Romance நீயே என் இதயமடி
#1
Heart 
நீயே என் இதயமடி 

காலை நேரம் இருள் முழுவதுமாய் விலகவில்லை, கீழ் வானம் இளம் ஆரஞ்சு நிறத்தில், மேகங்கள் அடர்ந்து காண சூரியனோ உறங்கும் மனிதர்களை எழுப்ப உதித்து கொண்டிருந்தான்.....

பறவைகளின் கீச் கீச் சப்தமும் அந்த 
காலையிலும் சாலையில் செல்லும் ஒன்றிரண்டு வாகனங்களின் இரைச்சல் 
உடன் ஆரம்பமாகிறது அந்த நாளின் பொழுது..

கோவில் நகரம் , தூங்கா நகரம், திருவிழா நகரம் என பல பெயர்களை கொண்ட பாசத்திற்கும்  வீீரத்ததிற்கும் பெயர்போன பெருநகரமான மதுரை மாவட்டத்தின்   மத்தியில் ஒரு குறிப்பிட்ட தெருவில் அழகாய்  காட்சியளிக்கிறது அந்த வீீடு .....

பார்ப்பதற்கு ரம்மியமாய் காட்சியளிக்கும்  அந்த வீட்டின் வாசலில் போடப்பட்டுள்ள மாவுக்கோலமும் அதன் நடுவில் வைத்துள்ள
பூசணிப்பூவும் அவர்களின் மனதின் ஈரத்தையும், பண்பாட்டையும் நமக்கு சொல்லுகிறது....

இரண்டு தளங்களை கொண்ட அந்த வீட்டின் கீழ் தளத்தில் ஒரு தனியறை,  சமையலறை மற்றும் கூடத்தை கொண்டது மேல் தளத்தில்
ஒரே ஒரு தனியறை மட்டும் உள்ளது....

அந்த வீட்டின் கூடத்தில் போடப்பட்டுள்ள சோபாவில் அமர்ந்து பேப்பர் படித்து கொண்டிருக்கும் 50  வயதை நெருங்கும் அவர்தான் சக்தி வேல் இந்த வீட்டின் குடும்ப
தலைவர், இவர் ஒரு பிரைவேட் பேங்கில் வேலை செய்கிறார். என்னதான். படித்து மதிக்கதக்க வேலையில்  இருந்தாலும் நாகரீகமாய் மாறிவரும் இந்த காலத்திலும் தனது  பண்பாட்டை மறக்காதவர் தனது சொந்தங்களை மதிப்பவர் 

பேப்பரின் அடுத்த பக்கத்தை புரட்டுகையில் சமையரையில் இருந்து 
ஒரு சத்தம்....... 

என்னங்க இங்க வாங்க .....கேஸ் சிலிண்டர் தீர்ந்திருச்சு... வந்து வேற 
சிலிண்டர மாத்தி விடுங்க....என்ற சத்தத்தின் சொந்தக்காரி 45 வயதை எட்டிய மீீனாட்சி தேவி. இவர்தான் இந்த குடும்பத்தின் தலைவி..பெயர்க்கு ஏற்றார் 
போல தெய்வ இலட்சணமாக உள்ளவர்... உறவுகள் அனைவரும் தேவி என அழைப்பார்கள். கணவர் மற்றும் பிள்ளைகளை சுற்றியேதான் இவரது வாழ்க்கை..  தனது 
குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றி வைக்கும் அக்மார்க் குடும்ப பெண்..... 

சக்தி வேல் சிலிண்டரை மாற்றிவிட்டு மீண்டும் கூடத்திற்கு வந்து பேப்பரில் மூழ்கினார்... 

தேவி காபியை போட்டு சமையலறையை விட்டு வெளியே வந்து தனது கணவருக்கு கொடுத்துவிட்டு தனது பிள்ளைகளை எழுப்ப சென்றாள்.... 

டேய் கார்த்திக் டேய் எந்திரிடா.....என தன் அம்மாவின் குரல் கேட்டு விழித்தான் ..... 
விழித்து தன் அம்மாவை பார்த்துவிட்டு 

ம்ம்ம். .... இன்னும் ஒரு 5 நிமிஷம்மா... 

டேய் எந்திரிடா... உனக்கு இதே வேலையா போச்சு என்று சொல்லி விட்டு தேவி சென்றுவிட்டாள்..... 

ஆமாங்க இந்த கார்த்திக்-தான் நம்ம ஹீரோ.... 

டெய்லியும் அம்மா உசுப்பியவுடன்-தான் கண் விழிப்பான்..... 

5 நிமிடம் கழித்து எழுந்து மணியை பார்த்தான் அது 6:30 என காட்டியது.அதை பார்த்துவிட்டு பாத்ரூமிற்குள் புகுந்து விட்டான்.. கார்த்திக் பிரெஷ் ஆகி வருவதற்குள் இவனை பற்றி பார்ப்போம்... 

25 வயதை எட்டும் கார்த்திக்  கருமை கலந்த மாநிறமும் 5 1/2 அடிக்கு சற்றே  கூடுதலான உயரம் கொண்டவண் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு இப்ப ஒரு ஆட்டோமொபைல் கம்பெனியில் டிசைன் 
இன்ஜினிரா இருக்கான்ன ரெண்டு வருசமா 
இந்த கம்பெனியில வேலை பார்க்கிறான்... 
இந்த வேலையோட இவர் பாத்த பாக்க போற காதல் வேலைதான் இந்த கதைங்கோ.... 

கார்த்திக் பிரெஷ் ஆகி கூடத்திற்கு வந்தான் ...அங்கு வந்து தனது அப்பாவிற்கு 
குட்மார்னிங் சொல்லிக்கொண்டே அவர் 
பக்கத்தில் அமர்ந்தான்.... 

அவரும் குட்மார்னிங் பா என்று சொல்லி விட்டு காபியை குடித்துக் கொண்டே அந்த 
பேப்பரை படித்து முடித்தார்.... 


அம்மா... காபி என்று சொல்லிக்கொண்டே தனது மொபைலை எடுத்து நோண்ட ஆரம்பித்தான்.... 

அப்போது.. குட்மார்னிங்டா கார்த்திக் என்று சொல்லிக்கொண்டே அவனிடம் காபி கப்பை நீட்டினாள் அவனது அக்கா திவ்யா.... 

திவ்யாவிற்கு வயது 28 திருமணமாகி கணவண் சிவா வெளிநாட்டில் பணிபுரிவதால் இவள் தன் பெற்றோர் 
வீட்டில் உள்ளாள்...இவளுக்கு நான்கு வயதில் ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது.தற்போது அந்த வீட்டின் இளவரசி  தேவதை   என எல்லாமே நான்கு  வயதே ஆகின்ற கவிநயா...

ம்ம் .. குட்மார்னிங்-கா கவிய எங்க என்று கேட்டுக்கொண்டே காபியை வாங்கினான்.. 

அதுவரை தனது பாட்டியுடன் சமையல் அறையில் இருந்த கவி கார்த்திக்  வந்தவுடன்
மாமா என மழழை குரலில் கூவி கொண்டு கார்த்திக்-ன் மேல் தொற்றி கொண்டாள் 
அவளை வாரி அணைத்து கொஞ்சி விட்டு
வேலைக்கு செல்ல தயாராக ஆரம்பித்தான்


கார்த்திக் தனது வேலைகளை முடித்து விட்டு தனது வேலைக்குச் செல்ல 
தயாராகி வந்தான்.... 

அம்மா நான் Office போயிட்டு வந்திடுறேன். 
என்று கார்த்திக் சொல்ல .. 
ம்ம் பாத்து போயிட்டு வாடா ... என்று சமையலறையில் இருந்து வெளியே வந்து வழியனுப்பினாள் கார்த்திக் ன் அம்மா தேவி.... 
தனது அம்மாவிடம் சொல்லிக்கொண்டு தனது FZ பைக்கை கிளப்பி இரண்டு தெரு தள்ளி உள்ள பாலாவின் வீட்டின் முன் வந்து நின்றான்..... 
( பாலாவும் கார்த்திக்கும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள். பள்ளி, கல்லூரி, தற்போது வேலை செய்யயும் கம்பெனி வரை ஒன்றாகவே இருக்கிறார்கள்.......) 

டேய் பாலா....என்று கார்த்திக் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே.... 
பாலா எதிரே வந்தான்... 

டேய் வந்துட்டேண்டா கத்தாத...என்று சொல்லிக்கொண்டே ...பைக்கில் ஏறியமர்ந்தான்....பாலா..

-தொடரும்
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Good start bro. Continue waiting for next update
[Image: 7f3eac9b49640ff18c05914fa2810247.png]
Like Reply
#3
Nice start bro continue
Like Reply
#4
இருவரும் நேராக அவர்களது ஆஸ்தான டீ கடைக்கு வந்து இறங்கி அவர்களது ஃபேவரட் கிங்ஸ் சிகரெட்டை வாங்கி புகைக்க ஆரம்பித்தனர்....

பாாலா போனில் யாருடனோ பேசியபடி சிகரெட்டை  புகைக்க கார்த்திக் தனது பைக்கின் மேல் ஸ்டைலாக சாய்ந்து கொண்டு சாலையை நோக்கியபடி எதையோ எதிர்பார்த்து காத்திருந்தான் ..

கார்த்திக்ன் காத்திருப்புக்கு பலனாகவே அவனது தேவதை பிரியா அவனுக்கு காட்சியளித்தாள்

அவளை பார்த்த மாத்திரத்தில்   உள் இழுத்த சிகரெட் புகையை வெளிவிட மறந்து ....
நம்மள மயக்குரதுக்குனு இன்னைக்கு எப்படி கிளம்பி வந்துருக்கா பாரு என நினைத்து  கொண்டே அவளை வெரித்தான்.....

  அலை அலையாக கேசம்..!! சலவை செய்த நிலவினை போன்றதொரு ஒளிமுகம்..!! உருளும் திராட்சைகளாய் இரு கருவிழிகள்..!! உருண்டையான கூர்மையான நாசி..!! தேன் சொட்டும் ஆரஞ்சு சுளைகளாய் பிளந்து கொண்ட இதழ்கள்..!! சந்தனத்தில் பாலை குழைத்து பூசிவிட்ட மாதிரியான மேனி வண்ணம்..!! தேர்ந்த சிற்பி ஒருவன் செதுக்கிய மாதிரியான தேகக்கட்டு..!! உடைய பிரியா மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்த்து கொண்டு சிகப்பு நிற காட்டன் சுடிதாரில் எழிலாய் நடந்து வந்தாள்....

(பிரியா 23 வயதுக்கு ஏற்ற பக்குவம்   கொண்டவள்   பார்ப்போரை   ஈர்க்கும்  பேரழகி.....

பிரியா - தாங்க நம்ம ஹீரோயின். 
இப்ப M com கடைசி வருஷம் படிக்கிறா.. 

பிரியாவோட அம்மா சத்யா அப்பா தயாநிதி இருவரும்.  காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்

இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் ஒரு மகள் ... 
மகன் 28 வயது ஆகும் குணா ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை செய்கிறான் 
திருமணமாகி இரண்டு வருஷம் ஆகுது.. 
குணாவின் மனைவியின் பெயர் புவணேஷ்வரி .நல்ல குணமுடையவள் . புவனாவும் பிரியாவும் நல்ல தோழிகளாக பழகுபவர்கள்... 
பிரியாவுக்கு ஒன்றென்றால் வீட்டில் உள்ள  அனைவரும் துடித்து விடுவார்கள்
இநத வீட்டின்  இளவரசி இவள்தான்.      இதுதான் பிரியாவின் குடும்பம்....)
 

அதுவரை மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்த பிரியா கார்த்திக்.  நிற்கும் டீ -கடைக்கு அருகில் வந்தவுடன் வேகமாக நடையை போட்டு தனது கல்லூரி பேருந்தை பிடிக்க ஒடிச்சென்று   பேருந்தில் 
ஏறி தனது தோழி சந்தியாவின் அருகில் அமர்ந்து கொண்டால்...

ஏண்டி மெதுவா வர வேண்டியதுதான பஸ்-தான் நிக்குதுல என   தன் அருகே  மூச்சு வாங்கியபடி   அமர்ந்து இருந்த  பிரியாவிடம் கேட்டடாள் சந்தியா...

அதற்கு  பதில்  சொல்லாமல் 
எரும மாடு எப்படி பாக்குறான் பாரு திருட்டுபய என்று முனு முனுத்துக் கொண்டிருந்தால் பிரியா... 

ஏய் என்னாடி  நான்  என்ன கேக்குறேன்
நீ  என்னடானா  ஏதோ.  புலம்பபுற என சந்தியா கேட்க

புலம்பலடி ...  எவ்வளவு தைரியமா என்.முன்னாலயே சிகரெட் புடுச்சுகிட்டு
எப்படி பாக்குறான்  பாரு  பொருக்கி பய என திட்ட.....

ஏய் யாரடி திட்ற என சந்தியா  வினவ ...?

நான்  வேற  யார திட்ட போறேன் கார்த்திக்தான் .... என    இவள் சொல்லி விட்டு.  நீயே சொல்லுடி என    ஆரம்பிக்க.....

இருவருமாய் பேசியபடி  தங்கள் பயணத்தை தொடங்கினர்.....

பிரியா பேருந்து ஏறியவுடன் கார்த்திக் அருகில் வந்த பாலா...

என்னா மச்சி பிரியா பாக்காம போறா...என கேட்க 

முடிந்து  போன  சிகரெட்டை மிதித்து  அனைத்தபடி யார்டா சொன்னா அவ என்ன பாக்காம போறானு ... என்று முகத்தில் ஒரு புன்முறுவலுன் கேட்டுவிட்டு... அதுலாம் அவ என்ன பாத்துட்டுதான் போறா ... 
நீ வண்டில ஏறு முதல என்று சொல்லிக்கொண்டே வண்டியில் ஏறியமர்ந்தான்... 

இருவரும் தங்களது கம்பெனிக்கு வந்து அவர் அவர் கேபினுக்கு சென்றனர்.. 
கார்த்திக் அன்றய வேலையை பார்த்துவிட்டு .. தனது மொபைலை எடுத்து தனது காதலியின் புகைப்படங்களை பார்க்க ஆரம்பித்தான்.. 
அதில் பச்சை பட்டு   புடவையை சுற்றி கொண்டு மயக்குகிற மாதிரி ஒரு  பார்வையை  வீசியவாறு எழிலாக நிற்கும்  தனது   மனம் கவர்ந்த தேவதையை முகத்தில் ஒரு பிரகாச சிரிப்புடன்  காதலாய்  பார்த்து கொண்டே பழைய ஞாபகங்களில் மூழ்கினான்...
Like Reply
#5
(30-04-2019, 02:28 PM)Deepakpuma Wrote: Good start bro. Continue waiting for next update

(30-04-2019, 06:01 PM)Krish126 Wrote: Nice start bro continue


நன்றி நண்பர்களே....உங்கள் ஆதரவிற்கு
Like Reply
#6
Super bro continue
[Image: 7f3eac9b49640ff18c05914fa2810247.png]
Like Reply
#7
Bro waiting for update
[Image: 7f3eac9b49640ff18c05914fa2810247.png]
Like Reply
#8
Heart 
டேய் கார்த்தி ... டேய் கிளம்பிட்டியா வேகமா வாடா மணி ஆயிருச்சு பாரு என மாடியில் இருக்கும் தன் மகன்  அறையை நோக்கி அழைத்தவாறு தனது மகள் திவ்யாவிடம் ஒரு பையை கொடுத்து இந்தாம்மா இத பத்திரமா வச்சுக்கோ என சொல்லிக்கொண்டிருக்கையிலயே

ஃப்ளு கலர்  ஜீன்ஸ் ம்  ஃப்ளாக் கலர்  ஃபுல் ஹான்ட் ஷர்ட்டும்  அணிந்து கொண்டு அதன் ஸ்லீவை மடித்துவிட்டவாாறு அழகாய் இறங்கி வந்தான் 18 வயது நிரம்ப போகும் கார்த்திக்.

டேய் தம்பி என்னடா கோவிலுக்கு போகையில இந்த சட்டையை போட்டுக்கிட்டு வர உங்கப்பா திட்ட போறாரு போயி வேற சட்டை போட்டுக்கிட்டு வா என அவனிடம் சொல்ல.....

இந்த சட்டைக்கு என்னமா....
இதுக்கு எதுக்கு அவரு வைய போறாரு... 
என கேட்க

டேய் கோவிலுக்கு போகைல கருப்பு சட்ட வேணாம்.
உங்கப்பா மத்தநாள் போட்டாலே வைவாறு ஒழுங்கா போய் நல்ல பிள்ளையா வேற சட்டையை போட்டுக்கிட்டு வா என தனது மகனை கண்டித்தால்

வாயில் எதையோ முணுமுணுத்தபடி படிகளில் ஏரியவன்....

தேவி என்ன இன்னும் கிளம்பலயா  அவன் இன்னும் என்ன பன்னிக்கிருக்கான் என வெளிய இருந்து அவனது அப்பாவின் குரல் கேட்கவும் விறுவிறுவென படிகளில் ஏறினான் கார்த்திக்.....

அன்று சக்திவேல் மீனாட்சி தேவி திருமணநாள் என்பதால்  மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய குடும்பத்துடன் வந்திருந்தனர்...


மதுரை என்றாலே அனைவர்க்கும் முதலில் ஞாபகம் வருவது மீனாட்சி அம்மன் கோவில்தான்....
மதுரை மாநகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு நான்கு கோபுர வாசல் இதற்கு நான்கு மாடக்கூடல் என்றும் பெயர் .... 
இங்கு பொற்றாமரை குளம், மற்றும் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டை விளங்கும் அஷ்ட சக்தி மண்டபம் , முதலி மண்டபம், சேர்வைக்காரர் மண்டபம் , கிளிகூட்டு மண்டபம் மங்கையர்க்கரசி மண்டபம், ஆயிரம் கால் மண்டபம் ஆகியவை அமையப்பெற்று பெருமை சேர்க்கிறது.
 நாற்திசையிலும் எழில் மிகு கோபுரங்கள் கோவில் வாயிலாக இருக்கும் பட்சத்திலும் மீனாட்சி அம்மன் கிழக்கு நோக்கி அருள் பாளிப்பதால் பெரும்பாலான பக்தர்கள் யாவும் கிழக்கு கோபுரத்தை கை கூப்பி வணங்கியபடியே அம்மனை காண உடச்செல்கின்றனர்....

முதலில் அனைவரும் விபூதி விநாயகரை வணங்கிவிட்டு அங்குள்ள விபூதியை அள்ளி விநாயகர் மீது பூசிவிட்டு அம்மனை தரிசிக்க செல்வது மரபாக உள்ளது....


திவ்யா கார்த்தி ரெண்டு பேரும் நல்லா சாமிய கும்பிடுங்க.....
நல்லா படிக்கணும் நல்ல பேரு வாங்கணும் நல்ல உடல் ஆரோக்கியத்தை குடுங்க அப்டின்னு நல்லா வேண்டிக்கோங்க என தனது பிள்ளைகளுக்கு சொல்லியவாறு அதையே தனது வேண்டுதலாய் வைத்தார் சக்திவேல்....

தாயே என் பிள்ளைகள் என் வீட்டுக்காரர் எல்லாரும் நல்லா இருக்கனும் அவுங்களுக்கு நல்ல கைகால் சுகத்தை கொடு , எந்த பிரெச்சனையும் வர கூடாது என தன் பிள்ளைகளுக்கும் கணவருக்காகவும் மட்டும் அந்த மீனாட்சி தேவியிடம் நமது மீனாட்சி தேவி மனமுருகி வேண்டியபடி அணைத்து ஸ்வாமிகளிடமும் இதையே வேண்டுதலாய் வைத்து தரிசனத்தை முடித்தார்கள்

தரிசனத்தை முடித்துவிட்டு தெப்பத்திற்கு வந்தவர்கள் மேல் படிக்கட்டுகளில் அமர்ந்திருக்க அதில் கார்த்தி மட்டும் கீழே இறங்கி சென்று தெப்பத்தின் கடைசி படியில் நின்றபடி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்...

அங்கு இவனுக்கு அருகிலே இவனை விட இரு வயது குறைவாய் உள்ள ஒரு பெண் சிறுமி ஒருவளுடன் வந்து தனது பாவாடையை சற்று உயர்த்தி தன் இரு கால்களுக்கு இடையில் வைத்து தெப்பத்தை நோக்கி குனிந்து நீரை கையில் அள்ளி சிறுமியின் தலையில் தொளித்துவிட்டு மீண்டும் அள்ள போகையில் பேலன்ஸ் தவறுவது போல் இருக்க அருகில் நின்றவனின் கையை பிடித்தாள்.......

அதுவரை வேறெங்கோ பார்த்தபடி இருந்தவன் தனது கையை யாரோ பற்றுவது போல் தெரியவும் உடனே திரும்பி பார்க்க சரியாய் அதே நேரத்தில் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தாள் அவள்......

இருவரும் பார்த்துக்கொண்ட அந்த நொடியில் இருவருக்குள்ளும் மின்னலாய் ஏதோ ஒரு உணர்வு ஏற்பட தங்களை மறந்து அந்த உணர்வை அனுமதித்து அனுபவித்தப்படி நின்றனர்....

அப்போது அக்கா என அந்த சிறுமி ஒரு முறைக்கு இருமுறை அழைத்த பிறகே தெளிந்த அவள் சட்டென தான் பற்றியிருந்த அவனது கையை உதறி விடுவித்து விட்டு தனது பாவாடையை ஒற்றை கையால் உயர்த்தி பிடித்தவாறு விறுவிறுவென அழகாய் படிகளில் ஏறி ஓடினாள் அந்த சிறுமியுடன்........

அவள் போவதையே லேசான புன்முறுவலுடன் பார்த்து கொண்டிருந்தவன் அவள் கண்ணை விட்டு மறையும் தொலைவு வரை பார்த்தவன் அவள் பிடித்திருந்த இடத்தில் தனது மற்றொரு கையை பிடித்தவாறு அவளை நினைத்தபடி நிற்க சட்டென ஏதோ தோன்ற தன் குடும்பத்தினர் அமர்ந்திருந்த திசையை நோக்கினான் அங்கு அவர்கள் யாரையும் காணவில்லை உடனே படிகளில் ஏறி மேலே வந்தவனை சற்று தொலைவில் இருந்து அவனது அக்கா திவ்யா அழைத்தாள்......

எங்ககா போனீங்க
 அம்மாவையும் அப்பாவையும் எங்க  என இவன் கேட்க...

வெளிய ப்ரெசாதம் கொடுக்க போனோம் அவுங்க அங்கதான் கொடுத்துகிட்டு இருக்காங்க என ஒரு திசையை காட்டிவிட்டு நடக்க இவனும் அக்காவுடன் இணைந்து நடந்தால்....

கோவிலில் இருந்து வீட்டுக்கு வந்தவன் நேராக தனது அறைக்கு சென்று கட்டிலில் விழுந்தான்....

விழுந்தவன் கோவிலில் பார்த்த அந்த பெண்ணின் ஞாபகத்தில் புதைந்தான்....

யார்டா கார்த்தி அந்த பிள்ள.....
பாத்தா உடனே நம்மள என்னமோ பண்ணிட்டா.....

அவள பாக்கையில இங்க என்னமோ பண்ணுச்சடா.....
என தன் இதயம் இருக்கும் பகுதியில் கை வைத்தவாறு தன்னுடன் தானே பேசிக்கொண்டிருந்தான்...

அந்த கண்ணு அதுக்கு மேல அழகான புருவம் அதுக்கு மத்தியில ஒரு பொட்டு அதுக்கு மேல மெல்லிய திருநீர் கீற்று இப்படி அந்த பெண்ணை பற்றி நினைகயிலும் அவளை பார்த்த போது இதயத்தில் ஏற்பற்ற உணர்வு இப்போதும் ஏற்பட அதை அனுபவித்தப்படியே இருக்க....

அப்போது அவன் அறைக்கு வந்த திவ்யா....

கார்த்தி கீழ வா அம்மா சாப்பிட கூப்புடாங்க  என சொல்ல....

நீ போக்க நான் வரேன் என திவ்யாவிற்கு பதில் சொல்லிவிட்டு தன்னை சரிப்படுத்தி கொண்டு கீழ் வந்தவன் சாப்பிட அமர....

டிவி-யில் .......

துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூப்போல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்

செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா
அழகாய் மனதை பறித்துவிட்டாளே


என்ற பாடல் ஓட  இவனுக்கு தான் கோவிலில் கண்ட பெண்ணின் ஞாபகம் குடியேறியது.......
Like Reply
#9
Heart 
டேய் கார்த்தி ... டேய் கிளம்பிட்டியா வேகமா வாடா மணி ஆயிருச்சு பாரு என மாடியில் இருக்கும் தன் மகன்  அறையை நோக்கி அழைத்தவாறு தனது மகள் திவ்யாவிடம் ஒரு பையை கொடுத்து இந்தாம்மா இத பத்திரமா வச்சுக்கோ என சொல்லிக்கொண்டிருக்கையிலயே

ஃப்ளு கலர்  ஜீன்ஸ் ம்  ஃப்ளாக் கலர்  ஃபுல் ஹான்ட் ஷர்ட்டும்  அணிந்து கொண்டு அதன் ஸ்லீவை மடித்துவிட்டவாாறு அழகாய் இறங்கி வந்தான் 18 வயது நிரம்ப போகும் கார்த்திக்.

டேய் தம்பி என்னடா கோவிலுக்கு போகையில இந்த சட்டையை போட்டுக்கிட்டு வர உங்கப்பா திட்ட போறாரு போயி வேற சட்டை போட்டுக்கிட்டு வா என அவனிடம் சொல்ல.....

இந்த சட்டைக்கு என்னமா....
இதுக்கு எதுக்கு அவரு வைய போறாரு... 
என கேட்க

டேய் கோவிலுக்கு போகைல கருப்பு சட்ட வேணாம்.
உங்கப்பா மத்தநாள் போட்டாலே வைவாறு ஒழுங்கா போய் நல்ல பிள்ளையா வேற சட்டையை போட்டுக்கிட்டு வா என தனது மகனை கண்டித்தால்

வாயில் எதையோ முணுமுணுத்தபடி படிகளில் ஏரியவன்....

தேவி என்ன இன்னும் கிளம்பலயா  அவன் இன்னும் என்ன பன்னிக்கிருக்கான் என வெளிய இருந்து அவனது அப்பாவின் குரல் கேட்கவும் விறுவிறுவென படிகளில் ஏறினான் கார்த்திக்.....

அன்று சக்திவேல் மீனாட்சி தேவி திருமணநாள் என்பதால்  மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய குடும்பத்துடன் வந்திருந்தனர்...


மதுரை என்றாலே அனைவர்க்கும் முதலில் ஞாபகம் வருவது மீனாட்சி அம்மன் கோவில்தான்....
மதுரை மாநகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு நான்கு கோபுர வாசல் இதற்கு நான்கு மாடக்கூடல் என்றும் பெயர் .... 
இங்கு பொற்றாமரை குளம், மற்றும் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டை விளங்கும் அஷ்ட சக்தி மண்டபம் , முதலி மண்டபம், சேர்வைக்காரர் மண்டபம் , கிளிகூட்டு மண்டபம் மங்கையர்க்கரசி மண்டபம், ஆயிரம் கால் மண்டபம் ஆகியவை அமையப்பெற்று பெருமை சேர்க்கிறது.
 நாற்திசையிலும் எழில் மிகு கோபுரங்கள் கோவில் வாயிலாக இருக்கும் பட்சத்திலும் மீனாட்சி அம்மன் கிழக்கு நோக்கி அருள் பாளிப்பதால் பெரும்பாலான பக்தர்கள் யாவும் கிழக்கு கோபுரத்தை கை கூப்பி வணங்கியபடியே அம்மனை காண உடச்செல்கின்றனர்....

முதலில் அனைவரும் விபூதி விநாயகரை வணங்கிவிட்டு அங்குள்ள விபூதியை அள்ளி விநாயகர் மீது பூசிவிட்டு அம்மனை தரிசிக்க செல்வது மரபாக உள்ளது....


திவ்யா கார்த்தி ரெண்டு பேரும் நல்லா சாமிய கும்பிடுங்க.....
நல்லா படிக்கணும் நல்ல பேரு வாங்கணும் நல்ல உடல் ஆரோக்கியத்தை குடுங்க அப்டின்னு நல்லா வேண்டிக்கோங்க என தனது பிள்ளைகளுக்கு சொல்லியவாறு அதையே தனது வேண்டுதலாய் வைத்தார் சக்திவேல்....

தாயே என் பிள்ளைகள் என் வீட்டுக்காரர் எல்லாரும் நல்லா இருக்கனும் அவுங்களுக்கு நல்ல கைகால் சுகத்தை கொடு , எந்த பிரெச்சனையும் வர கூடாது என தன் பிள்ளைகளுக்கும் கணவருக்காகவும் மட்டும் அந்த மீனாட்சி தேவியிடம் நமது மீனாட்சி தேவி மனமுருகி வேண்டியபடி அணைத்து ஸ்வாமிகளிடமும் இதையே வேண்டுதலாய் வைத்து தரிசனத்தை முடித்தார்கள்

தரிசனத்தை முடித்துவிட்டு தெப்பத்திற்கு வந்தவர்கள் மேல் படிக்கட்டுகளில் அமர்ந்திருக்க அதில் கார்த்தி மட்டும் கீழே இறங்கி சென்று தெப்பத்தின் கடைசி படியில் நின்றபடி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்...

அங்கு இவனுக்கு அருகிலே இவனை விட இரு வயது குறைவாய் உள்ள ஒரு பெண் சிறுமி ஒருவளுடன் வந்து தனது பாவாடையை சற்று உயர்த்தி தன் இரு கால்களுக்கு இடையில் வைத்து தெப்பத்தை நோக்கி குனிந்து நீரை கையில் அள்ளி சிறுமியின் தலையில் தொளித்துவிட்டு மீண்டும் அள்ள போகையில் பேலன்ஸ் தவறுவது போல் இருக்க அருகில் நின்றவனின் கையை பிடித்தாள்.......

அதுவரை வேறெங்கோ பார்த்தபடி இருந்தவன் தனது கையை யாரோ பற்றுவது போல் தெரியவும் உடனே திரும்பி பார்க்க சரியாய் அதே நேரத்தில் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தாள் அவள்......

இருவரும் பார்த்துக்கொண்ட அந்த நொடியில் இருவருக்குள்ளும் மின்னலாய் ஏதோ ஒரு உணர்வு ஏற்பட தங்களை மறந்து அந்த உணர்வை அனுமதித்து அனுபவித்தப்படி நின்றனர்....

அப்போது அக்கா என அந்த சிறுமி ஒரு முறைக்கு இருமுறை அழைத்த பிறகே தெளிந்த அவள் சட்டென தான் பற்றியிருந்த அவனது கையை உதறி விடுவித்து விட்டு தனது பாவாடையை ஒற்றை கையால் உயர்த்தி பிடித்தவாறு விறுவிறுவென அழகாய் படிகளில் ஏறி ஓடினாள் அந்த சிறுமியுடன்........

அவள் போவதையே லேசான புன்முறுவலுடன் பார்த்து கொண்டிருந்தவன் அவள் கண்ணை விட்டு மறையும் தொலைவு வரை பார்த்தவன் அவள் பிடித்திருந்த இடத்தில் தனது மற்றொரு கையை பிடித்தவாறு அவளை நினைத்தபடி நிற்க சட்டென ஏதோ தோன்ற தன் குடும்பத்தினர் அமர்ந்திருந்த திசையை நோக்கினான் அங்கு அவர்கள் யாரையும் காணவில்லை உடனே படிகளில் ஏறி மேலே வந்தவனை சற்று தொலைவில் இருந்து அவனது அக்கா திவ்யா அழைத்தாள்......

எங்ககா போனீங்க
 அம்மாவையும் அப்பாவையும் எங்க  என இவன் கேட்க...

வெளிய ப்ரெசாதம் கொடுக்க போனோம் அவுங்க அங்கதான் கொடுத்துகிட்டு இருக்காங்க என ஒரு திசையை காட்டிவிட்டு நடக்க இவனும் அக்காவுடன் இணைந்து நடந்தான்....

கோவிலில் இருந்து வீட்டுக்கு வந்தவன் நேராக தனது அறைக்கு சென்று கட்டிலில் விழுந்தான்....

விழுந்தவன் கோவிலில் பார்த்த அந்த பெண்ணின் ஞாபகத்தில் புதைந்தான்....

யார்டா கார்த்தி அந்த பிள்ள.....
பாத்தா உடனே நம்மள என்னமோ பண்ணிட்டா.....

அவள பாக்கையில இங்க என்னமோ பண்ணுச்சடா.....
என தன் இதயம் இருக்கும் பகுதியில் கை வைத்தவாறு தன்னுடன் தானே பேசிக்கொண்டிருந்தான்...

அந்த கண்ணு அதுக்கு மேல அழகான புருவம் அதுக்கு மத்தியில ஒரு பொட்டு அதுக்கு மேல மெல்லிய திருநீர் கீற்று இப்படி அந்த பெண்ணை பற்றி நினைகயிலும் அவளை பார்த்த போது இதயத்தில் ஏற்பற்ற உணர்வு இப்போதும் ஏற்பட அதை அனுபவித்தப்படியே இருக்க....

அப்போது அவன் அறைக்கு வந்த திவ்யா....

கார்த்தி கீழ வா அம்மா சாப்பிட கூப்புடாங்க  என சொல்ல....

நீ போக்க நான் வரேன் என திவ்யாவிற்கு பதில் சொல்லிவிட்டு தன்னை சரிப்படுத்தி கொண்டு கீழ் வந்தவன் சாப்பிட அமர....

டிவி-யில் .......

துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூப்போல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்

செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா
அழகாய் மனதை பறித்துவிட்டாளே


என்ற பாடல் ஓட  இவனுக்கு தான் கோவிலில் கண்ட பெண்ணின் ஞாபகம் குடியேறியது.......
Like Reply
#10
(01-05-2019, 11:26 AM)Deepakpuma Wrote: Super bro continue

நன்றி நண்பரே.....

உங்கள் பாராட்டில் உள்ளம் மகிழ்ந்தது Heart
Like Reply
#11
Awesome bro update. Pls update regularly bro
[Image: 7f3eac9b49640ff18c05914fa2810247.png]
Like Reply
#12
அருமையாக கதையை தொடங்கிவிட்டீர்கள்
Like Reply
#13
Update bro
Like Reply
#14
அருமையாக ,மிக அற்புதமாக கதையை தொடங்கிவிட்டீர்கள்.நன்றி.!உங்கள் பணி இனிதே தொடங்கட்டும். வாழ்த்துக்கள்.!!
Like Reply
#15
(19-05-2019, 02:05 PM)Deepakpuma Wrote: Awesome bro update. Pls update regularly bro

(19-05-2019, 11:42 PM)Deva2304 Wrote: அருமையாக கதையை தொடங்கிவிட்டீர்கள்

(22-05-2019, 12:15 AM)Deva2304 Wrote: Update bro

(22-05-2019, 01:00 PM)Rajalingam Wrote: அருமையாக ,மிக அற்புதமாக கதையை தொடங்கிவிட்டீர்கள்.நன்றி.!உங்கள் பணி இனிதே தொடங்கட்டும். வாழ்த்துக்கள்.!!

நன்றி நண்பர்களே........
உங்கள் வாழ்த்தில் மனம் மகிழ்ந்தது......
உங்களால் புது ஊக்கம் கிடைத்துள்ளது.......
Heart Heart Heart
Like Reply
#16
கார்த்திக்கின் வீட்டுக்குள் நுழைந்த பாலா
தேவியம்மா....  தேவியம்மா.... 
என அழைத்தப்படி டிவி முன் அமர்ந்திருந்த கார்த்திக்கின் அருகில் போய் அமர்ந்தான்

தன்னை அழைத்த குரல் பாலதான் என்பது பிடிப்படவே 
ம்ம் சொல்லு பாலா அம்மா இங்க சமயக்கட்டுள்ள இருக்கேன் என அங்கிருந்து குரல் கொடுத்தார் தேவி......

பாலாவும் குரல் வந்த திசை பக்கம் தலையை திருப்பி 
தேவியம்மா  அம்மா சந்தைக்கு கிளம்பிட்டாங்களாம்  உங்கள வர சொன்னாங்க என சொல்லிவிட்டு

டிவி-யில் கவனமாய் இருந்த கார்த்தியிடம் டேய் மச்சி "WF" வையுடா என அவசரப்படுத்தினான் பாலா

பொறு மச்சி இந்த பாட்டு முடியட்டும் என டிவி-யில் ஓடிய பாட்டை ரசித்தபடி பொறுமையாய் சொன்னான் கார்த்திக்

டிவி பக்கம் திரும்பிய பாலா அதில் சச்சின் படத்தில் இருந்து .....

கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே
குடை இல்லா நேரம் பாத்து கொட்டி போகும் மழையை போல
அழகாலே என்னை நனைத்து இது தான் காதல் என்றாலே
தெரு முனையை தாண்டும் வரையில்
வெறும் நாள் தான் என்று இருந்தேன்
தேவதையை பார்த்ததும் இன்று திருநாள் என்கின்றேன்
அழகான விபத்தில் இன்று ஹையோ நான் மாட்டிக்கொண்டேன்
தப்பிக்க வழிகள் இருந்தும் வேண்டாம் என்கின்றேன்

ஓஹோ ஓஓ.....

என்ற விஜயின் பாடல் ஓட அதை கண்டு திகைத்தவனாய் டேய் நீ எப்ப இருந்து விஜய் ரசிகனா மாறின என கேட்டான்....

அந்த பாடல் முழுமையாக முடிந்த பின்பு விளம்பரம் போட இவன் பக்கம் திரும்பிய கார்த்திக்

மச்சி பாட்டு நல்லா இருந்துச்சுல என கேட்டவன் அவன் முறைப்பாய் இவனை பார்ப்பது புரியவும்

மச்சி நான் ரசிகனாலாம் மாறல...  அதுவுமில்லாம பாட்டு மியூசிக் டைரக்டர் தான போட்டாரு என சொல்லியவாறு பாலாவை பார்க்க.....

ம்ம் நீ இப்படியெல்லாம் இருக்க மாட்டியே ஏதோ வித்தியாசமா படுதே என சந்தேகமாய் அவனை பாலா பார்க்க....

இப்ப என்ன மச்சி WF தான பாக்கணும் வா பாப்போம் என ரிமோட்டை எடுத்து சேனலை மாற்ற

அப்போது அங்கு வந்த தேவி....
டேய் பசங்களா டிவி-ய அமத்திட்டு காப்பிய குடுச்சுட்டு ஒழுங்கா டியூஷனுக்கு கிளம்பி போய் படிக்கிற வழிய பாருங்க அம்மா சந்தைக்கு கிளம்பிட்டேன் என சொல்லியவாறு இவர்களிடம் காப்பி டம்ளரை கொடுத்துவிட்டு கிளம்பி சென்றார்.....

தேவி கிளம்பி சென்றவுடன் 
டேய் மச்சி நேத்து கோவில்ல ஒரு பிள்ளைய பார்தேண்டா என காபியை ஒரு மிடரு குடித்தபடி கார்த்திக் சொல்ல

அதுவரை டிவி-யில் தன் தலைவன் ராக் போட்டுக்கொண்டிருந்த சண்டையை தீவிரமாய் பார்த்து கொண்டிருந்த பாலா டக்கென அவன் பக்கம் திரும்பி 
என்னாது கோவில்ல ஒரு பிள்ளைய பாத்தியா.......
என திகைப்பாய் கேட்டான்...

ஆமா மச்சி என ஆரம்பித்து கோவிலுக்கு சென்றது அங்கு அந்த அழகு பெண்ணை கண்டது என அனைத்தையும் சொல்லி முடித்தான் கார்த்திக்..... 

அனைத்தையும் காபியை குடித்தபடி பொறுமையாய் கேட்ட பாலா

அதான் ஒருமதிரியாவே இருக்கியா..... என கேட்டவன்
சரி அந்த புள்ள எப்படி இருக்கும் என கேட்டான் 

எப்டினா... எனக்கு புரியல மச்சி என பாலாவின் முகத்தை பார்த்தபடி கார்த்திக் சொல்ல

இல்ல மச்சி அழகா இருக்குமானு கேட்டேன் என அவன் சொல்ல

லட்சணமா இருந்துச்சு மச்சி அந்த புள்ள ...
அந்த புள்ளைய பாத்தா நொடி எனக்குள்ள என்னமோ மாதிரி பண்ணுச்சு மச்சி என நேற்றைய நிகழ்வை நினைத்தபடி தன் நெஞ்சின் மேல் கைவைத்து தலையை அசைத்தப்படி சொன்னான் கார்த்திக்.

 இப்படியே நண்பர்கள் இருவரும் பேசியபடி தாங்கள் படிக்கும் டியூஷன் நோக்கி தங்களது சைக்கிள்களில்  பயணமானர்கள்....
Like Reply
#17
கார்த்திக்கின் வீட்டில் இருந்து கிளம்பிய நண்பர்கள் இருவரும் ஒன்னரை கிலோமீட்டெர் தூரம் தள்ளி உள்ள தாங்கள் படிக்கும் வெற்றி டியூஷன் செண்டர் நோக்கி தங்கள் சைக்கிளில் பயணமானர்கள்.........

இவர்கள் படிக்கும் அந்த வெற்றி டியூஷன்தான் அந்த எரியாவிலேயே மிகவும் ப்ரெபலமானது மற்றும் தரமானதும் கூட 
இரண்டு தளங்களை கொண்ட இந்த டியூஷன்னில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பாடங்கள் சொல்லித்தரப்படுகிறது

பள்ளியில் பாடங்கள் நடத்துவது போல இங்கும் தனி தனியே வகுப்புகள் வாரியாக பாடம் எடுக்கப்படுகிறது

இங்கு பயிலும் மாணவர்கள் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமின்றி நமது சமுதாயத்தில் நல்ல மதிப்பெண்கள் என சொல்லப்படும் அந்த மதிப்பெண்களையும் எடுப்பதால் அந்த சுற்று வட்டாரத்தில் உள்ள அதிகப்படியான மாணவர்கள் இங்குதான் டியூஷன் வருகிறார்கள் 

140  மாணவர்களுக்கு மேல் படிக்கும் இரண்டு தளங்களை கொண்ட அந்த டியூஷனின் கீழ்தளத்தில் 9ம் மற்றும் 10ம் வகுப்பினருக்கும் மேல் தளத்தில் 11ம் மற்றும் 12ம் வகுப்பினருக்கும் பாடம் எடுத்து வந்த நிலையில் தற்போது சில வசதிகளுக்காக 10 மற்றும் 12 ம் வகுப்பினருக்கு மேல் தளத்தில் மற்றவர்களுக்கு கீழ் தளத்திலும் வகுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளது

டியூஷன் தொடங்க இன்னும் சில நிமிடங்கள் இருப்பதால் மாணவர்கள் வந்தவாறும் ஒரு சிலர் ஆங்காங்கே நின்று பேசியவாறும் இருந்தனர்......

அவ்வாறு டியூஷனுக்கு வந்த மூன்று தோழிகள் 
மேல் தளத்தில் தங்கள்   வகுப்புக்கு வெெளிய  தடுப்பு  சுவற்றின் மேல் தங்கள் பைகளை கழட்டி வைத்தபடி  சத்தமாக பேசி சிரித்தபடி இருந்தனர்......

அதில் ஒருத்தி சட்டென தனது சிரிப்பை நிறுத்திவிட்டு வியப்பும் சந்தேகமும் கலந்த பார்வையுடன் தடுப்பு சுவரை நெருங்கி கீழே வருபவனையே பார்க்கையில் அவளது கை பட்டு சுவற்றின் மேல் வைத்திருந்த தனது பேக் (bag) கீழே 

அப்போதுதான் தங்கள் சைக்கிளை சைக்கிள் ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு முதல் மாடியில் உள்ள தங்கள் வகுப்பிற்கு செல்ல படி அருகே வந்து கொண்டிருந்த கார்த்திக் பாலவிற்கு ஒரு அடி முன்னாள் விழுந்தது......

தங்கள் முன்னாள் விழுந்த பேக்கை கண்டு திகைத்த நண்பர்கள் இருவரும் தலையை நிமிர்த்தி மேலே மாடியை பார்க்க அங்கே மூன்று பெண்கள் நிற்க அதில் ஓரத்தில் நின்றவள் பையை தள்ளிவிட்ட பதட்டத்தில் பல்லை கடித்தபடி கையை உதரியபடி நின்றாள்....
அவளை கவனித்த கார்த்திக்கின் முகத்தில் புன்னகை மலர அவளையே வெறிக்க இதை உணர்ந்த அவளுக்கு பதட்டம் தணிந்து வேறொரு உணர்வு மேலெழும்ப அவனை பார்க்காது  தனது தோழியின் பின்னால் மறைந்து கொண்டால்.....


அப்போது பாலா திட்டுவதர்காக கையை உயர்த்தி ஏதோ சொல்ல போகையில் அவன் தோள் மேல் கை வைத்து லேசான சிரிப்புடன்  வேணாம் என்பது போல் கார்த்திக்  தலையாட்ட அப்போது மேல் இருந்த பெண்களில் இருவர் 

சாரி தெரியாம என இவர்களை பார்த்து மன்னிப்பாய் சொல்ல.....
பையை (பேக்) தள்ளிவிட்டவள் இவர்களுக்கு பின்னால் மறைத்தபடி நின்றாள்....

அந்த பெண்களுக்கு சரி என்பது போல் தலையசைத்துவிட்டு நண்பர்கள் இருவரும் நகர்ந்தனர்.....

தோழிகளில்  ஒருத்தி
ஏய் பிரியா.... 
என்னடி எதுக்கு திடீர்னு அமைதியான  அப்பறம் கீழ எட்டிபாத்த பேக்க வேற தள்ளிவிட்டுட.... 
என அடுக்கடுக்காய் பேசியபடி போக...
அவளோ சிந்தையை வேறெங்கோ வைத்தபடி ஒன்றும் பேசாமல் நின்றாள்

ஏய் என்னடி நான் கேட்டுட்டு இருக்கேன் பதில் பேசாம நிக்கிற என அவளது தோளை தொட்டு உளுக்கினால் அவள் தோழி ஜனனி....

அதில் தெளிந்தவள் 
ம்ம் ஒண்ணுமில்லடி என சொல்ல....

இனொருவள் அம்மாடி பிரியா நீ தெளிவாதான இருக்க இல்ல ஏதும் ஆயிருச்ச்சா என கேட்க...

ஏய் நான் நல்லாத்தான் இருக்கேன் சரி விலகுங்க நான் போயி என் பேக்க எடுத்துட்டு வந்துறேன் என அவர்களிடம் சொல்லிவிட்டு

இவன் அவன்தானா இல்ல வேறவனா பின்ன எதுக்கு நம்மள அப்டி பாத்தான் என யோசித்தவாறே படிகளில் இறங்கினாள் பிரியா....

பாதி பாடிய ஏறிய கார்த்திக் ஏதோ நினைத்தவன் என்னடா மச்சி என்ற பாலாவுக்கு பதில் சொல்லாமல்  கீழிறங்கி இவன் முன் விழுந்த அந்த பேக்கை எடுத்து கொண்டு மேல் ஏறினான்.....

இவன் விட்டு போன அதே இடத்தில் நின்று கொண்டிருந்த பாலா இவன் பேக்குடன் வந்ததை பார்த்துவிட்டு 
என்னடா என கேள்வியாய் பார்த்தான்.....

அதற்கு அவன் அத்துவந்து மச்சி என ஆரம்பிக்கையிலேயே  கீழ் இறங்கி வரும் ப்ரியாவை பார்த்தவன் அவள் அருகில் செல்ல இன்னும் இரண்டு படிகளில் வேகமாய் தவியேறி ....

பேக்கு... என சொல்லியவாறு அவள் முன் நீட்டி நின்றான் கார்த்திக்

யோசனையுடன் படிகளில் இறங்கியதால் அவன் இவளை பார்த்தது போல் இவள் அவனை கவனிக்கவில்லை....

தன் முன் "பேக்" என சொல்லி அவன் நீட்டிய பின்பே தலையை நிமிர்த்தி பார்த்தவள் அவனை கண்டவுடன் சில நொடிகள் நிற்க..... 
பின்பு சுதாரித்து அவன் நீட்டிய "பேக்கை"  வாங்கியவள் இவன் அவனேதான் என தன்  மனதுடன் பேசியவாரு பேக்கை எடுத்து கொடுத்ததற்கு ஒரு நன்றி கூட சொல்லாமல் விறு விருவென படிகளில் ஏறி தன் வகுப்பிற்க்குள் ஓடினாள்.....

நேற்று போல் இன்றும் படிகளில் அழகாய் விறுவிறுவென ஏறி போனவளை ரசித்தவாறு நின்ற கர்திக்கிடம்.....



டேய் வாடா க்ளாஸ்க்கு போவோம் என தன் நண்பனிடம் சொல்லிவிட்டு  ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம போது அந்த புள்ள அத  நிண்டு பாத்துக்கிருக்கான்
தேவையில்லாம என முனாகியாவாறு படிகளில் ஏறினான் பாலா........

நேற்று கோவிலில் கண்டவளை சில நொடிகளில் தன் இதயம் ஆட்கொண்டவளை இனிமேல் கண்ணில் காண முடியுமா என்றிருந்தவனுக்கு மறுநாளே காட்சி தந்து விட்டால் பெண்னவள்......
அவளை கண்ட இவனுக்கோ உள்ளுக்குள் இனம் புரியா இன்பம் அதை அனுபவித்தப்படியே தன் நண்பனுடன் இணைந்து படிகளில் ஏறினான் கார்த்திக்......

காண முடியுமா என்று எண்ணியதை எளிதில் கண்டாகிவிட்டது......

இனி

கையில்சேருமா..........
Like Reply
#18
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை.உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை. yourock yourock yourock
Like Reply
#19
bro story vera level going. eagerly waiting for next update .pls put two updates weekly
[Image: 7f3eac9b49640ff18c05914fa2810247.png]
Like Reply
#20
Sago semma...........

Ur naration was so good

Keep going
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)