Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery சங்கீத தேவதையின் அரங்கேற்றம்
#1
Story is not written by me thanks to the brilliant author who wrote it.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
எபிசோடு : 1
"அம்மா,.., ஓய்.. அம்மா" என கூவிக்கொண்டு மாந்தாகினி, வீடு முழுக்க அம்மாவை தேடிக்கொண்டிருந்தாள். வீடு முழுக்க மார்பகம் அதிர ஓடினாள்; கல்யாண வயதைத் தொட்டிருந்தாலும், வீடு என்பதால், இன்னும் பாவாடை சட்டையிலேயே இருந்தாள்.
"இங்க தாண்டி இருக்கேன்" அம்மாவின் குரல் ஒலிக்க.,
“எங்கேம்மா?"
மொட்டை மாடியில் இருந்து அம்மாவின் குரல் கேட்க, மாந்தாகினி மூச்சு வாங்க படி ஏறினாள். அவள் அணிந்திருந்த புதிய பிரா அவளின் கன பரிமாணங்களை அடக்க முடியாமல் திணற, மென் மார்பகங்கள் சுதந்திரமாய் ஆட முடியாமல் மேலும் கீழும் போய் வந்ததை முன்னால் வாரி விடப்பட்ட அவளது அடர் கூந்தல் ஓரளவு மறைத்தது. 'திமுதிமு'வென பருத்த அவளின் தொடைகள் மட்டும் அந்த வீட்டின் நடுத்தர நிதி நிலைமைக்குப் பொருந்தாமல் செழித்திருந்தது.
"எங்கெல்லாம் உன்னை தேடறது..? டிரெயினுக்கு டைம் ஆகுதுல்லே?"
அவள் பாவாடை சட்டையில் மூச்சுவாங்க மேலே போய் நிற்க., அந்த சட்டைக்குள் அடங்காமல் திமிறும் அவளின் மார்பு பரிமாணங்கள் அவளின் செழுமையை சொன்னது.
"ஏண்டி எருமை? இருபத்து மூணு வயசாகுது? கல்யாணம் பண்ணா வருஷம் ஒரு புள்ளை பெத்து நிப்பே? என்னடி டிரஸ் இது?.. முதல்ல மேல டவல் போடு"
"போம்மா"
“ஏண்டி? கல்யாண வயசாகுது, ஒரு அடக்கம், ஒடக்கம் வேணா?.. எதுக்கு இப்படி திபு திபுன்னு ஓடிவந்து கத்துற? நீ கத்துறது மதுரை மாநகரம் முழுக்க கேட்கும் போல இருக்கு?"
அம்மாவின் கண்டிப்பை உதாசீனம் செய்தாள். டவல் போட்டு தூக்கி நின்ற பருவ மேடுகளை மறைத்தபடி.,
"அம்மா இங்க பாரு இந்த நோட்ஸ், இதுல இருக்குற கொஸ்டின்ஸ் எல்லாம் கேளு, நான் கரெக்டா பதில் சொல்றேனான்னு பாரு”
"கீழ போடி வரேன்"
"அம்மா., இப்பவே ரொம்ப டைம் ஆயிடுச்சு, எனக்கு மதியானம் பஸ். நைட்டுக்குள்ள மார்த்தாண்டம் போயாகணும். நாளைக்கு காலையில இன்டர்வியூ, அதுக்குள்ள நான் பக்காவா தயாராக இருக்கணும்"
“நீ ரெடி ஆகு, என்னைப் போட்டு ஏன்டி படுத்தறே?”
"அம்மா வேதா வள்ளி, இது சாதாரண இன்டர்வியூ இல்ல"
"ஆமாண்டி., பொல்லாத இன்டர்வியூ. உனக்கு என்ன தெரியுமோ அந்த லைன்லயே முயற்சி பண்ணா நீ பெரிய ஆளா ஆகலாம். உனக்கு மார்க்கெட்டிங் நல்லா வரும், வாய் கிழிய பேசுவே. அதை விட்டுட்டு எவளோ ஒருத்திக்கு பி.ஏ ஆவுறது எல்லாம் நீ படிச்ச படிப்புக்கும் உன்னுடைய குணத்துக்கும் ஒத்து வருமா?"
“அய்யோ ஆரம்பிச்சிட்டியா”
“நானும் பல தடவை சொல்லிட்டேன், நீ கேக்குறாப் போல இல்ல. எவளோ ஒருத்திக்கு அஸிடென்ட்டா போறியேடி”
"என்னம்மா சாதாரணமா எவளோ ஒருத்தின்னு சொல்லிட்ட? எவளோ ஒருத்தி இல்ல., தி கிரேட் கர்நாடிக் சிங்கர் வைஷ்ணவி பாலகிருஷ்ணன். சௌத் தமிழ்நாடு வாய்ஸ் ஏஞ்சல் வைஷ்ணவி. அவங்களுக்கு பி.ஏவா இருக்கிறதுன்னா, சும்மாவா?"
“அதுக்கு யாராச்சும் முப்பதாயிரம் ரூவா சம்பளத்தை விட்டு போவாங்களா?”
"இங்க அதுக்கு மேலயும் வரும், வராட்டியும் போலாம். நான் படிச்ச பி.ஏ கார்ப்பரேட் செகரட்டரிஷிப் எதுக்கு உதவுச்சோ இல்லையோ? இப்போ இந்த மேடத்துக்கு உதவுச்சின்னு நான் சந்தோஷப்படுகிறேன்."
"அடி போடி பி.ஏ என்ன எடுபுடி தானே? தண்ணி குடுக்கறது, டவல் துடைக்கறது, பின்னாடியே பையை தூக்கிட்டு போகனும்லே?”
“அப்படியெல்லாம் பேசாதம்மா. அவங்க கூட இருக்கிறது, அவங்க நிழல்ல இருக்கிறதே எனக்கு பெரிய கொடுப்பினை. என் லைஃப்ல அது கிடைச்சாவே போதும். காலம் முழுக்க கூட அவங்க கூடயே நான் இருந்துடுவேன்."
“ஏண்டி ஒரு பக்கம் பி.ஏ இந்தியன் மியூசிக் படிச்ச நீ, கடைசியில பி.ஏ வா வேலை செய்யறது தான் இவ்வளவு படிப்பும்மா?”
“அம்மா., நாயனக்காரன் மாதவன் பொண்ணு. என்னதான் எனக்கும் கர்நாடக சங்கீதம் வரும்னாலும் வைஷ்ணவி மேடம் அளவுக்கு எல்லாம் நம்மளால ஆக முடியுமா? அதெல்லாம் அவங்க ரத்தத்திலேயே இருக்குமா. அவங்க எல்லாம் லட்சத்துல இல்ல கோடில ஒருத்தி. அவங்க குரல் பாவம் சாரீரம்., யாருக்குமே கிடைக்காத ஒரு வரம். எனக்கு மட்டும் இந்த பி.ஏ வேலை கிடைச்சா போதும், நான் கர்நாடிக் மியூசிக் பத்தி இன்னும் ரொம்ப கத்துப்பேன். சொன்னாக் கேளும்மா“
“கேக்கமாட்டேன்மா"
"கேளுமா ப்ளீஸ்"
"ஏய்ய்.. நீ தாராளமா அவகிட்ட வேலைக்கு போ. எடுபுடி வேலை செய். ஆனா மூணு வருஷம் கழிச்சு திரும்பி வந்துடனும். நான் காட்ற மாப்பிள்ளைய கட்டிக்கணும்."
"அதெல்லாம் கட்டிக்கலாம்., கட்டிக்கலாம்.,"
"என் அண்ணன் பையன் சாம்பு,, கேட்டரிங்க் சொந்தமா எடுத்து நடத்தறான்..:"
"அம்மா ப்ளீஸ் எனக்கு இந்த சாம்பு, வேம்பு, கொத்தவரங்கா., முட்டை கோஸ்லாம் வேணாம்மா"
"ஏய்ய்ய்ய்"
"முதல்ல இந்த கொஸ்டின்ஸ் எல்லாம் என்னை கேளும்மா”
"என்னடி இது கொஸ்டின்ஸ் வசவசன்னு?"
"கர்நாடக சங்கீதம் பத்தி சில பேசிக்ஸ் கேள்விங்க.. கொஞ்சம் எங்க மேடத்தை பத்தியும் இருக்கு”
"ஓ அதுக்குள்ளே உங்க மேடம் ஆகிட்டாங்களா? எங்க காட்டு"
அவள் வைத்திருந்த பேப்பர் கட்டுகளை அம்மா வாங்கி பார்த்தாள். அம்மா சங்கீதத்தில் கரை கண்டவள் இல்லை, ஆனால், ஞானசூன்யமுமில்லை.
"கர்நாடக சங்கீதத்தில் எத்தனை ராகம் இருக்கு?" அம்மா கேட்க, மாந்தாகினி சொன்னாள்.
"புன்னாகவராளி ராகத்தில் ஒரு பாட்டு சொல்லு" மாந்தாகினி பாட, கண்ணை மூடி தன் மகள் பாடுவதை கேட்க அம்மாவுக்கு பரவசமாக இருந்தது.
"அம்மா இந்தப் சாங்க்ஸ்லாம் பாடும்மா. நான் டக்குன்னு ராகம் சொல்லிடுவேன்”.
“அடிபோடி! எனக்கு வேலை நிறைய இருக்கு. நீ வேற கிளம்புறங்கிறே”
"அம்மா ப்ளீஸ்.. உன் ஒத்த பொண்ணுக்கு சித்த வேலை செய்ய மாட்டியா? அம்மா”
"நூறு நூத்தம்பது பாட்டு இருக்கேடி,”
"சரி ரேண்டமா கேளு. எந்த ஆர்டர் வேணுமுன்னாலும் கேளு. நான் ராகம் சொல்றேன்"
"ரொம்பத்தான். சரி, எனக்கு பிடிச்ச பாட்டு மட்டும் கேக்குறேன் சரியா?"
"ம்ம்ம்.. கேளும்மா"
அம்மா ஒரு பழைய பாட்டை பாட., "கிருஷ்ணா முகுந்தா,"
"நவ்ரோஜ்"
"மன்மத லீலையை வென்றாருண்டோ,"
"சாருகேசி"
அம்மா ராகமெடுத்து பாட., "சிந்தனை செய் மனமே,"
"கல்யாணி ம்மா"
"மாசிலா நிலவே,"
"மண்டு"
"ஏய்ய்ய் என்னடி வாய் நீளுது?"
"ராகம் பேரும்மா"
"ஏய்ய் அது மாண்டு டி"
"..சாரி.. மாண்டு"
"செந்தமிழ்த் தேன்மொழியாள்,"
"பீலு"
"வசந்த முல்லை போல அசைந்து ஆடும் வெண்புறாவே,"
"சாரங்கதாரா.."
"கரெக்ட்"
"உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்கா,தென்ப,..து"
"ரொம்ப இழுக்காத, ஆஹிரி பைரவி"
"ஒரு நாள் போதுமா? நான் பாட இன்னொரு நாள் போதுமா?"
"போதாது தான். அது ராகமாலிகை"
"பாட்டும் நானே பாவமும் நானே"
"கௌரி மனோகரி"
"நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே,"
அம்மா விரல்களை குவிக்க., "இரு இரு கொத்தாதே.. ம்ம்ம் அது புன்னாகவராளி ராகம்மா"
"என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்"
"சிந்துபைரவி"
"பேசுவது கிளியா?"
"சாருகேசி.."
"மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன?"
"சண்முகப்ரியா"
"நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன்?"
"பஹாடி"
"பதினாறு உருவன வரலாறு"
"ஆபேரி"
"எல்லாமே சரியா சொல்றேடி.. ராகங்கள்"
"எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டுடி, இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ,"
"பிருந்தாவன சாரங்கா"
"இது ஒரு பொன்மாலைப் பொழுது,"
"கேதாரம்"
"பாடறியேன் படிப்பறியேன்,"
"அதெல்லாம் ஈஸிம்மா.. சாருமதி"
"வான் போலே வண்ணம் கொண்டு பூபாலனே,"
"மோகனம்"
"குடகு மலை காற்று வரும் பாட்டு கேக்குதா?"
"சிவரஞ்சனி ஈஈஈஈ"
"போவோமா ஊர்கோலம்,"
"கீரவாணி"
"இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே"
"ஆபோகி"
"தூங்காத கண்கள் ரெண்டு,"
"அமிர்த வர்ஷினி"
"நஞ்சை உண்டு புஞ்சை உண்டு பொங்கு வரும் கங்கை உண்டு"
"சுத்த தன்யாசி"
"சங்கீத தேவதையின் அரங்கேற்றம்., காணாத உன்னை தேடுதே"
"கீரவாணி"
"சரி ரஹ்மான் பாட்டு சொல்லு., பாப்போம்.. காதல் ரோஜாவே எங்கே., நீ எங்கே?"
"காப்பி" குரல் கேட்டு திரும்பினார்கள்.
"ஏய்ய் அப்பாவுக்கு கூட தெரியுதுடி பாரேன்.. எனக்கு காப்பி கேட்டேன்" அப்பா.
"நீ வேறடி இது காப்பி ராகமுனு.." மாதவன் சிரித்தார்.
"யப்பா கொஞ்ச நேரம் இரேன்.. அம்மா நீ கேளேன்"
"போடி எனக்கு நிறைய வேலை இருக்கு.. அப்பா வேற வந்துட்டார்"
"எங்கனாச்சு.. நான் இன்டர்வியூவில பாஸ் ஆகனுமுன்னு உனக்கு அக்கறை இருக்கா,?"
"சரிடி.. கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா”
"கானடா"
"கொஞ்ச நாள் பொறு தலைவா"
"ஆனந்த பைரவி"
"டிங் டாங் கோயில் மணி கோயில் மணி"
"ரசிகப்ரியா"
"உருகுதே உருகுதே,"
"காப்பி" அப்பா குறுக்கில் சொல்ல.,
"அப்பா நீ சும்மா இருப்பா, காபி., காபின்னு கூவாதே,"
"ஏய்ய் அது உண்மையாவே காப்பி ராகம்டி"
"ஓ அதை சொல்றியா?"
"ஏய் இந்த பாட்டை சொல்லு பாப்போம், பேசும் வார்த்தைகள் புரிவதில்லை," அம்மா ஆரம்பிக்க,
"கீரவாணி, கரெக்டா நாயனம்?"
அப்பா மாதவன் அந்த காலத்து நாயன வித்துவான். கச்சேரிகளில் தனி ஆவர்த்தனம் எல்லாம் செய்திருக்கிறார். ஆனால் ஆஸ்துமா பிரச்சனை காரணமாக நாயனத்தை தூக்கி போட்டு விட்டு ஏடிஎம் வாசலில் செக்யூரிட்டியாக உட்கார்ந்துவிட்டார். ஒரு சங்கீத வித்துவானை, கலா ரசிகரை பேங்கின் வாசலில் காவலுக்கு வைத்துவிட்டது தான் அவருக்கு கிடைத்த அதிகபட்ச அங்கீகாரம்.
மனைவி வேதா வள்ளிக்கு ஓரளவு பாட்டு வரும். இந்த ரெண்டு பேரின் பாதிப்பு மாந்தாகினியையும் தொற்ற., அப்பா தான் அப்போதே தடுத்து விட்டார்.
"பாட்டெல்லாம் சோறு போடாது மாந்தாகினி நீ சி.ஏ படி, 2030 ல இண்டியால 15 லட்சம் சி.ஏ வேணுமாம்"
"15 லட்சத்துல நான் ஒன்னு குறைஞ்சா என்னப்பா கஷ்டம்? நான் பாட்டு சொல்லிக்கறேன்"
மாந்தாகினி கேட்கவே இல்லை அவளுக்கு பாட்டு தான் உயிர். மதுரையில் இருந்த சுமாரான வித்துவான்களிடம் பாட்டு கற்றாள். அப்பா சொன்னதற்காக பி.ஏ கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் படித்தாள். தன் ஆசைக்காக பி.ஏ இந்தியன் மியூசிக் படித்தாள்.
படிப்பு முடித்து ஒரு மார்க்கெட்டிங்க் ஆபீசில் வேலை கிடைக்க, 'அடச்சீ நான் ஒரு மார்க்கெட்டிங்க் செய்யும் சாதாரண பெண்ணாக?' என்றாலும், அவள் ஒரு ஆண்டாய் அங்கு தான் சலித்துக் கொண்டு வேலை செய்தாள். இப்போது தான் ஒரு விமோசனம் வந்திருக்கிறது. பாடகி வைஷ்ணவி வடிவில், மேடம் அவர்களிடம் மட்டும் போய் சேர்ந்துவிட்டால் போதும். அவள் உள்ளம் குதித்தது.
"சரி.. வைஷ்ணவி மேடம் பத்தி கேளும்மா”
"வைஷ்ணவி மேடம் முழுப்பேரு..?"
"வைஷ்ணவி பாலகிருஷ்ணன்”
“எத்தினி வயசுல பாட ஆரம்பிச்சாங்க?”
"ம்ம் ஒன்பது வயசு”
“எத்தனை கிராமிய அவார்டு வாங்கி இருக்காங்க?"
“..பதினேழு”
“எத்தனி சினிமா பாட்டு பாடி இருக்காங்க?"
“ஒன்னே ஒன்னு"
“என்ன அது?"
மாந்தாகினி பாடிக் காட்டினாள். “வைஷ்ணவி மேடத்துக்கு புடிச்ச ராகம். அமிர்தவர்ஷினி..” அவள் பாட.,
"ஏய்ய் அதை பாடுனா மழை வரும்னு சொல்வாங்க.. இப்ப தான் துணியை காய வெச்சேன். மழை வரப்போவுது”
“அம்மாவா நீ?'' வைஷ்ணவி அடிக்க, வேதா வள்ளி பிளாஸ்டிக் பக்கெட்டை எடுத்துக் கொண்டு திரும்ப மொத்தினாள்.,
மாந்தாகினியின் தந்தை நாயனகாரர் மாதவன் சிரித்தார். பாய்., மாந்தாகினிக்கு இந்த வேலை கிடைக்க வேண்டும். மகள் நல்லாவே பாடுகிறாள். தன் வயிற்றில் பிறந்த ஒரே ஒரு குழந்தை மாந்தாகினி. அந்த குழந்தைக்கு இயற்கையாகவே அமைந்த கர்நாடக சங்கீத ஞானம் அவளை பாட்டு பாட அழைக்கிறது. மாந்தாகினிக்கு தேனில் ஊறிய பழம் போல ஒரு அற்புதமான குரல். ஆனால், இதைவிட நூறு மடங்கு சிறந்த குரல் வளம் அந்த வைஷ்ணவி பாலகிருஷ்ணனுக்கு. இளமை துடிப்பாக இருக்கிறது. அவளுக்கு மணமாகவில்லை அல்லது அது பற்றி சரியாக வெளியே தெரியவில்லை. இங்கே குரலே முக்கியம். அவரும் பலமுறை அந்த குரலை கேட்டு இருக்கிறார்.
ஆனாலும் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு அல்லவா? அதுவும் மாந்தாகினி, குயில் குஞ்சு அல்லவா?
"வைஷ்ணவி எத்தன மேடைக் கச்சேரி பண்ணி இருக்காங்க?"
“அறுனூத்தி முப்பதும்மா”
"அவங்க பிறந்த ஊர் எது?"
"மார்த்தாண்டம்"
"பாலகிருஷ்ணன்றது யாரு?"
"அவங்க அப்பா”
இன்னும் நிறைய கேள்விகள் அதில் இருந்தன. அதெல்லாம் ஒரு தகவலாக அம்மா கேட்டுக் கொண்டிருந்தாள். ஆனால், மாந்தாகினியோ அதற்கான பதில்களை எல்லாம் ஆத்மார்த்தமாக அனுபவித்து சொல்லிக் கொண்டிருந்தாள். தனது மகளுக்கு அந்த பாடகி மீது எத்தனை காதல் இருக்கிறது? எத்தனை பக்தி இருக்கிறது? என ஒரு நிமிடம் வியந்து போனார் மாதவன்.
இனி இவளை அந்த வேலைக்கு மார்த்தாண்டத்துக்கு அனுப்ப முடியாது என சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. வைஷ்ணவியிடமிருந்து, "கர்நாடக சங்கீத ஞானமுள்ள ஒரு பெண் உதவியாள் தேவை" என விளம்பரம் வந்ததிலிருந்து ஒரு வாரமாக அவளிடமும் அப்பாவிடமும் தொடர்ந்து கெஞ்சி கெஞ்சி சண்டை போட்டு கடைசியில் மார்த்தாண்டம் போக அனுமதி வாங்கி விட்டாள்.
"அம்மா வைஷ்ணவி மேடம் பாட்டு கேட்கிறது எனக்கு ரொம்ப புடிச்ச வேலை. அந்த வேலையை செய்றதுக்கு சம்பளம் தர்றாங்க அப்படின்னா அதைவிட நல்ல வேலை எனக்கு கிடைக்குமா?"
“அதுசரி”
"அது மட்டுமில்ல., அவங்க கூட இருந்தா நானும் இன்னும் மியூசிக் அதிகமா கத்துக்கலாம். அது என் கேரியருக்கு ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருக்கும். தயவு செஞ்சு நான் சொல்றதை கேளும்மா”
"தனியா எப்படி அவ்ளோ தூரம் அனுப்பறது உன்னை? தங்கற இடம் சேப்டியா?"
“அம்மா முதல்ல வேலை கிடைக்கட்டும். மார்த்தாண்டம் இங்கேயிருந்து 270 கிலோ மீட்டர் தான்.. என்னை பாக்கனுமின்னா அஞ்சு அவர்ல நீ மதுரையிலருந்து வந்துடலாம். ஒன்ஸ் நீ வா.. இல்ல நான் வரேன்.."
எப்படியோ பேசி அப்பா அம்மாவை சம்மதிக்க வைத்து விட்டாள். துணி மணி பேக்கிங்க் செய்து மார்த்தாண்டம் பஸ் பிடித்து தனியாகவே கிளம்ப., மணி மூன்று., வழிப்பயணத்தில் மாந்தாகினி நிறைய கர்னாடக சங்கீத நுணுக்கங்களை நெட்டுரு போட்டுக் கொண்டே போனாள்.
இரவு போய் மார்த்தாண்டத்தில் டவுனில் இறங்கினாள். அங்கிருந்த ஒரு நல்ல ஹோட்டலில் தங்கி விட்டு மறுநாள் காலையில் உள்ளே 'தேன்கடையூர்' என்னும் சிற்றூரில் வைஷ்ணவியின் வீட்டு விலாசத்தை கண்டுபிடித்து போய் இறங்கினாள்.
உள்ளே நுழையப் போன அவளுக்கு தலையே சுற்றியது. வைஷ்ணவி வீட்டு ஹாலில் கூட்டம் நிரம்பி அதற்கு கீழே போர்டிகோ கார்டன் எல்லாம் ஆட்கள் புல் தரையில் உட்கார்ந்து கொண்டு திருவையாறு கச்சேரி போல கும்பல் கும்பலாய் பாடிக் கொண்டிருந்தார்கள்.
"என்னை என்ன செய்தாய் வெண்குழலி,..ஆஆ" யாரைப்பாத்தாலும் கர்னாடக இசையை பீறிட்டுக்கொண்டிருந்தார்கள். தப்பி தவறி திருவையாறு வந்து விட்டோமா? என்பது போல கர்நாடக சங்கீத பாடல்கள் கோரசாய் சுதி சுத்தமாய் ஒலித்துக் கொண்டிருந்தன.
எப்படியும் அறுபது பேராவது இருப்பார்கள். மை காட்! அம்மா வேதா வள்ளி என்ன இது சோதனை?. திரும்ப மதுரை போய்விடலாமா? என யோசித்தாள் மாந்தாகினி.
Like Reply
#3
எபிசோடு : 2
மாந்தாகினி மட்டும் தான் தமிழ்நாட்டில் கர்நாடக சங்கீதம் கற்றவளா? ஆயிரக்கணக்கில் இருந்தார்கள். அதுவும் பிரபல பாடகி வைஷ்ணவிக்கு உதவியாளர் என்றால் நல்ல சம்பளம், நல்ல சலுகைகள் கிடைக்குமே.,
இவள் உள்ளே நுழைந்ததும் வாசல் கேட் சாத்தப்பட்டது.
"நைன் தெர்டி குளோஸ். யாரையும் உள்ளே அலவ் பண்ணாதீங்க” யாரோ சொன்னார்கள்.
சரி தான் இது வேறயா? உள்ளே பட்டுப் புடவைகள், ஐயர், அய்யங்கராத்து மாமிகள், சிறுமிகள், இளம்பெண்கள்., கும்பல் கும்பலாக பாட்டு, கீர்த்தனைகள், மடி தட்டும் சத்தங்கள். கடவுளே பி.ஏ வேலைக்கு கூட போட்டியா?, இந்தம்மா விளம்பரத்தை சன் டிவியில் போட்டுச்சா? இல்ல, விஜய் டிவில போட்டுச்சா?
ஆங்காங்கே., பெண்கள் ரவுண்டாக உட்கார்ந்து கொண்டு கீர்த்தனை பாடலை பாடிக் கொண்டிருந்தார்கள்.. கிட்டத்தட்ட எல்லாருக்குமே குரல் வளம் நன்றாக இருந்ததாக தோன்றியது மாந்தாகினிக்கு.
எப்படியும் எழுபது எண்பது பேருக்கு மேல் இருப்பார்கள் போல, இது தேறாது. வேலைக்கு ஆகாது. டைம் தான் வேஸ்ட். நல்ல வேளை அந்த மார்கெட்டிங்க் ஆபீசில் வேலையை ராஜினாமா செய்து கொடுத்துவிடவில்லை. லீவ் தான் போட்டிருக்கிறோம். கிளம்பலாம். ரீ-ஜாயின் பண்ணலாம்.
காலையில் சாப்பிடாமல் வந்தது அவளுக்கு நினைவுக்கு வந்தது. "ஹோட்டல் எங்கே இருக்கிறது?" என விசாரித்து சாப்பிட்டு வந்து பார்க்கலாம். அப்பவும் கூட்டம் எப்படி அலைமோதினால், பேசாமல் ஊருக்கு போய்விடலாம். வைஷ்ணவி மேடத்தை கிட்டக்க உக்காந்து பாக்கலாம். ஒரு செல்பி.. ஒரு ஆட்டோகிராப். போதும்., அவள் சோம்பல் முறித்தாள்.
என்ன செய்வது? இந்த வேலைக்கு சேரலாம் என ஆரம்பித்த போதே வீடு எதிர்த்தது. இப்போது அவர்கள் எண்ணத்திற்கு ஏற்றபடி தான் எல்லாம் நடக்கிறது. அவள் அலுப்பாக எழ,
"மேடம் காப்பி" என ஒரு இளைஞன் காப்பி தட்டில் காப்பியை கொடுக்க, அவன் அணிந்த ஒயிட் அண்ட் ஒயிட் டிரெஸ்ஸை பார்த்த உடனேயே அவன் அந்த வீட்டின் டிரைவராக இருக்க வேண்டும் என நினைத்தாள்.
"ரொம்ப தேங்க்ஸ்ங்க.. ஆனா நான் பிரேக் பாஸ்ட் சாப்பிடல., போய் சாப்பிட்டு வந்துடறேன்" என மாந்தாகினி சொல்ல,
"ஏன் மேடம் வெளியே போய் சாப்பிடுறீங்க? நீங்க இங்கேயே சாப்பிடலாம். எல்லாரும் வந்த உடனே சாப்பிட சொல்லி இருப்பாங்களே. கிரிஜா.. ஏ கிரிஜா" என அவன் உள்ளே பார்த்து குரல் கொடுத்தான்.
"இல்ல இல்ல பரவால்ல உங்களுக்கு ஏன் சிரமம். நான் வெளியே சாப்பிட்டுகிறேன்"
“அய்யோ என்ன மேடம் சொல்றீங்க? நீங்க சாப்பிடணும்னா மூணு கிலோ மீட்டர் போகணும். மெயின் டவுன்லதான் நல்ல ஹோட்டல் இருக்கும். அதனால தான் வைஷ்ணவி மேடம் இண்டர்வியூ வர்றவங்களுக்கு டிபன், சாப்பாடு ரெடியா இருக்கணும்னு சொல்லி இருக்காங்க.”
"ஓ அப்படியா? வெரி நைஸ்." அவள் ஆச்சரியப்பட்டாள்.
"சாப்பாடு மட்டும் இல்ல நீங்க போறப்ப கவரில் வரப்போற டிக்கெட் செலவு, வழிச் செலவுக்கு எல்லாம் சேர்த்து 2000 ரூபாய் கூட கொடுத்துடுவாங்க"
"அடேங்கப்பா தட்ஸ் கிரேட்.”
"ஆனால் கேண்டிடேட்ஸ்க்கு மட்டும்தான் காசு. கூட வரவங்களுக்கு எல்லாம் கிடையாது. கூட பாருங்க ஒரு கேண்டிடேட் அப்படின்னா ரெண்டு மூணு பேரு கூட வந்திருக்காங்க”
"ஓ அப்படியா? நான் கூட எல்லோரும் கேண்டிடேட்ஸ் என்று நினைச்சுட்டேன்”
"எப்படிங்க மேடம்? நீங்க மட்டும் தான் தனியா வந்து இருக்காங்க. உங்களை போல சில பேரு மட்டும் தான் தனியா வந்து இருக்காங்க. ஆனா ரொம்ப பேரு பேரன்ட்ஸோட, சிஸ்டர்ஸோட, ஃப்ரெண்ட்ஸோட வந்திருக்காங்க..”
"ஓ. மொத்தம் எத்தினி பேரு மிஸ்டர்..?" என அவள் இழுக்க.,
"சுரேஷ்ன்னு சொல்லுங்க, என் பேரு சுரேஷ்."
"அதான் எத்தினி பேரு?"
“கேண்டிடேட்ஸ் மட்டும் பாத்தீங்கன்னா 33 அப்ளிகேஷன் வந்து இருக்கு, உங்களை சேர்த்து 34”
"சரி இதெல்லாம் பார்த்து முடிக்க எவ்வளவு நேரம் ஆகும்? ரொம்ப பேரு வந்து போயிட்டாங்க., எனக்கு தெரிஞ்சி பன்னெண்டு மணிக்குள்ள எல்லாரையும் பார்த்து முடிச்சிடுவாங்க., போறப்போ சாப்பிட்டும் போலாம்" அவன் சிரித்தபடி சொல்லிக்கொண்டே அடுத்த ஆளிடம் போனான்.
"லஞ்சா..?"
"ம்ம் ஆனா சாப்பாடு கேண்டிடேட்ஸ்க்கு மட்டும் இல்ல கூட வரவங்களுக்கும் உண்டு"
வைஷ்ணவியின் தயாள குணத்தை கேட்டு, மாந்தாகினி நெகிழ்ந்து போனாள். வாரி கொடுக்கும் கரங்களுக்கு தான் எல்லா செல்வமும் இறைவன் அருளுவான் போல.
“சுரேஷ் சார்" கைதட்டி அழைத்தாள்.
"சார்லாம் வேணாம். சுரேஷ்ன்னு கூப்பிடுங்க போதும்., சொல்லுங்க”
"சரி சுரேஷ், இப்போ இவ்ளோ பேர் இருக்காங்களே? இதுல வைஷ்ணவி அம்மா எந்த பேஸ்ல ஆள செலக்ட் பண்ணுவாங்க?” அவன் சிரித்தான்.
"எக்ஸாம் கொஸ்டின் பேப்பர் கேக்குறீங்க இல்ல?"
"ஐய்யையோ அப்படி இல்ல. அவங்களுக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சா அதுக்கு ஏற்றாப்போல நடந்துக்கலாம் இல்லையா?"
"அதெல்லாம் இல்லமா., நீங்க நீங்களாவே இருக்கணும். அதை விட்டுட்டு வந்த உடனே, மேடம் கிட்ட 'உங்களை ரொம்ப பிடிக்கும், உங்க பாட்டை கேட்காம தூங்க மாட்டேன், உங்கள் மாதிரி ஒரு அபூர்வமான பெண்மணி கூட வேலை செய்றதே பெரிய விஷயம்' அப்படின்னு சொல்றவங்களை எல்லாம் அவங்க ரிஜெக்ட் பண்ணாம என்ன பண்ணுவாங்க?"
“அப்படியா?” மாந்தாகினி யோசித்தாள்.
"காலைல எட்டு மணியிலயிருந்து இந்த கூத்து தான் நடக்குது. மேடத்துக்கு என்ன வயசு? எப்ப பாட ஆரம்பிச்சாங்க, எத்தினி கச்சேரி, எவ்ளோ அவார்டுன்னு? என்ன ராகம் புடிக்கும், என்ன பாட்டு புடிக்கும்னு.. ஒரு பொண்ணு தோ அங்க பாருங்க கம்ப்யூட்டர் பாத்து மனப்பாடம் பண்ணுதுங்க”
மாந்தாகினி திகைத்தபடி எட்டிபார்க்க., அங்கே கூகுள், விக்கிபீடியாவை பார்த்து மூளையில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள் சில இளம்பெண்கள்.
"அவங்க கிட்ட போய், ஏன் அவங்களை பத்தி சொல்லனுமின்னு விவஸ்தையே இல்லை போங்க” சுரேஷ் சொல்ல., மாந்தாகினிக்கு வெட்கமாக இருந்தது. நல்ல வேளை, நாம் செய்ய இருந்ததை எல்லாம் சுரேஷ் முன்னாடியே சொல்லி விட்டான்.
"அது மட்டும் இல்லைங்க. ரொம்ப பேர் வந்து உட்கார்ந்த உடனேயே கர்நாடக சங்கீத பாடல் பாட ஆரம்பிச்சுடுறாங்க. இங்க என்ன சூப்பர் சிங்கர் போட்டியா நடக்குது? இதுல 'மேடம் மேடம் உங்க கூட ஒரு செல்பி'ன்னு வந்து உக்காந்துக்கறாங்க.. அம்மாடி அடக் கடவுளேன்னு தலையில அடிச்சிக்கிறாங்க"
மாந்தாகினி அதிர்ந்து போக.,
"அவங்களை என்ன பாட்டு போட்டிக்காக கூப்பிட்டாங்க? இல்ல இங்க பாடகியர் தேர்வா நடக்குது? ஒரு பி.ஏக்கு என்னென்ன அடிப்படை வேலைங்க இருக்கும்? வைஷ்ணவி மேடம் மாதிரி இருக்குற ஒரு வி.ஐ.பிக்கு என்னென்ன பிரச்சனை வரும் அப்படின்னு தெரிஞ்சுகிட்டு அதை ஒரு உதவியாளர்,” என அவன் சொல்லி அப்படியே நிறுத்தினான்.
"எல்லாத்தையும் நான் சொல்லிடுவேனா? நீங்களா திங்க் பண்ண மாட்டீங்களா? நீங்க எதாச்சும் கொஞ்சம் யோசிங்க”
"ஏய்ய் இருப்பா ஏய்ய்ய் சுரேஷ்" கூப்பிட கூப்பிட அவன் போய் விட்டான்.
சரி இது போதும் நண்பனே! நல்ல வேளை என்னை காப்பாற்றினாய் சுரேஷ். உஷாராகி விட்டேன்.. அதானே., கொல்லன் தெருவில் ஊசியை விற்க முடியுமா? இவர்களுக்கு பி.ஏ தான் தேவை, போட்டி பாடகி தேவையில்லை. ஓகே, என்ன மாதிரி பந்து போடுவார்கள் என தெரிந்து விட்டது. இப்ப பார் என் ஆட்டத்தை! அவள் எல்லா குறிப்பு புத்தகங்களையும் தூக்கி தூரப் போட்டாள்.
அவன் போய்விட, கிரிஜா என ஒரு பெண் வந்தாள். அவள் அந்த வீட்டு வேலைக்காரியோ அல்லது சமையல்காரியோ. ஆனால் படு நீட்டாக டிரஸ் செய்து இருந்தாள். அவள் அணிந்திருந்த காட்டன் புடவையும் தலையை வாரி இருந்த விதமும் அந்த வீட்டின் செழிப்பை சொன்னது.
வேலைக்காரியே இப்படின்னா., வீட்டுக்காரி?
கிரிஜா கூந்தலை கொண்டையாக போடாமல் வாரி விட்டிருக்க, குண்டி பருவ மேடுகளில் படர்ந்து கிடந்தது. அவளுக்கு பக்கவாட்டில் மார்பு கூம்புகள் திண்மையாக புடைத்து இருந்தது. சுற்றிலும் பெரும்பாலும் பெண்களே இருந்ததால், லோ ஹிப் அல்லது பக்கவாட்டு மார்பு கணங்கள் தெரிவது குறித்து அவள் கவலைப்படவில்லை.
அவள் மாந்தாகினியிடம் மிகவும் பணிவாக பேசினாள்.
"நீங்க சாப்பிடலன்னு சுரேஷ் சொன்னாப்ல. நீங்க டிபன் சாப்பிட்டு வந்துடறீங்களா? உள்ள கூப்பிட லேட் ஆகும்" என்றாள்.
இதற்கு மேலும் நாம் பிகு செய்தால் கடும் பசியுடனே வைஷ்ணவியை சந்திக்க வேண்டி இருக்கும். வைஷ்ணவியை அப்படி எல்லாம் சந்திக்கக் கூடாது. வயிறு நிறைவாக, மனது நிறைவாக இருக்க வேண்டும் என யோசித்தாள்.
"சரி சாப்பிடறேன்” என்றாள்.
வீட்டிற்கு பின்னால் தோட்டத்தில் ஷாமியானா பந்தல் ஒன்று போடப்பட்டிருக்க, அங்கு ஏழு எட்டு பேர் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அங்கேயும் பல குரூப்களின் கர்னாடக பாடல் தான் ஓடிக் கொண்டிருந்தது.
"கமலம் ம்ம்ம் பாத.. கமல ,,,,,. அய்யோ தாங்க முடியலடா சாமி,"
வீடு மிக பிரம்மாண்டமாக இருந்தது. பழமையும் நவீனமும் கலந்து அந்த வீட்டின் வெளிப்புறம் படு சுத்தமாக இருந்தது. எப்படியும் ஒரு ஏக்கரில் நட்ட நடுவில் அந்த பங்களா இருந்தது. பங்களா பின்னால் புறாக் கூண்டு போல அல்லாமல் விஸ்தாரமான அவுட் ஹவுஸ். செக்யூரிட்டி, டிரைவர்லாம் தங்கும் இடம் போல. இதெல்லாம் வைஷ்ணவி சம்பாதித்து வாங்கியதா? இல்லை அப்பாவின் சொத்தா? தெரியவில்லை.
ஆண்டுக்கு ஒரு முறை தவறாமல் வெள்ளை அடிப்பார்கள் போல வெள்ளை வெளேரேன பங்களா ஜொலித்தது.
பத்தியில் சிற்றுண்டி வாசனை மூக்கை துளைத்தது. இது ஒரு முற்றிலும் புதிய அனுபவம் என்பது போல அவள் நினைத்தாள்.
வெண் பொங்கல், கொஜ்ஜி, இட்லி, வடகறி, சட்னி என அளவாக டிபன் பரிமாறப்பட்டது. ரத்னா கபே பொங்கலை விட பல மடங்கு சுவையான நெய் வழியும் பொங்கலாய் அது இருந்தது. அதனுடன் இட்லியும் சாப்பிட்டுவிட்டு நுனி நாக்கில் லேசாக கசக்கும் ஒரு சூப்பர் காப்பியை குடித்துவிட்டு தோட்டத்தில் சிறிது நேரம் நடந்தாள். இரண்டு மூன்று முறை ஏப்பம் வந்தது.
யப்பா, இந்த டிபனுக்கே சும்மா வேலை செய்யலாம்!
அவள் முன்னால் வந்து பார்த்தால் கூட்டம் பாதியாக குறைந்திருந்தது. அவள் கண்கள் கிரிஜாவையோ அல்லது சுரேஷையோ தேடின. இருவருமே காணவில்லை. அவள் நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
வைஷ்ணவி மேடத்துக்கு போட்டி பாடகி தேவையில்லை, அப்ப ஏன் கர்நாடக இசை ஞானம் மஸ்ட்? ஏனென்றால் அந்தம்மாவுக்கு தோழி வேண்டும். யெஸ், வயது குறைந்த பெண்ணாக இருந்தால் வேலை சொல்லலாம். பயணத்தின் போது கதைக்கலாம். எதை கதைக்க..? அரசியலா? சினிமாவா? கர்நாடக இசை பற்றித்தான் அவள் பேசுவாள். அவளுக்கு இணையாக பேச வேண்டும், உதவியாளராகவும் இருக்க வேண்டும். யூடியூபில் சேனலில் வீடியோ போட, அப்பாய்ன்ட்மென்ட் ஷெட்யூல் பிக்ஸ் செய்ய, சம்பளம் பேச, ஆடியோ ஆல்பம் போட இதுக்கு தான் ஆள் தேவை. அவர்கள் வாய்ஸில் சொன்னதை டைப் செய்து புத்தகமாக்க வேண்டும். இதற்கு என்னை போல சிஸ்டம், டி.டி.பி, டிசைனிங்க் நாலேஜ் தேவை. அவள் வேலையை புரிந்து கொண்டாள்.
"ஆஅ ஆடல்.. கலையே தெய்வம் தந்தது,' என உருகி பாடுவதெல்லாம் அவள் வேலை. அதை காசாக்கி அவள் கையில் தருவது தான் நம் வேலை. பாடுவதெல்லாம் நம் வேலை இல்லை, அது தெரியாதவர்கள் நமது பணி. சுரம் கோர்ப்பதல்ல நமக்கு கை வந்த கலை.
யெஸ்..! இது தான் நான் உள்ளே போகும் ரூட். சௌமியாவைப்பற்றி விக்கிபீடியா பார்த்து தேடுகிறார்கள். நானும் தான் தேடினேன்? மைக் ஆட் ஜஸ்ட் மிஸ்.. ரிஜக்ட் ஆகியிருப்பேன். ரொம்ப தேங்க்ஸ் சுரேஷ்! அவள் மனம் தெளிவாகி, அப்படி தெளிவானதால் உடல் தளர்வாகி உட்கார்ந்தாள்.
சும்மா உட்கார்ந்திருக்கும் நேரம் மூச்சை பிடித்து தியானம் செய்யலாமே என நினைத்து, பயமும் பதட்டமும் போக தியானம் செய்ய ஆரம்பித்தாள்.
"ம்மா தூங்கக் கூடாது," ஒரு வேட்டிக்கார ஆள் வந்து நின்றான்.
"தூங்கலப்பா. மெடிடேஷன். நீ யாரு?"
"நான்.. முருகேசன்.. இங்க தோட்டக்காரன்"
அவன் நகர, அவள் திரும்ப தியானத்தில் ஆழ்ந்தாள்..
கண்களை மூடிய போது வாசலில் வேகமாக ஒரு கார் வந்து பிரேக் அடிக்கும் சத்தம் கேட்க, திடுக்கிட்டு கண்ணை திறந்தாள்.
காரில் இருந்து சிவப்பாய் ஒரு பெண்ணும், கூடவே ஒரு இளைஞனும் வந்தார்கள். அவர்களை பார்க்கும் போதே அவரது பணக்காரத்தனம் தெரிந்தது. ஏதாவது வைஷ்ணவிக்கு உறவுக்காரர்கள் இருக்கலாமா? என அவள் நினைத்தாள்.
அந்த இளைஞன் மிக அலட்சியமாக எல்லோரையும் பார்த்தான். அவனைப் பார்த்து முருகேசன் ஓடி வந்தான். சுரேஷ் அவனை முறைத்தபடி நின்றான்.
"வாங்க வாங்க அனிருத் சார்” முருகேசன் கூப்பிட.,
"முருகேஷ், இவங்க என்னுடைய சித்தி பொண்ணு, என் தங்கச்சி. வைஷ்ணவி மேடம் அசிஸ்டன்ட் கேட்டாங்கன்னு கேள்விப்பட்டேன், அதான் இவங்களை சேர்த்துவிட்டு போகலாம்னு வந்தேன் முருகேசா” அவன் ஏனோ சுரேஷை உதாசீனம் செய்தான்.
"என்ன சார் விளையாடுறீங்க? இவ்வளவு பேர் உட்கார்ந்து இருக்காங்களே, இவங்கெல்லாம் யாருன்னு நினைச்சீங்க?" சுரேஷ் குரல் கொடுத்தான்.
"யாரு?"
“எல்லாம் பி.ஏ கேண்டிடேட்ஸ். இன்டர்வியூக்கு தான் வந்து இருக்காங்க”
"இன்டர்வியூக்கா?” அந்த இளைஞனின் முகம் லேசாக மாறியது.
"ஓ பேப்பர்ல ஆட் கொடுத்துட்டாங்களா? சரி இவங்களை நான் மேடத்துகிட்ட அழைச்சிட்டு போகனுமே முருகேசா“
“என் கிட்ட பேசுங்க.. தோட்டக்காரங்கிட்ட பேசறீங்களே?"
"அவரு தோட்டகாரன்.. நீ என்ன ஜி.எம்மா? நீ டிரைவர்தானே? வழிய விடு வைஷ்ணவிகிட்ட நான் பேசிக்கறேன்"
"சார் ஜென்ட்ஸ்லாம் உள்ள நாட் அல்லோவ்ட் சார். இவங்களை அப்ளிகேஷன் ஃபில் அப் பண்ணிட்டு வெயிட் பண்ண சொல்லுங்க"
"என்னய்யா யாருன்னு தெரியாம பேசிட்டு இருக்க?”
"சார்! உங்களை தெரியாதா அனிருத் சார்?.. ஆனா, இதுதான் சார் எனக்கு வைஷ்ணவி அம்மா சொல்லி இருக்கிறது. அதன் படி நடக்கலைன்னா என்னைதான் திட்டுவாங்க., கொஞ்சம் புரிச்சுக்கிட்டு வெயிட் பண்ணுங்க சார்”
"சரி அப்ளிகேஷன் எங்கய்யா இருக்கு குடு, அவங்க கிட்ட நான் பேசிக்கிறேன்" என்றான் அந்த அனிருத்.
சுரேஷ் அப்ளிகேஷனை எடுத்து வந்து கொடுக்க, தனியே மேஜையில் உட்கார்ந்து அவன் கூட வந்த பெண் விண்ணப்பத்தை நிரப்பி கொடுத்தாள். மாந்தாகினிக்கு உள்ளே ஒன்று ஏதோ ஆஃப் ஆனது போல இருந்தது.
போச்சு, எந்த வேலைக்கு தான் ரெக்கமண்டேஷன் தேவை இல்லைன்னு வரைமுறை இல்லாமல் போச்சு! இந்த மாதிரியான செல்வாக்கு உள்ள ஆளை மீறியா நமக்கு வேலை கிடைக்கப் போகுது?
வேலை நல்லவேளை தான், டிபனே இவ்ளோ சூப்பரா இருக்குன்னா சொல்லவா வேணும்? யாருன்னு தெரியாத ஆளுங்களுக்கு போடுற டிபனே இவ்ளோ சூப்பரா இருக்குன்னா, இங்க வேலையில் சேர்ந்த அப்புறம் கிடைக்கிற சலுகை எப்படி இருக்கும்னு சொல்ல தேவையில்லை.
ஆனால் அப்படிப்பட்ட வேலை நமக்கு கிடைக்குமான்னு தெரியலையே.. மாந்தாகினி யோசித்தாள்.
சாதாரண குடும்பம் தான் அவளுடையது. முன்பெல்லாம் அப்பாவிற்கு தனியார் கம்பெனியில் மேனேஜர் வேலை. எப்போதெல்லாம் டார்கெட் முடிக்கிறாரோ அந்த மாதம் மட்டும்தான் 25000 இன்சென்டிவ் கிடைக்கும். அதிக வருமானம் அந்த மாசம் தான். மற்ற மாதம் எல்லாம் சம்பளம் 15000 ரூபாய் தான். பகுதி நேரம் நாயனம் வாசித்து சுமாராய் வருமானம் வரும். அதை வைத்துக் கொண்டுதான் மூன்று பேரும் ஜீவனம் செய்தாக வேண்டும்.
வாடகைக்கே பெரும்பணம் போய்விடும். ரிட்டையர்ட் ஆனப்பறம் செக்யூரிட்டி ஆகிவிட்டார். நல்ல வேளை அம்மாவின் மசாலா, ஊறுகாய் வகையறாக்களுக்கு நல்ல பணம் கிடைத்தது. அப்பாவின் கை இறங்க, மாந்தாகினியின் கை ஓங்கியது. எடுத்த எடுப்பிலேயே இருபதாயிரம் ரூபா சம்பளம், இப்போது முப்பதாயிரம். அவளின் அழகும் அறிவும் அவளுக்கு நல்ல சன்மானத்தைப் பெற்றுத் தந்தது.
வீட்டில் உணவுக்கு பஞ்சமில்லை என்றாலும் வைஷ்ணவி வீட்டு டிபன் போல ஒரு உணவை அவள் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அவள் வீடு நடுத்தர வீடு.
இப்படிப்பட்ட மாளிகையில் ஒரு வேலை கிடைத்துவிட்டால் வீட்டை மறுசீரமைப்பு செய்துவிடலாம். கொஞ்சம் காசு பணம் சம்பாதித்து சேர்த்து விட்டு நல்ல மாப்பிள்ளையாக பார்த்து கட்டிக் கொள்ளலாம். இதோ இப்போது எம்.ஜி ஹெக்டரில் வந்து இறங்கினானே இந்த கம்பீரமான ஆளைப் போல., சேச்சே இவ்ளோ பணம் எல்லாம் வேணாம். அப்புறம் யாரையுமே மதிக்காமல் வாழ வேண்டும். கூட்டத்தை எல்லாம் தள்ளிக் கொண்டு முன்னே போக வேண்டும். "நான் யாருன்னு தெரியுமா?" என விரல் சொடக்கி பேச வேண்டும். அப்படி எல்லாம் வேண்டாம்.
மாதம் ஒரு லட்சம் வருமானம் வரக்கூடிய பையனாக இருந்தால் போதும். இந்த வேலை நமக்கு முக்கியம். சம்பளம் எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும். ஆனால், பாதுகாப்பான ஒரு இடம் கிடைப்பதும் நல்ல வருமானம் கிடைப்பதும் எல்லாவற்றையும் விட மனசுக்கு பிடிச்ச ஒரு வேலை கிடைப்பது என்பது ரொம்ப கடினம்.
கடவுளே! இந்த வேலையை எப்படியாவது எனக்கு கொடு. உள்ளிருந்த வைஷ்ணவி சிரித்தாள்.
Like Reply
#4
எபிசோடு : 3
'என்னை எதுக்கு உங்கம்மா வீடியோ எடுக்கறாங்க?' வைஷ்ணவி வெட்கமாய் அந்த குண்டு பெண்மணியிடம் கேட்டாள்.
"நீங்க வேலை தரலன்னா கூட பரவாயில்ல. என் மக உங்க முன்னாடி உக்காந்து நீங்க கேக்கறதுக்கு பதில் சொல்றாளே, அதுவே போதும் என் மனசு நிறைஞ்சி போச்சு.." அந்த அம்மா அதீதமாய் செய்வது போல இருந்தது.
"ஆனா இந்த இன்டர்வியூ,,?"
“என் பொண்ணு., அஞ்சு வயசு வரைக்கும் பேசல மேடம்., பயந்து போய் பத்மநாப சுவாமி கோயிலுக்குதான் வேண்டிகிட்டோம்.. குரல் வந்தா போதுமுன்னு அழுதோம். இப்ப பாடவே செய்யறா.. ஏய்ய் நர்மதா.. ஆராவகணம் பாடு”
அவள் பாட ஆரம்பிக்க.,
"சரி சரி போதும். நான் கூப்பிடறேன். இப்ப சாப்பிட்டு கிளம்புங்க”
“தஞ்சாவூர்லருந்து வரோம். கையில் ஆர்டர் தந்தீங்கன்னா, கையோடு வாங்கிட்டு போய் பிரகதீஸ்வரர் பாதத்துல வெச்சி விமோசனம் வந்துடுச்சின்னு அழுது தீத்துடுவோம்" சொல்லும் போதே அந்த அம்மாள் அழுதாள்.
“ஆர்டர்லாம் ரெஜிஸ்டர் போஸ்ட்ல தான் வரும். இப்ப கிளம்புங்க” வைஷ்ணவி கெஞ்சாத குறையாக அனுப்பினாள்.
அவர்கள் போனபிறகு., 'கிரிஜா., கிரிஜா' எனக் கத்த, அவள் பதறி போய் வந்தாள்.
“எத்தனை தடவை சொல்றது?., கேண்டிடேட்ஸ் மட்டும் அனுப்பு., பேரன்ட்ஸ்லாம் அனுப்பாதன்னு. உள்ள வந்து அந்த அம்மா என்னை வீடியோ புடிக்குது”
"எவ்ளோ சொல்லியும் கேக்கல, என்னை தள்ளிவிட்டு வருது..”
"ஐ சீ,,. அவங்க போய்ட்டாங்களா?"
"இல்ல மதியம் பந்தி எப்போன்னு கேட்டுட்டு இருக்கு?"
"அடபாவமே.„ சரி இன்னும் எத்தனி பேரு..?"
"பதிமூனு பேரு.."
"சரி வெய்ட் பண்ண சொல்லு. நான் சாப்பிட்டு வரேன்"
வைஷ்ணவி சீட்டிலிருந்து எழுந்து உணவறைக்கு சென்றாள்.
அந்த வீட்டின் எஜமானி, தமிழகத்தின் புகழ்பெற்ற கர்நாடக இசை பாடகி. மண்ணில் இறங்கி வந்த தேவதைகள் எல்லாம் வெட்கப்பட்டு ஒதுங்கிச் செல்லும் பேரழகி வைஷ்ணவி. அந்த இளம் மஞ்சள் பட்டு சேலையிலும், சிவப்பு ரவிக்கையிலும் வைர மூக்குத்தி டால் அடிக்க, மெல்ல இருக்கை விட்டு ஒரு பூந்தேர் அசைவது போல் அந்த இடத்தை விட்டு அகல, கிரிஜா விழிகள் விரிய அவளின் சாத்வீக அழகை பார்த்தாள்.
ஆஹ்ஹ என்ன நிறம்? என்ன உடலமைப்பு? என்ன ஒரு கனிவு..? இவளுக்கு மட்டும் வயசு குறைஞ்சுகிட்டே போகுதே?
காலை எழுந்தவுடன் பல் துலக்கி ஏதோ ஜூசாம். கேட்டால், ஆப்பிள், காரட், பீட்ரூட் மூன்றும் கலந்து பாதாம் பிஸ்தா போட்டு ஒரு பெரிய கண்ணாடி டம்ளர் முழுக்க குடிக்கிறாள். ஒரு நாள் தவறுவதில்லை. முப்பது வயது தாண்டினாலும், இருபத்து ரெண்டு வயசு போல் ஒரு துள்ளல், இழுத்துக் கட்டியது போல ஒரு மேனி. கிரிஜாவும் குடித்து பார்த்தாள், முடியவில்லை. என்ன இருந்தாலும் நுனி நாக்கு கசக்கும் பில்டர் காபி குடித்தால் தான் அந்த நாளே சுகமாய் போகிறது.
ஆனால் வைஷ்ணவி அப்படியில்லை. அவளை நாள் முழுக்க பார்த்தாலும் அசதி இல்லை. கிரிஜா, அவளது காலை நேர அழகை பார்த்து பிரமித்தாள். நடையும், மிடுக்கும். அப்பப்பப்பா., புருஷன், புள்ளை, குட்டி, பிடுங்கல் இல்லாததால் இவளுக்கு மட்டும் வயது கூடாமல் இறங்கிக் கொண்டே போகிறதே?
எத்தனை உண்டாலும் இவளுக்கு வயிறு போடவே இல்லை. கட்டுக்கோப்பான உணவு, சரியான அளவிலான தூக்கம், தன்னை மறந்த கடவுள் பக்தி, மெலிதான உடற்பயிற்சி, அப்பப்ப யோகா, டெய்லி வாக்கிங்., காலை மாலை இரண்டு மணி நேரம் சாஸ்திரிய இசை சாதகம், இதெல்லாம் சேர்த்து தான் இவளை எத்தனை இளமையாக மேனி முழுக்க கட்டுக்குலையாமல் வைத்திருக்கிறதோ என்னவோ?
வைஷ்ணவி அந்த விஸ்தாரமான ஹால் தாண்டி அசைந்து நடக்க., அவளின் பின்னால் ததும்பும் உருண்டை அழகை எச்சில் விழுங்கியபடியே பார்த்தாள் கிரிஜா. எந்த புடவை கட்டினாலும் அம்சமாக இருக்கிறாள். அதிலும் அந்த முடி இருக்கே?
வைஷ்ணவியின் பின் புற தேன்குடங்களை தட்டித் தழுவி ஏறி இறங்கி இடதும் வலதும் அசைந்தாடி, கொஞ்ச நேரம் பிளவில் ஆழ்ந்து மறுபடியும் மீண்டு ஆடி அசையும் அந்த நீளமான அடர் கூந்தலழகை பார்த்து திகைத்து தான் போனாள்.
'ம்ம்ஹூம்' என ஒரு பெருமூச்சு விட்டாள்.
அடக்கவும் அடக்கி ஆளவும் அனுதினமும் ஒரு ஆண் இல்லை என்பதாலேயே இவளது பருவ பரிமாணங்கள் குதியாட்டம் போடுகிறதோ?' என நினைத்தாள் கிரிஜா.
கட்டிலில் ஆண்டு அனுபவித்து, ஒரு ஆணோடு கூடி களைத்த நமக்கே இவளை பார்க்கும் போது, இத்தனை சிலிர்ப்பு உண்டாகிறதே? ஒரு வித்தைக்கார கட்டிளம் காளை போல இளவட்டம் யாராவது இவளின் அவயங்களின் ரகசிய அசைவுகளைப் பார்த்தால், எப்படி பித்து பிடித்துப் போவான்?" என யோசித்துப்பார்த்தாள் கிரிஜா.
வைஷ்ணவி கிரிஜாவை விட சிறியவள். வைஷ்ணவிக்கு இந்த கார்த்திகை வந்தால் முப்பத்து ரெண்டு வயது பூர்த்தியாகிறது. தேகம் ஒடிசலாகவும் இல்லாமல் பூசினாற் போல் அல்லாமல் திமிறி கிடக்கும் பொன்னிற மேனிக்கு சொந்தக்காரி வைஷ்ணவி. அவளின் கன்னச் செழுமையும் கருவிழியும் கருங்கூந்தலும் அவளை மார்த்தாண்டத்தின் முடிச்சூடா பேரழகியாக காட்டியது. மேடை ஏறி காசுக்கு பாடும் பாடகி தானே என பக்கத்தில் வந்தவர்கள் எல்லாம் அவளது பொன்னிற பேரழகைப் பார்த்து எட்டிப் போய் பவ்யமாய் 'மேடம்' என்பார்கள்.
இவளது குரலையும் அசரடிக்கும் அழகையும் கேள்விப்பட்ட ஒரு சில கோடம்பாக்கத்து இளவட்ட இசையமைப்பாளர்கள் அவளை எப்படியாவது சென்னைக்கு அழைத்து போக ஆசைப்பட்டார்கள். ஆனால், அவள் எவருக்குமே மசியவில்லை. பெரியவர் வேண்டி கேட்டுக் கொண்டதால் ஒரே ஒரு ஆன்மீக பாடலை பாடிவிட்டு வந்தாள். அதற்கு தந்த சன்மானத்தைக் கூட அங்கேயே யாருக்கோ தானமாக கொடுத்ததாக நினைவு.
பாடித்தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலையில் அவள் இல்லை. இருப்பதெல்லாம் தாத்தாவின் சொத்து. அதை அவளது அப்பா தாசில்தார் பாலகிருஷ்ணன் தனது உழைப்பை கொட்டி பல மடங்கு ஆக்கினார்.
அவளைப் பார்த்ததும் திருமணமாகாத ஒரு இளம் பெண் என்று தான் பலரும் நினைப்பார்கள். ஆனால் வைஷ்ணவிக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆனதென்றால் என்ன? திருமணம் ஆகியும் ஆகாதது போலத்தான். அதெல்லாம் பெரிய கதை.
அற்புதமான தேன் குரலுக்கு சொந்தக்காரியான வைஷ்ணவியின் வாழ்க்கையின் கரி நாட்கள் அவை.
வைஷ்ணவி வேகமாக சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் மாடியில் நடந்தாள். போர்டிகோவையும் தோட்டத்தையும் எட்டிப் பார்க்க கூட்டம் வெகுவாக குறைந்ததை பார்த்தாள். கூட்டத்தை நோட்டம் விட சட்டென அவள் கண்ணில் அந்தப்பெண் பட்டாள்.
யார் அந்த பெண்? கண்மூடி உட்கார்ந்து இருக்கிறாளே என வைஷ்ணவி மாந்தாகினியை உற்றுப் பார்த்தாள். பெண் களையாக இருக்கிறாள். உடையில் லேசாக ஒரு வறுமை தாண்டி பளிச்சென இருக்கிறாள். அப்பா பாலகிருஷ்ணனுக்கும் அம்மா பாக்கியலட்சுமிக்கும் இரண்டாவது ஒரு பெண் குழந்தை இருந்தால் இப்படி தான் இருக்கும் போல.
தனியாக வந்திருக்கிறாள் போல இருக்கிறது. அநேகமாக இந்த ஊராக இருக்காது. அவள் புல் தரையில் சம்மனமிட்டு நிமிர்ந்து நேராய் உட்கார்ந்து இருப்பது அவளுடைய தியான நிலையை சொன்னது. அத்தனை பேர் நடுவில் மாந்தாகினி வைஷ்ணவியின் கண்களுக்கு தனியே தெரிந்தாள்.
தனக்குள் மெல்ல குறுநகை புரிந்து போர்டிகோவின் இடது பக்கம் பார்க்க, 'அட அது யார் அனிருத்தா? சரியா போச்சு!' தலையை உள்ளே இழுத்துக் கொண்டாள்.
அனிருத் ஓரிரு வயது வைஷ்ணவியை விட பெரியவன். இவளை போல பணக்காரன். அவனும் நல்ல மேடை பாடகர் தான். மார்த்தாண்டம் டவுனில் இருக்கிறான். சினிமாவில் கூட பாடி இருக்கிறான். அதிக வசதியும் கூட. ஆனால் அலட்டல் அதிகம். எதனாலோ திருமணமாகாதவன்.
யேசுதாஸுக்கும் ஜெயச்சந்திரனுக்கும் அருகாமையில் இருக்கும் குரல் அவனது. அவன் குரலைக் கேட்டு, ஓரிரு முறை அவனைக் கூப்பிட்டு, தன்னுடன் இணையாக பாட வாய்ப்புக் கொடுத்த உடனேயே அருகில் வந்து பேசுவது, 'சாப்டாச்சா? நல்லா தூங்கினீங்களா?' என உரிமை எடுத்து பேசுவது என அவன் அணுகும் விதம் அவளுக்கு பிடிக்காமல் போக, அடுத்தடுத்து அவனை கச்சேரிக்கு கூப்பிடுவதை தவிர்த்து விட்டாள். திட்டியும் இருக்கிறாள்.
ஒரு முறை டிரைவர் சுரேஷிடம் கூட சண்டை போட்டிருக்கிறான். இந்த அபிஷ்டு அடிக்கடி வந்து அவளை தொந்தரவு செய்கிறான். இப்போது கூட யாரையோ ஒரு பெண்ணை அழைத்து வந்திருக்கிறான். அநேகமாக பி.ஏ வேலைக்கு சிபாரிசுக்காக வந்திருப்பான்.
வைஷ்ணவி வேகமாக படி இறங்கி தனது அலுவலக அறைக்கு வந்தாள்.
"கிரிஜா, வெயிட் பண்றவங்களை ஆர்டரா கூப்பிடு" என சொல்ல, ஆட்கள் வந்து கொண்டு இருந்தார்கள். எத்தனை பேர் வந்தாலும் "வெளியே தியானம் செய்த பெண் வருகிறாளா?" என ஆர்வமாக பார்த்துக் கொண்டே இருந்தாள்.
விதம் விதமான பெண்கள். விதம் விதமான நடிப்பு, திறமைகள்.. எல்லாம் பார்த்து களைத்தாள். கடைசியாக வந்த பெண் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டாள்.
கிரிஜா பின்னாலிருந்து கண் காட்டினாள். ஊசி போடுவது போல சைகை செய்தாள். ஏதோ ஒரு டாக்டரின் சிபாரிசு போல.,
"ஏ.. ஏன் இதெல்லாம்? கால்லலெல்லாம் விழக்கூடாது. இது இன்டர்வியூ தான் உனக்கு? எந்த ஊரு?"
"மார்த்தாண்டம் தான் மேல்புழா.. என் பேரு மைதிலி ரங்காச்சாரி"
"அட இங்க தானா? பக்கத்துல..?"
"ஆக்சுவல்லி., நாங்க கும்பகோணம்., இங்க எங்க அங்கிள் இருக்கார்.. அவர் தான் உங்களை பாத்தவுடனே விழுந்து கும்பிடனும்னு சொன்னார்."
அந்த பெண் ஓவராக நடிப்பது போல வைஷ்ணவிக்கு பட்டது.
"இப்ப நான் யாரு உங்க மாமா?ன்னு கேக்கனும், அவ்ளோ தானே?"
"அதுக்கில்ல மேடம்! டாக்டர் நித்யானந்தன் தான் எங்க அங்கிள். ஆனா யார் கிட்டயும் சிபாரிசு வந்து நிக்க மாட்டார்னு சொல்லிட்டார்."
டாக்டர் நித்யானந்தன் என்றதும் வைஷ்ணவிக்கு எரிச்சலாக இருந்தது.
"சரி, ஏன் எங்கிட்ட பி.ஏ வா வரனும்னு நினைச்சே?"
"நல்லா பாட்டு கத்துக் கலாம்.." சொல்லி அவளே சிரித்தாள்.
"யாரு நானா?"
"அய்யோ இல்ல நானு," அவள் போலியாக பதறினாள்.
பெண்கள் ஏன் மக்காவே இருக்கிறார்கள் என அலுத்துக் கொண்டாள் வைஷ்ணவி.
"சரி போ.. கூப்பிடறேன்"
அவள் தயக்கமாய் எழுந்தாள்.
"பாட்டு கத்துக்கறேன் மேடம். எய்ட் இயர்ஸா ஆலாபனை தொடங்கி ஸ்தாயி, வக்ரம் வரைக்கும் பதினாறு ராகமும் படிப்பேன். ஆபேரி, ஆபோகியிலருந்து யதுகுலகாம்போதி, யமுனாகல்யாணி வரைக்கும் ஒப்பிப்பேன்"
"பாட்டுங்கிறது ஒப்பிக்கறது இல்லையே. நீங்க ஒரு வாய்ப்பு கொடுத்தா இன்னும் நல்லா கத்துப்பேன்ன்னு சொல்றேன்"
வைஷ்ணவிக்கு அயர்ச்சியாக இருந்தது.
"புரிது மைதிலி, இப்ப போங்க. நான் அப்புறம் கூப்பிடறேன்"
"சரிங்க மேடம்" அந்த பெண் கருவறையிலிருந்து செல்லும் அதி தீவிர பக்தை போல பின்னால் நகர்ந்து சென்றாள்.
அய்யோடா.. என்னம்மா ஆக்டிங்க் பண்ணுதுங்க? வைஷ்ணவி கிரிஜாவை கூப்பிட்டாள்.
"இவளை யாரு ரெகமண்ட் பண்ணி இருக்காங்க?"
கிரிஜா மறுபடியும் ஊசி சிக்னல் காட்டினாள். "இதே தெருல கிளினிக் வெச்சிருக்காரே டாக்டர் நித்யானந்தன் சார்ம்மா!"
"அவரு இங்க வந்திருந்தாரா என்ன?"
"ம்ம் கேட்ல தான் நிக்கறார்."
"பாரேன்.. சிபாரிசுக்கு வந்து நிக்க மாட்டேன்னு சொல்லிட்டு இப்ப கேட் வரைக்கும் வந்து நிக்கறதை. அந்த ஆளு ஒரு மாதிரினு சொல்வாங்களே"
"த்..தெரிலம்மா.. சரி அந்த பொண்ணு ஓகேவாம்மா?"
"ஓகேன்னு நீ நினைக்கிறீயா?"
"பணிவும் ஜாஸ்தி"
"பணிவா?" வைஷ்ணவி சத்தமாய் சிரித்தாள். "சரி வேற யாரு?"
"அம்மா மாந்தாகினி, அப்புறம் அனுஷான்னு ஒரு பொண்ணு வெயிட் பண்றாங்க.. அனுஷாவை அனிருத் சார் அழைச்சிட்டு வந்திருக்காரு. ரொம்ப நேரமா வெயிட் பண்றாரு. உள்ள அலவ் பண்ண மாட்டேன்னு சுரேஷ் கறாரா சொல்லிட்டான் போல. அவரோட கசின் சிஸ்டராம்"
"அது தவிர வேறு யாரும் இல்லையா?"
"சரி மாந்தாகினியை கூப்பிடு. ப்ரம் மதுரை.."
"இல்லம்மா, அனிருத் சாரு முதல்ல இவங்களை பாக்கணும்னு சொல்ற போல இருக்கு"
வைஷ்ணவி யோசித்தாள்.
"சரி அவளையே கூப்பிடு. மாந்தாகினி வெயிட் பண்ணட்டும்" என்றாள்.
கிரிஜா வெளியில் போய் பாடகன் அனிருத்தின் ரிலேட்டிவ் பெண்ணை அழைத்து வந்தாள். ஜீன்ஸ் அணிந்திருந்தாள்.
"ஐ அம் அனுஷ்கா ராவ். ஐ.ஐ.எம் படிச்சிருக்கேன்.." வந்ததும் தடக்கென்று உட்கார்ந்து கொண்டாள். "ஐ அம் சோ கிளாட் மேடம்.. எங்க வீட்ல எல்லாரும் உங்க ஃபேன்ஸ் தான். பட் எனக்கு எம்.எஸ் தான்" என்றாள். தேவையே இல்லாமல் தோளை குலுக்கி பேசினாள்.
"எங்க ஃபேமிலியில எல்லாருக்கும் கர்னாடிக் தான் பேக்ரவுண்ட்.. நான் மட்டும்தான் கொஞ்சம் ஸ்ருதி பேதம். பட் மேனேஜ் பண்ணிக்குவேன்.. பி.ஏக்கு ஆப்ட்டா இருப்பேன்.. கராத்தே தெரியும்.. ஜிம் போறேன். சோ, ஐ அம் ஸ்ட்ராங்க் உமன். உங்களுக்கு சப்போர்டிவ்வா இருப்பேன்"
"ம் அப்புறம்?"
"நான் அனிருத் தங்கச்சி மேடம்"
அதுவே அவளை நிராகரிக்க போதுமான காரணமாக இருந்தது.
"சொல்லி அனுப்புறோம்" என அவளை அனுப்பி விட்டு, "அடுத்த கேண்டிடேட் கூப்பிடு" என்றாள்.
மாந்தாகினி தயக்கமாய் உள்ளே நுழைந்தாள். வைஷ்ணவியைப் பார்த்ததும் அளவான குறுநகையுடன் சொன்னாள், "வணக்கம் மேடம்".
சில பேர் பேரை பார்த்த உடனே பிடித்து விடுகிறது. வைஷ்ணவிற்கு மாந்தாகினியை அப்படித்தான் பிடித்துப் போனது.
Like Reply
#5
எபிசோடு : 4
மாந்தாகினி அவளின் உயரத்துக்கும் உடலமைப்பிற்கும் ஏற்ற, கண்ணை உறுத்தாத ஒரு வெளிர் நீல நிறத்தில் சுரிதாரை அணிந்திருந்தாள். இயல்பிலேயே அழகு என்பதால், அதிக அலங்காரம் இல்லை. பாசாங்கு இல்லை, போலி மரியாதை இல்லை. அவள் அவளாகவே இயல்பாக இருந்தது வைஷ்ணவிக்கு பிடித்திருந்தது. மூக்கும் முழியும் இவ்ளோ லட்சணமா?
அந்த வெளிச்ச அறையில் நடு நாயகமாக தங்க நிலவு போல ஜொலிக்கும் வைஷ்ணவியைப் பார்த்தவுடன் மாந்தாகினிக்கு உள்ளுக்குள் பேரதிர்ச்சியாகவும் பெரும் திகைப்பாகவும் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இயல்பாக வணக்கம் சொல்ல.,
"உட்காரும்மா. உன் பேரு மாந்தாகினி. மதுரை, ஓகே. என்ன படிச்சிருக்க? ஓ.. பி.ஏ கார்ப்பரேட் செகரட்டரியா? இதுக்கு முன்னாடி பி.ஏ வா ஒர்க் பண்ண அனுபவம் இருக்கா?" ஃபைலை பார்த்துக்கொண்டே கேட்டாள்.
"அனுபவம் இல்ல மேடம், பட் மார்க்கெட்டிங்கில் தான் எனக்கு எக்ஸ்பீரியன்ஸ். இரண்டு வருஷமா மார்க்கெட்டிங் ஃபீல்டுல இருந்தேன்."
"சோ யூ நோ வெரி வெல் அபௌட் ஹவ் டு அப்ரோச் அதர்ஸ்?"
"எஸ் மேடம், ஓரளவு."
மாந்தாகினி அவளுடைய கல்வி, குடும்பம் பற்றியெல்லாம் அவளிடம் சுருக்கமாக சொல்லிக் கொண்டே இருந்தாள்.
கேட்ட பிறகே, எல்லா கேள்விகளுக்கும் கருத்தூன்றி கவனித்து பதில் சொல்வது வைஷ்ணவிக்கு பிடித்திருந்தது. பேசும்போதே இடைமறித்தால் கூட சட்டென பேச்சை நிறுத்தி கேட்கும் அவளின் பழக்கம் வைஷ்ணவியைக் கவர்ந்தது.
இந்த பத்து நிமிடத்தில் ஒரு முறை கூட அவள் வைஷ்ணவி பற்றியும், கர்நாடக இசை பற்றியும் பேசாமல் இருந்தது பெரிய ஆறுதலாக இருந்தது.
"பி.ஏ இந்தியன் மியூசிக் படிச்சுட்டு., நம்ம பக்கம் வராம, ஏன் மார்க்கெட்டிங்க் சைட்? ஏன் இப்படி டபுள் மைண்ட்?"
"இல்ல மேடம், அப்பா நாயன வித்துவானா இருக்காரு.. ஐ மீன் இருந்தாரு, அதனால எனக்கு கர்நாடக சங்கீதம்னா ரொம்ப பிடிக்கும். அது இயல்பாக கத்துக்க ஆரம்பிச்சேன். ஆனா அப்பா தான் சொன்னாரு 'வெறும் கர்நாடக இசை பாட்டு சோறு போடாது, என்ன மாதிரியே கஷ்டப்படுத்தும்' அப்படின்னு சொன்னாரு. ஏன்னா அவரு நாயனத்தால காசு சம்பாதிக்கல."
"ஆனா பணம் சம்பாதிக்க கலையை தேர்ந்தெடுக்கக்கூடாது இல்லையா?"
"உண்மைதான் மேடம். ஆனா சோறு கூட போடலைன்னா அந்த கலையை வைத்து என்ன பண்றதுன்னு எங்க அப்பா கேப்பாரு. இருக்கறவங்களுக்கு கலை அங்கவஸ்திரம்., இல்லாதவங்களுக்கு அது வேட்டின்னு சொல்வாரு"
",..ம் கிரேட்! வாஸ்தவம் தான். எல்லாருக்குமே எல்லாமே அமைஞ்சிடாது."
"அப்பா ரொம்ப கேட்டுக்கிட்டார்னு அவருக்காக பி.ஏ கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் படிச்சேன். ஆனா, எனக்கு பிடிச்சது இந்தியன் மியூசிக். நான் ரெண்டுத்துலயுமே ரொம்ப கம்ஃபர்டபிளா இருக்கிறதா நினைக்கிறேன்."
"சரி. ஒரு ஜெனரலா பி.ஏக்கு ஒர்க் என்னவா இருக்கும்?"
"அது பாஸை பொறுத்து இருக்கும் மேடம். சில பேர் கூட ஒர்க் அதிகமா டென்ஷனா இருக்கும், சில பேர் கூட டென்ஷன் இல்லாமயும் போகும்."
"புரியல."
"ஒரு அரசியல்வாதியுடைய பி.ஏ வேலை வேறு விதமாக இருக்கும். அதுவே ஒரு தொழில் முனைவோர், அதான் ஆன்டர்பிரைனர் பி.ஏ வேலைன்னா அப்படியே வேறு விதமாக இருக்கும். 'பாய்ஸ்' படத்துல செந்தில் சாருக்கு வர்ர தூக்குச்சட்டி பையனும் பி.ஏ தான், கூகுள் சுந்தர் பிச்சைக்கு வர்ர அமிர்தராஜூனும் பிஏ தான். ஆனா ரெகுலர் பி.ஏன்னா அதுக்கு எல்லாம் நிறைய ஆளுங்க மார்க்கெட்ல இருப்பாங்க.. உங்க ரெக்யூர்மென்ட் கொஞ்சம் ரேர் தான்."
"சரியா சொல்றே?"
"கர்நாடக இசை, சங்கீதம், மேடை, கச்சேரி, பார்ட்டி, வீடுன்னு இருக்கிற ஒரு ஃபேமஸ் வி.ஐ.பி லேடிக்கு பி.ஏவா இருக்கிறது ஈசி இல்ல மேடம், ரொம்ப கடினம்."
"ஏன்?"
"ஏன்னா நாங்க உங்க சார்பா பேசணும், உங்களை பாதுகாக்கணும், ஈவென்ட் பிக்ஸ் பண்ணனும், சேலரி ரெம்யூனரேஷன் பேமென்ட் ஃபாலோ அப் பண்ணனும். உங்களை வெளியே கூட்டி அழைச்சிட்டு போயி ரொம்ப பாதுகாப்பா கூட்டிட்டு வரணும். அதுவுமில்லாம லேடிஸ் அப்படி என்றதால அவங்களோட சேஃப்டி எல்லாம் அந்த பி.ஏ தான் பாத்துக்கணும்" சொன்னதும் அவள் சிரித்து விட்டாள்.
"அப்படி எல்லாம் நீ ஒன்னும் பயப்படுறாப்போல இருக்காது."
"இல்ல மேடம், பொதுவா சொன்னேன்."
"என்னுடைய டிரைவரே ஒரு பவுன்சர் போல என்னை பாதுகாப்பா பாத்துக்குவான்."
"எஸ் மேடம்! இருந்தாலும் அவர் ஒரு ஆண் என்றதால் எல்லா இடத்துலயும் அந்த ஆளு உங்க கூட இருக்க முடியாது. நான் பி.ஏ ஆகிட்டா, அந்த பவுன்சர் கூட என்னுடைய பாதுகாப்பு வளையத்தின் மீதுதான் உங்ககிட்ட வர முடியும்."
ரொம்ப வாய் பேசுற பொண்ணா இருக்கே என்றதும் இருவரும் சிரித்து விட்டார்கள்.
"சரி ரொம்ப தாங்க முடியாம கேக்குறேன். என்னை பத்தி கேள்விப்பட்டு இருக்கியா? இல்லையா? கண்டுக்கவே மாட்டிறியே!"
"மேடம், உங்கள பத்தி தெரியாம இந்த ஜென்ரேஷன்ல ஒருத்தர் கர்நாடக சங்கீதம் பாட முடியுமா? ரொம்ப நல்லா தெரியும் மேடம்."
"சரி, கர்நாடக இசை?"
"ஓரளவு தெரியும் மேடம்."
"எதுவுமே பாடி காட்டலயே நீ? என்ன பத்தியும் எதுவும் நீ சொல்லலயே. அதாவது என்னை இம்ப்ரஸ் பண்ணவே இல்லையே நீ!"
"ஏன் மேடம் நான் உங்களை இம்ப்ரஸ் பண்ணனும்? நான் உங்களுக்கு பி.ஏ-வா உதவ தானே வந்து இருக்கேன்? உங்களுக்கு போட்டி பாடகியாவா வந்து இருக்கேன்?" மந்தாகினி சொன்னதும் வைஷ்ணவி அழகாக சிரித்தாள். அந்த சிரிப்பு ஒன்றே போதும், சம்பளம் கூட இரண்டாம் பட்சம் என தோன்றியது மந்தாகினிக்கு.
அம்மாவிடம் போய் இதெல்லாம் சொல்லி வாயடிக்க வேண்டும் என நினைத்தாள் மந்தாகினி.
"மேடம்! இப்போ உங்களுக்கு தேவை உங்க கூட ஒத்தாசையா, உதவியா, சினேகிதியா இருக்கக்கூடிய ஒரு அசிஸ்டன்ட். உங்க யூட்யூப் சேனல், புக்ஸ் ஒர்க்ல ஹெல்ப் பண்ணனும், டிராவல்ல கேரிங்கா இருக்கனும். அவங்க லேடியா இருந்தா நல்லது. அதிலும் உங்கள பத்தி தெரிஞ்சவங்களா இருந்து கர்நாடகா மியூசிக் தெரிஞ்சிருந்தா ரொம்ப ரொம்ப நல்லது. அப்படிப்பட்ட ஒரு பொண்ணு தான் தேடிட்டு இருக்கீங்க."
"ஓ, அது நீயா?"
"அப்படின்னு நான் சொல்ல மாட்டேன். ஆனால் நானாகவும் இருக்கலாம்."
மறுபடியும் வைஷ்ணவி சிரித்தாள்.
"சரி, என்னை ரொம்ப பிடிக்கும்னு சொல்ற. என் பாட்டெல்லாம் கேட்டு இருக்கேன்னு சொல்ற. என்னைப் பார்த்த உடனே என் கூட ஒரு போட்டோ கூட பிடிக்கனும்னு உனக்கு தோணவே இல்லையே?"
"மேடம்! மேடம்! எனக்கு அந்த ஆசை எல்லாம் இல்லைன்னு யாரு சொன்னா? வெளியே பொது இடத்தில் பார்த்தேன்னா விழுந்தடிச்சு போட்டோ எல்லாம் பிடிச்சு உங்களை ரொம்ப தொந்தரவு பண்ணி இருப்பேன். ஆனா இங்க வந்திருக்கிறது நான் என் வேலைக்காக. இங்க என்னை விட, உங்களை விட வேலை தான் முக்கியம். வேலை கிடைச்ச அப்புறம் உங்க கூட செல்பி எடுத்துட்டா போச்சு," என்றாள்.
"அய்யய்யோ! உன் கூட பேசியே ஜெயிக்க முடியாது போல இருக்கே? தேங்க் காட்! மந்தாகினி! காலையிலிருந்து செல்பி எடுத்துக்கிறேன், குரூப் போட்டோ எடுத்துக்கிறேன்னு சொல்லி ஒரே தொந்தரவு. ஏன்டா ஓபன் இன்டர்வியூ பண்ணோம்னு தெரியல. ஓகே, பை த வே நீ கிளம்பலாம்."
"சரிங்க மேடம், ரொம்ப தேங்க்ஸ் மேடம்."
"நீ செலக்ட் ஆயிட்டியா இல்லையா அப்படின்னு எதுவுமே கேட்கலையே?"
"செலக்ட் ஆனீங்கன்னா ரிஜிஸ்டர் போஸ்ட்ல ஆர்டர் அனுப்புவீங்கன்னு கேள்விப்பட்டேன். சோ, ஐ ஆம் வெயிட்டிங் ஃபார் யுவர் ஆர்டர்."
வைஷ்ணவி விழுந்து விழுந்து சிரித்தாள். "நீ ரொம்ப கிளவர். அதேசமயம் இன்னொசென்டா இருக்குற போல நடிக்கிற. நீ அப்பாயின்மென்ட் ஆயிட்டேன்னு உனக்கே நல்லா தெரியும்."
"மேடம், அப்ப ஆர்டர்? அந்த ஃபார்மாலிட்டிஸ் எல்லாம்?"
"வேணாம். சரி, உனக்கு யூட்யூப் சேனல் வீடியோ எடிட்டிங், பேஜ் டிசைனிங் இதெல்லாம் தெரியுமா?"
"நல்லா தெரியும் மேடம். எங்க பழைய கம்பெனி யூட்யூப் சேனல், சோஷியல் மீடியா போஸ்டிங்லாம் நான் தான் பாத்துப்பேன்."
"ம்ம்.. எங்களுக்கு லேண்ட், பங்களா, பிராப்பர்ட்டி, பெட்ரோல் ஏஜென்சி இதெல்லாம் இருக்கு. கலெக்ஷன் போகனும், அக்கவுன்ட்ஸ் பாக்கனும், அப்பாய்ன்மென்ட்ஸ்லாம் பாக்கனும்,"
"கண்டிப்பா மேடம்! அட்மின் அண்ட் ஃபீல்ட் ஒர்க் ஆல்வேஸ் ஆசம்!"
அவளது நேர்மறையான பதில்கள் வைஷ்ணவிக்கு பிடித்து போக, "சரி.. நாளைக்கு அஷ்டமி, அதுக்கு மறுநாள் நவமி. சோ திங்கள்கிழமையில இருந்து நீங்க ஜாயின் பண்ணிக்கங்க," என்றதும்,
"அய்யோ மேடம்! நான் செலக்ட் ஆவேன்னு நம்பிக்கை இருந்தது. ஆனா வெளியே இருந்த கூட்டத்தை பார்த்து மிரண்டு போயிட்டேன். ஆனாலும் உள்ள மனசுல ஏதோ ஒன்னு சொல்லுச்சு, கண்டிப்பா உங்களுக்கு உறுதுணையாக நான் இருப்பேன் அப்படின்னு," என சொல்லி அவள் கை நீட்ட, வைஷ்ணவி அவள் கையை நட்புடன் பிடித்துக் கொண்டாள்.
"மேடம், இங்க தங்கறதுக்கு ரென்டட் ஹவுஸ்லாம் கிடைக்கும்ல?" தயங்கி தான் கேட்டாள்.
வைஷ்ணவி சிரித்தாள். "ஏன் ரென்ட் ஹவுஸ்? இவ்ளோ பெரிய வீடு போறாதா உனக்கு?"
"இ, இ,ங்கேயா?" ஒருவேளை அவுட் ஹவுஸை சொல்கிறாளோ?
"யெஸ்! ஆறு பெட்ரூம்ஸ் இருக்கு. இதுல எதுல வேணா தங்கிக்கலாம், என் ரூமை தவிர."
"மேடம்..?" அவள் ஆச்சரியத்தில் மூழ்கினாள். சம்பளம் எவ்வளவு என கேட்கலாமா என்று நினைத்தாள். கேட்டால் நம்மை அல்பமாக நினைத்துக் கொண்டால் என்ன செய்வது? அதற்காக பத்தாயிரம் கொடுத்தால் வாங்கிக் கொள்வதா? என அவள் குழப்பம் அடைந்தாள். மறுபடியும் அவளுக்கு வணக்கம் சொல்லிவிட்டு திரும்ப,
"இரு மந்தாகினி, கொஞ்சம் வெயிட் பண்ணு. ஒர்க் கன்பர்ம் ஆர்டரோட போனா, உங்க அப்பா அம்மா சந்தோஷப்படுவாங்க இல்ல?" என சொல்லி அவளே ஆர்டரை ரெடி செய்து கொடுத்தாள்.
ஆர்டரை படித்துக் கூட பார்க்காமல் வைஷ்ணவிக்கு சிரித்தபடியே வணக்கம் சொல்லி விட்டு பையோடு அந்த வீட்டை விட்டு வெளியே வந்தாள்.
சாலையில் இறங்கி நடந்த உடனே ஆர்டரை பிரித்து பார்த்தாள். அட..! சம்பளம் 60 ஆயிரம் இருந்தது! அவளுக்கு தார்ச்சாலை தங்கச்சாலையாக ஜொலித்தது. 'அப்பனே முருகா உனக்கு ஒரு கோடி நன்றி!' என்றாள்.
Like Reply
#6
எபிசோடு : 5
தன் வீட்டின் இரண்டாம் தளத்திலிருந்தபடியே சாலையில் குதித்த மந்தாகினியை பார்த்த வைஷ்ணவிக்கு சிரிப்பு வந்தது. அவளையே பார்த்தாள். அவளின் சந்தோஷம் வைஷ்ணவிக்கும் தொற்றிக்கொண்டது. பாவம் நடுத்தர குடும்பத்து பெண், இந்த சம்பளம் இவளுக்கு பெரிய ஜாக்பாட், அதான் இந்த சந்தோஷம். அவள் வீடும் சந்தோஷப்படும். மந்தாகினி நல்ல பெண், இயல்பானவள், பாசாங்கில்லாதவள். இவளுடன் எஜமானியாக இல்லாமல் தோழியாக, துணையாக நீண்ட காலம் பயணம் செய்வோம் என வைஷ்ணவிக்கு தோன்றியது.
வைஷ்ணவிக்கு சினேகிதிகள் என யாரும் இல்லை. வீட்டுக்கு ஒரே பெண். பள்ளியிலும் கல்லூரியிலும் பல பேர் வந்தார்கள் போனார்கள். ஆனால், யாரும் அவளின் சினேகிதத்தை பெரிதாக கவரவில்லை. அவள் எல்லாவற்றிலும் விலகியே இருந்தாள். வைஷ்ணவியின் உலகம் வேறுவிதமானது: அம்மா, அப்பா, வீடு, இசை, பாட்டு சொல்லித் தந்த அன்னமாள் வாத்திச்சி - அவ்வளவு தான் அவளின் உலகம்.
வைஷ்ணவி பருவம் எய்திய போது, அம்மா கருப்பை புற்றுநோயால் இறக்க, வைஷ்ணவி இன்னும் தனியானாள். அவளின் உலகம் இன்னும் சுருங்கியது.
"சென்னை போ, உன் பாட்டுக்கு அங்க இருக்குற சபா தான் சரி. இன்னும் கர்னாடிக் கத்துக்க. உன்னோட குரல் ஒரு ஹைலி பெக்கூலியர்," என்றாள் பாட்டு வாத்திச்சி.
"இன்னும் மூனு வருஷத்துல உன் அரங்கேற்றம் நடந்திடனும். சரியா?"
கல்லூரியில் இளங்கலை படித்த பின் சென்னை மைலாப்பூரில் அம்மாவின் தங்கை வீட்டில் சில ஆண்டு காலம் கர்நாடக இசையை முழுமூச்சாக கற்க, அவளின் அழகும் குரலும் கண்டு திருமணமே வேண்டாம் என இருந்த ஒரு நாற்பது வயது கர்நாடக இசை வாத்தியார் ஒருவன் இவளிடம் ரோஜாப்பூவைக் கொடுத்து மண்டியிட, அதைக் காலால் மிதித்துப் போட்டு வந்துவிட்டாள்.
சென்னையில் எல்லா சபாக்களிலும் பெரும் செல்வாக்கு படைத்த அவனை புறக்கணித்ததால் அவளின் அரங்கேற்றம் சென்னையில் நடக்கவேயில்லை. அவள் தந்தை ஏற்பாட்டில், ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றம் ஆனதும் புகழ் பெற்றதும் வரலாறு.
'யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்?'
என அவள் பக்க வாத்தியங்களுடன் பாட, ஸ்ரீரங்க வித்துவான்கள் அதிர்ந்து போயினர். சென்னை, திருச்சி, மதுரைக்கு செய்திகள் பறந்தன.
குரலா அது? என்ன ஜாலம்! என்ன பாவம்! அடடா, விமர்சகர்கள் அதிசயித்து போயினர்.
அதன்பின் சில ஆண்டுகளிலேயே வைஷ்ணவியின் மேடைஏற்றம் எவன் தடுத்தும் நிற்காமல் சென்னையில் எல்லா சபாக்களிலும் அரங்கேறியது. ரோஜாப்பூ கொடுத்து சொந்தம் கொண்டாட நினைத்தவன் பவ்யமாக ஒதுங்கி நின்று கை தட்டினான்.
அன்றுமுதல் எல்லா டிசம்பரிலும் சென்னை சபாக்கள் வைஷ்ணவியின் குரலை வைத்து தான் பிழைப்பை நடத்தின. அவள் புகழ் கேரளாவிலும் பரவியது. வைஷ்ணவி முப்பது வயதைத் தொடும் முன்னே பல விருதுகள் வாங்கி குவித்தாள்.
எல்லாம் சரியாகத்தான் இருந்தது, திருமணதைத் தவிர.
அப்பா இருந்தவரை அவரை இடைவிடாது துன்புறுத்திக்கொண்டிருந்த பெரிய கவலையும் அது தான். அதுவே அவரை மேலே சீக்கிரம் கொண்டு போனது. மகளுக்கு திருமணம் ஆகும் வரை "ஆகவில்லையே" என கவலை; ஆனபிறகு "சே சும்மாவே இருந்திருக்கலாமே" என்ற மன உளைச்சல்.
"பாலகிருஷ்ணன்கிறது," "நாந்தான்." "ஓ.. நாங்க அவ ஆம்படையான்னு நினைச்சோம்,"
பதில் சொல்ல முடியவில்லை. மழுப்பலாக சிரிக்க வேண்டி இருக்கிறது. பேச்சை மாற்ற வேண்டி இருக்கிறது. அப்படியும்,
"மேரேஜ் ஆகிடுச்சிதானே.. உங்க டாட்டர் கழுத்துல சரடு இருக்கே?"
ஒருவரின் அந்தரங்கத்தில் இங்கிதமில்லாமல் நுழைவோர் சென்னையிலும் உண்டு, மார்த்தாண்டத்திலும் உண்டு, பிளைட் ஏறி நியூயார்க் போனால் அங்கேயும் உண்டு.
வைஷ்ணவியின் குரல் இரண்டாம் பட்சம்; அவளின் அழகு, கூந்தல், செழிப்பான அங்கங்கள் தான் முதல் பட்சம். சொல்ல போனால் மாமிச பட்சினிகளுக்கான பட்சணம், முழு விருந்து.
ஆனால் வைஷ்ணவி கவனமாக விலகி இருந்தாள். பாதுகாப்பாய் இருந்தாள். உருகி உருகி அழுது லவ் சொன்ன யாரையுமே அவள் லட்சியமே செய்யவில்லை.
"அதான் புருஷன் தான் இல்லியே, நமக்கேன் ஓகே சொல்ல மாட்டேங்குறா?" ஒரு கோடம்பாக்கத்து இளம் இசையமைப்பாளன் கத்தினான்.
"த்த்.. தா வரட்டும், நாளைக்கு வருவா இல்ல ரிக்கார்டிங்குக்கு?" ஆனால் வைஷ்ணவி வரவே இல்லை.
"யோவ்வ்.. என்னய்யா அட்வான்ஸ் வாங்கிட்டு ஓடுறா.. அந்த அட்வான்சுக்கு," அவன் இழுக்க,
"தம்பி அது நேத்தே ரீபே பண்ணிட்டோமே," அப்பா சொல்ல, உண்மை தான், காசு திருப்பி அனுப்பப்பட்டு விட்டது.
இளம் இசையமைப்பாளன் தேவதத் திகைத்தான். ஒருவேளை அவனின் பார்வையோ, உரசி உரசி பேசியதோ எதுவோ அவளை விலகச் செய்துவிட்டது.
இப்படித்தான் மைலாப்பூரிலும் நான்கு முழ வேட்டியிலிருந்து ஜீன்ஸ் வரை வைஷ்ணவி போகிற போக்கில் உடைத்துப் போட்ட இதயங்களுக்கு கணக்கில்லை.
ஆனால், இந்த வைஷ்ணவியோ அப்பாவிடம் தன் இரண்டாம் திருமணம் பற்றி பேசவும் இல்லை, பேச அவளுக்கு நேரமும் இல்லை. அப்பாவுக்கு தைரியமும் இல்லை. அவளின் இந்த குழப்பமான முதல் திருமணம் தன்னால் தான் நடந்தது, அந்த தப்பை அப்பா தான் செய்தார்.
வைஷ்ணவிக்கு அப்போது வயது பதினெட்டுக்குள் தான் இருக்கும். குரல் அழகா, உருவம் அழகா என பிரித்துப் பார்க்க முடியாத செழுமை அவளுக்கு. நல்ல சிகப்பு, அவள் அம்மாவை விட வைஷ்ணவி ஆளைக் கொல்லும் வில்லேந்திக் கண்கள், சாந்தமும் தெய்வீகமும் கொண்ட முகம், நீள நாசி. குளித்து முழுகி கூந்தல் அலைபாய வந்தால் வீட்டு வேலைக்காரர்களே தடுமாறுவார்கள். அந்த மாளிகைக்கு ஏற்ற பேரழகு, தேவஅழகு, கோபமில்லாத சிரிப்பு முகம். இவளை திருமணம் செய்ய இந்த லோகத்து ராஜாக்களுக்கு என்ன யோக்கிதை? என அவள் தந்தை பாலகிருஷ்ணன் யோசித்தார்.
"பதினெட்டு வயசு ரொம்ப சின்ன வயசாச்சேடா, அம்மா இல்லாத பொண்ணை தள்ளி விட்டுட்டான் பாலகிருஷ்ணன்னு சொல்றதுக்குள்ள," உறவுகள் அவரை கட்டி போட்டன.
"பாட்டு பாட்டுன்னு அலையறா, மயிலாப்பூர் போய் பாட்டு கத்துக்கட்டுமே."
வைஷ்ணவி சென்னைக்கு போய் இசை கற்க, தன் இருபத்தியொரு வயதில் இன்னும் புஷ்டியாக, செழுமையாக அழகைக் கூட்டிக் கொண்டு வந்து மார்த்தாண்டத்துக்கு திரும்ப வந்து இறங்க, கண்ணைப் பிடுங்கும் இந்த பேரழகியை எந்த மகாராஜாவுக்காவது கட்டிக் கொடுக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து வரன் தேடினார்.
வைஷ்ணவிக்கு பாட்டு தவிர இலக்கியமும் உயிர். பக்தி இலக்கியத்தில் தான் கர்நாடக இசையின் வீச்சு இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டாள். சம்பிரதாயம், கலாச்சாரம், பண்பு, அப்பற்ற தூய வாழ்க்கை என்று நெகிழ்வாக இருந்தாலும், பரம்பரை பரம்பரையாக வந்த கணக்கிலடங்கா செல்வமும் இரத்தத்திலேயே கலந்துவிட்ட செல்வமிடுக்கும் அவளை இன்னும் ராணியாக காட்டின.
கச்சேரிகள் இல்லாத போது வைஷ்ணவி வீட்டிலேயே கிடந்தாள். அதில் அலுப்போ சலிப்போ அவள் அடையவில்லை. தினம் அதிகாலை எழுந்து குளித்து, பழச்சாறு அருந்தி, இரு கையால் அள்ள முடியாத அந்த ஈரத்தலையை அள்ளிச் செருகி பூஜை அறைக்குள் நுழைந்துவிடுவாள். அதன் பின் பாட்டு தான்; வீணையோ அல்லது வாய்ப்பாட்டோ மனம் லயித்துவிடுவாள். இதில் பருவம் என்ன? காமம் என்ன? திருமணம் என்ன? இந்த பொன்னழகு மேனியை ஓர் ஆண் தீண்டலாகுமோ?
சந்தனமும் வெண் தந்தமும் சேர்ந்த ஒரு நிறத்திலான சரும அழகில் அளவான தனங்கள், அடங்காத வட்ட வடிவ புஷ்டியான பிருஷ்டங்கள், பொற்சிலை தோற்கும் தொடை வடிவங்கள் வெளிப்பட, உடல் முழுக்கவே தும்பைப்பூவைப் போல் பளீரென வெண்பளிங்காய்த் துலங்க மாளிகை முழுக்க அவள் நடந்து வருவதே பார்க்க திகைப்பாக இருக்கும்.
அதிலும் கச்சேரிக்கு போகிறாள் என்றால் இன்னும் விசேஷம். கோயில் கச்சேரி என்றால் கண்ணுக்கும் காதுக்கும் ஏன் மனசுக்கும் விருந்து தான்.
அவள் இசை கேட்காது போனாலும் அவளைப் பார்க்கவே ஜனம் திரளும். என்ன இருந்தாலும் கன்னி தானே, ஆண் தீண்டா பழம் தானே, சூலுறாத வயிறாய் இருக்கிறாளே! தாய்மையும் வந்து குவிந்தால் என் மகள் வைஷ்ணவி பூரண நிலவை விஞ்சுவாளே.
மனைவி போன துக்கத்தை மகளைப் பார்த்து போக்கிக் கொண்ட அந்த பெரும் செல்வந்தர், முன்னாள் தாசில்தார் வைஷ்ணவியின் அப்பா பாலகிருஷ்ணனுக்கு அவளுக்கு கல்யாணம் செய்து பார்க்க மும்முரமாக இறங்கினார்.
இந்த அழகிக்கு ஈடான ஒரு பேரழகன் எங்கிருக்கிறானோ? காலகாலத்தில் வீட்டில் ஒரு குட்டி, மழலைப் பட்டாளம் ஓடி உருண்டு வீட்டு சாமான்களை உடைத்தால் தானே இவ்வளவு பெரிய செல்வ மாளிகைக்கு பெருமை? அதெல்லாம் நினைத்து தான் அவர் உலக சுற்றுலாவில் படு பிஸியாக வைஷ்ணவியை திருமணத்துக்கு நெருக்கினார்.
"வயசு இருபத்தியாறு ஆச்சேம்மா. பதினெட்டு வயசுலேயே முடிஞ்சிருக்க வேண்டியது. உங்கம்மா இருந்திருந்தா,"
"அப்பா, அமெரிக்கா போயிட்டு வந்து சொல்றேன்பா."
"அப்படித்தான் கனடா போறதுக்கு முன்னாடியும் சொன்னே? உன்னை கர்நாடக மியூசிக் படிக்க வெச்சது தப்பா போச்சு."
"ஏன்பா? எல்லாரும் கல்யாணம் கட்டி, புள்ளை பெத்துக்கறாங்க, அப்புறம் போய் சேருறாங்க. நான் ஒருத்தி இப்படியே இருந்துடறேனே."
"கண்டிப்பா செய்யலாம். ஆனா அதுக்கு எனக்கு நாலைஞ்சு பொறந்திருக்கனும்.. இல்லையே."
"இல்லையே." அப்பாவை போலவே அவளும் சொல்ல, அந்த அழகிலேயே அவர் சொக்கி போனார்.
"அம்மா பாரும்மா, இது ஒன்னு தான்மா கேக்குறது. அப்பா போனப்புறம் என்ன செய்வே வைஷ்ணவும்மா?"
"வந்து சொல்றேன்பா."
"நீ சொல்லிிட்டா நான் பாக்க ஆரம்பிச்சிடுவேன்மா." அப்பாவைப் பார்க்க பாவமாகத் தான் இருந்தது. ஆனால் கல்யாணம், கணவன், அவனது அதிகாரம், தன் படுக்கையில் அவனுக்கு பங்கு கொடுத்து கூடி கலவி செய்து பிள்ளை பெற்று, அதற்கு மலம் கழுவி சோறூட்டி, வாய் துடைத்து, தூங்க வைத்து, பெரிதாய் வளர்த்து, அதனிடம் திட்டு வாங்கி, இதெல்லாம் நமக்கு ஏற்றதா? அவள் ரொம்பவே யோசித்தாள்.
"வைஷ்ணவி.." அப்பா கெஞ்சினார்.
"படுத்தாதீங்கப்பா, வந்து சொல்றேன்."
ஆனால், வைஷ்ணவி இங்கிலாந்தெல்லாம் போனாள், அமெரிக்கா போனாள். அடிக்கடி அப்பாவிடம் வீடியோ காலில் பேசினாள். நிறைய பரிசுப் பொருட்களோடு மார்த்தாண்டம் வந்து அப்பாவைப் பார்த்தாள். அவருக்கு துளியும் சந்தோஷமில்லை என பார்த்தவுடனே தெரிந்தது.
ஆனால் வீட்டில் ஒரு புதிய அறிமுகம். பயந்து போய் சமையலறை கதவின் பின்னே போய் ஒட்டிக் கொண்டிருந்த அந்த பெண்ணைப் பார்த்து அசந்து போனாள். வேலைக்காரியா? இவ்ளோ களையாக இருக்கிறாளே?
"இங்க வா," கூப்பிட்டாள்.
"அவளுக்கும் உன்னை விட ரெண்டு மூனு வயசு தான் பெருசு. பேரு கிரிஜா," அப்பா அறிமுகப்படுத்தினார்.
"வணக்கம்மா." அவள் பணிவு பிடித்திருந்தது.
"நம்ம கிட்ட விவசாயப் பண்ணைக் கணக்கு பாத்தாரே வேலாயுதம்,"
"ஆ.. ஆமா.. தவறிட்டாரே?"
"ஆமா. அவரு பொண்ணு. சிதம்பரத்துல கட்டி கொடுத்திருக்காங்க, ஆனா," அப்பா மேற்கொண்டு 'சொல்லலமா?' என்பது போல கிரிஜாவைப் பார்த்தார். அப்பெண் எந்த மறுப்பும் சொல்லவில்லை.
"புருஷன் மும்பை பக்கம் வேலை செய்ய போயி, அங்கயே ஒரு துலுக்கப் பொண்ணை சேத்துகிட்டான் போல."
"திரும்ப வரல. இவ இங்கேயே கிடந்து அல்லாடிட்டிருக்கா. இவங்க அம்மா தான் வந்து இவளை இங்க வீட்டோட வெச்சு வேலை கொடுக்க கேட்டுச்சு. எல்லா வேலையும் செய்வா. உனக்கும் ஒத்தாசையாய் இருப்பா."
கிரிஜா மிக பணிவாக இருந்தாள். தான் இருப்பது எப்பேர்ப்பட்ட இடம் என்பது தெரிந்திருந்ததால் அடக்கமாய் இருந்தாள். படிப்பு குறைவாக இருந்தாலும், சூட்டிகையாய் இருந்தாள். ஏற்கனவே வீட்டு வேலை, சமையலுக்கு இரு வயது முதிர்ந்த பெண்கள் இருந்தாலும், வைஷ்ணவியின் வேலைகளுக்கு ஒரு வெற்றிடம் நிரப்ப ஏதுவாக கிரிஜா இருந்தாள்.
மற்ற பெண்கள் இரவானால் வீட்டுக்கு போய்விட, ஆண்களில் செக்யூரிட்டி ஒருவரும், வயசான டிரைவர் ஒருவரும் அவுட் ஹவுஸில் தங்குவார்கள். தோட்டக்காரன் முருகேசன் மாலை வீட்டுக்கு போய்விடுவான். ஆண்கள் தங்குமிடம் என்பதால் கிரிஜாவை அவுட் ஹவுஸில் அல்லாமல் வீட்டோடு சமையலறைக்கு பக்கத்து ரூமில் தங்க வைத்தாள். அவளை அவுட் ஹவுஸில் தங்க வைக்காததே வைஷ்ணவி அவளுக்கு அளித்த முக்கிய இடத்தை சொன்னது. வைஷ்ணவியுடன் கடை தெருவுக்கு போய் வருவது, அவளுக்கு ஒத்தாசையாக இருப்பதெல்லாம் கிரிஜா தான். 'அம்மா அம்மா' எனக் கூப்பிட்டாலும் வைஷ்ணவியிடம் உரிமை எடுத்துக் கொண்டு பழகினாள். வந்த கொஞ்ச நாளிலேயே வீட்டின் மூலை முடுக்கெல்லாம் போய் வரும் உரிமை பெற்றாள். வைஷ்ணவியின் படுக்கையறை வரை சென்று சுத்தம் செய்யக்கூடிய நம்பிக்கையைப் பெற்றாள் கிரிஜா.
அந்த உரிமையில் தான் அவள் அந்த கேள்வியைக் கேட்டாள்:
"ஏம்மா கல்யாணமே வேணாங்கறீங்க?"
"ஏன், உன் கல்யாணம் என்ன ஆச்சு?"
"எல்லா ஆம்பளைங்களும் அப்படி இருப்பாங்களா?"
"ம்கூம், எனக்கு இசை தவிர எந்த ஆசையும் இல்லை, எதிர்பார்ப்பும் இல்லை."
"ஏம்மா, எவ்ளோ பேர் கல்யாணம் பண்ணிகிட்டு அவங்க வேலையையும் செய்யலயா?"
"போடி."
"நீங்க எதுக்கோ பயப்படறீங்க."
"அதெல்லாம் ஒன்னுமில்லடி."
"அப்ப மேரேஜ் பண்ணிக்கங்க. உங்க புள்ளையை தொட்டு தூக்க ஆசை இருக்காதா?"
"யாருக்கு?"
"எல்லாருக்கும் தான். ஐயாவுக்கு, எங்களுக்கு,"
"ம்கூம், நாப்பது வயசு வரைக்கும் பண்றதா இல்லை."
"சரியா போச்சு, அதுக்கப்புறம் பண்ணா என்ன, பண்ணாட்டி என்ன? குடும்பம் ஒரு பக்கம் இருக்கட்டும், வீட்டுக்கு வந்தா ஒரு வாய் தண்ணி கொடுக்க ஆளிருக்கனும்மா.. பாட்டு ஒரு பக்கம் இருக்கட்டும்."
"அதான் நீ இருக்கியே."
"ம்ம்.. உங்களுக்குன்னு தனியறையில ஒரு லேட்தான்மா.. உங்களுக்குன்னு ஒரு தனி ஜீவன் இருக்கனும்மா. உலகத்துக்கே ராணியா இருந்தாலும், ரூமுக்குள்ள போய் கதவை பூட்டிட்டா நீங்க தனி ஆளுதானேம்மா? குடும்பம்னு ஒன்னு இல்லாட்டி, இந்த பேரு, புகழ், காசெல்லாம் எதுக்கு? யார் கொண்டாட? யார் மெச்ச? யாருக்கு உபகாரம்? எதுக்கு துட்டு?"
கிரிஜா சொல்வது சரிதான் எனப்பட்டது. என்ன இருந்தாலும் தான் ஒரு பெண்; தான் ஒரு ஆணுக்கு அடங்கி, அவனிடம் கூடி குலாவி, பிள்ளை பெற்று, குடும்பத்தைப் பெருக்கித்தான் ஆக வேண்டும். விதிவிலக்காக இருப்பது அத்தனை சாதாரண காரியம் அல்ல. அதிலும் வீட்டுக்கு ஒரே மகளாகப் பிறந்து கல்யாணமே வேண்டாம் என அடம் பிடிப்பது, பெற்ற அப்பாவை கொடுமைப்படுத்துவது போலானது.
'35 வயதுக்கு மேல் கல்யாணம் செய்து கொள்ளலாம்' என நினைத்தால் அப்போது அதற்கான வாய்ப்புகள் எப்படி இருக்கும்? என சொல்ல முடியாது. கிரிஜா சொன்னது போல நமது இசைப் பயணம் ஒரு பக்கம் இருக்கட்டும், குடும்பம் பக்கமும் கொஞ்சம் கவனத்தைத் திருப்பலாம். அவள் மெல்ல இளகினாள். தன் 27 ஆம் வயதில் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தாள்.
அந்த ஆவணி மாதம் அப்பா வரன் பார்க்க போனபோது அவள் எதுவும் தடை சொல்லாமல் இருந்தாள். அப்பா வைஷ்ணவிக்கு சந்தோஷமாக தேடி அலைந்தார். புதுவை மாநிலத்தின் கலெக்டர் வரன் ஒன்று வந்தது. பேர் மனோகரன். அழகன் தான், சிவந்த நிறம், அடர் கேசம், வீட்டிற்கு ஒரே பையன், நல்ல அந்தஸ்து என தேடி சலித்து அந்த வரனைக் கொண்டு வந்தார். அது தான் அவர் மகளுக்கு செய்த தவறு.
Like Reply
#7
எபிசோடு : 6
வைஷ்ணவிக்கும் மனோகரனுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. மனோகரன் ஆணாதிக்க சாயலில் வந்தவன். அவனது அம்மாவை அப்பா போட்டு அடிக்கும் காட்சிகளைப் பார்த்து வந்தவன். எப்படியோ படித்துப் ஆளாகிவிட்டான். மேம்போக்காக வைஷ்ணவியின் மேன்மை எல்லாம் ஒன்றும் அவனுக்கு புரியவில்லை. தானே அதிகாரம் மிக்கவன் என நம்பினான்.
அவனது நண்பர்களும் அதிகாரிகளும் ஊழியர்களும் நிச்சயதார்த்தத்தில், "உங்க மனைவி ரொம்ப அழகா இருக்காங்க சார்," "பத்திரமா பாதுகாத்து வெச்சுக்கோங்க," "யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம் உங்களுக்கு கிடைச்சிருக்கு," என மாறி மாறி சொல்ல, அவன் குழப்பமடைந்தான். தான் இரண்டாம் பட்சமாய் இருப்பதாய் உணர்ந்தான். 'வைஷ்ணவிக்கு தான் ஏற்ற புருஷனா?' என தெரியாமல் அவன் குழம்பினான்.
கார்த்திகையில் திருமணம். திருமணத்திற்கு மார்த்தாண்டமே திரண்டு வந்தது. வைஷ்ணவியின் பக்கம் ஆயிரம் பேருக்கு மேலாவது வந்திருந்தார்கள். முதல் பந்தியில் உட்கார்ந்து உள்ளூர் ஆட்கள் சாப்பிட்டு விட, மாப்பிள்ளை பக்கம் ஆட்களுக்கு சாப்பாடு போடுவதில் தாமதமாகி பிரச்சனையானது. அவர்களது முதல் விரிசல் அங்கு தான் துவங்கியது.
மாப்பிள்ளை தாய்மாமன் சமையல்காரனை அதட்ட, வைஷ்ணவியின் தோட்டக்காரன் முருகேசன் வந்து ஆக்ரோஷமாய் பாய்ந்து அடிவாங்கினான். அவனையும் அந்த தாய்மாமன் தள்ளிவிட, சுதாரித்த முருகேசன் குரங்கு பிடி பிடித்து தாய்மாமன் முடியைப் பிடித்து ஆட்ட, சமையல்காரன் சாம்பார் வாளியைத் தூக்கி மூஞ்சில் அடித்தான். அதன்பின் அடிதடி தான். யார் யாரை அடிக்கிறார்கள் என்றே தெரியவில்லை.
விஷயம் பரவி கலவரமாகி பாலகிருஷ்ணன் கிச்சனுக்கு ஓடினார். "ஏய்ய்ய்! சும்மா இருங்கடா! வெளிய போங்கடா!" என பொதுவாக அதட்டினார்.
"நீ யார்யா?"
"பொண்ணுக்கு அப்பா," என சொல்லி முடிப்பதற்குள் அவரின் வயிற்றில் ஒரு குடிகார நாதாரி குத்து விட்டான். "த்தா! காராசேவு பொட்டலம் கேட்டா கொடுக்க மாட்டீங்களா? என்னடா மயிர்ல கல்யாணம் பண்றீங்க?"
அடி வாங்கிய வயோதிகர் பாலகிருஷ்ணன் வலி தாங்க முடியாமல் சுருள, இடமே ஸ்தம்பித்துப் போனது.
"ஏய்ய்! எங்கய்யாவையா அடிச்சீங்க? செத்தீங்கடா இன்னைக்கு!" முருகேசன் ஆத்திரப்பட்டான். பெரிய இரும்பு கரண்டியால் சகலரையும் அடித்தான்.
சண்டை இன்னும் பெரிதானது. இடமே ரத்தக்களரியானது. வைஷ்ணவி விக்கித்துப் போனாள். கிரிஜா தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.
அது பெரிய பிரச்சினையாகி, நடுநிசியில் காவல் நிலையம் வரை சென்றது. விடிந்தால் முகூர்த்தம். அமைச்சர்கள், பெரிய வி.ஐ.பி-கள் எல்லாம் வர இருக்கும் திருமணம் இப்படி சந்தி சிரிக்க, 'வைஷ்ணவிக்கு திருஷ்டிப்பட்டுவிட்டது', 'ஊர் கண் பட்டுவிட்டது' என்றெல்லாம் சொன்னார்கள்.
"தாலி கட்டமாட்டேன்," என சொல்லி காட்டுக் குள் தண்ணியடிக்க நண்பர் படை சூழ சென்ற மாப்பிள்ளையை ஊர் பெரியவர்கள் கெஞ்சிக் கூத்தாடி அழைத்து வந்தார்கள். இன்ஸ்பெக்டர் தலைமையில் விடிய விடிய பஞ்சாயத்து பேசி சமரசம் ஆனது.
பிரச்சினைகள் ஒரு பக்கம் இருந்தாலும் கல்யாணம் திட்டமிட்டபடி சரியான முகூர்த்தத்தில் நடந்தது. முக்கியமானவர்கள் எல்லாம் வந்தார்கள். ஆனால் யாருக்குமே சந்தோஷம் இல்லாதது போல தோன்றியது.
கல்யாணம் முடிந்து மாலையில் மாப்பிள்ளையின் நட்புகள் தனி காரில் சென்னை திரும்பிய போது, பாலகிருஷ்ணனின் வயிற்றில் குத்திய பையன் காரிலிருந்து இறக்கப்பட்டான். அந்த கலவரத்துக்கு உள்ளூர் முருகேசன் தலைமை தாங்க, "வயசானவங்க கிட்ட வீரத்தைக் காட்டுவியா?" என தபதபவென அவர்களை முருகேசனின் ஆட்கள் சுற்றிப் போட்டு வெளுத்தனர். அவன் மாப்பிள்ளையின் உயிர் நண்பனின் தம்பியாம்.
விஷயம் மனோகருக்கு தெரிவிக்கப்பட அவன் குதித்தான், ஆர்ப்பாட்டம் செய்தான். மீண்டும் காவல் நிலையம், மீண்டும் பேச்சு.. ஒரே குழப்பம், யாருக்கும் நிம்மதியே இல்லை. முருகேசன் லாக்கப்பில் அடைக்கப்பட்டான்.
அதன் வெளிப்பாடாக அவர்களின் முதலிரவு தேதி தள்ளிப் போனது. திருமணமாகி அவன் வைஷ்ணவியிடம் சரியாகப் பேசக்கூட இல்லை. ஒரு வாரம் கழித்து தான் சாந்தி முகூர்த்தத்திற்கு நேரம் குறித்து கொடுத்தார்கள்.
ஆனால், அந்த ஒரு வாரத்திலேயே அவனிடம் நல்லதாக ஒரு விஷயம் கூட இல்லை என்பதை வைஷ்ணவி புரிந்து கொண்டு அழ ஆரம்பித்தாள். கிரிஜா தான் திடப்படுத்தினாள். "இல்லம்மா, அந்த போலீஸ் ஸ்டேஷன் பிரச்சினை தான் எல்லாரும் மனசுல ஓடிட்டு இருக்கு. நாளானா சரியாயிடும். மாப்பிள்ளை ரொம்ப நல்லவரு, எல்லார்கிட்டயும் தன்மையா பேசுறார்," என என்னென்னமோ சொல்லி பார்த்தாள்.
ஆனால், வைஷ்ணவிக்கு மனசு கூடவில்லை. அவனுக்கு வைஷ்ணவியின் அழகைப் போற்றவும் தெரியவில்லை, ஆராதிக்கவும் தெரியவில்லை, ஆண்டு அனுபவிக்கவும் தெரியவில்லை, இனிமையாக பேசி அவளை மயக்கவும் தெரியவில்லை.
"மன்னிப்பு கேக்குறாப்பல கேட்டு, பசங்களை அடிக்க பின்னாடியே ஆளை அனுப்புறானா உங்கப்பன்?" அவளிடம் ஒரு எதிரி போல சண்டை தான் பிடித்தான்.
"என்னடி பெரிய அழகு? பெரிய பாட்டு? என் படிப்பு என்ன தெரியுமா? என் சைனுக்கு என்னா வேல்யூன்னு தெரியுமா?"
அவன் கூட பதிலுக்கு பேசவும், சண்டை போடவும் கூட அவளுக்கு தெரியவில்லை. அப்பா தான் மறுபடி வந்து மன்னிப்பு கேட்டார், வைஷ்ணவியையும் திடப்படுத்தினார். "சரியோ தப்போ! தலையை கொடுத்தாச்சு. சமாளிச்சு மீண்டு வந்தா உன் சமத்து," அவளின் கண்ணைப் பார்க்காமல் பேசினார். அவள் எல்லாவற்றையும் மறக்க முயன்றாள், அவனிடம் கூட நினைத்தாள்.
வைஷ்ணவியை தங்க தேவதையாக கிரிஜா அலங்கரித்து சாந்தி முகூர்த்ததுக்கு அனுப்பினாள். அன்று வானில் பௌர்ணமி நிலவு தங்க நிறத்தில் பெரு ஒளியைப் பொழிந்துகொண்டிருந்தது. வீட்டுத் தோட்டத்தில் வேலியோரமிருந்த வேப்ப மரங்கள் பூத்துக் குலுங்கியிருந்தன, அதன் நறுமணம் கலந்த மெல்லிய இளங்காற்று தோட்டம் முழுதும் வீசிப் புத்துணர்ச்சியளித்தது. கிரிஜா நமுட்டு சிரிப்புடன் வைஷ்ணவியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் தயக்கமாய் தன் படுக்கை அறைக்கு போனாள். காலம் காலமாய் இதில் யாரும் நுழைந்ததே இல்லை. இப்போது இன்னொரு ஆள், புது ஆள். அவளுக்கு படபடப்பாய் இருந்தது.
ஆனால் அவனோ, அவள் பாலுடன் உள்ளே வந்த உடனே, "ஏதோ பாட்டெல்லாம் பாடுவியாமே நீ?" எனக் கேட்டு அவளை அதிர்ச்சி அடைய வைத்தான்.
"சரி, பாடு கேட்போம்." அவன் வெறும் அரை நிக்கரை அணிந்து கொண்டு, கால்நீட்டி கட்டிலில் சாய்ந்து கொண்டு கேட்க, அவளுக்கு கர்நாடக சங்கீதமே மறந்து விட்டது. கஷ்டப்பட்டு ஒரு ராகத்தில் அவள் பாடலாம் என நினைக்க,
"அதெல்லாம் வேணாம், லேட்டஸ்ட் சினிமா பாட்டு பாடு. 'ரௌடி பேபி' தெரியுமா உனக்கு?" என சொன்னான்.
அவள் முறைக்க, "ஏண்டி, அந்த கச்சேரி பாட்டெல்லாம் பாடுற? அப்ப இந்த பாட்ட பாடுனா என்னடி? எல்லாம் ஒன்னு தானே? பாடுடி," என்றான்.
அவளுக்கு அழுகையாக வந்தது. வாழ்க்கையே வெறுத்தது. வார்த்தைகளைக் கோர்த்து அந்தப் பாட்டை பாடத் தொடங்க,
"ஏ,ஏ.ய்,ய் கோலி சோடாவே!"
"பாடுனா எப்படி? அப்படியே ஆடு," என்று அவன் கட்டளையிட்டான்.
என்ன இருந்தாலும் இன்று முதலிரவு, ஆயிரம் ஆசைகளுடன் வந்திருப்பான், ஏமாற்றக்கூடாது என அவள் அந்த பாடலுக்கு நடனமாட நினைக்க, அவன் சிரித்தான்.
"பட்டுப்புடவை கட்டிட்டு இப்படி ஆடுறது நல்லா கிக்காதான்டி இருக்கு." அவன் பாய்ந்து அவள் புடவை முந்தானையை விலக்க, அவளது மதமதத்த மார்புக் கூம்புகள் ரவிக்கைக்குள் திமிற திமிற, அவன் அவளது மார்பழகைப் பார்த்து திகைத்தான்.
"ஆஆஅ வாவ்! இட்ஸ் செக்சி பூப்ஸ்!" என்றான். "பாட்டெல்லாம் அப்புறம், முதல்ல படு," என்றான்.
"விடுங்க.. விடுங்க, வேணாம்ம்ம்ம்ம்ம்!" அவளுக்கு அந்த கணமே கணவனும் கசந்தான், காமமும் கசந்தது.
அவன் வைஷ்ணவியின் மேலே படுத்து உருண்டான். உடலெங்கும் முகர்ந்தான், முகத்தைத் தேய்த்தான். அந்த வாசனை அவனை வெறி பிடிக்க வைக்க, அவளது பட்டுப் புடவையும் பாவாடையும் முட்டிக்கு மேல் தூக்கப்பட, அந்தப் பளீரென வெளிப்பட்ட வெண் தந்த தொடை அழகைப் பார்த்த உடனே தனது ஆண்மையை பறிகொடுத்தான். ஆம், பறிகொடுத்தான்!
அவளது மாசுமருவற்ற தொடையில் முத்தமிடும் முன்பே அவனது ஆண்மை பீச்சி அடித்தது. 'இவ்ளோ சீக்கிரமா? எக்கச்சக்கமா கிளப்பிட்டாளே! நாம் ஏன் இவ்ளோ சீக்கிரம் எக்சைட் ஆகி பலவீனமாக இருக்கிறோம்? உணர்வுகளை கட்டுப்படுத்த தெரியவில்லையே. வெளியே தெரிந்தால்? ச்சே! போன வாரம் கூட ஸ்டெனோ கூட பண்றப்ப இப்படி தான் ஆச்சு,. இதென்ன இப்படி ஒரு பலகீனம்? உறுப்பு விரைக்குறதுக்குள்ள லீக் அவுட் ஆனா எப்படி? புதுப்பொண்ணு என்ன நினைப்பா?' அவனுக்கு ஒரே ஷாக்!
அவன் தனது குறையை மறைப்பதற்கு அவளை திட்டினான்.
"என்னடி இப்படி கட்டை மாதிரி படுத்தா எப்படி மூடு வரும்? த்தா எனக்குன்னு கட்டி வச்சாங்க பாரு!" என சொல்லிக்கொண்டு அவன் பாத்ரூம் போக, தனது வாழ்வியல் இப்படி ஒரு உச்சக்கட்ட அதிர்ச்சியை எதிர்பாராத வைஷ்ணவி நிலை குலைந்து போனாள். அவன் செய்த விஷயங்கள் அவள் கன்னங்களில் யாரோ பளீர் பளீரென அறைவதைப் போலிருந்தன. கொஞ்சங்கூட அன்பும் தூய்மையும் அற்ற, பரிசுத்தமில்லாத ஒருவனைக் கொண்டுவந்து வைத்து தன்னுடைய அமைதியான வாழ்வை எல்லோரும் நாசம் செய்துவிட்டதாய் வெதும்பினாள்.
காமம் என்பது காட்டாறா? சிறு நதியா? பொங்கும் அலையா? எதுவுமில்லை. அது நதி, ஆனால் பெரு நதி! சுனையில் உருவாகி, மலை முகட்டில் ஓடி, அருவியில் தொபுக்கென குதித்து, பாறைகளில் பட்டு தெறித்து, பள்ளங்களை நிரப்பி, சமவெளிகளில் அமைதியாகி, வயலில் பாய்ந்து, சமுத்திரத்தில் கலந்து போய் சேரும் ஒரு பிரம்மாண்ட நதியைப் போன்றது தான் ஒவ்வொரு உயிரிலும் தோன்றும் காமமும். இது உடல்களைத் தேடி புறப்பட்டு துளைகளில் பொருந்தி நீர் சுரந்து நீர் வழிந்து நீர் நிரம்பும் வெறும் அறிவியலா என்ன? மனோகரனுக்கு இதெல்லாம் தெரியவில்லை.
தனக்குக் களங்கம் உண்டாக்கப் புறப்பட்ட காலனைப் போல் அவன் தோற்றம் அவளுக்கு அச்சமூட்டியது. இவனும் ஒரு மனிதனா? அவனை எரித்துவிடுவதுபோல் அவன் முதுகைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
உள்ளத்தில் தணலாய்த் தகித்திருந்த கோப அக்கினி தணிந்து கரையவோ என்னவோ அவளுக்கு அழுகையும் பீறிட்டுக்கொண்டு வந்தது. 'கடவுளே, எனக்கு ஏன் இந்த நிலைமை? அழகும் அறிவும் கொடுத்து வாழ்க்கையைப் பறித்தாயோ?' விம்மி வரும் அழுகையை உதட்டைக் கடித்து தாக்குப் பிடித்துக்கொண்டு குப்புறப் படுத்துக்கொண்டாள்.
அடுத்த நான்கு நாட்களிலேயே அவள் தனது இயல்பான வாழ்க்கை மாறிப் போனதாக உணர்ந்தாள். அழுகை, வேதனை, துக்கம் அவளை சூழ, வீட்டில் பூஜை புனஸ்காரம் இல்லை, பாடல் சாதகம் இல்லை, பழைய கலகலப்பு இல்லை. அவனும் அவளைத் தேடவில்லை, அவளும் அவனை நாடவில்லை. அவன் தொட்ட குறுகுறுப்பு அவஸ்தை இன்னும் போகவில்லை. அவள் முகமே கறுத்துப் போனாள்.
அந்த பழைய பொலிவும் அவள் முகத்தில் இல்லை. எதையோ பறி கொடுத்தவள் போல் இருந்தாள். அவளின் நடை உடை பாவனை எல்லாம் மாறிவிட்டது. புதுக்கல்யாணம் ஆன பெண் போலவே அவள் இல்லை.
இவர்கள் நடுவே என்னவோ ஒரு பிரச்சினை என்பதைக் கண்டு கொண்ட அப்பா பாலகிருஷ்ணன் மாப்பிள்ளையைக் கூப்பிட்டு கேட்க, அவன் அவரிடமும் வரம்பு, மரியாதை இல்லாமல் பேசினான்.
அன்று இரவு வெகு நேரம் கழித்து வந்தான். குடித்துவிட்டு தள்ளாடி உள்ளே வந்தவனை தோட்டக்காரர்கள் கூட்டி வந்து ஹாலில் கிடத்தினார்கள். வைஷ்ணவிக்கு ஜென்மமே செத்துவிட்டது.
"அடப்பாவி! அவ தனியாய் இருந்தப்பவே நல்லா இருந்தாளே. அவ மனச கெடுத்து, அவ வாழ்க்கையை கெடுத்துட்டானே இந்த பாவி!" என பாலகிருஷ்ணன் அவனை ஏக வசனத்தில் திட்டுவதை அவன் குடிபோதையில் இருந்தாலும் கேட்டுக் கொண்டு தான் இருந்தான்.
அதற்கு பதிலாக மறுநாள் காலை போதை தெளிந்த பிறகு மாமனாரிடம் சண்டை போட்டான், அடிக்க போனான். வேறு வழியில்லாமல் வேலைக்காரர்கள் அவன் மீது கை வைக்க வேண்டியதாக, அந்த வீட்டில் இன்னுமொரு பெரிய சண்டை நடந்தது.
அவன் கோபத்துடன் காரை எடுத்துக் கொண்டு போனான். சொல்லாமல் கொள்ளாமல் புது மனைவியை விட்டு, அபச்சாரமாக அவன் புதுவை போனான். அங்கே அவன் தன் அலுவலகத்துக்கு போக அங்கேயும் அவனுக்கு பிரச்சினை.
மண்ணை அள்ளுவதற்காக லஞ்சம் வாங்கிய வழக்கு ஒன்று அவன் தலைக்கு மேலே தொங்கும் கத்தியாய் காத்துக் கொண்டு இருந்தது. அந்த வழக்கை கையில் எடுத்த புதுவை காவல் அதிகாரி தமிழக அரசோடு மிகவும் தொடர்புடையவர். விஷயம் தமிழக அரசிடம் வர, 'யார்? என்ன ஏது?' என விசாரித்து, வைஷ்ணவியின் கணவர் என தெரியவர, வைஷ்ணவியை தொடர்பு கொண்டு, "விஷயம் இப்படி இருக்கிறதே மேடம்? என்ன செய்யலாம்?" என்றார்கள்.
"உங்களுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வாரம் தான் ஆகுது. அதுக்குள்ளேயே இப்படி ஆயிடுச்சு. நீங்க என்ன சொல்றீங்க?"
வைஷ்ணவி எதுவும் சொல்லவில்லை.
"வைஷ்ணவி, எவ்வளவு காசு ஆனாலும் பரவாயில்லை, நீ பயப்படாதே. மாப்பிள்ளையை நான் கேஸ்லருந்து கூட்டிட்டு வரேன்," என கிளம்பிய தந்தை பாலகிருஷ்ணனை கை பிடித்து தடுத்தாள்.
"அப்பா, இவ்வளவு மோசமான ஆளு எனக்கு தேவையில்லை. அரசாங்கம் என்னவோ நடவடிக்கை எடுக்கட்டும். நீங்க மட்டும் இதுல தலையிடாதீங்கப்பா," என்றாள்.
"என்னம்மா இப்படி சொல்ற? என்ன இருந்தாலும் அவர் இந்த வீட்டோட மாப்பிள்ளையாச்சே? எனக்கப்புறம் அவர் தான்மா இந்த வீட்டுக்கு எஜமானர். உனக்கு பாதுகாப்பு,?"
"அவர் பாதுகாப்பெல்லாம் இல்லப்பா. எனக்கு அவன்கிட்ட இருந்து தான்ப்பா பாதுகாப்பு வேணும்," என சொல்லி அழுதாள்.
அவன் மீது வழக்கு பாய்ந்து, அவன் சில மாதங்களிலேயே ஜாமீனில் வந்தான். உருக்குலைந்து இருந்தான். அப்பாவின் காலில் விழுந்து அழுதான். ஆனால் வைஷ்ணவி அவனை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. அவுட் ஹவுஸில் தான் தங்கினான். தாடி வளர்த்து, கண்கள் பஞ்சடைத்து, நலிந்து வைஷ்ணவியின் பார்வைக்காக காத்திருந்தான்.
ஒவ்வொரு நாளும் அப்பாவும் கிரிஜாவும் மாறி மாறி வைஷ்ணவி என்கிற மாணிக்கக் கல்லை பேசி பேசி கெஞ்சி கரைத்தார்கள்.
அவள் கிரிஜாவுடன் ஜெகதீஸ்வரி கோயிலுக்கு போய் கும்பிட்டு வர, வழிமறித்த பூசாரி ஒருவர் சாமியாடி, "யார் பேச்சையும் கேக்க மாட்டியா? இனிமேலும் அந்த ஆள இப்படி வைக்கிறது நியாயமா? புருஷன்தான்மா உன்னோட வருங்காலம்!" என பாடி ஆடினார்.
வைஷ்ணவி எதுவும் சொல்லவில்லை. 'சரி, அவனை தண்டித்தது போதும். இன்று அஷ்டமி, நாளை நவமி. இரண்டு நாள் கழித்து அவனிடம் பேசலாம். அவன் அற்ப பதர் தான், இருந்தாலும் தாலி கட்டியவன். அவனை அழைத்து பேசி அவன் ஒத்து வருவானா இல்லையா என கேட்கலாம்' என நினைத்துக் கொண்டாள்.
அந்த முடிவைக் கூட அவள் யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் அந்த இரண்டு நாள் கூட அவன் தாங்கவில்லை, அவன் புத்தி பல்லிளித்து விட்டது.
Like Reply
#8
எபிசோடு : 7
அன்றைய நாள் இரவில் நடுராத்திரியில் எழுந்த வைஷ்ணவி தண்ணீர் கூஜா காலியாக இருக்க, கூஜாவை ஏந்தியபடி இறங்கி கீழே வந்தாள். கீழே வந்து பார்த்தால் அவளது கணவன் மனோகரன், கிரிஜாவின் கை பிடித்து இழுத்துக் கொண்டிருந்தான்.
"வாடி, ஒரே தடவை வாடி!" வெறும் ஜட்டியில் இருந்த அவன், கிரிஜாவின் புடவையை முழுவதுமாக அவிழ்த்து விட்டிருந்தான். அவள் காட்டன் ரவிக்கை கிழிந்து வெள்ளை பிரா தொங்கிக் கொண்டிருந்தது. மனோகரன் அவளை சேர்த்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயல,
"ஐயோ ஐயா! என்னை விட்டுடுங்க! அய்யோ வேணாம்யா.. தயவு செஞ்சு விட்டுடுங்க!" என கிரிஜா சொல்லிக் கொண்டிருக்க, காட்சியைப் பார்த்த வைஷ்ணவி பதறி, கையில் இருந்த கண்ணாடி டம்ளரை தூக்கி அடித்தாள்.
அது சரியாக அவன் தலை மீது பட்டது.
"ஏய்ய்ய் வைஷ்ணவி!" அவன் திரும்பினான்.
அவள் முன்னைவிட அருவருப்புடன் அவனைப் பார்த்தாள். அவளின் அழகு முகம் அளவு கடந்த எரிச்சலால் கன்றிச் சிவந்தது. கண்கள் கோபமாய் குறுகின, உடம்பு கொதித்தது. ஜீவ நாடிகள் அறுந்தாற்போல நரம்புகள் துடித்துக்கொண்டிருந்தன. 'இப்படி ஒரு ஜென்மமா?' அவன் வலி தாளாமல் முனகிக் கத்தினான்.
"அய்யோ,." அவன் விழ, ஹாலெல்லாம் பயங்கர ரத்தம். அவன் மட்டையாக கீழே விழுந்து கொண்டிருந்தான்.
வைஷ்ணவி உடல் நடுங்க, "என்னம்மா இப்படி பண்ணிட்டீங்க? தலையில அடிபட்டுச்சேம்மா?" கிரிஜா பதைபதைக்க,
"சாவட்டும் விடு," என்றாள்.
கிரிஜா ஓடிப் போய் அவளின் அப்பாவை எழுப்பி கூட்டி வந்தாள்.
ஹாலில் விழுந்து கிடந்த மாப்பிள்ளையைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டார்.
"மாமா.. டேய்ய்ய் மாமா.." அவன் முனக,
"என்ன ஆச்சுன்னு தெரியலடி இந்த வீட்டுக்கு. எவ்வளவு சந்தோஷமாக இருந்தோம், எவ்வளவு மங்களகரமா இருந்த வீடு! இப்படி ஒரு அயோக்கியன் உள்ள புகுந்து இப்படி பண்ணிட்டானே! அடப்பாவி! இனிமேல் இவனை வீட்டிலேயே வச்சுக்க கூடாது!"
அவர் தனக்கு தெரிந்த போலீஸ் இன்ஸ்பெக்டரை அழைத்தார். வைஷ்ணவி செய்த வேலையை தான் செய்ததாக சொல்லி பழியை தன் மீது போட்டுக் கொண்டார். கூஜாவைக் காட்டினார்.
"எங்க வீட்டு வேலைக்காரிகிட்ட தப்பா நடக்கப்போன மாப்பிள்ளையை நான் தான் அடிச்சிட்டேன்," என்றார்.
குற்றுயிரும் கொலையுறுமாய் கிடந்த அவனை அந்த இன்ஸ்பெக்டர் தனக்கு தெரிந்த ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு, வழக்கு ஏதும் போடாமல் அவனை எச்சரித்து விட்டு அனுப்பினார்.
"டைவர்ஸ் பண்ணிடறேன்பா, இவன் மனுஷனே இல்லை," வைஷ்ணவி கூற, அடுத்த ஆறு மாதத்தில் விவாகரத்தும் வந்துவிட்டது.
அந்த திருமணம் என்கிற கறை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் வைஷ்ணவியை போல பரிசுத்தமானவள் யாருமே கிடையாது. இந்த திருமணம் ஏன் நடந்தது? எதற்கு நடந்தது? எதற்கு தான் நடந்து தொலைந்தது? ஏன் இந்த அச்சாணியம்?
'கல்யாணமாகியும் கன்னியாக தான் நாம் இருக்கிறோம்' என்பது எத்தனை பேருக்கு தெரியும்? வைஷ்ணவி நொடிந்து போனாள். பரீட்சை எழுதவில்லை என்றால் பரவாயில்லை, ஆனால் பரீட்சை எழுதி பெயிலாகி போனது போல தானே இந்த திருமணம் எனக்கு நடந்துவிட்டது!
வைஷ்ணவி அந்த பேரழிவு சிதைவிலிருந்து மீள ஆறு மாதமானது. அதற்கு துணையாக அவளின் இசை இருந்தது.
ஆனால் அவளது அப்பாவிற்கு அப்படியில்லை.. நாளாக நாளாக அவர் நலிந்தார், மெலிந்தார், மகளுக்காக வருந்தினார். 'தனது மகளை அவள் இஷ்டப்படியே விட்டிருந்தால் அவள் ராஜாத்தியாக, ராணியாக இருந்திருப்பாளே?' என்றெல்லாம் வருந்தி வருந்தி அவர் சோர்ந்தார். அவரது கவலையே அவரது உடலை அரித்தது. அவளுக்காக கவலைப்பட்டே அதற்கு அடுத்த ஆண்டில் அவர் இறைவனடி போய் சேர, வைஷ்ணவி தனியானாள். அவள் உலகம் ஒற்றைப் புள்ளியானது.
சோகம், சோகம், அடுத்தடுத்த சோகம் என்றாலும் இசை அவளுக்கு ஆதரவாக இருந்தது. அவள் விரும்பிய இசையில் மட்டுமே முழு கவனம்த்தினாள். நிறைய புத்தகங்கள் எழுதினாள், நிறைய கச்சேரிகளை ஒத்துக் கொண்டாள், பலருக்கும் பாட்டு சொல்லி தந்தாள், கோயிலில் அழைத்தால் இலவசமாக போய் பாடினாள், ஆல்பம் போட்டாள், யூட்யூப் சேனல் துவங்கினாள்.
இன்னும் இன்னும் புகழ்பெற்றாள். கசப்பான எல்லா விஷயங்களையும் மறந்துவிட கடவுளை வேண்டினாள். வலிமையான ஆன்மபலம் அவளுக்குள் திடமாக வளர்ந்தது, கவலைகளை புறந்தள்ளினாள். அவள் முகம் மீண்டும் மிகப் பொலிவோடு துலங்கியது. சருமத்தில் சந்தனத்தைக் குழைத்துப் பூசினாற்போன்ற ஒரு மெருகும் மெதுமெதுப்பும் தென்பட்டது. அர்ப்பணிப்போடு பாடுவதால் அவள் முகம் தெளிந்ததால், சாந்தம் தவழும் அந்த முகம் அருகில் பார்ப்பதற்கு வசீகரமாகவே இருந்தது.
தன்னுடைய கடந்த கால வேதனைச் சுவடு எதுவும் தெரியாமல் பார்த்துக் கொள்ள அவளுக்கு கர்நாடக இசை ஒரு பக்கம் உறுதுணையாக இருக்க, கிரிஜாவும் அவளுக்கு துணையாக இருந்தாள்.
வைஷ்ணவி யூட்யூப் சேனலை ஓப்பன் செய்தாள். அது பயங்கர ஹிட் ஆனது. இன்ஸ்டாகிராமிலும் அவள் இருந்தாள். ஃபாலோயர்ஸ் பல மில்லியன்களை தாண்ட, ஒரு பிரைவேட் ஆப் தங்கள் சந்தாதாரர்களை தேர்ந்தெடுத்து வாரம் ஒரு மணி நேரம் நேரலையில் சேர்ந்து பாட அழைத்தது. அதற்கு நல்ல சன்மானமும் கொடுக்கப்பட்டது. பல டிவி சேனல்களுக்கு அடிக்கடி நடுவராக போனாள். பணம் பல வழிகளில் வந்த வண்ணம் இருந்தது.
அவள் அப்பாவிற்கு இந்த வீடு மட்டுமல்ல, நாகர்கோவில், கன்னியாகுமரியிலெல்லாம் பல பங்களாக்கள் இருக்கின்றன, கொடைக்கானலிலும் ஊட்டியிலும் ஏகப்பட்ட சுற்றுலா பங்களாக்கள் சொந்தமாக இருக்கின்றன. அதில் இருந்து வரக்கூடிய வருமானமே மாதம் 10 லட்சத்திற்கு மேல் இருக்கும். இது இல்லாமல் டவுனில் ரெண்டு பெட்ரோல் பங்கு ஏஜென்சியும் உண்டு. இது போக அவருக்கு இருந்த விவசாயப் பண்ணை மூலம் பல லட்சம் வருமானம் வந்தது. அது இல்லாமல் வைஷ்ணவியின் யூட்யூப் மற்றும் கச்சேரிகளில் வருமானம் ஆண்டிற்கு 30 லட்சதைத் தாண்டியது.
ஆனால், கழுத்தில் மனோகரன் கட்டிய தாலிச்சரடு புழுவைப் போல் நெளிந்து அருவருப்பு மூட்டியது. கழட்டி போடவும் மனமில்லை. வயது என்னமோ 28, 29 தான். ஆனாலும் தனித்திருப்பது அவளுக்கு சுகமாயிருந்தது.
தந்தை இறந்தபிறகு எல்லா வேலைக்காரர்களையும் நீக்கிவிட்டு அவசியத்துக்கு ஒரு வேலைக்காரியையும் கார் வயசாளி டிரைவரையும் மட்டும் வைத்துக்கொண்டாள். அவளின் உறவினர்களுக்கும் சொத்துக்களின் மேல் ஒரு கண் இருந்தது. 'அதை மேற்பார்வை செய்கிறோம்' என்று நெருங்கி வர முயன்றவர்களை வைஷ்ணவி அண்டவே விடவில்லை. எல்லோரையும் தூரவே நிறுத்தினாள். நிலபுலன்களை குத்தகைக்கு விட்டாள். மார்த்தாண்டம் தவிர மற்ற ஊர்களிலிருந்த பெட்ரோல் பங்க்குகளையும் விற்று பணத்தை வங்கியில் வைத்துவிட்டாள்.
கணக்கில்லாத சொத்து குவிந்திருக்க, மணமாகியும் கன்னி கழியாத பெண் இப்படி இருந்தால் யார் தான் அவளை விட்டு வைக்க நினைப்பார்கள்? அவளது சொந்தங்களே நாக்கை துருத்திக் கொண்டு சுற்றி சுற்றி உதவுவது போல ஓடி வந்தன.
"ஒண்டி ஆளு நீ? தனியா என்ன செய்வ? நாங்க பார்த்துக்கிறோம்," என உரிமை எடுத்து தங்க வந்தார்கள். அத்தனை பேரையும் வைஷ்ணவி இரக்கமில்லாமல் விரட்டி விட்டாள்.
"டவுன்லேயே உங்கப்பனுக்கு ஏழு காம்ப்ளக்ஸ் இருக்கு. அதெல்லாம் போய் பொம்பளை நீ போய் வாடகை வாங்கணும்? ஆறு ஊர்ல பெட்ரோல் ஏஜென்சி, போய் பொம்பளை நீயா நடத்த முடியும்? ஊட்டிக்கும் கொடைக்கானலுக்கும் கன்னியாகுமரிக்கும் நீயா போக முடியும்? சொன்னா கேளு!" உறவுகள் அவளை ஏய்க்க பார்த்தார்கள்.
"எங்க வீடு, எங்க சம்பாத்தியம், எங்க கஷ்டம், நாங்க பாத்துக்குறோம், யாரும் வரக்கூடாது," என வைஷ்ணவி தீர்மானமாய் சொல்லிவிட்டாள்.
"நான் போன அப்புறமா என் பொண்ண நீ தான் பார்த்துக்கணும்னு சொன்னாரு, எத்தனை தடவை அழுது இருப்பார் தெரியுமா உங்க அப்பா?" மூக்கை சிந்திய சென்னை சித்திக்காரிகளையும் அத்தைகாரிகளையும் அவள் அறவே புறந்தள்ளினாள்.
மார்த்தாண்டத்தில் அவள் யாரையுமே கிட்ட சேர்க்கவில்லை. பணம் என்பது ஒரு பிரச்சினை அல்ல, பணத்தைப் பங்கு போட வந்து அவளைப் பங்கு போட்டு விட்டால் என்ன செய்வது? என்கிற பயம் அவளுக்கு எப்போதும் இருந்தது. எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற தைரியமும் அவளுக்கு இருந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக அவள் புகழ் பெற்ற வி.ஐ.பி ஆகிவிட்டதால் அவளிடம் யாரும் வாலாட்ட நினைக்கவில்லை. அவ்வப்போது உள்ளூரில், வெளியூரில் ஒன்றிரண்டு தள்ளுமுள்ளுகள் நடக்கத்தான் செய்யும். அப்படித்தான் அவளின் வயசான பழைய கார் டிரைவரை சிலர் அடித்து விட்டார்கள். தஞ்சையில் அவளைப் பார்க்க கூட்டம் சூழ, டிரைவர் அவளைப் பாதுகாத்து உள்ளே ஏற்றினார். அதில் யாரோ ஒரு வஸ்தாதுவை அவர் தள்ளி விட்டதால் அவன் கோபமாகி வைஷ்ணவி வெளியே வரும்போது ஆள்படையுடன் வந்து நின்று விட்டான்.
அவள் கண் எதிரிலேயே அவளின் வயசான டிரைவர் அடி வாங்கினார். வைஷ்ணவியைப் பாதுகாத்த கிரிஜாவின் மீது அடி விழுந்தது. வலியுடன் அவளை காரில் இழுத்துப் போட்டு கதவை மூடினாள் கிரிஜா. கதவை 'டப,டப' என அடித்தார்கள். போலீஸ் அந்த இடத்திற்கு வந்து சேரும் வரை அவளுக்கு பாதுகாப்பே இல்லை, வைஷ்ணவி விதிர்த்துப் போய்விட்டாள். எவ்ளோ பயங்கரம்!
வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக அந்த வயசாளி டிரைவருக்கு பணம் கொடுத்து அனுப்பி விட்டு, 'ஆஜானுபாகுவா, நல்ல உரம் ஏறிய, தைரியமான ஒரு டிரைவர் வேணும்' என தேட, அவளுக்கு தெரிந்த ஒரு டிராவல்ஸ் ஏஜென்சிகாரர், அவர் அறிந்த ஒரு சென்னை டிரைவிங் ஸ்கூல் மூலமாக ஒரு டிரைவரை கூப்பிட்டார்கள்.
"ஒரு நல்ல பையன் இருக்கான்மா, பணிவா இருப்பான், உங்களுக்கு பாடிகார்டாகவும் இருப்பான்," என சொல்லி சுரேஷை அனுப்பி வைத்தார்.
சுரேஷ் வந்த பிறகு எந்த பெரிய பிரச்சினையும் இல்லை. அவன் வைஷ்ணவியின் முன்னால் தான் மட்டையாக மடங்குவானே தவிர, வெளி ஆட்கள் யாராவது அத்துமீறினால் ஒரே போாடாக போட்டு விடுவான். ஒரு பக்கம் பணிவு, இன்னொரு பக்கம் முரடு - இது தான் சுரேஷ். அவனது உருவத்தையும் ஆக்ருதியையும் பார்த்தவர்கள், தோட்டக்காரன் முருகேசன் போன்ற உயரம், உருவம், விசுவாசம் எல்லாம் அச்சு அடித்தாற் போல இருந்தது. ஆனால் முருகேசன் படிக்காதவன், சுரேஷ் ஓரளவு படித்தவன். முருகேசனுக்கு நாற்பது வயது, சுரேஷுக்கு முப்பத்திரண்டு வயது. முருகேசன் மணமானவன், ஆனால் மனைவியை இழந்தவன், தனிக்கட்டை. சுரேஷோ மணமாகாதவன், சென்னையில் தாய் தந்தையர் உண்டு.
இந்த இருவரே போதும். போதாததற்கு கிரிஜா வேறு நிழலாக இருந்தாள். சம்பளத்துக்கு வேலை செய்கிறவர்கள் தான், ஆனால் படு விசுவாசமாக இருந்தார்கள். வீட்டிலும் வெளியிலும் வைஷ்ணவி பாதுகாப்பாக இருந்தாள். உறவினர்கள் கூட வைஷ்ணவியை நெருங்க வேண்டும் என்று கூட நினைக்க மாட்டார்கள்.
முருகேசன் கூட அந்த பத்து மணி நேரமும் தோட்டமே கதி என இருப்பான். ஆனால், சுரேஷ் இல்லாமல் வைஷ்ணவியைப் பார்க்க முடியாது, கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவான்.
'இவன் டிரைவரா, பாடிகார்டா?' என்று தான் பார்க்கும் பலரும் குழம்பினார்கள். அவன் வந்த பிறகு வெளியூர் பயணமெல்லாம் வைஷ்ணவிக்கு ஒரு பொருட்டுமில்லை. எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும், லேட் நைட்டாக இருந்தாலும், அவன் வைஷ்ணவியை யார் கை படாமலும் கூட்டி வந்தான், பத்திரமாக பார்த்துக் கொண்டான். அவன் வைஷ்ணவியை கோயில் தெய்வத்தை பூஜிக்கும் பக்தன் போல நடந்து கொண்டான்.
கேரளாவில் ஒரு கல்லூரி இளவட்ட கும்பல் ஒன்று வைஷ்ணவியுடன் செல்பி எடுப்பது போல அவளைத் தொட போக, அந்த நான்கு பேரையும் துவைத்து எடுத்தான். "என்ட அம்மே.." என அலறிக் கொண்டு ஓடினார்கள்.
"என் நாலேஜ் இல்லாம நீ யாரையும் அடிச்சீன்னா சீட்டை கிழிச்சிடுவேன்!" வைஷ்ணவி அவன் அடித்த அடியைப் பார்த்து கத்தினாள். கதி கலங்கி போனான்.
"சொல்றவங்க நீ அடிச்சேன்னா சொல்வாங்க.. நான் தான் அடிச்சேன்னு நியூஸ் போடமாட்டானா, மட சாம்பிராணி?"
"மன்னிச்சிக்கங்கம்மா?" அவன் பவ்யமாய் தலை குனிந்தான். கொஞ்ச நேரம் முன்னால் ஆள்களை பந்தாடியவனா இவன்? என்பது போல வாய் மீது விரல் வைத்து அப்படி ஒரு பவ்யம். அவளின் முகத்தை, கண்ணைப் பார்த்து பேசாத மரியாதை.. பாசாங்கில்லாத நிஜ மரியாதை..
அவளுக்கு கச்சேரி இல்லாத போது ரென்ட் கலெக்ஷன் எல்லாம் அவன் தான் பார்த்துக் கொள்வான். பணிவும் துணிவுமுள்ள விசுவாச வேலைக்காரனாக அவன் காரோட்டியாக இருந்தது வைஷ்ணவியின் கரத்தை இன்னும் வலுப்படுத்தத் தான் செய்தது.
அவன் சென்னைக்காரன் தான், ஆனால் பேச்சில் சென்னை பாஷையே இல்லாமல் இருந்தது. அவன் சேர்ந்த அந்த மாதமே அவள் ரூ.5000 சேர்த்து கொடுத்தாள்.
"எனக்கேன்மா முப்பத்தஞ்சாயிரம்.. முப்பதே போதும்மா," தலை குனிந்து பேசினான்.
"ஊர்ல அப்பா, அம்மா இல்ல?? காசு அனுப்பு."
"இல்லம்மா.. அவங்களுக்கு அஞ்சாயிரமே பெரிசு,"
"சரி, காசை சேத்து வெச்சு கல்யாணம் பண்ணிக்க."
அவன் தலை சொறிந்தபடியே போவான். கிரிஜா போல, சுரேஷ் போல வேலைக்காரர்கள் அமைவது பெரிய வரம் என நினைத்தாள் வைஷ்ணவி.
வீடு, கச்சேரி, புகழ், விருது என அவள் கொஞ்சம் கொஞ்சமாக தன் வாழ்க்கை, தன் இளமை இதெல்லாம் மறக்க ஆரம்பித்திருந்தாள். செல்வத்திற்கு குறைவில்லை என்றாலும் அவளது வாழ்க்கை ஒரு திறக்கப்படாத கோட்டையாக, சாவி போட்டு திறக்காத பொக்கிஷ பெட்டகமாவே இருந்தது.
அந்த வீட்டின் எல்லா நிர்வாகமும் கிரிஜா தான் பார்த்தாள். கிரிஜாவுக்கு ஏற்ற தோழியாக இருந்தாலும், எல்லா இடங்களிலும் அவளை அழைத்துப் போவது சரியாக இல்லை. வீடியோ எடிட்டிங், கேமரா, ஆங்கிலம், இதெல்லாம் விட கொஞ்சம் டெக்னாலஜி நாசுக்கு தெரிந்த, ஆங்கிலம் பேச ஒரு பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என வைஷ்ணவி நினைத்தாள்.
வெளி ஆட்களிடம் அப்பாய்ன்ட்மென்ட் போடுவது, சம்பளம் பேசுவது, கறாராய் வாங்குவது.. இதெல்லாம் செய்ய கண்டிப்பாக ஒரு லேடி அசிஸ்டென்ட் அல்லது மேனேஜர் தேவை. சுரேஷ் இதில் பாதி செய்தாலும், அவனுக்கு டாக்ஸ் விவகாரம் தெரியவில்லை, ஆடிட்டரிடம் பேச தெரியவில்லை. இனி மந்தாகினி இதெல்லாம் பார்த்து கொள்வாள்..
அது மட்டுமில்லை, மும்பை, பெங்களூர், சென்னை, டெல்லி என இந்தியா முழுக்க சுற்றுவதற்கும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு அடிக்கடி டூர் போவதற்கும் கூடவே ஒரு படித்த பெண் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தாள்.
கிரிஜா தான், "கண்டிப்பா உங்களுக்கு ஒரு லேடி மேனேஜர் வெச்சுக்கனும்," என சொல்லி வந்தாள். "ஆமா, எல்லா பிராப்பர்ட்டி இன்கம், வரவு செலவும் கவனிச்சுக்கனும்." அதற்காகத்தான் வைஷ்ணவி இந்த மந்தாகினியை தேடினாள். பரவாயில்லை, மந்தாகினி சூட்டிகையாக தான் இருக்கிறாள். ஏழ்மை வாசம், குறுக்கு வழி தெரியாதவள், நடுத்தர வர்க்கம், நல்ல மொழி அறிவு, பேச்சறிவு. இனி என்ன வேண்டும்?
இனி வரும் தன்னுடைய எதிர்காலத்தில் இந்த பெண் உறுதுணையாக இருப்பாள் என வைஷ்ணவி யோசித்தபடியே, உற்சாகமாய் ஊருக்கு போகும் மந்தாகினியைப் பார்த்தபடி இருந்தாள்.
Like Reply
#9
எபிசோடு : 8
மந்தாகினி அதே சந்தோஷத்துடன் ஊருக்கு போய் அப்பாவிடம் விஷயத்தைச் சொல்ல, அப்பாவும் ஆச்சரியப்பட்டு போனார்.
"பரவாயில்லையே, கர்நாடக மியூசிக்கும் உன்னுடைய கார்ப்பரேட் செகரட்டரி படிப்பும் சேர்ந்து உனக்கு நல்ல சம்பளத்தை வாங்கி தந்திருக்கு," அவர் மகிழ,
"ஆனா ஒன்னு, எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் சரி, இன்னும் மூணு வருஷம் தான் உனக்கு டைம். அப்புறம் இங்க வந்து சேர்ந்திடனும்," அம்மா கண்டிப்பாக சொல்ல,
"உனக்கு 26 ஆகுறப்போ கல்யாணம் செஞ்சு பார்த்துடனும்லே, அப்புறம்மா வேலையில ஜாயின் பண்ணனும்."
"அப்பா, பாருங்கப்பா!"
"ஆமாம் மந்தாகினி, முதல்ல நான் இந்த மார்த்தாண்டம்,"
அவள் அடுத்த இரண்டு நாட்கள் தனக்கு தேவையான புதிய உடைகள், அணிகலன்கள் எல்லாம் வாங்கினாள். அம்மா மிளகாய் பொடி, ஊறுகாய் எல்லாம் பேக்கிங் செய்து கொடுத்தாள்.
அப்பாவும் மகளும் கிளம்பி மார்த்தாண்டம் வந்து சேர்ந்தார்கள். அப்பா தன்னுடைய மகள் தங்கும் வீட்டையும் வைஷ்ணவியையும் பார்த்து பேசி விட்டு ஞாயிறு மதியம் கிளம்பி போனார்.
அவளைப் பார்த்ததும் கிரிஜா, "வணக்கம் மேடம். என் பேரு கிரிஜா. கண்டிப்பா நீங்க செலக்ட் ஆவீங்கன்னு நான் முதல்லயே நினைச்சேன்,."
"தேங்க் யூ."
"எந்த ஹெல்ப்னாலும் என்னை கூப்பிடுங்க," என சொன்னபடி காபி கொடுத்துவிட்டு போனாள்.
மந்தாகினி அந்த வீட்டைச் சுற்றி வர, அவுட் ஹவுஸில் தங்கியிருந்த சுரேஷ் பணியனில் இருந்தபடியே வந்தான். அவளைப் பார்த்ததும் சிரித்தான்.
"ஹலோ சுரேஷ்! எப்படி இருக்கீங்க?"
"நல்லா இருக்கேன் மேடம். நீங்க எப்படி இருக்கீங்க?"
"இங்க ஜாயின்ட் பண்ணிட்டேனே?"
"தெரியும். நெனச்சபடியே நீங்க வேலையில சேர்ந்துட்டீங்க மேடம். நீங்க தான் எங்க மேடத்துக்கு சரியான பி.ஏ."
"அட! அதென்ன எல்லாரும் அதையே சொல்றீங்க?"
"அப்படி இல்லை, உங்களைப் பார்த்த உடனே நீங்க இங்க வந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். மத்தவங்க கிட்ட இருந்த பந்தா, அலட்சியம்லாம் உங்க கிட்ட இல்லை. ஆனா நீங்க எங்க மத்தவங்க மாதிரியே ரிஜெக்ட் ஆகிடுவீங்களோன்னு பயந்தோம். அதான் நானும் கிரிஜாவும் சேந்து அந்த கொஸ்டின் பேப்பரை உங்களுக்கு கொடுத்தோம்."
"கொஸ்டின் பேப்பரா?"
"ஆமா."
"என்ன சொல்றீங்க?"
"என்னங்க தெரியாத மாதிரி கேட்கிறீங்க? எங்க மேடம் என்ன எதிர்பாக்குறாங்க, நீங்க எப்படி நடந்துக்கணும்னு சொன்னேனே, மறந்துட்டீங்களா?"
வைஷ்ணவிக்கு சுளீரென உரைத்தது. அப்படி என்றால் இவன் உதவி இல்லையென்றால் இங்கு வந்திருக்க முடியாதா? யோசித்துப் பார்த்தாள். ஆம், இன்டர்வியூவில் யார் என்ன தப்பாய் செய்கிறார்கள், சொல்கிறார்கள்? என தெரியாமலேயே அப்படித்தான் நடந்திருக்கும்.
'நான் பாட்டுக்கு உள்ளே போய் தத்துப்பித்து என ஏதோ உளறி, கர்நாடகா பாட்டெல்லாம் பாடி, வைஷ்ணவியைப் பார்த்து கும்பிடு போட்டு, செல்பி எடுத்து ஒரே நாரசாரமாக போயிருக்கும் இன்டர்வியூவில், அத்தனை பதவிசாக நான் நடந்து கொண்டதால் தான் இந்த வேலையே கிடைத்தது. அப்படி என்றால் இந்த வேலைக்கு காரணம் இவனாகக் கூட இருக்கலாம்.'
கண்டிப்பாக இவன் தான். அதை எடுத்த எடுப்பிலேயே சொல்லி கொஞ்சம் நம்மிடம் கெத்து காட்டுகிறான். முதலில் இவனை பகைத்துக் கொள்ளக் கூடாது, விட்டுத் தான் பிடிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு அவள் மெல்ல சிரித்தாள்.
"மே பீ, சுரேஷ் நீங்க கொடுத்த டிப்ஸ் தான் உதவியா இருந்தது. அதுமட்டும் இல்லாம மேடம் எனக்கு நல்ல ஒரு சம்பளம் ஆஃபர் பண்ணாங்க. அதான் உடனே ஒத்துக்கிட்டேன். சரி, நீங்க எல்லாம் இங்க தான் தங்குகிறீர்களா?" என ஒரு அதிகாரி போல கேட்டாள்.
தோட்டத்தை, அவுட்டர் பில்டிங்கை பார்வையிட்டாள்.
உள்ளே வைஷ்ணவியிடம் வர, "மந்தாகினி, இன்னைக்கு எதுவும் நீ ஒர்க் பண்ண வேணாம். உன் ரூம் மட்டும் நீ ரெடி பண்ணிக்க, கிரிஜா ஹெல்ப் பண்ணுவா," என சொல்லிவிட்டு வைஷ்ணவி சென்று விட்டாள்.
கிரிஜா மாலை 5 மணிக்கு மேல் தான் வந்தாள். அவள் அறையை சுத்தம் செய்ய உதவி செய்தாள். பழகிய கொஞ்ச நேரத்திலேயே கிரிஜாவைப் பற்றி நன்றாக தெரிந்து கொண்டாள்.
கிரிஜாவுக்கும் கிட்டத்தட்ட வைஷ்ணவி வயது. ஆனால் 10 ஆண்டுகளுக்கு மேலாக அந்த வீட்டில் வேலை செய்கிறாள். வைஷ்ணவியின் அப்பா காலத்தில் இருந்து அவளுக்கு இந்த வீடு கூடவே வைத்திருக்கிறது தான்.
அவளைக் கட்டிய கணவன் மும்பையில் வேலைக்குச் செல்ல, அங்கேயே இன்னொரு பெண்ணைப் பார்த்து செட்டில் ஆகிவிட்டதாக கேள்வி. வேலைக்காரியாக இருந்தாலும் அவளுடைய பேச்சும் உடையும் பளிச்சென சுத்தமாக இருந்தது.
வீட்டின் பின்புறத்தில் இருக்கும் அவுட் ஹவுஸில் சில ஆண்கள் தங்கிக் கொள்கிறார்கள். அதனால் கிரிஜா அந்த வீட்டுக்குள்ளேயே இருக்கக்கூடிய ஒரு தனி ரூமில் தங்கிக் கொள்கிறாள்.
கொஞ்ச நாளிலேயே மந்தாகினி அந்த வீட்டின் முழு பின்னணியையும் தெரிந்து கொண்டாள். வைஷ்ணவிக்கு ஏற்பட்ட தோல்வியில் முடிந்த மண வாழ்க்கையையும் அவள் புரிந்து கொண்டாள்.
வைஷ்ணவி சொன்ன, சொல்லாத எல்லா வேலைகளையும் செய்ய பழகிக் கொண்டாள். வைஷ்ணவியுடன் கச்சேரிக்கு போவது, அப்பாயிண்ட்மென்ட் செட் செய்வது, ப்ராபர்ட்டி மேனேஜ்மென்ட், யூட்யூப் வீடியோ போஸ்டிங் என எல்லா வேலையும் செய்தது போக, மீதி இருக்கும் நேரத்தில் வைஷ்ணவியின் படுக்கை அறையையும் நன்றாக இன்டீரியர் செய்து அலங்கரித்தாள்.
"பரவாயில்லையே, கையில நிறைய வித்தை வச்சிருக்கியே! வெரி குட்!" என வைஷ்ணவியின் பாராட்டைப் பெற்றாள்.
கார் பயணங்களின் போது சுரேஷ் வண்டியை ஓட்ட, பின் சீட்டில் உட்கார்ந்து வைஷ்ணவியுடன் மணிக்கணக்கில் அரட்டை அடித்தாள். தனக்கு பிடித்த ஒரு வி.ஐ.பி பாடகியுடன் கூட இருப்பதே பெரிய விஷயம் என்றால், அதற்கு சம்பளமும் கிடைக்கிறது என்றுதான் அந்த வேலையை அவள் முழு துடிப்புடன் செய்தாள்.
நாட்கள் ஓட, அவ்வப்போது கார் பயணம், ரயில் பயணம், விமான பயணம் என மாறி மாறி வைஷ்ணவியின் உயிர் துணையாக, நிழலாக மந்தாகினி மாறிப் போனாள். அவளுக்கு மார்த்தாண்டம் வீடும் பிடித்திருந்தது, வைஷ்ணவியையும் பிடித்திருந்தது. அங்கு பணிபுரியும் சக ஊழியர்களின் அணுகுமுறையும் அவளுக்கு ரொம்பவே பிடித்து போனது.
'இப்படி ஒரு வேலை எல்லோருக்கும் கிடைக்குமா?' என அவள் மகிழ்ந்திருக்க, 'அதே போல் நமக்கு வாய்த்த மூன்று வேலைக்காரர்களும் அற்புதமானவர்கள். விசுவாசமும் திறனும் இருக்கக் கூடிய ஊழியர்கள் இருந்தால் எப்படிப்பட்ட முதலாளியும் எல்லா கவலைகளையும் மறந்து சந்தோஷமாக இருக்கலாம்' என நினைத்தாள் வைஷ்ணவி.
ஆனால் இந்த வாழ்க்கையும் சரி, கால பயணமும் சரி, நமக்கு எல்லா நேரமும் நமக்கு பிடித்தாற்போல இருப்பதில்லை. அதுதான் பிரச்சினையே.
மந்தாகினி அந்த வீட்டில் வேலைக்கு சேர்ந்த ஆறாவது மாதம் தான் அந்த சம்பவம் நடந்தது.
மதுரையில் ஒரு முக்கிய இரண்டு கச்சேரியில் கலந்து கொள்ள வைஷ்ணவியும் மந்தாகினியும் ரயிலில் சென்றார்கள். முதல் நாள் கச்சேரி முடிந்தவுடன், இரண்டாவது நாள் கச்சேரி ரத்தாகி விட்டது. "நிகழ்ச்சி ஏற்பாட்டாளரில் ஒருவருக்கு நெஞ்சுவலி, கவலைக்கிடம்," என சொன்னார்கள். ஆனால் மந்தாகினியிடம் முழுப் பேமென்ட்டும் வழங்கப்பட்டது. அவர்கள் முன்னதாகவே ஊர் திரும்பினார்கள்.
வைஷ்ணவி மந்தாகினிக்கு லீவு கொடுத்து மதுரையில் அவள் வீட்டிற்கு அனுப்பி விட்டு, அவள் தன்னந்தனியாக ரயிலில் தான் திட்டமிட்டதை விட ஒரு நாள் முன்னதாக திரும்பினாள். வீட்டுக்கு அருகே ஆட்டோவில் வந்து மாலை ஐந்து மணிக்கு மழைத்தூறலில் இறங்கினாள். அந்த நேரத்துக்கே வானம் இருட்டிவிட்டது. அந்த மாளிகை முழுக்க கிட்டத்தட்ட இருளாக இருந்தது. வீட்டில் ஆள் இல்லை என்றால் யாருமே வேலையைச் சரிவரச் செய்வதில்லை எனக் குறைப்பட்டுக்கொண்டாள்.
லக்கேஜுடன் நேராகத் தன் அறைக்குப் போக இருந்தவள், சமையலறையின் பின்னால் வரும் சத்தத்தைக் கேட்டுத் திகைத்து நின்றாள். இது என்ன பேச்சுக் குரலா? ஏதேனும் சதிக் குரலா? யாரேனும் ரகசியத் திட்டம் போடுகிறார்களா? எதற்கு இத்தனை மர்மம்? "ஏய்ய்" எனக் குரல் கொடுக்கலாமா என நினைத்தாள். குரல் சத்தமாகி அது முனகலாகப் பரபரப்பாகி, குரல் வந்த அறையை நோக்கிச் சென்றாள். அது கிரிஜாவின் அறை. உள்ளேயிருந்து ஆணின் பேச்சுச் சத்தம்.
"இது சல்லாபச் சத்தம்? ஆம்,"
கிரிஜா ஏதாச்சும் கிளினிங் செய்கிறாளா என்ன? கதவு மூடி இருந்தது.
"ஏய்ய் எருமை, அய்யோ, சீ,"
வைஷ்ணவிக்கு உடல் வெலவெலத்தது. போலாமா? குரல் கொடுக்கலாமா? வேண்டாமா? யாரது குரல்? நம் வீட்டு ஆட்களா? இல்லை வேறு யாராவதா? ஏனோ அவளுக்குத் தன் தாலி கட்டிய கணவன் மனோகரன் ஞாபகம் வந்தது. அய்யோ அவனாக இருந்தால்? அவன் ஏன் இங்கு வரப்போகிறான்? அவள் தயக்கத்துடன் அறை ஜன்னலைத் திறக்க, அறை முழுக்க இருள்தான். பேச்சுச் சத்தம் இல்லை, மூச்சுச் சத்தம்.
யார்? கிரிஜாவின் அருகில் ஒரு ஆணா? ஐயோ அது டிரைவர் சுரேஷா? இல்லை முருகேசனா? அவள் ஜன்னலை இன்னும் திறந்து பார்க்க உள்ளே இருந்தது, அடப்பாவி சுரேஷ் போல இருக்கிறதே?
Like Reply
#10
எபிசோடு 9


வைஷ்ணவி கடுமையாகத் திகைத்து பின்னடைந்தாள். கண்கள் சிவந்தன. ஜன்னலை எட்டிப் பார்க்க, அறையில் கசமுசா என்று பேச்சுச் சப்தம். அவள் அதிகம் கேட்டிராத இழையும் சத்தம், முத்தச்சத்தம். கிரிஜாவின் சேலை இடுப்பில் தொங்கிக்கொண்டிருக்க,
"அவுருடி" என்றான் சுரேஷ்.

உள்ளே ஆடைகளின் நெகிழ்வும் சலசலப்பும் கேட்டது. நம் வீட்டிலா? இதென்ன கிரகச்சாரம்? உடல் துடித்தது. வைஷ்ணவிக்குக் கால்கள் நடுங்கின. அய்யோ என்னமோ நடக்குது, பாதம் பிசுபிசுத்தது. கிரிஜாவின் இடுப்புக்கு மேலே ஏதும் இல்லாமல் வெள்ளைப் பிரா கழற்றப்பட்டு வீசப்பட்டது.

கிரிஜா நின்று கொண்டிருக்க, சுரேஷ் கட்டிலில் உட்கார்ந்தபடி அவளைக் கட்டிப்பிடித்துக்கொண்டிருக்க, இருவரும் வைஷ்ணவி பார்க்கும் கோணத்தில் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டிருந்தனர். சுரேஷின் முகம் தெரியவில்லை.

'ஏய்ய்ய்ய், எருமையாஆஆஸ்ஸ்ஸ், அம்முஸ்ஸ்ஸ்ஸாஆஆஆஆ' என முக்கல் முனகல் சத்தம், அவனும் கிரிஜாவின் மார்பகங்களைத் தன் பெரிய வாயில் முழுங்கிவிட்டிருந்தான். 

அவன் வெறிகொண்டு கடித்தாலும் கூட, கிரிஜா முனகினாளே தவிர பெரிதாக அலறவில்லை. வைஷ்ணவியால் அதற்கு மேல் அந்தக்கட்சியினைப் பார்க்க முடியவில்லை. அங்கும் எங்கும் முகத்தைத் திருப்பினாள். ஓசை போடாமல் பின்னோக்கி நகர்ந்தாள்.

'ஹாலில் உட்காரலாமா?' என யோசித்தாள். ஐயோ இல்லை, தன் ரூமுக்குப் போய்விடுவது நல்லது. அடிப் பாவிகளா, யார் வீட்டில் வந்து யார் இப்படி காம நாடகம் போடுகிறீர்கள்? அவளுக்கு உடலெங்கும் பற்றிக்கொண்டு வந்தது. அய்யோ, எத்தனை நாள் இது நடக்கிறது, இந்தக் காம நாடகம்?

அய்யோ நல்லவன் என நினைத்தேனே அந்த சுரேஷை! பெண்களை மதிப்பவன், சர்வ கண்ணியமானவன் என நினைத்தேனே? சாதாரணமாய்ட் 'டிரெஸ்ஸை அவுருடி' என்கிறானே! அவளும் அவுத்துப் போடுகிறாளே? சுரேஷா இப்படிச் செய்தான்? இது சுரேஷா, முருகேசனா?

அந்தக் கிரிஜா நாயைப் பணிவானவள், விசுவாசமானவள் என நினைத்தால், ஒன்றும் தெரியாத அப்பாவி என நினைத்தால், அட நாசக்கார நாயே, கணவனை இழந்தவள், பிரிந்தவள் ஒரு அன்னியனிடம் போய், எத்தனை விரசம்?

சுரேஷா? முருகேசனா? யார் இந்த வேலையைச் செய்வது? நாம் சரியாகத்தான் பார்த்தோமா? அவள் கண்ணையே அவளால் நம்ப முடியவில்லை. உடல் தள்ளாடியது. நல்லவேளை மந்தாகினி இல்லை. வயதுப் பெண் இதைப் பார்த்திருந்தால்? காம மிருகங்கள், அவள் மேலே படி ஏறி தனது அறைக்குப் போவதற்குப் பதில் மறுபடியும் கிரிஜாவின் அறைக்கு வந்தாள். 

எதுவோ அவளை மீண்டும் அங்கே தள்ளிக்கொண்டு வந்தது. சில அங்குலமே திறந்திருந்த அந்த கதவை இன்னும் திறந்து பார்க்க, அய்யோ இப்போது கிரிஜா ஒட்டுத்துணி இல்லாமல் இருந்தாள். அவள் அணிந்திருந்த வெந்தயக் கலர் பாவாடை அந்த அறையின் ஒரு மூலையில் சுருண்டு கிடந்தது.

உள்ளே இருந்தவன் தனது பெரிய உறுப்பை அவளின் தொப்புள், தொடையெல்லாம் தடவி அவளது பெண்மை பொந்தில் திணித்துக் குத்தினான். கிரிஜா முனகிக் கத்தி அலறி, 'ஹகெ' என ஒலி எழுப்பி, கண் மூடி காலைத் தூக்கிப் பிடித்து விரித்துக் காட்டியிருந்தாள். 

அந்த பலமான உறுப்பினை அவளது புண்டைச் சதைகள் இறுக்கமாய்க் கவ்விக்கொள்ள, அவன் ஆட்டி ஆட்டி லேசாய் இடித்து மிகச் சில குத்துகள் மட்டுமே விட்டு அவள் மீது படர்ந்துகொள்ள, கிரிஜா இரு காலையும் உயரத் தூக்கி அவனின் பின் முதுகை பின்னிப்பிணைந்துகொள்ள, அதன் பிறகு அவன் கிரிஜாவின் கன்னங்களையும் உதட்டையும் கடித்தபடியே முலையை நசுக்கி இடுப்பை ஆட்டி ஆட்டி வேகமாய்க் குத்த ஆரம்பிக்க, இருவருமே பயங்கரமாக முனகினார்கள்.

தொடர்ந்து ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக்கொள்ளும் சத்தமும், வாய்க்குள் நாக்கை விட்டுத் துழாவிக்கொள்ளும் சத்தமும் கேட்க, ஓராயிரம் பேய்கள் ரவுண்டு கட்டி தன்னை அடித்தது போல விக்கித்து விதிர்த்துத் திரும்பி நடந்தாள் வைஷ்ணவி. அவளுக்குக் கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது. கிரிஜாவின் குரலும் அசைவும் தெளிவாகப்ரிகிறது. ஜன்னல் வெளிச்சம் வராத இடத்தில் இருந்து இயங்குபவன் யார், சுரேஷா? முருகேசனா? இரண்டு பேரில் யாரோ ஒருவன்? அவளால் நூறு சதவீதம் அனுமானிக்க முடியவில்லை. கருத்த பெரிய உறுப்பு மட்டும் உள்ளே போய் வருவதையும், பரங்கிக்காய் போல அவளின் செவ்வாழை தொடைகள் அகன்று இருப்பதையும் பார்த்தாள்.
இவள்தான் முனகுகிறாள், ஆண் சத்தமே எழுப்பவில்லை. வைஷ்ணவி தன் வாழ்நாளில் நீலப் படங்களையோ அல்லது இப்போது இருக்கும் தலைமுறை போல போர்ன் படங்களையோ பார்த்தவள் கிடையாது. கதைகள் கூட அவள் படித்ததில்லை. சினிமா பாடல்களில் நெருக்கமான காட்சிகள் வந்தாலே பதற்றப்படுபவள் அவள். அவளிடம் யாரும் காமத்தைப் பற்றியோ புணர்ச்சியைப் பற்றியோ பேசியதே கூடக் கிடையாது.
அவளுக்குத் தெரிந்த ஒரே செக்ஸ் அனுபவம், முதல் நாளில் அவளது கணவன் மனோகரன் ஜட்டியுடன் அவள் மீது படுத்துப் புரண்டதுதான். அதையே அவளால் நெடுநாள் வரை மறக்க முடியவில்லை. எத்தனை ஆண்டுகள் ஆகும் எனத் தெரியவில்லை. ஆனால், இன்று பார்த்த இந்த விஷயத்தை மறக்க எதற்கு இத்தனை அவஸ்தை? அறுப்புக்குக் காத்திருக்கும் பிராணி போல ஒரு வதை.
வைஷ்ணவி காதைப் பொத்திக்கொண்டாள். அறைக்குப் போனாள். தள்ளாடிப் படுத்தாள். கிரிஜா நல்லவள்தான், ஆனால் இப்படிச் செய்துவிட்டாளே? இந்த நாய்களை நம்பி வீட்டில் விட்டுப் போனால் காமக்கூத்து நடக்குதே? கல்யாணமாகியும் கணவன் இல்லாத கிரிஜா, வயசுப் பையன் சுரேஷை வளைத்துப் போட்டாளா? அல்லது கிரிஜா தனியாக இருப்பதைத் தெரிந்துகொண்ட சுரேஷ் அவளை வளைத்துப் போட்டுவிட்டானா? என்பது தெரியவில்லை. முதலில் இது சுரேஷா, முருகேசனா என்று கூடத் தெரியவில்லை.
இதுதான் காம தாகமா? காம வேட்கையா? என்ன கூத்து இது? இந்தப் பெண்ணுக்கு ஏன் இந்த மனமாற்றம்? அன்று தன் மிடுக்கான படித்த பணக்கார கணவன் மனோகரன் கை பிடித்த போது உதறித் தள்ளி நின்ற கற்புக்கரசி கிரிஜா, இன்று ஏன் மாறிவிட்டாள்? எஜமானன் அந்தஸ்தில் இருப்பவன் தொட்டால் விலகி நின்றவள், டிரைவர் கூப்பிட்டதும் 'சரி' என்று படுத்துவிட்டாளோ? இல்லை தோட்டக்காரனுக்குப் பணிந்துவிட்டாளோ?
இந்த அன்னியோன்யமும் கொஞ்சலும் பார்த்தால் முதல் தடவை செய்வது போல இல்லையே? தெய்வீக வீட்டில் இப்படி ஒரு அபச்சாரமா? அந்த சுரேஷ் அக்கா, அக்கா என்றுதானே கூப்பிடுவான்? முருகேசன் தங்கச்சி என அழைப்பானே? சே, உறவுக்கு மரியாதை தெரியாத ஜன்மங்கள்! என்ன ஒரு ஆட்டம்?
'நான் மதுரையில் இருக்கிறேன், வரத் தாமதமாகும்' என நினைத்து இந்த ஆட்டம் போட்டிருக்கிறார்கள். நான் ஒரு நாள் முன்பே இன்றே வருவேன் என அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள். கச்சேரி கேன்சல் ஆனது கூட இவர்களுக்குத் தெரியாது. 'அவளுக்கு என்ன சொல்வது?' எனத் தெரியவில்லை. இவர்கள் எல்லாரையும் இன்றே சீட்டு கிழித்து அனுப்பிவிடலாமா? அல்லது மந்தாகினி வந்த பிறகு அனுப்பலாமா? என யோசனையாக இருந்தாள்.
கடவுளே! ஏன் அந்த மதுரை கச்சேரி ரத்தாக வேண்டும்? ஒரு நாள் முன்னதாக நான் ஊர் திரும்ப வேண்டும்? இந்த வண்டவாளத்தைப் பார்க்கவா? அடடா என்ன நடிப்பு! இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல,
கிரிஜா ஆறு ஆண்டுகளாக இந்த வீட்டில் இருக்கிறாள். முருகேசனோ அப்பா காலத்திலிருந்து இருக்கிறான், ரொம்ப விசுவாசமானவன். ஆனால் சுரேஷ் இங்கு வந்து இரண்டு வருஷம் தான் ஆகிறது. அதற்குள் இவர்களுக்குள் சினேகம் இந்த அளவுக்கு வந்து நிற்கிறதா?
ம்ஹூம், சரிப்பட்டு வராது, விரைவில் அனுப்பி விட வேண்டும்,
சுரேஷ் கை சுத்தமானவன். அவனை நம்பி எத்தனை லட்சம் வேண்டுமானாலும் வாங்கி வரச் சொல்லலாம், பணம் கலெக்ஷனில் கில்லி. முருகேசனும் நல்லவன், விசுவாசமான, மரியாதையான ஆள். அப்பா மீது அடி விழுந்ததும் கொதித்துப் போய் மாப்பிள்ளை ஆட்களிடம் சூரசம்காரம் செய்தவன். ஆனால் கிரிஜா நமது தோழி, விசுவாசமான வேலைக்காரி. கிரிஜா கூடத் தப்பு காரியம் செய்கிறானே? படவா ராஸ்கல்!
ஏன் இப்படி நாம் நம்புகிறவர்கள் எல்லாம் மோசம் செய்கிறார்கள்? அவள் அதே ஏரியாவில், அதே ஊரில் வசிக்கக்கூடிய பாடகன் அனிருத்தின் தோற்றத்தையும் கம்பீரத்தையும் பார்த்து மிக லேசாக அவன் பக்கம் திரும்பினாள். அவனது குரல் வளமும் கர்நாடக இசை அறிவும் அவளை லேசாக உள்ளுக்குள் அசைத்துப் பார்த்தது. வசதி, அந்தஸ்து, படிப்பு, இசை எல்லாவற்றிலும் சம தகுதியுடையவன்,
ஆனால், பழக ஆரம்பித்த உடனே அவன் ஒரு சராசரி எனத் தெரிந்துகொண்டு விலகிவிட்டாள். அவள் பார்க்காத போது அவளது அங்கங்களை வெறித்துப் பார்ப்பது அவளுக்குப் படு அச்சமாக இருந்தது. இன்னும் சில நாள்கள் அவள் சாதாரணமாக அவனிடம் பேசி இருந்தால் கூட, பூங்கொத்து கொடுத்து 'ஐ லவ் யூ' என்று சொல்லி இருப்பான் போல! அதனாலேயே அவனை விட்டு அவசரமாக அவள் விலகிப் போனாள்.
அவன் இன்னும் சில காலம் அப்படியே அவளிடம் கண்ணியம் காத்திருந்தால், ஒருவேளை இவளாகவே அனிருத்துக்கு ஓகே சொல்லி இருப்பாள். அதுமட்டுமல்ல, அவன் இன்னும் ஒரு பெரிய காரியம் செய்தான். அடிக்கடி வைஷ்ணவி செல்லும்போது கூட்டத்தில் அவளை அணைத்தாற்போல நடப்பது, இணையாக நடப்பது என அவளுடன் நெருக்கமாக இருப்பது போல சீன்களை கிரியேட் செய்துவிட்டு, "நானும் அவளும் லவ் பண்றோம், இனிமேல் அவளைக் கச்சேரி புக் பண்ணணும்னா என்கிட்டதான் கேட்கணும்" என்றெல்லாம் சபா ஆட்களுக்கு ஆர்டர் போடுவதாகத் தகவல் கிடைக்க, அவள் போனில் அவனைப் பிடித்துக் கண்டித்துத் திட்டிவிட்டாள். இந்த ஒரு ஆண்டு காலமாக அவள் அனிருத்திடம் பேசுவது கிடையாது.
கணவனுக்குப் பிறகு, பாடகன் அனிருத் அவளுக்கு ஒரு பெரிய ஏமாற்றத்தைத் தந்திருந்தான் என்றால், இந்திய அளவில் புகழ்பெற்ற பல விருதுகளை வாங்கிக்குவித்த இவளது தோழி பெரிய பாடகி ஒருத்தியும் அப்படித்தான் வைஷ்ணவிக்குப் பெரிய துரோகத்தைச் செய்திருந்தாள். அவள் பெயர் ராகினி. இவளுக்கு வர வேண்டிய கச்சேரி வாய்ப்புகளைத் தில்லியில் இவளுக்கே தெரியாமல் தட்டிப் பறித்துக்கொண்டிருந்தாள். காசு கொடுத்து வைஷ்ணவியின் கச்சேரிகளைக் கடுமையாக விமர்சித்து தில்லி ஆங்கில, ஹிந்தி பத்திரிகைகளில் எழுதச் சொல்லியிருந்தாள் ராகினி.
இந்த உலகம் போட்டிகளாலும் பொறாமைகளாலும் ஆனதுதான் என எண்ணி வீட்டோடு இருந்தாலும், வீட்டிலேயும் கிரிஜாவைப் போல, அந்த முருகேசனைப் போல, இந்த சுரேஷைப் போல பல பிரச்சினைகள் முளைக்கின்றன. அதிலும் இந்த சுரேஷ் பல சமயத்தில் அவளுக்குப் பாதுகாப்பாக இருந்ததைக் கண்டு, 'இனிதான் நமது நிரந்தர டிரைவராக இருக்க வேண்டும்' என்று முடிவெடுத்திருந்தாள்.
போன வாரம் கூட அந்த அனிருத் இவள் காரில் ஏற முயன்றபோது வழிமறித்து நின்றான்.
"வைஷ்ணவி, உங்ககிட்ட நான் மன்னிப்பு கேட்கணும். ஒரு அஞ்சு நிமிஷம் பேசலாமா?" என்றபோது, சுரேஷ்தான் குறுக்கே வந்து, "அதெல்லாம் போன்ல பேசுங்க சார், டயமாச்சு! இப்போ வழியை விடுங்க சார்" என்றான்.
"ஆஃப்டர் ஆல் டிரைவர், நீ என்னை ஸ்டாப் பண்றியா? என்னடா, அன்னைக்கு கூட பி.ஏ. இன்டர்வியூக்கு வந்தப்போ என்னை தடுத்து நிறுத்தி அசிங்கப்படுத்தினே, இப்ப நானும் மேடமும் பேசினா உனக்கு என்னடா பிரச்சனை?" எனப் பாய,
"சார், தேவையில்லாம பேசாதீங்க! மரியாதையா வழியை விடுங்க!"
"விடலன்னா என்னடா பண்ணுவ?" அவன் சொல்லி முடிப்பதற்குள் சுரேஷ் அசால்ட்டாக அவன் சட்டையைப் பிடித்து இழுத்துப் போட்டுவிட்டான். அனிருத்தால் சுரேஷை எதிர்க்கவே முடியவில்லை.
"நீங்க வாங்க மேடம்," எனச் சொல்லிப் பத்திரமாக அழைத்து வந்துவிட்டான். சுரேஷ் இருக்கும் வரை அவன் நெருங்க முடியாது என்பது வைஷ்ணவிக்குப் பெரிய நிம்மதி.
"எதுக்கு நீ அவர் கிட்ட இவ்ளோ டீசன்ட்டா நடந்துக்கிற? அவர் ஆளுதான் சரியில்லை, ஆனா கிரேட் சிங்கர். ஆளுக்கு மரியாதை தரலைன்னா பரவாயில்லை, அவரோட கர்நாடிக் மியூசிக்குக்கு ரெஸ்பெக்ட் குடு. அதுசரி, உனக்கெங்க அதெல்லாம் தெரியப் போவுது? மியூசிக்லாம் தெய்வம் மாதிரி,"
"இருக்கலாம் மேடம். எனக்கு நீங்கதான் தெய்வம். யாராச்சும் உங்களை என் கண்ணெதிரே அசிங்கப்படுத்த வந்தா நான் அப்படித்தான் நடந்துக்குவேன்,"
அட! இவன் முரடனாக இருந்தாலும் வைஷ்ணவியை ஒரு தெய்வம் போல ஒதுங்கிப் பணிவாக நின்றது வினோதமாக இருந்தது. சுற்றிலும் எதிரிகள் இருக்கும் இந்த ஊரில், சுரேஷ் போல வீட்டில், முருகேசன் போல தோட்டக்காரன் கம் செக்யூரிட்டி போல, வெளியிலும் நமக்கு ஒரு செக்யூரிட்டி தேவைதான்.
ஆனால், இப்போது அந்த சுரேஷையே அல்லது முருகேசனையே வேலை விட்டு அனுப்பிவிடும் சூழல் வந்துவிட்டது. இதுதான் காலத்தின் கோலம். அவன் நமக்கு நல்ல பாதுகாவலன் என்பதற்காக மோசமான ஆளையெல்லாம் வீட்டில் வைத்திருக்க முடியாது. அவள் அப்போதே முடிவெடுத்தாள்.
பத்து நிமிடம் போல ஒப்புக்கு படுத்துவிட்டு எழுந்தாள். அவளுக்குத் தலை சுற்றுவது போலிருந்தது. பல்லைக் கடித்துக்கொண்டு அந்த தலைச்சுற்றலிலிருந்து மீள வெகுநேரம் முயற்சி செய்தாள். தடுமாற்றமாய் எழுந்தாள். பாத்ரூமில் வாளியிலிருந்த நீரை அள்ளி முகத்தில் அறைந்து கொஞ்சம் புத்துணர்ச்சி பெற்றாள். குளித்து வேறு உடை அணிந்து கீழிறங்கி வரும்போது ஓசை கேட்டு கிரிஜா ஓடி வந்தாள்.
அவளும் வைஷ்ணவியைப் போல தூங்கி எழுந்தவள் மாதிரியிருந்தாள். ஆனால் கண்களில் சகஜம் எதுவும் தெரியவில்லை. கூந்தல் கலைந்து சிக்கலாகி, ஆடை அலங்கோலமாய்க் கசங்கிக் கிடந்தது. சேலையும் பாவாடையும் அவசரத்தில் வாரிச் செருகிக்கொண்டு வந்ததுபோல் தோன்றியது. கலவியின் மிச்சம் அவள் முகத்தில் படிந்திருந்தது. கலவரத்துடன் அவள் வைஷ்ணவியைப் பார்க்க, அவள் முகத்தில் வழக்கமான புன்முறுவல் இல்லை.
"வ, வந்துட்டீங்களா? எ, எப்ப வந்தீங்க?" அவளது கலவரம் வெளிப்படையாகவே தெரிந்தது. வழக்கமான அமைதி, சிரிப்பு மிஸ்ஸிங்.
"இப்பதான், வந்தேன், சரி, உன் ரூம்ல உள்ள யாரு?" வைஷ்ணவி முறைப்பாகக் கேட்டாள்.
"ஏ, ஏன்? யா, யாருமில்லையே! நான்தாம்மா." கிரிஜாவின் கண்களில் திகில் பரவியது. தொண்டை அடைத்தது.
"இல்லையே, நான் வரப்ப உள்ள ஏதோ சத்தம் கேட்டதே," வைஷ்ணவி கிரிஜாவை ஊடுருவிப் பார்க்க,
"இ, இருக்காதேம்மா,"
அவளின் முகத்தில் இருந்த பதற்றமும் பயமும் அவள் செய்த தப்புக் காரியத்தை வைஷ்ணவிக்குச் சொன்னது. அந்த காதலன் அறையில் இல்லை. நைஸாக நழுவி ஓடிவிட்டான் போல. கிரிஜாவுடன் அவன் கூடியபோது அணிந்திருந்த உடையைத்தான் அவள் இப்போதும் அணிந்திருந்தாள். புடவையின் கீழே அந்த வெந்தயக் கலர் பாவாடை சேலையின் விளிம்பிலிருந்து நீட்டிக்கொண்டிருந்தது. படுபாவி, இந்தப் பாவாடையைத்தானே அவுத்துப் போட்டு இவளைத் துணியில்லாமல் மலர்த்திப் போட்டுப் புணர்ந்திருந்தான்? அவளுக்குள் ஏதோ எண்ணம் ஓடியது.
வைஷ்ணவி பூஜையறை பக்கம் திரும்ப, "இருங்கம்மா வரேன்," பூக்கூடையை எடுக்கப் போன கிரிஜாவை, "ஏய்ய்ய் சீ! தள்ளிப்போ, பூவைத் தொடாதே!" என்றாள் வைஷ்ணவி கோபத்துடன்.
Like Reply
#11
எபிசோடு 10
கிரிஜா பெருத்த அதிர்ச்சிக்கு உள்ளானாள். வைஷ்ணவி இப்படியெல்லாம் அவளிடம் உரக்கக் கத்திப் பேசியதே கிடையாது. வைஷ்ணவிக்குக் கோபமே வந்ததில்லை, அப்படியே வந்தாலும் கிரிஜாவிடம் எல்லாம் அதைக் காட்டியதில்லை. இவ்வளவு கோபமாகப் பேசுகிறாள் என்றால் நம் விஷயம் தெரிந்துவிட்டதா? அவள் வைஷ்ணவியின் கோபத்தைக் கண்டு திடுக்கிட்டாள்.
'பூவை நான் தொடக் கூடாதா? இத்தனை ஆண்டு காலம் நான்தானே பூ எடுத்துக்கொடுத்து அலங்காரமெல்லாம் செய்வேன்?' அவள் அப்படியே ஒடுங்கிப்போனாள். விறுவிறுவென அறைக்குப் போய் கதவைப் பூட்டியவள் திறக்கவே இல்லை.
'அய்யோ, பார்த்துவிட்டாள், பார்த்துவிட்டாள், தவறு என் பக்கம்தான். குறைந்தபட்சம் குளித்துவிட்டு, சேலையாவது மாற்றிக்கொண்டு போயிருக்க வேண்டும்.' அவளுக்கு ஒரு பக்கம் அவமானமும் ஒரு பக்கம் அழுகையுமாக இருந்தது. அழுகை தாள முடியவில்லை.
அத்தனை முறை திரும்பத் திரும்பக் கேட்டாளே வைஷ்ணவி? "உன் ரூமில் யார் இருந்தது? ஏதோ பேச்சுச் சத்தம் கேட்டதே?" அப்படின்னு? அதற்கெல்லாம் என்ன அர்த்தம்? வைஷ்ணவிக்கு முகமே சரியில்லை. எப்போதும் வெளியூருக்குப் போய்விட்டு வந்தால் கிரிஜாவுக்கு என எதையாவது வாங்கி வருவாள், கொடுப்பாள், கைபிடித்துப் பேசுவாள். இம்முறை எதுவுமே இல்லை. நமது உடையும் அலங்கோலத்தையும் மேலிருந்து ஒருதரம் கீழே பார்த்தவள் டக்கென்று முகத்தைத் திருப்பிக்கொண்டாளே!
கிரிஜாவுக்கு உடல் நடுங்கியது. அதற்குத்தான் எத்தனையோ முறை வேண்டாம் வேண்டாம் எனப் படித்துச் சொன்னேன் சுரேஷிடம்! அவன்தான் கேட்கவே இல்லை. "வைஷ்ணவி அம்மாதான் ஊர்ல இல்லையே? வாடி, ரொம்ப நாளச்சு!" எனச் சொல்லி எது எதையோ பேசி மயக்கி, பகலிலேயே படுப்பதற்கு கூப்பிட்டுவிட்டான்.
அவனைச் சொல்லி என்ன தப்பு? நமக்கு எங்கே புத்தி போச்சு? அவன் வயசென்ன? நான் தானே தள்ளிவிட்டு வந்திருக்க வேண்டும்? சுரேஷுடன் நான் படுத்திருக்கிறேன், ஐயோ எத்தனை ராத்திரிகள்? அப்படியெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லை. காதும் காதும் வைத்தாற்போல் கலவி கசமுசாவாக நடந்தது. ஒன்று அவன் தன்னுடைய ரூமுக்கு வருவான், இல்லை அவள் அவுட் ஹவுஸைத் தேடிச் செல்வாள்.
எல்லாமே அர்த்தராத்திரி நடக்கின்ற அந்தரங்க விஷயம். மூன்றாம் ஆளுக்குத் தெரிய வாய்ப்பே இல்லை. மந்தாகினி என ஒருத்தி புதிதாக வந்த பிறகுதான் அந்த விஷயம் அடிக்கடி நடக்காமல் வாரம் ஒருமுறை நடக்கிறது. ஒரே ஒரு முறை என்றால் கூட என்ன? வாரம் கிடைக்காத வெறியில் அந்த ஒருமுறை கிரிஜாவை சுரேஷ் அனுபவித்துவிட்டுப் போவான்.
ஆனால், இதெல்லாம் நானா ஆரம்பித்தேன்? ஒரு பொம்பளையா அலைந்தாள்? இந்த ஆம்பளைங்கதானே வராங்க? புருஷன் வேண்டாம், புருஷன் மட்டுமல்ல, எந்த ஆம்பளையும் வேண்டாம் எனத் தள்ளித்தானே இருந்தேன்? ஆனால் அப்படி இருக்கவிட்டது யார்? ஆம், அந்த மனோகரன் வீட்டு மாப்பிள்ளை, அவன்தானே ஆரம்பித்தான்?
இந்த வைஷ்ணவி அவனுக்குப் படுக்கையில் ஒழுங்காக இடம் கொடுத்திருந்தால், அவன் ஏன் என் பக்கம் வந்திருக்கப் போகிறான்? கிரிஜாவுக்கு ஆத்திரமாக இருந்தது.
மனோகரன் முதல் நாள் இரவு வைஷ்ணவியிடம் தோற்றுப்போய், அடுத்த சில நாள்கள் அலைபாய்ந்துகொண்டிருந்தான். பல நாள்கள் வரை அவன் அந்த வீட்டில் ஒட்டாமல் இருந்தான். அவனுக்குப் பேச்சுத் துணையும் இல்லை.
"ஏன் இந்த வீட்டுல எல்லாம் பாட்டு பாட்டுன்னு உர்ருன்னு இருக்காங்க?"
"அவங்க பாட்டுக்கு இருந்தா என்ன? நீங்க உங்க பாட்டுக்கு இருங்க," கிரிஜாதான் அவனைச் சிரிக்க வைத்தாள். அவள்தான் அவனுக்குப் பணிவிடை செய்து பார்த்துக்கொண்டாள்.
ரூமுக்கு வந்து காஃபி கொடுத்தவளிடம், "டிபன் ரெடியா? டைனிங் வரலாமா?" என அவன் கேட்க,
"இப்ப வேணாம், வெளியே அய்யா இருக்கார். நானே டிபன் எடுத்து வரேன், உள்ளேயே சாப்பிடுங்க."
அவளது கரிசனம் அவனுக்குப் பிடித்துப்போனது.
"தண்ணி அடிக்கிறதை இந்த ஊர்ல தப்பா பேசுறாங்க கிரிஜா."
அவன் "கிரிஜா!" என விளித்தது அவளுக்குத் திகைப்பாக இருந்தது. அதில் வேலைக்காரிதானே என்னும் தொனி இல்லை.
"கொஞ்சமா தண்ணி அடிங்க, ரூம்ல வச்சு அடிங்க. கண்ணுச்சாமி டிரைவரை அனுப்பி வாங்கி வரச் சொல்றேன். அய்யா எதுக்குத் தள்ளாடிட்டு வந்தா நல்லாவா இருக்கும்? அப்புறம் எப்படி வைஷ்ணவி அம்மா உங்ககிட்ட வருவாங்க?" அவள் சிரித்தாள்.
அவன் அடுத்த ஒரு வாரம் அடக்கமாக இருந்தான். தண்ணி அடித்துவிட்டு வைஷ்ணவியிடம் போக அவனுக்குப் பயமாக இருந்தது. ஆனால் தண்ணி அடிக்காமல் அவளிடம் போக மனசே வரவில்லை.
"மதியத்துக்குச் சுறாப்புட்டு கிடைக்குமா? எனக்கு ரொம்ப பிடிக்கும்," அவன் தயங்கி கிரிஜாவிடம் வந்து கேட்டான்.
"சுறாப்புட்டா? ஹலோ, இது வெஜிடேரியன் வீடு!"
"எனக்குச் சுறாப்புட்டு, பருப்பு ரசம்னா பயங்கர உசுரு, அதான், சரி, அதுக்கு டவுனுக்குத்தான் போகணுமா?" அவள் சிரித்தாள்.
"எங்கேயும் போக வேணாம். நான் அவுட் ஹவுஸ்ல வாங்கி வரச் சொல்லி எடுத்துட்டு வரேன், வச்சு சாப்பிடுங்க."
"ரொம்ப தேங்க்ஸ்."
"அய்யோ, ஏன் தேங்க்ஸ்? என்கிட்ட போய்,"
"பொண்டாட்டிகிட்ட கேட்க வேண்டியதை உன்கிட்ட கேட்கறேன்."
"அச்சச்சோ, சுறாப்புட்டு அவங்ககிட்ட கேட்டுத்தான் பாருங்களேன், அப்புறம் துணி மிஞ்சாது!"
"அவ ஏன் அவ்ளோ திமிரா இருக்கா கிரிஜா? அழகா? அறிவா?"
"ரெண்டும்தான், ஏன்? நீங்களும்தான் அழகு,"
"அப்படியா?"
"ஆனா ஒரு பதற்றம், தப்பாகிடுமோன்னு பயம், பதற்றப்படுறதால அதை மறைக்கக் கோபம். யாரும் நம்ம மேல பழி போடுறதுக்கு முன்னாடி நாமளே பழி போட்டுடுறது."
"நீ சரியாத்தான் சொல்றே கிரிஜா. எனக்கு ஏதோ கோபம், யார் மேலயோ கோபம், காசு நிறைய இருந்தா பயமில்லைன்னு நினைச்சேன். ஆனா காசுக்கு ஆசைப்பட்டு நிறைய இடத்துல கையெழுத்துப் போட்டுட்டு இப்ப காசை விடப் பயம் அதிகமாகிடுச்சு."
"ம்ம், இதுல கல்யாணம் வேற! வைஷ்ணவி மாதிரி பேரழகியைக் கட்டிட்டோமேன்னு பயமா? அல்லாடலா?"
"தெரியல, ஆனா அவகிட்ட போனா அல்லாட்டம் தான்,"
"வைஷ்ணவியா? நீங்களா? யார் உசத்தின்னு நீங்க அல்லாடுறீங்க,"
"அட, மனசை கரெக்டா படிக்கறியே! அடடா கிரிஜா, நீயே எனக்கு ஒய்ஃபா வந்திருக்கக்கூடாதா?"
"ச்சீ!" அவள் பதறினாள்.
"விளையாட்டுக்குக் கூட அப்படிப் பேசாதீங்க! மத்த வேலைக்காரங்க காதுல விழுந்தா கூட என் எலும்பு மிஞ்சாது, உங்களுக்கு பாலக்கிருஷ்ணய்யா பத்தி தெரியல, பெரிய உத்தியோகத்துல இருந்தவரு, ஊர்ல செல்வாக்கான ஆளு."
"எனக்கு தெரியவேணாம். பாண்டிச்சேரி வந்து என்னைப் பத்திக் கேட்டுப் பாரு."
அவன் அலட்சியமாகக் கிரிஜாவின் முந்தானையில் கையைத் துடைத்து வெளியே போனான்.
"அய்யோ என்ன இது? என்னை அடி வாங்க வைக்காம விடமாட்டீங்க போல!" அவன் போய்விட்டான்.
அந்த நாள் இரவு லேட்டாக வந்தவன், கிரிஜாவிடம் சாப்பிட ஏதோ கேட்டான்.
"மதியம் எங்கே வரல?" அவள் சீறலாகக் கேட்க,
"ஏன்?" அவன் வாய் குழறியது.
"ஏனா? சுறாப்புட்டு மட்டும் வேணுமா கேட்கத் தோணுது, செஞ்சு வச்சா ஆளு வரல, ஏனாம் ஏன்?"
"ஓ மை காட்! சுத்தமா மறந்துட்டேன், வெரி சாரி!"
"இனி உங்களுக்கு ஜென்மத்துக்கும் சுறாப்புட்டு இல்லை!" அவள் அவனிடம் உரிமையாய்ப் படபடத்தது அவளுக்கே வினோதமாக இருந்தது.
"இ, இப்ப சாப்பாடு?" அவன் கேட்க, அவளுக்குப் பரிதாபம் மேலிட,
"நீங்க வர மாட்டீங்கன்னு நினைச்சு சாப்பாட்டுல தண்ணி ஊத்திட்டோமே, இருங்க, சப்பாத்தி செய்யறேன்."
அவள் வேகமாகச் சமையலறைக்குப் போய் சப்பாத்திக்கு மாவு பிசைய, அவன் அவளின் பின்னால் வந்தான். கிரிஜாவின் இடுப்புக்கு இருபுறமும் கைகளை விட்டுச் சமையல் மேடையில் இருந்த மாவுத் தட்டைப் பிடிக்க,
"அய்யோ, என்ன பண்றீங்க? வேணாம்!" எனச் சொல்ல,
"நானும் பிசையறேன்," என்றான். அவளைப் பின்புறமாகக் கட்டி அணைத்துக் கழுத்தை முகர்ந்து சப்பாத்தி மாவு பிசைந்தான். அவள் எட்டி ஹாலைப் பார்த்தாள், யாராவது வருகிறார்களா எனப் பார்த்தாள். அவள் அப்படித் திரும்பும்போது அவளின் முலைமேடுகள் அவன் முழங்கையில் அமுங்கியது.
யாரும் இல்லைதான். அதற்காக வீட்டு எஜமானை அனுபவித்துவிட முடியுமா? அவள் திகைக்க, அவன் அவளது இடுப்புச் சதையை வருட,
"ஆஆ, என்ன பண்றீங்க? வைஷ்ணவி அம்மாவைக் கூப்பிடவா?"
"வேண்டாம், நீயே போதும்."
"இதெல்லாம் தப்பு, நீங்க வெயிட் பண்ணுங்க, நான் சப்பாத்தி சுட்டு வரேன்."
"ஒன்னும் தேவையில்லை, எனக்குச் சப்பாத்தி கூடத் தேவையில்லை. நான் இப்படி இந்த இடுப்பைப் பிடிச்சுக்கிட்டு இருக்கேன்." அவன் கை அவளின் இடுப்புச் சேலையை விலக்கிவிட்டுத் தொப்புளுக்குள் போய்த் தொட்டது.
"ஐயோ, என்ன இப்படி பண்றீங்க? யாராச்சும் பார்த்தா என் வேலைதான் போயிடும்!"
"போகட்டும், என்கூடவே நீ வந்துடு."
"ஐயோ, என்ன சொல்றீங்க? கல்யாணமான புது மாப்பிள்ளை நீங்க,"
"சோ?" அவன் கழுத்தைக் கடித்தான்.
"ஐயோ!"
"உனக்கும் கல்யாணம் ஆகி பிரயோஜனம் இல்லை, எனக்கும் கல்யாணம் ஆகி பிரயோஜனம் இல்லை, உனக்கும் புருஷன் சரியில்லை, எனக்கும் பொண்டாட்டி சரியில்லை."
"ஐயோ சாமி! வைஷ்ணவி அம்மா என்ன தப்பு பண்ணாங்க? அவங்க எவ்ளோ அழகு? என்ன ஒரு பொலிவு?"
"அழகா இருந்து என்ன பிரயோஜனம்? புருஷன் சாப்பிடலன்னு தெரிஞ்ச உடனே சப்பாத்தி சுடணும்னு எண்ணம் உனக்குத்தான் வந்துடுச்சு!"
அவன் அவளது வயிற்றைப் போட்டுப் பிசைந்தான்.
"ஆஆ, அய்யோ அய்யா! கையை எடுங்க ஐயா!"
அவன் கேட்கவே இல்லை. அவளது கூந்தலை முன்னால் தள்ளிக் கழுத்தை முகர்ந்தான், முத்தமிட்டான், மெல்ல நக்கினான். முந்தானைக்குள் கைகளைக் கொண்டுபோய் ரவிக்கையைப் பிசைந்தான். ரொம்ப நாளாகக் கசக்கப்படாத கல் முலை, அவனது சில விநாடி பிசையலில் இளகி மெத்தென ஆக, அவன் துணிந்து ரவிக் கொக்கிகளை பட் பட் எனக் கழற்ற,
"அய்யா வேணாம், ம்ஹூம்ம்ம்," அவள் குரல் நடுங்க, அவனது கை அவளது ரவிக்கையை மொத்தமாக அவிழ்த்து, பிரா கப்பை போட்டுக்கசக்கியது.
அவள் காம்புகள் கிர்ரென விரைக்க, அவளின் பிராவுக்குள்ளிருந்து முலைக்கட்டிகளை வெளியே எடுத்து அவன் மொத்தமும் கைப்பற்ற, அவள் அப்படியே சாய்ந்தாள்.
'ஆஆ, அய்யோ! வைஷ்ணவி புருஷன் கூட நானா?'
அவள் பாவாடைக்குள் புஸ்வானப் பட்டாசு பொரிய, அவன் சேலையை விலக்கி இரு முலைகளையும் கண்ணால் பார்த்துப் பிசைந்துவிட்டான். அவனது கைகள் பால் கலசங்களுடன் காம்பு திருகி விளையாட ஆரம்பித்திருந்தது.
ஆஹா, இந்த முலைகள் மீது ஒரு ஆணின் கைபட்டு எத்தனை நாள்கள் ஆகிவிட்டன? கல்யாணமான ஒரு மாதம் கிரிஜாவை விட்டுப் பிரியாமல் அட்டைப் பூச்சி போல இருந்தான் அவள் புருஷன். ஆனால் சில மாதங்களிலேயே அவர்களுக்குள் பெரிய இடைவெளி வந்தது. கல்யாணமாகி ஒரு வருஷம் ஆகியும் பிள்ளை இல்லை என்பதை எல்லாரும் பேச, இவன் மட்டும் ரகசியமாக டாக்டரைப் போய்ப் பார்த்துவிட்டு அந்த ரிப்போர்ட்டை வாங்கி ரகசியமாக பீரோவில் வைத்திருந்தான்.
இவள் தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கில அறிவோடு அந்தச் சான்றிதழ் மேலே பார்க்கும்போது 'செமன் கவுண்ட்' கம்மியாக இருந்தது. அது பற்றி ஒன்று இரண்டு பேரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அவனை நேரடியாகக் கேட்க, அவன் மிரண்டு போனான்.
"நாயே, வேவு பார்க்கறியா வேவு?" அவளைப் போட்டு அடித்தான்.
ஒரு வாரம் கழித்து மும்பையில் வேலை கிடைத்துவிட்டது எனப் போனான். 'ஓடித் தொலைகிறான், என்னை விட்டுப் போய்த் தொலைகிறான்' என அவள் சும்மா இருந்துவிட்டாள்.
அவன் குழந்தை கொடுக்க வக்கில்லாதவன் என்றால் கூட, அவளது பருவமேனியைத் தொட்டுத் தழுவி அனுபவித்துவிட்டுப் போயிருந்தான். அந்த காம அலைகள் இத்தனை ஆண்டுகளாக அவளுக்குள் அடங்காமல் தத்தளித்துக்கொண்டிருக்க, நீண்ட நாள் கழித்து மனோகரன் அதைத் தூண்டிவிட்டான்.
Like Reply
#12
எபிசோடு 11

கிரிஜாவின் கன்னங்களை எட்டி எட்டி மனோகரன் நக்கிக்கொண்டிருந்தான். அவன் மாறி மாறி அவளின் இரண்டு காதுகளையும் வாயால் கவ்விக் கடித்துக்கொண்டிருந்தான்.
"எதுக்கு இப்படி அலையறீங்க,? விடு, விடுங்க"
"ம்ஹூம்ம்ம்"
மனோகரனின் சென்ட் வாசமும் அவன் குடித்து வந்திருந்த பிராந்தி வாசமும் கிரிஜாவைத் திக்குமுக்காடச் செய்தன. அவனது எச்சில் அவளின் கன்னங்களில் வழிந்து வடிந்து அவளைப் போதையாக்கியது.
'அய்யோ, இது மிகப்பெரிய தவறுதான், வைஷ்ணவி அம்மாவுக்கு நாம் துரோகம் செய்கிறோம்' ஆனாலும் கிரிஜாவால் மனோகரனைத் தவிர்க்க முடியவில்லை. அவள் மனோகரனின் முன்பகுதிகளைத் தன் பின்புறங்களால் நசுக்கிக்கொண்டிருந்தாள். அவனது வலுவான கைகளில் சிக்கி அவள் நசுங்கப்பட்டுக்கொண்டிருந்தாள்.
கல்யாணமாகியும் பிரம்மச்சாரியாக இருக்கும் அவனுக்கு, அவனது சொல்பேச்சு கேட்கும் ஒரு ரகசியப் புண்டை கிடைத்ததனால் அவனது ஆண்மை கிளர்ந்தெழுந்தது. அவன் அவளை ஒரு அடிமை போல மூர்க்கமாகக் கையாண்டான்.
"அய்யாஆஅஸ்ஸ்ஸ்ஸ்ஸ்"
அவனது ஆண்மை தனது குண்டி நடுவே பெரிய சைஸ் கரண்டி போல் குத்த, அவனது மார்பின் மீது அவள் மல்லாக்கச் சாய்ந்துகொண்டாள்.
கிரிஜா பலவீனமாக இருக்கிறாள் என்று தெரிந்துகொண்ட மனோகரன், ஒரு கையால் முலையைப் பிசைந்துகொண்டே இன்னொரு கையை அவளது புடவைக்கொசுவத்துக்குள் விட்டான். ஜட்டி அணியாத கிரிஜாவின் வீங்கிய பட்டைமேடு அவனது கைகளுக்குள் சிக்கிக்கொண்டது. அவன் சப்பாத்தி மாவு பிசைவது போல அந்த முடி அடர்ந்த புண்டையை நன்றாகக் கொத்தாகப் பிடித்துப் பிசைந்துவிட்டான்.
கணவன்கூட இப்படி ஒரே நேரத்தில் முலையையும் புண்டையையும் தனித்தனியாகப் போட்டுப் பிசையவில்லை. கையை எடுத்து அவளைத் தன் பக்கம் திருப்ப, அவன் முகத்தைப் பார்க்காமல் அவள் தலை தொங்கியிருக்க, அவளது மோவாயைப் பிடித்து மேலே தூக்கி அழுத்தமான ஒரு முத்தத்தைப் பதித்தான் மனோகரன்.
இவன் முன்கோபி, முசுடு, பொல்லாதவன்தான். ஆனால் மிக அழகானவன். தனக்கு இப்படி ஒரு தங்கமகனா? கிரிஜா தவித்துப்போனாள். தன் உதட்டைக் கடித்து நக்கும் அவனது வாயை விடாமல் கவ்விக்கொண்டாள்; உள்ளே வந்த நாக்கைக் கடித்தாள்; எக்கி எக்கி வாய் திறந்து அவனுக்கு நக்கக் கொடுத்தாள்.
'எஜமானனுக்கு அலைகிறோமே' என்ற எண்ணம் அவளது மனதின் ஓரம் துளியுண்டு இருந்தாலும், 'இப்படி ஒரு வாய்ப்பு நமக்குக் கிடைக்குமா?' என்பது போல அவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள். அவனது உடம்பு மீது அவள் மேனி சரிய, கிரிஜாவின் முழு உடைகளையும் அவன் சமையலறையில் அவிழ்த்துப்போட்டு, மேலிருந்து கீழாக ஒவ்வொரு அங்குலமாக நக்கினான்.
தரையில் முட்டிக்கால் போட்டு அவளது தொடைக்கு வர, அவளே காலைத் தூக்கிக் காட்டித் தன் பெரிய புண்டையை அவன் வாய்க்குள் திணித்தாள். தனது ஒழுகும் புண்டைத்தேனை அவன் குடிப்பதைப் பார்த்துக் கால் நடுங்கித் துடித்தாள். அவளின் சேலையைத் தரையில் போட்டு அவளைப் படுக்கவைத்தான். அவளை மூர்க்கமாக முகர்ந்தான். அவளின் அக்குள் குழியிலும் தொப்புள் குழியிலும் மாறி மாறி நக்கினான்; அவளையே முலைக்காம்பை எடுத்துக்கொடுக்கச் சொல்லிப் பால்குடித்தான். சப்பாமல் அடிக்கடி முலைக்காம்பைக் கடித்தான்.
அவள் அவனது வேகம் தாங்காமல் காமத்தில் மூச்சடைப்பது போல உடலை முறுக்க, அவன் அவளது அடிவயிற்றுக்குக் கீழே போய்த் தொடைப்பணியாரத்தில் முகத்தைத் தேய்த்தான். அவள் இடுப்பை எக்க, தொடைகளைப் பிளந்து அவளின் இன்பப் பணியாரத்தைக் கவ்வினான். அவள் சிலிர்த்துப்போனாள்; உச்சமடைந்து, உச்சிமடைந்து உள்ளுக்குள் செத்தேபோனாள்.
ரொம்ப நாள் கழித்து வெடிப்பை விட்டுப் பிரித்து வந்த அவளது மொச்சைப்பருப்பை அவன் தோண்டி எடுத்து நாய் போல நக்கினான். அவள் தனது பொல்லாத விதியை நினைத்துக் கண்மூடிக்கொண்டாள்; விசும்பலாய் அவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள்.
அவன் அவளது தொடை, அடிவயிறு என நக்கிவிட்டு, அவள் கால்களை விரித்துப் பிடித்துப் புண்டை மேட்டை விழிகள் விரியப்பார்த்தான். "ரொம்ப முடிடி" என்றான். வெடிப்பைப் பிளந்து விரலால் சுண்டினான். அவள் பெண்மை உதடுகள் தானாகவே துடிக்க, சுண்டு விரலை உள்ளே சொருகி ஆட்டினான்.
"அங்க்ங்க்ங்க்ங்க்" என கிரிஜா முனகி, ஒருமுறை தலைதூக்கி இடுப்புக்குக் கீழே பார்த்துப் பின் துவண்டு சரிந்தாள். அவள் கால்களுக்கு இப்போது எந்தப் பிடிமானமும் இல்லை; சரிந்து அடுப்பாங்கரைத் தரையில் புரண்டன.
அவளது பெண்மைக் குழி முழுக்கப் பால் திரண்டு கொப்பளித்துக் கொண்டிருந்தது. அவன் இன்னொரு விரலையும் விட்டு ஓட்டையைப் பெரிதாக்க, அவள் உதடு கடித்துக் கத்த, அவன் இப்போது தன் ஐந்து விரல்களாலும் அவளது ஐந்தூகப் பெட்டகத்தை மொத்தமாகப் பிசைந்து நசுக்கினான். மெல்ல தலைதூக்கி அவளது முகத்தில் காமரேகை முளைத்துள்ளதா எனத் தேடிப்பார்த்தான்.
அவன் தன்னைப்பார்ப்பதையறிந்து அவள் தலையைத் திருப்பிக்கொள்ள, அவன் அவள் தொடைச்சங்கமத்தில் மொத்தமாய்ச் சரிந்து, கிரிஜாவின் பதமான பெண்மையைச் சரட்சரெட்டென நக்கிச் சுவைக்க ஆரம்பிக்க, அவனது முரட்டு வாய் அவளது பெண்மையின் ரசத்தைக் குடிக்கத் தொடங்கியிருந்தது.
'பாரு, எப்படிக்குடிக்கிறான்! இவனையா வைஷ்ணவி ராங்கிக்குப் பிடிக்காமல் போச்சு?' அவள் சிலிர்த்தாள்.
அவனது முரட்டு நாக்கு பெண்மை உதட்டின் ஓரம், உள்புறம், கிளிட் பட்டாணி மீதெல்லாம் உரச, படாரென வெடித்த கிரிஜாவின் ஆர்காசக் குழம்பை அவன் அள்ளிப் பருகினான். அவள் கால்கள் இன்னும் விரிந்தே கிடக்க, கிரிஜாவின் மன்மதப் பிளவு முழுவதையும் அவன் விழுங்கி, மிமி மிமியாக மெல்லக்கடிக்க,
'காலையில் சுறாப்புட்டு கேட்டான்; இப்போ குழாப்புட்டை என் அடுப்புல வைக்காமல் போகமாட்டான் போலயே! வூட்டுக்கு ராஜாதான், ஆனா எனக்கு நாய்தான், அட, சுலபமாக என்னை மடக்கித் தரையில் மல்லாக்கக்கிடத்தி, எனது அந்தரங்கத்தைப் பிளந்து ஆக்கிரமித்துவிட்டானே! அப்போ புருஷன் இல்லாத காமவேட்கை உள்ளுக்குள் இல்லாமல் இருந்தா இப்படி நடக்கிறது? ரோசத்துக்குப் புருஷன் வேண்டாம்னு சொன்னேன், ஆனா நான் என்ன அத்தனை பலவீனமானவளா?'
அவள் துடிக்கத் துடிக்க முனக, அந்தப் பெரிய புண்டையின் எல்லாப் பக்கமும் வாய் வலிக்க அவன் கடித்தான். பொச் பொச் என மாறி மாறித் தனது இன்ப உறுப்பில் வந்து விழுந்த அவனது முத்தங்களின் மோதலைத் தாங்க முடியாமல் கிரிஜா சுகத்தில் கத்தினாள்.
அவன் அடிக்கடி அவளது சொர்க்கபுரியை விழுங்கிச் சுவைத்துவிட்டு, அவளது அடிவயிற்றிலும் தொப்புளையும் கடித்துத் தொடங்கியிருந்தான். கைகள் மட்டும் முலைப்பழங்களைச் சாறு பிழிந்துகொண்டிருந்தன. அவளது தங்கப்பேழை கடித்துக் கடித்துப் பெரும் சப்தத்தோடு அவனால் உறிஞ்சப்பட, அவள் மீண்டும் மெல்ல மெல்லக்கண் விழித்துப் பார்த்தாள். அவனின் தலைமுடிதான் அவள் கண்களுக்குத் தெரியவந்தது.
தன் உடலுக்குள் நிகழும் ரசாயன மாற்றத்தின் வல்லமையைத் தாங்கும் சக்தி இல்லாமல் அவனுக்கு அடியில் அவள் படுத்தபடி தலையை அங்கும் இங்கும் அசைக்க, கண்களில் நீர் வழிய, அவன் தோள்களைக் கடித்தபடி கிரிஜா இருக்க, பிடித்தோ பிடிக்காமலோ மனோகரன் தரும் அந்தக் காமசுகத்தை வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தாள் கிரிஜா.
அவளின் புழை உதடுகள் இரண்டாய் விலக்கப்பட்டு அவன் நாக்குக் கத்தி போலச் சுழல, அவன் வசதியாகத் தன் புண்டையை நக்குவதற்காக இரண்டு பாதங்களிலும் தன் கைகளால் பிடித்துக்கொண்டு, தன்னால் முடிந்த அளவிற்கு மேலே தூக்கித் தன் மேடையைக் காட்டினாள்.
"நக்கிக்கங்க" என முனகினாள்.
அவன் எந்தச் சிரமமும் இல்லாமல் கிரிஜாவைத் தனது முழு வழிக்குக் கொண்டுவந்தான். 'இனி நீங்கள் சொல்வதுதான் நான் கேட்பேன்; உங்கள் இஷ்டப்படி என்னை அனுபவிக்க வேண்டும்' என்பதாய்க் கிரிஜா முழுதும் இணங்கி, தன் உடலையும் அந்தரங்க பாகங்களையும் வளைத்து வளைத்துத் தூக்கிக் காட்டினாள்.
அந்தக் கிரிஜா என்னும் நீண்ட நாளாகக் கைப்படாத பட்டுவண்ண ரோஜாகாரியை அவன் வாயாலும் பல்லாலும் பதம் பார்த்து, எழுந்து நின்று வேட்டியைக் கலைந்து தன் சுன்னியை நீட்டினான். அவள் கப்பென அதைத் தன் கையில் பிடித்து முறுக்கினாள். அதன் வீரியம் பார்த்து அவளும் ஆச்சரியமானாள். 'இவ்வளவு நேரம் இது கஞ்சி கக்காமல் நின்றுகொண்டிருக்கிறது! இதே வைஷ்ணவியாக இருந்தால் இந்நேரம் பட்டென எனக்கு வெடித்திருக்குமே.'
கிரிஜா அதை வாயில் போட்டுச் சப்ப ஆரம்பிக்க, 'ஆஹா, சொல்லாமலே செய்கிறாள்! வைஷ்ணவி இப்படிச் செய்வாளா? ம்ஹூம், வைஷ்ணவி ஒருநாளும் அடிபணிந்து இப்படி விசுவாசமாய் ஊம்பமாட்டாள், ராங்கி!' என அவன் நினைத்தான்.
தனக்கு முன்பக்கம் குனிந்து நின்ற கிரிஜாவைக் கீழே தரையில் தள்ளி, நிர்வாணமாய்க்கிடந்த அவள் மீது ஏறினான். வெண்கஞ்சி வழிந்து வழிந்து சொதசொதவென இருந்த கிரிஜாவின் கொழுப்பெடுத்த கூதியில் தனது விரைத்த ஆண்மையின் நுனிப்பகுதியை வைத்து ஒரே அழுத்து அழுத்த,
"ஆஅவ்வ்வ் அம்மாஆஆஆ"
பல நாள்களாய் சுன்னிக் குத்தலுக்கு ஏங்கிக் கிடந்த அவளது பூமேடை, சதா கொதித்துக்கொண்டே இருக்கும் அவளின் அடுக்குச்சட்டி, அந்த நீண்ட அகப்பையை உள்வாங்கிக்கொண்டது.
அந்த வீட்டின் எஜமானி வைஷ்ணவிகூட அனுபவித்திராத அந்த வீட்டின் மாப்பிள்ளையின் இன்பத்தடியினை, முதன்முதலாகத் தனது பெண்மையில் வாங்கிக்கொண்டு முனகினாள். கிரிஜாவின் வாசனையும் மென்மையும் அவனைப் பித்துப்பிடிக்கச் செய்தது. அவளது கழுத்தில் முகம் பதித்துக்கொண்டே அவன் ஓங்கி ஓங்கிக் குத்தினான்.
"நல்லா தூக்கித் தரேடி,"
"அம்மா, ஆஆஆ"
பல நிமிடங்கள், பல குத்துகள்! பலமாகப் பலமுறை அவளது காஜி பிடித்த பெண்மை அவனால் ஓர்க்கப்பட்டு அனுபவிக்கப்பட்டது.
"ஆங்க்ங்க்ன்ங்க்ஸ்ஸ்ஸ்"
அவன் சுண்ணி அவள் அடிவயிற்றில் இதமாய் முட்டி மோத, அங்கிருந்த உணர்ச்சி நரம்புகள் கிறக்கத்தைக் கொடுத்து அவனுக்கு வேகத்தைக் கூட்டச் செய்தது.
"ம்ம்ம்ஸ்ஸ்ஸ்"
"எனக்கு நல்லா கொடுடி"
"ம்ம்ஸ்ஸ்"
"நல்லா குத்தட்டாடி?"
"ம்ம்ஸ்"
"நல்லா ஓபன் பண்ணுடி, கிரிஜா பொண்டாட்டி"
"ஆஆஸ்ஸாஆஆ"
அவள் உடம்பு தரையில் கிடந்து அதிர அதிர உச்சமடைய, 'குத்துடா, ஸ்ஸ் திருட்டு நாயே,' என அவள் சொல்ல நினைத்தாலும், 'எஜமனாச்சே' என அவள் வெளியில் சொல்லாமல் முனகினாள்.
இருவரின் உணர்வுகளும் தறிகெட்டுப்போய்த் தாறுமாறாகக் கொதிக்க, பல நிமிட நேர உறுதியான குத்தல் இடிகள், இறுக்கமான இணைப்பிற்குப் பிறகு ஓர் உச்சகட்டம் இருவருக்குள்ளும் வேகமாய் சரேலென அருவியாய் ஊறிப்படிந்தது.
வைஷ்ணவி அம்மா, எஜமானர் பாலகிருஷ்ணன், ஓடிப்போன புருஷன் என யாருமே முக்கியமில்லை. இந்த உலகமே அவளுக்குத் தூசாகிப்போய், அவர்களது இன்பம் மட்டுமே அவர்களுக்கு முக்கியமானதாக இருக்க, படாரென்று இருவருக்கும் உள்ளேயும் ஏதோ ஒன்று பிடிக்க, வெடிக்க, அவர்களது இருவரின் உடலும் ஒன்றுக்கொன்று சங்கமித்தன.
"சூப்பர் கூதிடி, ஆஆ கொழுப்பெடுத்த கூதி, ஆஆஸ்ஸ்ஸ் செம்மயா வருதுடி, ஆஆ அஸ்ஸ் பொண்டாட்டி"
"என்னங்க, ஆஆஸ்ஸ்ஸ்" சொந்த புருஷனைப் போல அவள் கூப்பிட்டுப் பார்த்தாள்.
அவளின் செல்லச் சிணுங்கல் மனோகரனுக்குப் போதையை ஏற்ற, பலமுறை எம்பி எம்பி அவன் குத்திய அந்தக்குத்துக்களின் வேகம் அதிகரிக்கத் தொடங்க,
"ஆஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அம்மா ஆஆஆ"
தப தபவெனக் குத்தி குத்தி 'ஸ்ஸ்ஸ்ஸ்' என அழுகைக்குரலாய்ச் சிணுங்கி, கடைசியில் நீண்ட நாள் காய்ந்துகிடந்த கிரிஜாவின் வயலில் நீர்பாய்ச்சி களைப்படைந்தான் வைஷ்ணவியின் புருஷன்.
எதிரில் இப்படியே நாம் நிற்க வேண்டுமே என அவள் யோசித்தாள்.


Like Reply
#13
எபிசோடு 12

அடுப்பாங்கரையில் மனோகரன் தந்த அந்த காம சுகத்தைக் கிரிஜாவால் மறக்கவே முடியாது போல இருந்தது.
எல்லாம் முடிந்த பின்பு அவன் எதிரிலேயே அவள் ஒவ்வொரு உடையாக அணிந்தாள். சமையலறையை விட்டுப்போன அவனை இழுத்துப் பிடித்து முத்தம் கொடுத்தாள். அவனும் முத்தமிட்டு அவளின் உதடுகளைச் சுவைத்தான்.
'யாருக்கு யார் நன்றி சொல்வது?' எனப் புரியவில்லை, இருவருமே திருப்தியாகவே இருந்தார்கள்.
"ஹாலுக்குப் போங்க வரேன்," அவனை அனுப்பினாள். அவன் ஹாலில் கொஞ்ச நேரம் போய்ப் படுத்தான். அவள் சப்பாத்தி சுட்டுக் கொடுக்க, அதைச் சாப்பிட்டுவிட்டு வராண்டாவில் படுத்தான்.
மறுநாளும் அவனுக்கு அவள் தேவைப்பட்டாள். இந்த முறை அவுட் ஹவுஸில் கூட்டிப்போய் விருந்து வைத்தாள். அவன் சுறாப்புட்டைச் சாப்பிட்டுவிட்டு கிரிஜாவைப் புட்டுப் புட்டுச் சாப்பிட்டான். இரண்டாவது நாளே துளி முடி கூட இல்லாமல் வழவழ பெண்மையை அவனுக்குப் படுக்கையில் அளித்ததே, அவள் அவனை எவ்வளவு தூரம் உண்மையாக விரும்புகிறாள் எனத் தெரிந்தது.
அன்றிலிருந்து ஒரு வாரம் திரும்பத் திரும்ப அவன் கிரிஜாவைப் பதம் பார்த்தான். கிரிஜாவுக்கு நிறைய புதிய புடவைகளும் பரிசுகளும் வாங்கிக் கொடுத்தான். வைஷ்ணவியின் தோட்டத்தில் பாய வேண்டிய கட்டி நீர், கிரிஜாவின் தோட்டத்தில் கள்ளத்தனமாகப் பாய்ந்துகொண்டிருந்தது.
வைஷ்ணவிக்குப் போட்டியாக கிரிஜாவும் அந்த வீட்டில் மின்னுப்பாக ஒரு தினுசாக ஜொலித்தாள்.
இதை இப்படியே போக விட வேண்டுமா அல்லது நிறுத்த வேண்டுமா என்பதுதான் தெரியவில்லை. வைஷ்ணவி வீட்டை விட்டுச் செல்ல மாட்டாள், வீட்டோடதான் இருப்பாள். இந்த மாப்பிள்ளைதான் அடிக்கடி புதுச்சேரி போக வேண்டியிருக்கும்.
'என்ன இருந்தாலும் இவன் வைஷ்ணவியுடன் சேர்வது, வாழ்வதுதான் முக்கியம். அப்போதுதான் நாம் மனோகரனை இந்த வீட்டில் பார்க்க முடியும்' எனக் கிரிஜா நினைத்தாள்.
அதற்குப் பிறகு நிறைய பிரச்சினைகள் வரப்போக, அவன் ஜெயிலுக்குப் போகின்ற சூழலெல்லாம் வந்தது. அவனை அவளால் பார்க்கவே முடியவிலை. இருந்தாலும் அவன் ஜாமீன் எடுத்து இந்த வீட்டிற்கு வந்தான். அவன் உருவத்தைப் பார்த்ததுமே கிரிஜா திகைத்தாள், அழுதாள்.
'கவலைப்படாதே' எனச் சைகை காட்டினாள். ஆனால், வைஷ்ணவி அவனைக் கண்டுகொள்ளவே இல்லை.
"எதுக்கு இவ்வளவு ஒல்லி ஆயிட்டீங்க? சரியாக சாப்பிட மாட்டீங்களா? சரி வாங்க," எனச் சொல்லி அவனைத் தன்னறைக்குக் கூட்டிக்கொண்டு போனாள். அவனுக்கு வேண்டிய பலகாரங்களைச் செய்து தந்தாள். நிறைய முத்தங்களை ஆசையாகத் தந்தாள்.
அவன் அந்த பலகாரம் போதாமல், நீண்ட நாள் கழித்து அவள் தன்னையே அவனுக்குக் கொடுத்தாள். அவளையும் ருசித்துவிட்டு அழுதான்.
"ஏன், என்ன ஆச்சு? வேலைக்காரி கூடப் படுத்துட்டோமேன்னு அழுவுறீங்களா?"
"அது இல்லடி, என்ன இருந்தாலும் அவ எனக்கு தாலி கட்டின பொண்டாட்டி. அவளை ஒரு தடவ கூட தொடலைன்றது ரொம்ப வலியா இருக்கு. நான் அவ கூட சேர்ந்து வாழ வழியே இல்லையா? நான் இங்க இருந்தாத்தானே, இந்த வீட்டுக்கு வரப்போவ இருந்தாத்தானே உன்கிட்ட வர முடியும்?"
"ம்ம், புரியுது, சரி இருங்க, ஒரு ஐடியா பண்றேன். மகாதேவன் கோவில்ல ஒரு தெரிஞ்ச பூசாரி இருக்காரு. நாளைக்கு சாயந்திரமா அம்மாவை அங்க அழைச்சிட்டுப் போறேன்,"
"ம்ம்ம், போயிட்டு?"
"அந்த பூசாரிகிட்ட காசு தந்து எதுனாச்சும் உன் சம்சாரத்துகிட்ட நல்ல வார்த்தை சொல்லப் பார்க்கறேன். அவர் சொன்னா அம்மா கேட்பாங்க. அதுக்கப்புறம் நீங்க எந்தத் தப்புத் தண்டாவுக்கும் போகக் கூடாது."
"கண்டிப்பா போக மாட்டேண்டி."
"அப்படின்னா என்கிட்ட கூட வர மாட்டீங்களா?"
"ஐயையோ! உன்கிட்ட வரலைன்னா எப்படி? அவகிட்ட வாரத்துல இரண்டு நாள் என்றால், உன் கூட அஞ்சு நாள், சரியா?" அவன் சொல்ல, கிரிஜா அவனை இறுக்கி அணைத்துக்கொண்டாள்.
எவ்வளவு அழகாக இருக்கிறான்? எவ்வளவு வசதியான வீட்டுப் பிள்ளை? இவனை ஏன் இந்த வைஷ்ணவி வெறுத்துக்கொண்டே இருக்கிறாள்?
"இருங்க, நாளைக்கு உங்களுக்கு ஏற்பாடும் பண்றேன்."
அவள் சொன்னபடியே மறுநாள் காலையிலேயே போய் மகாதேவன் கோயிலில் அந்த பூசாரியைப் பார்த்தாள். சாயந்தரம் வைஷ்ணவி அம்மா கூட வரும்போது 'என்ன சொல்லணும்?' என்றெல்லாம் அவனுக்குச் சொல்லிக்கொடுத்துவிட்டு வந்தாள்.
அதன்படியே அவனும் "தாயே, அவன் கூடவே இரு, புருஷனை விட்டுடாதே," என காசுக்குக் கூவ, வைஷ்ணவியின் மனதும் மெல்ல மாறியது.
ஆனால், கோயிலிலிருந்து வந்த உடனேயே வைஷ்ணவி வாசலில் இருந்த மனோகரனிடம் ஏதாவது நல்ல வார்த்தை பேசுவாள் எனக் கிரிஜா எதிர்பார்த்திருக்க, அவள் எதுவும் சொல்லாமலேயே மேலே சென்றுவிட்டாள்.
அவள் போவதைப் பார்த்த மனோகரன் கிரிஜாவைப் பார்த்து உதட்டைப் பிதுக்கினான். "அவளுக்குத் திமிரைப் பார்த்தியா? அந்த பூசாரி அவ்வளவு சொல்லியும் கூட இவ கேட்கல பாரு?" என அவன் வெடிக்க,
"சரி, வெயிட் பண்ணுங்களேன். அவங்களே வந்து கூப்பிடுவாங்க, வெயிட் பண்ணுங்க," என்றாள்.
ஆனால், இரவில் மணி 11 ஆகும் வரை வைஷ்ணவி கீழே வரவே இல்லை. அவனுக்குக் காஃபி கொடுக்க வந்த கிரிஜாவிடம்,
"போடி, இன்னிக்கும் தனிப் படுக்கைதான் போல, இதுக்காக நான் குடிக்காம வேற இருந்தேன். டிரைவர் கண்ணுச்சாமிகிட்ட சொல்லி சரக்கு வாங்கி வரச் சொல்லு."
"ம்ஹூம், வேணாம். போனா போவுது, சரி மேலே இன்னொர ரூம் இருக்குல்ல, அங்க போய் படுங்க," என்றாள்.
"அதெல்லாம் முடியாது, நான் உன்கூடப் படுத்துக்கிறேன்."
"என்கூடவா? அடுப்பாங்கரையிலா?"
"ஆமா, வாடி!"
"ஐயோ, இன்னைக்கு வேணாம், சொன்னா கேளுங்க,"
"ஏண்டி?" அவளைப் பாய்ந்து முத்தமிட்டான்.
"அந்த அம்மா எப்ப வேணா மனசு மாறி கீழே வரலாம், சொன்னா கேளுங்க,"
"ராங்கி, அவ கிடக்கறாடி!" அவன் எவ்வளவோ சொன்னான், அவன் கேட்கவே இல்லை.
"கிரிஜா, எனக்கு அவ வேணாம், நீ வந்தா போதும்," என்றான். அவன் மாலை கொடுத்திருந்த போதையின் தாக்கம் இன்னும் தீரவில்லை. அவன் நடு ஹாலிலேயே வைத்து கிரிஜாவின் புடவையை அவிழ்த்தான்.
"ஐயோ, என்ன நீங்க இப்படி பண்றீங்க? சரி இருங்க, என் ரூமுக்குப் போலாம்," அவள் திமிரினாள்.
"ம்ஹூம், தேவையில்லைடி, இன்னைக்கு இங்கே ஹாலிலேயே வச்சு செய்யலாம், புடவையை அவுரு," அவள் சேலையைப் பிடித்து இழுத்தான்.
அவள் திமிரத் திமிரக் கேட்காமல் ஜாக்கெட் கொக்கிகளைக் கழற்றினாள். அவளுக்கு மனசு கூடவே இல்லை. திரும்பித் திரும்பி வைஷ்ணவியின் அறைக்கதவைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். அவன் கிரிஜாவின் தொப்புளைக் கவ்வி, சேலையைத் தூக்கித் தொடையைப் பிசைய,
"அய்யோ,"
மாடியில் வைஷ்ணவி வரும் கொலுசு சத்தம் கேட்டதும் அவள் திடுக்கிட்டாள்.
"வராங்க, வி, விடுங்க!"
இவன் போதையில் இருந்தால் அவனுக்கு வைஷ்ணவியின் கொலுசு அரவம் கேட்கவில்லை, அவளையும் விடவில்லை. அவளால் துணிகளை எடுத்து உடுத்த முடியவில்லை. ஆடைகள் மீது கை வைத்தாலே அவன் தூக்கி வீசியெறிந்துகொண்டிருந்தான்.
'ஐயோ, இவன் கூட நான் இந்த நிலைமையில் இருப்பதைப் பார்த்தால் வீட்டை விட்டு வைஷ்ணவி என்னை துரத்திவிடுவாளே! என்ன செய்வது?' எனத் தெரியவில்லை. அவள் சுயநலப் புத்தியுடன் நடக்க,
"சார் சார், விட்டுருங்க சார்!" அவனைத் தள்ளிவிட்டாள்.
"ஏய்ய், வாடி!"
"சார் சார், என்னை எதுவும் பண்ணிடாதீங்க!" எனச் சொல்ல ஆரம்பித்தாள். கணநேரத்தில் கிரிஜா போட்ட கபட நாடகம் புரிந்துகொள்ளும் சக்தி கூட அவனுக்குக் கிடையாது. அவள் எப்போதும் போலத்தான் ஜகா வாங்குகிறாள் என நினைத்தான். அவ்வளவு மார்புகளைக் கவ்வி இருந்த பிராவைத் தூக்கிப் பால் குடிக்கப் போக, அதற்குள் வைஷ்ணவி பார்த்துவிட்டு கண்ணாடி கூஜாவைத் தூக்கி எறிந்து, தலையில் அடிபட்டு ரத்தமாகி இன்னும் பெரிய பிரச்சினையாகிவிட்டது.
அன்றோடு அந்த மனோகரனுக்கும் அந்த வீட்டிற்கும் இடையேயான தொடர்பு அறுந்தது. அதுமட்டுமல்ல, கிரிஜாவுக்கும் மனோகரனுக்கும் இடையேயான கள்ள உறவு கூட முறிந்துவிட்டது. மனோகரன் ஒரேயடியாக வைஷ்ணவியால் நிராகரிக்கப்பட்டான். கிரிஜா நொறுங்கிப்போனாள்.
அன்று வைஷ்ணவி தந்தை உட்பட எல்லோருமே மனோகரன் தன் கற்பைக் காப்பாற்றிவிட்டதாக நினைத்துக்கொண்டார்கள். ஆனால் எனக்கும் மனோகரனுக்கும் இருந்த ஒரு கள்ளத்தனமான ஆத்மார்த்தமான உறவு யாருக்கும் தெரியாது. இது வழக்கமான எஜமானி-வேலைக்காரிக்கு இடையே ஆன உறவு இல்லை என்பதை எப்படி அவளால் விளக்கிச் சொல்ல முடியும்?
அவள் வெகு நாள்கள் மனோகரன் நினைப்பாகவே இருந்தாள். ஆனால் அவனிடம் ஒரு நாளும் போனில் பேசி உறவைப் புதுப்பித்துக்கொள்ள அவள் விரும்பவில்லை. 'இனி அவனிடம் நாம் கள்ளத் தொடர்பு வைத்திருந்தது தெரிந்தால் நம்முடைய விஷயங்கள் எல்லாம் வெட்டவெளிச்சமாகிவிடும்' என்ற பயமும் அவளுக்கு இருந்தது.
வைஷ்ணவி மனோகரனைப் புறக்கணித்தது போலவே, அவளும் தன் கள்ளக் காதலனைப் புறக்கணித்துவிட்டாள். எஜமானி போலவே, தானும் ஆணின் வாசத்தைத் தவிர்த்துவிட்டாள்.
ஆனாலும் அடுப்பாங்கரை என்றவுடனே நெஞ்சில் ஷாக் அடிக்கும். சப்பாத்தி என்றாலே அவனது நினைப்பு மெல்ல வரும். சுறாப்புட்டு மனோகரன் அவளுடன் சரசம் செய்து, அவளுக்குள் ஏற்றிவிட்ட காமச் சூடு அவ்வப்போது இறங்கி ஏறும், ஆனாலும் வெளிக்காட்டாது அடக்கிக்கொண்டு உள்ளுக்குள் மட்டும் தவித்து அப்படியே நான்கு ஆண்டுகள் வரை வைராக்கியமாக இருந்தாள், அவளுக்கு ஒரு மழை நாளில் அந்த ஜுரம் வராத வரை.



Like Reply
#14
எபிசோடு 13

கிரிஜாவின் பெண்மைக்குச் சோதனையான அந்தச் சம்பவம் நடந்து ஓராண்டுக்கு மேல் ஆகிறது. ஆண்களிடம் மட்டுமல்ல, அந்த பங்களாவில் வேலை செய்யும் எந்த ஆணிடமும் தேவையில்லாமல் கிரிஜா யாரிடமும் பேசுவதில்லை.
தோட்டக்கார முருகேசன் பாசமாய் 'தங்கச்சி' என்றால் கூட அவனிடமும் லிமிட்டாகவே பேசுவாள். அதனாலேயே அவளைச் 'சின்ன மேடம்' என்பார்கள்.
"அடேங்கப்பா! எஜமானி போலவே இருக்காங்களே!" என அவள் காதுபடவே சொல்லியிருக்கிறார்கள். அந்த நேரத்தில்தான் பழைய டிரைவர் வயசாளிக் கண்ணுசாமி நீக்கப்பட்டு, புது டிரைவர் சுரேஷ்பாரன் வேலைக்கு வந்து சேர்ந்தான்.
கிரிஜாவை விட ஓரிரு வயது குறைவானவன்தான். வைஷ்ணவிக்குத் தரும் மரியாதையைப் போல கிரிஜாவுக்கும் அவன் தருவான். பழைய டிரைவர் அப்பா காலத்துக் கண்ணுச்சாமியால் கச்சேரிக் கூட்டத்தால் வைஷ்ணவி மேடத்திற்குச் சரியான முறையில் பாதுகாப்பு தர முடியவில்லை என்பதால், பாடிகார்டாகவும் இருக்க வேண்டும், அதே சமயத்தில் நல்ல டிரைவராகவும் விசுவாசமாகவும் இருக்க வேண்டும் எனத் தேடி அலைந்து சுரேஷ்பாரனைப் பிடித்தார்கள்.
சுரேஷ்பாரனை வேலைக்கு அமர்த்தும்போது அந்த நேர்காணலைச் செய்ததே கிரிஜாதான்.
"உனக்குப் பிடிச்சிருக்கா பாரு, ஒழுங்கான பையனா இருந்தா மட்டும் வேலைக்குக் கூப்பிடு," என வைஷ்ணவி கிரிஜாவுக்கு முழு உரிமையும் தந்ததால், கிரிஜா வந்திருந்த நாலைந்து பேரில் இவனைத் தேர்ந்தெடுத்தாள்.
"ரொம்ப அடக்கமான பையன்தான் மேடம்," என வைஷ்ணவியிடம் சான்றிதழ் கொடுத்தாள். அவனும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் வேலை செய்து வந்தான். அந்த வீட்டின் வேலைகளைக் கற்றுக்கொண்டு, எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தான்.
எத்தனை தடவை வேண்டுமானாலும் டவுனுக்குப் போய் கிரிஜா சொல்லும் பொருட்களை வாங்கி வந்தான். வைஷ்ணவி பெங்களூரு கச்சேரி ஒன்றுக்குச் சென்றிருந்த சமயத்தில்தான் கிரிஜாவுக்குக் காய்ச்சல் வந்தது. இரண்டு நாள் மெடிக்கல் ஷாப்பில் போய் மாத்திரை வாங்கிப் போட்டுப் பார்த்தாள், ஒன்றும் கேட்கவில்லை.
வைஷ்ணவியிடம் போனில் சொல்ல, "ஏன், இதே தெருவுலதான் டாக்டர் நரசிம்மன் இருக்காரே? அவர்கிட்ட போகலாமே?" எனச் சொன்னாள்.
"இல்லம்மா, அந்த ஆள் ஒரு மாதிரின்னு சொல்றாங்க."
"ஆமாம்மா, நானும் கேள்விப்பட்டேன். ஆனா நம்மகிட்ட எல்லாம் வச்சுக்குவானா என்ன?"
"தெரியல, எதுக்கு ரிஸ்குன்னு டேப்லெட் போட்டேன்."
"சரி டவுனுக்குப் போ. மலர் ஆஸ்பத்திரி போ, நான் போன் பண்ணிச் சொல்றேன். இப்பவே கிளம்பு, அப்பதான் ஈவினிங்குள்ள ரிட்டர்ன் வர முடியும். கார்ல போ," வைஷ்ணவி அக்கறையாகச் சொன்னாள்.
"சரி," என்றாள். சுரேஷைக் கூப்பிட்டு வண்டி எடுக்கச் சொன்னாள். ஆனால் உடல் ரொம்பச் சோர்வாக இருந்தது. ஆஸ்பத்திரி கிளம்பும்போது வைஷ்ணவி டவுன் ஆஸ்பத்திரிக்கு போன் செய்து, "எனது உதவியாளர் கிரிஜா வருவாள். நல்லபடியாகப் பார்த்து அனுப்புங்கள். பில்லை எனக்கு அனுப்புங்கள்," என உத்தரவிட்டிருந்தாள்.
இவள் போனதுமே எல்லா செக்கப்பும் செய்துவிட்டார்கள். மாலை வரை பரிசோதனை நீண்டது.
"ரிசல்ட் வந்தப்பறம் நீங்க போலாம்," என்றாள் நர்ஸ்.
அவள் சுரேஷை அனுப்பிவிட்டுத் தன்னந்தனியாகவே ஆஸ்பத்திரியில் இருந்தாள். சுற்றிலும் பெண்கள் என்பதால் எந்தப் பாதுகாப்புக் குறையும் இல்லை என்பதால் சுதந்திரமாகச் சுற்றினாள். அடிக்கடி வராண்டாவில் வைஷ்ணவியிடம் போனில் பேசிக்கொண்டுதான் இருந்தாள்.
சாயந்திரம் டாக்டர் மேடம் வந்து, "நீங்கதான் கிரிஜாவா?" எனச் சொல்லி ரிப்போர்ட்ஸைப் பார்த்தாள்.
"ஃபீவர் அப்போ பெயின் இருக்கா?"
"இல்லை மேடம்."
"பீரியட்ஸ்ல?"
"லேசா இருக்கு,"
"எங்கே?"
"கால் முட்டி ஜாயின்ட்ஸ், இடுப்பு, தொடை ஜாயின்ட்ஸ்ல அப்படியே ஸ்ட்ரென்த் இல்லாம வளவளன்னு இருக்கு மேடம்."
"பலவீனம்தான். ஒரு ஹிப் ஜாயின்ட் ஃபுல் செக்கப் பண்ணிடலாம். நீங்க போய் முழு டிரெஸ்ஸும் கழட்டிட்டு நைட்டி போட்டு வாங்க," என்றாள்.
அவளுக்குத் தூக்கி வாரிப்போட்டது.
"நைட்டி இ, இல்லையே,"
"பரவாயில்லை, அட்டெண்டரை வாங்கி வரச் சொல்லுங்க."
உதவிக்குக் கூட ஆளில்லை. வேறு வழியில்லாமல் சுரேஷை மேல் தள ஆஸ்பத்திரிக்கு போன் செய்து, அளவுகளைச் சொல்லி நைட்டி ஒன்றை வாங்கி வரச் சொன்னாள். அவனும் நைட்டி வாங்கி கையில் கொடுத்தான்.
"அக்கா, முப்பத்து நாலு இன்ச் நைட்டி, இந்தாங்க!"
"அட மடப்பயலே, முப்பத்தாறு தானே சொன்னேன்? இது டைட்டா இருக்குமே!"
"அச்சச்சோ, என் காதுல முப்பத்து நாலுன்னு விழுந்துடுச்சுக்கா,"
"உனக்கு எதுதான் சரியா விழுந்தது?" அவள் அலுத்துக்கொள்ள,
"சரி கொடுங்க, போய் மாத்திட்டு வரேன்."
"வேண்டாம் விடு, இப்பவே டைம் ஆகிடுச்சு."
"நைட்டி மட்டும் போதுமா?" என்றான்.
அவளுக்குப் புரியவில்லை.
"நைட்டி போடணும்னு சொல்லி இருந்தாங்க," என்றாள்.
"உள்ளாடையில் ஏதும் வேண்டுமா?" வெளிப்படையாக அவனிடம் கேட்கத் தயக்கம்.
அவன் தயக்கத்தைக் கிரிஜா புரிந்துகொண்டு, "வேற எதுவும் வேண்டாம், நீ வெளியே இரு, கீழே கார்ல இரு. இன்னும் அரை மணி நேரத்துல வந்துடுவேன். ரெடியா இரு, என்னை தேட வைக்காதே," என்றாள்.
"அரை மணி நேரமா? மழை வர்றாப்பல இருக்கே?"
"ஏதோ ஸ்கேனிங் இருக்காம், அனேகமாக செக்கப் பண்ணிட்டு வீட்டுக்குக் கிளம்பிடுவேன்," என்றாள்.
அவன் போன பிறகு, தனி அறைக்குப் போய் அவள் எல்லா உடைகளையும் அவிழ்த்து மடித்து, ஆஸ்பத்திரியில் கொடுத்த ஒரு பையில் தன்னுடைய புடவை, ரவிக்கை, ஜட்டி, பிரா எல்லாவற்றையும் போட்டு வைத்தாள். உள்ளே ஒன்றுமே போடாமல் வெறும் நைட்டியை மட்டும் அணிந்திருந்தாள்.
அந்த நைட்டி அவளின் பெரிய முலைகளை அடக்கி வைக்க முடியாமல் திணறியது. பெரிய காம்புகள் வெளியே துருத்த, பக்கவாட்டுத் தொடையும் பிருஷ்டமும் அந்த நைட்டியைக் கிழித்துவிடுவது போல பிதுங்க,
'எருமை மாடு, சொல்ற வேலையை சரியா செய்யாது, எவ்ளோ டைட்டா நைட்டி வாங்கி இருக்கு பாரு!' அவள் முணுமுணுத்தாள். டிரெஸ்ஸே போடாதது போல ஒரு பிரமை.
பெரிய டாக்டர் அவளை உள்ளே கூப்பிட, எதிர்பட்ட அந்த நர்ஸ் அவளைப் பார்த்துத் திகைத்தாள். 'சரியான மலையாளக் கட்டையா இருக்காளே?' என்பதாய்ப் பார்த்தாள்.
எல்லா மருத்துவப் பரிசோதனையும் செய்துவிட்டு அவளை வெளியே அனுப்பினார்கள். "ரிசல்ட் இரண்டு நாள் கழித்து வரும், உங்கள் நம்பருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்புறோம். டூ, த்ரீ வீக், வீக்லி ஒன்ஸ் ஊசி போடுற போல இருக்கும்," எனச் சொல்லி அனுப்பிவிட்டார்கள்.
அவள் வெளியே வந்ததும் புடவையை அணிய சேர் கீழே பையைத் தேட, அது இல்லை. அய்யோ, அவள் உடைகளை எதுவுமே காணவில்லை!
"என் டிரெஸ் எங்கே போச்சு?" அவளுக்கு திக் என்று இருந்தது. அங்கே இருந்த அந்த நர்ஸிடம், "பை எங்கே?" எனக் கேட்டாள்.
"உங்க புருஷன் வாங்கிட்டாரு மேடம்."
"புருஷனா? ஏய்ய்,"
"அந்த மஞ்சச் சட்டை? தாடிகாரர்?"
"அது எங்க டிரைவர்,"
"ஓ, சாரி, டிரெஸ் பையை உங்க டிரைவர்கிட்ட கொடுத்துட்டோமே," என்றார்கள்.
"எ, என்னது? ஏன் கொடுத்தீங்க? நான் அவர்கிட்ட கொடுக்கச் சொன்னேனா?"
"சாரி மேடம், அவர்தான் வந்தாரு. 'மேடத்துக்கு எப்ப செக்கப் முடியும்?'னு கேட்டாரு. இன்னும் அரை மணி நேரம் ஆகும்னு சொன்னேன். 'இது உங்க பையா?'னு கேட்டாரு. 'இந்த பை எடுத்துட்டுப் போகட்டுமா?'னு கேட்டாரு, சரின்னு சொன்னேன்."
"அய்யோ, ஏங்க நீங்க அந்த பையை அவர்கிட்ட கொடுக்கிறீங்க?"
"அடடா, ஏன் மேடம்? அதுல காசு இருக்கா?"
"இ, இல்லை, என் டிரெஸ்லாம் அதுலதான் இருந்துச்சு!"
"அவ்வளவுதானே, போன் பண்ணி எடுத்துட்டு வரச் சொல்லுங்க," எனச் சொல்ல, அவள் நர்ஸை எரிப்பது போல பார்த்துவிட்டு வராண்டாவில் நடந்தாள்.
நைட்டி அவளை டைட்டாக பிடித்தது. வெறும் நைட்டி மட்டும் அணிந்துகொண்டு உள்ளே ஒன்றுமே போடாமல் அவள் நடக்க, அது மெல்லிய நைட்டி என்பதால் அவளின் அங்க அடையாளங்கள் எல்லாமே பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.
இன்னும் முழு இருளாகாததால் நிறைய ஆண்கள் அவளை முன்னும் பின்னுமாக வெறித்தனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அவளுக்கு வெட்கம் ஒரு பக்கம், அவமானம் ஒரு பக்கம், அழுகை ஒரு பக்கம் என துடித்துக்கொண்டிருந்தாள். 'என் துணிப்பை எங்கே போச்சு? இவன் ஏன் வாங்கிப் போனான்? இவர்கள்தான் கொடுத்தார்கள் என்றால் அவனுக்கு எங்கே அறிவு போனது? நான் எந்த டிரெஸ் போட்டுக்கிட்டு வருவேன்னு அந்த அறிவு கூட அவனுக்கு இல்லையே?' எனத் தனக்குத்தானே நொந்துகொண்டிருந்தாள்.
'ஒருவேளை அவனை போனில் கூப்பிட்டால் கூட, அவன் வந்தால் அவன் எதிரில் இப்படியே நாம் நிற்க வேண்டுமே?' என அவள் யோசித்தாள்.
திரும்பி வந்து நர்ஸைக் கூப்பிட்டு, "இந்த நம்பருக்கு போன் போட்டு டிரஸ் இருக்கிற பையைக் மேலே வந்து கொடுக்கச் சொல்லுங்க. வாங்க, நான் உள்ள வெயிட் பண்றேன்" என்றாள்.
நர்ஸ் அவளது தர்மசங்கடத்தைப் புரிந்து கொண்டு, "உள்ளே வெயிட் பண்ணுங்க மேடம்" எனச் சொல்லிவிட்டுப் போனாள்.
10 நிமிடம் கழித்து வந்து, "மேடம் போன் சுவிட்ச் ஆஃப் வருது. என்ன பண்ணலாம்?" எனக் கேட்டாள்.
"சுவிட்ச் ஆஃபா?" அவளுக்கு இன்னும் தூக்கி வாரிப் போட்டது.
"என்னடா இது சோதனை? அம்மணக்கட்டை மாதிரி டிரஸ்ஸை மாட்டிக்கிட்டு புது இடத்துல திரியறேன். ராத்திரி வீட்டுக்குப் போயே ஆக வேண்டும். சரியான உடையும் இல்லை. எல்லா உடையும் இந்த அசட்டு நர்ஸ் எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டாள். அவள் மறுபடியும் எப்படி வீட்டுக்குப் போவது?"
மறுபடியும் அவனுக்கு முயற்சி செய்து கொண்டே இருந்தாள். நம்பர் போகவே இல்லை. வெளியே வராண்டா ஜன்னலில் எட்டிப் பார்த்தாள். காரும் இல்லை.
"நாய்! சரி, இங்கதான் எங்கேயாச்சும் போயிருப்பான். சே, 'வெயிட் பண்ணுடா'ன்னு சொன்னா, அதுக்குள்ள எங்க பொறுக்க போயிட்டான்னு தெரியலையே!" அவளுக்குக் கோபமாக வந்தது.
யாரையாவது அனுப்பித் தேடலாம் என்றால் கூட ஒரு ஆளும் சிக்கவில்லை.
"சிஸ்டர், ஒரு ஹெல்ப் பண்ணுங்க. கீழ ஹாஸ்பிடல் ரிசப்ஷன்லயும் வெளியேவும் கூட்டம் குறைஞ்சா சொல்லுங்க. நான் வெளியே போய் அந்த எங்க கார் எங்க நிக்குதுன்னு தேடிப் பார்க்கிறேன். என்னால் இப்படியே போக முடியாது, சரிங்களா?" என்றாள்.
"சரிங்க".
இன்னும் அரை மணி நேரம் போக, அவனே போன் செய்வான் எனக் காத்திருந்தாள். அவன் போன் செய்யவே இல்லை. இன்னும் கால் மணி நேரம் போக, கிரிஜா (அந்த நர்ஸ்) இவளிடம், "மேடம், இதுக்கப்புறம் என்னோட டியூட்டி முடியுது. நைட் டியூட்டி நர்ஸ் வருவா. நான் கிளம்பட்டுமா?" என்றாள்.
"ஐயய்யோ கிளம்பாதீங்க".
"இல்ல மேடம், மழைக்கு முன்னாடி போகணும்".
"சரி, ரிசப்ஷன்ல கூட்டம் இருக்குதான்னு பாருங்க".
அவள் பார்த்துவிட்டு, "யாரும் இல்லை வாங்க" என்றாள். அவள் அந்த நைட்டியில் 'தப தப' என வேகமாக நடக்க, அந்த அசைவுக்கே அவளின் பருவ கனபரிமாணங்கள் பிதுங்கிக் கொண்டு வருவதை அந்த நர்ஸ் ஓரக்கண்ணால் வெறித்துப் பார்த்தாள்.
கிரிஜா வேகமாக லிப்டில் போய் நின்றாள். லிப்ட் வேலை செய்யாததால் படிக்கட்டில் இறங்கினாள். படிக்கட்டில் எதிர்ப்புறம் வரும் ஆண்கள் எல்லாம் கிரிஜாவை மிரண்டு போய் பார்த்தார்கள். மார்பையும், வயிற்றுக்குக் கீழே அடர்ந்து ஒட்டிக் கிடந்த முக்கோண மேடையும் கிளர்ச்சியாகப் பார்த்தார்கள். அதில் ஒருவன் தடியனாக இருந்தான். இவளது முலைகள் குலுங்கினாலும் சரிந்து தொங்காமல் மேல் பக்கமே நிற்க, இவ பிரா போட்டிருக்கிறாளா இல்லையா எனக் கூர்ந்து கவனித்தான். அவள் முறைக்க அவன் நின்றான்.
"செமத்தியான பால் மாடு" இவளைப் பார்த்து என்றான்.
'அய்யோ, இவன் சரியான பொறுக்கி போல'. இவள் அவனைக் கண்டுக்காமல் படி இறங்க, அவளது சூத்தழகு அசைவுகளைத் தொடுவது போல அவன் வர, 'அய்யோ தொட்டுவிடுவான் போல' என அவள் வேகமாய் நடக்க,
"ஹலோ, எங்க வேகமா போறீங்க?"
"ஏய், உன்னைத் தான்"
"உங்க வேலையைப் பாருங்க"
"என் வேலைதான் இது!" அவள் முறைக்க, அவன் கண் அவளின் பின்னழகு உருண்டைகள் மீதே இருந்தது.
'சே, எங்க போய் தொலைஞ்சான் இந்த சுரேஷ்?' அவள் வேகமாய் கீழ்த்தளம் வர,
"ஏய் பாத்து, எல்லாம் பிச்சிகிட்டு விழப் போவுது"
"போடா!" அவளால் அதுதான் சொல்ல முடிந்தது. அவன் சிரித்தான்.
"எங்க போற? இந்த நைட்டில வெளிய பசங்க பார்த்தா மேஞ்சிடப் போறாங்க. என் கூட பைக்கில் கூட்டிப் போகட்டா?"
",,,,," அவள் எந்த பதிலும் சொல்லாமல் கீழிறங்கி வந்தாள். மழை தூறல்தான்.
'ஐயோ, இப்படியே எப்படி வெளிய போறதுன்னு தெரியலையே?' அந்த தடியன் வேறு அவளை இம்சிக்க, அவள் துணிந்து ஆஸ்பத்திரி வாசலில் வந்து நின்றாள்.
போர்டிகோவில் அவள் வந்து நிற்க, மழைச்சாரல் அடித்தது. மழை திடீரென வலுக்க, சாரல் அவள் மீதெல்லாம் பட்டது. இன்னும் கொஞ்ச நேரம் போர்டிகோவில் நின்றால் தொப்பலாக நனைந்து விடுவாள் போலிருக்கிறது. பேசாமல் உள்ளே போய்விடலாமா? உள்ளே போய் ஈரத்துடன் எங்கே உட்காருவது, யாரிடம் பேசுவது? அவள் ஃபோனில் காது வைத்துக்கொண்டு கையைப் பிசைந்தாள். மழையில் நனைந்து அவள் வெளிர் மஞ்சள் நைட்டியும் மேனியும் ஈரமாக, இன்னும் கொஞ்சம் நேரம் இந்த மழையில் நின்றால் போதும். ஏற்கனவே இந்த நைட்டியைப் போட்டாலும் ஒன்றுதான், போடாவிட்டாலும் ஒன்றுதான் என இருக்கிறது. இந்த அழகில் மழையில் நனைந்தால் வேறு வினையே வேண்டாம். அவள் உள்ளே போகலாம் எனத் திரும்பும்போது அந்த தடியன் மீது மோத்தினாள்.
"ஏய், அய்யோ!"
"மழையில் எங்க போறே? உள்ள வா,"
'அய்யோ, இவனுக்கு மழையே மேல். ஆஸ்பத்திரி காம்பவுண்ட் தாண்டி ஏதேனும் ஒரு ஆட்டோவில் ஏறலாமா?' அவள் இரு பக்கமும் வழியில்லாமல் தவிக்க, சுரேஷின் கார் ஹார்ன் அடித்தபடி வேகமாக மருத்துவமனையின் இடதுபுறம் நுழைந்தது.


Like Reply
#15
எபிசோடு: 14

யப்பாடி, அவளுக்கு இப்போதுதான் உயிரே வந்தது. "நாய் எப்போது வருகிறான் பார்!" என அவள் திட்ட வாய் எடுக்க, சுரேஷ் காரைப் போர்டிகோவுக்குள் கொண்டு வந்து நிறுத்தினான். Suresh-ஐப் பார்த்தவுடன் அந்த தடியன் முகம் மாறி பின்வாங்கினான்.
"கிரிஜா அக்கா, பில் செட்டில் பண்ணிட்டீங்களா? போலாமா? டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்களா?" என்றான்.
"முதல்ல என் துணியைக் கொடு," என அவள் கேட்க வாயெடுக்க, அதற்குள்ளாகவே அவளைச் சுற்றி ரகசியமாக ஒரு கூட்டம் சேர்ந்து விட்டதையும், அந்த தடியன் அவள் மார்பை உற்றுப் பார்ப்பதையும், அவளது விம்மி பெருத்த பருவ மேடுகளின் அளவுகளைக் கண்களால் அளவெடுப்பதையும் பார்த்துவிட்டு, "சுரேஷ், முதலில் கதவைத் திற" என்று கதவு திறந்து பின்னால் உட்கார்ந்து கொண்டாள்.
"வீட்டுக்குத்தானே போறோம்?" சுரேஷ் கேட்டான்.
"வேறெங்க போறது? போ".
யப்பப்பா! பல ஆண்களின் கழுகுக்கண் பார்வையிலிருந்து தப்பிவிட்டாயிற்று என்றபடி குனிந்து பார்த்தவள் திடுக்கிட்டாள். நைட்டியைப் பார்த்தவள், ஆம், அந்த நைட்டியின் இரு பக்கமும் அவளது மார்புக் காம்புகள் துருத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.
'ஐயையோ! இதைத்தான் எல்லோரும் பார்த்திருக்கிறார்களா? மேலே அப்படி என்றால், கீழே தொடையும் தொடை நடுவிலும் மேனியில் ஒட்டி, பின்னாடியும் சொத்தென ஈரமாகி நனைந்து, அய்யோ, என்னடா இது சோதனை? உதவிக்கு ஒரு பொம்பளையைக் கூப்பிட்டு வராமல் என்ன முட்டாள் வேலை செய்தேனோ போ!' எனச் சொல்லிக்கொண்டு அவள் கூந்தலைப் பிரித்து முன்னால் போட, சுரேஷ், "போலாமா அக்கா?" என்றான்.
"தயவுசெஞ்சு முதல்ல போ" என்றாள்.
"உடம்பெல்லாம் ஓகேவா? இப்ப எப்படி இருக்கு?"
"எப்படி இருக்கா? ஏன் கேட்கமாட்டே?" சுரேஷ் அவளது மனநிலை தெரியாமல் எஃப்.எம் ரேடியோவை வைத்து கேட்டுக்கொண்டே காரை ஓட்டினான்.
கண்ணாடியில் அவளைப் பார்த்து, "ஜுரம் அடிக்கிற உடம்பு. யாராச்சும் இப்படி நனைவாங்களா?"
"நீ பண்ண வேலை அப்படி!"
"பெட்ரோல் போடப் போனேன். வரதுக்குள்ள என்ன அவசரம்?"
'என் துணியை எடுத்துப் போய் வச்சுட்டு கேட்கிறான் பாரு கேள்வி,'
"சரி, நல்லா நனைஞ்சிட்டீங்க போல. கர்சீப் தரேன், துடைச்சிக்கிறீங்களா?"
"ஒன்னும் வேணாம், வண்டியை ஓட்டு. மணி ஆவுது, பசிக்குது".
அவன் பார்வை போகும் இடம் பார்த்து, இன்னும் நன்றாகக் கூந்தலை விரித்துப் போர்த்தினாள். 'ச்சே, மறைத்துக் கொள்ள ஒரு டவல் கூட இல்லை. இனிமேல் ஆஸ்பத்திரி வரும்போது என்னென்ன பொருட்களை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும் என்பதை ஒரு லிஸ்ட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக ஒரு உதவிக்கு லேடியைக் கூட்டி வர வேண்டும். சுரேஷ் என்னதான் தன்னை விட இளையவன் என்றாலும் அவன் ஒரு ஆண்மகன். அவன் முன்னால் இப்படி குண்டுகட்டாய் எல்லாவற்றையும் ஈர நைட்டியில் கட்டிக்கொண்டிருக்கிறோமே' என்றெல்லாம் அவள் நினைத்துக் கொண்டிருந்தாள்.
பேச்சுதான் அக்கா, பார்வையெல்லாம் அப்படியா இருக்கிறது? எந்த பூனை இங்கே சைவம்?
கொஞ்ச நேரத்தில் மெயின் டவுன் ரோட்டை விட்டு அவர்களது ஊருக்குச் செல்லும் வழியில் பிரிந்து செல்லும் சாலையின் முனையில் சுரேஷ் காரை நிறுத்தினான். எஞ்சினை ஆஃப் செய்தான்.
"ஏய், ஏன்பா இங்க காரை நிறுத்துற?"
"ஏன்கா, இந்த கடையில் இடியாப்பம், சுறாப்புட்டு நல்லா இருக்கும் மேடம்".
சுறாப்புட்டு என்றதும் அவள் நிமிர்ந்தாள். ஏனோ நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னால் சுறாப்புட்டைக் கேட்ட அனிருத் அவள் நினைவிற்கு வந்தான். 'இப்போ எங்க இருக்கிறானோ, எவளைக் கட்டிக்கொண்டானோ?'
"என்ன, வாங்கி வரட்டுமா?"
"ம்ஹூம், வேணாம்".
"அட ஏங்க நீ வேற? அம்மா தான் வீட்டுல இல்லையே. எப்ப பாத்தாலும் பருப்பு சாம்பார், வத்தக்குழம்பு, கீரைக் கூட்டு, போங்க, நாக்கே சுரணை கெட்டுப்போச்சு".
"அதுக்குன்னு வீட்டுல நான்வெஜ்ஜா சாப்பிடுவாங்க?"
"இப்ப நான்வெஜ் சாப்பிட்டா யார் கேட்கப் போறாங்க?" என்றான்.
"அய்யோ, அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை. காரை எடு, முதல்ல வீட்டுக்குப் போ. எனக்கு மயக்கமா இருக்கு".
"அதுக்குத்தான் சொல்றேன், நீங்க சாப்பிடவே இல்லல்லே? சாப்பிட்டுப் போலாம்" என்றான். அவன் சொன்னது உண்மைதான். அவள் மத்தியானம் கூட சரியாகச் சாப்பிடவில்லை. சாப்பிட்டால் நல்லாத்தான் இருக்கும். ஆனால், இந்த அலங்கோலத்தில் எப்படிச் சாப்பிடுவது?..
"என்னால் ஓட்டலுக்கு எல்லாம் வர முடியாது. இப்படியே வர முடியாது" என்றாள்.
"பரவால்ல, நான் பார்சல் வாங்கிட்டு வரேன். கார்ல வச்சு சாப்பிடுங்க".
"ஏய் சொன்னா கேளு!" அவன் கேட்கவில்லை. காரை விட்டு இறங்கி ஓடினான். 'அட, என்ன இவன் பேச்சையே கேட்க மாட்டேங்கிறானே?' அவள் அலுத்துக் கொண்டாள்.
மழை பெய்து கொண்டிருக்க, மண்சாலை சேறாகி இருக்க, செருப்புக்காலுடன் ஓடும் அவனைப் பார்த்து, "ஏய்ய், வழுக்கப் போகுது" என கத்தினாள்.
குடுகூடவென அந்த ஹோட்டலுக்குள் போக, "இப்ப இந்த மழைக்குச் சூடா இடியாப்பம் நல்லா இருக்கும் தான்" எனத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.
அவள் மேனி முழுக்க ஈரம் அப்பி இருந்தது. தலையை உதறினாள். போன ஜுரம் வந்துவிடும் போல. எட்டி வெளியே பார்க்க, அவன் சடசடவென ஓடிப்போய்க் கொண்டிருந்தான். 'ஏற்கனவே நல்லா நனைந்திருக்கிறோம். இந்த ஈர நைட்டியை மாற்றலாமா? அடடா, இவன் ஹோட்டலுக்குப் போயிருக்கிறான், எங்கே எனது டிரஸ்?' அவள் சீட்டின் அடியில் தேடினாள். டிக்கியில் போட்டுவிட்டானா? கிடைக்கவில்லை. அறிவுகெட்டவன்!
முன்னால் எட்டிப் பார்க்க, முன்சீட்டில் சுருட்டி வைக்கப்பட்டிருக்க, 'அவன் வருவதற்குள் காரில் வைத்தே டிரஸ் பண்ணிக் கொள்ளலாமே! அட்லீஸ்ட் பிரா, ஜட்டி போட்டால் கூட போதும்'.
அவள் அவன் வருகிறானா எனப் பார்த்தபடியே, முன்பக்கம் எட்டி தனது பையை எடுக்க, தூரத்தில் அவன் டிபன் பொட்டலத்துடன் ஓடி வருவதைப் பார்த்தாள். மறுபடியும் தலையில் அடித்துக் கொண்டு ஈரத்துடனே சீட்டில் உட்கார்ந்து கொண்டாள்.
சுரேஷ், சூடாக இடியாப்பம், பிரியாணி இடியாப்பம், சுறாப்புட்டு வாங்கி காருக்கு அருகே வந்தான். கதவைத் திறந்து, "இந்தாங்க," என நீட்டினான். சுறாப்புட்டின் மணம் மூக்கைத் துளைத்தது.
"வீட்டுல போய் சாப்பிடலாமே?" மார்புக்குக் குறுக்கே கை வைத்துக்கொண்டாள்.
"இப்பவே மணி எட்டாச்சு, கார்ல உக்காந்து சாப்பிடலாம்" உத்தரவு போல சொல்லிவிட்டு அவன் பொட்டலத்தை அவிழ்க்க, அவள் மறுப்பேதும் சொல்லாமல் சாப்பிட ஆரம்பித்தாள்.
அவள் அவசரமாகச் சாப்பிட, அவனோ நிதானமாகச் சாப்பிட்டு கை கழுவி வண்டியை எடுத்தான். கார் மழையில் மெதுவாகக் கிளம்பியது.
"வழிநெடுகக் காட்டுமல்லி," பாடல் ரேடியோவில் ஒலிக்க, அவன் தாளம் போட்டுக்கொண்டே காரை மெதுவாக ஓட்டினான். கார் மெல்ல கடைகள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளை விட்டு உள்சாலையில் பிரிந்து சென்றது.
கார் அந்த 15 கி.மீ தொலைவுடைய குண்டும் குழியுமான பஞ்சாயத்து சாலையில் தள்ளாடித் தள்ளாடிப் போக, ஒரு பள்ளத்தில் முட்டிப் போகாமல் ஒரு பெரிய மரத்திற்கருகே அப்படியே நின்றது. சுற்றிலும் இருட்டு.
"அய்யோ, என்னாச்சு?" திகிலடைந்த குரலில் கேட்டாள் கிரிஜா.
Like Reply
#16
எபிசோடு: 15

அவர்கள் செல்ல வேண்டிய தேன்திட்டு கிராமம் ஒரு சிற்றூர். அது இன்னும் பதினைந்து கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்தது. தேன்திட்டைத் தாண்டித்தான் பல கிராமங்கள் இருந்தன. அவற்றையெல்லாம் தாண்டி இடதுபுறம் பிரிந்து சென்றால் கேரளா செல்வதற்கு வழி வரும்; வலதுபுறம் ஓடையைத் தாண்டிப் போனால் மதுரை நெடுஞ்சாலை வரும்.
எப்படி இருந்தாலும் தேன்திட்டைத் തൊடும் வரையில் வேறு எந்த ஊரும் இல்லை. வழக்கமாக ஏழு மணிக்கு மேலேயே இங்கே நடமாட்டம் இருக்காது. அதிகமான மக்களும் வாகனங்களும் இல்லாததனால் பஞ்சாயத்து விளக்குகள் எப்போதுமே எரியாது. அதனால் தான் பெரும்பாலும் டவுன் வேலையெல்லாம் ஐந்து அல்லது ஆறு மணிக்கே முடித்துக்கொண்டு திரும்பி விடுவார்கள்.
இந்த சுரேஷினால்தான் இத்தனை தாமதம் ஆகிவிட்டது. கார் ஏதும் பிரச்சினை ஆகிவிட்டால் மாற்று வாகனம் வரும் வரை காத்திருக்க வேண்டியதுதான்.
"என்ன ஆச்சு சுரேஷ், பெட்ரோல் இல்லையா?" என்றாள்.
"பெட்ரோல் எல்லாம் இருக்குங்க. உங்களை ஆஸ்பத்திரியில விட்டு பெட்ரோல் தான் போட்டுக்கிட்டு வந்தேன். கார் பள்ளத்துல இறங்கி இருக்கு. யாராச்சும் ரெண்டு மூணு பேரு தூக்கி விட்டாதான் கார் போகும் போல இருக்கு".
"பள்ளம் பாத்து போகக் கூடாது?"
"இருட்டுல, சேத்துல நான் என்னத்த பள்ளம் கண்டேன்?"
"இப்ப என்ன பண்றது? வீட்டுக்கு போன் பண்ணி யாரையாச்சும் வர சொல்லலாமா?"
"இப்ப வீட்டுல யாரு இருக்கா? சமையல்காரம்மா, செக்யூரிட்டி கிழவனும் தான். கார்டன்காரர் முருகேசன் கூட மழையில லீவ்ல இருக்கார்".
அவன் முணுமுணுத்துக் கொண்டே காரை விட்டு இறங்கி முன்னும் பின்னும் போய் பரிசோதித்தான். மீண்டும் காரைத் தூக்க முயற்சித்தான். அவன் காரைத் தூக்கும் போது யாராவது கார் ஓட்டினால் நன்றாக இருக்கும். ஆனால், காரை எடுக்கவும் ஆளில்லை, காரைத் தள்ளவும் ஆளில்லை.
"நான் வேணா இறங்கி தள்ளட்டுமா?"
"நீங்க எப்படி தள்ளுவீங்க?"
"அட்லீஸ்ட் கீழயாச்சும் இறங்கிக்கிறேன், நீ தள்ளு பாப்போம்".
அவள் அந்த மழைத்தூறலில் வெளியே வந்து நின்றாள். உடம்பு இன்னும் தெப்பலாக மழையில் நனைந்தது. அவன் ஒருவனாக காரின் ஒரு டயரைப் பள்ளத்திலிருந்து தூக்க முயற்சித்தான். ஆனால் முடியவில்லை. "சே!" என்றபடி அவளைப் பார்த்தான்.
"மழை வலுக்கவே நீங்க ஏன்கா வெளிய நிக்கறீங்க? உள்ள போய் உட்காருங்க" என்றான்.
அவள் பின்சீட்டில் வந்து உட்கார, இவனும் டிரைவர் சீட்டில் அலுப்பாய் உட்கார்ந்து கொண்டு தாடியைச் சொறிந்தான். 'ஒரு சிகரெட் பிடித்தால் நன்றாக இருக்கும், ஆனால் இவள் என்ன சொல்வாளோ?' என யோசித்தபடி தலையை உதறிக் கொண்டான்.
திரும்பி அவளைப் பார்த்து, "நீங்க ரொம்ப நனைஞ்சிட்டீங்க, துடைச்சுக்கோங்க" என்றபடி தன் கர்சீப்பை அவளுக்கு நீட்டினான்.
"இ, இல்ல இல்ல வேணாம், என் டிரஸ் பேக் எங்க இருக்கு? முதல்ல அதை கொடு" அவள் மறுக்க,
"அட இவ்ளோ தொப்பலா நனைஞ்சிட்டீங்க, துடைக்க வேணாமா? உங்க டிரஸ் எங்கயும் போகாது. உங்ககிட்டயே தரேன், முதல்ல கர்சீப்ல தலையைத் தொடையுங்க, ம்ம்ம்ம் இந்தாங்க" என்றான்.
அவள் அவனது கர்சீப்பை வாங்கித் தலையைத் துவட்டினாள். அதன் பின் அவன் கீழே குனிந்து அவள் துணி இருக்கும் பையை அவளிடம் நீட்டினான்.
"இந்தாங்க உங்க பொக்கிஷம்"
"சுரேஷ், நீ சரியான நேரத்தில் காரை எடுத்திருந்தா, இந்நேரம் நம்ம வீட்டுக்குப் போய் சேர்ந்திருக்கலாம். சுறாப்புட்டு, சுறாப்புட்டுன்னு டயம் ஆக்கிட்டே,"
"ஹலோ மேடம், அப்பவும் இந்த பள்ளத்துல தான் விட்டிருப்போம், சரியா?"
"உன்னை ஆஸ்பத்திரியில கீழேதான் நிக்க சொன்னேன்? அதுக்குள்ள எங்க போயிட்ட?" என்றாள்.
"நான் தான் பெட்ரோல் போடப் போனேன்னு சொன்னேன்ல? சரி விடுங்க"
"இப்ப பாரு, மழையில் கார் பள்ளத்துல மாட்டிக்கிச்சு"
"இருங்க, நான் மறுபடியும் ட்ரை பண்றேன்" எனச் சொல்லி, அவன் இம்முறை முன் கதவைத் திறந்து, ஸ்டீயரிங்கைப் பிடித்தபடி மறுபடியும் தள்ள முயற்சித்தான். அது நகரவே இல்லை. மறுபடியும் கார் பின்னால் போய் டயரைத் தூக்க முயற்சித்து முடியாமல் நின்றான்.
"சரி சுரேஷ், நீ உள்ள வந்து உட்காரு. யாராச்சும் வந்தா கூப்பிடலாம்" அவள் காரில் இருந்தபடியே கத்த, ஆளுங்க இல்லாததால் இவன் பின் கதவைத் திறந்து கொண்டு வந்து அவள் அருகே சீட்டில் உட்கார்ந்தான்.
'என்ன இவன்? இங்க வந்து உக்காந்துட்டான்?' அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அவன் பின்சீட்டில் உட்காருவது இதுதான் முதல் தடவை.
அவன் உள்ளே வந்தவுடனேயே, அவள் கையில் வைத்திருந்த கர்சீப்பைக் கேட்டு வாங்கித் துடைத்தான். அவள் மேனியைத் துடைத்த அந்த கர்சீப் இப்போது அவன் உடலைத் துடைக்க, அவனது பெரிய உடம்புக்கு அந்த கர்சீப் போதவில்லை. உடனே அவன் அவள் வைத்திருந்த பையில் கையை விட்டு அவளது புடவையை எடுத்தான்.
"ஏய்ய், என் புடவையை என்ன பண்ற?" என அவள் கேட்பதற்குள், அவன் அந்த காட்டன் புடவையால் தன் முகத்தையும் கழுத்தையும் துடைத்தான்.
"ஆபத்துக்கு பாவமில்லை!"
"ஏய்ய், என் சேலையைக் கொடு!" தனது உடையில் ஒரு ஆண்மகன் தனது கண் எதிரே துடைப்பதைப் பார்த்து அவளுக்குத் திகைப்பாக இருந்தது.
"சுரேஷ், என்ன இது? என் புடவையைக் கொடு" என அவள் வாங்க முயற்சிக்க, அவன் புடவையை விட்டுவிட்டு, அந்த பையில் கைவிட்டு இன்னொரு துணியை எடுத்தான். அது பாவாடை. நீல கலர் பாவாடை, அது நன்றாகக் காய்ந்து உலர்வாக இருந்தது. பாவாடை எடுத்தவன் அப்படியே தனது முகத்தின் மீது விரித்துப் போட்டுத் துடைத்தான்.
"ஏய்ய், என்ன இது? என் பாவாடையில துடைக்கிற? கொடு!" அவள் நடுங்கியபடி கேட்க,
"அதான் சொன்னேனே, ஆபத்துக்கு பாவமில்லைன்னு?"
"ஒழுங்கா என் டிரஸ்ஸைக் குடு"
"அடடா! என்ன நீங்க? உங்களுக்கோசரம் இவ்ளோ தூரம் வந்திருக்கேன். புடவையும் கொடுக்க மாட்டீங்க, பாவாடையும் கொடுக்க மாட்டீங்க?" என்றபடியே அவன் தனது சட்டையின் பொத்தான்களை இரண்டு மூன்று அவிழ்த்து மார்பில், அவளது பாவாடையை விட்டுத் துடைத்தான்.
அவள் பாவாடையைத் தன் பக்கம் இழுக்கப் பார்க்க, அவன் விடவில்லை. கிரிஜாவின் பாவாடை அவனது மார்பிலும் அக்குளிலும் போய் வந்தது.
அவன் செய்கை அவளுக்குக் கொஞ்சம் புதிராகவும், நிறைய பயமாகவும் இருந்தது. 'இப்படி நமது அழுக்கு உடைகளில் இவன் முகம் துடைப்பான், உடல் துடைப்பான் என அவள் எப்போதும் நினைத்ததே கிடையாது. எனது பாவாடையைத் தொட்டால் என்னா? என்னை தொட்டால் என்னா?'
அவனது உடலில் இருந்த ஈரத்தில் பாதி அவளது பாவாடையில் ஏறியது. அவன் பாவாடையை எடுத்து கழுத்துக்குப் பின்னால் துடைக்க ஆரம்பித்தான். அவன் தனது பக்கத்திலேயே உட்கார்ந்து இந்தச் செயலைச் செய்ய, அவள் அந்தப் பையில் இருந்த மீதி உடைகளை அவன் கண்ணில் படாமல் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகப் பையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.
அவன் சிரித்தான். "பயப்படாதீங்க, உங்க ஜட்டி, பிராவெல்லாம் வச்சுத் துடைக்க மாட்டேன்"
அவளுக்கு உச்சியில் ஆணி அடித்தாற்போல 'சுர்ர்ர்' என இருந்தது. பதில் சொல்லாமல் அவனைப் பார்க்க,
"பெரிய துணி இருந்தாத்தானே துடைக்க முடியும்? அதுக்குச் சொன்னேன்"
'இவன் கண்டிப்பாக இப்போது சரியில்லை. சரி, எதுக்கு எல்லா டிரஸ்ஸையும் ஆஸ்பத்திரியில் கழட்டச் சொல்லிட்டாங்க?' மொட்டையாகக் கேட்டான். அவள் எதுவும் சொல்லவில்லை.
அவள் பயந்தபடி, அந்த பெரிய காரின் ஒரு பக்கம் ஒதுங்கினாள்.
"ஏன்னா, முதலிலேயே சொல்லி இருந்தா வீட்டிலிருந்து உங்க நைட்டியைக் கொண்டு வந்திருக்கலாம். இப்படி டைட்டா ஒரு நைட்டியை போட்டுட்டு வந்து இருக்க வேணாமே, பாருங்க,"
"ஸ்கூல் பாப்பா கவுன் போல ஒரு டைட் நைட்டி!"
"இன்னிக்கு ஆஸ்பத்திரியில எல்லாம் நல்லா சீன் பார்த்திருப்பானுங்க"
அவள் மேனியின் ஈரம் சடாரென காய்ந்து சூடாகி உலர, அவள் தொண்டைக்குள் பயப்பந்து உருள,
"என்ன டிரஸ் விக்கிறானுங்க பாரு? சுளையா முன்னூறு ரூபா வாங்குனான், இவ்ளோ மெல்லிசா இருக்கு? ஒரு சின்ன மழைக்கே தாங்காம பொதன்னு ஈரமாயிடுச்சு" எனச் சொல்லியபடியே அந்த அவள் நைட்டியைப் பார்த்தான்.
அவள் கையில் இருந்த புடவையால் நைட்டியின் முன்னால் போர்த்தி மார்புகளை மறைத்துக் கொண்டு தலைகுனிந்தபடி இருந்தாள். அவளுக்கு உள்ளுக்குள் மூச்சு பயங்கரமாக வாங்கியது. பயத்தை வெளிக்காட்டக் கூடாது என உறுதியாக இருந்தாள். இதயமே வெடித்துவிடும் போல இருந்தது.
"உங்களைத் தான் கேட்கிறேன், எதுக்கு டிரஸ் எல்லாம் ஹாஸ்பிடல்ல கழட்ட சொன்னாங்க?"
"ஐயோ, கொஞ்சம் பேசாம இருக்கியா? நல்லவன்னு நெனச்சு உன்னைத் துணைக்கு கூப்பிட்டேன்,"
"நல்லவன் இல்லாம, நாங்கல்லாம் யாரு?"
"வெளிய மழை நின்னுச்சா பாரு, நாம கிளம்பலாம்" அவள் பேச்சை மாற்றப் பார்க்க,
"நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க"
"என்ன வெங்காயத்தைச் சொல்லணும் உனக்கு?"
"எதுக்கு டிரஸ்லாம் அவுத்துக் கொடுத்தீங்க?"
"ஐயோ, அது ஏதோ ஃபுல் செக்கப் பண்ணணும் சொன்னாங்க. அந்தப் பேச்சை விடு," அவள் சிடுசிடுக்க,
"சரி, புடவை அவுத்துக் கொடுத்தீங்க ஓகே, பாவாடை அவுத்துக் கொடுத்தீங்க ஓகே, பிரா, ஜட்டி இல்லாமயா அவுத்துக் கொடுப்பாங்க?" அவள் அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள்.
"தேவையில்லாம பேசாத சுரேஷ், மேடத்துகிட்ட சொல்லிடுவேன்"
"சொல்லுங்க, முன்ன பின்ன தெரியாத இடத்துல எல்லாத்தையும் கழட்டி நின்னா கேட்க மாட்டாங்களா?"
"அது ஆஸ்பத்திரி, கேட்டது பொம்பளை டாக்டர்"
"எனக்கு பயமா இருக்காதா? அய்யோ, சாவடிக்கிறானே?"
"அதை விடு, என் டிரஸ் எல்லாம் உன்னை யார் எடுத்துட்டு போகச் சொன்னது?"
"டிரஸ்ஸை நான் பத்திரமா எடுத்து வச்சதாலதான் இப்போ உங்க மானத்தைக் காப்பாத்த முடிஞ்சது. இல்லன்னா இதே செக்ஸி நைட்டிலதான் நீங்க வந்து இருக்கணும், எல்லாத்தையும் காட்டிக்கிட்டு!" என்றான்.
அவன் பேச்சு ஓவராக இருப்பதை அவள் உணர்ந்து கொண்டாள். 'இவனிடம் வேறு எந்த பேச்சும் கொடுக்காமல் நாம் வீடு போய் சேர வேண்டும்' என நினைத்துக் கொண்டாள்.
"நான் கூட உள்ள என்னமோ ஏதோன்னு தான் நினைச்சேன். பைக்குள்ள புடவை, பாவாடை இருந்துச்சு. ஆனா சத்தியமா ஜட்டி, பிராவெல்லாம் உள்ள இருக்கும்னு நினைச்சுப் பார்க்கலை"
",,,,"
"அதனால் தான் நீங்க நைட்டி வாங்கிட்டு வரச் சொன்னப்போ ஜட்டி, பிரா வேணுமானு கேட்டேன்"
"நீங்கதான் எதுவும் வேணாம்னு சொல்லிட்டீங்க. அப்ப கூட நான் ரொம்ப யோசிச்சேன், எப்படி வெறும் நைட்டில இவங்க ஆஸ்பத்திரில இருப்பாங்க அப்படின்னு"
",,,."
"நான் கார்ல வந்தப்போ உங்களைத் தூரத்தில் பார்த்தேன். மழையில் நனைஞ்சு லைட் வெளிச்சத்துல நீங்க எதுவுமே போடாம நின்னுட்டு இருக்கறதை மொத்த பேரும் பார்த்தானுங்க"
",,,,"
"நான் ரொம்ப துடிச்சு போயிட்டேன் தெரியுமா? என்ன இருந்தாலும் எங்க கிரிஜா இப்படி மழையில் நனைஞ்சு, உள்ளே எதுவும் போடாம மெல்லிசு நைட்டில எல்லாத்தையும் காட்டிக்கிட்டு நிக்கிறது எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா?"
அவன் பேசப் பேச அவள் திகைப்பின் உச்சிக்குப் போனாள்.
'இவன் கண்டிப்பாக மோசமான ஆள்தான். இவ்வளவு நாள் நம்மிடம் நல்லவன் போல பவ்யமாக, பணிவாக நடித்தான். ஆனால் அவனது பேச்சு மறுபடியும் மறுபடியும் நமது உள்ளாடை பற்றியே இருக்கிறது. இவனை எப்படி வண்டி எடுக்க வைப்பது? அய்யோ, இந்த நேரம் பார்த்து கார் வேறு பள்ளத்தில் மாட்டிக்கொண்டதே?' அவள் யோசிக்க யோசிக்க,
"ஒயிட் பிரான்னா ஒயிட் ஜட்டி தானே இருக்கணும்? ஆனா உங்களது ஜட்டி ஒரு கலர்ல, பிரா ஒரு கலர்ல இருக்கே, ஏன்?"
கிரிஜா இன்னும் சீட்டில் ஒடுங்கிக் கொண்டாள்.
"ஐயோ என்ன நீங்க, இவ்ளோ நனைஞ்சிருக்கீங்க, இவ்ளோ பயப்படறீங்க..? சரி துடைக்கவும் மாட்டேங்கறீங்க, வேற டிரெஸ்ஸும் போட மாட்டீங்களா?"
",,..சுரேஷ், நீ இப்படியெல்லாம் பேசாத,,."
"சரி, நான் வேணா வெளியே இருக்கேன், நீங்க டிரஸ்ஸை மாத்துறீங்களா?"
"எ, எதுவும் வேண்டாம்" என்பதாக அந்தப் புடவையை அவள் மேலே சுற்றிக்கொள்ள,
"ப்ச்ச்ச், இப்படி ஈர நைட்டியை கழட்டாம அப்படியே மேலே சேலையைப் போட்டா என்ன அர்த்தம்? ஏற்கனவே ஜுரம் அடித்த உடம்பு, எதனாச்சும் வந்தா என்ன ஆவறது?" என்றபடியே அவன் அவளது புடவையைப் பற்றி இழுத்தான்.
"வேணாம், விடு" என அவள் சொல்ல, அவன் கேட்காமல் அந்தப் புடவையை உருவினான். எவ்வளவோ போராடியும் அவள் போட்டிருந்த முழுப் புடவையும் எடுத்துப் போட்டான்.
சேலை மூடாமல், கிரிஜா வெறும் ஈர நைட்டியில் இருந்தாள். இப்போது முன்பை விட மோசமான கவர்ச்சியில் இருந்தாள். அவளது இரு காய்களும், காய்களின் நுனியில் இருந்த பெரிய காம்புகளும் அந்த மெல்லிய உடையில் குத்திக்கொண்டு இருக்க, அவளது தொடையின் அளவுகள், இடுப்பின் வளைவுகள் எல்லாம் அவனது கண்ணுக்குத் தெரிந்தது.
"எவ்ளோ ஈரம் பாரு..?" நேராக அவன் முலையைத் தொட்டான்.




Like Reply
#17
எபிசோடு: 16

அவளும் சரி, அவனும் சரி காமத்திற்கு நிச்சயமாக புதியவர்கள் அல்லர். ஆனால், இந்த சூழ்நிலை முற்றிலும் புதிது. அவள் நிச்சயமாக அவனிடம் இந்தத் துணிச்சலை எதிர்பார்க்கவில்லை. தன் மார்பை நோக்கி நீண்ட கையை அவள் தட்டிவிட, அவன் மீண்டும் அவள் முலையைப் பிடித்தான்.
"பயங்கர ஈரமா இருக்கு கிரிஜா" அவன் அவள் நைட்டியின் மீதே முலையை இறுகப் பிடிக்க, அவன் கையில் சிக்கிய முலைப்பழங்களின் காம்பு விரல்களிருந்து பிதுங்கி நீள, "ஏய் சுரேஷ், என்ன பண்றே?" அவளால் அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை.
அவள் அவனது கையைத் தள்ள போராட, அவன் சிரித்துக்கொண்டே இன்னொரு குண்டு மாம்பழத்தையும் நைட்டி மேலாக அவ்வாறே நிமிர்த்துப் பிடித்தான். அமுக்கிப் பிசைய, ரெண்டுக் காம்பும் துணியை முட்டிக்கொண்டு பிதுங்க, ஈர நைட்டியில் அதன் துருத்திய வடிவத்தைப் பார்த்து விசிலடித்தான்.
"ஆங், நல்லா இருக்கு கிரிஜா,"
",,..ங்க், விடு,"
"பிரா இல்லாட்டி கூட ஸ்டிப்பா தான் இருக்கு"
அவன் குனிந்தவாக்கில் ஒரு காம்பை வாயால் கவ்வி கடிக்க, தன் முகத்தில் வந்து விழுந்த அவன் முடியைத் தள்ளிவிட்டாள்.
"வேணாம் ஏய், இதெல்லாம் பண்ணாத, சுரேஷ்" அவள் குரல் அழுகுரலாய் ஒலிக்க, அந்த இரக்கமற்றவனோ நைட்டிக்கு மேலாகவே அந்தக் காம்புகளைக் கவ்வி, எச்சில் உமிழ்ந்து சப்ப, தன் பால்காம்புகள் அவனால் கவ்வி கடிக்கப்பட அவள் பின்சீட்டில் சாய்ந்து, "அய்யோ, சுரேஷ், விட்டுடு" என கெஞ்சிக்கொண்டிருந்தாள்.
தன்னை விட வயதில் இளையவனான சுரேஷ் இப்படி தன் மீது பாய்வான் என அவள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. 'இவனுக்கு ஏன் இப்படி ஒரு புத்தி? சே, புத்தி நிறைய காமத்தை வைத்துக்கொண்டுதான் இவன் நம்மிடம் அக்கா, அக்காவென பழகினானா? சரியான பசுத்தோல் போர்த்திய புலி'.
ஆனால் அவனோ கன்னுக்குட்டியாகி அவள் கழுத்தை நக்க ஆரம்பித்து, அவளுக்குக் காமச் சிலிர்ப்பினைக் கூட்டிக் கொண்டிருந்தான்.
அவளது முன்பக்க நைட்டி ஜிப்பினை அவிழ்க்க அவன் முயல, அவள் விடாது திமிர, அவன் ஜிப்பைப் பிடித்து இழுத்து அறுத்தே விட்டான்.
"ஏஏஏய் சுரேஷ்," அவள் முலையை மூட முயல, அவன் ஜிப்பை அறுத்து அப்படியே நைட்டியை உள்ளே கைவிட்டு, ஒரு மென் புத்தகம் போல இரண்டாய் பிரிக்க, வெண் முலைப்பழங்கள் விரைத்த காம்போடு குதித்து வெளியே வந்து அவன் கண்ணைக் குத்த, அப்படியே அள்ளி எடுத்து வாயில் திணித்துக் கொண்டான்.
காம்புகள் வேகமாக சப்பப்பட்டு அவனால் உறிஞ்சப்பட, அவள் சாய்ந்து அவனது பால்குடித்தலை தடுக்க முடியாமல் தலையில் அடித்துக் கொண்டாள்.
வெளியே மழை, சுற்றிலும் இருட்டு, மேலே விழுந்து பிடுங்கி கற்பைச் சூறையாடும் ஒரு கட்டிளம் இளைஞன். அவனது மீசையும் தாடியும் அவள் முலைப்பந்துகளில் பட்டு உராய்ந்து அவளை இளக வைக்க முயல, இவனை என்ன சொல்லி தடுக்க..? இவனுடன் படுத்து சோரம் போனது வெளியே தெரிந்தால்..?
அவள், "சுரேஷ், சுரேஷ், என்னை விட்டுடா, என்னால இந்தத் தப்பை செய்ய முடியாது, நீ அக்கா அக்கான்னு கூப்பிட்டதை நம்பிதானே உன் கூட இருட்டுல வந்தேன்?" என கண்ணீர் வழிய அழ.
அவன் அவள் மார்பை விட்டு எழுந்தான். இதுவரை அவன் கடித்துக் கொண்டிருந்த காம்புகள் ரெண்டும் எச்சிலில் நனைந்து திளைத்தபடி ஆட, அவன் விலகியதும் அவள் மார்பை மூடிக் கொண்டாள்.
"ப்ளீஸ் சுரேஷ், என்னை எதுவும் செஞ்சிடாத, என் புருஷனுக்கு என்னால துரோகம் பண்ண முடியாது,"
"வாஸ்தவம்தான், ஆனா பால் குடிச்சுட்டேனே?"
அதற்கு அவள் என்ன பதில் சொல்வதென தெரியவில்லை. ஜிப் கிழிந்த நைட்டியை இரு கைகளால் பிணைத்துக் கொண்டு மார்பை மறைக்க, அவன் அருகே வந்து அவள் கூந்தலைப் பின்னோக்கித் தள்ளினான், தொடையைத் தடவினான்.
'குட்டி அழகா இருக்கா, சூடேறிப்போய் இருக்கா'. அவனுக்கு சினிமாவில் நடிகை பூனைக்கண் மகேஸ்வரி என்றால் ரொம்ப பிடிக்கும். ஒரு காட்சியில் முந்தானை சரிந்து வெறும் ரவிக்கையில் முலை திமிற நிற்கும் அந்த காட்சிக்காகவே அவன் அப்படத்தைப் பலமுறை பார்த்திருக்கிறான்.
அதே போல ஒரு பெண், முப்பத்தஞ்சு வயசு கட்டை. தனிமரமா புருஷன் இல்லாம இந்த வீட்டுல சுத்திக்கிட்டு இருக்கேன்ன்னு கள்ளத்தனமாய் அவள் அழகினை அள்ளிப் பருகுவான்.
ஆனால், கிரிஜா ரொம்ப ஸ்ட்ரிக்ட். பங்களாவில் வேலை செய்யும் எல்லா ஆண்களிடமும் கடுமையாக நடந்து கொள்வாள். புருஷன் இல்லாமல் தனியாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு கோபம்தான் மிகப்பெரிய கவசம். அந்த கவசத்தைத்தான் அவள் போலியாக அணிந்திருக்கிறாள் என்பதை சுரேஷ் வந்த முதல் மாதத்திலேயே நன்றாகப் புரிந்து கொண்டான். அந்த வீட்டின் நிர்வாகத்தையே அவள்தான் கட்டுக்குள் வைத்திருக்கிறாள்.
'எப்படியாவது இவளை மட்டும் கையில் போட்டுக் கொண்டால், தனது வேலை அங்கே உத்தரவாதமாக இருக்கும்' என திட்டமிட்டான். நிறைய இடங்களில் அவன் கார் டிரைவராக சில ஆண்டுகளே பணிபுரிந்திருக்கிறான். ஆனால் இந்த வீட்டில் நீண்ட காலம் நாம் இருக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக கிரிஜாவின் தயவு தேவை. என்னதான் அவளுக்குத் தம்பியாக பாசத்தைக் கொட்டி கவுத்தாலும் இந்த பெண்கள் தூக்கி எறிந்து விடுவார்கள். அடிமையாகத்தான் பார்ப்பார்கள். இவள் மீது எப்படியாவது கைய வைக்க வேண்டும்.
ஆனால் ஒத்துக் கொள்வாளா? நம்மை ஏற்றுக்கொள்வாளா? அவன் கிரிஜாவிற்காக வெகு நாட்களாக அலைந்து கொண்டிருந்தான்.
இருந்து இருந்து இப்படி ஒரு சந்தர்ப்பம் வந்திருக்கிறது. உள்ளுக்குள் நிறைய மனப்போராட்டங்கள் நடத்திய பிறகுதான் அவன் அவள் மீது கை வைக்கத் துணிந்தான். எடுத்த எடுப்பிலேயே அவளது ஈர நைட்டியைக் கிழித்து பால் முலைகளை வெளியே எடுத்து, மிக நிதானமாக இரண்டு காம்புகளையும் ஆவேசமாகக் கடித்து பால் குடித்து தன்னுடைய ஆசையைச் சொல்லி ஆகிவிட்டது. இன்னமும் நைட்டிக்குள் அவனது எச்சில் அந்த காம்புகளில் வழிந்து கொண்டிருக்கிறது.
'விட்டுடு வேணாம் சுரேஷ்' என அவள் அழுவதைப் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது. இப்போது ஈர நைட்டியில் பழைய மிடுக்கு, அதிகாரம் ஏதும் காணவில்லை. ஆனால் இத்தோடு போதும் என விலகிவிட்டால் இவள் வைஷ்ணவி மேடத்திடம் கண்டிப்பாக சொல்லிவிடுவாள். இல்லையென்றாலும் நம்மை வேலையில் பழிவாங்கி விடுவாள். விடக்கூடாது!
இப்படி ஒரு தனிமை, இப்படி ஒரு இருள் மறுபடியும் அமையாது. அதுவும் வைஷ்ணவி மேடம் இல்லாத ஒரு அரிதான சூழ்நிலை. கிரிஜாவை பாவம் பார்த்து விட்டு வைத்தால், என்னை விட ஒரு மூடன் இல்லை. கிரிஜா மிகவும் பயந்து போயிருக்கிறாள். எங்க கற்பைப் பறிகொடுத்து விடுவோமோ? என்னிடம் படுத்து சோரம் போய்விடுமோ? என்ற பயம் அவள் முகத்தில் வண்டி வண்டியாக அப்பி கிடக்கிறது.
சதா கோபமும் சிடுசிடுப்பும் இருக்கும் கிரிஜாவின் முகத்தில் முதன்முதலாக பயம் எட்டி பார்த்திருக்கிறது. காம சாயலும் தென்படுகிறது. பால் குடிக்க, காம்பைச் சப்பி போட்ட இனம் புரியா சுகத்தில் உள்மத்த நிலையில் இருக்கிறாள். இதை வைத்து இவளை செமத்தியாக லாக் செய்து சக்கையாக அனுபவித்து விட வேண்டும். அவன் தனது காரியத்தில் கண்டிப்பாக பின்வாங்குவதில்லை என உறுதியாக இருந்தான்.
கிரிஜாவின் நைட்டி மேலேயே காய்களை பிசைந்தான். ஸ்லீவ்லெஸ் நைட்டி என்பதால், அக்குள் திறப்பில் கை விட்டான், முடிகளைச் சுரண்டினான். அவள் கண்களை மூடிக்கொண்டாள்.
"சத்தியமா உன் மேல கை வைக்கணும்னு எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை. நீ கழட்டி கொடுத்த உன் பேண்டீஸ், பிராவைப் பார்த்தப்புறம் தான் எனக்கு மூட ஆச்சு"
"அடபாவி,"
"காரை எடுத்துட்டு லாங்க்ல போயிட்டேன். பையை திறந்து உன் டிரஸ்லாம் எடுத்து போட்டு மூஞ்செல்லாம் தேச்சு விட்டு, ரொம்ப மஜாவாயிடுச்சு போ"
"உன் ஜட்டி, பிராவையே கையில எடுத்து கசக்கி அந்த கடி கடிச்சு நக்குனேன், நீ எனக்கு கிடைச்சா?"
அவன் மறுபடி அவள் காய்களைப் போட்டு பிசைய,
"ஏய்ய்," அவளுக்கு பயத்தால், ஈரத்தால் உடல் சிலிர்த்தது. கெஞ்சி கேட்கிறேன் சுரேஷ், வா போலாம் காரை எடு," அவன் கையைக் கெட்டியாக பிடித்தாள்.
"சரி போலாம், உன் உடம்பெல்லாம் ஈரமா இருக்கு. இந்தா பாவாடையில் தொடச்சுக்கோ" என்றபடி அவன் பாவாடையை நீட்ட, அவள் வாங்க, அவன் பாவாடையைத் தராமல் கையைப் பின்னுக்கு எடுத்தான்.
"இப்படி உள்ள ஒண்ணுமே போடாம போனா, யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க? கொஞ்சம் கூட உனக்கு யோசனையே இல்லையா?"
"என் பாவாடையைக் கொடு" என்றாள்.
"பாவாடை தரேன். அதுக்கு முன்னாடி நைட்டியை அவுத்துடு" என்றபடி அவன் நைட்டியைப் பிடிக்க,
"ஏய் சுரேஷ், நைட்டியை அவுக்காத விடு" என்றாள்.
அவன் கேட்காமல் நைட்டியைத் தொடை வரை தூக்கினான்.
"ஏய்ய், இங்க பாரு சுரேஷ், பண்ண வரைக்கும் போதும் விடேன்,"
"விட மாட்டேன் கிரிஜா, நீ எனக்கு முழுசா வேணும்"
"ஏய்ய், என்கிட்ட எதுவும் தப்பா பண்ணாத. நைட்டியை விட்டுடு," அவள் அச்சத்தில் நடுங்க,
"நீ நைட்டியை ஃபுல்லா கழட்டு. இதை கழட்டிட்டுதான் ஈரத்தைத் துடைக்கணும். சுரேஷ் சொன்னா கேளு, டயம் ஆவுது"
"கேட்க மாட்டேன்,"
"முதல்ல நைட்டியை அவுரு, ரொம்ப ஈரமா இருக்குல்ல? ஜுரம் அடிச்ச உடம்பு. நான் சொன்னா கேளு கிரிஜா" என்றான்.
அவன் முதன்முதலாக பேரைச் சொல்லி கூப்பிடும்போதே தெரிந்துவிட்டது, அவன் ஏதோ ஒரு முடிவில்தான் இவ்வளவு தூரம் நெருங்கி இருக்கிறான் என்று.
"சுரேஷ், உன்ன கெஞ்சி கேட்கிறேன், முன்னாடி போ காரை எடு, உன்னை கெஞ்சி கேட்கிறேன்"
"முடியாது, நைட்டியை அவுரு. ஃபுல்லா பாக்கணும்" அவன் இன்னும் மேலே தூக்கினான்.
அவள் சுதாரிப்பதற்குள் அவன் நைட்டியை அவளது தொடைக்கு மேலே தூக்கிவிட்டான்.
"ஐயோ," என அவள் பயந்து குனிய, அவன் கை அவளது நைட்டியை மார்புக்கு மேலே தூக்க, காம்பு விடைத்த அவளது பாதி முலைக்கனிகள் வெளியே தெரிய, அவள் பயந்து போய் பின்னால் சரிந்து முலைகளை மூட, அதற்குள் அவன் கீழே நைட்டியை தூக்கிவிட்டான்.
அந்த பணக்கார வீட்டின் முதன்மை வேலைக்காரி சந்தனச் சிலை போல தனது உடலையே அவனுக்குக் காட்டிக்கொண்டிருக்க, அவன் வெறிபிடித்து அவளது இடுப்புக்கு இரண்டு பக்கமும் கைகளை நீட்டி அந்த ஈர நைட்டியை மேலே தூக்கினான்.
இப்போது நைட்டி அவளது கழுத்துக்கு மேலே வந்துவிட்டது. இடுப்புக்குக் கீழே ஒன்றுமே இல்லாமல் இருக்க, தனது தொடையும் விரி புண்டையும் அவனுக்கு அவள் காட்டிக் கொண்டிருந்தாள். திடீர் கூச்சம், வெட்கம் தாளாமல் அவள் சடாரென பின்னால் திரும்ப, அதற்குள் அந்த நைட்டியை அவன் அவிழ்ப்பதற்கு ஏதுவாக இருந்தது.
அவன் கொஞ்சம் கூட யோசிக்காமல் அவளது முழு ஈர நைட்டியையும் கழட்டி தூக்கி, அவள் கைக்கு எட்டாமல் டிரைவர் சீட்டில் தூக்கி போட்டான்.


Like Reply
#18
எபிசோடு: 17

கிரிஜா, சுரேஷ் முன் துணியே இல்லாமல் இருக்க, கால்களைப் பின்னி, கைகளை மடக்கி, முடிந்த அளவு தன் பருவ மேடுகளை அவன் கண்ணிலிருந்து மறைக்க முயன்றாள்.
அவள் அம்மணக்கட்டையாக அவன் முன்னால் உட்கார்ந்திருக்க, அவன் அந்த அழுக்கு பாவாடையை எடுத்து அவளது உடலைத் துடைக்கப் போனான். அவள் தன்னைத் தொடாமல் விலக, அந்த அழுக்கு பாவாடையையும் அவன் டிரைவர் சீட்டில் தூக்கி முன்னால் போட்டுவிட்டு அவள் மீது பாய்ந்தான்.
திமிற திமிற இழுத்து அணைத்தான். கொஞ்ச நேரத்திலேயே அவனது வலிமையான இரு கரங்களுக்குள் அந்தப் பெண், அந்த இளம் மனைவி சிக்கிக் கொண்டாள்.
"சொன்னா கேளு, ஸ், சொன்னா கேளு, வேணாம் சுரேஷ்" என்றபடியே அவள் துடித்தபடி கத்த, அவனோ அவளை பின்சீட்டில் படுக்கவைத்து தனது சட்டையைக் கழட்டிப் போட்டு, தன் மார்பின் பொசுபொசுவென முடி அவள் மேனியைத் தவழ, அவளது நிர்வாண உடல் மீது ஏறி மேலே படுத்துக்கொண்டான்.
கார் சீட்டில் மல்லாக்கப் போட்டு அவள் மீது படர்ந்தபடி சுரேஷ் அவளை நசுக்க ஆரம்பித்தான். அவள் அவனது மார்பின் மீது கை வைத்துத் தள்ள, அவன் அந்த இரண்டு கைகளையும் சமாளித்து அவளது தலைக்கு மேலே வைத்தான். நெற்றியில் இருந்து கன்னம் வரை முத்தம் கொடுத்துக் கொண்டே வந்தான். உதட்டைக் கடித்தான். அவள் நாக்கை அவள் வாய்க்குள் விட, அவள் அதை வாங்காமல் மறுக்க, நீட்டிய நாக்கினால் அவளது கழுத்தை நக்கினான்.
கையை மேலே தூக்கி இருந்தபடியால் வெளிப்பட்ட அவளின் பளிங்கு அக்குள் குழியை நக்கினான். இப்படிச் செய்யும்போதே அவனது தொடை முட்டி அவளது பெண்மையை அழுத்திக் கொண்டிருந்தது. அங்கிருந்த முடிகற்றைகள் அவன் தொடையைப் பஞ்சு மெத்தை போல அழுத்தியது.
கிரிஜா முழு நிர்வாணமாக அவன் அடியில் படுத்துக்கொண்டிருக்கும் போது, அதற்கு மேலே அவனை அவள் எப்படி முயன்றாலும் தள்ளிவிட முடியவில்லை. அவன் கொஞ்சம் கொஞ்சமாகப் போராடி நக்கி நக்கியே சீக்கிரமே முன்னேறி அவளை முழு கட்டுக்குள் கொண்டு வந்தான்.
இதுவரை ஈரத்தில் இருந்த அவளது முலைகள் இப்போது அவனது வாய் சூட்டிற்காக ஏங்கி நிமிர்ந்து வீங்க, அவன் இரண்டு காம்புகளையும் கவ்விக்கொண்டு பால் குடிக்க ஆரம்பித்தான்.
'நாம் இவனிடம் வகையாக மாட்டிக் கொண்டோம்' என்பது மட்டும் அவளுக்குப் புரிந்தது. அவள் ஏதும் பேசாமல் கொஞ்சம் கொஞ்சமாக அவனை, அவனது தோள்களைப் பிடித்துக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டாள். பால் குடித்த சுரேஷ் மெதுவாக அவளை ஏறிட்டுப் பார்த்து அவளின் உதட்டைக் கடித்தான். அவளின் நாக்கை இழுத்துச் சுவைத்தான். இரு நாக்கும் உரச ஆரம்பிக்க, அவளின் வாய்க்குள் நாக்கை விட்டுத் துழாவினான். கிரிஜாவும் அவன் எச்சிலை ருசிக்க ஆரம்பித்தாள். இரு உடலும் இரு எச்சிலும் கலக்க ஆரம்பிக்க, அவன் வாய் மெல்ல கீழே ஊர்ந்து அவளது வயிற்றிலும் தொப்புளிலும் சுவைக்க ஆரம்பித்து, அவனுக்கு மிகவும் பிடித்தமான அந்தப் பனியாரப் புண்டையை மீசையால் வருடினான். உதட்டைக் குவித்து ஒத்தி எடுத்தான்.
அவன் அந்த நறுமணக் கூதியில் அனுமதி இல்லாமல் முதல் முத்தம் தந்த உடனேயே அவள், 'ஆன்ன்ங்க்' என முனகி காலை விரித்தாள். அவள் முழுவதும் அவனுக்குச் சரணடைந்துவிட்டாள் என்பது பெருக்கெடுத்த அவளின் மதநீரே சொன்னது. அந்தப் புழையை அவன் பெரிதாக விரித்துப் பிரித்து நக்க ஆரம்பித்தான்.
"ஆங்க்ங்க்ன்ஸ்ஸ்ஸ்ஸ் ஏய்ய்," மெல்ல தன் முன்பற்களால் அந்த ரதிப் புண்டையைச் சுரண்டி, பருப்பை எச்சிலால் வேக வைத்தான்.
"அய்யோ, ஸ்ஸ் அம்மா," அந்தப் புண்டையை நக்கால் ஒற்றி ஒற்றி எடுத்து, வாயில் உறிஞ்சித் தின்பது போல சப்ப, அவள் நிலைகுலைந்தாள்.
"ஆவ்வ்ஸ்ஸ் சுரேஷ், ஸ்ஸ் ஆஆஆஆ"
அவன் அவளிடமிருந்து விலகி, தனது இரு கையையும் அவளது குண்டிகள் கீழே கொடுத்து தூக்கி, தன் மடியில் கிடத்திப் பார்த்தான்.
'ஆஹா, எவ்வளவு அற்புதமான கொழுப்பெடுத்த சதைப்பற்றான புண்டை!' என வியந்தான்.
அவளது ஒரு கால் டிரைவர் சீட்டிலும், இன்னொரு கால் பின்சீட்டின் மேலேயும் விரிந்திருக்க, அந்த அஞ்சுகப் பெட்டகத்தைத் தனது மடியில் வைத்து ஆராய்ந்து பார்த்தான். விரலால் சீண்டினான், குத்தினான், கிளறினான், விட்டு விட்டு எடுத்தான். கொக்கி போல விரலை மடித்துத் திருகினான்.
அவள் காமத்தில் சிணுங்கி அழ, அவன் வாயைத் திறந்து பரவென நக்கினான். 'பப்பப்ஸ்ப்ப்ச்' என சத்தம் போட்டு சப்பி சப்பி கடித்துத் தின்றான். அவளது கால் இரண்டும் சரிய ஆரம்பிக்க, கூதி மேடை வெடித்து இன்னும் இன்னும் விரிந்து அவனது நக்கலுக்காகத் துடித்தபடி ஏங்க, அவன் அவளது கட்டித்தேனை நக்கிக் குடித்தபடியே அவளின் இன்ப வெடிப்புக்குள் நாக்கைக் கத்தி போல் விட்டுத் துழாவினான்.
இதற்கு மேல், இதற்கு மேலாக அவனைத் தள்ளிவிட, நிராகரிக்க அவளிடம் ஏதுமில்லை. அவன் இழுத்த இழுப்பிற்கெல்லாம் போனாள். அவன் அவளை முன்னாலும் பின்னாலும் விட்டு நக்கினான். மேலும் கீழும் போய் போய் வந்தான். அவனுக்கு எங்கு வேண்டுமோ, என்ன வேண்டுமோ எல்லாவற்றையும் அவள் தடையேதுமில்லாமல் மௌனமாக வாரி வழங்கியிருந்தாள்.
ஒவ்வொரு தீண்டலும் நக்கலும் அவளுக்கு அளவிலா காமசுகத்தை வாரி வழங்கியது. முன்பு போல அவளிடம் ஒரு முனகல் இல்லை, ஒரு சிணுங்கல் இல்லை, எதிர்ப்பு ஏதும் இல்லை. அவன் சேட்டை எல்லாவற்றையும் அவள் ஏற்றுக்கொண்டாள்.
கிரிஜா தன்னிடம் முழுமையாக மடங்கிவிட்டாள் என்பதைத் தெரிந்த பிறகு, அவன் தனது எல்லா உடைகளையும் கழட்டிவிட்டு நிர்வாணமானான். அவளுக்குத் தனது விரைத்த ஆண்மையைக் காட்டினான். வயிற்றில் தடவினான். பருவ மேட்டில் வைத்து அவளது புழை ஆழத்தில் சரக்கனெ சொருகினான். இரண்டு குத்து குத்தி ஆழத்தில் நிறுத்தினான்.
தனது பெண்மைக்குள் கன்னக்கோலை ஆட்டியவன் அப்படியே மேலே படுத்தபடி குத்தி குத்தி ஓப்பான் என அவள் நினைக்க, அவனோ நெம்புகோல் விட்டு பெரிய பாறையைத் தூக்குவது போல தனது கன்னக்கோலை உள்ளே விட்டு அவளை அப்படியே தூக்கி தனது மடியில் வைத்துக்கொண்டான்.
இப்போது அவன் கார் சீட்டில் உட்கார, அவள் அவன் மடியில் காலை இருபக்கம் போட்டபடி அமர்ந்தாள். அவன் உட்கார்ந்த நிலையில் இருக்க, அவள் தனது பெண்மை நிறைய அவனது இன்ப சுன்னியை வாங்கிக்கொண்டு அவனைக் கட்டிப்பிடித்தபடி இருக்க, அந்தப் பெருஞ்சுன்னி அவள் புழை முழுக்க குத்தித் துடிக்க, அவளே சீட்டைப் பிடித்தபடி எகிறி எகிறி குதிக்க ஆரம்பித்தாள்.
அவள் நைட்டி மீது கை வைத்து அடுத்த பத்தே நிமிடத்தில் அவன் அவளை அவள் சம்மதத்தோடு ஓக்க ஆரம்பித்துவிட்டிருந்தான்.
இப்படி உட்கார்ந்த நிலையில் ஒரு ஆணிடம் அவள் ஓழ் வாங்குவது இதுவே முதல் தடவை. தனது தினவெடுத்த முலையை அவனது மார்பிலும், கழுத்திலும், முகத்திலும் தேய்த்தபடியே அவனது வாய்க்குள் தனது காம்பைத் திணித்து பால் கொடுக்க ஆரம்பித்து இருந்தாள். அவன் கொஞ்ச நேரம் நக்கினான், ரொம்ப நேரம் சப்பினான், மீதி நேரம் கடித்துத் தின்றான். அவன் எப்படி கேட்டாலும் அதை அப்படியே கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அவளது எல்லா உடைகளும் காரில் சிதறிக் கொண்டிருக்க, நிர்வாணமாக ஒரு திருட்டு ஓலை அந்த டிரைவரிடம் கள்ளத்தனமாக வாங்கிக் கொண்டிருந்தாள் கிரிஜா அக்கா.
"அக்கான்னு கூப்பிட்டாயேடா பாவி!" என்றெல்லாம் அவனைத் திட்டுவதற்குத் தயாராக இருந்தாள். ஆனால், இப்போது அவனே விட்டாலும் இவள் விடாமல் இருந்தாள். அவளின் இரு கால்களும் சீட்டில் ஊன்றி இருக்க, அவள் அவன் மீது அதிக வெயிட் போடாமல் அந்தப் பெரும் சுன்னியை தனது புண்டையில் செங்குத்தாக வாங்கி எம்பி எம்பி குதித்து ஓத்துக் கொண்டாள். அவனின் முழு சுன்னியும் வெளியே வந்துவிடாமல் முக்கால்வாசி வரை அது உள்ளே வெளியே என போய்க்கொண்டிருந்தது.
அவளது குதிஆட்டம் அதிகமாக ஆக, அதிகபடி உராய்வின் காரணமாக அவனது சுன்னியின் விரைப்பு கருங்கல் போல இருக்க, புண்டை சதையை விலக்கி அவனது சதை உருளை ஒரு சிறு உலக்கையாக அவளது ஈரப்புண்டையின் உள்ளே போய் போய் இடித்தது.
அது மேல் நோக்கி சீறிப்போய் குத்திய ஒவ்வொரு குத்திலும் காம சுகம் பல மடங்கு அதிகரித்துக் கொண்டே இருக்க, அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தனது பால் முலைகளை அவனது முகத்தில் போட்டு போட்டு தேய்த்தாள். காம்பினை அவனது மூக்கிலும் மீசையிலும் கன்னத்திலும் போட்டு குத்திக் கொண்டே இருந்தாள். அவன் முகமெங்கும் முத்தமிட்டாள்.
அடிக்கடி அவன் வாய் திறக்கும் போதெல்லாம் அவனது வாய்க்குள் தனது நாக்கை விட்டுத் துழாவி அவன் சப்புவதற்கு கொடுத்துக் கொண்டே இருந்தாள். அவனிடம் அவள் மல்லாக்கப் படுத்து ஓல் வாங்குவதை விட, அந்த கோணத்தில் அவனிடம் மடியில் கால் போட்டு பேயோல் வாங்குவதுதான் அவளுக்கு மிகவும் பிடித்தமாக இருந்தது.
ஏற்கெனவே கிட்டத்தட்ட ஒரு வார காலம் அந்த வீட்டில் வைஷ்ணவியின் புருஷன் கிரிஜாவை அடிக்கடி தரையில் போட்டு ஓத்திருந்தாலும் கூட, இந்த மழைக்கால கள்ள ஓல் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டு காலம் அந்தப் புழைக்குள் எந்த சுன்னியும் நுழைந்திருக்கவில்லை. எப்போவாவது அவளது நடு விரலும் மோதிர விரலும்தான் அவளது இன்ப வேட்கையைத் தன்னால் முடிந்த அளவிற்குச் சொரிந்துவிட்டு குத்தியிருக்கிறது என்றாலும், பெருக்கெடுத்து ஓடும் அவளின் கட்டுக்கடங்கா மதனநீரைக் குடிப்பதற்கு இப்போதுதான் ஒரு பெரிய வாய் கிடைத்திருக்கிறது.
என்ன ஒன்று? ஆரம்பத்தில் தம்பியாய் இருந்து 'அக்கா அக்கா' என்று கூப்பிட்டுவிட்டான். அதனால் என்ன இப்போது? அவனே எல்லாத் தடைகளும் உடைத்தெறிந்து, துணிகளை உரித்துப் போட்டு அவளை ஓக்க ஆரம்பித்து சல்லி சல்லியாக பேத்துவிட்டான்.
'இனி காவல் ஏது? கட்டுக்கள் ஏது? காட்டாறு பாயும்போது?' என என்றபடியே யோசிக்க, அவன் அந்த பெரிய காரில் கால்கள் மடங்கிய நிலையில் லேசாக எழுந்து அவளை அப்படியே மறுபடியும் கார் சீட்டில் மல்லாந்த நிலையில் போட்டு அவள் மீது மேலே படுத்தான். இன்னமும் அவனது சுன்னிராட் அவளது வெடிப்புக்குள் தான் இருந்தது.
எந்த கோணத்தில் புண்டையை ஆண்மை ராடால் தீவிரமாகக் குத்தினாலும், மல்லாக்கப் போட்டுதான் இந்த ஆண்கள் தங்களது கடைசி கட்ட வெறியைத் தீர்த்துக் கொள்வார்கள் என்பது அவளுக்கும் தெரியும் என்பதால், அவனது சுன்னியை விட்டுவிடாமல் புண்டை சதையால் கவ்வியபடியே அவனது இடுப்பில் கால்களைக் கிடுக்குப்பிடி போட்ட போலவே இருந்தாள்.
இப்பொழுது சுரேஷ் அவளது மேனியை முகர்ந்து கொண்டு கன்னங்களை நக்கிக்கொண்டே பலமாய் இடித்து அவளது தேன் புண்டையை ஓக்க ஆரம்பித்தான். வேகம் அதிகமாக கார் பலமாய் குலுங்கியது.
கண்ணை மூடி கிடந்த கிரிஜா அவனது வேகம் அதிகமாக மெல்ல கண்ணைத் திறந்து அவனைப் பார்த்தாள். 'யப்பப்பா! எவ்ளோ வெறிபிடித்து குத்துகிறான்! எவ்ளோ நேரம் தாக்குபிடிக்கிறான்!' அனிருத் கூட வெறியில் ஆர்வமாய் செய்வான், ஆனால் பத்து நிமிடம் கூட தாக்குபிடிக்க மாட்டான். சுரேஷ் அப்படியில்லை, ரொம்ப நேரம் இடிக்கிறான், இன்னும் ஆற அமர பயமின்றி வீட்டில் செய்தால் கூட கால் மணி நேரம் செய்வான் போல. அத்தனை இளமை, வலிவு,
நான்கு கண்களும் ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டன. அவள் அவனைப் பார்க்க வெட்கப்பட, அவன் அவள் முந்திரி மூக்கைக் கடித்தான்.
"இப்படி கார்ல படுத்து எனக்கு புண்டையை விரிச்சு காட்டுவேன்னு நான் நினைக்கவே இல்லைடி!"
"ஆஆஸ்ஸ்ஸ், ஏய்ய், உன்னை நல்லவன்னு நினைச்சிட்டேன்! என்னை அம்மணமாக்கி ஓக்கற இல்ல, ஆஆஸ்ஸ்ஸ்?"
"நீ எந்த மாதிரி கட்டைன்னு தெரியுமாடி? உன் புண்டை டெய்லி கிடைக்கும்னா நான் இங்க ஓசியில் கூட வேலை செய்வேன்டி!"
"நாயே, தனியா இருந்த பொண்ணுகிட்ட எது எதையோ பேசி துணியெல்லாம் அவுத்துப் போட்டு, கார்ல வச்சு ஓக்க வந்துட்டீல்ல, ஸ்ஸாஆஆ!"
"உன் புத்தியைக் காட்டிட்டல்ல? உன் ஆம்பளத் திமிரைக் காட்டிட்ட இல்ல?"
"ஆமாண்டி, என் ஆம்பளத் திமிரெல்லாம் உன் புண்டைக்குள்ள பயங்கரமா இறக்கப் போறேன், வாங்கிக்கடி, ஸ்ஸாஆஆ!"
"ஆஆஸ்ஸ்ஸ் அம்மாஸ்ஸ்ஸ், என்னால தாங்க முடியலடா! ஐயோ,"
"புண்டைல இறக்கட்டாடி கிரிஜா?"
"அதான் இறக்கிட்டு இருக்கியேடா! முலையை நல்லா பிழிஞ்சு பால் குடிடா, ஆஆஐயோ, என் கூதியை ஓலுடா! ஓடுடா எருமை, மெதுவா செய் டா எருமை நாயே, நாயே நக்குடா நாயே நாயே," உச்சகட்டம் நெருங்க அவள் புண்டை வெடிக்க வார்த்தைகள் குழறலாய், ஆனால் குதூகலமாய் பிச்சிக்கிட்டு வெளிவர, அவன் வேகமாக அவளது புண்டையை இடி இடியென இடித்து அப்படியே ஒரு வினாடி நிறுத்தினான்.
"ஆஆஸ்ஸ்ஸ்ஸ், நிறுத்தாதடா! அய்யோ,"
"ஏஏய்ய், டேய் வருதுடி வருதுடி!"
"நிறுத்தாதடா நாயே!"
"ஆஆஆஆ!" அவன் மறுபடியும் பலமுறை குத்துகளைக் குத்தி மறுபடியும் நிறுத்தினான்.
"யப்பாஸ்ஸ்ஸ்ஸ்," அவன் சுன்னி அவள் புண்டை உள்சதைகளை மோசமாகக் குத்திக் கிளறி வீங்கச் செய்ய,
"ஆஆஆஸ்ஸ்ஸ்ஸ், வருதுடாஸ்ஸ்ஸ்ஸ்," அவனது ஆண்மைக் கஞ்சி பெரிய ஊற்றாக வெளிப்பட்டு பொங்கி அவளது கூதியின் கடைநிலை ஆழத்தை நிரப்பியது.



Like Reply
#19
எபிசோடு: 18

கிரிஜா திடகாத்திரமான உடம்புகாரிதான். ஆனாலும் சுரேஷின் வலிமையான முரட்டுத்தனமான ஆண்மையில் சிக்கி சீர்குலைந்து சேதாரமாகி அவனுக்கடியில் படுத்து நீண்ட நேரம் ஓல் வாங்கி களைத்து நசுங்கிப் போயிருந்தாள். அந்த பெரிய காரின் பெரிய பின்சீட் அந்த இருவரின் எடையும் தாங்காமல் மௌனமாக அமுங்கிப் போய் இருந்தது. புழைகள் இன்னும் துடித்துக் கொண்டிருந்தது.
அவன் மெல்ல தன் உறுப்பை அவளது குழியிலிருந்து ஆட்டி ஆட்டி அசைத்து விடுவித்து வெளியே எடுத்தான். இருவரின் காம வேட்கையும் தற்காலிகமாக நிறைவடைய, இருவருமே அப்போதுதான் சுயநினைவிற்கே வந்தது போல் இருந்தார்கள். பொடுக்கென அவனது உறுப்பு அவளின் இறுக்கமான வெடிப்பிலிருந்து வெளிப்பட, தனது விரிந்த கண்களால் அவனது கூடலுக்குப் பிந்தைய சுன்னியை முழுதாகப் பார்த்தாள்.
அது இன்னும் விரைப்பு குறையவில்லை. அவன் நிர்வாணமாய் அவள் முன் நின்றபடி இருக்க, கொஞ்ச நேரம் அவளுக்குப் பிடித்துக் காட்டினான். அங்கே இருந்த தன்னுடைய பனியனில் தனது உறுப்பைத் துடைத்தான்.
அடியென அடி அடித்து பதம் குலைந்து போயிருந்த கிரிஜாவின் மேடையையும் அதே பனியனில் தொட்டு மென்மையாகத் துடைத்தான். முடிகளை நீவிவிட்டான்.
அவளுக்கு பயங்கர கூச்சமாக இருந்தாலும், இனி இவனிடம் எதையும் மறைத்துப் பயனில்லை என்பதை அவள் புரிந்து கொண்டிருந்தாள். கிரிஜாவின் முழு வெடிப்பையும் மேலிருந்து கீழாகத் துடைத்து பனியனையும் ஜட்டியையும் சுருட்டி பின்சீட்டில் போட்டுவிட்டு, தனது பேண்ட் சட்டை மட்டும் அவன் அணிந்தான்.
முன்பக்கம் டிரைவர் சீட்டில் போய் உட்கார்ந்து சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான். புகை காரில் படர, 'அட, ம்ம், ரொம்ப தைரியம்தான் இவனுக்கு? நம் எதிரிலேயே சிகரெட் பிடிக்கிறான்'. ஒரு தடவை சிகரெட் வாசத்துடன் கார் சீட்டில் வந்து உட்கார, அதற்கே கிரிஜா சத்தம் போட்டு வெளியே விரட்டியிருக்கிறாள். ஆனால் இப்போது என்னடா என்றால் அவள் எதிரிலேயே அவன் சிகரெட் பிடிக்கிறான்.
அவன் விட்ட புகை வெளியேயும் உள்ளேயும் அடர்த்தியாய்ப் படர்ந்தது. அவள் ஏதும் பேசாமல் எழுந்து உட்கார்ந்தாள். மௌனமாக இருந்தாள்.
இன்னும் அவள் துணி உடுத்தாமல் நிர்வாணமாகத் தான் இருக்கிறாள். முன்னே எட்டிப் பார்த்தாள். அவளது அத்தனை உடைகளும் முன்சீட்டில்தான் சிதறிக் கிடந்தன.
"சுரேஷ், என் டிரஸ் எடுத்துத் தரியா?" என்றாள்.
அவன் அலட்சியமாக திரும்பிப் பார்த்தான். "எதுக்குடி?" என்றான்.
"என் டிரஸ் குடு, நான் இப்படியேவா இருக்க முடியும்?"
"இப்படியே இருடி, ஒன்னும் குடிமுழுகாது" என்றான். அது கோபமா? அதிகாரமா? என்பது தெரியவில்லை. அவள் கைகளைக் குறுக்காக வைத்து மௌனமாக இருந்தாள். கண்ணாடிக்கு வெளியே மழை விட்டிருந்தது.
அவன் முழு சிகரெட் பிடித்து முடித்துவிட்டு காரின் பின்னால் போனான். மெல்ல காரைத் தூக்கி தள்ளிவிட்டான். கார் பள்ளத்திலிருந்து ஏறி மேட்டில் நின்றது.
கிரிஜா திகைத்தாள். 'அடப்பாவி! அப்படி என்றால் இந்த காரை முன்னாடியே தள்ளிவிட்டு இருக்கலாமா? வேண்டுமென்றேதான் இந்த நாய் இப்படி செய்தானா? அடப்பாவி, என்னமா திட்டம் போட்டு என்னை ஏமாற்றி அனுபவித்துவிட்டான்? கார் பள்ளத்தில் இருக்கிறது, இனி போக முடியாது என ஒரு பொய் சொல்லி, என்னைக் கட்டம் கட்டி, காரினர் செய்து அனுபவித்து விட்டானே?'
ஒருவேளை இந்த ஈர உடையில் என்னைப் பார்த்ததும் இவனுக்கு போதை ஏறிவிட்டதோ? இந்த இறுக்கமான மெல்லிதான நைட்டி கூட இவன் வாங்கி தந்ததுதானே! பாவி, எல்லாவற்றையும் திட்டம் போட்டுத்தான் செய்திருக்கிறான். என்னை சக்கையாக பிழிந்து அனுபவித்துவிட்டானே!
அவள் பாதி ஆத்திரமும் பாதி ஆதங்கமுமாய் இருக்க, அவன் டிரைவர் சீட்டில் உட்கார்ந்து காரை ஸ்டார்ட் செய்தான்.
கார் ஸ்டார்ட் ஆக, அவன் பின்னால் தெரிந்தவளைப் பார்த்தான். "சாரி கிரிஜா, இப்போ எல்லாம் உனக்கு தெரிந்திருக்கும். உன்னை எப்படியாச்சும் அனுபவிக்கணும்னுதான் கார் ஸ்டார்ட் ஆகலைன்னு பொய் சொன்னேன்,"
"தெரியும், மரியாதையா காரை எடு"
"ஏண்டி இவ்ளோ கோவம்?"
"கோவமெல்லாம் கிடையாது. இதெல்லாம் நான் பண்ண தப்பு, என் கொழுப்புதான். நான் ஹாஸ்பிடலுக்கு செக்கப்புக்கு போயே இருக்கக் கூடாது." தலையில் அடித்துக் கொண்டாள். "வெளியிடத்துல என் டிரஸ்ஸையெல்லாம் அவுத்துக் கொடுத்து இருக்கவே கூடாது"
"ஏன் அப்படி சொல்ற கிரிஜா? அப்படி செய்யப் போவதான் நீ எனக்கு கிடைச்ச, சாரி, ப்ளீஸ்!"
"வாயை மூடு, முதல்ல டிரஸ்ஸை எடுத்துக் கொடு, அம்மணக்கட்டையா இருக்கேன்"
"டிரஸ் எல்லாம் கொடுக்க முடியாது"
"ஐயோ, என்ன இப்படி சொல்ற?"
"நான் உன்னை இப்படித்தான்டி பாக்கணும்!"
"என்ன சொல்ற?"
"ஆமாண்டி, எவ்வளவு நாள் தெரியுமா உன்னை இந்த கார்ல துணி இல்லாம பாக்கணும்னு நினைச்சேன்"
"அதான் எல்லாம் பாத்துட்டியே, என்னை உன் இஷ்டப்படியெல்லாம் செஞ்சிட்டீயே, அப்புறமென்ன, தயவுசெஞ்சு என் டிரஸ்ஸை எடுத்துக்கொடு"
"ம்கூம், ஏய், அந்த வீட்ல காரை நிறுத்திட்டு, உன்னை உன் ரூமுக்கு இப்படியே துணி இல்லாமல் தூக்கிட்டு போகணும் கிரிஜா"
"அய்யோ, அது மாதிரி எல்லாம் பண்ணாத"
"அப்படித்தான்டி பண்ணுவேன்!"
"ப்ளீஸ் சுரேஷ், நான் சொன்னா கேளு. நீ கேட்டவுடனே உன் கூட படுத்தேன்ல?"
"கேட்க மாட்டேன்டி. தொட்டவுடனே அவுத்துப் போட்டியா? எங்கடி அவுத்த, நான் தான்டி கனிய வச்சேன்!"
"லூசு! ஊசி இடம் கொடுக்காமதான் உன் நூலு பூந்துச்சா?"
"ஏய், இந்த சுரேஷ் உன்னை எப்படி அனுபவிக்கணும்னு நினைச்சானோ, அப்படித்தான் அனுபவிப்பான்"
"ஐயோ சுரேஷ், நான் அம்மணக்கட்டையா உன் கூட எப்படி வரது?"
"இந்த இருட்டுல யாருடி பாக்க போறாங்க? கம்முனு வாடி" என்றான்.
அவன் அவளின் எல்லா உடைகளையும் காலால் சுற்றி ஓரம் தள்ளினான். கண்டிப்பாக அந்த உடைகளை எடுக்க அவன் அனுமதிக்க மாட்டான்.
அவள் கால்களை சீட்டில் தூக்கி வைத்து மடக்கி வைத்து அதைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்தாள். அவன் ரேடியோ தட்ட, 'என் உள்ளே என் உள்ளே ஏங்கும் நேரம்' பாடல் ஓட, அடிக்கடி கண்ணாடியில் அவளது நிர்வாண அழகை ரசித்தபடி அவன் கார் ஓட்டினான்.
"ப்ளீஸ் சுரேஷ், யாராச்சும் பங்களாவில என்ன பார்த்திடப் போறாங்க?"
"இந்த நேரத்துல யாருடி இருக்கப் போறாங்க? செக்யூரிட்டி கூட தூங்கி இருக்கப் போறான். கேட்டையே நான் தான் திறக்கப் போறேன். இப்படியே என் கூட துணி இல்லாம வாடி"
"அதான் எதுக்குன்னு கேட்கிறேன்? எல்லாவற்றையும் தான் முடிச்சுட்டியே?"
"எங்கடி முடிச்சேன்? ஆரம்பிக்கிறதுக்குள்ள பொசுக்குன்னு பினிஷ் ஆச்சு. உன்னையெல்லாம் ரொம்ப நேரம் ஊறப் போட்டு செய்யணும்"
"ஐயோ ப்ளீஸ், இதுவே போதும், இனிமேல் வேணாம்"
"எங்கடி? என் கண்ணைப் பார்த்து சொல்லு, என்னைப் பார்த்து சொல்லு!"
"உன்னைப் பார்த்துதான் சொல்றேன், விட்டுடு போதும்"
"ஏய்டேய், இது பத்தாதுன்னு உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும், மூடிட்டு வாடி" என்றான்.
'ஐயோ, இவனை என்ன சொல்லி நிறுத்துவதுன்னு தெரியலையே' என அவள் நினைக்க, வீடு வந்தது. அவன் இறங்கி கேட்டைத் திறந்தான்; பின் காரை உள்ளே எடுத்தான்.
அவள் இன்னும் துணி இல்லாமலேயே இருந்தாள். 'ஐயோ, இந்த வீட்டில் நாம் எத்தனை பவிஷாக உலா வந்திருக்கிறோம்! இப்போது என்னடா என்றால் துணி இல்லாமல் இந்த காரில் பொட்டு போல உட்கார்ந்திருக்கிறோமே! இறங்கும் போதாவது என் துணியைக் கொடுப்பானா?' என அவள் எதிர்பார்க்க, அவன் கொடுக்கவே இல்லை.
அவன் காரைப் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, பின் கதவைத் திறந்து கை நீட்டினான்.
"வெளிய வாடி, யாருமில்லை"
"ப்ளீஸ், ஏன் இந்த மாதிரி பண்ற? டிரஸ் இல்லாம நான் எப்படி வருவேன்?"
"ஏண்டி, டிரஸ் இல்லாம என் கூட படுக்கலையா?"
"அச்சோ, யாராச்சும் என்னை இந்த நிலைமையில பார்த்தா நான் என்ன ஆவேன்?"
"யாரும் பார்க்க மாட்டாங்க, இப்ப இங்க யாரும் இல்ல வாடி" என்றான்.
"வேணாம் சுரேஷ்"
"வெளிய வரியா இல்லையா? கார்லயே வச்சு இன்னொரு தடவை செய்யவா?"
"ஐயோ, அதான் உன் கூட படுத்துட்டேன் இல்ல? இனிமேல் வேணாம்னு கேட்கவா போறேன்? இன்னோரு நாள் வச்சுக்கலாமே, ப்ளீஸ் என் துணியெல்லாம் கொடு"
"இன்னொரு நாள் எல்லாம் தேவையில்லை, எனக்கு இப்பவே வேணும் வாடி" என்றான்.
"பிரா, ஜட்டியாச்சும் கொடேன் சுரேஷ்,"
"முடியாது. வெளிய வரியா, இல்ல இங்கே வச்சு செய்யவா?" அவன் மிரட்ட,
"வேணாம் வேணாம்" என்றபடி தயக்கமாய் அவனது நீட்டிய கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
அவன் அப்படியே இழுத்து அவளைத் தூக்கித்தினான். கொஞ்ச நேரம் நடக்க வைத்து அழகைப் பார்த்தான். பின் கிரிஜாவை நிர்வாணமாகத் தூக்கி இறுக்கப் பிடித்து, அவளைக் கட்டிப் பிடித்தபடியே தூக்கிக்கொண்டு வீட்டின் பின்பக்க வழியாகச் சென்றான்.
சே! ஒரே நாளில் எப்படியெல்லாம் மாறிவிட்டது? சாதாரண டிரைவர் என் படுக்கை நாயகனாகி விட்டானே! கிரிஜாவைத் தூக்கிக்கொண்டு அவள் அறைக்குள் நுழைந்தான். படுக்கையில் அவளைப் போட்டான். படுக்கையில் முலைகள், குண்டிகள் நசுங்க, வெளிச்சத்தில் உருண்ட கிரிஜாவை அவன் காமத்துடன் பார்த்தான்.
"நிஜமா இன்னொரு தடவை என்னை செய்யப் போறியா?" என்றாள்.


Like Reply
#20
எபிசோடு: 19

சுரேஷ் சிரித்தான்.
"அதில உனக்கென்னடி சந்தேகம்?" அவன் இந்த முறை அவள் மேல் படரவில்லை. அவளைத் தொடையை விரிக்கச் சொல்லி ருசிக்கவில்லை. மாறாக, அவளது படுக்கையின் மேலே ஏறி நின்றான். உடைகளை அவுத்துப் போட்டு ஏறி நின்றான். பாதி விரைத்த சுன்னியைக் காட்டி காட்டி, "ம்ம், வா, வாயில வச்சு சப்புடி" என்றான்.
அவள் முட்டி போட்ட நிலையில் அந்த பெரிய உறுப்பை வாயில் விழுங்கினாள். சப்ப ஆரம்பித்தாள். அவளுக்குத் தண்டினையும் கொட்டைகளையும் மாறி மாறி காட்டி சுவைக்கக் கொடுத்தான்.
அதன் பிறகு அவன் கீழே படுத்துக்கொண்டு அவளைத் தனது மீது படுக்கச் சொன்னான். அவள் மார்புக் குன்றுகள் ஆட, பால்காம்புகள் கீழ் நோக்கித் தொங்க அவன் மீது ஏறி வர, அவன் அவனது கன்னத்தைப் படபடவென பலமுறை அடித்தான்.
"இப்படி இல்லடி, கீழ போ, உனக்கு என் சுன்னி வேணும் இல்ல?"
"பால் குடிப்பீயே?"
"வேணாம், கீழ போ, சுன்னியை சப்பு!" அவள் திரும்ப,
"அப்படியே தலைகீழா திருப்பிப் படு,"
"அப்படின்னா?"
"பைத்தியம்.. எனக்கு உன் புண்டை வேணும்டி., தலைகீழா திருப்பிப் படு, சிக்ஸ்டி நைன் தெரியாதா?" என்றான்.
"நான் என்னத்த கண்டேன்?"
"சரி, என் மேல தலைகீழா கவுந்து படு முண்டம்."
"ம்ம்ம்." அவள் திருப்பி தனது சூத்துக்களை விரித்துக் காட்ட., "இன்னும் மேல வாடி,"
"ம்ம்ம்ம்."
"வாய்க்கு எட்டல மேல வா," என்றான்.
அவன் வாய்க்கு நேராக அவளது பெண்மை வெடிப்பு ஒழுகலாய் வந்து நிற்க., "ம்ம்ம்.. கரெக்டா இருக்கு, கீழே இறக்குடி.. வாய்ல வா.. ஆஆ." அவன் வாயைத் திறந்து காட்ட., கிரிஜா தனது பணியார மேடையை அவனது வாயில் வைக்க, அவன் ஒரே பேய்க்கடி கடித்து, விழுங்க., "ஆஆங்ங்க்ங்க்!" அவள் சுகம் தாளாமல் முனகி.., தன் கண்முன்னே இருந்த கருந்தடியை விழுங்கிக் கொண்டாள். அவன் நக்க., இவள் சப்ப., அவன் கடிக்க, இவள் உறிஞ்ச., "ஆஆஆஆஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஐயோ! இதுதான் 69 பொசிஷனா? எவ்வளவு வித்தைகாரனா இருக்கிறான்?"
அவன் அவளது சுன்னித் தண்டினை எச்சில் ஊற ஊம்ப ஆரம்பிக்க., அதற்கு ஈடாக அவளது பெண்மையை சுரேஷ் சுவைத்துக்கொண்டிருந்தான். அவள் அடிக்கடி உச்சம் விட, "கூதியை நல்லா தூக்கி தூக்கி வச்சு தேச்சிக்கிட்டே இருடி., வாய்ல தேய்.."
"அதான் நல்லா காட்றேனே!"
"ஒழுகி ஒழுகி வீணா கீழே போவுதுடி.. கரெக்டா வாய்ல விடேன்."
"ஆஸ்ஸாஆஆ.. அதுக்கு என்னை திருப்பிப் போட்டு நக்கு சுரேஷ்ஆஆஆஆ விரிச்சி காட்றேன்..'
"எனக்கு உன் கூதி இப்படித்தான் வேணும்டிஆஆஆஆ. தொங்கும் திராட்சை மாதிரி என் வாய்க்கு மேல ரெடியா வந்து நிக்கனும்."
"மாடு.. ஆஆ வாய்ல விழலன்னு சொல்றீயே!"
"ஆட்டாதடி.. கூதிப்பால் அப்படி இப்படி சிதறுது."
"ஆஸ்ஸ்ஸ்ஸ்ஸே ஏஏஏய்ய்ய்!" அவன் விரல் விட்டு குத்தி கிளறி பருப்ப பார்த்து எடுத்து கடித்தான்..
"ஏஏஏய்ய் நகத்துல குத்தாத எருமை."
"முடி மூடிக்குதுடி ஸ்ஸ்ஸ்ஸ்.. பல்லுல கடிக்காதடி."
"பல்லெல்லாம் படல., வெறியிலாயா செய்றேன்? நான் உன்ன மாதிரி கடிக்கல, பல்லு படாம நான் நாக்குலதான் நக்கறேன். நீதான் என் புண்டையை வெறி புடிச்சி கடிச்சி திண்றே?"
"ஏய்ய்ய்.. கூதியை மெதுவா மூஞ்சி முழுக்க தேய்டி ஸ்ஸ்ஸ்."
"ம்ம்ம்ம்ம்."
"ஆஆஆஆஆ!"
"என்னடி?"
"உன் தாடி முடிலாம் குத்துது,"
"நான் நாளைக்கு சேவிங்க் பண்ணி வெச்சுக்கறேன்."
"மீசையும் எடு,"
"ஏன்டி?"
"புண்டை வேணுமுனா மீசை எடு.. பயங்கரமா குத்துது."
"அப்ப நாளைக்கும் புண்டை தரியா?"
"வேற வழி? இனிமே என்னை விடவா போறே? அதுக்குதான் சொல்றேன்.. புண்டை வேணுமுனா மீசை.."
"நீயும் சேவிங்க் பண்ணி வெச்சுக்கறியா?" அவன் பருப்பைக் கவ்வி சுவைக்க.,
"ஆஆஅய்யோ.." அவள் அலறினாள்..
"வாயைத் திறக்காதடி.. ஐஸ்கிரீம், தேன் எதுடி பிடிக்கும் உனக்கு?"
"எதுக்கு?"
"உன் அடுப்புல ஊத்தி நக்கறதுக்கு?"
"ச்சீ!"
"சொல்லு."
"எதை ஊத்துனா என்ன? நக்கப்போறது நீதானே?"
"சரி, எனக்கு தேனு. உனக்கு என்ன வேணும்?"
"எனக்கு ஏன்?"
"என் தண்டுல போட்டு தரதுக்கு?"
"ஐஸ்கிரீம் போட்டு தா,"
"சரி, கையில போட்டு நசுக்காத, வாய்ல வெச்சி செய்யி," என பல உத்தரவுகளை அவன் போட்டான். அவன் போட்ட எல்லா உத்தரங்களையும் அவள் நிறைவேற்றித் தந்தாள். இறுதியாக அவனது ஆண்மைத் தண்டில் ஏறி உட்கார்ந்து குத்திக்கொண்டாள். முன்னும் பின்னும் திரும்பி அந்த திருட்டு சுன்னியை ஒத்தாள்.
கடைசியாக அவளை முட்டிப்போட்டு மடங்கி உட்கார வைத்து டாகி ஸ்டைலில் பின்னால் இருந்து ஓத்தான். கிரிஜா தனது வாழ்நாளில் டாகி ஸ்டைலில் வலிக்க வலிக்க முன்பக்கம் முலைகள் தொங்க ஒக்கப்படுவது இதுவே முதல் தடவை.
'அடடா! என்னமா செய்றான்? மனோகரன் தோத்தான். என்ன ஆனாலும் சரி, இந்த காட்டுப் பயலை விட்டுவிடக் கூடாது. எந்த சிறுக்கிக்கும் தள்ளிவிடக் கூடாது. வயசாச்சு, மசுராச்சு.. இவன்தான் நமக்கு காலம் பூரா..' என அவள் உறுதியாக இருந்தாள்.
அவளது கால்கள் விதவிதமான கோணத்தில் பலவாறு தூக்கப்பட்டன; மடக்கப்பட்டன; விரித்து வைக்கப்பட்டன. அவளது புழை இஷ்டத்துக்கு விரிக்கப்பட்டு நன்றாக அந்த சுன்னியால் ஓக்கப்பட்டது. அந்தக் காட்டுப் பயல் காமந்தகன் சுரேஷ் அவளது புண்டையை எந்த கோணத்தில் எவ்வளவு வேகமாக வெறியுடன் ஒத்தாலும் அழாமல், கத்தாமல் அவள் அவனுக்கு ஈடு கொடுத்துக்கொண்டே இருந்தாள். अवளது பொத்தி பொத்தி பாதுகாக்கப்பட்ட கற்பு அவனிடம் அநியாயத்துக்கு சோரம் போனாலும், சுரேஷ் தந்த அளவிலா காமத்தை அவள் கண்மூடி பெற்றுக்கொண்டாள்.
ஆவேசமான நீண்ட நேர கலவி நடுநிசிக்கு மேல்தான் முடிவுக்கு வந்தது. அதற்குப் பிறகு அதே படுக்கையில் அவர்கள் இருவரும் ஒன்றாக, ஒன்றோடு ஒன்று கட்டிப்பிடித்து படுத்துக்கொண்டிருந்தார்கள்.
அதிகாலை விடிய, கிரிஜாவே அவன் மீது நேரடியாக வந்து அம்மணமாய் படுத்தாள். முத்தமிட்டு "போ," என்றாள்.
"நீ போய் உன் ரூம்ல படுத்துக்கிறியா? விடியப்போவுது," எனச் சொல்ல, அவன் "முடியாது," என்றான்.
"ஏய்ய் திருட்டுப் படவா.. உனக்கு இன்னும் என்ன வேணும்?" என அவள் கேட்க, அவன் வாய் திறந்து "ஆ" என்றான். அவள் புரிந்துகொண்டாள். அவள் பழைய கிரிஜாவாக இருந்தால் அசடாக முலையை எடுத்து அவனது வாய்க்குள் ஊட்டி இருப்பாள். ஆனால் இப்போதுதான் அவன் என்ன கேட்கிறான் என்பதெல்லாம் அவளுக்கு தெரியுமே! அவன் "ஆ" என்றதும் அவள் சுறுசுறுவென ஏறி முட்டிக்காலால் ஊர்ந்து, தனது புண்டையை முடிகள் பிரித்து அவனது வாய்க்குள் வைத்து திணித்தாள்.
அவன் அதிகாலையில் இந்த தேன் புண்டையை மறுபடியும் சரட்ட் சரட்டென நக்கி சுவைத்தான். தனக்குத் தேவையானதை வழங்கிய அந்த கிரிஜாவின் காமசுரபிக்கு தன்னால் முடிந்ததை அவனும் வழங்கினான். அதிகாலையில் அவர்களுக்குள் மூன்றாவது கலவி மறுபடியும் ஆவேசமாக, திருப்திகரமாக நடந்து முடிந்தது. இருவரும் ஒன்றாகவே குளித்தார்கள்.


Like Reply




Users browsing this thread: