Romance ஓகே கண்மணி
சாப்பிட்டுவிட்டு கார்த்திக் ரூமிற்கு சென்று மெத்தையில் படுத்துக்கொண்டு செல்லை பார்த்துக்கொண்டிருந்தான்.
 
அங்கு வந்த ராஜி 5 நிமிடமாக இடுப்பில் கை வைத்துக்கொண்டு அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.
 
அப்போது அவளை பார்த்த கார்த்திக் என்ன என்றான்.
 
என்ன திமிரா. இல்லையே.நீதான சொன்ன அதான்.வா வந்து படுத்துக்கோ.எனக்கு ஒன்னும் அப்ஜெக்ட்க்ஷன் இல்லை.
 
ஏதோ பழமொழி சொல்லுவாங்க.இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்டானா ஒருத்தன்.அது உனக்கு சரியாய் இருக்கு.கார்த்திக் எனக்கு செம டயர்டா இருக்கு.கடுப்ப கிளப்பாம நகரு.
 
இப்போதெரியுதா ஆம்பளைங்க எவ்ளோ அடஜஸ்ட் பண்ணறோம்னு.பொண்ணுகளுக்குத்தான் இரக்கமே இல்லை.இவ்ளோ பெரிய மெத்தைல தனியாத்தான் படுப்பாங்களாம்.நல்லா படுத்து உருளு.குட் நைட்.
 
ம்ம்ம்ம்.அது.இதை முதல்லயே செஞ்சிருக்கலாம்ல.தாங்ஸ் நண்பா.
 
ஏய் குண்டாத்தி.பேசாம தூங்குடி.
 
சரி நண்பா கோச்சுக்காதடா.குட் நைட்.நல்லா தூங்கு.
 
ம்ம்ம்ம் ம்ம்ம் குட் நைட்.
 
பின் இருவரும் நன்றாக தூங்கினர்.
 
மறுநாள் காலை வழக்கம் போல் குளித்துவிட்டு தனதுவேலைகளை பார்க்கத்தொடங்கினாள் ராஜி.
 
கார்த்திக் எழுந்து பிரஷ்அப் ஆகிவிட்டு கிச்சன் செல்ல கையில் காபி உடன் வந்தாள் ராஜி.
 
குட் மார்னிங்.சாருக்கு இப்பதான் விடிஞ்சுதா.
 
குட் மார்னிங் ராஜி.ரொம்பநாள் கழிச்சு நேத்துதான் நல்லா தூங்கினேன்.அதான் லேட்டா ஆகிடுச்சு.
 
ம்ம்ம் சரி கிளம்பு குளிச்சிட்டு கிளம்பு கார்த்திக்.டைம் ஆகிடுச்சு.உன் ட்ரெஸ்ஸல்லாம் மேல அயன் பண்ணி வச்சிட்டேன்.சீக்கிரம்.
 
அயன் பண்ணினியா.தன் கையை கிள்ளி பார்த்துவிட்டு நிஜம்தானா.ராஜி காலையிலே இன்ப அதிர்ச்சி கொடுக்கிறியே.
 
மூடிட்டு போடா.உனக்கு போய் ஹெல்ப் பண்ணேன் பாரு என்ன சொல்லணும்.இனிமேல் பண்ணமாட்டேன் சாமி நீயே பாத்துக்கோ.
 
சரி சரி டென்ஷன் ஆகாதீங்க பிரெண்டு.
 
சரிங்க பிரெண்டு கிளம்புங்க.
 
பின் கார்த்திக் குளித்துவிட்டு ஆபிஸ் சென்றுவிட வழக்கம் போல ராஜிக்கு தனிமை வாட்டியது.
 
பின் ரூமிற்கு சென்று எதாவது செய்யலாம் என்று எண்ணியவள் ரூமிற்கு சென்றாள்.
 
அப்போதுதான் அங்கு புத்தகங்கள் அடுக்கி இருப்பதாய் கண்டாள்.
 
அதன் அருகே சென்றவள் அதை பார்த்துவிட்டு
 
ம்ம்ம் புக்ஸ்லா படிக்கிறானா.அதான் பார்ட்டி ஒரு வார்த்தை பேசுறதுக்கு ஒன்பது வார்த்தைல பதில் சொல்றானா.சரி எதாவது ஒரு புக்கை படிப்போம் என்று நினைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக தேடினாள்.
 
கல்கியின் பொன்னியின் செல்வனில் இருந்து ஆரம்பித்து கடைசியில் உமா பாலகுமாரன் நாவல்கள் முடிந்து,சேத்தன் பகத்தின் கலெக்சன் முடிந்தது.எதுவும் பிடிக்கவில்லை.
 
பின் அடுத்த ரேக்கில் மிட்டல்,அம்பானி,அப்துல்கலாம் என்று இந்தியாவின் சிறப்பு மிக்கவர்களின் பையோபிக் புத்தகங்கள்.அதிலும் அவளுக்கு விருப்பம் இல்லை.
 
எவ்ளோ புக்ஸ் வச்சிருக்கான்.ஆனா எல்லாமே இந்தியன் ஆதர்சா இருகாங்க.ஏன் பாரின் ஆதர்ஸ் படிக்க மாட்டான்.சரி அடுத்து பார்ப்போம் என்று தேடினாள்.
 
 
அப்போது தான் மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் அணிலாடும் மூன்றில் புத்தகத்தை பார்த்தாள்.சரி இதை படிக்கலாம் என்று எடுத்துக்கொண்டு சோபாவில் அமர்ந்தாள்.
 
உறவுகளின் உன்னதத்தை சொல்லும் அற்புதமான படைப்பு.
 
முதல் பக்கத்தை திரும்பியவள் அழகாக கார்த்தி என்று எழுதப்பட்டு இருந்தது.
 
புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தாள் ராஜி.
 
வேளைக்கு வந்த கார்த்திக் அன்றைய வேலைகளை முடித்துவிட்டு சைட் விசிட் சென்றான்.
 
பின் அவனுடைய ஆபிஸ் பிரென்ட் ஒருவனுடன் KFC சென்றான்.
 
அங்கு சென்று பாக்கெட் சிக்கன் ஆர்டர் செய்துவிட்டு சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
 
அப்போது அவனுடைய பின்சீட்டில் இருந்த பொண்ணுக கூட்டம் ஹாப்பி பார்த் டே மான்வி.என்று சொல்லி கோக் சியர்ஸ் சொல்லும் சத்தம் கேட்டது.
 
எல்லோரும் அவர்களையே பார்க்க கார்த்திக்கும் திரும்பி பார்த்தான்.
 
அப்போது அவனுடைய பிரென்ட் பார்த்தியா நண்பா ஓசில ட்ரீட்ங்கிற பேருல பண்ற அம்பல.
 
விடுடா.ஜாலியா இருக்காங்க.நீயும் காலேஜ் டைம்ல இப்படித்தான அலைஞ்சிருப்ப அப்புறம் என்ன.
 
என்னடா நீ இப்படிலா பேசக்கூடிய ஆள் கிடையாதே.
 
அதெல்லாம் ஒன்னும் இல்லடா அவுங்க பாட்டுக்கு என்ஜாய் பன்றாங்க.உனக்கென்ன.
 
டாய் பொண்டாட்டி வந்தா எல்லாரும் மாறிடிறீங்கடா.
 
ஆமா இவரு மட்டும் ரொக்கம்.அலையாத.மூடிட்டு சாப்பிடு.
 
அங்க பாருடா.அந்த ட்ரீட் கொடுக்குற பொண்ண செமையா இருக்காடா.மான்வி பேருகூட அழகா இருக்குடா.
 
அப்படியா போட்டோ எடுத்து உன் பொண்டாட்டிகிட்ட அனுப்புறேன்.அவ கிட்ட போய் கேளு.சொல்லுவா.
 
எப்பா.அதையும் இதையும் சொல்லி எனக்கு உலை வச்சிடாத.சும்மாவே ஊமை குத்தா குத்துறா.
 
தெரியுதுல.சாப்பிடு.
 
அவனிடம் பேசிவிட்டு கார்த்திக் திரும்பி பார்க்க அந்த ஆறு பொண்ணுகளில் சக்தியும் இருந்தாள்.
 
ஹேய் சக்தி.மச்சி ஒரு நிமிஷம் என்று சொல்லிவிட்டு அந்த டேபிளுக்கு சென்றான் கார்த்திக். அங்கு சென்ற கார்த்திக் சக்தியிடம் சென்று ஹலோ. என்ன காலேஜூக்குலாம் போறது இல்ல.ஒரே ஊரை சுத்துதுறதுதான் வேலை போல.
 
அவன் சொல்லியதை கேட்ட பெண்கள் அனைவரும் அவனை பார்த்து திரும்ப அப்போது தான் சக்தி கார்த்திக்கை பார்த்தாள்.
 
ஹேய் கார்த்திக்.நீ எங்க இங்க.
 
அதை நான் கேட்கணும்.என்ன ட்ரீட்டா.
 
ஆமா.என் பிரெண்டுக்கு இன்னைக்கு பெர்த் டே.அதான் இந்த ட்ரீட்.நீ எங்க இங்க.
 
ஹ்ம்ம்.என் லவ்வெறும் நானும் வந்தோம்.அப்படியே உன்னை பாத்தேன்.வந்துட்டேன்.ப்ச் என்று உதட்டை பிதுக்கினான்.
 
ஐயோ முடியலப்பா சாமி.எங்க உன் லவ்வேரை காட்டு பாப்போம்.
 
அது உன்னை பார்த்த உடனே அவளை போக சொல்லிட்டேன்.
 
ஏன் கார்த்திக்.உனக்கே இது ஓவெரா தெரியல.
 
இல்லையே.சரி எங்களுக்குலாம் ட்ரீட் கிடையாதா.
 
ம்ம்ம் கண்டிப்பா.உனக்கு இல்லாததா.பட் நீ ட்ரீட் கேட்டா வேற ஒண்ணுலா கேப்ப.அதுக்கு இங்க பார் இல்லையே.
 
சரி சரி கம்பெனி சீக்கிரட்ட வெளிய சொல்லாத.
 
அப்போது சக்தியின் பிரெண்ட்ஸ் அனைவரும் இவர்களையே வெறித்து பார்த்து கொண்டிருந்தனர்.
 
அதை கவனித்த சக்தி ஓஹ்.சாரி.இவுங்கல்லாம் என் பிரெண்ட்ஸ்.கௌரி,சுஜி,ரம்யா,கௌசல்யா,மான்வி,அப்புறம் நான் சக்தி.
 
அதான் தெரியுமே.நீ சக்தின்னு.பொதுவாக எல்லோரையும் பார்த்து ஹை னு சொல்லிவிட்டு தனது அக்மார்க் சிரிப்பை உதிர்த்தான் கார்த்திக்.
 
எல்லாரும் பதிலுக்கு சிரித்துவிட்டு ஹாய் என்றனர்.
 
அப்புறம் பிரெண்ட்ஸ் இவரு என்று சொல்லும் முன் அனைவரும் கார்த்திக் என்றனர் கோரஸாக.
 
கார்த்திக் பதிலுக்கு சிரித்துவிட்டு சரி சக்தி.நீங்க கன்டினியூ பண்ணுங்க.நான் கிளம்புறேன்.பாய்.என்று சொல்லிவிட்டு திரும்ப.
 
ஹலோ ஒரு நிமிஷம்.ட்ரீட் கேட்டுட்டு எங்க ஓடுறிங்க.வாங்க நீங்களும் ஜாயின் பண்ணிக்கங்க என்றாள் மான்வி.
 
திரும்பிய கார்த்திக் மான்வியை பார்த்து உங்க நேம் ம்ம்ம்ம்ம்ம்ம் எஸ் மான்வி.விஷ் யு ஹாப்பி பார்த் டே.அண்ட் தாங்ஸ் பார் யுவர் கன்செர்ன்.
 
ஹே கார்த்திக்.அதான் சொல்ராள்ள.இரேன்.ப்ளீஸ்.
 
ஹே இல்ல.எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு.சோ இன்னொரு நாள் பாக்கலாம்.பட் அணைக்கு என்னோட ட்ரீட்.ஓகேவா.
 
ம்ம்ம்ம் ஓகே என்றனர் அனைவரும்.
 
ஓகே டேக் கேர்.பாய்.என்று சொல்லிவிட்டு கார்த்திக் பில் செட்டில் செய்துவிட்டு நண்பனுடன் சென்றுவிட்டான்.
 
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
கார்த்திக் சென்ற உடன் ஹே கார்த்திக் யாருடி அவன்.ட்ரீட்க்கு வாங்கன்னு தான சொன்னேன் அதுக்கு போய் இப்படி சொல்லிட்டு போறான்.

ஹே கார்த்திக் என்னோட மாமா பையன்.அவன் இப்படிலா ஒதுங்கி போகுற ஆளே கிடையாது.முன்னாடிலா எங்க அக்கா பிரெண்ட்ஸ் எல்லாத்தையும் இன்ட்ரோ பண்ணி வைன்னு எங்க அக்காகிட்ட எவ்ளோ கெஞ்சுவான் தெரியுமா.அவன் ஏன் இப்படி மாறிட்டான்னு தெரியல.

ம்ம்ம்ம் சரி.சாரு பாக்க சூப்பரா இருக்காரே.சிங்கிளா.

ஏன் நீ ட்ரை பண்ண போறியாக்கும்.

ஏன் ட்ரை பண்ணாதான் என்ன.

ட்ரை பண்ணு.ஆனா எங்க அக்காகிட்டையும் ஒருவார்த்தை கேட்டுக்கோ.

ஏன் அதான் நீயே சொல்லிட்டல்ல.அப்புறம் ஏன் உங்க அக்காகிட்ட கேட்கணும் என்றாள் சுஜி.

ஹலோ ஓவரா கனவு காணாதீங்க.எங்க அக்கவைத்தான் அவன் கல்யாணம் பண்ணிருக்கான்.

ஏய் அப்ப நீ முன்னாடி எங்ககிட்ட சொன்னதெல்லாம் என்று மான்வி கேட்க.

ஆமா.இவனேதான்.

உங்க அக்கா கண்டிப்பா அன்லக்கிடி.ஆனா நீ சொன்னதை வச்சி பாக்கும்போது இன்னும் ரெண்டுபேத்துக்கும் நடுவுல பிரச்சனை இருக்கும் போலையே.

ஆமாடி.எங்க அக்காகிட்ட அதை பத்தி இன்னைக்கு பேசணும்னு நினைச்சேன்.சரி அவளாவே சொல்லட்டும்னு விட்டுட்டேன்.

இடையில் கௌசல்யா சக்தி அவரு நம்பர் கொடேன் என்று தயங்கிக்கொண்டே போனை எடுக்க அவளை பார்த்த மற்ற அனைவரும் சிரித்துவிட்டனர்.

அடிப்பாவி கொஞ்ச விட்டா எங்க அக்காவுக்கே சக்களத்தியா வந்துடுங்க போல.கொன்னுடுவேன்.
உங்களுக்குத்தான் எத்தனை பேரு ட்ரை பன்றாங்க.அப்புறம் என்னடி.

ஏய் அவுங்கல்லாம் சும்மா டைம் பாஸ் பண்றவங்க.அழகை மட்டும் பார்த்து மச்சான் எப்படி இருக்கா பாரு,செம கட்டைடா அப்படின்னு மத்த பொண்ணுங்களை சொல்லிட்டு,நம்மள சின்சியரா லவ் பண்றதா சொல்லுவாங்க.உங்க மச்சி மாதிரி ஒருத்தன் கிடைப்பானா. என்றால் மான்வி.

அம்மா தாயே இத்தோட இதை விட்டுடுங்க.அதையும் இதையும் சொல்லி எங்க அக்கா லைஃப்ல கும்மி அடிச்சிடாதீங்க என்று கையெடுத்து கும்பிட்டாள் சக்தி.

சரி சரி சேன்ஜ் த டாப்பிக் அனைவரும் சொல்லிவிட்டு ட்ரீட்டை முடித்துவிட்டு பில் செட்டில் செய்ய சென்றனர்.

தனது கார்டை எடுத்து மான்வி கொடுக்க.உங்க பில் ஆல்ரெடி செட்டில் பண்ணிட்டாங்க மேம் என்றான் கேஷியர்.

யாரு என்று அவள் கேட்க இப்போ ஒருத்தர் உங்க கிட்ட நின்னு பேசிட்டு இருந்தாரே அவருதான்.

சரி என்று சொல்லிவிட்டு சக்தியிடம் வந்த மான்வி ஹே சக்தி உங்க மச்சி பில் செட்டில் பண்ணிட்டாராம்டி. என்றாள்.

அப்படியா அவன் எதுக்கு செட்டில் பன்றான்.சரி விடு பாத்துக்கலாம். அப்படியா அவன் எதுக்கு செட்டில் பன்றான்.சரி விடு பாத்துக்கலாம்.

இல்லடி இது என்னோட ட்ரீட்.இதுக்கு அவர் பே பண்ணினா இது அவரோட ட்ரீட் மாதிரி ஆகிடாது.

விடுப்பா.இப்போ என்ன உன் சார்பா நான் கொடுத்ததா நினைச்சுக்கோ.

நீ என்ன சொன்னாலும் எனக்கு மனசு கேக்கலை.சரி வா கிளம்பலாம்.

ஐயோ இப்படி தெரிஞ்சிருந்தா கூட அஞ்சு ஆறு பார்சல் வாங்கிருக்கலாமே. என்று ரம்யா சொல்ல அனைவரும் ஹோ என்றனர்.

ஏய் அலையாதீங்கடி.கிளம்பலாம் வாங்க என்று தங்களது ஸ்கூட்டியில் கிளம்பினர்.

புத்தகத்தை படித்து கொண்டிருந்த ராஜி மதியம் சாப்பிட்டுவிட்டு மீண்டும் வாசிக்க அதில் அத்தை மற்றும் முறைப்பெண் என்ற உறவில் அதிக இண்ட்டர்ஸ்ட் எடுத்து கார்த்திக் படித்தது தெரிந்தது.

அந்த பக்கத்தில் மட்டும் ரெட் கலர் பெண்ணினால் அதிகமா கோடிட்டு இருந்தான்.

பையன் ரொம்ப ரசனைக்காரனாதான் இருக்கான் என்று நினைத்து சிரித்துக்கொண்டாள்.

பின் ராஜி அப்படியே தூங்கியும் போனாள்.ஈவினிங் வந்தது.

வீட்டிற்கு வந்த கார்த்திக் காலிங் பெல்லை அடித்தான்.

கதவை திறந்த ராஜி என்ன இன்னைக்கு சீக்கிரமாவே வந்தாச்சு என்றாள்.

இன்னைக்கு வேலை சீக்கிரமா முடிஞ்சிட்டு.அதான் வந்துட்டேன்.இந்தா என்று வாங்கி வந்த மல்லிகை பூவை அவளிடம் கொடுத்தான்.

என்னது.

மல்லிகை பூ.சாமிக்கு போட்டுடு.

சாமிக்கு மட்டும்தானா.

ஆமா.நீதான் நான் வாங்கிட்டு வந்தா வைக்க மாட்டியே.

அது போன மாசம்.இது இந்த மாசம்.நானும் வைப்பேன்.

சிரித்துக்கொண்டே சரி வச்சுக்கோ.யப்பா இதை உனக்கு கொடுக்கிறதுக்குள்ள முடியலடா சாமி.சரியான பிசாசு ராஜி நீ.

அது அப்படித்தான்.நான் பிசாசாவே இருந்துட்டு போறேன்.சீக்கிரம் பிரெஷ் ஆகிட்டு வா.காபி கலந்து தரேன்.

ம்ம் சரி.இன்றும் ராஜி இரண்டு ஸ்பூன் சீனியைஎ அதிகமாக கலந்தாள் ராஜி.

பிரெஷ் ஆகிவிட்டு வந்த கார்த்திக் காபியை வாங்கி குடித்தவன் சுகர் அதிகமாக இருப்பதை அறிந்தவன்

ராஜி.பொண்ணுக ரொம்ப சந்தோசமா இருந்தா அதை சாப்பாட்டுல தான் காட்டுவாங்க.நீ ரொம்ப சந்தோசமா தானே இருக்க.

ஏன் இப்படி கேக்குற.

இல்ல.இன்னைக்கும் காபில சுகர் அதிகமாக இருக்கு.அதான் கேட்டேன்.

எப்படி இவ்ளோ கரெக்டா கண்டுபிடிக்கிறான்.கடவுளே இவன் சொன்ன மாதிரியே லவ் பண்ணிடுவோமோ.ம்ம்ஹ்ம்வ மாட்டேன்.கண்டிப்பா அப்படி எதுவும் நடக்காது.

அப்படிலா ஒன்னும் இல்லை.தேவை இல்லாம கண்டதையும் கற்பனை பண்ணிக்காத.

ம்ம்ம்ம் சரி.சரி.

இல்ல நீ நினைக்கிற எதுவும் நடக்காது.

நான் என்ன நினைச்சேன்.

இல்ல நீ சரி சரின்னு ஏதோ நினைச்ச அதை சொன்னேன்.

நான் என்ன நினைச்சேன் தெரியுமா.

வேண்டாம் எனக்கு எதுவும் தெரிய வேண்டாம்.

இல்ல நான் சொல்லுவேன்.

நான் கேக்க மாட்டேன் என்று அவன் எதிரில் கேட்பது போல நின்றாள்.

கேக்க மாட்டேன்னு சொல்லிட்டு கேக்குறதுக்கு நிக்குற.

நான் ஒன்னும் கேக்குறதுக்கு நிக்கலை.கப்பை கொடு வாஷ் பண்ணனும்.அதான் நிக்குறேன்.

சரி அதுக்குத்தான் நிக்குறன்னு எனக்கு தெரியும்.இருந்தாலும் நான் சொல்லிடுறேன்.நாளைக்கு அப்பாவும் அம்மாவும் வராங்க.அதான் சொல்ல வந்தேன்.

சரி என்று மட்டும் சொன்னவள் அதன் பின் என்னது அதையும் மாமாவும் வரங்காளா.

ஆமா.அதான நானும் சொன்னேன்.

இல்ல ஏதோ ஞாபகத்துல.சரி எப்ப வராங்க.

நாளைக்கு காலைல.என்னையும் லீவ் போட சொன்னாங்க.

எதுக்கு.

நாளைக்கு ஏதோ விரதமாம்.அதான் இருக்க சொன்னாங்க.

சரி.நான் அப்போ நாளைக்கு வீட்டை கிளீன் பண்ணி வச்சிடுறேன்.இன்னைக்கு மளிகை சாமான் எல்லாம் தீர்ந்து போச்சு. வாங்கணும் கார்த்திக்.

ஓகே.ஒன்னு பண்ணு எல்லாத்தையும் லிஸ்ட் போட்டு வை.அப்றமா நான் வாங்கிட்டு வந்துடுறேன்.

ஓகே.

பின் இருவரும் சேர்ந்து லிஸ்ட் போட்டு கார்த்திக் வாங்குவதற்கு சென்றான்.

அதன் பின் அன்றைய இரவு அதிக பேச்சுகளுடனும் சின்ன சின்ன சண்டைகளுடனும் முடிந்தது. மறுநாள் காலை கார்த்திக்கின் அப்பாவும்,அம்மாவும் யாத்திரை முடிந்து வந்துவிட கார்த்திக்கும் ராஜியும் அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு விபூதி இட்டுக்கொண்டனர்.

பின் பயணம் பற்றி ரொம்பநேரம் பேசிக்கொண்டிருந்தனர்.பின்னர் குளித்துவிட்டு காலை உணவு முடிந்தது.

பின் சாந்தா மருமகளிடம் வந்து என்னமா ரெண்டுபேரும் சந்தோசமா இருந்திங்களா.என்றாள்.

ம்ம்ம் சந்தோசமா இருந்தோம் அத்தை என்று வராத வெட்கத்தை வரவைத்துக்கொண்டு சொன்னாள்.

சரிம்மா கல்யாணம் முடிஞ்சு ரெண்டு மாசத்துக்கு மேல ஆகுது.எதாவது நல்ல செய்தி உண்டாம்மா.

ராஜிக்கு திடுக்கென்றானது.இப்போதான் எல்லா பிரச்சனையும் முடிந்தது.இப்போ புது பிரச்சனையா என்று நினைத்துக்கொண்டாள்.

இல்லத்தை.நாங்களும் அதுக்குத்தான் காத்துகிட்டு இருக்கோம்.என்று ஒரு பொய்யை சொல்லி வைத்தாள்.

நாங்களும் அங்க ஒவ்வொரு தெய்வத்துக்கிட்டையும் அதான்மா வேண்டிக்கிட்டோம்.அதுக்கு ஒரு சாமியார் சொன்னாரு அந்த முருகனை நினைச்சிட்டு தினமும் அவருக்கு தினமும் தீபம் போட சொன்னாரும்மா.நீயும் கொஞ்சம் சிரமம் பாக்காம செய்யுமா.

கண்டிப்பா செய்யுறேன் அத்தை.எனக்கும் அதான் வேணும்.

பின் இருவரும் யாத்திரையில் நடந்த விஷயங்கள்,அங்கு சென்ற கோவில்களின் சிறப்புகள் என்று பேசிக்கொண்டேஎ மதிய சாப்பாட்டை தயார் செய்தனர்.

கார்த்திக்கும் அப்பாவிடம் இதையே பேசிக்கொண்டிருந்தான்.அப்படியாக அவர்கள் பேசிக்கொண்டது நேரம் போனதே தெரியவில்லை.

பின் ஆண்கள் இருவருக்கும் வாழை இலையில் சாப்பாடு பரிமாறப்பட்டது.ராஜியையும் சாப்பிட சொல்ல இல்லத்தை நான் அப்புறமா சாப்பிட்டுக்கிடுறேன் என்றாள்.

ஓஹ் புருஷன் சாப்பிட்டதை சாப்பிடணும்னு ஆசை படுறியா.சரி படிச்ச பொண்ணு இதெல்லாம் பிடிக்காதுன்னு நினைச்சுட்டேன்.சரிம்மா கொஞ்சம் பொறு.நாம ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம் என்றாள் சாந்தா.

ஐயோ இது வேறயா.இந்த கண்ராவி வேரைய.என்று நினைத்துக்கொண்டு கார்த்திக்கை பார்க்க அவன் ராஜியை பார்த்துவிட்டு கண்ணடித்துவிட்டு மாட்டினடி இன்னைக்கு என்று கண்ணாலையே சொன்னான்.

அத்தையிடம் வேண்டாம் என்று சொன்னால் ரெண்டு பேருக்கும் நடுவில் உள்ள பிரச்சனை தெரியதுக்கு காரணமாகிவிடும்.எல்லாம் என் தலை விதி என்று நினைத்துக்கொண்டு அமைதியாக இருந்தாள் ராஜி.

கார்த்திக் இப்போது தேவைக்கு அதிகமாக சாதத்தை வைத்து பிசைந்துகொண்டிருந்தான்.

கறிகளும் அதிகமாக வைத்துவிட்டு வேண்டும் என்றே வாயில் வைத்துவிட்டு இலையில் வைத்தான்.பின் புறை ஏறுவதுபோல் செய்ய வாயில் இருந்து சோற்று பருக்குகள் இலையில் விழுந்தது.பின் தண்ணீரை எடுத்து குடித்தான்.

இதை பார்த்துக்கொண்டிருந்த ராஜிக்கு ஆத்திரத்தில் அழுகையாக வந்தது.கார்த்திக் வேண்டும் என்றே தன்னை பழிவாங்குகிறான் என்று அவன்மேல் ஆத்திரமாக வந்தது.

தண்ணீர் எடுக்க செல்வது போல் கிச்சன் சென்று கண்ணீரை துடைத்துவிட்டு வந்தான்.

அப்போதும் கார்த்திக் வேண்டும் என்றே அதுபோல் செய்ய ராஜி என்ன செய்வது என்பதுபோல் சேலை முந்தியை கைகளால் சுருட்டி கொண்டே பதற்றத்துடன் நின்றாள்.

ராஜியை பார்த்த கார்த்திக் அவளுடைய இந்த நிலையை பார்க்க அவனுக்குள் ஏதோ செய்தது.ராஜியும் முகம் அருவருப்பாக அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.

ராஜியை பார்த்துக்கொண்டே மீண்டும் தண்ணீர் எடுத்து குடித்தவன் தெரியாமல் கை தவறி விடுவது போல் கிளாசை இலையில் விட்டான்.தண்ணீர் முழுவதும் இலையில் கொட்ட சட்டென்று எழுந்துகொண்டான்.

ச்ச தெரியாம கொட்டிட்டு.சாரி சாரி என்றான்.

என்னடா அந்த பொண்ணு எவ்ளோ ஆசையா இருந்துச்சு.இப்படி பண்ணிட்ட என்றார் கார்த்திக்கின் அப்பா.

சாந்தாவும் தன் பங்கிற்கு அதையே சொல்ல

தெரியாம கை தவறிட்டு.விடுங்க வேற இலையில சாப்பிட்டா என்ன.இன்னொருநாள் பாத்துக்கலாம். என்றான் கார்த்திக்.

இதை பார்த்துக்கொண்டிருந்த ராஜிக்கு இப்போதுதான் உயிரே வந்தது.உதட்டில் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு பரவா இல்லை மாமா.இன்னொருநாள் சாப்பிட்டுகிடுறேன் என்று அந்த இலையை எடுத்து குப்பையில் போட்டுவிட்டு கை கழுவிக்கொண்டு சாந்தாவுடன் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
[+] 3 users Like bsbala92's post
Like Reply
Wowwwww Awesome update .... Keep posting like this.
Like Reply
omg . finally u update today.
thank u.
good update.
Like Reply
Wonderful update. Thank you bro
Like Reply
Semma ponga.
Like Reply
Excellent narration bro
Like Reply
So nice
Like Reply
Semma thala
Like Reply
Nalla irundhuchi romba naalaiku appuram nalla love story pls konjam seekirama st poduinga bro
Like Reply
Beautiful update friend. Waiting for more.
Like Reply
Super update bro
Like Reply
ராஜிக்கு தெரியும் கார்த்திக் இதை தனக்காகத்தான் செய்தான் என்று.உடனடியாக அவனை பார்க்க வேண்டும் போல இருந்தது ராஜிக்கு.

அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு வேகமாக பெட்ரூமை நோக்கி ஓடினாள் ராஜி.

அங்கு நின்று கொண்டிருந்த ராஜி ஓடிச்சென்று கார்த்திக் மார்பின் மேல் முகம் புதைத்து தேங்ஸ்.கார்த்திக்.நீ எனக்காகத்தான் இதெல்லாம் செஞ்சன்னு எனக்கு தெரியும்.உன்ன தப்பா நினைச்சிட்டேன்.சாரி என்று அழத்தொடங்கினாள்.

கார்த்திக் எதுவும் செய்யாமல் சிலையாக நின்றுகொண்டிருந்தான்.ராஜி இப்போது ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறாள்.இந்த நேரம் அவளை தொட்டால்கூட விபரீதம் ஆகிவிடும்.அவளாக அடங்கும் வரை அசையமல் நின்றிருந்தான்.

பின் ராஜியின் அழுகை அடங்கியபின் தான் இருக்கும் நிலை உணர்ந்து சாரி சாரி கார்த்திக்.கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்.சாரி.

பரவா இல்லை.நீ எமோஷனலா இருக்கன்னு தெரியும்.விடு.

தாங்ஸ் கார்த்திக்.

தாங்க்ஸ்லா வேண்டாம் ராஜி.நான் ஒன்னும் இதை உனக்காக பண்ணல.ஸோ தேங்க்ஸ்லா வேண்டாம்.

எனக்காக பண்ணலையா.ஏன்.

சொல்றேன். ரிலாக்ஸா இருக்கியா.

ம்ம்ம்ம் சொல்லு

எனக்கு இந்த ஒருத்தர் சாப்பிட்ட இலையில இன்னொருத்தர் சாப்பிடுறது எனக்கு சுத்தமா பிடிக்காது.எங்க அம்மா சாப்பிட்டாலே நான் திட்டுவேன்.அதனாலதான் நான் அப்படி பண்ணேன்.மத்தபடி உன்ன இம்ப்ரெஸ் பன்னதுக்காக பண்ணலை.

என்னை இம்ப்ரெஸ் பண்ணதுக்கு பண்ணிருந்தாலும் நான் ஒன்னும் சொல்லலை.போதுமா.

ம்ம்ம்ம் சரி.

அப்புறம்.

அப்புறம்ம்ம்ம்ம் தூங்க வேண்டியதுதான்.

அப்ப தூங்கு.

தூங்கலாம்.பட் நீ இன்னும் தூங்கலையே.சோ உனக்கு கம்பெனி கொடுக்கலாம்னு இருக்கேன்.

சரி அப்ப கம்பெனி கொடு.

ம்ம்ம் சரி.அப்புறம்.

அப்புறம்ம்ம்ம்ம்.

ராஜி உனக்கு அது வந்துடுச்சுல்ல.

எது.

அதான்.

அதான்னா எது.

அதான் ராஜி.சொல்லணும்னு தோணுச்சுன்னா சொல்லிடு.

சொல்லிடவா.

ம்ம்ம் சொல்லு ராஜி.

அது வந்து கார்த்திக்

ம்ம்ம்ம்ம் சொல்லு

இல்ல நீ தப்பா எடுத்துக்க மாட்டியே.

அதெல்லாம் ஒன்னும் இல்லை.நீ சொல்லு.

உனக்கு தூக்கம் வருதா.இல்லல.

ஐயோ ராஜி.அதெல்லாம் ஒரு மண்ணும் வரலை.நீ
சொல்லு.

இல்ல எனக்கு தூக்கம் வந்துடுச்சு.தூங்கலாமா.

ப்ச் மயிறு.இதை சொல்லதானா இவ்ளோ இழுத்த.தூக்கம் வந்தா போய் தூங்கி தொலைக்க வேண்டியது தான அவன் மனசாட்சி ராஜியை திட்டியது.

அம்ம்ம்ம்ம்.தூங்கலாமே.நல்லா தூங்கலாம்.படு.இதோ பெட் இருக்கு நல்லா படுத்து தூங்கு.படு.

கார்த்திக் நீஈஈஈஈ.

அஹ்ன் நானா நானேதான்.நான் வழக்கம் போல சோபாவில் படுத்துக்கிடுறேன்.

ம்ம்ம் சரி கார்த்திக்.குட் நைட்.

இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லைன்னு மனசில் நினைத்துக்கொண்டு

குட் நைட்.குட் நைட்.

வேற ஒன்னும் இல்லையே.

இல்லையே.ஒன்னும் இல்ல.நீ தூங்கு.

இல்ல நீ ஏதோ சொல்லணும்னு நினைக்கிற மாதிரி தெரியுது.சும்மா சொல்லு.

நான் என்ன சொல்ல.ஆமா சொல்லணும்.மறக்காம பெட் சீட் எடுத்து போத்திக்கோ.

ம்ம்ம் சரி.

ராஜிக்கு கார்த்திக்கை பார்த்து சிரிப்பாக வந்தது.அவன் எதை பற்றி கேட்டான் என்று நன்றாகவே தெரியும்.ஆனால் அவளுக்கு இப்போது கார்த்திக்கின் மேல் இருப்பது ஒரு நல்ல இம்ப்ரெஸ்ஸன்.அதை வெளிக்காட்ட அவளது ஈகோ தடுத்தது.

அவள் படுத்துவிட்டு கார்த்திக்கை பார்க்க கார்த்திக் போர்வையை தலைவரை இழுத்து மூடி இருந்தான்.

இப்போது மெல்லிதாக அவனை பார்த்து சிரித்தாள்.பின் சில நிமிடம் கழித்து.

கார்த்திக்

போர்வையை விலகாமலே என்ன என்றான்.

தூங்குறியா.

இல்ல சாப்பிடுறேன்.

நக்கலா.

ஆமா.தூங்குறவனை பார்த்து தூங்குறியான்னு கேட்டா என்ன சொல்ல சொல்ற.

சரி சரி.கோவப்படாத பிரெண்டு.

ஓகே பிரெண்டு சொல்லுங்க.

இல்ல பிரெண்டு புக்ஸ்லா அதிகமா படிப்பீங்களோ.

ஏதோ கொஞ்சம் கொஞ்சம் பிரெண்டு.ஏன் கேக்குறீங்க.

இல்ல பிரெண்டு காலைல போர் அடிக்குதுன்னு உங்க ரேக்கை பார்த்தேன்.அதான் கேட்டேன்.

அதெல்லாம் சும்மா டைம் பாஸுக்காக.அது எதுவுமே நான் படிச்சது கிடையாது.

சும்மா காமெடி பண்ணாதீங்க பிரெண்டு.

போர்வையை விளக்கி விட்டு

இப்போ என்ன வேணும் உனக்கு.

தெரிஞ்சுக்கலாம்னுதான்.சரி உனக்கு எப்படி புக்ஸ் படிக்கிற பழக்கம்லாம் வந்துச்சு.

இப்போ கண்டிப்பா அதை தெரிஞ்சுக்கிடணுமா.

சும்மா சொல்லேன்.ஜாலியா இருக்கும்.

ஜாலியாவா.இருக்கும் இருக்கும்.

சொல்லுப்பா.சீன் போடாத.

அது ஒன்னும் இல்ல பிரெண்டு.நான் காலேஜ் படிக்கும் போது ஒரு பொண்ண லவ் பண்ணேன்.

தெரியுமே.அந்த பொன்னுபேரு கூட ராஜி தான.

ஐயோ செம ஷார்ப்பு பிரெண்டு நீங்க.

சரி மேல சொல்லுங்க.

அவதான் இதுக்கு காரணம்.

போங்க பிரெண்டு.புக்ஸ் படிக்கிறதுக்கும் லவ் பண்றதுக்கும் என்ன பிரெண்டு சம்பந்தம்.

சம்பந்தம் இருக்கு பிரெண்டு.காதல் ஒரு கொடூரமான இரக்கம் இல்லாதவனை கூட செடியில் இருந்து பூவை பரிச்சா அழவைக்கிற சக்தி வாய்ந்தது.அந்த காதல் தான் என்ன மனுஷனாக்குச்சு.என்ன புக்ஸ் படிக்க சொல்லுச்சு.என்னோட வாழ்க்கையவே மாத்துச்சு.அவ மட்டும் அந்த காதலை வராம விட்டிருந்தானா என்னோட இந்த வேலை,புகழ்,இப்படி எதுவுமே இல்லை.எனக்கு அந்த காதல் மட்டும் இல்லன்னா இந்நேரம் நான் எங்கையோ மாசம் 6000க்கும் 7000க்கும் கையேந்துகிட்டு இருந்துருப்பேன்.ஏன் ரௌடியாக்கூட மாரி இருப்பேன்.இதான் பிரெண்டு அந்த புக்ஸ்க்கு பின்னாடி இருக்குற std.

Std னா ஓஹ் வரலாறு.சான்ஸே இல்ல பிரெண்டு.லவ்வ கூட இவ்ளோ பாஸிட்டிவா எடுத்துருக்கீங்க.ஆனா அதுக்கு உங்க ஆளு ஒர்த்தான்னு தெரியுமா.

என் ஆள பத்தி தப்பா பேசாதீங்க பிரெண்டு.எனக்கு கெட்ட கோவம் வரும்.

கோவப்படாதிங்க பிரெண்டு சும்மா கேட்டேன்.

அவ 200 சதவீதம் ஒர்த்து பிரெண்டு. கண்டிப்பா உங்க லவ் சக்ஸஸ் ஆகும் பிரெண்டு.அவகூட இல்லை வேற ஒரு பொண்ணுகூட.

அதெல்லாம் ஆகும் பிரெண்டு.உங்களுக்கு தூக்கம் வரலை.

தூங்கணும் பிரெண்டு.தூங்கலாம்.நாளைக்கு பேசலாம்.குட்நைட்.

குட்நைட்.

இருவரும் போர்வையை தலை வரை இழுத்து மூடினர்.ஆனால் தூங்கவில்லை.இருவரும் கண்ணை மூடியபடி சந்தோசமாக இன்று பேசியதை நினைத்து பார்த்தனர்.எப்போது தூங்கினார்கள் என்று தெரியாமல் தூங்கியும் போனார்கள்.

மறுநாள் பொழுது விடிந்தது.வழக்கம் போல ராஜி எழுந்து வேலைகளை கவனித்தாள்.கார்த்திக் எழுந்து ஆபிஸிற்கு கிளம்பிக்கொண்டிருந்தான்.

அவன் பைக் சாவியை எடுக்க ரூமிற்கு சென்றபோது பின்னாள் வந்த ராஜி அவன் சாவி,பேக்,லன்ச் பேக்கை எடுத்துக்கொடுத்தாள்.

பின் கார்த்திக்கிடம் கார்த்திக் ஒரு செலஃபீ எடுத்துக்கிடலாமான்னு கேட்டாள்.

ம்ம் எடுக்கலாமே என்று தனது போனை எடுத்தான் கார்த்திக்.

ம்ஹூம்.என் போன்லதான் எடுக்கணும்.இதான் இந்த போன்ல எடுக்குற பர்ஸ்ட் போட்டோ.அதனால ரெண்டு பெரும் சேர்ந்து எடுக்கலாம்.

சரி சீக்கிரம் எடு.டைம் ஆகுது.

போகலாம்பா.அந்த பேக்கை அங்க வை என்று சொல்லிவிட்டு அவனுடன் நெருங்கி நின்று ஒரு போட்டோ எடுத்தாள் ராஜி.

அது திருப்தியாக இருக்க ம்ம்ம் சரி இப்ப கிளம்பு.

கார்த்திக் அவளுடைய போனை எட்டி பார்த்து போட்டோவை பார்க்க அதை தன் மார்போடு மறைத்துவிட்டு காட்டமாட்டேன் என்பதுபோல் தலையை அசைத்தாள்.

கார்த்திக்கும் பதிலுக்கு சிரித்துவிட்டு போய்ட்டுவாரேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.
[+] 3 users Like bsbala92's post
Like Reply
அவன் சென்ற பின் நேற்று நடந்த நிகழ்வுகளின் தாக்கம் ராஜியை ரொம்பவே பாதித்தது.அவளையும் அறியாமல் அடிக்கடி சிரித்துக்கொண்டாள்.அப்போது அவளுடைய இருமணமும் வெளியே வந்தது.

அவளுடைய கேட்ட மனம் என்னடி புதுசா அவனை நினைச்சு நினைச்சு சிரிக்க.என்ன அவனை லவ் பண்ணிட்டியா.ச்சீ.என்னமோ பெருசா சபதம் போட்ட.அவ்ளோதானா நீ என்றது.

ஆமாடி.அவ லவ் பண்ரா.நாந்தான் அப்படி திரும்ப திரும்ப நினைக்க வச்சேன்.அவளும் லவ் பண்ணுவா.என்றது அவளுடைய நல்ல மனம்.

அவன் உன் வாழ்க்கையை கெடுத்தவண்டி.உன்ன ஏமாத்திருக்காண்.

இல்ல அவன் உன்னைய லவ் பன்றான்.உன்னை எப்போதுமே ஏமாத்தள.உன்ன அவன் எப்பவாவது கஷ்டப்படுத்துற மாதிரி நடந்துக்கிடுறானா.நேத்துகூட உனக்காக எவ்ளோ பண்ணினான்.

எல்லாம் நடிப்பு.கஷ்டப்படுத்தாதவன் தான் அன்னைக்கு கிஸ் பண்ணினானா.

அதுஅது தெரியாம நடந்தது.

தெரிஞ்சுதான் நடந்துருக்கு.

நான் சொல்றத கேளு.நான் எப்போதும் உனக்கு நல்லதுதான் சொல்லுவேன்.பேசாம அவனை லவ் பண்ணினதை ஓத்துக்கிட்டு சந்தோசமா இருக்க வழிய பாரு.

நான் சொல்றதை கேளு.அவனை நீ லவ் பண்றதா சொல்லி அசிங்கப்படாத.நீ அவன் விட்ட சவால்ல தோத்து போய்டுவ.

இப்படியாக இரு மனங்களின் சண்டையில் அவளுடைய ஈகோ என்கிற கெட்ட எண்ணமேவ வெற்றிகொண்டது.இனி மீதம் உள்ள நாட்கள் வரை கார்த்திக்கிடம் கொஞ்சம் தள்ளி இருப்பதே இருவருக்கும் நல்லது என்று முடிவெடுத்தால் ராஜி.

பரபரப்பாக வேலைகளை பார்த்துகொண்டிருந்த கார்த்திக் நேற்று ராஜியுடன் நடந்த சம்பவங்கள் நியாபகத்திற்கு வந்து இம்சித்தது.

அவனுக்கு உடனே ராஜியிடம் பேசவேண்டும் போல் இருந்தது.

போனை எடுத்து ராஜிக்கு டையல் செய்தான்.கார்த்திக்கின் நம்பரை பார்த்த ராஜிக்கு ஏனோ அவனுடன் பேச விருப்பம் இல்லாமல் தோன்றியது.போனை அட்டென்ட் செய்த ராஜி

ஹலோ சொல்லு கார்த்திக் என்றாள்.

ஒன்னும் இல்ல ராஜி.சும்மா உன்கிட்ட பேசணும்போல இருந்துச்சு.அதான் கால் பண்ணேன்.சாப்பிட்டாச்சா.

ம்ம் சாப்பிட்டேன்.

சரி சரி.அம்மா என்ன பண்றாங்க.

அத்தை பக்கத்துவீடு வரை போயிருக்காங்க.

ஓஹ் சரி சரி.

வேற என்ன.

ஏன் ராஜி ஒருமாதிரி பேசுற.பேச பிடிக்கலையா.

மனதில் நினைப்பதை அப்படியே சொல்கிறானே என்று எண்ணியவள்

அப்படிலாம் ஒன்னும் இல்ல.கொஞ்சம் தலைவலி அவ்ளோதான்.

சரி டேப்லெட் போட்டு ரெஸ்ட் எடு.ஈவினிங் பேசிக்கலாம்.பாய்.

ம்ம் சரி.என்று போனை கட் செய்தாள்.அவளுக்கு குழப்பமாக இருந்தது.ஆனாலும் அவளது ஈகோ தெளிவாக சொல்லியது நான் கார்த்திக்கை லவ் பண்ணலை.

ராஜியின் பேச்சில் தெரிந்த மாற்றம் கார்த்திக்கிற்கு தெளிவாக தெரிந்தது.ஆனால் எதுவாக இருந்தாலும் அவன் போக்கிலே செல்ல வேண்டும் என்ற முடிவுடன் வேளையில் ஆழ்ந்தான்.

அப்போது அவன் செல்லுக்கு ஹாய் என்று மெசேஜ் வந்தது.

வாட்ஸ்அப் பார்த்தவன் புது நம்பராக இருந்தது.DP பார்த்தவன் அதில் நயன்தாரா போட்டோ இருந்தது.ஆன்லைன் வேறு காட்டியது.

பிரென்ட் யாராவது இருக்கும் என்று அப்படியே வைத்துவிட்டு வேலைகளை கவனித்தான்.

மீண்டும் என்ன பேசமாட்டீங்களா.அவ்ளோ பிசியா என்று மெசேஜ் வந்தது.

ப்ச் இதுவேற என்று நெட்டை ஆப் செய்தான்.அரைமணி நேரம் கழித்து அந்த நம்பரில் இருந்து கால் வந்தது.

அட்டென்ட் செய்தவன் ஹெலோ என்றான்.

எப்படி இருக்கீங்க என்றது ஒரு பெண்குரல்.

யாருன்னு சொல்லுங்க.

எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சவங்கதான் எஎல்லாம் உங்களுக்கு தெரிஞ்சவங்கதான் என்றது எதிர்முனை.

பேசாமல் போனை கட் செய்துவிட்டு சைலென்டில் போட்டுவிட்டு மீட்டிங் அட்டென்ட் பண்ண சென்றான் கார்த்திக்.

பின் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கார்த்திக் ராஜியை தேடி ரூமிற்கு சென்றான்.

ஆனால் ராஜி கார்த்திக்கிடம் இருந்து முடிந்த அளவுக்கு தப்பிக்க சாந்தாவுடனே இருந்தாள்.

இவனாக வழிய சென்று பேசினாலும் அவள் ஒருவார்த்தையில் பேசி பதில் தருவாள்.

இப்படியாக இரவு வரை சென்றது.ராஜியின் ஒதுக்கம் கார்த்திக்கை என்னவோ செய்தது.ரூமில் இருவரும் படுக்க இருவரும் ஒன்றும் பேசாமல் தூங்காமல் இருந்தனர்.

அப்போது ராஜியின் வாட்ஸ்அப் நம்பருக்கு மெசேஜ் வந்தது.சத்தம் கேட்டு போனை எடுத்த ராஜி மெசேஜை பார்த்தாள்.

ஹாய் ராஜி.திஸ் இஸ் ரமேஷ்.ஐ ம் சாரி டு டிஸ்டர்பிங் யு என்று வந்திருந்தது. . . . . . . . . .
மெசேஜை பார்த்த ராஜிக்கு தூக்கி வாரி போட்டது.

இவன் எதுக்கு இப்போ தேவை இல்லாம என்ட்ரி ஆகுறான்னு நினைத்துக்கொண்டு கார்த்திக்கை பார்த்தாள்.

கார்த்திக்கின் மூச்சு சீராக வருவதை பார்த்து தூங்குவதை உறுதி செய்துகொண்டு ரமேஷுக்கு டைப் செய்தாள்.

என் நம்பர் உனக்கு எப்படி கிடைச்சிது

நம்ம பிரென்ட் கஸ்தூரி கிட்ட உண்ண பத்தி விசாரிப்பான்.அவதான் சொன்னா.முதல்ல அவ தரமாட்டேன்னு தான் சொன்னா.நான் தான் கெஞ்சி கஷ்டப்பட்டு வாங்குனேன்.

சரி எதுக்கு வாங்குன.எதுக்கு நீ என்கிட்டே பேசணும்.

என்ன ராஜி இப்படி பேசுற.

பிறகு எப்படி பேச சொல்ற.எனக்கு மேரேஜ் ஆகிட்டு உனக்கு தெரியுமா.

தெரியும் ராஜி.இப்போ உங்களுக்குள்ள என்ன பிரச்சனை ஓடிட்டு இருக்கும்னும் எனக்கு தெரியும்.நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.ப்ளீஸ் நாளைக்கு பேசலாமா.

உனக்கு எவ்ளோ தைரியம்.எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லை.நாங்க ரொம்ப சந்தோசமா இருக்கோம்.இனிமேல் என்கூட பேச ட்ரை பண்ணாத.அண்ட் அடுத்தவங்க பெர்சனல் விஷயத்துல மூக்கை நொழைக்கிறது அநாகரிகம்.டோன்ட் மெசேஜ் மீ.பை.

ராஜி நான் உன் நல்லதுக்காகத்தான் சொல்றேன்.ப்ளீஸ் ராஜி.நாளைக்கு ஒருதடவை மட்டும் பேசு.அப்புறம் நான் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்.

மெசேஜை பார்த்துவிட்டு போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு கார்த்திக்கை பார்த்தாள்.அவன் நன்றாக தூங்கி கொண்டிருந்தான்.பின் அவளும் தூங்கியும் போனாள்.

மறுநாள் வழக்கம் போல கார்த்திக் துணிகளை அயன் செய்து வைத்து விட்டு வழக்கம் போல அவனை ஆபிஸிற்கு அனுப்பி வைத்தாள்.

இருவரும் அன்று காலை எதுவும் பேசிக்கொள்ளவில்லை.அன்று காலை ஆபிசில் வைத்து நேற்று வந்த அதே நம்பரில் இருந்து கால் வந்தது.போனை அட்டென்ட் செய்த கார்த்திக்

ஹலோ வணக்கம்.சொல்லுங்க என்றான்.

ஹலோ நான் மான்வி பேசுறேன்.

எந்த மான்வி.

அதான் அன்னைக்கு கே எப் சி ல,பர்த் டே பார்ட்டி,சக்தி பிரென்ட்,ட்ரீட்.

ஒஹ் ஆமா ஆமா.சொல்லுங்க என்ன விஷயம்.எதாவது ஹெல்ப் வேணுமா.

அதெல்லாம் ஒன்னும் இல்லை.நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.

நீங்க ஏன் என்கிட்ட பேசணும்.எதுனாலும் சக்திகிட்ட சொல்லுங்க.வைக்கிறேன்.

ஹலோ ஹலோ ஒரு நிமிஷம்.வச்சிடாதீங்க.

உங்களுக்கு என்ன வேணும்.ஏன் இப்படி டிஸ்டர்ப் பண்றீங்க.

முதல்ல இந்த வாங்க போங்கன்னு சொல்றதை நிறுத்துங்க.நான் உங்களைவிட சின்ன பொண்ணுதான்.சோ என்ன நீ,வா ன்னே சொல்லலாம்.இல்ல பேர் சொல்லி கூப்பிடுங்க.

இதை பாருங்க.உங்களுக்கு என்ன ப்ராப்ளேம்.எனக்கு ஆயிரம் வேலை இருக்குது.உங்களுக்கு என்ன வேணும்.என் நம்பர் உங்களுக்கு எப்படி கிடைச்சுது.

சக்திகிட்ட தான் வாங்குனேன்.ப்ளீஸ் அவகிட்ட சொல்லிடாதீங்க.எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்.உங்களை பத்தி சக்தி நிறைய சொல்லிருக்கா.அதான் உங்ககூட பழகலாம்னு.

இதை பாருங்க எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு.தயவுசெஞ்சு என்ன தொந்தரவு பண்ணாம போய் படிக்கிற வழிய பாருங்க.
என்று சொல்லிவிட்டு காலை கட் செய்தான்.

வேளைகளில் மூழ்கி இருந்த கார்த்திக்கை ஆபிஸ் பாய் வந்து உங்களை தேடி ஒரு பொண்ணு வந்திருப்பதாக சொல்ல யாரென்று இருக்கும் என்று எண்ணிக்கொண்டு சரி வரேன்னு சொல்லுங்க என்று சொல்லிவிட்டு லேப்டாப்பை மூடிவைத்து விட்டு சென்றான்.

அங்கு பார்த்தாள் மான்வி நின்று கொண்டிருந்தாள்.அவளை பார்த்ததும் கார்த்திக்கிற்கு கோவமாக வந்தது.இதுவேற இம்சை பண்ணிகிட்டு என்று மனதில் நினைத்துக்கொண்டு கோவத்தை வெளிக்காட்டாமல்

இங்க எதுக்கு வந்த என்றான்.

உங்களை பார்க்கதான்.

அய்யோ என்ன ஏன் நீங்க பாக்கணும்.உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கு.

சம்பந்தம் இல்ல.இனிமேதான் சம்பந்தம் படுத்திக்கிடனும்.என்னோட ட்ரீட்க்கு நீங்க எதுக்கு காசு கொடுத்தீங்க.

தெரியாம கொடுத்துட்டேன்.படிக்கிற பொண்ணுங்க செலவுக்கு கஷ்டப்படுவீங்களேன்னு கொடுத்தேன்.போதுமா.இனிமேல் தொந்தரவு பண்ணாம கிளம்பு.

அப்படிலாம் கிளம்ப முடியாது.நாங்க உங்க கிட்ட கேட்டோமா.செலவுக்கு காசு இல்ல.பில் கொடுங்கன்னு.

இப்போ என்ன பண்ணனும் அதுக்கு.

சிம்பிள் என்கூட ஒரு கப் காபி சாப்பிடுங்க போதும்.

ஏய் இம்சை இம்சை.நான்தான் சொன்னேனே எனக்கு மேரேஜ் ஆகிடுச்சுன்னு.அப்புறம் ஏன் இப்படி டார்ச்சர் பண்ற.

அப்படித்தான் பண்ணுவேன்.நீங்க வந்தா விட்டுடுறேன்.

வரமுடியாது போடி என்று சொல்லிவிட்டு நடந்து சென்றான் கார்த்திக்.

நீங்க வரலைன்னா நீங்க வரவரைக்கும் இங்கதான் நிப்பேன்.என் பிடிவாதம் பத்தி உங்களுக்கு தெரியாது.வேணும்னா சக்திகிட்ட கேளுங்க என்று அவன் போகும்வரை கத்தினாள் மான்வி.

அவள் கூறியது எதையும் காதில் வாங்காமல் சென்று கொண்டிருந்தான் கார்த்திக்.

மதிய உணவை முடித்துவிட்டு பின் சைட் விசிட் சென்று விட்டான்.அவள் சொன்னது எதையும் அவன் நினைவில் இல்லை. 4 மணி அளவில் அப்போது அவனுடைய மெயிலுக்கு முக்கியமான டாகுமெண்ட்ஸ் வந்திருப்பதாகவும் அதை உடனடியாக தனக்கு அனுப்பும் படியும்மதிய உணவை முடித்துவிட்டு பின் சைட் விசிட் சென்று விட்டான்.அவள் சொன்னது எதையும் அவன் நினைவில் இல்லை. 4 மணி அளவில் அப்போது அவனுடைய மெயிலுக்கு முக்கியமான டாகுமெண்ட்ஸ் வந்திருப்பதாகவும் அதை உடனடியாக தனக்கு அனுப்பும் படியும் அவனது AD கால் செய்ய மீண்டும் ஆபிஸ் சென்றான் கார்த்திக்.

அங்கு ஆபிஸ் வாசலில் மான்வி சொன்னது போலவே தனது ஸ்கூட்டியிலே நின்று கொண்டிருந்தாள்.அப்போது தான் அவள் சொன்னதே நியாபகத்திற்கு வர அவளை பார்த்தான் கார்த்திக்.

கார்த்திக்கை பார்த்த மான்வி ஹாய் என்றாள்.

அவளை முறைத்துக்கொண்டு ஆபிஸ் சென்றவன் தனது லேப்டாப் ஓபன் செய்து மெயிலை படித்துவிட்டு பார்வேர்ட் செய்தான்.பின் சக்திக்கு கால் செய்து உன் பிரென்ட் மான்வி தன்னை சந்திக்க வந்திருப்பதையும் அவள் பேசியதையும் சொன்னான்.மேலும் சக்தியையும் திட்டினான்.

சாரி கார்த்திக்.அவள் ஏன் அப்படி பண்ணினானு எனக்கு தெரியலை.நம்ம பேமிலி மேட்டர் எல்லாம் அவளுக்கு தெரியும்.அவ உன்கிட்ட எதோ சொல்ல நினைக்கிறா.அன்னைக்கு கூட நீ பில் கொடுத்ததுக்கு ரொம்ப பீல் பண்ணினா.ப்ளீஸ் கார்த்திக் அவ என்னோட குளோஸ் பிரென்ட்.ப்ளீஸ் கோவப்படாம அவகிட்ட பேசி அனுப்பி வை கார்த்திக். என்றாள் சக்தி.

சரி என்னமோ பன்னி தொலைக்கிறேன்.எல்லாம் உன்னை சொல்லணும்.நீ மட்டும் இப்போ கைல கிடைச்ச கொன்னுடுவேன்.சரி வை.

தேங்ஸ் கார்த்திக்.அவளுக்கு அப்பா அம்மா மட்டும்தான்.அதான் ஜாயின் பாமிலினா ரொம்ப அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.என்ன பார்த்தாள் பொறாமையா இருக்குன்னுகூட சொல்லுவா.கொஞ்சம் அவ மனசு கஷ்டபடாத மாதிரி பேசு கார்த்திக்.

சரி நான் பாத்துக்கிடுறேன்.அப்புறம் இந்த விஷயத்தை உங்க அக்கா கிட்ட சொல்லி தொலைச்சிடாத.டின்னு கட்டிடுவா.

கண்டிப்பா சொல்ல மாட்டேன்.சரி பை என்று கட் செய்தாள் சக்தி.

பின் மான்வி இடம் சென்ற கார்த்திக் காபி சாப்பிட போகலாமா என்றான்.

இதை முதல்லையே சொல்லிருக்கலாம்ல.நான் சாப்பிடாம கூட நிக்குறேன்.மனசு மாறுறதுக்குள்ள வாங்க போகலாம்.என்றாள் மான்வி.

அவள் சாப்பிடவில்லை என்று சொன்னதும் அவள் மீது லேசான இரக்கம் வந்தது கார்த்திக்குக்கு.

பின் இருவரும் ரெஸ்டாரெண்ட் சென்றனர்.மெனு கார்டை பார்த்து நெய் ரோஸ்ட்,பன்னீர் மசாலா,சிக்கென் ரோஸ்ட் ஆர்டர் செய்து விட்டு உனக்கு என்றான் கார்த்திக்.

பசில இருக்குறது நானு ஒருவார்த்தை என்ன சாப்பிடுறானு கேக்காம ஆர்டர் செய்யுறத பாரு என்று நினைத்துக்கொண்டு எனக்கு ஒரு கப் கோல்டு காபி என்றாள் மான்வி.

அப்போது கார்த்திக்கும் எனக்கும் ஒரு கப் காபி என்றான்.

பேரர் சென்றுவிட தாங்ஸ் என்கூட காபி சாப்பிட வந்ததற்கு என்றாள் மான்வி.

உனக்காகலா வரலை.சக்தி சொன்னா அதான் வந்தேன்.

எப்படியோ வந்திங்கள்ள.அதுவரைக்கும் சந்தோசம்.சக்தி உங்களை பத்தி நிறைய சொல்லிருக்கா.உங்க மேரேஜ்க்கு தான் என்னால வரமுடியலை.சாரி.

பரவா இல்லை.உங்க வீட்ல எத்தனை பேரு.

நான்,அம்மா,அப்பா அவ்ளோதான்.

அதான் ஜாயின் பாமிலினா ரொம்ப பிடிக்குமோ.

ம்ம்ம் ஆமா.உங்க லவ் மேட்டெர்கூட எனக்கு தெரியும்.சான்ஸே இல்லை.ரியலி கிரேட் நீங்க.

போதும் போதும்.

அப்போது ஆர்டர் செய்தது வந்துவிட எல்லாவற்றையும் எடுத்து மான்வி பக்கம் எடுத்துவைத்தான்.காபியை மட்டும் அவன் எடுத்துக்கொண்டான்.

எதுக்கு நீங்க ஆர்டர் பண்ணினதை என்கிட்ட வைக்கிறீங்க.எனக்கு வேண்டாம்.நீங்க சாப்பிடுங்க.

எனக்கு சாப்பிடுறதுக்கு வாங்கலை.நீதான் இப்போ பசில இருக்க.சாப்பிடு என்று அவள் பக்கம் நீட்டினான். இல்ல வேண்டாம்.

ஷ்ஷ்ஷ் சாப்பிடு.இன்னைக்கு ஒரு நாள் டையட் பாக்காம சாப்பிடு.ம்ம்ம்.

தாங்ஸ்.

எதுக்கு.

நான் இன்னும் சாப்பிடலை அத கூட கேக்காம நீங்க ஆர்டர் பண்றிங்கன்னு நினைச்சேன் பட் எனக்குத்தான் ஆர்டர் பன்னிருக்கிங்கனு சொன்னதும் சந்தோசமா இருந்தது.அதான்.

அதெல்லாம் இருக்கட்டும் சாப்பிடு.

அப்போது அவளுக்கு புரை ஏற பாத்து பாத்து மூச்சை நல்லா வேகமா இழுத்து விடு என்றான் கார்த்திக்.

மூச்சை இழுத்துவிட்டு சரியான பின் கார்த்திக் கொடுத்த தண்ணீரை வாங்கி குடித்தாள் மான்வி.

அவளது கண்களின் ஓரம் கண்ணீர் வடிவதை பார்த்த கார்த்திக் என்னாச்சு சாப்பாடு ரொம்ப காரமா இருக்கா.இந்தா கூட கொஞ்சம் தண்ணி குடி என்றான்.

இல்ல வேண்டாம்.சாப்பாடு ஒன்னும் காரம் இல்ல.சும்மா.

ஆர் யு ஓகே.

ம்ம்ம்ம்.எங்க வீட்ல நான் மட்டும்தான்.அப்பா அம்மா ரொம்ப செல்லம்.எனக்கு எல்லாமே இருக்கு.பட் டெய்லி ஏதோ இல்லாதது மாதிரி இருக்கும்.இவ்ளோத்துக்கும் அப்பாவும் அம்மாவும் என்னை அவ்ளோ தாங்குவாங்க.எனக்கும் அவ்ளோ பிடிக்கும் அவுங்களை.

சரி அப்றம் ஏன்.மேல சொல்லு.

ஆனாலும் டெய்லி சண்டை போடுறதுக்கு அண்ணனோ தம்பியோ,இன்னொரு அம்மா மாதிரி அக்காவோ தங்கச்சியோ,பொண்ணு மாதிரி பாத்துகிட அத்தையோ சித்தியோ,தோலோட தோளில் கைபோட்டு பேச முறைப்பையனோ எனக்கு கிடையாது.என்னோட சந்தோஷம் துக்கம் புல்லா அப்பா,அம்மாவோட மட்டும் தான்.அதான் இன்னைக்கு நீங்க அப்படி பண்ணின உடனே அழுகை வந்துடுச்சு.

உறவுகளுக்காக ரொம்ப ஏங்கி போய் இருக்கிற ஒரு பொண்ண போய் தப்பா நினைச்சிட்டோமோ என்று தன்னைத்தானே கடிந்துகொண்ட கார்த்திக்

அதுக்குத்தான் என்கூட பேச ட்ரை பண்ணினியா என்றான்.

ஆமா.சக்தி உங்களை பத்தி,அவ ரெண்டு அக்கா பத்தி சொல்லும் போதெல்லாம் எனக்கு அவ்ளோ சந்தோசமா இருக்கும்.ஆனா வருத்தமாவும் இருக்கும்.நானும் இந்த மாதிரி பாமிலில இல்லையேன்னு.அதான் இந்த ஒருநாள் ஆச்சும் உங்க கூட ஸ்பென்ட் பண்ணலாம்னு இப்படி பண்ணேன்.நான் உங்களை லவ் எல்லாம் பண்ணலை.பயப்படாதிங்க.நான் எதாவது தப்பா பிஹேவ் பண்ணிருந்தா என்ன மன்னிச்சிடுங்க.

இட்ஸ் ஓகே.பரவா இல்லை நானும் சாரி.நீ என்ன சொல்ல வரேன்னு கேக்காம பேசினதுக்கு.

ஓகே.அப்புறம் எப்படி இருக்காங்க ராஜி அக்கா.

அவளுக்கென்ன ராணி மாதிரி இருக்கா.


இப்படியே இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்து கை கழுவி வந்தனர்.கார்த்திக் பில் கொடுக்க தனது கார்டை எடுக்க,அவனை தடுத்து மான்வி தனது கார்டை கொடுத்து பில் செட்டில் செய்தாள்.பின் சரி மான்வி பாக்கலாம்.இந்த ஒரு நாள் உன்கூட பேசினது ரொம்ப சந்தோசம்.இனி எப்போதுலா உனக்கு என்கூட பேச தோணுதோ அப்போ எனக்கு கால் பண்ணு.எந்த ஹெல்ப் வேணும்னாலும் என்கிட்டே கேளு ஓகேவா.

ம்ம் ஓகே அண்ணா என்றாள் மான்வி.

அம்மா தாயே நீ கார்த்திக்னு பேர் சொல்லியே கூப்பிடு.நான் ஒன்னும் நினைக்க மாட்டேன்.

இல்ல எனக்கு இதான் பிடிச்சிருக்கு.அதனால நான் அப்படித்தான் கூப்பிடுவேன் அண்ணா.

ஓஹ் சேப்டி.ஒன்னும் பயப்படாத.ஒருவனுக்கு ஒருத்தி கொறவனுக்கு கொறத்தி.இதான் நம்ம பாலிசி.நமக்கு எப்போதுமே ராஜி தான்.

மான்வி சிரித்துக்கொண்டே ரொம்ப காமெடியா பேசுறீங்க.அப்படிலா ஒன்னும் இல்லை.சரி பிரென்ட் போதுமா என்றாள் மான்வி.

இது பெட்டெர்.ஓகே பாக்கலாம் பாய் என்று சொல்லிவிட்டு இருவரும் சென்றனர்
[+] 8 users Like bsbala92's post
Like Reply
Super bro
Like Reply
Lovely update bro
Like Reply
Super update bro
Like Reply
lovely. continue
Like Reply
Nice update bro... Story is getting more interesting
Like Reply
Nice story. Pls update daily
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)