Romance ♨️ மரணமில்லா உணர்வுகள்♨️ stopped no more update♨️
#21
♨️♨️♨️♨️♨️

♨️


" நேத்ரா,,
என் அப்பா லைன்ல வர்றார் ....
நீ கட் பண்ணு...
அவர் கிட்ட பேசிட்டு மறுபடியும் உன்னை கூப்பிடுறேன்
" என்றான் ...


♨️


" நெவர் சத்யன் ....
இது எனக்கான டைம் ...
நான் யாருக்கும் இதை விட்டுத் தரமுடியாது ...
உன் அப்பா வெயிட் பண்ணட்டும் "
என்றாள்
இரக்கமற்ற குரலில் ....

♨️


" ஏய் ஏய் ப்ளீஸ்டி
 ஏதோ அவசரம் போலிருக்கு
அடுத்தடுத்து கால் வந்துக்கிட்டே இருக்கு ...
ஒரு பத்து நிமிஷம் டைம் குடு ப்ளீஸ் பேபி "
தகப்பனிடம் பேசுவதற்காக காதலியிடம் கெஞ்சினான்
சத்யன் ...

♨️


" முடியாது சத்யன் ... "
 என்று மறுத்தாள் நேத்ரா ...



" ஸாரி நேத்ரா வேற வழியில்லை "
என்ற சத்யன் சட்டென்று நேத்ராவின் போன் காலை துண்டித்து விட்டு

 அப்பாவின் நம்பருக்கு கால் செய்தான் ...
இரண்டாவது ரிங்கிலேயே எடுத்த பூபதி
 " நல்லாருக்கியா தம்பி ?"
என்று விசாரிக்க .....
" ம் நல்லாருக்கேன்ப்பா ...
அங்க வீட்டுல எல்லாரும் நல்லாருக்கீங்களா ?"
என்று பதிலுக்கு விசாரித்தான் ....

♨️



" ம் எல்லாரும் நல்லாருக்கோம் சத்யா ....
ஒரு நல்ல சேதி சொல்லத்தான் போன் பண்ணேன்
" என்றவர் தனது பால்ய நண்பர்
இசக்கியை
 சந்தையில் சந்தித்த
விபரங்களை ஒன்று விடாமல் கூறிவிட்டு
" உனக்கு நாச்சியாவை ஞாபகம் இருக்கா சத்யா?
சின்ன வயசுல பள்ளிக்கூட லீவுக்கு
தக்கலைக்கு போவியேடா ...
 அந்த மாமன் தான் "
என்று ஞாபகப்படுத்தினார் ....

♨️♨️♨️♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
♨️♨️♨️♨️

♨️

நாச்சியா என்றதுமே பட்டுப்பாவாடை கட்டி...
தாழம்பு ஜடை பின்னி...
கன்னத்தில் திருஷ்டி பொட்டாக மை வைத்து ...
தண்டை கொலுசு சப்தமிட மாமரத்து ஊஞ்சலில்
ஆடிய சிறு பெண்ணொருத்தி
சத்யனின் ஞாபத்தில் வந்தாள் .....

♨️


" ம் ம் ஞாபகம் இருக்குப்பா ....
நா ச்சியா,
சின்ன வயசுலயே நல்ல அழகு ..
அமைதியான குணம் ...
நம்ம பேமலிக்குப் பொருத்தமா இருப்பா "
என்று சத்யன் சொன்னதும் ....

♨️

" ஏவே சத்யா ...
சரியான கூறுகெட்ட பயலா இருக்கியேவே ...
 உன்னைவிட சின்னவளா இருந்தாலும்
இனி
அவ இவ -னு
பேர் சொல்லிலாம் கூப்பிடக் கூடாதுவே ...

♨️

முத்துவுக்கு பொஞ்சாதின்னா
உனக்கு மதினியா ஆகனும் "
 என்று சிரிப்பும் சந்தோஷமுமாக
மகனை அதட்டினார் ...

♨️

தனது ஞாபகத்தில் இருக்கும் 
அந்த சின்னப் பெண் தான்
தனக்கு அண்ணி என்றதும் சத்யனும் சிரித்துவிட்டான் "
சரிப்பா ...
இனிமே அண்ணின்னே கூப்பிடுறேன் "

♨️

 என்று சமாதானமாகப் பேசினான் ...
அதன்பிறகு
சத்யனின் படிப்பு ஹாஸ்டலில் தரப்படும் உணவு
 பற்றியெல்லாம் விசாரித்த
பூபதியிடமிருந்து போனை வாங்கிய
முத்து தம்பியை நலம் விசாரித்து விட்டு "
ஏதாச்சும் காசு வேணும்டா
தயங்காம கேளு சத்யா ...
 இப்பக்கூட
நெல்லு போட்ட காசு லட்ச ரூபா இருக்குவே"
 என்றான் ...

♨️♨️♨️♨️♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply
#23
♨️♨️♨️
♨️♨️
♨️

இல்லான்ன
முன்னாடி நீ அனுப்பினதே இருக்கு ...
தேவைப்பட்டா கேட்கிறேன் "
என்று கூறிவிட்டு
நாச்சியாவைப் பற்றி பேசி சத்யனும்
 தனது அண்ணன் மனதில்
 கல்யாண கனவை விதைத்தான் ...

♨️


அதன் பிறகு
 அம்மா ,
தங்கை ,
பாட்டி என அனைவரிடமும் பேசிவிட்டு சத்யன்
தனது மொபைலை
அனைக்கும் போது கிட்டத்தட்ட
நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆகியிருந்தது ....

♨️


இனி நேத்ராவுக்கு
கால் செய்து சமாதானம் செய்யவேண்டும்
என்று எண்ணியபடி
அவளது நம்பருக்கு அழைத்தான் ...
சுவிட்ச் ஆப் என்று வந்தது ...
இதயத்தில் சுருக்கென்று
முள் தைக்க மீண்டும் முயன்றான் ...
அதே பதில் வந்தது ... "
 ச்சே ...
இவ்வளவு கோபமா ?"
என்று எரிச்சலுடன் மொபைலை வைத்துவிட்டு சாப்பிடுவதற்காக கேன்டினுக்கு கிளம்பினான் ....

♨️

சாப்பிட்டு வந்தப் பிறகு
மீண்டும் முயன்றுப் பார்த்தான் ...
சுவிட்ச் ஆப் என்றே வந்தது ....
இதுக்கு என்ன பிரச்சனை பண்ணப் போறாளோ ?'
என்று எண்ணியபடி
சற்றுநேரம் வரை படித்துக்கொண்டிருந்து விட்டு
தூங்கிப் போனான் ..

♨️♨️♨️♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply
#24
♨️♨️♨️

♨️

சரியாக பனிரெண்டு நாற்பதுக்கு
அவனது மொபைல் ஒலிக்க
 சட்டென்று தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்து
மொபைலை எடுத்துப் பார்த்தான் ..
புதிய நம்பராக இருந்தது ...
ஆன் செய்து காதில் வைத்து
" ஹலோ?" என்றான் ..

♨️

எதிர்முணையில் ஹிந்தியில் 
ஒரு பெண் காச்மூச் என்று கத்தினாள் ...
சத்யனுக்கும் ஹிந்தி ஓரளவுக்குத் தெரியும்
என்பதால் பேச ஆரம்பித்ததுமே
யார் என்று புரிந்து போனது ....
நேத்ராவின் அம்மா
மைதிலி தான்
அழைத்திருந்தாள் ....

♨️


அவள் பேசியதிலிருந்து
நேத்ரா தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள்
என்று தெளிவாக சத்யன் அதிர்ந்து போனான் ...
 " இப்போ நேத்ரா எங்கே ஆன்ட்டி?"
 பதட்டமாக கேட்டான்...

♨️♨️♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply
#25
♨️♨️♨️

♨️

மைதிலி கூறியதிலிருந்து சத்யனுக்கு புரிந்தது ......
நேத்ரா
தனது இடக் கையின் மணிகட்டு
ரத்தக்குழாயை பிளேடால் நறுக்கிக்கொண்டு
தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள் ...

♨️

இப்போது மருத்துவமணையில் இருக்கிறாள்
என்பது தான் ...

♨️

தலையில் அடித்துக் கொண்டான் .... 
ன்ன செய்வதென்றே புரியவில்லை .....
இன்னும் பதட்டமாக கத்திக் கொண்டிருந்தாள்
நேத்ராவின் அம்மா ...
நேத்ராவின்
இந்த நிலைக்கு சத்யனே காரணம்
என்று குற்றம் சாட்டினாள் ...

♨️

" ஸாரி ஆன்ட்டி ... 
ன் அப்பா கூட பேசுறதுக்காக தான்
நேத்ராவோட காலை கட் பண்ணேன் ...
அவளை அவாய்ட் பண்ணனும்னு நினைக்கலை "
என்று சத்யன் எவ்வளவு கெஞ்சியும் மைதிலி
தனது தரப்பிலிருந்து மாறவில்லை ...
உடனடியாக கிளம்பி வருமாரு வற்புறுத்தினாள் ...

♨️♨️♨️♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply
#26
♨️♨️♨️

♨️

வேறு வழியில்லாமல்
" ஓகே ஆன்ட்டி ..
 நீங்க நேத்ராவை பார்த்துக்கங்க..
நான் காலேஜ்க்கு
 இன்பார்ம் பண்ணிட்டு கிளம்பி வர்றேன்
" என்று கூறிவிட்டு
மொபைலை அனைத்து வைத்தான் ...

♨️


சற்று நேரம் வரை கண்மூடி அமர்ந்திருந்தான் ...
 நேத்ராவின் இந்த கோபம் தான்
அவனை அதிகமாகப் பயபடுத்தியது ....
அவள்
இது போல் தற்கொலைக்கு முயல்வது
 இது இரண்டாவது முறை ...
முன்பு கல்லூரி விழா
 ஒன்றில் சக பெண் தோழியுடன்
இவன் மேடையில் நடனமாடியதற்காக
ஒரு முறை இதேபோல் செய்திருந்தாள் ...

♨️

கவலையுடன் தாடையில் ை
வைத்து அமர்ந்திருந்தவன்
ஒரு நீண்ட மூச்சுக்குப்
பிறகு தனது மொபைலை எடுத்து
பிரின்ஸிபால் நம்பருக்கு கால் செய்தான் ....

♨️

முதலில் எடுக்கவில்லை 
ன்றதும் மீண்டும் முயன்றான் ....
இம்முறை எடுத்தவர் நம்பரை வைத்து
 சத்யனை அடையாளம் கண்டு "
சொல்லு சத்யா ?"
என்று ஆங்கிலத்தில் கேட்டார்...

♨️


" தொந்தரவுக்கு மன்னிச்சிடுங்க சார் ....
என் காலேஜ் பிரண்ட்
ஒருத்தனுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சு ...
இப்பதான் போன்கால் வந்தது ..
நான் போகனும் சார் ...
ஐந்து நாள் லீவு வேணும் "
என்று இவனும் ஆங்கிலத்தில் கூறினான் ..

♨️♨️♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply
#27
♨️♨️♨️

யார் ?
எந்த ஊரில் விபத்து ?
இவனுக்கு ஏதாவது பணம் தேவையா ?
 என்று கேட்டுவிட்டு
" பெங்களூர் என்றால்
 இங்கிருந்து டெல்லிக்குப் போய்விட்டு
அங்கிருந்து விமானம் மூலமாக
பெங்களூருக்கு செல்லுமாறு
யோசனை கூறியவர்

♨️

" ஐந்து நாளில் திரும்பிடனும் சத்யன் ...
முக்கியமான வகுப்புகள்
 அடுத்த வாரத்தில் தொடங்கவிருக்கிறது
" என்று எச்சரித்தார் ...

♨️

ஐந்து நாளில் வந்துவிடுவதாக கூறி
அவருக்கு நன்றி சொல்லிவிட்டு
தனது மொபைலை அனைத்தான்...
பிறகு பத்து நிமிடத்தில் தயாராகி
 தனது பேக்குடன் வெளியே வந்தான் ...

♨️

ஹாஸ்டல் வார்டனுக்கு பிரின்ஸிபால் 
 தகவல் சொல்லியிருந்தபடியால்
சத்யனைக் கண்டதும்
" என்னாச்சு ?"
என்று விசாரித்துவிட்டு
 அவனை பேருந்து நிறுத்தம் வரை கொண்டு போய் விடுவதற்கு பைக்குடன்
 ஒரு ஆளையும் தயார் செய்து வைத்திருந்தார் ...

♨️

அவருக்கும் 
நன்றி கூறிவிட்டு பேருந்துநிலையம் வந்து
டெல்லி செல்லும் பேருந்தில் ஏறியமர்ந்தான் ...

♨️♨️♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply
#28
♨️♨️♨️

♨️

டெல்லியிலிருந்து விமானம் மூலமாக
 பெங்களூரு வந்தவன்
மைதிலி
கூறிய தகவலின் பேரில் நேத்ரா
அனுமதிக்கப்பட்டிருந்த
சிட்டி ஹாஸ்பிட்டலுக்கே
நேரடியாக வந்து சேர்ந்தான் ...

♨️


ரிசப்ஷனில்
அவளிருக்கும் அறை எண்ணை விசாரித்து
 இரண்டாவது தளம் வந்து
அறைக்கதவை சம்பிரதாயமாக
தட்டிவிட்டு உள்ளே வந்தான் ...
அறையின் நுடுவேயிருந்த கட்டிலில் நேத்ரா ....
இடது மணிக்கட்டில் கட்டுப் போடப்பட்டு
வலது கையில் குளுகோஸ் ஏறிக் கொண்டிருக்க

♨️

கண்மூடிப் படுத்திருந்தாள் ...
பக்கத்திலிருந்த சிறிய படுக்கையில்
நேத்ராவின் அம்மா
மைதிலி ஏதோவொரு ஹிந்தி நாவலை படித்தபடி
படுத்திருந்தாள் ....

♨️

கதவு தட்டிய சப்தம் கேட்டு மைதிலி ா
ரென்று கேட்டபடி திரும்பிப் பார்க்க ...
 சத்யன் அவளை கவனிக்காது
தோளில் மாட்டியிருந்த
பையை எடுத்து அங்கிருந்த
சேரில் வீசிவிட்டு நேத்ரா இருந்த படுக்கையை
நெருங்கினான் ...

♨️♨️♨️♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply
#29
♨️♨️♨️

♨️

வந்திருப்பது சத்யன் என்றதும் மீண்டும்
தனது புலம்பலை
ஆரம்பித்த மைதிலியை
அலட்சியம் செய்து படுக்கையிலிருந்த
நேத்ராவின் தோளைத் தொட்டுத்
தூக்கி உட்கார வைத்தான் ...

♨️


" சத்யன் ....?" 
ன்று நேத்ரா சொல்லி முடிக்கும்
முன் அவளது இடக் கன்னத்தில்
தனது வலக்கையை இறக்கினான் ...
ஆவென்று அலறியபடி கன்னத்தை
கையால் மறைத்த
நேத்ராவின் தோள் பற்றி உலுக்கி
" ஏன்டி ?
ஏன் இப்படிலாம் பண்ணி என்னைக் கொல்ற?
எப்பதான் என்னை உண்மையா புரிஞ்சுக்குவ ?"
என்று
ஆத்திரமாக கத்தினான் ...

♨️

மகளை அடித்துவிட்டான் 
ன்றதும் கோபமாக திட்டியபடி மைதிலி
அவர்கள் அருகே வர ...
அறைக்கதவை கைகாட்டி "
வெளியப் போங்க ...
நான் நேத்ரா கூட பேசனும் "
 என்றான் ஆங்கிலத்தில் ...

♨️♨️♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply
#30
♨️♨️♨️♨️

♨️

மைதிலி தன் மகளைப் பார்த்தாள் ....
" நீ போம்மா ...
அதான் சத்யன் வந்தாச்சே ....
நான் பார்த்துக்கிறேன் "
என்று
நேத்ரா ஹிந்தியில் கூறவும்
மைதிலி
அங்கிருந்து வெளியேறி
அறைக்கதவை மூடிவிட்டுப் போனாள் ....

♨️

இன்னும்
கணத்தை  கையில் தாங்கி அமர்ந்திருந்தவளை
சற்றுநேரம்
உற்று நோக்கிவிட்டு "
இடியட் ......"
 என்றபடி
அவளை அடித்த அதே வேகத்தில்
இழுத்து அணைத்தான் .....

♨️

"என் லவ்வை புரிஞ்சுக்கடி.... 
இப்பா படி தொட்டதுக்கெல்லாம்
சந்தேகப்பட்டா
நான் என்னதான் செய்யமுடியும் ?"
வேதனையாக புலம்பியவனின்
முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் ...

♨️

நேத்ரா,, 
வயசு இருபத்தைந்து ...
 சாதரணமாகப் பார்த்தால் சுமாரான அழகி ...
 மேக்கப் போட்டப் பிறகுப் பார்த்தால் பேரழகி ....
பெண்கள் முழங்காலுக்கு கீழே வரை ஆடை அணிந்தால்
அது முறைகேடு எனும் அல்ட்ரா மார்டன் வர்க்கத்துப்
பெண் ....பெண்களின் ஆடைக்குறைப்பை சட்டமாக்க வாக்கெடுப்பு நடத்தினால்
முதல் வாக்கு இவளுடையதாகத் தான் இருக்கும் ....

♨️♨️♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply
#31
♨️♨️♨️♨️

♨️

சத்யன் அவளின் பால் நிற மேனியில் மயங்கினாலும்
அவளது
அறிவுக் கூர்மைக்கு தான்
அவளை காதலிக்க ஆரம்பித்ததே ...
அழகை விட பன்மடங்கு
பொது அறிவுடையவள் ....
அந்த அறிவே
 அவளது கர்வத்திற்கும் காரணமாகிப் போனது ....

♨️


ஒரே கல்லூரியில் படிக்கும் நாட்களில்

அவள் காலால் இட்ட வேலையை தலையால் செய்ய காத்திருந்த கூட்டத்தில் நிமிர்வுடன்

 நேருக்குநேர் பேசிய சத்யனைக் கண்டு வியந்து
பிறகு அவனையும் விழவைத்த பெருமை
இன்றும் குறையவில்லை .... 

கார் கம்பெணியில் காலமெல்லாம் உழைத்தாலும் முன்னேற்றம்

என்பது கடுகளவே
என்று தெரிந்து கொண்ட நேத்ரா இந்த
தேர்வை எழுதி
ஒரு வருட படிப்பை முடித்து விட்டால்
நல்ல எதிர்காலமும்
அவனை திருமணம் செய்த பிறகு
தனக்கு சிறப்பானதொரு வாழ்க்கையும் அமையும்
என்று
சத்யனைத் தூண்டி இந்த தேர்வை எழுத வைத்தாள் ...

♨️

" ஆறு வருஷம் இஞ்சினியரிங் முடிக்கவே

அப்பா பல லட்சம் செலவு பண்ணிட்டார் ...
இன்னும் இதுக்கு நாலு லட்சம் வரை செலவாகும்
நேத்ரா ...
இதையும் அவர் கிட்ட கேட்க சங்கடமாயிருக்கு
 " என்று தயங்கினான் தான் ...

♨️♨️♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply
#32
♨️♨️♨️

♨️

என்ன சத்யா பேசுற?
படிக்கும் போதே கேம்பஸ்ல செலக்ட் ஆகி
 நல்ல சம்பளத்தில் வேலை கிடைச்சுடும் ...
அப்புறம்
கொஞ்சம் கொஞ்சமா
திருப்பிக் குடுத்துட்டா போச்சு "
என்று
ஏதேதோ சமாதானம் கூறி
அவனை பஞ்சாப் அனுப்பி வைத்தாள் ...

♨️


சத்யன் சங்கடப்பட்டதே
தவறு என்பது போல்
அப்பா பூபதியும் அண்ணன்
முத்துவும்
அவன் கேட்ட பணத்தை உடனடியாக
அனுப்பி வைத்தார்கள் ....

♨️


ஆனால்
நேத்ராவைப் பொருத்தவரையில்
அவளது வளமான எதிர்காலத்துக்காத்தான்
சத்யனின் இந்த படிப்பே ....

♨️

அவளும் இப்போது பெங்களூரில் 
ரு ஐடி கம்பெணியில் வேலை செய்கிறாள் தான் ....
இருந்தாலும்
அழகும் கம்பீரமும் நிறைந்த சத்யனும் ..
கௌரவமான அவனது படிப்பும் ...
அதன் பிறகு கிடைக்கப் போகும்
மதிப்பான உத்தியோகமும் ...

♨️

அதனால்
வரும் வருமானத்தையும் விட்டு விட முடியுமா?....

♨️♨️♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply
#33
♨️♨️♨️♨️

♨️

நேத்ராவின் அம்மாவை மட்டும் தான்
சத்யனுக்குத் தெரியும் ...
அவளது அப்பாவைப் பற்றி கேட்டபோது "
மம்மிக்கும் டாடிக்கும் ஒத்து வரலை சத்யன் ...


♨️

அதனால
பைவ் இயர்ஸ் முன்னாடி
ரெண்டு பேரும் டிவேர்ஸ் பண்ணிக்கிட்டாங்க "
என்று சாதரணமாகச்
 சொல்லி முடித்துவிட்டாள் ...

♨️

 

சத்யனுக்கும்
நேத்ராவின்
 பின்னனி பெரிய பிரச்சனையாகத் தோன்றவில்லை ....
 அவள் தன் மீது வைத்த நேசம் உண்மையானது
என்பது மட்டுமே
 அவனுக்குப் போதுமானதாக இருந்தது.

♨️


" உன்கூட
பேசாம என்னால இருக்க முடியலைடா ....
நீ பேசாத நேரத்தில் செத்துடனும் போல இருக்கு சத்யா "
அவன் மார்பில் புரண்டபடி மெல்ல விசும்பினாள் ...

♨️

இரு கையால்
அவளது தாடையைத் தாங்கி முகத்தை நிமிர்த்தி "
அதுக்காக இப்படியா செய்வ...
அங்கிருந்து வர்றதுக்குள்ள செத்து பிழைச்சேன்டி "
என்று கடுமையான குரலில் பேசிவன்

♨️

அவளின் சிவந்த இதழ்களைக் கண்டதும்
பட்டென்று கோபம் குறைந்து விட
கண்கள் காதலில் மிதக்க "
 உன்னை..... "
என்றபடி
அவளின் இதழ்களை கவ்விக் கொண்டான் .....

♨️♨️♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply
#34
♨️♨️♨️♨️ ♨️♨️♨️♨️மீண்டும்♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️

♨️♨️♨️♨️♨️ அடுத்த அப்டேட் இல் ♨️சந்திப்போம்♨️♨️♨️♨️♨️



 இது என் நண்பன்


♨️வினோத்தின் கதை♨️


 His mail id.


 ♨️Vinothyoung55k;♨️


♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply
#35
Semma interesting and romantic update boss
Like Reply
#36
எப்படியும் அண்ணியாரே தான் கல்யாணம் பண்ணிக் கொண்டு வரப் போகிறார்
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
[+] 1 user Likes knockout19's post
Like Reply
#37
♨️ ♨ ♨️

♨️♨️

♨️


♨️♨️மரணமில்லா உணர்வுகள்♨️


 அத்தியாயம் 3


♨️♨️♨️

♨️             ♨️

♨️



♨️♨️♨️♨️♨️♨️♨️♨️

♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply
#38
♨️♨️♨️♨️♨️♨️


♨️

அதற்காகவே காத்திருந்தவள் போல்
 சத்யனின் கழுத்தில்
கைப் போட்டு வளைத்து
தன் முகத்தருகே இழுத்து
 முத்தமிட வசதி செய்து கொடுத்தாள்
நேத்ரா ...

♨️


முத்தமிட்டு நீண்ட நாட்கள் ஆனதோ ....
அல்லது
கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாக
அவளைக் காணாத ஏக்கமோ
சத்யனின் முத்தம் நீண்டு கொண்டே போனது ....

♨️




இருவரும்
ஒருவருக்குள் ஒருவர்
உருகி
இறுகிக் கொண்டிருந்த சமயம்....
கதவு தட்டப்படும்
ஓசை
கேட்டு விலகினர் ....


♨️


நேத்ராவின் உமிழ்நீர் படிந்த 
தனது உதடுகளை துடைத்துக் கொண்டே
 திரும்பிப் பார்த்தான் ....
டாக்டரும் அவருடன் ஒரு நர்ஸூம் வந்திருந்தனர் ...

♨️


" ஹாய் குட் ஈவினிங் " 
என்று
புன்னகைத்த நேத்ராவை பரிசோதித்து விட்டு
 " ம் ம் ஓகே ....
நாளை காலை டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு கிளம்பலாம் "
என்றார் டாக்டர் ...


♨️♨️♨️♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply
#39
♨️♨️♨️

♨️

சத்யன்
யாரென்பது போல் கேள்வியாகப் பார்த்தவருக்கு
 " என் லவ்வர் ...
பேர் சத்யன் "
என்று அறிமுகம் செய்து வைத்த நேத்ரா

♨️

அவனது படிப்பு விபரங்களை கூறிவிட்டு
இன்னும் ஆறு மாதத்தில்
தங்களுக்கு திருமணம் நடக்கவிருப்பதையும்
கூறினாள் ...

♨️


சத்யனுக்கு ா
ழ்த்துச் சொல்லி
கை குலுக்கிவிட்டு
வெளியேறினார் டாக்டர் ...

♨️


சத்யன் வந்ததும்
வெளியே சென்ற மைதிலி
திரும்பவும்
இரவு உறங்கத்தான் அறைக்கு வந்தாள் ....

♨️

அதுவரை காதலர்கள்
 இருவரும் கதை பேசியபடி
ஒரே கட்டிலில்
அணைத்தபடி படுத்திருந்தனர் ....

♨️♨️♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply
#40
Next page
...... தொடரும்..... ♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply




Users browsing this thread: