Romance ஓகே கண்மணி
#1
இந்த கதை ஏற்கனவே XOSSIP ல்   எழுதியது தான். சிலர் மீண்டும் கேட்பதால்  அதை பதிவிடுகிறேன்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
கல்யாண மண்டபத்தில் இருக்கும் அனைவரும் சந்தோசமாக இருந்தார்கள்.அனைவரின் முகத்திலும் கல்யாணத்திற்கான மகிழ்ச்சி காணபட்டது.
ஆனால் ராஜியின் முகத்தில் மட்டும் ஏனோ வெறுப்பு,கவலை,துக்கம்,சோகம்.அவளை கண்ட அவளது அம்மா லட்ச்மிக்கு பொண்ணு ஏதோ நம்மள விட்டு பிரிய போறோம்னு கவலையா இருக்காணு நினைசுகிட்டாங்க.
மணமகன் கார்த்திக்கோ தான் சிறுவயதில் இருந்து காதலித்த.தனக்கு கிடைக்க மாட்டாள் என்று நினைத்த பெண் இன்று மனைவியாய் வர போகிறாள் என்று சந்தொசபட்டலும் ராஜியின் சோகத்திற்கு காரணம் அவனும் ராஜியும் அறிந்ததவர்கலாய்.


அய்யர் மந்திரம் சொல்லி கெட்டிமேளம் முழங்க ராஜியின் கழுத்தில் தாலி கட்டி அவளை தனதக்கினான்.அந்த மணித்துளியில் ராஜியின் மனதில் இனிமேல் என்னுடன் வாழ போகும் ஒவ்வொரு நொடியும் உன்னை காயபடுத்துவேன் என்று நினைத்து கொண்டால்.பின்பு கார்த்திக்கின் தங்கை லீலா மைனிக்கு தாலி முடிச்சு போட அனைவர் முகத்திலும் கல்யாணம் முடிந்த சந்தோசம்.பின்பு பெரியவர்களிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க அனைவரும் மணமக்களை வாழ்த்தினர்.


கார்த்திகோட குடும்பம் கொஞ்சம் பெரிய குடும்பம்.அவனோட அப்பா கூட பிறந்தவங்க 4 தங்கை.2 தம்பி.முதல் தங்கைக்கு மூன்று பெண்கள்.ரெண்டாவது தங்கைக்கு மூன்று பெண்கள்.நான்காவது தங்கைக்கு மூன்று பசங்க.நாலாவது தங்கைக்கு ஒரு பொண்ணு ஒரு பையன்.



ரெண்டாவது தங்கையின் ரெண்டாவது பெண் தான் ராஜி @ ராஜ லக்ஷ்மி.கார்த்திக்கிற்கும் அவளுக்கும் மூன்று வருட வித்யாசம்.சிறு வயதில் இருந்தே கார்த்திக் அப்பா அம்மா கூட இருந்து வளந்தத விட பாட்டி.தாத்தா.அத்தை.சித்தப்பா கூட இருந்து வளந்தது தான் அதிகம்.அதனால கார்த்திக்கிற்கு எப்போதும் அப்பா அம்மாவை விட அத்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும்.ஆனால் முதல் அத்தையை அவனுக்கு பிடிக்காது.அதனால் அவர்கள் குடும்பத்துடன் அதிகமாக பேச மாட்டன்.மற்ற மூவரும் கார்த்திக்கை தனது மூத்த பிள்ளை போல பார்க்க தொடங்கினர்
லக்ஷ்மியின் மூத்த மகள் பிரியா.கார்த்திகை விட ஒறு வயது மூத்தவள்.இருவரும் நல்ல நண்பர்கள்.மூன்றமவள் சக்தி.இவளை சீண்டி சண்டை போடுவது கார்த்திக்கிற்கு அலாதி ப்ரியம்.


பின்பு திருமண சடங்குகள் இனிதே நிறைவேற கார்த்திக்கின் அறையில் சாந்தி மூஹூர்ததிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.கார்த்திக் அறையில் காத்திருக்க ராஜி கதவை திறந்து அறையினுள் நுழைந்தால்.கார்த்திக் ஒன்றும் பேசாமல் சோபாவில் அமைதியாக இருக்க மெத்தையில் அவள் அமர்ந்தால்.சிறிது நேர மௌனத்திற்கு பிறகு கார்த்திக் ஏதோ சொல்ல எத்தனிக்க ராஜியின் கண்களில் இருந்து நீர் கசிவதை உணர்ந்தான்.

அவளுடைய மொத்த கோவமும் அழுகையாக மாற கோவத்தில் மாலை அலங்காரத்தை பிய்த்து எறிந்தால்.அவளுடைய செய்கையை பார்த்த கார்த்திக் அவனாகவே ஆரம்பித்தான்.


எனக்கு நல்லா தெரியும் உனக்கு இந்த கல்யாணத்துல துளி கூட விருப்பம் இல்லன்னு.நா உனக்கு பண்ணின துரோகத்துக்கு என்மேல எவ்ளோ வெறுப்பு இருக்குனும் எனக்கு தெரியும்.உனக்கு தாலி கட்டின அடுத்த நொடியே என்ன சந்தோசமா இருக்க விட கூடாதுன்னு நீ மனசுல நினைச்சுருப்ப.உலகத்துக்கு வேணும்னா நாம புருஷன் பொண்டாட்டி.இந்த நாலு சுவத்துக்குள நீ யாரோ.நான் யாரோ.என் நிழல் கூட உன்மேல படாது.என்ன நீ எவ்ளோ torture பண்ணனும்னு நினைக்றியோ பண்ணிக்கோ.அப்ப ஏன் இந்த கல்யாணம்னு நினைக்கிறியா.நீ எனக்கு கிடைக்கவே மாட்டேனு நினைச்சேன்.பட் உன்கூட சந்தோசமா இருக்காட்டாலும் உன்கூட இருந்தா போதும்.

எனைக்கவது ஒரு நாள் உன் கோவம் குறையும் அன்னைக்கு வரைக்கும் நா வெயிட் பண்றேன்.ப்ளீஸ் அழாம தூங்கு.நா சோபால படுதுகிட்றேன்.குட் நைட்.என்று கூறி முடித்தான்.


இதை கேட்ட ராஜிக்கோ ஆச்சர்யம்.என்ன இது நாம் மனதில் நினைத்ததை நாம் சொல்ல வந்ததை இவன் சொல்லிட்டு போறான் என்று.ஆனால் அவனை வாழ் நாள் முழுவதும் அவனை காயபடுத்த வேண்டும் என நினைத்து கொண்டு கண் மூடி தூங்கி போனால்.
Like Reply
#3
கல்யாணம் முதல் காதல் வரை. என்று தலைப்பு இதற்கு பொருத்தமாக இருந்து இருக்கும். அருமையான தொடக்கம்.
Like Reply
#4
மறுநாள் காலை 7 மணியளவில் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்க கண் விழித்த ராஜிக்கும் கார்த்திக்கிற்கும் நேற்று தங்களுக்கு முதல் இரவு என்பதை உணர சிறிது நேரம் தேவைபட்டது.
 
உடனே ராஜி சேலையை கசக்கி விட்டு நெற்றியில் இருந்த குங்குமத்தை அழித்துவிட்டு தலையில் இருந்த பூவை உதிர்த்து விட்டால்.கதவு அருகே சென்று கதவை திறக்கும் சமயம் தன புடவை முந்தியை சரி செய்வது போல் நடித்தால்.
 
வெளியே கார்த்திக்கின் அம்மா சாந்தா அவளை பார்த்து சிரித்து கொண்டு சீக்கிரம் குளிச்சிட்டு கீழ வாமா.எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருகங்கனு சொல்லிட்டு உன் புருசனையும் வர சொல்லுனு சொல்லிட்டு போனாங்க.
 
அதற்குள் கார்த்திக் பாத்ரூம் சென்று குளித்து முடித்து வெளியே வந்தான்.உடனே ராஜி ஒரு டவெலை எடுத்துக்கொண்டு பாத்ரூம் சென்றால்.அங்கு சென்ற உடன் தான் தெரிந்தது.தன்னுடைய ப்ரெஷ்.சோப்பு.ஷாம்பூ எதுவும் இங்க எப்படி இருக்கும்னு.இந்த கோலத்துல அம்மாட்டையும் கேக்க முடியாதுன்னு நினைச்சுட்டு கண்ணாடி முன்னாடி நின்னுட்டு இருக்கும் போது ஷெல்ப்ல புது ப்ரெஷ்.சோப்பு.ஷாம்பூ எல்லாம் இருந்துச்சு.brand கூட எல்லாம் அவ யூஸ் பண்றதா இருந்துச்சு.
 
இது யாரோட வேலையா இருக்கும்னு குழப்பத்துல குளிச்சிட்டு வெளிய வந்தாள்.அவள் டிரஸ் மாத்தும் வரை கார்த்திக் பக்கத்து ரூமில் இருந்து டிவி பார்த்து கொண்டிருந்தான்.கதவை திறந்து வெளியே வந்த ராஜியை பார்த்த கார்த்திக் ஒரு நிமிடத்தில் உலகையே மறந்தான்.
 
தனக்கு பிடித்த பச்சை நிறத்தில் அழகான காட்டன் சேலையில் ப்ரீ ஹேர் விட்டுஎ ஏஞ்செல் போல அவனை கடந்து சென்றால்.அங்கு டிவியில் ஏன் இதயம் உடைத்தாய் நொருங்கவெ உன் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே என பாடல் ஒலித்து கொண்டிருந்தது.
கீழே சென்ற ராஜியை அழைத்த அவளுடைய அம்மா.அக்கா.சித்தி எல்லோரும் அவளை கிண்டல் செய்ய அவளும் ஒருவாறு சமாளித்தாள்.பின்பு கார்த்திக்கிற்கு காபி கொடுக்க சொல்ல அவள் காபி உடன் அவனைகே பார்க்க சென்றால்.அவனிடம் சென்று காபி டம்ளரை டீபாயில் வைக்க அதை எடுத்து கொண்டான்.
எதுக்காக இப்படி பண்ற.நேத்து என்ன பேச விடாம எல்லாத்தையும் நீ பேசிட்டா நீ நல்லவன்னு நினைக்காத.என்ன பொறுத்த வரைக்கும் என் வாழ்க்கைய சீரளிச்சவன் நீ.என்ன நம்ப வச்சு ஏமாத்திணவன்.இன்னைக்கு பாத்ரூம்ல திங்க்ஸ் வச்சமாதிரி எனக்கு ஹெல்ப் பண்றேன்ங்கற பேருல என்ன நெருங்க நினைக்காத.அப்புறம் அசிங்கமா ஆகிடும்.என்று சொல்லி விட்டு கண்களின் ஓரம் துளிர்த்த நீரை துடைத்தாள்.
 
இதை அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த கார்த்திக் சிரித்து கொண்டே எழுந்து கீழ போகலாமா எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்கனு சொல்லிட்டு சென்றான்.
அவன் சென்ற உடன் எல்லாரும் இருக்கும் வரைக்காவது இவனுடன் அன்னியோன்யமாக இருப்பது போல நடிக்க வேண்டும் என நினைத்து கொண்டாள்.
 
வீட்டில் அனைவரும் கேலியும் சிரிப்புமாக கார்த்திக்கை சீண்ட சமாளித்தான்.பின்பு மதியம் வரை இப்படியே செல்ல மதிய உணவிற்கு பின் கார்த்திக் அவனுடைய அத்தை.அத்தை குழந்தைகள் எல்லாரும் இருந்து பேசி கொண்டிருந்தனர்.
 
கார்த்திக் தனது மூன்றாவது அத்தையின் மடியில் படுத்திருக்க கல்யாண அலுப்பில் தூங்கி போனான்.அப்போது நான்கு அத்தைகளும் ராஜியிடம் பொறுப்பாக இருக்குனும்.கோவபட கூடாது.பொறுமை ஒரு பொண்ணுக்கு ரொம்ப முக்கியம்.உன் மாமியார் குணம் கொஞ்சம் மோசம் தான்.அதனால பொறுமையா அனுசரிச்சி போகணும்.கார்த்திக் அவ வயித்துல போயா பிறக்கணும்.இந்த வயசுல எவ்ளோ கஷ்டம்.அவனோட மனசுக்கு தான் இப்ப நல்லா இருக்கான்.நல்லபடியா அவனை பாத்துக்கோனு சொல்லி முடிச்சாங்க.அதற்கு ராஜி கண்டிப்பா சித்தி.கார்த்திக் மாதிரி ஒருத்தன் கிடைக்க நா ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்.அத்தையை பத்தி கவலை படாதிங்க.அவுங்கள நா சமாளிச்சிப்பேன். என்று கூறினால்.
 
மகளின் இந்த பேச்சை கேட்ட தாய் லக்ஷ்மிக்கோ ரொம்ப சந்தோஷம்.கடைசியில் அன்று இரவே அனைவரும் கிளம்ப ராஜியை தனியாக சந்தித்த லீலாவும்.ப்ரியாவும் கார்த்திக் உன்ன சின்ன வயசுல இருந்து ரொம்ப லவ் பண்றான்.அப்புறம் ஏன் இப்படி செஞ்சான்னு தான் எனக்கு தெரியல.தயவு செஞ்சு அவனை புரிஞ்சுக்க ட்ரை பண்ணுனு சொல்லவும் அக்கா எங்களுக்குள எந்த பிரச்சனையும் இல்ல.நாங்க எல்லாத்தையும் நேற்றே எல்லாத்தையும் பேசி தீத்து எங்க வாழ்க்கைய ஆரம்பிச்சுட்டோம் என்று கூறினால் ராஜி.
 
அவளின் இந்த வார்த்தையை கேட்ட இருவரும் மகிழ்ச்சியில் அவளை கட்டி தழுவினர்.சந்தோசமா இருன்னு சொல்லிட்டு கணவருடன் சென்றனர்.அவர்கள் சென்ற உடன் நாம் பேசியதை கார்த்திக் தான் அவர்களிடம் சொல்லி இருக்க வேண்டும்.அதனால் தான் இருவரும் தனியாக கூப்பிட்டு சொல்லி விட்டு போவதாக அவளுடைய மனம் தவறாக கணக்கு போட்டது.அவனுடைய charecter இப்படிதான்.என்ன செஞ்சாவது அவன் நினைச்சத அடைஞ்சிடனும்.ஆனால் நான் அவனுக்கு கிடைக்க மாட்டேன் என்று நினைத்து கொண்டு அனைவரும் சென்ற பின் இரவு தனது துணிகளை வைக்க ஆயத்தமானால்.
 
ரூமிற்கு சென்று தனது சூட்கேசை எடுத்து சேலைகளை ஒவ்வொன்றாக பெடில் எடுத்து வைத்தாள்.பின் கப்போர்டில் இடம் இருகிரதாணு பார்த்தவளுக்கு ஆச்சர்யம்.அங்கு அவளுடைய துனிகளுக்கென இரண்டு ஷெல்ப் காலியாக இருந்தது.ஏன் இப்படி பண்றான்னு குழம்பினால்.இவன் ஏன் இப்படி நடிக்கிறான்னு எண்ணி கொண்டே துணிகளை அடுக்கி வைத்தால்.
 
அன்று இரவு இருவருக்கும் பேசா இரவாய் அமைய அப்படியே தூங்கி போனார்கள்.மறுநாள் இருவரும் திருசெந்தூர் கோவிலுக்கு சென்று வருமாறு கூற இருவரும் செல்வதாக முடிவானது.ஆனால் ராஜிக்கோ கார்த்திக்குடன் தனியாக செல்வதை நினைத்தாள் கடுப்பாக இருந்தது.தவிர்க்கவும் முடியவில்லை.போதாதற்கு லக்ஷ்மி வேறு கண்டிப்பாக செல்ல வேண்டும்.இதுவும் ஒரு வித சம்பிரதாயம் என்று போன் செய்து கூறினால்.
 
கார்த்திக்கும் ராஜியின் மனதை அறிந்தவனாக வேலையை காரணம் காட்டி தவிர்க்க முயன்ற போது பெரியவர்கள் கட்டாயம் செல்ல வேண்டும் என கூற வேறு வழி இல்லாமல் கிளம்பினான்.இறுதியில் அவர்களுடன் கார்த்திக்கின் சித்தப்பா மகன் மகேஷும் உடன் வருவதாக முடிவானது.ராஜி கேரளா டைப் சேலையில் மேக்அப் இல்லாமல் தலையில் மல்லிகை பூ வைத்து வகுடில் குங்குமம் வைத்து,நெற்றியில் சிறிது சந்தன கீற்றை வைத்து வரும் போது கார்த்திக் அப்படியே மெய் மறந்து நின்றான்.
 
ஒரு சிலர் மட்டும் தான் எல்லா விதமான உடையிலும் அழகாக இருப்பார்கள்.எல்லாவிதமான உணர்வுகளை வெளிபடுத்தும் போதும் அழகாக இருப்பார்கள்.என்னவள் அந்த ரகம்.சிறு வயதில் சுடியில் மட்டுமே பார்த்த அவளை தற்போது இந்த கோலத்தில் பார்ப்பது மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடிப்பது போல்.
 
அப்போது தான் அவன் ஒன்றை கவனித்தான்.அவள் உடுத்தியிரிந்த சேலை கார்த்திக் காலேஜ் முடித்து வேலைக்கு சென்ற போது அவனுடைய முதல் மாத சம்பளம் பத்தாயிரம் ருபாய்.அவன் முதல் மாத சம்பளத்தில் ராஜிக்கு எதாவது வாங்கி கொடுக்க வேண்டும் என்பது அவனது ஆசையாக இருந்தது.
என்னவ வாங்கி கொடுக்கலாம் என்று யோசித்த போது தான்.அவனுக்கு தோன்றியது.ராஜி சேலை கட்டி பார்க்க வேண்டும் என்பது அவனது ஆசை.எவ்வளவு மொக்கையான பெண்ணும் சேலை கட்டி வரும் போதும் அது அவர்களை அழகாக காட்டும் என்பது கார்த்திக்கின் எண்ணம்.அப்போது அவன் வேலை பார்த்த இடம் திருவனந்தபுரம்.அங்கு இருக்கும் போத்திஸ்க்கு சென்று சேலை செலக்ட் செய்யும் போது அவனுக்கு எதுவும் பிடிக்கவில்லை.அப்போது தான் அவன் கண்ணில் பட்டது கேரளா சாரீஸ் செக்சன்.அங்கு பொய் தேடிய போது இறுதியில் பச்சை நிற பார்டரில் அழகான எம்ப்ரைடரிங் செய்யப்பட்ட சேலை அவளுக்கு சூப்பராக இருக்கும் என்று அதை பில் போட சொன்னான்.
 
அந்த சேலையை தன்னுடைய திருமண நாள் அன்று அவளுக்கு கொடுக்க வேண்டும் என்று எண்ணிய அவன் அதை பத்திரமாக வைத்திருந்தான்ஆனால் அதை கடைசி வரை அதை அவளுக்கு கொடுக்கவே இல்லை.ஒரு ஆண் தனது தாய்க்கு மட்டுமே தனது முதல் மாத சம்பளத்தில் சேலை வாங்கி தருவான்.
 
மற்றவர்களுக்கு கொடுத்தாலும் வேறு எதாவது நகையோ பொருளோ கொடுபானே தவிர சேலை கொடுக்க மாட்டன்.அதனால் அந்த சேலை கார்த்திக்கிற்கு ரொம்ப ஸ்பெஷல்.அது எப்படி நாம் கொடுக்காமலே இவளிடம் அந்த சேலை என்று யோசித்து கொண்டிருந்தான்.அப்போது தான் நினைவுக்கு வந்தது.அவள் நேற்று துணிகளை கப்போர்டில் எடுத்து வைக்கும் போது அவனுடைய துணிகளுடன் இருந்த சேலையை அவளுடையது என்று நினைத்து எடுத்திருக்க வேண்டும் என்று.எது எப்படியோ யாருக்காக பார்த்து பார்த்து வாங்கினோமோ அது அவளிடமே போய் சேர்ந்ததில் கார்த்திக்கிற்கு ரொம்ப சந்தோசம்.ஆனால் அது எதுவும் இன்று நீடிக்க போவதில்லை என்பதை அறியாமல்......
 
காரை கார்த்திக் ஓட்ட முன் சீட்டில் மகேஷும் பின்னால் ராஜியும் இருக்க கார் சென்றது திருசெந்துருக்கு.மூவரும் அமைதியாக செல்ல மகேஷ்தான் காரில் பாட்டு எதாவது போடலாம் என்று சவுண்ட் சிஸ்டத்தைஒன் ஆன் செய்ய மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ என்று எஸ்.பி.பி உருக கார்த்திக் கண்ணாடி வழியாக ராஜியை பார்த்தான்.
 
அவளோ சட்டென்று தன் முகத்தை திருப்பி கொண்டு ஜன்னல் வழியாக வெளியே பார்க்க தொடங்கினால்.ஏனோ ராஜிக்கு அந்த பாடல் பிடித்திருந்தாலும் அதை கேட்கும் மணநிலையில் அவள் இல்லை.
 
Like Reply
#5
திருசெந்தூர் சென்ற உடன் காரை பார்க் செய்து விட்டு மூவரும் கோவிலுக்கு சென்றனர்.உள்ளே சென்று முருகனை வேண்டினான் கார்த்திக்.ஒவ்வொரு வருடமும் உன்னை வந்து பார்க்கும் போதெல்லாம் எனக்கு ராஜி வேணும்.அவளோட தான் என் வாழ்க்கை அமையனும்.அவ எனக்கு மட்டும் தான்னு உங்கிட்ட சுயநலமா வேண்டிகிட்டேன்அதே மாதிரி நீயும் கொடுத்துட்ட.அதே மாதிரி அவ கூடிய சீக்கிரமே என்ன புரிஞ்சிகிடனும்னு வேண்டிகிட்டான்.
 
ராஜியோ எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது.அப்பா.அம்மா சந்தோசத்துக்காக நான் ஏன் இப்படி நிம்மதி இல்லாம வாழனும்.எனக்கு எப்படியாவது இந்த கல்யாண வாழ்க்கைல இருந்து விடுதலை கொடுன்னு மனமுருகி வேண்டிக்கிட்டு இருக்க அவள் கண்கள் ஓரம் நீர்த்துளி கசிந்திருந்தது.அவள் கண்களை திறந்து பார்க்கும் போது அவள் பெயருக்கு அர்ச்சனை கொடுத்து கொண்டிருந்தான் கார்த்திக்.
 
இவனுக்கு எப்படி நம் ராசி நட்சத்திரம் தெரியும் என்று குளம்பினால்.பின்பு சாமி கும்பிட்டு விட்டு வெளியே வர அங்கு வரிசையாக கல்யாணம் நடை பெற்று கொண்டிருந்தது.அதை பார்த்த ராஜிக்கோ இவர்களும் நம்மை போல தான் என்று நினைத்து கொண்டால்
 
.பின்பு கடற்கரைக்கு சென்று சிறிது நேரம் அலைகளில் கால் நனைத்து கொண்டிருந்தனர்.ராஜிக்கு கடல் அலையில் கால் நனைத்து கொண்டு விளையாடுவது ரொம்ப பிடிக்கும்.ஒவ்வொரு முறையும் அவள் அப்பா உடன் வரும்போது நீண்ட நேரம் அப்படி விளையடுவாள்.ஆனால் இன்று எப்போது இங்கு இருந்து கிளம்புவோம் என்று இருந்தது.
 
அப்போது ஒரு போடோகிரப்பர் வந்து போட்டோ எடுத்துகோங்க சார் ப்ளீஸ் என்று கூற வேண்டாம் என்றனர்.அவர் விடாது வற்புறுத்த இவர்களும் ஒத்துகொண்டனர்.அந்த நேரம் மகேஷிற்கு போன் வர அவன் பேச சென்றான்.இவர்கள் இருவரும் சற்று இடைவெளி விட்டு நிற்க போடோக்ராபர் ஒட்டி நிற்க சொல்ல இருவரும் ஒரு இன்ச் கேப் விட்டு நிற்க மீண்டும் ஒட்டி நிற்க சொல்ல இருவரது தோள்களும் உரசிகொண்டன.
 
உடனே அமிலம் பட்டது போல ராஜி விலக பொது இடம் என்று கருதி மீண்டும் அருகில் நின்று கொண்டால்.போட்டோ எடுத்த உடன் இருவரும் விலக அப்போது அங்கு வந்த மகேஷ் மைனி உங்க தோளில் கை போட்ருக்க மாதிரி ஒரு போட்டோ எடுங்கனு சொல்ல தர்மசங்கடத்தில் நெளிந்தாள்.
 
அவள் கார்த்திகை பார்க்க அவன் கண்களால் சாரி கேட்டு கொண்டான்.சரி இந்த ஒரு போடோவோடு நிறுத்தி கொள்வோம் என்று நினைத்த ராஜி வராத சிரிப்பை வரவழைத்து கொண்டு தலை ஆட்டினாள்.அவள் தோளில் காதலுடன் கை போட்டு கொண்டு சிரித்தவாறு நின்றான்
 
கார்த்திக்.போடோக்ராபர் போட்டோ எடுக்க மகேஷ் தான் வைத்திருந்த கார்த்திக்கின் ஹன்டிகாமில் படம் பிடித்தான்.ராஜியோ உடல் முழுவதும் நெருப்பில் எரிவதை போல் உணர்ந்தால்.அவளுக்கு கோவம் பீறிட்டு வந்தது.எங்கே நாம் கத்திவிடுவோமோ என்று பயந்த அவள் சூழ்நிலையை மாற்ற எண்ணி சாப்பிட போகலாமா என்று கேட்டாள்.போட்டோவை வாங்கிகொண்டு ஹோட்டல் சென்று சாபிட்டனர்.பின்பு மூவரும் மணப்பாடு சென்று அங்கு இருக்கும் சர்ச் சென்றனர்.மனப்ப்படை சுற்றி பார்த்து விட்டு மூவரும் 7 மணியளவில் வீடு வந்தனர்.
 
வீட்டிற்கு வந்த இருவரும் பெட் ரூமிற்கு வந்தனர்.உடனே ராஜி கட்டிலில் பொத்தென விழுந்து அழ தொடங்கினால்.இதை கண்ட கார்த்திக் சாரி ராஜி என்று சொல்ல வெடுக்கென எழும்பிய அவள் என்ன சாரி நேத்து என்ன சொன்ன உன் நிழல் கூட என்மேல் படாதுன்னு,உரிமையா கிட்ட வந்து உரசுற,தோல் மேல கை போடற.நீ என்ன தொடும் போது எப்படி இருந்துச்சு தெரியுமா.உடல் பூரா அமிலத்தை ஊத்தின மாதிரி இருந்துச்சு.அசிங்கமா இருக்கு நீ இப்படி பண்றதுனு சொல்ல.நா வேணும்னு பன்னல அந்த போடோக்ராபரும்,மகேஷும் சேர்ந்து சொன்னதல தான் அப்படி செய்ய வேண்டியதா போச்சு என்று கூறினான்.அவுங்க சொன்னா நீ இத அவைட் பன்னிருக்கலாம்ள.அது சரி உனக்கும் இதெல்லாம் ஆசைதான.நீ ஏன் சொல்லபோற.ஒரு பொண்ணோட மனச புரிஞ்சிகிட முடியாதவன் தான நி அப்படினு சொன்னால்.
 
செருப்பால் அடி வாங்கியதை போன்ற வார்த்தைகளை கேட்ட கார்த்திக் அமைதியாக ஒன்றும் சொல்லாமல் கீழே சென்றான்.அங்கு சாப்பாடு செய்து கொண்டிருந்த அவனது அம்மா சாப்பிட சொன்னங்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு மேலே சென்று பெட்ரூமில் சோபாவில் தூங்க சென்றான்.அதற்குள் உடை மாற்றி வந்த ராஜி நேராக அத்தையிடம் சென்று சாப்பாட்டை எடுத்து வைக்க உதவினால்.அப்போது என்னமா போன இடத்தில் எதாவது பிரச்சனையா இவன் ஏன் இப்படி அமைதியாக இருக்கான்.சாப்பாடும் வேண்டாம்னு சொல்லிட்டான்னு சாந்தா கேட்க இல்ல அத்தை ரொம்ப நேரம் அங்க சுத்திருகொமா அதான் அசதியா இருக்கும்.இருங்க நான் என்னனு கேட்டு தைலம் தேச்சு விட்டுட்டு வரேன் என்று சொல்லிவிட்டு ரூமிற்கு சென்றால்.கார்த்திகை பார்த்து ஏன்எ சாப்பிட வரல.என்னால யாரும் சாப்பிடாம இருக்க வேண்டாம்னு சொல்ல கார்த்திக் ஒன்றும் பேசாமல் அவளை பார்த்தான்.அவளிடம் பதில் ஏதும் கூறாமல் கீழே சென்று அம்மாவிடம் சகஜமாக பேசிக்கொண்டு பெயருக்கு சாப்பிட்டான்.கூடவே ராஜியும் அவனுடன் சேர்ந்து ஏங்க கோவில்ல நல்ல தரிசனம்,மணப்பாடு சூப்பரா இருந்துச்சுனு கார்த்திக்கிடம் பேசி கொண்டு இருந்தால்.கார்த்திக்கிற்கு அவள் நடிக்கிறாள் என்பது தெரிந்தாலும் இவனும் அன்னியோன்யமாக இருப்பது போல நடித்தான்.அவர்களை பார்த்த சாந்தா இருவரும் சந்தோசமாக இருப்பதை கண்டு மகிழ்ந்தாள்.
 
பின் இருவரும் தூங்க சென்றனர்.ராஜி கட்டிலில் படுத்து கொள்ள கார்த்திக் சோபாவில் படுத்து கொண்டான்.கார்த்திக் சிறிது நேரத்தில் தூங்கி விட ராஜி தூக்கமின்றி தவித்தால்.கார்த்திக்கிடம் இன்று நாம் ரொம்ப கோவப்பட்டு பேசி விட்டோமோ என்று வருந்தினால்.அவள் கார்த்திகையே பார்த்து கொண்டிருக்க அவள் நினைவுகள் பின்னோக்கி சென்றது.அப்போது ராஜி 11th படித்து கொண்டிருந்தாள்.அவள் படித்தது ஒரு லேடீஸ் ஸ்கூல்.அதற்கு பக்கத்தில் இருக்கும் இன்னொரு ஜென்ட்ஸ் ஸ்கூலில் படிப்பவன் தான் ரமேஷ்.அவனும் ராஜியும் 8th வரை ஒன்றாக படித்தவர்கள்.ஒரு நாள் பஸ்சில் வரும் போது பார்த்து கொள்ள இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.ஒரு நாள் ராஜேஷ் ராஜியிடம் ப்ரொபோஸ் செய்ய இவளுக்கு என்ன பதில் சொல்வது என்கின்ற குழப்பத்தில் இருந்தால்.ஆனால் அவளுடைய பிரெண்ட்ஸ் அனைவரும் அவளை லவ் பண்ண சொல்ல இவளும் 80 சதவிகிதம் மனதை பறிகொடுத்தாள்.இது சில மாதங்கள் போய் கொண்டிருக்க பஸ்சில் வரும் மற்ற மாணவர்கள் ஒரு நாள் ராஜியை கிண்டல் செய்ய ரமேஷ் அதை தட்டி கேட்க அவனிடம் சரணடைந்தால்.அப்போது இருவரும் 11th சென்றிருக்க காதல் மயக்கத்தில் செல்போன்.மெசேஜ் சாட் என்று தினசரி காதலிக்க அவளுடைய மார்க் குறைந்து போனது.
 
ராஜி முழுமையாக ரமேஷை விரும்பினால்.அவனும் ராஜியை உயிருக்கும் மேலாக காதலித்தான்.இருவரும் ஸ்கூல் முடிந்து காலேஜில் சேர ராஜி பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ்லும்,ரமேஷ் டிப்ளோமா மெக்கானிகலும் சேர்ந்தனர்.அவர்களுக்கு இரண்டு வருடங்கள் செல்லும் வரை எந்த பிரச்சனையும் இல்லை.அப்போது தான் ரமேஷ் வேலைக்கு செல்லும் நேரம் அவனுக்கு திருமணம் செய்ய அவனது பெற்றோர்கள் முடிவெடுத்தனர்.ரமேஷின் குடும்பம் கோடிகளில் கொழித்தவர்கள்.அவனுடைய அப்பாவிற்கு மொத்தம் 7 தங்கைகள்.அவர்கள் தங்களது பெண்ணிற்கு தான் ரமேஷை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஒன்றுகூடி முடிவெடுத்து அண்ணனிடம் பேச அண்ணனும் ஒத்துக்கொண்டார்.அப்போது ரமேஷ் ராஜியை காதலிப்பதை கூறி கல்யாணத்தை நிறுத்துமாறு கூற அவனுடைய அப்பா மறுத்து விட்டார்.இதனால் மனமுடைந்த ரமேஷ் பொய்சன் சாப்பிட அவனை தக்க சமயத்தில் காப்பாற்றினர்.
 
இங்கோ ராஜியின் விஷயம் அவள் அக்காவிற்கு தெரிய வர ராஜியை கண்டித்திருகிறாள்.இதை ரமேஷிடம் கூற அவன் ப்ரியாவிடம் தான் பேசி சரி பண்ணுவதாக உறுதி அளித்திருந்தான்.அதை உடனே செயல் படுத்தவும் செய்தான்.ப்ரியாவிற்கு போன் செய்து தான் ராஜியை காதலிப்பதாகவும் அவளும் என்னை விரும்புவதாகவும் எங்களை சேர்த்து வைக்க உதவுங்கள் என்று கேட்டான்.அவள் ஒரே பிடியாக மறுத்துவிட்டால்.
 
அவனும் டெய்லி கால் செய்து அவளை கேட்க அவளோ அவனை பிளாக் செய்து விட்டால்.அவனும் வேறு வேறு நம்பர்களில் இருந்து அவளிடம் பேச.ரமேஷின் அக்காவோ தன் தம்பி விஷம் சாப்பிட ராஜிதான் காரணம் என்றும்,அவனை அவள் ஹாஸ்பிடல் வந்து ஒருதடவையாவது பார்த்தாளா என்று அவளிடம் சண்டை போட அவளோ கார்த்திக்கிடம் இதை கூறி அவனிடம் பேச சொன்னால்.
 
Like Reply
#6
super update bro
Like Reply
#7
Very nice. Looks more like inspired by "Mouna Raagam" movie. Smile
Like Reply
#8
சூப்பர் கதை. திரும்ப படிக்கிறதுல சந்தோஷம்
[+] 1 user Likes Rockket Raja's post
Like Reply
#9
திரும்பவும் பதிவிடுவதற்கு நன்றி
Like Reply
#10
Super
Like Reply
#11
Please update
Like Reply
#12
கார்த்திக் ரமேஷிற்கு கால் செய்து நடந்தவற்றை கூற ரமேஷ் ஆமாம்.எனக்கு கல்யாணத்துக்கு பேசி வீட்ல ஏற்பாடு பண்றாங்கன்னு ராஜிட்ட சொல்றேன் அவ எந்த பதிலும் சொல்ல மாட்டேன்றா.அவ என்னை ஏமாத்திடுவாலோன்னு பயமா இருக்கு.அதான் எங்க அக்கா அப்படி பேசிட்டனு சொன்னான்.அதற்கு கார்த்திக் உன் லவ் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா.முதல்ல ஒரு பொண்ண லவ் பண்ணிங்கன்னா அவளோட சேர்த்து அவ குடும்பத்தையும் சேர்த்து நேசிங்க.நீ விஷம் குடிச்ச உடனே அவ ஏன் உன்ன வந்து பாக்கணும்.நீ விஷம் குடிச்சதால சின்னதா இருந்த பிரச்சனை இப்ப பெருசாகிடுச்சு தெரியுமா.அவ வீட்ல அவளுக்கு அக்கா,தங்கச்சின்னு ரெண்டு பேரு இருக்காங்க.அவுங்கள விட்டுட்டு உன்ன பாக்க ஓடி வந்து இருக்க சொல்றியா.அவ அக்காக்கு எதுக்கு தேவை இல்லாம டிஸ்டர்ப் பண்ற.அவளுக்கு உன்ன சும்மாவே பிடிக்காது.இப்ப உன்ன சுத்தமா வெறுக்க ஆரம்பிச்சிட்டா.பர்ஸ்ட் நீ நல்ல வேலைக்கு போ.உனக்கும் அவளுக்கும் 24,23 வயசு வரும்போது வந்து சொல்லுங்க நாங்க இன்னும் லவ் பண்றேன்னு.அப்ப நானே உங்கள கூட்டிட்டு பொய் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்ல சரி நான் உங்கள நம்புறேன் இவ்ளோ சொல்றிங்க நான் உங்கள மதிக்கிறேன்னு சொன்னான்.
 
கார்த்திக் இதில் தலையிட்டு பேசியது இருவர் வாழ்விலும் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போவதை அறியாமல் போனை துண்டித்தனர்.
 
கார்த்திக்கிடம் பேசிய ரமேஷ் அவனுடைய அப்பாவிடம் சென்று தனக்காக ராஜியின் வீட்டிற்கு சென்று அவளுடைய அப்பாவிடம் பேசும்படியும் ராஜி இல்லாமல் தான் செத்து விடுவதாகவும் கூறினான்.மகனின் இந்த வார்த்தையை கேட்ட அவனது அப்பா அவனுக்காக ராஜியின் அப்பாவிடம் சென்று பேசினார்.இருவரும் ஒரே ஜாதி என்பதால் மறுப்பு ஏதும் சொல்ல மாட்டார் என்று நினைத்துகொண்டு சென்றவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.மூத்த மகள் இருக்கும் போது இளையவளுக்கு முடித்தால் நன்றாக இருக்காது அதனால் மூத்தவளுக்கு முடிந்த பின்பு பார்க்கலாம்.இன்னும் நான்கு வருடம் கழித்து வாங்க பாக்கலாம் என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார்.மகனினின் வாழ்க்கையை மனதில் கொண்டு அவர்கள் வீட்டில் ஒத்துக்க மாட்டேன்றாங்க,அவுங்க உறுதியான பதிலா சொல்ல மாட்டேன்றாங்க.நீ அவளை மறக்குறது தான் ரெண்டு குடும்பத்துக்கும் நல்லதுனு சொல்லி விட்டார்.இதை கேட்டு கொண்டிருந்த அவனது அத்தைகள் இந்த சந்தர்பத்தை சரியாக பயன்படுத்தி கொண்டு அவர்களுடைய மகள் ஒருவருக்கு ரமேஷை திருமணம் செய்து வைக்க சொல்லி அவரை கட்டாய படுத்த அவரும் வேறு வழி இல்லாமல் ஒத்துகொண்டார்.
 
ராஜியின் அக்கா அவனை வெறுப்பதாக சொன்னதை ராஜிதான் தன்னை வெறுப்பதாக தவறாக புரிந்து கொண்ட ரமேஷ் அவள் தன்னை ஏமாற்றி விட்டாள் என்று அவளிடம் மேற்கொண்டு பேசாமல் இருந்து விட்டான்.அடுத்த வாரமே அவனுக்கு நிச்சயம் செய்யப்பட்டு அதற்கடுத்த வாரம் திருமணம் முடிவானது.திருமணத்திற்கு முந்தின நாள் இரவு கால் செய்து எனது அப்பாவிடம் பேசி நான் சம்மதம் வாங்குகிறேன் ப்ளீஸ் நீ கொஞ்சம் வெயிட் பண்ணு.எனக்கே இப்பதான் உன்னோட மேரேஜ் விஷயமே தெரியும்.ப்ளீஸ் என்று அழுது கொண்டே அவனிடம் பேச எல்லாம் கை மீறி போய் விட்டதாகவும் இவ்வளவு நாள் பேசாதவ இப்ப பேசி என்ன பண்ண.விடு மறந்துடலாம்.என்று கூறி கட் செய்து விட்டான்.மறுநாள் இருபதை கடந்த ரமேஷுக்கும் இருபதை தாண்டாத அவனது முறைபெண்ணுக்கும் திருமணம் முடிந்தது.அவனுடைய அத்தைகளுக்கு தங்கள் குடும்ப சொத்தை தங்கள் குடும்பமே அனுபவிக்கலாம் எவருக்கும் பங்கு கொடுக்க வேண்டாம் என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
 
இங்கு ராஜியோ இரண்டு நாட்களுக்கு யாரிடமும் பேசவில்லை.சரியாக சாப்பிடவில்லை.அவள் இயல்பு நிலைக்கு வர இரண்டு மாதங்கள் ஆனது.கார்த்திக்கால் தான் இவ்வளவு பிரச்சனையும் என்று அவனை வெறுக்க ஆரம்பித்தவள் இன்று வரை வெறுக்கிறாள்.பின்பு ஒரு வருடத்தில் அவளுடைய படிப்பு முடிய வீட்டில் இருந்து கொண்டு அம்மாவிற்கு உதவியாக சிறு வேலைகள் செய்வது தையல் என்று நான்கு வருடங்களை ஓட்டினால்.அந்தநேரம் தான் அவளுடைய அக்காவிற்கு திருமணம் முடிந்திருக்க அடுத்து இவளுக்கு வரன் தேடும் படலம் நடை பெற்று கொண்டிருக்க அந்த நேரம் கார்த்திக்கும் highways department ல் ஜூனியர் இஞ்சினியராக வேலை பார்த்து கொண்டிருந்தான்.
 
அவன் அப்பா ராஜி வீட்டிற்கு சென்று கார்த்திக் ராஜியை விரும்புவதாகவும் அவனுக்கு ராஜியை கட்டி கொடுக்க சம்மதம் தெரிவிக்கும் படியும் தங்கையிடம் அன்பு வேண்டுகோள் விடுத்தார்.இதை கேட்ட ராஜிக்கோ உலகமே நின்று விடுவது போல்.யாரை வாழ்நாள் முழுவதும் பார்க்க கூடாது என்று இருந்தோமோ அவனுடனே நம் வாழ்வா.கடவுளே இது நடக்க கூடாது என்று மனதார வேண்டினால்.ராஜியின் அம்மா லக்ஷ்மிக்கோ என்ன சொல்வது என்றே தெரியவில்லை.அவளுக்கு ராஜியை கார்த்திக்கிற்கு கொடுக்க விருப்பம் தான்.ஆனால் தன் குடும்பத்துடன் சண்டை போட்டு இருபது வருடங்கள் பேசாமல் இருக்கும் தன் கணவனை எப்படி சம்மதிக்க வைப்பது என்று எண்ணி சரி அண்ணே கூடிய சீக்கிரமே நல்ல பதிலா சொல்றேண்ணே என்று கூறி அனுப்பி வைத்தாள்.
 
அதன் பின்பு இரண்டு வாரம் கழித்து கார்த்திக் அத்தையை தனியாக சந்தித்தான்.நான் ராஜியை சின்ன வயசில் இருந்தே லவ் பண்றேன்.எனக்கு அவள ரொம்ப பிடிக்கும்.நீங்க வேற யாருக்கோ அவள கட்டி தரதுக்கு எனக்கு கொடுங்க நான் அவள நல்லா பாத்துகுடுவென்.உங்கள என் அம்மா ஸ்தானத்துல வச்சிருக்கேன்.நீங்க என்ன சொல்றிங்கன்னு தான் எனக்கு முக்கியம்.மாமாவ பத்தி எனக்கு கவலை இல்ல.நீங்களும் இருபது வருஷத்துக்கு முன்னாடி நடந்தத பத்தி பேச மாட்டிங்கனு நம்புறேன்.அப்புறம் உங்க விருப்பம்எ.என்று கூறினான்.
 
லக்ஷ்மியோ சிறிது நேர மௌனத்திற்கு பிறகு தீர்க்கமாக சொன்னால் எனக்கு சம்மதம் மாமா கிட்ட பேசி சம்மதம் வாங்க வேண்டியது என் பொறுப்பு.மத்த விஷயத்தை நான் அண்ணன் கிட்ட பேசிகிட்றேன்னு சொன்னால்.ப்ரெண்ட் வீட்டிற்கு சென்று விட்டு வந்த ராஜியிடம் நடந்தவற்றை சொல்லி அவளின் சம்மதத்தை கேட்டாள் லக்ஷ்மி.
 
அவளுக்கோ கார்த்திக்குடன் வாழ துளி அளவும் விருப்பம் இல்லை என்று அம்மாவிடம் எப்படி சொல்வது.சொன்னாலும் அதற்கான காரணத்தை கேட்டாள் தன் பழைய காதலால் என்று சொல்ல அவளுக்கு தைரியம் இல்லை.அதனால் எனக்கு சம்மதம் ஆனால் அப்பாக்கு பிடிக்கலனா வேண்டாம்  என்று அப்பாவை பயன்படுத்தி கொண்டாள்.
 
ஆனால் லக்ஷ்மியோ தனது மூத்த மகளின் உதவியுடன் பல போராட்டங்களுக்கு பிறகு கணவனை சம்மதிக்க வைத்தாள்.தனது அப்பா இப்படி காலை வாறுவார் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.இறுதியில் இதில் இருந்து தப்பிக்க ஒரே வழி கார்த்திக்கிடம் பேசிவது தான் என்று முடிவெடுத்து அவனிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைத்தால்.இருவரும் கோவிலில் சந்திக்க தேங்க்ஸ் ராஜி.இவ்வளவு நாள் கழித்து என்கிட்டே பேசினதுக்கு அப்புறம் கல்யாணத்துக்கு சம்மதிச்சதுக்கும் என்று சொல்லிவிட்டு அவளுக்கு பிடித்த டைரிமில்க் சில்க் chocholate நீட்டினான்.சடக்கென அதை பிடுங்கி வீசி விட்டு இதோ பாரு கார்த்திக் எனக்கு இதில் விருப்பம் இல்லை என்றும் அதனால் எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்திடு.எங்க அம்மா சொன்னதால தான் நான் இதுக்கு ஒத்துகிட்டேன்.மத்தபடி உன்ன எனக்கு சுத்தமா பிடிக்கல.ப்ளீஸ் எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்திடுனு சொன்னால்.சரி ராஜி என்மேல உனக்கு இருந்த கோவம் போயிருக்கும்,நீ மாறி இருப்பனு நினைச்சு தான் நா இதெல்லாம் பண்ணேன்.பட் நீ இன்னும் மாறவே இல்ல.ஆனால் நான் இன்னும் அதே கார்திக்கா அதே காதலோட தான் இருக்கேன்.இட்ஸ் ஓகே.இனி இந்த கல்யாணம் நடக்காது.இப்ப உடனே வீட்ல சொன்னா தேவை இல்லாத பிரச்சனை வரும்.ஸோ எல்லாம் நடக்கட்டும்.நாளைக்கு காலைல கல்யாணம் நடக்குற மாதிரி ஒரு சூழ்நிலை வந்தாலும் இன்னைக்கு நைட் நா நிறுத்திடுவேன்.கொஞ்சம் பொறுமையா இரு. தேங்க்ஸ் கார்த்திக் என்ன புரிஞ்சிகிட்டதுக்கு நான் உன்ன ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன் சாரி என்றாள்.இட்ஸ் ஓகே பிரெண்ட்ஸ் என்றான் கார்த்திக்.சிரித்து கொண்டே நேரமாகிடுச்சு கிளம்பனும் போலாமா என்றாள் ராஜி.நான் சொன்னதுக்கு பதில் சொல்லவே இல்ல என்று கேட்டான் கார்த்திக்.சிரித்து கொண்டே பிரெண்ட்ஸ்.பட் நோ லவ் நோ பெயின் என்று சொல்லிவிட்டு சென்றால் ராஜி.
 
Like Reply
#13
பின்பு இரு வீட்டாரும் பேசி முடித்து ஒரு நல்ல நாளில் பேசி முடித்து கல்யாண தேதியும் நிச்சயதார்த்த தேதியும் முடிவானது.நிச்சயதார்த்தம் அன்று ராஜி கார்த்திக்கிடம் என்ன பண்ண போற நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சு.எதாவது பண்ணு.எனக்கு ரொம்ப பயமா இருக்குனு சொன்னால்.கவலையே படாத ராஜி ப்ரீயா இரு.அதுக்கான பிளான் எல்லாம் நான் பண்ணிட்டேன்.என்னனு மட்டும் கேக்காத.சஸ்பென்ஸ்.ஆமா உன்கிட்ட ஒன்னு கேக்கனுன்னு நினைச்சேன்.இந்த கல்யாணத்த நிறுத்த சொல்லிட்ட.எப்படியும் அடுத்து உனக்கு கல்யாண பேச்ச வீட்ல எடுப்பாங்க.அப்பவும் வேண்டாம்னு சொல்லிடுவ.லைப் புல்லா இப்படியேவா இருக்க போறனு கேட்டான்.தெரியல போற வரைக்கும் போகட்டும் அப்புறம் பாத்துக்கலாம்னு ராஜி சொல்ல ஹே எப்படினாலும் எவனையாவது கல்யாணம் பண்ணிக்க போற அது ஏன் நானா இருக்க கூடாது.ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கலாம்லனு கார்த்திக் கேட்டான்.
 
ஹலோ நீ பேசுறதெல்லாம் பார்த்தா கல்யாணத்தை நிறுத்த எந்த ஐடியாவும் இல்லன்னு நினைக்கறேன்.மறுபடியும் வேதாளம் முருங்க மரம் ஏறுதா.பிரெண்ட்ச்னு சொல்லிருக்க நியாபகம் இருக்கட்டும்னு ராஜி சொன்னால்.ஹே அப்படி இல்லப்பா சும்மா கேட்டான்.சத்தியமா இந்த கல்யாணம் நடக்காது போதுமா.என்னமோ கார்த்திக் உன்னதான் ரொம்ப நம்பி இருக்கேன்.பாத்துகோனு சொல்லிட்டு சாப்பிட சென்றார்கள்.ஒருவாராக கல்யாண நாளும் நெருங்க நாளை கல்யாணம்.சொந்தங்கள் எல்லாம் வந்து சேர்ந்தார்கள்.இங்கு ராஜியோ பயத்துடன் கானபட்டால்.கார்த்திக்கிற்கு போன் செய்து என்னாச்சு கல்யாணத்த நிறுத்திடுவேன்னு சொல்லி சொல்லி கல்யாண நாளும் வந்துட்டு உன்ன போய் நம்பினேன் பாரு என்ன சொல்லனும்னு சொன்னால்.கவலை படாத நாளைக்கு கல்யாணம் கண்டிப்பா நடக்காது அதுக்கு நான் .என்னமோ கார்த்திக் உன்னதான் ரொம்ப நம்பி இருக்கேன்.பாத்துகோனு சொல்லிட்டு சாப்பிட சென்றார்கள்.ஒருவாராக கல்யாண நாளும் நெருங்க நாளை கல்யாணம்.சொந்தங்கள் எல்லாம் வந்து சேர்ந்தார்கள்.இங்கு ராஜியோ பயத்துடன் கானபட்டால்.கார்த்திக்கிற்கு போன் செய்து என்னாச்சு கல்யாணத்த நிறுத்திடுவேன்னு சொல்லி சொல்லி கல்யாண நாளும் வந்துட்டு உன்ன போய் நம்பினேன் பாரு என்ன சொல்லனும்னு சொன்னால்.கவலை படாத நாளைக்கு கல்யாணம் கண்டிப்பா நடக்காது அதுக்கு நான் பொறுப்பு.குழப்பிக்காம போய் தூங்கு குட் நைட்னு சொன்னான்.ஆனால் ராஜிக்கோ தூக்கமே வரவில்லை.என்ன செய்வதென்றும் தெரியவில்லை.கார்த்திக்கை நம்புவதை தவிர வேறு வழி இல்லை என்று உணர்ந்தவளாய் மனதை சமாதான படுத்தினாள்.கல்யாண நாள் காலை அவளை எழுப்பி அலங்காரம் செய்ய அவள் அக்கா தங்கை எல்லாரும் இருக்க இவளோ நடப்பது எல்லாம் கை மீறி போய் விட்டது.கார்த்திக் ஏமாற்றி விட்டான்.பாவி என்று மனதுக்குள் அழ தொடங்கினால்.முஹூர்த்த நேரம் நெருங்க நெருங்க அவள் சிலை போல ஆனால்.அவள் கண்கள் அவளையும் அறியாமல் கண்ணீரை வடித்தது.மணமேடையில் அவள் அமரும் போது அவள் கார்த்திக்கையே பார்க்க கார்த்திக் அவளை பார்க்காமல் மந்திரத்தை சொல்லி கொண்டிருந்தான்.
 
கெட்டிமேளம் முழங்க ஐயர் தாலி எடுத்து கொடுக்க அதனை அவளது கழுத்தில் கட்டினான் கார்த்திக்.நடந்தவற்றை நினைத்து பார்த்து கொண்டிருந்தவளுக்கு திடீரென விக்கல் வர பெட்டை விட்டு எழுந்து சென்று தண்ணீர் குடித்து விட்டு வந்தால்.படுப்பதற்கு முன் சோபாவை பார்க்க அங்கு கார்த்திக் தூங்கி கொண்டிருந்தான்.ராஜியும் லைட்டை ஆப் செய்து விட்டு அப்படியே தூங்கி போனாள்.பத்து நிமிடம் கழித்து திரும்பிய கார்த்திக் எழுந்து சென்று தண்ணீர் குடித்து விட்டு வந்து சோபாவில் படுத்தான்.ராஜியை பார்க்க அவள் அப்போது தான் தூங்கியிருந்தாள்.அவள் முகத்தில் ஒற்றை முடிகள் மட்டும் காற்றில் ஆடிகொண்டிருந்தது.அவளை பார்த்து கொண்டிருக்கும் போதே அவனுடைய நினைவுகள்ப பின்னோக்கி சென்றது............
 
அப்போது கார்த்திக்கு வயது 6,அவனுடைய அப்பா அம்மாவிற்குள் அடிக்கடி சண்டை வரும்.இவனும் பயங்கர சேட்டை செய்வான்.அதனால மொத்த கோவமும் இவன் மேல திரும்பும்.அடிவிழகூடிய நேரத்துல கரெக்டா பாட்டி வீட்டுக்கு ஓடி வந்துடுவான்.அவனுடைய பாட்டிக்கு கடைசி பையன் ஒருத்தன் பிறந்த உடனே இறந்துட்டான்.அதனால கடைசி பையன் தான் தனக்கு பேரனா பிறந்துருக்கன்னு இவன பாசமா வளத்தாங்க.அதுவும் இல்லாம அவுங்க குடும்பத்துல முதல் ஆண் வாரிசு.அதனால கார்த்திக் மேல தனி பாசம் எல்லாத்துக்கும்.அப்ப ராஜிக்கு மூணு வயசு.ஒவ்வொரு வருடமும் மே மாதம் பள்ளி விடுமுறைக்கு கார்த்திக்கின் குடும்பத்துடன் செலவிடுவது லக்ஷ்மியின் வழக்கம்.அப்போதெல்லாம் தாயம் விளையாடுவது,ஆற்றில் சென்று குளிப்பது, ஒன்றாக இருந்து கார்ட்ஸ் விளையடுவதுன்னு சந்தோசமாக இருப்பார்கள்.அப்போதெல்லாம் கார்த்திக்கு ராஜின்னா தனி பிரியம்.அவளோட அக்கா கூட சண்டை போட்டுடே இருப்பான்.எல்லா நேரமும் ராஜி கார்த்திக் பக்கம் தான் இருப்பாள்.ஒவ்வொரு வருட விடுமுரை முடிந்த பின்பும் அடுத்த விடுமுறைக்கு காத்திருப்பான்.அவன் 10த் படிக்கும் போது அவள் கார்த்திக்கின் வீட்டிற்கு வந்திருந்தாள்.அப்போது ஒரு நாள் ராஜியை சைக்கிளில் வைத்து கடைக்கு கூட்டி சென்றான்.அதை பார்த்த அவனது நண்பர்கள் அவனை கூப்பிட்டு சைகையில் கிண்டல் செய்ய அவன் அதை கண்டு கொள்ளாத மாதிரி சென்று விட்டான்.அதை கவனித்த ராஜி ஏன் உன் பிரெண்ட்ஸ் அப்படி சொல்றாங்கன்னு கேட்டாள்.அதற்கு கார்த்திக் அவுங்க சும்மா கிண்டல் பண்ணுவாங்க நீ கண்டுகிடாதன்னு சொன்னான்.
 
அதன் பின்பு அவனுடைய நண்பர்களிடம் சென்று ஏன் மானத்த வாங்குரிங்கடா.அவ இருக்கும் போது எதுக்குடா கிண்டல் பண்றீங்க.அவ என்னனு கேக்குரான்னு சொன்னான்.அதற்கு அவனுடைய நண்பன் டேய் அக்காவ விட்டுட்டு தங்கச்சிய கரெக்ட் பண்ற போலன்னு கிண்டல் செய்தார்கள்.பதின் வயதை தொட்ட அவனுக்கு அப்போது தான் உரைத்தது.தான் இவ்வளவு நாளும் அவளுடன் சிறுபிள்ளைதனமாக பழகியிருக்கிறோம் என்று.உடனே சுதாரித்து கொண்டவன் நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல.நாங்க பிரெண்ட்ஸ் அவ்வளவுதான் வரட்டுமா என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.அவனுக்கு ராஜியின் மேலான முதல் நேச விதை அன்றில் இருந்து துளிர் விட ஆரம்பித்தது.அதன் பிறகு ராஜி அவன் அருகில் வரும் போதெல்லாம் அவள் மேல் உரசாதவாரு தள்ளி இருந்து கொள்வான்.அவளிடம் பேசும் போதெல்லாம் அவள் முகம் அவனை பேச விடாமல் செய்தது.இதை எதுவுமே புரிந்து கொள்ள முடியாத ராஜியோ அவனிடம் இயல்பாக பழகினால்.இவ்வாறாக நாட்கள் செல்ல அவன் 12th முடித்துவிட்டு டிப்ளோமா சேர்ந்தான்.அவனுடைய அம்மா வழி பாட்டி வீட்டில் இருந்து தங்கி படிக்க வீட்டில் முடிவானது.அந்த ஊர் ராஜியின் வீட்டிற்கு மிக அருகில் உள்ள ஊர்.அப்போது தான் இருவரின் கைகளிலும் போன் இருக்க தினமும் சாட்டிங்கில் பல மணிநேரம் உரையாடுவார்கள்.சனி,ஞாயிறுகளில் அவளுடைய அக்கா போனை எடுத்து கொள்வாள்.அப்போது அவளுடைய அக்கா அவனிடம் பேசி கொண்டிருப்பாள்.சரியாக ஒவ்வொரு நாளும் 6 மணிக்கு ஆரம்பிப்பார்கள்.இரவு 10 மணி வரை நீளும். 10 மணிக்கு பின்பு அவளுடன் அன்றைய நாளின் நிகழ்வுகளை வார்த்தைகளாக டைரியில் எழுதுவான்.இப்படியாக கார்த்திக்கிற்கு காலேஜ் முதல் வருடம் முடிய ராஜி 11 படித்து கொண்டிருந்தாள். அப்போது அவனுடைய காலேஜ் பிரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து கார்த்திக்கை ப்ரொபோஸ் செய்ய சொல்ல இவனுக்கோ அவள் 11 படிக்கிற பொண்ணு அவளுக்கு என்ன தெரியும்.தேவை இல்லாம அவள் மனசை கெடுக்க வேண்டாம்னு நினைத்தான்.கடைசியாக அந்த வருட நியூ இயர் அன்று அவளிடம் ப்ரொபோஸ் செய்தான்.
 
அதை கேட்ட அவள் சிறிது நேர அமைதியாக இருந்தாள்.அந்த சிறிது நேர அமைதி வாழ்வின் பல யூகங்களாய் இருந்தது கார்த்திக்கிற்கு.அவனுடைய இதயம் துடிப்பது உலகிற்கே கேட்டிருக்கும்.பின்னர் ராஜி சொன்னால் எனக்கு இண்டரெஸ்ட் இல்ல கார்த்திக்.உன்ன எப்பவுமே ஒரு நல்ல ப்ரெண்டாதான் நினைக்கிறேன்.ப்ளீஸ் உன் மனச மாத்திக்கோ.இனிமே இத பத்தி பேச வேண்டாம்னு சொன்னால்.கார்த்திக்கிற்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது.குத்து பாட்டிற்கு டான்ஸ் ஆட வேண்டும் போல இருந்தது.சரி ராஜி இனிமே என்கிட்டே பேசமட்ட அப்படித்தான என்றான்.இல்ல ஏன் பேசாம இருக்கணும்.கண்டிப்பா பேசுவேன்.பிரெண்டா.ஓகே எனக்கு தூக்கம் வருது பாய்.குட் நைட் னு சொல்லி போனை வைத்தாள்.கார்த்திக்கிற்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.அவள் இவ்வளவு தெளிவாக பேசுவாள் என்று அவன் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.
Like Reply
#14
அவள் இண்டரெஸ்ட் இல்லன்னு தான சொல்லிருக்கா.அடுத்த நிமிஷம் என்ன நடக்குனே தெரியாதது தான் வாழ்க்கை.பின்னாடி என்மேல அவளுக்கு லவ் வராமலா போகிடும்.கண்டிப்பா பண்ணுவா.அவனுக்கு அவனுடைய காதலின் மீது அசைக்க முடியா நம்பிக்கை இருந்தது.இவ்வளவு நாள் அவளிடம் தன் காதலை சொல்லாமல் இருந்ததற்கு இப்போது சொல்லி விட்டான்.அதுவே அவன் தன் காதலின முதல் வெற்றியாக எண்ணினான்.
 
அதுவும் இல்லாமல் அவள் உடனே ஓகே சொல்லிருந்தால் கூட அவன் இவ்வளவு சந்தொசபட்டிருக்க மாட்டான்.உடனே ரூமிற்கு சென்று ஒத்த சொல்லல என் உசுர எடுத்து வச்சிகிட்டா பாடலுக்கு சென்று டான்ஸ் ஆடினான்.அவள் இவ்வாறு பேசியது அவள் மீதான காதலை இன்னும் அதிகமாக்கியது.அவள் என்ன செய்தாலும் அதை ரசிக்க ஆரம்பித்தான்.சில விசயங்களில் இருவரும் வேறு வேறாக முரண்படுவர்.ஆனாலும் கார்த்திக் அதை ரசித்தான்.காந்தத்தின் வெவ்வேறு துருவங்கள் மட்டுமே ஒன்றை ஒன்று ஈர்க்கும்.அதை போல ராஜியின் ஒவ்வொரு பேச்சிலும் ஈர்க்கப்பட்டான்.கார்த்திக்கிற்கு புத்தகம் வாசிப்பது ரொம்ப பிடிக்கும்.தினமும் காலேஜ் முடிந்து வந்து லைப்ரரி சென்று புத்தகம் எடுத்து வருவான்.உமா பாலகுமார் அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.
 
ராஜியையும் புத்தகம் படிக்க வற்புறுத்துவான்.ஆனால் அவள் படிக்க நேரமில்லை என்று சொல்லி விடுவாள்.ஒருநாள் அவளுடைய பிறந்த நாள் வர நைட் 12 மணிக்கு எழுந்து தன்னுடைய வாழ்த்து தான் முதலாவதாக இருக்க வேண்டும் என்று காத்திருந்து வாழ்த்தினான்.அவனுக்கு கடவுள் நம்பிக்கை அவ்வளவாக கிடையாது.ஏனோ அவளுக்காக அன்று சாமி கும்பிட்டு வேண்டிகொண்டான்.இவ்வாறாக அவன் காலேஜ் முடிய அந்த வருடம் அவன் சென்னைக்கு வேலைக்கு சென்றான்.
ஆனால் ஒவ்வொரு வருடமும் அவன் அவளிடம் தனது காதலை நியூ இயர் அன்று சொல்லிவிடுவான்.அவளும் வழக்கம் போல அதே டைலாகை சொல்லுவாள்.அன்று தான் அவள் தனது காதல் ரகசியத்தை அவனிடம் சொன்னாள்.அதை கேட்ட கார்த்திக் மிகவும் உடைந்து போனான்.ரூமில் இருந்து அழகூட செய்தான்.அவனுக்கு வாழ்கையே பிடிக்கவில்லை.அவளும் ரமேஷும் காதலிப்பதை அவள் தினமும் சொல்லி அவன் மனதை மாற்ற முயற்சி செய்தால் ராஜி.
 
1 வாரமாய் அவன் சரியாக தூங்கவில்லை,சாப்பிடவும் இல்லை.தினமும் அவள் கார்த்திக்கிற்கு மெசேஜ் செய்வாள்.கார்த்திக்கும் பதில் அனுப்புவான்.ஆனால் அவள் சிறிது நேரம் கழித்து பதில் ரீப்லே செய்வாள்.கார்த்திக் ஏன் இவ்ளோ நேரம் கழித்து ரீப்ளே பண்ணுறன்னு கேட்டால் என் ஆளு கூட பேசிட்டு இருந்தன்னு சொல்லுவாள்.அந்த நொடி கார்த்திக்கிற்கு பற்றி கொண்டு வரும்.ஆனால் அவளிடம் கோவப்பட மாட்டான்.சரி ஓகே நான் அப்புறமா பேசுறேன்னு சொல்லிடுவான்.அவனுடைய இந்த நிலையை பார்த்த ரூம் நண்பர்கள் டேய் அவ உன்ன அலைய விடுராட.அத புரிஞ்சிகிடாம நீ இப்படி பீல் பண்ணிட்டு இருக்க.நாம லவ் பண்ற பொண்ணு பர்ஸ்ட் நம்ம லவ்வ கொஞ்சமாவது புரிஞ்சிகிடனும்.அதகூட பண்ண மாட்டேன்றா.அவளா நீ லவ் பண்ற அளவுக்கு வொர்த்தெ கிடையாது.பேசாம ரெண்டு நாள் அவகூட பேசாம இரு.எல்லாம் சரி ஆகிடும்னு சொன்னங்க.இன்னும் சிலர் அவுங்க அவுங்க காதல் வாழ்க்கைய சொல்ல கார்த்திக்கிற்கு எரிச்சலாக வந்தது.ஆனால் அவன் எந்த நொடியிலும் ராஜியை வெறுக்கவில்லை.மாறாக அவன் இன்னும் இன்னும் அவளை காதலித்தான்.
 
அப்போது தான் அவன் ஒன்றை யோசித்தான்.ஏன் ராஜி நம்ம மனசை மாற்றுவதற்காக பொய் சொல்லிருக்க கூடாது.அப்படியே லவ் பண்ணினாலும் நான் ஏன் அவளை லவ் பண்ணகூடாது.அவள் ஒன்றும் அவனுக்கு பொண்டாட்டி இல்லையே.அவளுக்கு கழுத்துல தாலி ஏருகுற அந்த நொடி வரை நான் அவளை காதலிப்பேன் என்று முடிவெடுத்தான்.அன்று மீண்டும் அவள் மெசெஜ் செய்ய அவளிடம் தைரியமாக சொன்னான் ராஜி நான் உன்னை காதலிக்கிறேன்னு.நாம் காதலிப்பதை இவனிடம் சொல்லியும் இவன் இப்படி சொல்றான்.இவன் என்ன மென்டலா இருப்பனொன்னு நினைத்துகொண்டு மெண்டல் மாதிரி உளறாத.நான் ரமேஷை தான் லவ் பண்றேன்.திரும்ப திரும்ப நீ சொன்னதையே சொல்ற.தயவு செஞ்சு உன்ன மாத்திக்க பாரு.சொல்லிட்டேன்னு சொன்னால் ராஜி.
 
நீ யார வேணும்னாலும் லவ் பண்ணு.பட் நான் உன்ன லவ் பண்றேன் அது நிஜம்.பதிலுக்கு நீயும் என்ன லவ் பண்ணுனு நான் கேட்டேனா.இல்லல.அப்புறம் என்னனு கார்த்திக் கேட்டான்.லூச நீ.நான் இன்னொருத்தன லவ் பண்றேன்னு சொல்றேன் அப்பறம் எப்படி நா உன்ன லவ் பண்ண முடியும்.சொல்லுன்னு சொன்னால் ராஜி.முடியுமே என்றான்.எப்படி என்றால் ராஜி.சிம்பிள் அவன கழட்டி விட்டுரு என்ன லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கோன்னு கார்த்திக் சொல்லஉ.உன் தலை.மூஞ்ச பாரு.நான் அப்படிலா பண்ணமாட்டேன்.நாங்க ரெண்டு பேரும் சின்சியராக லவ் பண்றோம்.நாங்க கண்டிப்பாக லைப்ல ஒன்னு சேருவோம்அதனால நீ மனச மாத்திக்கோ இல்லன கசஸ்ட்டபடுவன்னு சொன்னால் ராஜி.
 
என்னால எல்லாம் மாற முடியாது முடிஞ்சா நீ மார பாரு என்றான் கார்த்திக்.குழந்தைக்கு சொல்ற மாதிரி சொல்றேன் நீ திரும்ப திரும்ப அதையே சொல்லிட்டு இருக்க உன்கிட்ட பேசுறதே சுத்த வேஸ்ட்.குட் பாய்.என்று சொல்லி விட்டு போனை தூக்கி எறிந்தால்.இதை எதிர்பார்க்காத கார்த்திக் மீண்டும் அவளுக்கு கால் செய்து நீ சொன்னதெல்லாம் யோசிச்சு பார்த்தேன்.ஆனாலும் நீ பன்றேதேல்லாம் பார்க்கும் போது இன்னும் உன்ன காதலிக்கனும்னு தான் தோணுதே தவிர உன்ன விட்டு விலகனும்னு தோணவே மாட்டேங்குதுப்பா லவ் யூ டி என்றான்.திருந்தாத ஜென்மம் இனிமே உன்கிட்ட பேசவே மாட்டேன்னு சொல்லி போனை கட் செய்து விட்டாள்.
 
ஆனால் கார்த்திக் தீர்கமாக நம்பினான் அவள் கண்டிப்பாக திரும்ப அழைப்பாள் என்று.அன்றில் இருந்து இரண்டு நாட்களாக எந்த மெசேஜும் போனும் வரவில்லை.இப்படியாக நாட்கள் ஒன்று,இரண்டு,மூன்று என்று கழிய சரியாக 5 வது நாள் அவளிடம் இருந்து ஒரு மொக்கை பார்வர்ட் மெசேஜ் ஒன்று வந்தது அதை பார்த்த கார்த்திக் சிரித்து கொண்டே அதை டெலிட் செய்தான்.அடுத்து என்ன மெசேஜ் வரும் என்று கார்த்திக் நன்றாக தெரிந்து வைத்திருந்தான்.
 
அதை பார்த்து சிரித்து விட்டு போனை கீழே வைத்து விட்டான் கார்த்திக்.ஒரு 5 நிமிடம் கழித்து சாரி மாத்தி மெசேஜ் அனுப்பிட்டேன்னு ராஜி மீண்டும் மெசேஜ் அனுப்பினாள்.
 
அதற்கும் கார்த்திக் பதில் அனுப்பவில்லை.சரியாக அரை மணி நேரம் கழித்து ராஜி கால் செய்தால்.ஏன் என்கூட பேச மாட்டேன்கிறனு கேட்டாள்.
 
அதற்கு நீதான் அன்னைக்கு என்கூட பேசாதனு சொன்ன என்று சொன்னான் கார்த்திக்.
 
ஒரு பிரெண்டா நீ பேசாம இருக்குறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது கார்த்திக்.வேற ஒருத்தன லவ் பண்ணிட்டு இருக்குற ஒரு பொண்ணுட்ட நான் உன்ன லவ் பன்றேன்னு வந்து சொன்னா வேற எப்படி சொல்ல சொல்றனு கேட்டாள் ராஜி.
 
நான் நீயும் என்ன லவ் பண்ணுனு சொல்லல. நான் உன்னை எவ்ளோ லவ் பன்றேன்னு புரிஞ்சிக்க ட்ரை பண்ணு.கொஞ்சமாவது என்னோட லவ்வ பீல் பண்ணு.அதைத்தான் நான் கேக்குறேன்.அப்பறம் லவ் பன்றேன்னு சொல்லிட்டு பிரெண்டா பழகுறதுலாம் எனக்கு பிடிக்காதுனு சொன்னான் கார்த்திக்.
 
லவ் பன்றேன் லவ் பன்றேன்னு சொல்றியே எனக்காக அப்படி என்ன பண்ணிருக்க சொல்லு.சும்மா லவ் பன்றேன்னு சொல்லிட்டு இருக்கன்னு ராஜி கோவமாக கேட்டாள்.
 
Like Reply
#15
உனக்காக கை அறுத்துகிடுறது, அப்பறம் பக்கம் பக்கமா கவிதை எழுதுறது,அப்பறம் பூவே உனக்காக விஜய் மாதிரி ஒரு செடி ஒரு பிளவர்னு பேசுறது,அப்பறம் உன்னை இம்ப்ரெஸ் பண்ணறதுக்காக உன் முன்னாடி நல்லவனா நடிக்கிறது இப்படிலா பண்ணினாத்தான் உனக்கு லவ் வருமா.சாரிமா.நான் அந்த மாதிரி கிடையாது.நான் விரல் சப்பிக்கிட்டு இருந்த வயசுல இருந்து உன்னை லவ் பன்றேன்.நீ பண்ணின எல்லாத்தையும் நான் ரசிச்சிருக்கேன்.உன் அழகை பாத்து நான் ஒன்னும் லவ் பண்ணலை.உன் கேரெக்ட்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும்.என்ன பொறுத்த வரைக்கும் லவ் இம்ப்ரெஸ் பன்னி வரது இல்லை.ஒருத்தங்களோட கேரக்டர் வச்சி வரது.எனக்கு பிடிச்சிருந்தது நான் லவ் பன்றேன்.உனக்கு பிடிக்கலைன்னா நீ அப்படியே இருந்துக்கோ.பட் என்ன லவ் பண்ணகூடாதுனு நீ சொல்லாத ஓகேன்னு சொன்னான் கார்த்திக்.
 
சரி பட் உன்னால எனக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் உன்னை மாட்டி விடுவேன் பத்துக்கோன்னு சொன்னால் ராஜி.
 
எல்லா பொண்ணுங்களும் இதை தான பண்ணுவீங்க.சொல்லிக்கோ அதை எப்படி சமாளிக்கணும்னு எனக்கு தெரியும்.அப்பறம்ன்னு கேட்டான் கார்த்திக்.
 
நீதான் சொல்லணும்.உனக்கு ஏன் என்ன புடிச்சிருக்கு கார்த்திக்ன்னு கேட்டால் ராஜி.
 
எப்படி சொல்ல.ம்ம்ம்ம்ம்.சின்ன வயசுல இருந்தே உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்பா.நம்ம சின்ன வயசுல பழகினது எல்லாம் உனக்கு நியாபகம் இருக்கான்னு தெரியல.உன்னோட ட்ரெஸ்ஸிங் சென்ஸ்,அப்பறம் நீ ஒரு மாதிரி அடி குரல்ல பேசுறது,அப்பறம் கேவலமா ஒரு லுக் விடுவியே.அதுக்கே நான் காலி ஆகிடுவேன்.உன் முகத்துல அப்பப்ப வர பரு,எல்லாரும் சுடி ஷால்ல கழுத்த சுத்தி தான் போடுவாங்க.ஆனா நீ க்ராஸ்ஸா போடுவ.அது எனக்கு ரொம்ப பிடிக்கும்.எத்தனையோ தடவ நான் உன்னை வம்புக்கு இழுத்துருக்கேன்.அப்பல்லாம் நீ பதிலுக்கு மல்லுக்கு நிக்காம போ லூசுன்னு அடிக்குரல்ல சிணுங்குவ.சூப்பரா இருக்கும்.அதுக்காகவே உன்னை வம்புக்கு இழுக்கலாம்னு தோணும்.நீ என் பக்கத்துல இருந்தாலே என்னோட ஹார்ட் பீட் 1000 தடவ இருக்கும்.ஒரு தடவ நான் உங்க வீட்டுக்கு வந்துருக்கேன்.அப்ப பவர் கட்.இருட்டா இருந்துச்சு.கைல ஒரு கேண்டில் ஓட நீ வந்து வீட்டுல விளக்கு ஏத்தின.அப்ப அந்த கேண்டில் வெளிச்சத்துல உன் முகத்தை பாக்கணுமே.சான்சே இல்ல ராஜி.ஏஞ்செல்ஸ் எல்லாம் நான் கதைகள்ல தான் படிச்சருக்கேன்.அன்னைக்கு முதல் முறையை உன் முகத்துல பாத்தேன்.அதனால தான் சொல்றேன் ராஜி லவ் யூன்னு சொன்னான் கார்த்திக்.
 
அட பாவி எனக்கே தெரியாம என்ன நல்ல சைட் அடிச்சுருக்க அப்படித்தான என்றால் ராஜி.
 
சைட் அடிக்கல ராஜி லவ் பண்ணேன்ன்னு சொன்னான் கார்த்திக்.சரி நான்தான் உனக்கு கிடைக்க மாட்டேன்னு தெரியுதுல அப்ப ஏன் என்ன நினைச்சுட்டு இருக்கன்னு கேட்டாள் ராஜி.யாரு சொன்னா ராஜி எனக்கு என்னோட லவ் மேல நம்பிக்கை இருக்கு.கண்டிப்பா நீயும் என்ன லவ் பண்ணுவன்னு சொன்னான் கார்த்திக்.
 
ஹாஹாஹா அப்படி கண்டிப்பா நடக்காது பாக்கலாம்.நான் வைக்கிறேன் குட் நைட் சொல்லி விட்டு போனை துண்டித்தாள்.
 
அடி பேதை பெண்ணே கண்டிப்பா நீ தான் என்னோட கண்மணி.இப்படி பேசும்போது கூட உன்னை எனக்கு பிடிக்குதே.நான் என்ன செய்ய.என்று மனதிற்குள் சொல்லி கொண்டு உறங்கி போனான்.
 
மறுநாள் அவன் ஆஃபீஸ் சென்று வேலை பார்த்து கொண்டிருந்த போது அவனுடைய அப்பாவிடம் இருந்து போன் வந்தது.என்ன என்று கேட்ட போது தாத்தா இறந்து விட்டதாகவும் நீ உடனே கிளம்பி வருமாறும் சொன்னார்.
 
இதை கேட்ட கார்த்திக்கிற்கு சந்தோசமாகவும்,வருத்தமாகவும் இருந்தது.ஒரு பக்கம் ராஜியை பார்க்க போகிறோம்.அவளுடன் 1 வாரத்துக்கு மேல் இருக்க போகிறோம் என்று சந்தோசமாகவும்,மற்றொரு பக்கம் தாத்தா இறந்த துக்கமும் இருந்தது.உடனே ஆஃபீஸ்ல் தகவல் சொல்லிவிட்டு ட்ரெயின்ஏறி ஊருக்கு புறப்பட்டான் கார்த்திக்.அன்று இரவு முழுவதும் ராஜியின் நினைவுகளில் செல்ல மறுநாள் அவன் ஊருக்கு வந்து இறங்கியதும் அவனுடைய கண்கள் ராஜியை தேடி அலைய ஆரம்பித்தது.
 
அவன் வீட்டுக்குள் சென்றதும் தாத்தாவை பார்த்து மாலை போட்டுவிட்டு பாட்டிக்கு சென்று ஆறுதல் கூறினான்.பின் சென்று ட்ரெஸ் மாற்ற செல்ல அதற்கு முன் ராஜியை தேடினான்.அவள் எங்கும் இல்லை.ஒரு வேலை வரவில்லையோ என்று எண்ணிக்கொண்டு நேராக அவன் தங்கையிடம் சென்று யார் எல்லாம் வந்துருக்காங்க ஒருத்தரும் காணோம் என்றான்.
 
அதற்கு அவன் தங்கை எல்லாரும் வந்திருக்காங்க.ப்ரியா மட்டும் வரவில்லை.அவளுக்கு எக்ஸாம் இருக்குதாம்.அவள் மூன்று நாள் கழித்து தான் வருவாள் என்றாள்.அவளை யார் கேட்டால் அவள் வராமல் இருப்பது தான் நல்லது என்று எண்ணிக்கொண்டு எங்க இருக்காங்க எல்லாரும் என்று கேட்டான்.சித்தி வீட்ல இருக்காங்கனு சொன்னால் அவன் தங்கை.
 
உடனடியாக ட்ரெஸ் மாற்றி விட்டு வெளியே வரும்போது அவனுடைய மாமா எல்லோரும் வந்து ஒவ்வொரு வேலையாக செய்ய சொல்ல அதை நண்பர்களிடம் ஒப்படைத்தான்.
 
ஒருவழியாக வேலையை முடித்து விட்டு ராஜியை பார்த்தான்.நீண்ட நாட்கள் கழித்து ராஜியை பார்த்து விட்டான்.அவள் குடத்தில் தண்ணீர் எடுத்து கொண்டிருந்தாள்.அவனை கடந்து செல்லும்போது அவனை பார்த்து சிரித்து விட்டு சென்றாள்.அவனும் பதிலுக்கு சிரித்து விட்டு நகர்ந்து சென்றான்.
 
பின்ட அடக்கத்துக்கு தயாராக கூட்டம் சேர்ந்து விட்டது.பெண்கள் அனைவரும் குடும்பத்துடன் அழுது கொண்டிருந்தனர்.ராஜி அவர்களுடன் சென்று நின்று கொண்டாள்.மகன் மற்றும் பேரன்கள் தாத்தா பக்கத்தில் நின்று கொண்டிருக்க கார்த்திக் கண் இமைக்காமல் அவளை பார்த்து கொண்டிருந்தான்.கார்த்திக் பார்ப்பதை ராஜியும் பார்த்து விட்டாள்.ஆனால் அவளுக்கு அது ஒரு மாதிரியாக தோன்ற அவனை பார்க்காமல் இருப்பாள்.ஆனால் ஒவ்வொரு மைக்ரோ நொடியும் கார்த்திக் அவளை பார்த்து கொண்டிருந்தான்.
 
பின்பு தகனம் முடிந்து ஆண்கள் அனைவரும் வீடு திரும்பினர்.அன்று குடும்பத்துடன் ஒன்றாக அனைவரும் பேசி கொண்டிருக்க ராஜி ரமேஷிற்கு மெசேஜ் செய்து கொண்டிருந்தாள்.கார்த்திக் அவள் பிரெண்டிற்கு தான் மெசேஜ் செய்கிறாள் என்று எண்ணிக்கொண்டான்.
Like Reply
#16
அவளிடம் தனிமையில் பேசுவதற்கு அவனுக்குஸ் சந்தர்ப்பம் அமையவே இல்லை.அவளுடன் எப்போதும் அவன் தங்கை ஒட்டிக்கொண்டிருந்தாள்.பொதுவாக அவளிடம் பேசுவது போல் பேசுவான்.
 
இருவரும் எதிரெதிரே இருக்கும் போது கூட அவளுக்கு மெசேஜ் செய்வான்.அப்போது தான் அவனிடம் கேட்டால் ராஜி ஏன் என்ன காலைல அப்படி பாத்துட்டே இருக்கனு.
 
அப்ப நான் பாத்தது உனக்கும் தெரிஞ்சுட்டா.உனக்கே தெரியுதுல ஒவ்வொரு மைக்ரோ செக்கண்டும் உன்னைத்தான் பாத்தேன்னு.அப்பறம் எதுக்கு கேக்குறான்னு பதில் அனுப்பினான் கார்த்திக்
 
நீ என்னைய பாக்குறது எனக்கு ஒரு மாதிரி இருக்குது அதான் சொன்னேன் லூசுன்னு பதில் அனுப்பினாள் ராஜி.பின் அனைவரும் தூங்க சென்றனர்.மறுநாள் அனைவரும் எழுந்த பின் குழந்தைகள் அனைவரும் விளையாடி கொண்டிருந்தனர்.பின் காலை சாப்பாடை பெண்கள் பரிமாற கார்த்திக் ராஜியை வேண்டும்ர் என்றே கூப்பிட்டு அது வேண்டும் இது வேண்டும் என்று வம்பிழுத்தான்.
 
சாப்பிட்டு முடித்த பின் 1 மணி நேரம் கழித்து அவனுடைய மாமா அவனை அழைத்து சரக்கடிக்க கூப்பிட்டனர்.சரி என்று அவனும் 3 பீர் அடித்தான்.வீட்டுக்கு வந்த உடன் மதியம் ஆகி இருந்த்தது.அவனது அத்தை பசங்க அவன்கிட்ட இருந்து பேசிக்கொண்டு இருக்கும் போது அவன் சரக்கடித்திருப்பதை கண்டுபிடித்துவிட்டனர்.
 
அவர்களிடம் சொல்லதே என்று சைகையால் சொல்லி விட்டு அமைதியாக இருந்தான் கார்த்திக்.மதியம் அனைவரும் ஒன்றாக இருந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.அப்போது மீண்டும் கார்த்திக் ராஜியை வம்பிற்கு இழுத்தான்.அவனுக்கு அவளை டீஸ் செய்வது பிடித்திருந்தது.
 
அன்று இரவு அனைவரும் கோவிலுக்கு சென்று வந்த பிறகு கார்த்திக்கிடம் ராஜி டிரீட் கேட்டாள்.சரி என்ன வேண்டும் என்று கேட்டான் கார்த்திக்.மாமாக்கு மட்டும் தான் சரக்கு வாங்கி கொடுப்பியா எங்களுக்கும் பீர் வேண்டும் என்று கேட்டாள் ராஜி.
 
ஹேய் அவங்களுக்கு யாரு வாங்கி கொடுத்தா.நான் வாங்கி கொடுக்கலைன்னு சொன்னான் கார்த்திக்.
 
அதான் மதியம் பார்த்தோமே உங்க லட்சணத்தை.ஓவெரா பீர் அடிச்சருக்க போல இருக்குன்னு கேட்டாள் ராஜி.
 
அப்படிலா இல்லை மூணே பீர் தான்னு சொன்னான் கார்த்திக்.
 
அடப்பாவி மூணு பீரா.ஏன் இப்படி சாப்பிடற.ப்ளீஸ் இனிமே இதெல்லாம் சாப்பிடாதன்னு சொன்னால் ராஜி.
 
ஓகே.இனிமேல் இப்படி நடக்காதுன்னு சொன்னான் கார்த்திக்.ஹேய் பேச்சுவாக்குல ட்ரீட் மறந்துடாத.எங்க எல்லாத்துக்கும் டின் பீர் வேணும்.அதுவும் இப்பவேன்னு சொன்னால் ராஜி.
 
சரி என்று சூப்பர் மார்க்கெட் சென்று டின் பீர் வாங்கி வந்து கொடுத்தான்.கார்த்திக் அவன் தங்கை,ராஜி,அத்தை பசங்க எல்லாரும் சேர்ந்து மொட்டை மாடிக்கு சென்று பீர் ஓபன் செய்து ஷேக் செய்து விளையாடினார்கள்.இந்த இரண்டு நாட்களும் தன் வாழ்நாளில் மறக்க முடியாத நாட்களாக கார்த்திக்கிற்கு அமைந்தது.
 
மறுநாள் கார்த்திக் சென்னை கிளம்புவதாக ஏற்பாடானது.ராஜியை விட்டு போவதற்கு அவனுக்கு மனதே இல்லை.16ம் நாள் காரியத்திற்கு வந்தால் போதும் என்று அவனுடைய அப்பா கூறி விட்டார்.இன்னும் இரண்டு வாரம் ராஜி அங்கு தான் இருப்பாள்.அதனால் அவன் அங்கு இருந்து விடலாம் என்று இருந்தான்.ஆனால் அவன் அப்பா அவனை சென்னைக்கு அனுப்பி வைத்து விட்டார்.
 
அவன் சென்னை சென்ற பிறகும் அவள் நினைவாகவே இருந்தான்.தினமும் அவளுக்கு மெசேஜ் செய்வான்.அவளும் கார்த்திக்குடன் பேசுவான்.16ம் நாள் காரியம் நெருங்கி கொண்டிருந்த நேரத்தில் ராஜிக்கு காலேஜ் அட்மிசன் இருந்ததால் செர்டிபிகேட் சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லி அவள் மட்டும் ஊருக்கு சென்று விட்டாள்.
 
அவளை போகாதே.ப்ளீஸ் எனக்காக இருன்னு கார்த்திக் எவ்ளோ சொல்லியும் அவள் கேட்காது சென்று விட்டாள். பின் காரியம் நடந்த அன்று அவளை தவிர அனைவரும் இருக்க கார்த்திக்கு போன முறை இருந்த சந்தோசம் இந்த முறை இல்லை.அன்றைக்கு இரவே அனைவரும் கிளம்பி விட வீடே வெறிச்சோடி இருந்தது.
 
கார்த்திக்கு எப்போது இங்கு இருந்து கிளம்பலாம் என்று ஆனது.ஒருவழியாக சமாளித்து சென்னை கிளம்பி விட்டான்.இப்படியாக இரண்டு மாதங்கள் சென்றிருக்க ஒரு நாள் அவன் தங்கையிடம் தான் ராஜியை காதலிக்கும் விஷயத்தை சொன்னான்.அதற்கு அவன் தங்கை கார்த்திக் நீ ராஜியை லவ் பண்றது சந்தோசம் தான்.ஆனால் அவள் ரமேஷ்ன்னு ஒரு பையன லவ் பண்ரான்னு சொன்னால் லீலா.
 
ஹேய் அது அவ சும்மா சொல்றா என் மனசை மாத்துறதுக்காக.அவ யாரையும் லவ் பண்ணலன்னு சொன்னான் கார்த்திக்.
 
இல்ல கார்த்திக் அவ உண்மைலையே லவ் பண்ரா.என்கிட்ட கூட அவனை காமிச்சிருக்காள்.நான் அவனை நேர்ல பாத்துருக்கேன்.நீ அவளை மறக்குறது தான் நல்லது என்றுஸ் சொன்னாள்.
 
சரி நான் வைக்கிறேன் அப்பறமா பேசுறேன்னு போனை வைத்தான் கார்த்திக்.
 
லீலா சொன்ன வார்த்தைகள் திரும்ப திரும்ப அவன் மண்டையை குடைய அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.1 வாரம் பைத்தியம் போல திரிந்தான்.ஒரு வழியாக ஒரு முடிவுக்கு வந்தான்.
 
ராஜியின் வீட்டுக்கு அருகில் ஒரு எஞ்சினீர் அவனுக்கு பழக்கம்.அவர் சின்னதாக ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி வைத்து நடத்துகிறார்.அவரிடம் வேலைக்கு சேர்ந்து தினமும் ராஜியை பார்க்கலாம் அவளுடன் பேசலாம்,அந்த ரமேஷை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து வேலையை ரிசைன் செய்தான்.
 
அடுத்த ஒரு மாதத்தில் கார்த்திக் ராஜியின் ஊரில் வேலைக்கு சேர்ந்தான்.தினமும் அவளை காலேஜ் விட்டு வரும் போது அவளுக்கே தெரியாமல் அவளை பார்ப்பான். அவள் படிப்பது லேடிஸ் காலேஜ்.அவள் காலேஜ் முடிந்து வரும் போது அவளுடைய பிரெண்ட்ஸோடு பேசி கொண்டு செல்வாள்.
 
அங்கு உள்ள தனது பிரெண்ட்ஸ் மூலம் விசாரித்ததில் அவள் அந்த ஊரில் எவனையும் லவ் பண்ணவில்லை என்று தெரிந்து கொண்டான்.
 
அடுத்தகட்டமாக அவளுடைய பெரியம்மா பொண்ணு மூலமாக ராஜியின் காலேஜ் பிரண்ட்ஸிடம் விசாரித்ததில் அவள் யாரையும் லவ் பண்ணல.அவள் அடிக்கடி உங்க அண்ணனை பற்றி தான் எங்களிடம் பேசி கொண்டிருப்பாள் என்று சொன்னார்கள்.
 
இதை அறிந்த கார்த்திக் ரொம்ப சந்தோஷப்பட்டான்.அப்ப அவ மனசுல எங்கோ ஒரு ஓரத்துல நாம இருக்கோம்னு நினைத்துக்கொண்டான்.
 
ஒரு வழியாக அவன் நண்பனின் உதவியுடன் ரமேஷை கண்டுபிடித்துவிட்டான்.அவனை பார்த்ததும் கார்த்திக்கிற்கு கோவமாக வந்தது.ஆனால் கட்டுப்படுத்தி கொண்டான்.
 
அவனை பற்றி ராஜியிடம் தெரிந்து கொள்ள அவளுக்கு கால் செய்தான்.போனை எடுத்த ராஜி சொல்லு கார்த்திக் என்றாள்.நான் ரமேஷை பார்த்தேன்.அவன் நம்பர் கூட என்கிட்ட இருக்குன்னு சொன்னான்.நீ பொய் சொல்றன்னு சொன்னால் ராஜி.
 
உடனே அவனுடைய நம்பரை சொன்னான் கார்த்திக்.இப்ப நம்புறியான்னு கேட்டான்.உடனே பதறிய ராஜி நீ எதுக்கு அவனை பார்த்த.அவன் நம்பர் உனக்கு எப்படி கிடைச்குதுன்னு கேட்டாள் ராஜி.
Like Reply
#17
பயப்படாத ராஜி நான் எந்த பிரச்சனையும் பண்ண மாட்டேன்.ஆக்ச்சுவலா அவன் ரொம்ப லக்கி ராஜி.அவனை நீ லவ் பண்றல்ல.உலகத்துல ரொம்ப அழகான விஷயம் ஒரு பொண்ணால விரும்பப்படுறது தான்.அது உன்னை மாதிரி ஒருத்தி விரும்புனா அவன் எவ்ளோ பெரிய அதிர்ஷ்டசாலி.இதை சொல்ல தான் அவனை தேடி போனேன்.ஆனால் அவன்கிட்ட பேச எனக்கு தோணலை.அதான் வந்துட்டேன்னு சொன்னான்.
 
இப்பவாவது நம்புறியா கார்த்திக்.தயவுசெஞ்சி என் பின்னாடி சுத்தாம வேலையை பாருன்னு சொன்னாள் ராஜி.
 
ஓகே ராஜி பாய்ன்னு சொல்லி போனை வைத்தான் கார்த்திக்.அன்றில் இருந்து அவளுடன் அதிகமாக பேசுவதற்கு சந்தர்ப்பம் அமையவில்லை.அப்போது ராஜியின் அக்கா ப்ரியாவும் படிப்பு முடிந்து வீட்டிலேயே இருந்தததால் அவளுடன் பேசுவதை தவிர்த்தான்.
 
ராஜி வேறு ஒருவனை காதலித்தாலும் அவளை கார்த்திக்கும் காதலித்தான்.அவனுடைய மனம் அவள் மேல் உள்ள காதலை அதிகபடுத்தியதே தவிர அவளை வெறுக்க தோன்றவில்லை.
 
இப்படியாக 1 வருடம் சென்றது.ஒரு நாள் கார்த்திக்கின் வீட்டிற்கு ப்ரியா வந்திருந்தாள்.இரண்டு நாட்கள் அவள் அங்குதான் தங்குவதாக இருந்தது.முதல் நாள் இரவு அவளுடன் கார்த்திக் பேசிகொண்டிருக்கும் போது அவள் ராஜியின் லவ் மேட்டரை பற்றி கார்த்திக்கிடம் சொன்னாள்.
 
ரமேஷ் பிரியாவிற்கு கால் செய்து தங்கள் காதலுக்கு சப்போர்ட் செய்யுமாறு தொல்லை செய்வதாகவும்,அவனை எப்படி ஹாண்டில் பண்ணுவதுனே தெரியலன்னு சொன்னாள்.நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணணும் கார்த்திக்ன்னு சொன்னாள் ப்ரியா.
 
அவங்க ரெண்டு பேரையும் பிரித்தால் ராஜிக்கு செய்யும் துரோகம்.ப்ரியாவிடம் எல்லாத்தையும் சொல்லாவிடில் பிரியாவிற்கு செய்யும் துரோகம் என்று நினைத்த கார்த்திக் உன்கிட்ட அதுக்கு முன்னாடி சில விஷயங்கள் பேசணும்.நானும் ராஜியை லவ் பண்ணேன்.இந்த விஷயமெல்லாம் எனக்கு முன்னாடியே தெரியும்.நீதான் அவுங்க ரெண்டு பேரும் சேருவதற்கு ஹெல்ப் பண்ணனும்னு சொன்னான் கார்த்திக்.
 
நினைச்சேன் கார்த்திக்.நீ இதை உன் வாயால சொல்லணும்னு தான் இவ்ளோ நாள் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.ச்சீ நீ இவ்ளோ சீப்பா இருப்பன்னு நான் நினைக்கவே இல்ல.எப்படி கார்த்திக் என் தங்கச்சிய லவ் பண்ண முடிஞ்சுது.நாம ரெண்டு பாமிலிக்கும் இருக்குற பிரச்சனைலா உனக்கு தெரியும் தான.அப்ப எப்படி உன்னால லவ் பண்ண முடிஞ்சுது.எங்க அம்மா உன்மேல எவ்ளோ நம்பிக்கை வச்சிருந்தாங்க.அவ்ளோத்தையும் கெடுத்திட்டியேன்னு சொல்லிட்டு கோவமாக சென்று விட்டாள்.
 
இதை கார்த்திக் எதிர்பார்த்தது தான்.சரி அவளை சமாதானபடுத்தி விடலாம் என்று எண்ணிக்கொண்டான்.அங்கு இருந்த இரண்டு நாட்களும் அவனுடன் ப்ரியா பேசவில்லை.
 
அவள் அங்கு அவளுடைய ஊருக்கு சென்ற இரண்டு மணி நேரத்தில் கார்த்திக்கிற்கு போன் செய்தாள்.உன்மேல செம கோவத்துல இருக்கேன் கார்த்திக்.அங்க இருக்கும் போது கோவத்துல ஏதாவது கத்திடுவேனோனு பயத்துல தான் நான் பேசாம இருந்தேன்.என் தங்கச்சி லவ்வ்க்கு என்னையே ஹெல்ப் பண்ண சொல்லுவியா.அதெப்படி நீ லவ் பண்ண பொண்ண இன்னொருத்தன் கூட சேத்துவைக்க எப்படி முடியுது.சரியான மெண்டல் நீ.
 
என் தங்கச்சி லவ்வ சேர்த்து வைக்க நீ யாரு.உன் தங்கச்சிக்கு இப்படி ஒரு நிலைமை வந்தால் சேர்த்து வைப்பேன்னு சொல்லவியான்னு கேட்டாள் ப்ரியா.
அவளது இந்த பேச்சை கேட்டு சூடான கார்த்திக் பதிலுக்கு அவனும் கோவமாக பேசிவிட்டான்.ஒருகட்டத்தில் சமாதானமான ப்ரியா அவனுடன் இனி பேச மாட்டேன்னு கூறி முடித்தால்.
 
கடைசியாக அவள் போனை வைக்கும் முன்பு கார்த்திக் சொன்னான் நாளைக்கு என் தங்கைக்கு இப்படி ஒரு நிலைமை வந்தால் கண்டிப்பா நான் குறுக்க நிக்கமாட்டேன்.ரெண்டு பேரையும் கூப்பிட்டு பேசி உண்மையா லவ் பண்றங்கன்னு தெரிஞ்சா எங்க அப்பா,அம்மாவை கன்வின்ஸ் செய்து நானே அவங்களை சேர்த்து வைப்பேன்னு சொன்னான் கார்த்திக்.
 
நீ வேணும்னா அப்படி இருப்ப.நான் அப்படி இல்லை.இனி நான் உன்கூட பேசமாட்டேன்னு சொல்லிவிட்டு சென்றாள் ப்ரியா.
 
அதற்கு பின் ரமேஷ் விஷம் குடிக்க,பிரச்சனை பெரிதாக,கார்த்திக் ப்ரியாவிடம் சேர்த்து வைக்க சொல்லி போராட,அவள் மறுக்க,ரமேஷிற்கு அவனுடைய அத்தை பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்தது.
டிங் டிங் டிங் டிங் என்று சத்தம் கேட்க நினைவில் இருந்து களைந்து கடிகாரத்தை பார்க்க மணி இரண்டாகி இருந்தது.எழுந்த.எழுந்து சென்று தண்ணீர் குடித்து விட்டு போர்வையை இழுத்து போர்த்தி தூங்கினான் கார்த்திக்.
 
மறுநாள் காலை கார்த்திக் அவள் படுக்கையில் இல்லை.அவன் எழுந்து பிரெஷ் ஆகிவிட்டு கீழே சென்ற போது அவள் சமையல் செய்து கொண்டிருந்தாள்.
 
நெற்றியில் அழகாக குங்குமம் வைத்து சேலை கட்டி,துண்டை தலையில் சுற்றி வைத்து இருந்தாள்.அவன் நியூஸ் பேப்பர் எடுத்து கொண்டு சோபாவில் இருந்தான்.ராஜி காபி எடுத்து கொண்டு டீபாயில் வைத்தாள்.
 
அவள் முகத்தை பார்க்காமல் அதை எடுத்து குடிக்க தொடங்கினான்.பின் வேலைக்கு செல்ல கிளம்பினான்.அவனுக்கு டிபன் பாக்ஸில் சாப்பாடை எடுத்து வைத்து அவனுடைய பேக்கை தயார் செய்தால் ராஜி.
 
அவன் ரூமிற்கு சென்று குளித்து விட்டு வந்து ட்ரெஸ் எடுத்து போட்டு கொண்டு சாப்பிட வந்தான்.டைனிங் டேபிளில் இருந்து சாப்பிட அவனுக்கு பரிமாறினாள் ராஜி.
 
சாப்பாடு வைக்கும் போது அதிகமாக வைத்து விட அவளிடம் பேசாமல் சைகையாலே போதும் என்று சொன்னான்.ராஜிக்கு அவன் அப்படி பேசாமல் சொன்னது ஒரு மாதிரியாக இருந்தது.சாப்பிட்டு கொண்டிருக்கும் போது திடீரென்று அவனுக்கு விக்கல் வர ராஜி தண்ணீர் எடுத்து வருவதற்குள் அவன் எழுந்து சென்று கை கழுவ சென்றான்.
 
இலையில் பாதி சாப்பாடு அப்படியே இருந்தது.நாம் நேற்று அவனிடம் அவ்வாறு பேசி இருக்க கூடாது.ரொம்ப கோவமா பேசிட்டோம்னு நினைத்து வருந்தினாள்.அதனுடைய வெளிப்பாடு தான் அவனின் இந்த மாற்றம் என்று உணர்ந்து கொண்டாள்.
 
கார்த்திக் ஓபிஸ் சென்ற போது அனைவரும் அவனை கிண்டலும் கேலியுமாக கலாய்த்து எடுத்தார்கள்.பின்னர் சைட்டிற்கு சென்று வேலைகளை பார்த்தான்.
 
அதிக வேலைகள் பெண்டிங்கில் இருந்தது.ஒரு வழியாக அனைத்தையும் நெருக்கி விட்டான்.அப்போது அவனுடைய A.D அழைக்க அவருடைய ரூமிற்கு சென்றான்.சொல்லுங்க சார் கூப்பிட்டீங்களாமேன்னு சொன்னான் கார்த்திக்.
 
முதல்ல உக்காருப்பா.அப்புறம் கல்யாணம்லா சிறப்பா முடிஞ்சுதா.எப்படி போகுது மேரேஜ் லைப் என்றார்.நல்லா போகுது சார்.ரெண்டு நாள் தான சார் ஆகுது போக போகத்தான் தெரியும் என்றான் கார்த்திக்.
 
அதெல்லாம் நல்லாத்தான் இருக்கும்.சரி ஒரு நாள் நீயும் உன் ஒய்ப்பும் சேர்ந்து என் வீட்டுக்கு வாங்க விருந்ததுக்கு அதை சொல்லத்தான் கூப்பிட்டேன்னு சொன்னார்.
 
சரி சார்.கண்டிப்பா கூட்டிட்டு வரேன் சார்.நான் வேலையை பார்க்கிறேன் சார்ன்னு சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
 
அன்று அதிகமாக வேலை இருந்ததால் ராஜியை பற்றி மறந்து போயிருந்தான்.பின் ஈவினிங் வீட்டிற்கு சென்ற போது அவனுக்கு தலை வலிப்பது போல் இருந்தது.ரூமிர்க்கு சென்று பிரெஷ்அப் ஆகி விட்டு கீழே வந்தான்.ராஜி டிவி பார்த்து கொண்டிருந்தாள்.
Like Reply
#18
அற்புதமான அப்டேட்.
Like Reply
#19
super update bro
Like Reply
#20
Sema bro. Karthik Raji pair is un beatable
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)