Romance வித்யா வித்தைக்காரி 2.0!!!
#61
வித்யா வித்தைக்காரி
【31】

என் ஆளுதான் கனவுல வந்தான் போதுமா..

உனக்கு லவ்வர் வேற இருக்கானா?

உங்களுக்கே இருக்கும்போது எனக்கு இருக்கக் கூடாதா..

அதென்ன உங்களுக்கே..

சும்மா டிஸ்டர்ப் பண்ணாம போங்க, நான் என் ஆள பார்க்கணும் என போர்வையை எடுத்து தலையை மொத்தமாக மூடிக்கொண்டாள்...

இன்னைக்கு டிவோர்ஸ் பேப்பர்ஸ் ஃபைல் பண்ணிடுவோம்னு உன் ஆளுகிட்ட சொல்லிடு என எழுந்து காலைக்கடன்களை முடித்து ஜாக்கிங் சென்றுவிட்டான்.

அத்தை பூஸ்ட் என சொல்லி அது ரெடியாகும் வரை பேப்பர் படித்துக் கொண்டிருந்த வாசுவையும் வள்ளியையும் தன்னால் முடிந்த அளவுக்கு கிண்டல் செய்தாள்.

ஏய் வித்யா இங்க கொஞ்சம் வாயேன் என வாசு கூப்பிட அவரின் அருகில் உட்கார்ந்தாள். கையில் பூஸ்ட் கப்புடன் வள்ளி ஹாலுக்கு வந்தாள். ஜாக்கிங் முடிந்து வீட்டுக்குள் நுழைந்த வளன் வித்யாவை முறைத்துக் கொண்டே சென்றான்.

வள்ளி : என்னடி பண்ணுன, இப்படி முறைச்சுட்டு போறான்...

அதுக்கு புள்ளைய பெத்துருக்கணும்..

ஏய்!

சிரிக்கத் தெரிஞ்ச புள்ளைய பெத்துருக்கணும்னு சொன்னேன்.

என்னால முடியலை. நீ அவனை மாத்துறது..

வாசு : அதுக்கு மருமக கையில லாஃபிங்க் கேஸ் எடுத்துட்டு தான் சுத்தணும்...

செஞ்சுட்டா போச்சு..

சரிம்மா. வளன விடு.. உனக்கு அடுத்து படிக்க ஆசை இருக்கா...

சும்மா ஜோக் அடிக்காதீங்க மாமா.

கேட்டதுக்கு பதில் சொல்லு..

நா‌ன் பாஸ் ஆக மாட்டேன். பாஸ் ஆனா பார்க்கலாம் என பாதி கப் பூஸ்ட் குடித்தவளின் வயிறு கலக்க மீதியை ஒரே மடக்கில் குடித்துவிட்டு ஓடிவிட்டாள்.

ஃபெயில் ஆகிடும்னு சொன்னவகிட்ட படிக்கிறியான்னு கேட்கிறீங்க..

வாசு சிரித்துக் கொண்டே வேலைக்காரி இவர்களை பார்கிறாளா என்பதைப் பார்த்தார். வள்ளி உன் காதை குடு என சொல்லி விஷயத்தை சொல்ல, அதைக் கேட்ட வள்ளி அதிர்ச்சியில் வாயடைத்துப் போனாள்.

வித்யா மற்றும் சீனியை ஐஸ் கிரீம் பார்லரில் பார்ப்பதற்கு சற்று முன்னர் பேப்பர் சேஸிங் தொடர்பாக ஒருவரை சந்தி்த்தார் வாசு..

நீங்களா இப்படி என்பதைப் போல அதிர்ச்சியில் பார்த்தாள் வள்ளி.

அவன் ரிசர்ச்க்காக லண்டன் போனா அவளுக்கு விசா உடனே கிடைக்குமான்னு தெரியலை. பாஸ்போர்ட் அவகிட்ட இருக்காது. கல்யாணம் ரிஜிஸ்டர் பண்ணனும்.அதுக்கு பிறகு தான் பாஸ்போர்ட் எடுக்க முடியும்.

எல்லாத்தையும் விட முக்கியமா அவள கூட்டிட்டு போவானான்னு தெரியலை. வீட்டுல இருந்தா அவளுக்கு வெறுப்பாக இருக்கும் அதனால தான்..

பார்த்து. ரொம்ப தான் மருமக மேல அக்கறை. மாமியார் வாய் விட்டு கேட்டு மூணு நாள் ஆச்சு ஒண்ணயும் காணோம் என கன்னத்தில் கிள்ள வேலைக்காரி அதைப் பார்த்து சிரித்து விட்டாள்.

இது எப்பத்துல இருந்து எனபதைப் போல வள்ளியைப் பார்த்தார் வாசு..

அய்யோ சாரி சாரி என்னை மன்னிச்சுருங்க..

கிழவிக்கு இளமை துள்ளி விளையாடுது போல, இன்னைக்கு அடக்குறேன்...

அது நடக்காது என வாசு காதில் கிசுகிசுத்தாள் வள்ளி..

வித்யா அவசர அவசரமாக மாடிக்கு ஓடும்போது வளன் தன் பள்ளிக்கால தோழனிடம் பேசிக் கொண்டிருந்தான். அந்த நண்பர்தான் இன்று வித்யா மற்றும் வளன் சந்திக்க போகும் வக்கீல். ஏற்கனவே வளன் கேட்டுக் கொண்டபடி  எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார். டேய் சொன்னது நியாபகம் இருக்கட்டும், எதுவும் பிரச்சனை ஆகிவிடக்கூடாது என்று சொல்லி முடித்தான் வளன்.
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#62
வித்யா வித்தைக்காரி
【32】

வயிற்றை சுத்தம் செய்தவள் "ஷப்பா இப்பதான் ஃப்ரீயா இருக்கு" என சத்தமாக சொல்லிக் கொண்டே வெளியே வந்தாள்.

அதைக் கேட்டவன் உள்ளுக்குள் சிரித்தான். வெளியில் முறைத்துக் கொண்டே..

இப்பதான் லாயர் கிட்ட பேசினேன். உன்கிட்ட அட்ரஸ் ப்ரூஃப் என்ன இருக்கு அதை கொஞ்சம் எடு. அப்புறம் பாஸ்போர்ட்‌ சைஸ் போட்டோ இருக்கா என தேவையான டாக்குமெண்ட்ஸ்களை சரி பார்த்தான். ஷார்ப்பா 11 மணிக்கு கிளம்பணும் என சீரியஸ் முகத்தை வைத்துக் கொண்டே சொன்னான்.

ஆனால் உள்ளுக்குள் டிவோர்ஸ் வேணாம்னு சொல்லு விது பிளீஸ் பிளீஸ் என கெஞ்சினான். வளன் சொன்னதுதைக் கேட்ட வித்யாவின் முகம் சோகமாக மாறியது. இருந்தாலும் அவன் கேட்டது ஒரு விஷயமே இல்லை என்பதைப் போல அவனிடம் பேசினாள்.

உங்ககிட்ட லாஃபிங்க் கேஸ் இருக்கா?

வாட்?

அதாங்க சிரிப்பு கேஸ்..

இருக்கு..

எனக்கு குடுங்க..

உனக்கு எதுக்கு அது..

டிவோர்ஸ் பேப்பர்ஸ் கையெழுத்து போட்டுட்டு வீட்டுக்கு வந்த பிறகு எல்லார்கிட்டேயும் எதுவும் நடக்காத மாதிரி சிரிச்சு பேசணுமே, அதான்..

இடியட் அதுக்கெல்லாம் யூஸ் பண்ணககூடாது.

உங்க பொண்டாட்டியா கடைசி ஆசை, குடுக்க போறீங்களா இல்லையா என உரிமையாக கேட்டாள்.

இப்ப கூட எப்படி எந்த கவலையும் இல்லாத மாதிரி நடிக்குறா என புலம்பிக் கொண்டே அவனது லேப் அறைக்குள் நுழைந்தான். அவன் நண்பர்கள் பிஎச்டி முடித்த போது கிண்டல் செய்யும் நோக்கில் இனியாவது கொஞ்சம் சிரி என சொல்லி வாங்கிக் கொடுத்த நைட்ரஸ் ஆக்சைடு இருந்த வாட்டர் பாட்டில் சைஸ் கண்டெய்னர் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான்.

என்னை விட உங்களுக்கு தான் லாஃபிங்க் கேஸ் முக்கியமா தேவை என்று சொல்ல என்னடி திமிரா பேசுற என அவளை நெருங்கினான்.

மறு நிமிடம் அய்யோ அம்மா, அத்தை என்ன காப்பாத்துங்க மாமா என்ன காப்பாத்துங்க என ஒரே சத்தம். வாசு, வள்ளி, வேலைக்காரி மூவரும் ஹாலுக்கு வந்தனர்.

"எவ்ளோ திமிரு உனக்கு, உன்னை என்ன பண்றேன் பாரு" என மாடிப்படிகளில் வித்யாவின் கையைப் பிடித்து வளன் தரதர வென இழுக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

மாமா காப்பாத்துங்க என பரிதாபமாக கையை நீட்டினாள் வித்யா..

வேலைக்காரி தம்பி விட்ருங்க தம்பி என்று சொல்ல..

வள்ளி டேய் அவளை விடுறா என்று கத்த..

டேய் உன்ன என லுங்கியை மடித்து கட்டிக் கொண்டு வாசு மாடிப்படிகளில் ஏற..

சத்தம் கேட்டு திரும்பிய வளன் 32 பல்லும் தெரியும் அளவுக்கு சிரித்தான்...

தன் மகனைப் பார்த்த வாசு மாடிப்‌படியில் ஏறுவதை நிறுத்தினார். அவர் பின்னால் ஓடி வந்த வள்ளி "ஏங்க எதாவது பண்ணிடப்‌ போறாங்க, காப்பாத்துங்க" என கத்தினாள்.

நீ வா என வள்ளி கையைப் பிடித்தார் வாசு. வித்யாவுக்கு கை வலித்தது. அம்மா கை வலிக்குது என்று சொல்ல அவள் கைகளை விட்டான் வளன்.

வள்ளி தன் கணவனின் கையை உதறிவிட்டு, பதறிப் போய் வித்யாவின் கைகளைப் பிடித்தாள். வள்ளி கண்களில் கண்ணீர்.

என்னாச்சு வித்யா..

ஒண்ணுமில்லை அத்தை.

"என்னடா பண்ணுன அவளை" என வளனை பார்த்து மீண்டும் கத்தினாள் வள்ளி. வள்ளி வளனை திட்ட திட்ட எல்லா பல்லும் தெரியும் படி வளன் சிரித்தான். அதைப் பார்த்த வித்யாவும் அவனைப் பார்த்து சிரித்தாள்.

வள்ளிக்கு ஓரளவுக்கு எல்லாம் புரிந்தது. உனக்கு விளையாடுறதுக்கு ஒரு அளவில்லையா என வித்யா கன்னத்தில் பளார்ரென ஒரு அறை கொடுத்தாள்.

வளனைக்கூட ஒரு நாளும் இதுவரை கை நீட்டி அடிக்காத வள்ளி வித்யாவை அறைந்ததை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி.

வித்யாவை அடித்த வள்ளி ஷோபாவில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள். வாசு அவளை சமாதானம் செய்ய முயற்சி செய்தார்.

வித்யா மன்னிப்பு கேட்டாள்.

நீ என்ன வேணும்னாலும் பண்ணு. ஆனா உயிரே போற மாதிரி காப்பாத்துங்கன்னு மட்டும் கத்தாதே என்று வித்யாவை கட்டிப் பிடித்து அழுதாள் வள்ளி.

சிறு வயதிலியே தாயை இழந்த வித்யாவுக்கு வள்ளியின் வலி  பெரிதாக புரியவில்லை.

உன்னை அவ பொண்ணு மாதிரி நினைக்குறா அதனால தான் தாங்க முடியாமல் அடிச்சுட்டா, மன்னிச்சுடும்மா என்றார் வாசு.

தப்பு என் மேல தான மாமா என சொல்லிய வித்யா கண்ணிலும் கண்ணீர்.

கண்களில் சோகம், உதட்டில் புன்னகையுடன் அவர்கள் மூவரையும் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் நைட்ரஸ் ஆக்சைடை சுவாசித்திருந்த வளன்.
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
#63
வித்யா வித்தைக்காரி
【33】

வித்யா அப்பா அப்பா என சொல்லி பேசுவதை கவனித்தார் வாசு. அரை மணி நேரம் கழித்து வெளியில் செல்லும் போது முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு வித்யா தொடர்ந்து பேசுவதைப் பார்த்தார். ஆனால் அவள் மலருடன் பேசிக் கொண்டிருந்தாள்.

ஒருவேளை தன் அப்பாவிடம் எல்லாம் சொல்லி விட்டாள் அதனால் தான் சோகமாக இருக்கிறாள் என நினைத்து காரில் ஏறியதும் நேசமணிக்கு அழைத்து நடந்த விஷயங்களை சொல்லிவிட்டார் வாசு. பாவம் வள்ளி  தாயில்லா புள்ளைய அடிச்சிட்டேன்னு வள்ளி கவலையில் இருக்கா என்றார்.

அவ(வித்யா) யாரைப் பற்றியும் எதுவும் குறை சொல்ல மாட்டா. உங்க ரெண்டு பேரையும் பத்தி பேசும்போது அவ குரல்ல எப்பவும் சந்தோஷம் இருக்கும். மாப்பிள்ளைய பத்தி பேசும் போதுதான் ஒருநாள் சந்தோஷமா பேசுவா, இன்னொரு நாள் குரல் கொஞ்சம் டல்லா இருக்கும். அப்ப கூட கேட்டா எதுவும் சொல்ல மாட்டா. கவலைய விடுங்க சம்பந்தி என சிரித்தார் நேசமணி.

வித்யா டிவோர்ஸ் விஷயமாக வளன் சொல்லிய எல்லாவற்றையும் மலரிடம் சொன்னாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாம் ஓவர் என சோகமாக சொல்ல, மலர் சிரித்துவிட்டாள்.

ஏண்டி சிரிக்கிற..

லூசு மாதிரி பேசுனா சிரிக்காம என்ன பண்ண.

என்னடி இப்படி சொல்ற.

பின்ன என்னடி நேத்துதான 4 மணி நேரம் ட்ரைவ் பண்ணி அருமை பொண்டாட்டிய பார்க்க வந்தாங்க, அதுக்குள்ள எப்படி டிவோர்ஸ் ஃபைல் பண்ணுவாங்க..

சத்தியமா மலர். அவங்க அப்படிதான் சொன்னாங்க..

ஏய் லூசு! கோர்ட்ல டிவோர்ஸ் வாங்க நீங்க கல்யாணம் பண்ணுனா ப்ரூஃப் குடுக்கணும். உங்க கிட்ட என்ன ப்ரூஃப் இருக்கு?

ஒண்ணுமே இல்லை.

இன்னும் நீங்க ரிஜிஸ்டர் கூட பண்ணல.

ஆமா..

கோர்ட்ல கல்யாணம் பண்ணி வைப்பாங்க தெரியுமா?

கோர்ட்ல கல்யாணமா?

எனக்கு அவரு உன்னை டிவோர்ஸ்னு சொல்லி மேரேஜ் ரிஜிஸ்டர் பண்ண கூட்டிட்டு போறார்ன்னு தோணுது..

என்னடி சொல்ற..

செகண்ட் இயர் படிக்கும் போது எங்க பக்கத்து வீட்ல இருக்குற சொந்தக்கார அக்காவுக்கு டிவோர்ஸ் ஆச்சுன்னு சொன்னேனா?

ஆமா சொன்ன..

அவங்க டிவோர்ஸ் அப்ளை பண்ணும் போது கல்யாணப் பத்திரிக்கை, ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்த போட்டோ எல்லாம் அந்த மனுவோட சேர்த்து குடுத்த காப்பி நானும் பார்த்திருக்கேன்..

அப்படியா..

முக்கியமா கோர்ட் ஸ்டாம்பு இருக்கும். எல்லா பேப்பர்லயும் கையெழுத்து போடுவாங்க. முக்கியமா எதுக்கு டிவோர்ஸ்னு பாயிண்ட் பை பாயிண்ட் அதுல எழுதிருக்கும்.

இது மியூச்சுவல் டிவோர்ஸ்..

எல்லாம் ஒண்ணு தான். வாத்தி உன்னை முகத்தை சீரியஸா வச்சிட்டு கலாய்க்க ட்ரை பண்ணுது..

உண்மையா வா..

ரெண்டு பேரும் லவ்வ சொல்லித் தொலைங்க என்றாள் மலர்.

முகத்தில் புன்னகையுடன் அவளது அறைக்கு சென்றாள்.

என்ன சிரிப்பு..?

அப்பாகிட்ட சொல்லிட்டேன். பிடிக்காத மேரேஜ் வேணாம் டிவோர்ஸ் குடுத்துட்டு வான்னு சொல்லிட்டாங்க என தன் மொபைலை லாக் செய்யாமல் கட்டிலில் வைத்து விட்டு குளிக்க சென்றாள்.

ஃபோன் எடுத்து கால் ஹிஸ்டரியில் நேசமணிக்கு அழைத்து அவள் பேசியிருப்பதை உறுதி செய்தான்.. அவள் சொல்வது உண்மை என நினைத்து நேசமணி நம்பரை அவள் மொபைலில் இருந்து எடுத்தான் வளன்.

பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் அவசரமாக எல்லா ஆப்களையும் குளோஸ் செய்துவிட்டான். அவள் வெளியே வந்து மொபைல் எடுத்துக் கொண்டு மீண்டும் பாத்ரூம் உள்ளே நுழைந்தாள்.

வளன் தன் மாமனாருக்கு அழைத்தான்.

சொல்லுங்க மாப்பிள்ளை..

வித்யா எதும் சொன்னாளா மாமா.

இல்லை மாப்பிள்ளை, அவ பேசுனா ஆனா எதும் சொல்லலை. அப்பா ஃபோன் பண்ணி எல்லாம் சொன்னாங்க. அம்மா ரொம்ப வருத்தமா இருக்குறதா சொன்னாங்க.

ஆமா மாமா என சொல்லி வைத்தான்.

பாத்ரூம் உள்ளே நுழைந்தவள் எல்லா ஆப்களும் குளோஸ் ஆகியிருப்பதை பார்த்து சிரித்தாள். அவள் மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் சிறகடித்து பறந்தன.

வளன் தன் நண்பனுக்கு அழைத்தான்...

மச்சி அவளுக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சுன்னு நினைக்கிறேன் என அப்பாவிடம் சொல்லிவிட்டதாக சொன்னது, வித்யாவின் அப்பாவுக்கு அழைத்து பேசியது என நடந்த விஷயத்தை சொன்னான்.

எதிர் முனையில் வளனின் நண்பன் சிரித்தான்.

ஏண்டா சிரிக்கிற.

நீ லக்கி மச்சி, அவனவன் லவ் பண்ணி மேரேஜ் பண்ணிட்டு 1 வருசத்துல டிவோர்ஸ் வேணும்னு வர்றான். நீ அதிர்ஷ்டம் செய்தவன். தங்கச்சிகிட்ட எல்லாம் சொல்லி கூட்டிட்டு வா என்றான்.

ரிசர்ச் முடியற வரைக்கும் எதுவும் சொல்ல வேண்டாம்னு இருக்கேன் மச்சி.

ஏண்டா, அதுக்கும் இதுக்கும் என்ன இருக்கு. உன் தவத்தைக் கலைத்து விடுவான்னு பயமா இருக்கு.

அது இல்லடா என நைட்ரஸ் ஆக்சைடு கூத்தை சொல்ல நண்பன் குலுங்கி குலுங்கி சிரித்தான்.

தவத்தைக் சொன்னாக் கூட ஒண்ணும் பண்ணாம சும்மா இருந்துருவா.

அப்புறம்..

அந்த கையும் வாயும் சும்மாவே இருக்காது. அவளை பார்க்கும் போதெல்லாம் நான் முறைச்சு பார்த்துட்டு இருக்கும் போதே 2-3 மணி நேரத்துக்கு ஒரு நேரம் வந்து எதாவது என்னை கடுப்பேத்த பண்ணுவா. லவ் சொன்னா அப்புறம் நான் எல்லாம் பண்றேன் நீ சேர் போட்டு உட்கார்ந்து என்ன பண்ணனும் மட்டும் சொல்லுன்னு வந்து நிப்பா மச்சி..

உனக்கு தேவை தான் மச்சி. எத்தனையோ பேரை நீ நினைச்ச மாதிரி நடந்துக்கலைன்னா திட்டுவ, இப்ப பாரு. உனக்கு தேவை தான் மச்சி. ஹா ஹா ஹா... 

டேய் என்ன பண்ண..? 

நாம நம்ம பிளான் படி எல்லாம் ட்ரை பண்ணுவோம்.

டேய் இன்னொரு விஷயம், எல்லாம் அவளுக்கு தெரிஞ்சதால, அய்யோ என் வாழ்க்கை போச்சேன்னு அழுது புலம்பி எதாவது பண்ணுவா..

புரியல..

திரும்பவும் சொன்னான். அந்த கோர்ட் மேரேஜ் ஆபிசர்கிட்ட கொஞ்சம் கடைசியா சொன்ன விஷயத்தை பேசிடுடா பிளீஸ் என்றான் வளன்.

சரிடா மச்சி என ஃபோன் கட் செய்தான் லாயர். காலையிலேயே என்ன இவ்ளோ சிரிப்பு என்ற மனைவியிடம் வளன் சொல்லிய விஷயங்களை சொன்னான் லாயர்.

நானும் கோர்ட்டுக்கு வரவா?

எதுக்கு..?

சாட்சி கையெழுத்து போட..

இன்னைக்கு அது தேவையில்லை. ஜஸ்ட் எல்லா தகவலும் கொடுக்கணும். அவங்க ஒரு பப்ளிக் அறிவிப்பு ஒண்ணு போடுவாங்க, 30 நாளைக்கு பிறகு தான் மேரேஜ் ரிஜிஸ்டர் பண்ணனும்.

பரவாயில்லை நானும் வரேன்.

ஏன் அந்த பொண்ண பார்க்கணுமா?

ஆமா, வளன ஆட்டிப் படைக்க போகும் அந்த பொண்ண பார்க்கணும் என்றாள் லாயரின் மனைவி. அவள் வளனுடன் 12 வது வரை ஒன்றாக படித்தவள்.

குளித்து முடித்தாள், பாத்ரூம் உள்ளிருந்தே தன் அப்பாவுக்கு அழைத்து வளன் ஃபோன் பேசியதை உறுதி செய்தாள்.

மாட்டிக்கிட்டான் மாட்டிக்கிட்டான் கெமிக்கல் மண்டையன் மாட்டிக்கிட்டான் என சிரித்துக் கொண்டே வெளியே வந்தாள்.
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
#64
Super update
Like Reply
#65
Excellent update
IGNORE NEGATIVITY & [b]SPREAD POSTIVITY Smile
 [/b]DON'T HATE SPEECH Namaskar
Like Reply
#66
Adangappa.... Mudila da saami... Romba romba blade podringa.... Divorce divorce nu javvu pola ilukuringa.....sema gaandu aaguthu.... Suthi suthi orey vishiyam than aaguthu. Story move aagala. Padikira interest suthama pochi... Kodumai... Veruppu.. inime intha story pakkame Vara porathu illa da saami...
Like Reply
#67
Amazing Update Nanba
Like Reply
#68
Super update
Like Reply
#69
bro kadhai nalla fun ah poguthu but konjam fast forward pannunga bro but udane sex venum nu illa light ah teasing mathiri pannunga bro
Like Reply
#70
Excellent
Like Reply
#71
வித்யா வித்தைக்காரி
【34】

வள்ளியிடம் முக்கியமான வேலையாக வெளியே செல்வதாகவும், லஞ்ச் வெளியே சாப்பிட்டுக் கொள்வதாகவும் சொல்லி கிளம்பி சென்றனர். கோர்ட் வளாகத்தில் நடந்த அனைத்தும் தன் தோழி மலர் சொன்னது போல நடந்தும் பெரிதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தாமல் முடிந்த அளவுக்கு தன் உணர்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக இருந்தாள் வித்யா.

சாப்பாடு ஆர்டர் செய்து வெயிட் பண்ணும் போது ஈவினிங் கான்பரன்ஸ் கால் தொடர்பாக முக்கியமான அப்டேட் வேண்டும், கொஞ்சம் அவசரம் என ஆபீஸிலிருந்து அழைத்து கேட்டார்கள். பிறர் முன்னிலையில் தன் ஆராய்ச்சி பற்றி பேச முடியாது என்பதால் 5 மினிட்ஸ் என சொல்லி தனிமையில் பேச எதாவது இடம் இருக்குமா என தேடிய படி நடக்க ஆரம்பித்தான் வளன்.

சீனி அதே ஹோட்டலில் சாப்பிட வருவது போல உள்ளே வந்து தற்செயலாக பார்த்தது போல வித்யாவின் அருகே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தான். 

வெளியே எங்கேயும் போய்ட்டு வந்தீங்களா என ஆரம்பித்து கல்யாணம் ரிஜிஸ்டர் ஆனதுக்கு வாழ்த்துக்களை சொல்ல நன்றி சொல்லியா வித்யா அவங்களுக்கு (வளன்) வாழ்த்து சொல்லாதீங்க என உளற "நான் உன் அப்பா மாதிரி" , "உன் அப்பா வயசு" என்ற வார்த்தைகளை சொல்லி எல்லா விசயங்களையும் போட்டு வாங்கி விட்டான்.

சீனிக்கு அழைப்பு வந்தது, வளனுக்கு என் பொண்ண பிடிக்கும், they were together a lot, I really thought they will marry someday என ஒரு குண்டை தூக்கிப் போட்டுவிட்டு அந்த ஃபோன்காலை அட்டென்ட் செய்து தனக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் போய் அமர்ந்து பேச, சார் நீங்க சொன்ன விஷயம் எல்லாம் கேட்டுட்டேன் என்றார் எதிர்முனையில் பேசிய மேனேஜர்.

வித்யா சீனி சொன்ன விஷயத்தை நினைத்து குழப்பத்தில் இருந்தாள். ஏற்கனவே ஒருமுறை என் லவ்வர் கிட்ட பேசுறேன் என்று சொன்ன நியாபகம் வேறு.

உள்ளே வந்த வளனிடம் உங்க சீனி சார் என வித்யா சொல்ல, சீனி தனியாக சாப்பிட உட்கார்ந்திருப்பதை பார்த்தவன் மரியாதைக்காக அவனருகில் சென்று

ஹலோ சார்..

ஹே வளன். என்ன வளன் லஞ்ச் எல்லாம் வெளிய சாப்பிட வர்றீங்க. ஆனா வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிட்டா மட்டும் வர மாட்டேங்குறீங்க...

ஒரு வேலையா வெளியே வந்தோம் அப்படியே என சிரித்தான்.

சரி விடுங்க, உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா என்ன பண்ண என வளனுக்கு குற்ற உணர்ச்சி வருவது போல பார்த்துக் கொண்டான்.

அப்படியில்லை சார், சண்டே வர்ற பிளான். வித்யா  ஏற்கனவே உங்ககிட்ட சொன்னதாக சொன்னா..

ஓஹ்! பரவாயில்லையே பொண்டாட்டி பேச்சை இவ்ளோ சீக்கிரம் கேட்க ஆரம்பிச்சுட்டீங்க, குட்.

வேற என்ன பண்ண என சமாளித்தான்.

அப்ப சண்டே கண்டிப்பா வரணும்.

கண்டிப்பா சார்..

போங்க போய் சாப்பிடுங்க உங்க வைஃப் வெயிட் பண்றாங்க என சொல்லிவிட்டு சீனி வளனை அனுப்பி வைத்தார். சூட்டோடு சூடாக வித்யா எதாவது கேட்டு சண்டை வராதா என்ற எண்ணம்.

வளன் வித்யா அருகில் வந்து உட்கார இருவரும் தங்கள் உணவை சாப்பிட ஆரம்பித்தனர்.

நீங்க கெமிக்கல்ல டாக்டர் பட்டம் வாங்கிருக்கீங்களா?

எஸ், உனக்கு யார் சொன்னா?

சீனி சார் தான் அவரு பொண்ணு உங்கள மாதிரி டாக்டர்னு சொன்னாரு என்றாள். 

ஆமா, அவங்களுக்கும் பிஎச்டி முடிச்சுருக்காங்க.

ஓஹ்! உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?

ஆமா, ஷீ இஸ் எ குட் லுக்கிங் கேர்ள் என சிரித்தான்.

தெரியுமான்னு கேட்டா "குட் லுக்கிங் கேர்ளாம், பெரிய குட் லுக்கிங் கேர்ள்" என முனக..

என்ன?

இல்லை, அவங்ககிட்ட கேட்டுதான் ட்ரீட் சண்டே வைக்கலாம்னு சீனி சார் சொன்னாரு..

ஓஹ்!

சீனி லஞ்ச்க்கு தற்செயலாக வந்திருப்பான் என நினைத்தவனுக்கு மகளிடம் கேட்டு ட்ரீட் டைம் முடிவு பண்ணியதாக வித்யா சொன்னதும் சந்தேகம் வந்தது. உடல்நிலை சரியில்லை என்று சொல்லியவுடன் வீட்டுக்கு வந்தது, லஞ்ச் டைம்ல அப்டேட் கேட்டு கால் வந்தது என நடந்து கொள்ளும் விஷயங்களை யோசிக்கும் போது வளனுக்கு சந்தேகம் வலுத்தது. காரில் போகும் போது சீனியின் மகளுக்கு கால் செய்தான். ஆனால் அவள் அந்த அழைப்பை ஏற்கவில்லை.

வீட்டுக்கு வந்த வித்யாவிடம் பேச வள்ளிக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் பேசிப் பேசி வள்ளியை சாதாரண நிலைக்கு கொண்டு வந்தாள் வித்யா.

அத்தை.. அன்னைக்கு போன கோவிலுக்கு போகலாமா?

போகலாம். என்ன ஸ்பெஷல்..

அவங்களுக்கு தெரியக் கூடாது என முதலிரவில் விவாகரத்து கேட்டது இன்று கல்யாணம் ரிஜிஸ்டர் பண்ண தேவையான முதல் ஸ்டெப் எடுத்து வைத்தது என எல்லா விசயங்களையும் சொல்லி முடித்தாள்...

ஓஹ்! ஃபர்ஸ்ட் நைட்க்கு முன்ன கடவுளை வேண்டிக்கணும், அதான..

அத்தை... என சிணுங்கினாள்..

உங்களுக்குள்ள எதுவும் நடக்கலன்னு எங்களுக்கு தெரியும். ரிசர்ச் முடியட்டும்னு வெயிட் பண்றான்னு நினைச்சோம், இந்த மாதிரி நினைக்கல..

அய்யோ மாமாவுக்கும் தெரியுமா?

ஏண்டி, நீ எல்லார்கிட்டேயும் ஜாலியா சிரிச்சு பேசுனா எல்லா விஷயத்திலும் நீ ரொம்ப சந்தோஷமா இருக்கேன்னு அர்த்தமா என்ன என வள்ளி கேட்க வித்யாவிடம் எந்த பதிலும் இல்லை.

⪼ மாலை ⪻

தன்னிடமிருந்த சேலை ஒன்றை உடுத்தி லேப் அறைக்குள் நுழைந்தாள். ஒரு ஓரமாக நின்று வேலை பார்த்துக் கொண்டிருந்தவன் அவளைப் பார்த்தான். ஆனால் எதுவும் கேட்கவில்லை. கீழே சென்றவள் தலையில் மல்லிகை பூச்சூடி அத்தை என வள்ளியைத் தேடி அவளது அறைக்குள் செல்ல வள்ளி கட்டிலில் படுத்திருந்தாள். என்னால வர முடியாது நீ வளன கூட்டிட்டு போ என்றாள்.

காரணத்தைப் புரிந்து கொண்ட வித்யா, லேப் அறைக்குள் நுழைந்தாள். மல்லிப்‌பூ வாசம் மூக்கை துளைக்க அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனருகில் வந்து வெளியே போகணும் என்று சொல்ல மகுடிக்கு மயங்கியவன் போல மறு பேச்சு பேசாமல் அவள் சொன்னதை செய்தான்.. .

வீட்டுக்கு திரும்ப வந்த பிறகு...

என்ன வேண்டிக்கிட்ட?

என் புருஷன் என்கிட்ட சீக்கிரம் அவரோட லவ்வ சொல்லணும் என சொல்லி ஜாக்கெட்டின் அடிப்பகுதியில் முலைகள் பக்கவாட்டில் தெரியாமலிருக்க போட்டிருந்த பின்னை கழட்டி எடுத்தாள்.

முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதுக்கு எல்லாம் சொல்லி விடலாம் என நினைத்தாலும்...

யாரு நானா? ஹா ஹா என வில்லன் போல சிரித்துக் கொண்டே அவளைப் பார்த்தான்.

வேற யாரு என சொல்லிக் கொண்டே தோள் பகுதியில் ஜாக்கெட்டில் மாட்டியிருந்த பின்னை கழட்டினாள். எல்லா பெண்களையும் போல வலது பக்க மார்பகங்களை முழுமையாக மறைத்துக் கொண்டிருந்த சேலையை அட்ஜஸ்ட் செய்து வளன் கவனத்தை தன் முலைகள் மீது திரும்ப வைத்தாள்.

ஏற்கனவே மனைவியை சேலையில் பார்த்த கிறக்கத்தில் மகுடிக்கு மயங்கிய பாம்பு போல இருந்தவன் அது இல்லாமல் பார்த்தால் எப்படியிருக்கும் என்ற எண்ணம் வர அவளை நெருங்கினான்.

வெயிட் என சொல்லி அந்த அறையில் இருந்த டிஜிட்டல் வால் கிளாக்கைப் பார்த்தாள். மணி 5:24.

கிளாக்ல என்ன பார்க்குற..?

டைம்..

எல்லாரும் கிளாக்க சுத்தி பல்லி ஓடுதான்னு தான பார்ப்பாங்க.. நீ மட்டும் தான இந்த உலகத்துல டைம் பார்க்குற என மூச்சு காற்று அவள் முலைகள் மீது விழும் அளவுக்கு நெருங்கி வந்தான். ..

5:30 க்கு தான் நல்ல நேரம் என சொல்லி வெட்கத்தில் தலையை கவிழ்ந்து கொண்டாள்...
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply
#72
சிறப்பான உரைநடை
Like Reply
#73
aha first night illaya first evening ah appo super ji
Like Reply
#74
அடுத்து என்ன முதலிரவா நண்பா
Like Reply
#75
Super update
Like Reply
#76
வித்யா வித்தைக்காரி
【35】

டிஜிட்டல் வால் கிளாக்கில் ஒவ்வொரு வினாடியும் மாறிக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இருவருக்கும் எப்போடா 5:30 ஆகும் என்ற எண்ணம். வித்யா கொஞ்சம் கஷ்டப்பட்டு எச்சிலை விழுங்கினாள்.

வித்யாவுக்கு அவளையறியாமல் பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது. அய்யோ என்ன நடக்குமோ என நினைத்துப் வளனைப் பார்த்தான். அவன் முகத்திலும் அதே பயமும் பதட்டமும். மணி 5:29:17 எனக் காட்டியது.

வளனின் ஃபோன் ரிங் ஆனது. இருவரும் திடுக்கிட்டு சுய நினைவுக்கு வந்தது போல ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். வளன் அந்த அழைப்பை அட்டென்ட் செய்து "ஹலோ ஸ்ரீ, ஹவ் ஆர் யூ" என்றான். மயான அமைதியிலிருந்த அந்த அறையில் வளனின் வலப்புறம் இருந்தவளுக்கு எதிர்முனையில் ஒரு பெண் "ஹலோ" சொல்வது தெளிவாகக் கேட்டது.

வளன் சிரித்துப் பேசிக் கொண்டே பால்கனியை நோக்கி சென்றான். மணி 5:30 ஆக, பால்கனியைப் பார்த்தாள். இதுவரை இப்படி யாரிடமும் சிரித்துப் பேசிப் பார்த்திராத கணவனைப் பார்க்கும் போது முதலில் ஆச்சரியமாக இருந்தது.

பொண்ணுன்னா பேயும் இறங்கும்னு சும்மாவா சொன்னாங்க என நினைத்து வளனையே பார்த்தாள். அவளுக்கும் முதலில் சிரிப்பு வந்தது. ஆனால் வளன் ஸ்ரீ என்று சொன்னது நியாபகம் வர அவளின் முகம் வாடியது.

ஸ்ரீ ஒருவேளை சீனி சார் மகளா?

ஒருவேளை அந்தப் பெண்தான் வளனின் காதலியா?

சீனி சார் சொன்னது போல கல்யாணம் பண்ணும் எண்ணத்தில் இருந்தார்களா?

நாம தான் இடையில வந்துட்டமா என்ற எண்ணம் அவளை வருத்தமடைய செய்தது.

அய்யோ இப்படி சிரிச்சு பேசுறானே என மனம் பதபதைக்க பால்கனியை நோக்கி சென்றாள். வித்யாவை பார்த்தவன் அவளைப் பார்த்து சிரித்தான். அவளுக்கு இன்னும் அந்த பெண்ணிடம் சிரித்துப் பேசுகிறான் என்ற எண்ணம் வந்ததே தவிர, தன்னைப் பார்த்து சிரிக்கிறான் என்ற எண்ணம் துளியும் வரவில்லை.

வித்யாவின் முகம் சோகமாக இருப்பதைப் பார்த்தவன் நெருங்கி வந்து அவள் தலையில் வலிக்காத அளவுக்கு கொட்டுவதைப் போல செய்தான். ஹம் போங்க என சிணுங்கினாள்.

போங்க என்ற சத்தம் கேட்ட ஸ்ரீ, வித்யாவிடம் பேசலாமா எனக் கேட்க தன் மனைவியிடம் ஃபோனை கொடுத்தான்.

பெண்கள் இருவரும் நலம் விசாரித்து முடிக்க, நீங்க எப்படி வளனை சமாளிக்க போறீங்கன்னு தெரியலை, சண்டே மீட் பண்ணலாம் என்று சொல்லி வளனிடம் ஃபோன் கொடுக்க சொல்லி ஸ்ரீ மற்றும் வளன் இருவரும் தொடர்ந்து பேசினார்கள்.

நா‌ன் இங்க நிற்கிறேன். மனசாட்சி இல்லாம இப்படி இன்னொரு பொண்ணுகிட்ட கடலை போடுறான் என முறைத்துக் கொண்டிருந்தாள். வினாடிக்கு வினாடி பொறாமை அதிகமாக வளனின் இடது கையை பற்றிக் கொண்டாள்.

பொறாமையால் தன் கையைப் பிடித்திருக்கும் மனைவியின் செயலை வினோதமாக பார்த்தாலும் அவனால் தொடர்ந்து பேச முடியவில்லை. திடிரென்று திக்குவாய் வந்தவன் போல உளறியவன் சண்டே பார்க்கலாம் என அந்த அழைப்பை துண்டித்தான்.

வித்யா தயங்கித் தயங்கி ஒருவித பயத்துடன்..

அவங்கதான் உங்க லவ்வரா எனக் கேட்டாள்.

ஆமா என சொல்லியவன் சிரித்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தான்.

வாடிய முகத்துடன் வளனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். உள்ளே சென்று இரண்டு நாற்காலிகளை எடுத்துக் கொண்டு வந்தவன்,தன் மனைவியை உட்கார சொல்லி ஸ்ரீ மற்றும் அவனது உறவு பற்றி சொன்னான்.

சீனி சார் நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க...

வளன் சிரித்ததால் அவளால் கேள்வியை முடிக்க முடியவில்லை. சீனி தன் அப்பாவுடன் வேலை செய்த விஷயம், ஏன் ராஜினாமா செய்தார், எப்படி இந்த கம்பெனி ஓனரை கல்யாணம் செய்தார், எப்படி தான் ஷேர் ஹோல்டராக இருக்கும் கம்பெனியை டேக் ஓவர் செய்தார் என எல்லாம் சொல்லி முடித்தான்.

வாயைப் பிளந்து அய்யோ சீனி சார் அப்படிப்பட்ட ஆளா எனக் கேட்டவளிடம், இதுக்கே இப்படியா என சீனி ஏன் விருந்துக்கு வர சொல்கிறார் என தனக்கிருந்த சந்தேகம், ஏன் ஸ்ரீயிடம் பேசினான் என எல்லா விஷயங்களும் சொன்னான்.

நம்ம கண்டிப்பா விருந்துக்கு போகணுமா? என எல்லாம் அறிந்த அதிர்ச்சியிலிருந்த வித்யா கேட்டாள்.

எனக்கும் விருப்பம் இல்லை. ஆனா வாக்கு குடுத்துட்டோம்.

இப்ப என்ன பண்ண?

போகலாம், பட் எப்பவும் என் கண்ணு முன்ன இருக்கணும். தனியா எங்கையும் போகக்கூடாது. குறிப்பா சீனி எதுவும் தனியா உன்னை சாப்பிட சொன்னா சாப்பிடக் கூடாது.

வித்யாவுக்கு பயம் தொத்திக் கொண்டது. சீனி பற்றி கடந்த முறை பேசியதால் சண்டை வந்ததை நினைத்தவள், மன்னிப்பு கேட்டாள்.

இதை சற்றும் எதிர்பாராத வளன் சிரித்தான். அவள் கைகளைப் பற்றிக் கொண்டான்.

இன்னொரு விஷயம் சொல்றேன். ஆனா இது வதந்தி எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியாது என சீனி மற்றும் ஸ்ரீயின் தகாத உறவு பற்றி சொல்ல வித்யாவுக்கு மயக்கம் மட்டும்தான் வரவில்லை.

பெத்த பொண்ணு கூடவா?

வெறும் வதந்தி. ஸ்ரீ அவரு பொண்ணு இல்லை. அவருடைய வைஃப்க்கு முத புருஷன் கூட பிறந்த பொண்ணு..

எப்படி இருந்தாலும் சீனிதான அப்பா.

இப்ப புரியுதா நீ ஏன் கவனமா இருக்கணும்னு..

நா‌ன் அங்க வரமாட்டேன்..

ஹம்..

நீங்க உங்க வேலைய சீக்கிரம் முடிச்சுடுவீங்களா?

தெரியலை.

என்னால தான் எல்லா பிரச்சனையுமா?

அப்படியில்லை என கைகளை தடவினான்.

அப்ப போய்த்தான் ஆகணுமா?

எதுவும் சொல்லலாமல் கைகளை தடவியபடி வித்யாவைப் பார்த்து சிரித்தான். இருவரும் கொஞ்ச நேரம் கண்களால் தங்கள் காதலை வெளிக்காட்ட முயற்சி செய்தார்கள்.

அறைக்குள் மீண்டும் வந்தார்கள். அறைக்குள் ஓடிய டிஜிட்டல் வால் கிளாக்கைப் பார்த்தான். மணி 6:31:53.  அறைக்குள் வால் கிளாக்கைப் பார்க்கும் தன் கணவனைப் பார்த்த வித்யாவுக்கு சிரிப்பு வந்தது. "போச்சா" என சொல்லிக் கொண்டே லைட் ஆன் செய்து திரும்பியவள் வளனின் நெஞ்சில் மோதினாள்.

வளன் இரண்டடி முன்னோக்கி எடுத்து வைக்க, பின்னோக்கி சென்ற வித்யாவின் பின்புறம் சுவரில் இடித்தது.

மாட்டிக்கிட்டியா, இனி எங்க போவ என்பதைப் போல பார்த்தான்.

அத்தை 6:30 வரைக்கும் தான் நல்ல நேரம்னு சொன்னாங்க...

ஓஹ்! மாமியார் பிளான் பண்ணிதான் அனுப்புனாங்களா?

ஆமா என்பதைப் போல தலையை அசைத்தாள்.

எல்லாத்துக்குமா?

அத்.....தை கிட்ட கேக்க.....

வித்யாவின் காதோரமாக கையை வைத்து அவள் தலையை தன் பக்கமாக இழுத்தான்.

அவள் உதட்டில் தன் உதட்டை பொறுத்தினான். கீழ் உதட்டை சில வினாடிகள் உறிஞ்ச கண்கள் விரிந்தன. மூச்சு விட வேண்டும் என்பதை மறந்து போய் விட்டாள் வித்யா. வளனை தள்ளிவிட்டாள். கடினமாக மூச்சு வாங்கினாள்.

மீண்டும் நெருங்கிய வளனிடம்..

நல்ல நேரமில்லை..

பயப்படாத, என் ப்ராஜக்ட் முடிஞ்ச பிறகுதான் வேற எல்லாம் என உதட்டைக் கவ்வ.. வித்யா மீண்டும் மூச்சு விட சிரமப் படும்போது தள்ளி விட்டாள்...

உனக்கு ஓகே வா என வளன் கேட்க..

ஆமா என்பதை போல தலையை அசைத்தாள்.

மீண்டும் முத்தமிட வந்தவனிடம் ஒரு நிமிஷம் என்றாள் வித்யா..

என்ன? சொல்லு என சொல்லி படுக்கை நோக்கி அவள் கையைப் பிடித்தபடி ஸ்டெப்ஸ் எடுத்து வைத்தான்.

நா‌ன் படிச்சு பாஸ் ஆகுற வரைக்கும்..

நீ பாஸ் ஆகுற வரைக்கும் எதுவும் வேண்டாமா?

ஆமா என அவசர அவசரமாக தலையை ஆட்டினாள்...

நம்ம கொஞ்ச டைம் கேட்டா பதிலுக்கு நானும் டைம் கேப்பேன்னு கேக்குறா. அடங்கவே மாட்டியாடி என நினைத்தவன்..

"பிட் அடிச்சா" எனக் கேட்கும் போதே படுக்கையை நெருங்கியிருந்தான் வளன்.

"இல்லை, படிச்சு பாஸ்" என சொல்லிக் கொண்டிருக்கும் போதே "பேனிக் அட்டாக்" வந்தவன் போல வளன் தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டே கட்டிலில் மல்லாக்க விழுந்தான்.

பதறிப்போய் கட்டிலுக்கு வந்து நெஞ்சில் கையை வைத்தவளை கீழே தள்ளி அவள்மேல் படுத்தான்.

என்னை விடுங்க...

நீ பாஸ் ஆகுற வரைக்குமா ?

ஆமா என தலையசைக்க..

நா‌ன் கிழவனாகி எனக்கெல்லாம் அறுந்து போய்டும் என சொல்லிய வளன் சேலை விலகி ஜாக்கெட்டுக்குள் இருந்த முலைகள் மீது தாடைகள் உரச, ஜாக்கெட் மேல் தெரிந்த சதைகள் மேல் முத்தம் கொடுத்தான்...
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
#77
மிகவும் வித்தியாசமான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
#78
இப்போதுதான் கதை சூடு பிடிக்கிறது. அருமையான பதிவு
Like Reply
#79
Excellent update
IGNORE NEGATIVITY & [b]SPREAD POSTIVITY Smile
 [/b]DON'T HATE SPEECH Namaskar
Like Reply
#80
Excellent
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)