடா லூசு!"

"உங்க அண்ணன் வெங்கட் கிட்ட யாரையும் அடிக்க மாட்டேன்னு சொன்னியே! அதெல்லாம் பொய்யா?"

"பொய் இல்ல விக்ரம் உண்மைதான்!”

“புரியலையே...!”

“டேய்! நான் யாரையும் தேவையில்லாம அடிக்க மாட்டேன்னுதான் சொன்னேன்! ஆனா நீ இந்த மாதிரி பண்ணிட்டு இருந்தே கண்டிப்பா அடிப்பேன்"!

"அப்போ நீ இன்னும் மாறவே இல்லையா?"

"விக்ரம் என்னடா இப்படி பேசுற?”

“அப்பறம் எப்படி பேசுறது?”

“நான் இனிமே தெரியாதவங்க யாரையும் நான் அடிக்கவே மாட்டேன்டா! எனக்கு ரொம்ப பிடிச்சவங்க எனக்கு பிடிக்காத மாதிரி நடந்துகிட்டாதான் அடிப்பேன்! புரியுதா?"

“என்னது! இவளுக்கு என்னைய ரொம்ப பிடிக்குமா?

நான் மனதிற்குள் சந்தோசப்பட்டேன்! ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பேசினேன்.

"ஹ்ம்ம் புரியுது! எப்பல்லாம் நான் உன்னைய டென்ஷன் பண்ற மாதிரி நடந்துக்குறேனோ அப்பல்லாம் என்னைய தூக்கி போட்டு மிதிக்கலாம்னு ப்ளான் பண்ணிட்டு இருக்கே அப்படிதானே?"

உடனே இரு கைகளையும் அவளது இடுப்பின் பக்கவாட்டுகளில் வைத்துக்கொண்டு என்னை பார்த்து முறைத்தபடியே பேசினாள்.

"அடச்சீ வாய மூடு! அப்படியெல்லாம் பண்ண மாட்டேன்டா! நான் டென்ஷனா இருந்தா நீ என்னைய பேசி சரி பண்ண மாட்டியா?"

"எப்படி பேசி சரி பண்ணுறதுணு புரியாமதானே இத்தனை நாளா முழுச்சுக்கிட்டு இருந்தேன்! இருந்தாலும் நான் உன்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாதான் இருக்கனும்!"

"லூசு! இப்படியே பேசிட்டு இருக்காத! டென்ஷன் ஆகுது!" என்று சிரித்தாள்.

"ஏன்டி! இப்ப மட்டும் வந்து நல்லா பேசுறே? மதியம் வந்து என் கூட பேசுவேனு எப்படி எதிர் பார்த்தேன் தெரியுமா?"

"ஹா...ஹா...ஹா... பையன் என்ன பண்றான்னு பாக்கலாம்னு வேணும்னேதான் பேசலடா!"

"நினைச்சேன்டி! நான் மதியம் எவ்வளவு ஃபீல் பண்ணி அழுதுட்டு இருந்தேன் தெரியுமா?"

"ஹ்ம்ம் தெரியும்டா! நீ மதியம் சோகமா எழுந்து போனதும் உன்கிட்ட பேசலாம்னுதான் நினைச்சு நம்ம பிரண்ட்ஸ்கிட்ட சொன்னேன்! எல்லாரும் கிளாஸுக்கு போனதும் பேசுன்னு சொன்னாங்க! ஆனா தினேஷ்தான் இப்ப பேசாத! சாயிந்தரம் பேசிக்கலாம்னு சொன்னான்! எனக்கும் அதுதான் சரின்னு தோனுச்சு!"

"ஓஹோ! இதுக்கும் அந்த நாய்தான் காரணமா? அவன அப்புறமா கவனிச்சுக்குறேன்!"

"சரி சரி டென்ஷன் ஆகாம இரு விக்ரம்! இனிமே உன்னைய எப்போதும் கஷ்டப்படுத்துற மாதிரி நடந்துக்கவே மாட்டேன்டா!"

அவன் எனது கைகளை இறுக்கமாக பற்றிக்கொண்டு சொன்னதும் உச்சி குளிர்ந்து போனேன்

"ஒகே மதுமிதா! நான் எதுவும் டென்ஷன் ஆகமாட்டேன்! நீ ஆகாம இருந்தாலே போதும்!"

"அதெல்லாம் சரி! இனிமே அவன் சொன்னான் இவன் சொன்னான்னு எக்ஸாம்ல மார்க் எடுக்காம எனக்கு விட்டுகொடுத்தே அப்புறம் நடக்குறதே வேற! நீ ஒழுங்கா எப்பவும் போல் படிக்கணும்! இல்ல நீ சொன்ன மாதிரி தூக்கிப்போட்டு உன்னைய மிதிச்சுடுவேன்!"

அவள் எனது கைகளை விடுவித்துவிட்டு நாக்கை மடித்துக்கொண்டு மிரட்டினாள்.

"நீ செஞ்சாலும் செய்வே! இனிமே நான் எப்பவும் போல படிக்குறேன்!" என்று பயந்தேன்.

அவள் என்னை நோக்கி ஆள்காட்டி விரலை மட்டும் நீட்டியவாறு "அந்த பயம் இருக்கனும்" என்றாள்.

"இவளுக்கு கொஞ்சம் கூட திமிரு அடங்கவே இல்ல!" என்று மெதுவாக முனுமுனுத்தேன்.

"இப்போ நீ என்ன சொன்னே?"

"இவளோட காது இவ்வளவு ஷார்ப்பா இருக்கே! இனிமே இவ முன்னாடி பாத்துதான் பேசணும்" என்று நினைத்துக்கொண்டு நிலைமையை சமாளிக்க பார்த்தேன்.

"ஒன்னும் இல்ல மதுமிதா! வெங்கிக்கு அந்த கண்காட்சில நடந்த விஷயத்தை எல்லாம் சொல்லிட்டியா?"

"இல்ல விக்ரம்! அண்ணன்கிட்ட எதுவும் சொல்லல!”

“டைம் கிடைக்கும்போது சொல்லுவியா?’

“நான் கண்டிப்பா சொல்ல மாட்டேன்!"

"ஹ்ம்ம்... ரொம்ப தேங்க்ஸ் மதுமிதா"

"லூசு! ஃப்ரெண்ட்ஸ்குள்ள தேங்க்ஸ் சொல்ல கூடாது! உனக்கு தெரியாதா?"

"ஓ... தெரியாது மதுமிதா! இந்த ஸ்கூளுக்கு வந்ததும்தான் எனக்கு ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சாங்க! எனக்கு இதபத்தி யாரும் சொன்னது இல்ல!"

"சரிடா இனிமே தேங்க்ஸ்லாம் சொல்லாத! எனக்கும் இதுக்கு முன்னாடி ஃப்ரெஎண்ட்ஸ் யாரும் இல்ல! நீ வந்ததுக்கு அப்புறம்தான் எல்லாரும் கிடைச்சுருகாங்க! அப்படி பாத்தா நானும் உன்னைய மாதிரிதான்!"

அதை சொல்லும்போதே அவளது முகத்தில் சோகம் வெளிப்பட்டது.

"சரி! இனிமே இப்படியெல்லாம் பேசமாட்டேன்! நீ கவலைபடாத! எனக்கு தெரியாததை எல்லாம் நீயே சொல்லிக்குடு!".

"ஹ்ம்ம் ஒகேடா! கண்டிப்பா சொல்லுறேன்!"

"எனக்கு இப்போ எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா? நாம இப்படியே லைஃப்லாங் ஃப்ரெண்ட்ஸா இருக்கணும்னு தோணுது!"

"எனக்கும் அப்படிதான் தோணுது விக்ரம்! பட் இப்ப டைம் ஆச்சு வீட்டுக்கு கிளம்பலாமா?"

"கொஞ்சம் மொக்கையா பேசிட்டேன்ல?"

"அதெல்லாம் ஒன்னும் இல்ல! நீ நல்லாதான் பேசுறே! நிஜமாவே டைம் ஆச்சு பாரு!"

என்னுடைய கையில் இருக்கும் வாட்சை சுட்டி காட்டினாள்.

"சரி மதுமிதா நாளைக்கு பாக்கலாம்! எங்க உன்னோட சைக்கிள்?"

"அது வெளியே நிக்குது!”

“ஏன் வெளிய வச்சுட்டு வந்தே? யாரவது எடுத்துட்டு போயிட போறாங்க”

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது! வெளிய என்னோட அண்ணனும் தினேஷும்தான் பத்திரமா பாத்துட்டு நிக்குறாங்க!"

"என்னது! அவங்க ரெண்டு பேரும் இன்னும் கிளம்பலையா? இவ்வளவு நேரம் உன்கிட்ட பேசுனதுக்கு வெங்கி என்னைய தப்பா நினைச்சிக்க போறான்" என்று பதறினேன்.

"அதெல்லாம் யாரும் தப்பா நினைக்க மட்டாங்க! உன்கிட்ட பேசி சமாதானம் பண்ண சொன்னதே என்னோட அண்ணன்தான்! நீ இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணாதடா"

“ஹ்ம்ம்... சரி சரி நாம கிளம்பலாமா?” என்று சைக்கிளை நகர்த்தினேன்.

“ஹ்ம்ம்... போலம்டா” என்று சொல்லிவிட்டு வலதுபுறமாக சைக்கிளின் ஹேண்டில்பாரை பிடித்தவாறு என்னுடன் மெல்ல நடந்தாள்.

எங்களுக்குள் இத்தனை நாட்களாக நடந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் ஒருவழியாக தீர்ந்துவிட்டது என்ற மகிழ்ச்சியுடன் பள்ளியைவிட்டு வெளியில் வந்தோம். அப்போது தினேஷம் வெங்கியும் சிரித்த முகத்துடன் எங்கள் அருகில் வந்தனர்.

"என்ன மதுமிதா எல்லாம் பேசிட்டியா கிளம்பலாமா?" வெங்கிதான் கேட்டான்.

"ஹ்ம்ம் பேசிட்டேன் போலாம்ணா"

தினேஷ் எதுவுமே பேசாமல் என்னை பார்த்து சிரித்தான். நான் அதை கண்டுக்கொள்ளாமல் வெங்கியை பார்த்தேன்.

"இப்போ ஹாப்பியா மச்சி" என்று வெங்கி கேட்டான்.

"ஹ்ம்ம் ரொம்ப ஹாப்பியா இருக்கேன் தேங்க்ஸ்டா."

"டேய் விக்ரம்! ஃப்ரெண்ட்ஸ்குள்ள தேங்க்ஸ் சொல்லக்கூடாதுன்னு சொன்னேன்ல" மதுமிதா என்னை பார்த்து முறைத்தாள்.

"அய்யயோ!.ஸாரி இனிமே அப்படி சொல்லவே மாட்டேன்."

"இதேமாதிரி தேவையில்லாம ஸாரியும் கேக்கக்கூடாது" என்று புன்னகைத்தாள்.

"ஓகே ஓகே" என்று தலை ஆட்டினேன்.

"ஓகேடா நாங்க கிளம்புறோம்" என்றான் வெங்கி.

"பை விக்ரம்! பை தினேஷ்!" என்று கூறிவிட்டு மதுமிதா சைக்கிளில் ஏறி அமர்ந்தாள்.

நானும் அவர்களுக்கு "பை பை" சொல்லி சிரித்த முகத்துடன் விடைப் பெற்றேன்.

"என்ன மச்சி எல்லாம் சக்சஸ் ஆகிரிச்சு போல!" என்று சொல்லிவிட்டு தினேஷ் சிரித்தான்.

"நாயே! அவ மதியமே என்கிட்டே பேசுறதுக்கு வந்துருக்கா! நீ தான் அவள தடுத்து நிறுத்தி இருக்கே" கோபத்துடன் கத்தினேன்.

"மச்சி என்னடா இப்படி பேசுறே? மதியம் கிளாஸ்ல உங்களால ஃப்ரீயா பேசியிருக்க முடியுமா? அதுக்குதான்டா அப்படி பண்ணேன் என்று கோபித்துக்கொண்டான்.

"தினேஷ் நீ அவ்வளவு நல்லவான மச்சி! உன்னோட செயல பாத்து எனக்கே கண்ணுல தண்ணி வர்ற மாதிரி இருக்கு!" என்று சிரித்தேன்.

"என்னைய கலாய்ச்சது போதும்! வா கிளம்பலாம்" என்று முறைத்தான்.

"செரி டென்ஷன் ஆகாத மச்சி! உன்னைய பத்தி தெரியாம பேசிட்டேன். இனிமே இப்படியெல்லாம் சொல்லமாட்டேன்"

"ஹ்ம்ம் புரிஞ்சா செரி! இப்ப லேட் ஆகிருச்சு வா கிளம்பலாம்" என்று சைக்கிளில் ஏறினான்.

"ஓகேடா கிளம்பலாம்" என்று மதுமிதாவுடன் பேசியதை மனதில் எண்ணிக்கொண்டே மகிழ்ச்சியுடன் சைக்கிளை இயக்கினேன்.

அதன்பின் தினேஷ் அவன் வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் நானும் என்னுடைய வீட்டிற்குள் நுழைந்தேன்.

இரவு சாப்பிடும்போது, பெற்றோரிடம் மதுமிதாவை பற்றி கூறிவிடலாம் என்று முடிவு செய்து பேசினேன்.

"அம்மா ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்!"

"என்னடா ஸ்கூல்ல எதுவும் பிரச்சனையா?"

"பிரச்சனையெல்லாம் ஒன்னும் இல்ல! ஒரு நாலு வருசத்துக்கு முன்னாடி நான் சென்னைல கண்காட்சிக்கு போயிருக்கும்போது ஒரு பொண்ண அடிச்சேன்னு சொன்னதுக்கு நீங்க கூட திட்டுனீங்களே ஞாபகம் இருக்கா?"

"ஹ்ம்ம்... ஆமா! அதுக்கு என்னடா இப்போ?"

"என்னது அடிச்சியா! எதுக்குடா? இதெல்லாம் என்கிட்ட சொல்லவேயில்ல!" என்று அப்பா பதறினார்.

அய்யோ! நான் அம்மாவிடம் மட்டுமே தெளிவாக சொல்லி இருந்தேன். இப்போது அப்பாவிடம் எப்படி சொல்வது என்று யோசிக்கும்போதே அப்பாவிற்கு அம்மாவே தெளிவாக எடுத்துரைத்தார். அதனால் நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன். என்னுடைய தந்தை அனைத்தையும் கேட்டுவிட்டு பேச ஆரம்பித்தார்.

"விக்ரம்! இவ்வளவு நடந்துருக்கு ஆனா எனக்குதான் தெரியாம இருந்துருக்கு! இப்போ எதுக்குடா அந்த விஷயத்தை பத்தி பேசுறே?"

"ஆமா இப்போ எதுக்குடா திடீர்னு அதை பத்தி பேசுறே எதாச்சும் காரணம் இருக்கா?" என்று அம்மா கேட்டார்கள்.

மதுமிதாவும் நானும் சண்டை போட்டு பகைத்து கொண்டதை பற்றி கூறாமல் இன்று இருவரும் சாதாரணமாக பேசும்போதுதான் இவள் யார் என தெரிந்துக்கொண்டேன் என்பது போல் சொல்லலாம் என்று ஆரம்பித்தேன்.

"ஆமா காரணம் இருக்குமா! என் கூட வெங்கட்னு ஒரு பையன் படிக்கிறான்! அவனுக்கு ஒரு தங்கச்சி இருக்கா ரெண்டு பெரும் ட்வின்ஸ்னு சொல்லிருக்கேன்ல"

"ஆமாடா சொல்லிருக்கே ஞாபகம் இருக்கு!"

"அந்த கண்காட்சில பாத்த பொண்ணு வேற யாரும் இல்லைமா வெங்கியோட தங்கச்சிதான்"

"அப்படியா! அந்த பொண்ணு இன்னும் அதே கோபத்துலதான் இருக்குதா விக்ரம்?"

"இல்லமா நான் பேசி பாத்தேன்! அவ எல்லாத்தையும் மறந்துட்டா" என்று பெருமையாக கூறினேன்.

"ஹ்ம்ம்... இனிமே நீ யாருகூடயும் இப்படியெல்லாம் சண்டை போடக்கூடாது. சரியா?" என்று அப்பா கேட்டார்.

"சரிப்பா" என்று கூறும்போதே "அதெல்லாம் பையன்கிட்ட எப்பயோ சொல்லிட்டேன்! அவன் எதுவும் பண்ண மாட்டான்!" என்று எனக்கு அம்மா சப்போர்ட் செய்தார்கள். அதை புரிந்துக்கொண்டு அப்பாவும் அமைதியாக இருந்தார்.

"விக்ரம்! அந்த பொண்ணு பேரு என்னனு சொன்னே?" என்று அம்மா வினாவினார்கள்.

"அவ பேரு மதுமிதா!"

"சரி மதுமிதாவ ஒரு நாள் வீட்டுக்கு வர சொல்லு பாக்கணும்!"

"எதுக்குமா பாக்கணும்?" என்று அதிர்ந்தேன்.

"நீ தப்பு பண்ணிட்டேன்னு எவ்வளவு நாள் கவலையா இருந்தே! இப்போ அவளே அத மறந்துட்டானு சொல்லுறே! அப்போ நல்ல பொண்ணா இருக்கும்னுதான் எனக்கு தோணுது! அதான் பாக்கணும்னு வர சொல்றேன்!"

அம்மாவிடமிருந்து இப்படி ஒரு பதில் வரும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதுவரை தினேஷை தவிர எந்த ஒரு நண்பனும் வீட்டுக்கு வந்ததில்லை.

முதன்முதலாக ஒரு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வா என்று அம்மாவே சொன்ன காரணத்தால் எனக்கு அப்படியே காற்றில் மிதப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு மகிழ்ச்சி அடைந்தேன். அதனால் சிறிது நேரம் பேசாமல் அமைதியாக இருந்தேன்.

"என்ன விக்ரம் எதுவும் பேசாம இருக்கே! அதான் அம்மாவே கூட்டிட்டு வர சொல்றாங்கல இதுல உனக்கு என்னடா பிரச்சனை?" என்று அப்பா கேட்டார். நான் இப்போது மெளனத்தை களைந்து பேச ஆரம்பித்தேன்.

"இல்லபா! மதுமிதா நம்ம வீட்டுக்கு தனியா வருவாளான்னு தெரியல! அதோட அவங்க அண்ணன் வெங்கட் என்ன சொல்லுவான்னும் தெரியல!"

"இதுல என்ன இருக்கு? அவனையும் வர சொல்லுடா" என்று அம்மா சொன்னார்கள்.

"அம்மா வெங்கட்டுக்கு கண்காட்சில நடந்த விஷயம் எதுவும் தெரியாது! மதுமிதா இதைப்பத்தி யாருகிட்டயும் சொல்லாம மறைச்சுட்டா! அதான் அவனையும் எப்படி கூட்டிட்டு வர்றதுன்னு யோசிக்கிறேன்!"

"இதுவரைக்கும் யாருகிட்டயும் சொல்லலையா? அப்போ அவ கண்டிப்பா ரொம்ப நல்ல பொண்ணுதான்! அவள எனக்கு இப்பவே பாக்கணும் போல இருக்கு! நீ எப்படியாச்சும் அவள வீட்டுக்கு வர சொல்லணும் சரியா?"

நல்ல பொண்ணுதான்! ஆனா எப்போ என்னைய தூக்கிபோட்டு மிதிக்க போறான்னு தெரியாது என மனதிற்குள் நினைத்தேன்.
[+] 3 users Like feelmystory's post
Like Reply
"சரிம்மா நான் ட்ரை பண்றேன்!"

உடனே அம்மா மறுபடியும் எதையோ சொல்ல வருவதற்கு முயற்சி செய்ய "அதெல்லாம் அவன் கூட்டிட்டு வருவான்! நீ இப்ப பேசாம சாப்பிடு!" என்று அப்பா நிலைமையை சமாளித்தார். அதன் பிறகு அம்மா என்னிடம் எதுவும் கேட்கவில்லை.

அன்று இரவு நான் தூங்குவதற்கு நீண்ட நேரம் ஆனது!

அதற்கு காரணம் அம்மாதான்.

ஆமாம் படுக்கையில் படுத்துகொண்டு மதுமிதாவை எப்படி வீட்டுக்கு அழைத்து வருவது என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

எப்படி செய்தாலும் அவளுக்கு கோபம்தான் வரும் என்று நினைத்துவிட்டு அப்படியே தூங்கிப்போனேன்.

அடுத்த நாள் பள்ளிக்கு சென்றவுடன் நான் மதுமிதாவுடன் பேசுவதை மற்ற நண்பர்களுக்கும் தெரிந்துக்கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

அதன்பிறகு மதுமிதாவும் எங்களுடன் பேசுவது! மதிய வேளையில் ஒன்றாக உணவு உண்பது என அனைவருடனும் சகஜமாக பழக ஆரம்பித்தாள்.

ஆனால் அனைவரின் முன்னிலையிலும் எப்படி இவளை வீட்டுக்கு அழைப்பது? எங்களையெல்லாம் அழைக்க மாட்டாயா? என்று மற்ற நண்பர்கள் கேட்டால் என்ன பதில் சொல்வது?

இவளிடம் தனியாக பேசினால் மட்டுமே அழைக்க முடியும். அதுவரை இதைப்பற்றி பேசுவது கடினம் என்று அப்படியே விட்டுவிட்டேன்.

இப்படியே சில வாரங்கள் என்னை கடந்து சென்றது.

அதன் பிறகு அரை ஆண்டு தேர்வு நடைபெற இருக்கிறது என்று எங்களுக்கு அறிவிப்பு வந்தது.

அந்த அறிவிப்பு வந்த நாளன்று பள்ளி முடிந்ததும் மாலையில் என்னிடம் தனியாக பேச வேண்டும் என்று மதுமிதா அழைத்தாள்.

எதற்காக இவள் என்னை அழைக்கிறாள் என்று புரியாமல் குழப்பத்துடன் தினேஷை அனுப்பிவிட்டு தனியாக சைக்கிள் ஸ்டாண்டில் நின்றேன்.

அப்போது அவள் என்னிடம் பேசுவதற்கு அருகில் வந்தாள்.

"என்ன மதுமிதா திடீர்னு பேசணும்னு சொன்னே? எதுவும் முக்கியமான விஷயமா?"

"ஹ்ம்ம் கொஞ்சம் முக்கியமான விஷயம்தான்! எப்படி சொல்றதுன்னு தெரியல!"

அப்போது கொஞ்சம் ஆர்வமிகுதியில் ஒரு தவறை செய்துவிட்டேன்.

“மதுகுட்டி எதுவா இருந்தாலும் சொல்லுமா! என்கிட்ட எதுக்காக தயங்குறே?”

"என்னடா குட்டி ஜட்டினுட்டு! இனிமே இப்படி கூப்பிட்டே செருப்பு பிஞ்சுடும்!"

மதுமிதா கத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

“ஐயோ! சும்மா இருந்தவள இப்படி கோபப்படுத்தி விட்டோமே! இப்போ நான் என்ன செய்ய போறேன்!” என்று பயந்தவாறு அவளை தொடர்ந்தேன்.

"ஸாரி மதுமிதா பேச்சு வாக்குல தெரியாம கூப்பிட்டுடேன்! இனிமே அப்படி சொல்லமாட்டேன்! ப்ளீஸ் நில்லுடி!"

"இனிமே கூப்பிட்டு பாரு பல்ல உடைச்சுடுறேன்!"

அவள் சொல்லிவிட்டு விறு விறுவென சைக்கிளை எடுத்தாள்.

"ஏன்டா இப்பதான் உன்கிட்ட பேசவே ஆரம்பிச்சுருக்கா அதுக்குள்ள இப்படி பேசி கெடுத்துட்டியே! போயி அவள சமாதானம் செய்டா" என்று என்னுடைய மனசாட்சி திட்டியது.

நான் சைக்கிளை வேகமாக தள்ளிக்கொண்டு அவளிடம் சென்று கெஞ்சினேன்.

"ஸாரி மதுமிதா எனக்கு பொண்ணுங்ககிட்ட பேசுறது எப்படின்னு தெரியாது! நீ என்னைய பாத்து முறைக்கும்போது உன்னோட கண்ணுல இருக்குற கருவிழி திராட்சை மாதிரி குட்டியா அழகா இருந்துச்சு! அதான் உன்னைய செல்லமா குட்டின்னு கூப்பிடனும்னு ஆசை வந்து அப்படி கூப்பிட்டுடேன்! இதுக்காக என் கூட பேசாம இருக்காத! இல்லனா இப்பவே செருப்ப கலட்டி அடிச்சுடு!"

நான் பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு அங்கேயே நின்றேன்.

இந்த வார்த்தைகளை கேட்ட மதுமிதா அப்படியே அதிர்ச்சியுடன் என்னை பார்த்து நின்றாள்.

சில நொடிகள் என்னுடைய முகத்தையே பார்த்துவிட்டு மெல்ல சிரித்துக்கொண்டே பேசினாள்.

"ஏன்டா லூசு பயலே! ஒரு பேச்சுக்கு சொன்னா உண்மையாவே செருப்பால அடிப்பேன்னு நினைச்சுட்டு இருக்கியா? நிஜமாவே என்னோட கண்ணு அழகா இருந்துச்சா?" என்று வியப்புடன் கேட்டாள்.

"ஆமா மதுமிதா! உன்னோட கண்ணு ரொம்ப அழகா இருக்குது!"

இப்படி கூறியதும் சிறிது நேரம் வெட்கப்பட்டு நின்றவள் மீண்டும் பேச்சை தொடர்ந்தாள்.

"விக்ரம்! உன்னைய செல்லமா கூப்பிடனும்னு எனக்கும்தான் ஆசைதான்! ஆனா நான் அப்படி கூப்பி..."

எதையோ சொல்ல வந்தவள் உதட்டை கடித்துக்கொண்டு வாய் தவறி உளரிவிட்டதை எண்ணி மீண்டும் அமைதியாக தொடர்ந்து நடந்தாள்.

எனக்கு அது சற்று தாமதமாகத்தான் புரிந்தது. அதனால் மீண்டும் வேகமாக நடந்து சென்று அவளிடம் பேசினேன்.

"ஹே... மதுமிதா! நீயும் அப்படி கூப்பிடனும் நினைச்சியா? எனக்கு என்ன பேருன்னு சொல்லேன் ப்ளீஸ்!" என்று கெஞ்சினேன்.

"நான் அதெல்லாம் ஒன்னும் நினைக்கல! இனிமே அப்படியெல்லாம் கூப்பிடாத வேற யாராச்சும் கேட்டுட போறாங்க" என்று வெட்கப்பட்டுக்கொண்டே நின்றாள்.

"ஹ்ம்ம்... அப்போ யாரும் இல்லாதப்போ கூப்பிடலாமா?"

நான் கேட்டதும் சில நொடிகள் எதுவும் பேசாமல் யோசனையில் மூழ்கினாள்.

"மது என்னமா யோசிக்கிற?"

ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டு மீண்டும் பேச தொடங்கினாள்.

"நம்ம பக்கத்துல யாரும் இல்லாதப்போ மட்டும்தான் இப்படி கூப்பிடனும்! ஒகே?" என்று கேட்டாள்.

"மதுகுட்டி அதத்தான் நானும் சொன்னேன்" என்று பலமாக சிரித்தேன்.

"சரி எப்படியோ கூப்பிட்டு தொல! உன்னால நான் சொல்ல வந்த விஷயத்தையே மறந்துட்டேன் பாரு!"

"அதானே எதையோ சொல்லுறதுக்குதான் வந்தே! நானும் மறந்துட்டேன் பாரு! சொல்லுமா எதுவும் ப்ராப்லமா?"

"ஆமா கணக்கு பாடத்துல இருக்குற ப்ராப்ளம்ல கொஞ்சம் நிறையா டவுட் இருக்கு! அத உன்கிட்ட கேட்டு கிளியர் பண்ணனும்!”

"ஹா..ஹா...ஹா... கொஞ்சம் டவுட்டா? இல்ல நிறையா டவுட்டா?"

"சிரிக்காத! நிறையா டவுட்டுதான்!" என்று முறைத்தாள்.

"ஹ்ம்ம்... சரி எப்போ சொல்லி தரனும்! நாளைக்கு லஞ்ச் ப்ரேக்ல சொல்லி தரவா?"

"இல்ல விக்ரம்! நிறையா டவுட் இருக்கு! லஞ்ச் டைம்ல படிக்க முடியாது! அதனால சண்டே எங்க வீட்டுக்கு வந்து சொல்லி கொடுக்குறியா?"

மதுமிதா அப்படி கேட்டதும் எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.

நான் வீட்டுக்கு அழைக்கலாம் என்று நினைத்தால் இவள் முந்திக்கொண்டு என்னை அவளது வீட்டிற்கு அழைக்கிறாளே என்று யோசித்தேன்.

"மதுகுட்டி! நான் உங்க வீட்டுக்கு வந்தா வெங்கி எதுவும் தப்பா நினைச்சுக்க போறான்!"

"அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல! உன்னைய வீட்டுக்கு கூப்பிட சொன்னதே அண்ணன்தான்!"என்று சிரித்தாள்.

"மதுகுட்டி! நிஜமாவா சொல்றே? அவன் எதுக்கு என்னைய நேரடியா கூப்பிடாம உன்கிட்ட சொல்லி கூப்பிடுறான்?"

"அண்ணனும் நானும் படிக்கும்போதுதான் டவுட் வந்துச்சு! எனக்கு அத எப்படி சால்வ் பண்ணுறதுன்னு தெரியல! உடனே விக்ரம்கிட்ட கேக்கலாம்னு சொன்னேன்! நீங்க படிக்கிற பசங்க நான் கேட்டா சொல்லி தருவானான்னு தெரியல! அவன்கிட்ட நீயே பேசு! முடிஞ்சா வீட்டுக்கு வந்து சொல்லி கொடுக்க சொல்லு அப்படின்னு அண்ணன் சொன்னதும்தான் உன்னைய கூப்பிட வந்தேன்!"

"இந்த வெங்கி என்னைய பத்தி இப்படி நினைச்சுட்டு இருக்கானா? நாளைக்கு அவன்கிட்ட பேசிக்கிறேன்" என்று கோபமாக கூறினேன்.

"ஹே... விக்ரம் இதுக்கு போயி இப்படி டென்ஷன் ஆகுறே! ப்ளீஸ் கொஞ்சம் ரிலாக்ஸா இரு!" என்று கெஞ்சினாள்.

என்ன ஒரு ஆச்சர்யம்! இவளே என்னிடம் கெஞ்சுகிறாளே!

இதுதான் நமக்கு கிடைத்த சரியான வாய்ப்பு எப்படியாவது இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தேன்.

"ஓகே நான் சொல்லி கொடுக்குறேன்! பட் ஒன் கண்டிசன்!"

"என்னடா எதுவா இருந்தாலும் சொல்லு!"

"நான் உங்க வீட்டுக்கு வர முடியாது! நீங்க ரெண்டு பேரும் என்னோட வீட்டுக்கு வரணும்! அங்க வச்சுதான் சொல்லி தருவேன்!"

"டேய்! உங்க வீட்டுக்கு நான் எப்படி வர்றது?"

"மதுகுட்டி இதுக்கெல்லாம் ஏன் இப்படி தயங்குற? என்னோட அம்மாதான் உன்னைய வீட்டுக்கு கூட்டீட்டு வர சொன்னங்க!"

"என்னடா சொல்றே? உங்க அம்மா எதுக்குடா என்னைய வர சொன்னங்க ?" என்று பயந்தாள்.

"நமக்குள்ள நடந்த எல்லா விஷயமும் அம்மாவுக்கு தெரியும்! அதான் நீ என்கூட படிக்கிறேனு சொன்னேன்! உடனே உன்னைய பாக்கணும்னு சொன்னாங்க!"

"என்னைய பத்தி தப்பா எதுவும் நினைச்சுட்டு இருக்காங்களா?" சோகத்துடன் கேட்டாள்.

"இல்ல! நீ எல்லாத்தையும் மறந்து என்னைய மன்னிச்சு பேசுறேனு சொன்னதும்தான் உன்னைய பாக்கணும்னு ஆசைப்பட்டாங்க! நானும் உன்னைய எப்படி வீட்டுக்கு வர சொல்லுறதுன்னு ரொம்ப நாளா யோசிச்சுகிட்டு இருந்தேன்! இன்னக்கி நீயே அதுக்கு நல்ல வழி காமிச்சுட்டே!" என்று சிரித்தேன்.

"ஏன்டா! இதுக்குதான் என்னோட அண்ணன் கிட்ட பேசிக்குறேன்னு சொல்லி என்னைய பயமுறுத்துனியா" என்று சீறினாள்.

"நான் இதுக்காக பண்ணல! உண்மையாவே வெங்கி மேல எனக்கு கொஞ்சம் கோவம்தான்! அதோட நீ எங்க வீட்டுக்கு வந்தா நான் ரொம்ப சந்தோசப்படுவேன்!"

சிறிது நேரம் தீவிரமாக யோசித்துவிட்டு மதுமிதா மீண்டும் பேசத்தொடங்கினாள்.

"ஒகே விக்ரம், நான் உனக்காக வரேன்" என்று சிரித்தாள்.

"மதுகுட்டி! நொவ் ஐ ஆம் வெரி ஹாப்பி! கம்மிங் சண்டே மார்னிங் வெங்கிய கூட்டிட்டு எங்க வீட்டுக்கு வந்துடு!"

நான் அப்படியே சந்தோசத்தில் துள்ளி குதித்தேன்.

"ஹ்ம்ம் கண்டிப்பா வரேன் விக்ரம்! பட்..." என்று இழுத்தாள்.

"இன்னும் என்னடி யோசனை?"

"வீட்டுக்கு வா! அப்படின்னு மட்டும் சொல்றே! உங்க வீடு எங்க இருக்குனு சொல்லவே இல்லையே"

ச்சே... சந்தோசத்தில் இதை மறந்துவிட்டோமே என நினைத்துக்கொண்டு வீட்டிற்கு எப்படி வருவது என்ற வழியை சொல்லி முடித்தேன்.

"ஓகே விக்ரம்! எனக்கு ரூட் கிளியரா புரிஞ்சிடுச்சு! அண்ணன்கிட்ட சொல்லி கூட்டிகிட்டு வரேன்!"

"மது அதெல்லாம் சரி! எனக்கு ஏதோ பேரு வச்சு செல்லமா கூப்பிடனும்னு நினைச்சியே அது என்ன பேரு?"

நான் மிகவும் ஆர்வமுடன் கேட்டேன்.

"போடா சம்ஸா மூக்கா! இதுதான் உன்னோட பேரு!”

“நான் கூட என்னமோனு நினைச்சேன்! ச்சீ... போடி லூசு!”

“என்னடா நினைச்சே?”

“எதுவும் நினைக்கல டைம் ஆச்சு வீட்டுக்கு கிளம்புடி”

நான் செல்லமாக கோபப்பட்டேன்.

“சரி விக்ரம் நாம நாளைக்கு பேசலாம்! எனக்கும் இப்போ நேரமாச்சு வீட்டுக்கு கிளம்புறேன்!" என்று சிரித்தாள்.

“ஓகே!” என்று பதிலுக்கு சிரித்துவிட்டு இருவரும் விடைபெற்றோம்.

என்னுடைய பெற்றோரிடம் மதுமிதா நம் வீட்டிற்கு அவளுடைய அண்ணனுடன் வருவதாக சொன்னேன். அவர்களும் மிகுந்த சந்தோசம் அடைந்தனர்.

அடுத்த நாள் பள்ளிக்கு சென்றதும் வெங்கியும் எங்கள் வீட்டுக்கு வருகிறேன் என்று சம்மதம் தெரிவித்தான். மேலும் அவன் மீது எதுவும் கோபப்படாமல் இருந்துவிட்டேன்.

நான் வெங்கியிடம் சண்டை போடாமல் அமைதியாக இருந்ததால் மதுமிதா என்னை பார்த்து புன்னகைத்தாள்.

நானும் பதிலுக்கு புன்னகைத்துவிட்டு அவள் எங்கள் வீட்டிற்கு வரும் நாள் எப்போது வருமென்று எதிர்பார்த்து காத்திருந்தேன்...
[+] 5 users Like feelmystory's post
Like Reply
finally a worthy update vro,storya nalla kondu poringa adutha updateku waiting
[+] 1 user Likes Zombieraj60's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)