காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்(completed)
#41
நான்: கலா நான் சொன்ன தப்பா எடுத்துக்க மாட்டியா??


கலா: என்னடா சொல்ல போற, நீ என்ன சொன்னாலும் கண்டிப்பா நான் கேட்பேன் என்று வேகமாக தலையை அட்டி பதில் அளித்தாள்.


நான்: நீ திரும்ப லண்டன் போய் அவர்கூட சந்தோசமா வாழனும் அதுதான் என்னோட ஆசை கண்டிப்பா செய்வியா?? எனக்கா!!!.


கலா: அப்புறம் !!! என்று புருவங்களை உயர்த்தி நக்கலாக கேட்டாள்


நான்: என்ன கலா இப்படி கேட்குற? நான்தான் கட்ட பிரமச்சாரி. உனக்கு கல்யாணம் ஆச்சு நீ இப்படி இருக்குறது கொஞ்சம் கூட நல்லாயில்லை.


கலா: அப்படினா, நீ எப்பொழுது கல்யாணம் செஞ்சுப?


நான்: தெரியலைடா, கொஞ்சம் நாள் இப்படி இருந்துட்டு, பிறகு யோசிக்கணும்.


கலா: நீ மட்டும் தாடி வச்சுகிட்டு தேவதாசா அலையபோற. நான் அங்கே அவர்கூட வாழனுமா. என்ன ஒரு ஓர வஞ்சனைடா உனக்கு??
கேட்குபோதே அவளின் ஆதங்கம் எல்லாம் விழியில் கோபமாக தெரிந்தது.


நான்:அதுக்கு இல்லடி, மனசு முழுசா நீதான் இருக்க, இப்போ நான் இன்னொருத்தியை கல்யாணம் செய்தால் கண்டிப்பா அவளும் நானும் சந்தோசமா வாழமுடியுமாகிறது சந்தேகம் தான் அதான் நான் அப்படி சொன்னேன்.


அடுத்து அவள் கேட்ட கேள்விதான் என்னை துண்டாடியது. ஒரு பெண் இவ்வளவுதூரம் வைராக்கியத்துடன் இருப்பாளா!!! எனக்கே ஆட்ச்சர்யமாக இருந்தது.
[+] 1 user Likes johnypowas's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42
இங்கே பார் ஹரி, நீ மட்டும் இங்கே இப்படி வாழும்போது என்னால கண்டிப்பா அங்கே சந்தோசமா நினைசுகூட பார்க்க முடியலைடா. இப்போ சொல்லுறேன் கேட்டுக்கோ. உனக்கு எப்போ கல்யாணம் நடக்குமோ அப்போதான் நான் என்னோட வாழ்க்கையை பற்றி நினைச்சு கூட பார்ப்பேன். இல்லைனா என்கிட்ட நீ பேசி பிரயோசனமே இல்லை பார்த்துக்கோ. என்று கட் அண்ட் ரைட்டாக கலா பேசினாள்.


அப்புறம் உன் இஷ்டம், நீ இங்கே இருக்கும் போதே உன்னோட வீட்டுகாரர் குஜாலா அங்கே இருக்க போறார் பார்த்துக்கோ என்று நக்கலாக சொன்னேன்.


என்னை பார்த்து முறைத்த வார, இங்க பாரு நீ என்னை என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ நான் எதுவும் சொல்ல மாட்டேன். ஆனால் என்னோட அவரை தப்பா பேசினே பல்லை கலடிடுவேன். ஒழுங்கா மரியாதை கொடுத்து பேசு என்று கட்டளையாக சொன்னாள்.


நான் நினைத்தது சரிதான், கணவன் மேல் இவ்வளவு பாசம் வைத்துகொண்டு எனக்காக அங்கே செல்ல மாட்டேன் என்று பிடிவாதம் வேறு பண்ணுகிறாள். இப்பொழுது அவள் காட்டும் அக்கறைக்கு என்னவென்று சொல்வது. இது காதலா இல்லை நட்பில் விளைந்த நேசமா அல்லது வேறு ஏதாவது பெயர் உள்ளதா என்னை நானே கேட்டுக்கொண்டேன். பின்னர் சிறிது நேர மௌனத்திற்கு பிறகு.


எப்படியும் என்னை கொஞ்சம் நாள் சந்தோசமா இருக்க விட மாட்ட. என்னோட வாழ்கையில் ஒரு பெண் வந்து இந்த பாடுபடுத்திட்ட இப்போ இன்னொருத்தியா. என்ன நட்டக்க போகுதோ என்று தலையில் கைவைத்து சோகமாக சொல்வது போல் நடித்தேன்.


அடேங்கப்பா இப்படி சலிச்சுக்கிற. டேய் எனக்காக இல்லாடியும் போறவா இல்லை. உன்னோட அம்மாவுக்காகவாவது கல்யாணம் பண்ணிகோடா. அப்புறம் பாரு நீ அம்மா பின்னாடி சுத்துரியா இல்லை என்னையே நினைச்சு பார்பியா இல்லை பொண்டாடியே உலகம்னு கிடக்க போறியா யார் கண்டா. ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் என்றாள்.


அவள் சொல்லி முடிக்க இருவரும் சில நிமிடங்கள் மனம் விட்டு சிரித்தோம். சில நிமிடங்கள் பேசிவிட்டு மீண்டும், நாங்கள் எங்கள் இருக்கைக்கு சென்றோம் அதற்குள் அங்கே அவளது சகோதரி விழித்திருந்தாள். பின்னர் எங்களை நாங்களே அறிமுகம் செய்துகொண்டோம். அப்புறம் நிறைய பேசினாள். அவள் லண்டனில் பார்த்த இடங்கள், கணவனின் இல்லம் மற்றும் அவன் பணிபுரியும் இடம் இவை எல்லாத்தையும் விரிவாக சொன்னாள். என்ன மாமியார் கொடுமை இல்லை. அவர்கள் எப்போவோ இறைவனடி சேர்ந்து விட்டார்கள். அதனால்தான் இவள் எங்கே இப்படி சுதந்திரமாக சுற்ற முடிந்தது. அவள் பேசும்போது கணவன் மேல் அவளுக்கு இருக்கும் அந்த பாசம் அன்னியோனியம் தெளிவாக தெரிந்தது. நான் எனக்காக இல்லாவிட்டலும் இவள் மீண்டும் லண்டன் திரும்பவாவது திருமண பேச்சை வீட்டில் எடுக்க வேண்டி உள்ளது.
Like Reply
#43
நாங்கள் பயணித்த கொங்கன் வழி ரயில் அப்பொழுது சரியாக திருச்சூரில் வந்து நின்றது. அதுவரை என்ன பேசினோம் என்று தெரியவில்லை. விழிகளில் வழிந்த கண்ணீர் துளிகளால் மீண்டும் பிரியாவிடை எனக்களித்தாள் அவர்களை அழைத்து செல்ல அங்கே அவளது உறவினர்கள் காத்திருந்தனர். அனைவரிடமும் பேச சென்று விட்டாள். நானும் அவளுக்கு விடை அளித்து விட்டு ரயிலில் ஏறினேன். ரயில் மெதுவாக புறப்பட தயாராக இருந்தது.

அப்பொழுதான் வேகமாக எனக்கு பின்னால் ஒரு உருவம் உள்ளே ஏற முயன்றது. நானும் வழிவிடவே, வேகமாக ஏறி உள்சென்று திரும்பி பார்த்தேன். மீண்டும் கலா, என்னை நெருங்கி எனது கன்னத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு முத்தம் அளித்து, 'Still I love ஹரி, i am mad at you டா.. என்று வேகமா சொல்லி ரயிலை விட்டு இறங்கி சென்றாள்.

அவளது இந்த திடீர் தாக்குதலில் மிரண்டு போன நான், மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது ரயில் அந்த இடத்தை கடந்து சில நிமிடங்கள் ஆகியிருந்தது. மீண்டும் வெளியே தலை நீட்டி அவளுக்கு மட்டும் கையசைத்து விடையளித்து வந்தேன்.

என்ன பொண்ணுங்க இவள், என்னை நேசிகிராளா அல்லது அவளது கணவனை நேசிகிராளா. நான் அவனை பற்றி கிண்டல் செய்தாள் விட்டு கொடுக்க மாட்டாள். ஆனால் என்னிடம் இன்னமும் காதலுடன் இருப்பதாக சொல்கிறாள். இந்த பொண்ணுங்க மனச புரிஞ்சுகவே முடியவில்லை.

இப்படி குழப்பத்திலேயே நான் எனது வீடிற்கு வந்தேன். அங்கே எனது அம்மாவை பார்த்த உடன் நான் துடித்து போய்விட்டேன். இத்தனை நாளும் நான் சுயமாகவே சிந்தித்து இருந்தேன் அங்கே ஒரு ஜீவன் எனக்காக இன்னமும் கவலையுடன் இருப்பதை மறந்தே விட்டேன்.
Like Reply
#44
Interesting bro
Continue
Like Reply
#45
ஆறு மாதங்கள் கழித்து நான் மீதும் இப்பொழுதுதான் என்னுடைய அம்மாவை பார்கிறேன். அவள் அங்கே முன்பை விட அதிகம் தேகம் மெலிந்து ஒரு நோய்வாய் பட்டவள் போல் இருந்தாள்.

என்னை கண்டதும் அவ்வளவு சந்தோசம் அவளது முகத்தில் ஆனாலும் உடல்தான் அதற்கு உத்துழைக்க வில்லை. அடுத்தநாள் மதிய உணவு வேளையில் அவளே மீண்டும் ஆரம்பித்தாள்.

ஹரி பக்கத்துக்கு வீட்டு அக்காவோட தூரத்து சொந்தமாம் பொண்ணு நல்ல படிச்சிருக்கா. உனக்கு சம்மதம்னா நாளைக்கே ஜாதகம் பார்க்கலாம் என்று பீடிகையுடன் கேட்டாள்.

இம்முறை மறுப்பேதும் இன்றி சரி என்று தலையை ஆட்டினேன்.

எனது சம்மதத்தில் சந்தோசம் அடைந்தவள். தலைகால் புரியாமல் வெளியே சென்று அந்த பக்கத்துவீட்டு அக்காளிடம், ஹரி சம்மதம் சொல்லிட்டான். நான் அந்த ஆத்த கிட்ட வேண்டினது வீண்போகலை என்று வானத்தை பார்த்து ஒரு முறை கையெடுத்து கும்பிட்டாள். இவளின் இந்த சந்தோசம் பலவருடம் கழித்து இன்றுதான் பார்கிறேன்.

அடுத்த சில மாதங்களிலேயே, இலையுதிர் காலத்தில் பட்டுப்போன மரமாக இருந்த எனது வாழ்வில் மீண்டும் வசந்தம் வீச பவானி வந்தாள்.

ஆம் அவள்தான் எனது மனைவி, என்னையும் எனது மனதையும் முற்றிலும் மாற்றியவள் அவள்தான். அவளை பற்றி நினைத்தாலே எனது இதழோரம் சிறு புன்னகை நீங்கள் பார்க்கலாம். அவள் அழகு, அமைதி, பொறுமை, வெட்கம், காதல் என பல குணங்களை கொண்டவள். எனக்காக எந்த எல்லைவரையும் போககூடியவள். இவளை மணக்கத்தான் நான் இந்த மூன்று வருட தவகோலம் பூண்டேனோ. எனக்கே வியப்பாக உள்ளது.
Like Reply
#46
பயணித்து கொண்டிருந்த நான் மீண்டும் கண் விழித்த பொழுது நாங்கள் நாகர்கோவிலை அடைத்திருந்தோம். நேரம் இப்போது சரியாக 12 நெருங்கி இருந்தது.

ஹரி நாம விட்டுக்கு போய்டு போகலாமா இல்லைனா நேர ஹாஸ்பிடளுக்கே விடவா என்று வேலா கேட்டான்.

அப்படி கேட்டவனை ஒரு முறை முறைத்தேன்
.
சரி சரி, இப்போ என்ன கேட்டுடேன் இப்படி முறைகுற, பாவும் பையன் டையர்ட இருப்பானேன்னு கேட்டும். சரி நான் ஹாஸ்பிடளுக்கே விடுறேன் என்று வண்டியை வேகமாக செலுத்தினான்.

நாங்கள் மருத்துவ மனையை சேர்ந்ததும் அங்கே என்னுடைய அம்மா மட்டும் கைகளை பிசைந்தவாறு நடந்து கொண்டிருந்தாள். என்னை பார்த்து வேகமாக ஓடிவந்தாள்.

என்னம்மா ஆச்சு, என்று நான் கேட்டேன்.

டேய், இப்போ பேச நேரம் இல்ல நேர போய் அவளை பாரு என்று என்னை விரட்டினாள்.

மறுத்து பேசாமல் நான் வேகமாகே ஓடி சென்றான். அவள் முதல் தளத்தில் உள்ள மகபேறு வளாகத்தில் இருந்தாள் அவளுக்கென்று தனியறை. வெளியே அவளது பெற்றோர்கள் அமர்ந்திருந்தனர்.

என்னை கண்டதும். கண்களில் பயத்துடன். நீங்களே அவகிட்ட என்னனு கேளுங்க மாப்புளை என்று மாமனார் என்னிடம் கேட்டு கொண்டார். அனைவரும் இப்படி கேட்க நான் பயத்துடனே அவளது அறையின் உள் சென்றேன்.

அங்கே ஒரு பெண் மருத்துவரும் இரு செவிலியரும் இருந்தனர். என்னை பார்த்ததும். நீங்கதானே இவங்களோட கணவன். சீக்கிரம் பேசி விட்டு வெளிய வாங்க என்று அதிகாரமாக சொல்லிவிட்டு சென்று விட்டாள்.

அங்கே பவானி கண்களில் ஆனந்த கண்ணீருடன் இரு கைகளை நீட்டி என்னை அழைத்த மாதிரி படுத்திருந்தாள். எழ முயன்றவளை, வேண்டாம் ஏற்று கூறி நானே அவளுக்கு அருகில் சென்று நின்றேன்.

பவானி: என்னங்க நீங்க எப்படி இருக்கீங்க, உங்களை பார்க்காம நான் ஆபரேஷன் தியேடர் போக மாட்டேன்னு இங்கேயே இருக்கேன் தெரியுமா என்று சிறு குழந்தைபோல் கேட்டாள்

நான்: ஏம்மா, என்ன ஆச்சு.

பவானி: நீங்கதானே காலையிலேயே வந்திருவேன்னு சொன்னீங்க. எனக்கு என்னமோ உங்களை பார்க்காம போக விருப்பமே இல்லை. அவள் பேசி கொண்டிருக்கும் போதே வலிகளை அடக்கிய கொண்டிருந்தாள் என்பதை தெளிவாக அவளது முகத்தில் தெரிந்தது.

நான்: ஏய், ஏன் இப்படி பேசுற, என்று கூறிக்கொண்டே அவளை வாரியெடுத்து அணைத்து கொண்டேன்.

அவளது நெற்றி கண்கள் கன்னங்கள் என்று முத்தமழை பொழிந்தேன். இந்த அன்பின் ஏக்கத்திற்கு நான் என்ன செய்வேன் இறைவா என என் மனம் வேண்ட தொடங்கியது.

நான் அவளுக்கு முத்தம் அளிக்கும் போதே அவள் கத்த தொடங்கினால் 'அம்மாமா....'

அதுவரை அங்கே வெளியே நின்ற டாக்டர் , செவிலியர் விரைந்து செயல் பட்டு அவளை தியேட்டர் அழைத்து சென்றனர். இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன். அங்கே பின்னர் வந்து எனது தோல் தட்டி அம்மா என்னை அழைத்தாள்.

என்ன அழுத்தகாரிடா இவா, உள்ள இவ்வளவு வழியை வச்சுகிட்டு உன்னை பார்க்காம பிள்ளை பெற்றுக்க மாட்டேன்னு அடம் பிடிச்சு இருந்திருக்காளே பாரேன். என்று ஆட்ச்சரியமாக கேட்டாள்.

அவள் வடித்த கண்ணீர் துளிகளை கைகளில் ஏந்தியவாறு அங்கேயே நடந்து கொண்டிருந்தேன். அதுவரை படங்களில் மட்டும் பார்த்து பழகிய பதற்றம் என்னை முழுவதுமாக தொற்றி கொண்டது...
Like Reply
#47
என் மனைவி பிரசவிக்க உள்ள இருக்க, நானோ அவளது கண்ணீரின் ஈரத்தில் கைகளை பிசைந்த மாதிரியே வெளியே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தேன். எனது அம்மா சொன்ன வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை, அவளுக்கு என்னிடம் எது பிடித்ததோ தெரியவில்லை, என் மேல் உயிரையே வைத்திருக்கிறாள். இந்த நிமிடங்கள் வரை எனது மனதில் எதோ ஒரு ஓரத்தில் கலா இருந்திருந்தாள். ஆனால் இந்த நிமிடம் முழுவதும் பவானியே என்னுள் வசிக்கிறாள்.

ஒவ்வொரு ஆடவனுக்கும் அவனது மனைவி உணவு உண்ணாமல் காத்திருக்கிறாள் என்றாலே, ஒரு பொருப்புடன்கூடிய கவலை வரும் அந்த அக்கறையே காதலின் வெளிப்பாட்டை அதிகரிக்கும், ஆனால் இங்கே இவள் என்ன ஒரு காரியம் செய்திருந்தால். எனக்காகவல்லவோ அப்படி ஒரு வலியையும் பொறுத்திருந்தாள். அவள் வெளியே வந்த உடன் முத்தங்களால் அவளை முழுவதுமாக நனைக்க வேண்டும். மேலும் ஏதேதோ கற்பனை கோட்டை கட்டி கொண்டிருந்தேன். அவள் உள்ளே சென்று ஒரு மணி நேரம் கடந்திருந்தது. எனக்கு ஒரு பிரசவத்திற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று தெரியாது. ஆனாலும் அந்த ஒரு மணி நேரம் என்னமோ அதிக நேரம் ஆனா மாதிரி தோன்றியது. நானும் பயத்திலும், குழப்பத்திலும் என்னுடைய அம்மாவிடம் கேட்டேன்.

அவளோ என்னை எள்ளி நகையாடிய படியே 'எம்மா வீட்டம்மா மேல எவ்வளவு அக்கறைன்னு பாரேன், இவ்வளவு அக்கறை இருந்திருந்தா கொஞ்சம் சீக்கிரமா வந்திருக்கணும்' என்று என்னை மேலும் குழப்பினால்.

நான் வந்த கோபத்தில் அவளை முறைத்த படியே 'எவ்வளவு நேரம் ஆகுனு கேட்ட சொல்லேன், ஏன் என்னை போட்டு இப்படி வதைகுறீங்க'. என்று சற்று கோபமாகவே கேட்டேன்.

நான் கூறியதை கேட்டு கொண்டிருந்த எனது மாமியார் என்னிடம் வந்து 'என்ன மாப்புள்ள ஆச்சு, அவளுக்கு ஒன்னு ஆகாது, சாதாரணமா எப்படியும் 40 நிமிடத்திற்கு மேல் ஆகும். எப்படியும் அவள் கொஞ்ச நேரத்துல்ல உங்களை மாதிரியே ஒரு அழகான பையனை பெற்று உங்க கைல கொடுக்க போறா அது வரைக்கும் நீங்க அங்க போய் உட்காருங்க என்று எனக்கு சமாதனம் கூறிய படி நான் அமர வேண்டிய இடத்தை காட்டினாள்.
Like Reply
#48
Super bro
Continue
Like Reply
#49
நான் அங்கே அமர மறுத்து, இல்லை அதை நான் கொஞ்சம் காலாற நடக்குறேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் எனது நடை பயணத்தை தொடர்ந்தேன்.

பின்னர் எனது அம்மாவும், மாமியாரும் அவர்களுக்குள் பேச தொடங்கினர்.

சொன்ன மாதிரியே கொஞ்ச நேரத்தில், வெண்ணிற ஆடையில் எனது கண்களுக்கு அந்த நிமிடத்தில் தேவதை போல் ஒரு பெண் வெளியே வந்தாள். நானும் நற்செய்தி சொல்லத்தான் வந்தாலோ என்று அவளை நோக்கி ஓடி போயகேட்டேன். எனக்கு பதிலே அளிக்காமல்.ஓட்டமும் நடையுமாக அந்த வரண்டாவில் இருந்த டாக்டரின் அறைக்கு சென்றாள். சில நிமிடங்களில் வெளியே வந்தவள் மீண்டும் ஆபரேஷன் தியேட்டர் உள்ளே சென்றாள்.

எனக்கோ பயங்கர கடுப்பாக இருந்தது. கேட்ட ஒரு வார்த்தை சொல்லணும். இப்படி எதுவும் கூறாமலே உள்ள போராபாறு என்று அந்த நிமிடத்தில் மனதில் பட்ட வார்த்தைகளை சொல்லி அவளை திட்டி தீர்த்தேன். ஒரு பத்து நிமிடங்கள் கடந்திருக்கும், அனைவராலும் பெரிய டாக்டர் அம்மா என்று மரியாதையுடன் அழைக்கப்படும் தங்கம் டாக்டர் வந்து கொண்டிருந்தாள். இவர்கள்தான் நான் பிறக்கும் போது பிரசவம் பார்த்தவர்கள். ஒருவேளை இவர்களை அழைக்கத்தான் அந்த நர்ஸ் வெளியே வந்து சென்றாளா? என்னை நானே கேட்டு கொண்டேன்.

பின்னர் சில நிமிடங்கள் கழித்து அதே நர்ஸ் வெளியே வந்து என்னோட அம்மாவையும் மாமியாரையும் உள்ளே வருமாறு அழைத்தாள். நானும் அழையா விருந்தாளியாக உள்ளே செல்ல முயன்றேன். என்னை, நீங்க!! வெளியவே இருக்க இப்போ எல்லோரும் வெளிய வந்துருவாங்க என்று சொல்லி சென்றாள்.

அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் ஒரு குழந்தை வீல் என்று அழும் குரல் கேட்டது. அது கேட்ட உடனேயே என்னுள் ஒரு சந்தோசம், பேரானந்தம், கர்வம் அல்லது எதையோ சாதித்த திருப்தி அது என்ன உணர்வு என்று என்னால் வார்த்தைகளில் விளக்க முடியவில்லை. கண்களில் அளவில்லா ஆனந்தத்தில் கண்ணீருடன் அந்த தருணத்தில் இறைவனுக்கு முட்டியிட்டு நன்றி சொல்லி கொண்டேன்.

அழும் குரல் கேட்ட உடனேயே என்னருகில் நின்று கொண்டிருந்த நண்பர்கள் அனைவரும் 'ஓஓ' என்று பெரிய சத்தத்தில் என்னை தூக்கி உற்சாகத்தில் சந்தோசத்தை வெளி படுத்தினர். இவர்களின் சத்தத்தில் வெளியே வந்த நர்ஸ் ஒருத்தி எங்களை சப்தமின்றி இருக்க சொன்னாள். பின்னர் அனைவரும் களைந்து சென்று அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.
Like Reply
#50
அதன் பிறகு சிறிது நேரத்தில் அந்த பெரிய டாக்டர் அம்மா முதலில் வெளியே வந்தார்கள் உடன் அவர்களின் மருமகள் அதாங்க முதலிளிருந்தே பிரசவம் பார்க்க இருந்த டாக்டர் அம்மாவும் வந்தார்கள்.

சின்ன டாக்டர்: ஏங்க, உங்களுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா. இப்படிதான் டெலிவரி அன்னைக்கும் லேட்டா வருவதா. உங்களால அதிகம் பாதிக்க பட போறது உங்களோட மனைவியும் குழந்தையும் தான் அதை கொஞ்சமாவது புரிஞ்சு நடந்துக்கோங்க. என்று பொரிந்து தள்ளிவிட்டார்.

அவள் சொல்ல சொல்ல எனக்கு பயம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியது. அதன் பிறகு அந்த பெரிய டாக்டர் அம்மா என்னிடம் வந்து

'அவள் அப்படிதான், மனசுள்ள வச்சுகாதிங்க தாயும் சேயும் இப்போ நல்லா இருக்காங்க. உங்களுக்கு வெல்ல கட்டி மாதிரி ஆண் மகன் பொறந்து இருக்கான். முதல்ல அங்கே போய் பாருங்க. என்று வாழ்த்தும் ஆறுதலும் சொல்லி சென்றால்.

சிறிது நேரத்தில் எனது அம்மாவும் மாமியாரும் வெளியே வந்தார்கள். நான் அவர்களிடம் 'பவானி இப்போ எப்படி இருக்கா'. என்று கேட்டேன்.

அம்மா: இப்போ எல்லோரும் நல்ல இருக்காங்கடா. இன்னும் கொஞ்ச நேரத்தில் இரண்டு பேரையும் நார்மல் வார்டுக்கு மாத்திடுவாங்க நீ அங்கே போய் பாரு..

நான்: உங்களை மட்டும் எதற்கு உள்ள வர சொன்னாங்க..?

மாமியார்: அதுவா!! இவளோட பிடிவாததால தான். குழந்தை அப்போவே பொறந்துடுசாம். ஆனால் மூச்சு பேச்சு இல்லாம இருந்திருக்கும் போல. என்ன பண்றதுன்னு தெரியாம பெரிய டாக்டர் அம்மாவை வர சொல்லி இருக்காங்க... அவங்கதான் குழந்தையை அழவே வச்சாங்க..சும்மா சொல்ல கூடாது, பெரிய டாக்டர் அம்மா நல்ல கைராசியான டாக்டர்தான். அவா வெளியே வரட்டும். அவளுக்கு வச்சிருக்கேன் கச்சேரி..

நான்: ஐயையோ அதை, எதுவா இருந்தாலும் என்னை திட்டிருங்க..அவ ரொம்ப பாவம். நான்தான் சொன்ன நேரத்துக்கு வர முடியாம லேட்டா வந்தேன்.

அம்மா: அடே அப்பா!!! பொண்டாடி மேல பாசத்த பாரேன் என்று என்னை கிண்டல் செய்தால்.

மாமியார்: நான் சும்மா சொன்னேங்க. உங்களை எப்படி நான் போய். சரி சரி நீங்க போய் குழந்தையை பாருங்க என்று சொன்னார்கள்

Like Reply
#51
அதேபோல் சிறிது நேரத்தில் பவானியையும் குழந்தையையும் அவளின் ரூமிற்கு மாற்றினார்கள். எனக்கு சிங்க குட்டி மாதிரி அழகான மகன் பிறந்திருந்தான். இப்பொழுது இந்த பெண்களுடன் அன்பை பகிர்ந்து கொள்ள மேலும் ஒரு ஆண் மகன். இதுவரை நான் மட்டும் பெற்ற அந்த அன்பை இவனும் பங்கு போட வந்துவிட்டான். அங்கே நான் குழந்தையை பிடிக்க தெரியாமல் தூக்க, என்னுடைய அம்மாவோ, பிள்ளை பெற்ற மட்டும் போதாது. தூக்கவும் தெரிஞ்சு இருக்கணும் என்றாள். அதனை கேட்ட அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.

குழந்தையை கைகளின் ஏந்தி உச்சி முகர்ந்து முத்தமிட்டேன்..அப்பப்பா என்ன ஒரு பேரானந்தம். அனுபவித்தவர்கள் இதனை அறிவர்.

அனைவரும் வெளியே சென்றிருந்த பொழுது பவானியின் செவ்விதழில் ஒரு முத்தம் அளித்தேன், வெட்கத்தில் அந்த தாய்மை அடைந்த சிவந்த முகத்தை காண கண்கள் கோடி வேண்டும்.

ஹாஸ்பிடலில் இருந்து வீடு சென்ற பொழுது ஒரு பேரனை கவனிக்க இரு ஆச்சிமார்கள். என்னை கவனிக்க என் மனைவி, அவளை கவனிக்க நான் என எங்கள் குடும்பமே மகிழ்ச்சியில் முழு நிறைவை கண்டது.

the end
Like Reply
#52
Super bro
Like Reply
#53
Excellent story.....
All characters are portied as good persons.
Usually they make ex-lover husband as a bad person and her life is ruined.
Proper justification is given for kala's action.
Once hari realised she is other person's wife and trying to keep distance scene is written well.
continue posting other stories
Like Reply
#54
super  yourock.good story.good writing  Shy.repped bro Heart
Like Reply
#55
(25-02-2019, 11:09 AM)johnypowas Wrote: அதேபோல் சிறிது நேரத்தில் பவானியையும் குழந்தையையும் அவளின் ரூமிற்கு மாற்றினார்கள். எனக்கு சிங்க குட்டி மாதிரி அழகான மகன் பிறந்திருந்தான். இப்பொழுது இந்த பெண்களுடன் அன்பை பகிர்ந்து கொள்ள மேலும் ஒரு ஆண் மகன். இதுவரை நான் மட்டும் பெற்ற அந்த அன்பை இவனும் பங்கு போட வந்துவிட்டான். அங்கே நான் குழந்தையை பிடிக்க தெரியாமல் தூக்க, என்னுடைய அம்மாவோ, பிள்ளை பெற்ற மட்டும் போதாது. தூக்கவும் தெரிஞ்சு இருக்கணும் என்றாள். அதனை கேட்ட அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.

குழந்தையை கைகளின் ஏந்தி உச்சி முகர்ந்து முத்தமிட்டேன்..அப்பப்பா என்ன ஒரு பேரானந்தம். அனுபவித்தவர்கள் இதனை அறிவர்.

அனைவரும் வெளியே சென்றிருந்த பொழுது பவானியின் செவ்விதழில் ஒரு முத்தம் அளித்தேன், வெட்கத்தில் அந்த தாய்மை அடைந்த சிவந்த முகத்தை காண கண்கள் கோடி வேண்டும்.

ஹாஸ்பிடலில் இருந்து வீடு சென்ற பொழுது ஒரு பேரனை கவனிக்க இரு ஆச்சிமார்கள். என்னை கவனிக்க என் மனைவி, அவளை கவனிக்க நான் என எங்கள் குடும்பமே மகிழ்ச்சியில் முழு நிறைவை கண்டது.

the end



ஜானீப்வாஸ் நண்பா 


வணக்கம் 

கதையின் முடிவு மிக மிக அருமை நண்பா 

உண்மையிலேயே ஒரு சந்தோஷமங்க இனிமையான உண்மையான ஒரு அனுபவம் நிறைந்த முடிவை கதைக்கு கொடுத்து இருக்கிறீர்கள் நண்பா 

வாழ்த்துக்கள் நன்றி 
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)