Romance மை விழி திறந்த கண்ணம்மா
#1
ஒரு வாழ்வியல் கதை.
0.01% கூட காமம் இருக்காது.


அழகுப் பெண்ணின் கார் குழல் போல அந்த இரவு கருமையாக இருந்தது. ஊரில் இருக்கும் கோட்டான்கள் கூட உறங்கியிருக்க தொலைவில் இருக்கும் ஒரு வீட்டில் இருந்து ஒரு மெல்லிய விசும்பல் சத்தம் மட்டும் காற்றில் அலையாக மிதந்து வந்து கொண்டிருந்தது.


அதே ஊரில் இன்னுமொரு வீட்டில், " ஏங்க அந்த பொண்ணுக்கு பதினைஞ்சு வயசு கூட இன்னும் முடியலங்க. அதுக்குள்ள அவளுக்கு கல்யாணம் பண்ணி வெச்சிருக்காங்க. பாவங்க அந்த பொண்ணு. பேசாம நம்ம போலீஸுக்கு சொல்லிடலாமா?" என்று அந்த வீட்டின் பெண்மனி தன் கணவனிடம் கேட்டாள். அந்த சிறுமியின் மீது இருந்த பாசத்தில்தான் தன் மனைவி இப்படி பேசுகின்றாள் என்பது அந்த கணவனுக்கும் தெரியும். இருந்தாலும் அவரால் எதுவும் செய்ய முடியாத நிலை.

" முட்டாள்தனமா பேசாத. அவங்க பொண்ணுக்கு அவங்க கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க. உனக்கு என்ன வந்திச்சி. இப்போ நம்ம பேசினத யாரும் கேட்டிருந்தா நம்ம உசிரு நம்மகிட்ட இருக்காது. அந்த பொண்ணோட தம்பி காரன் இருக்கான்ல. அவனுக்கு இப்போ வெறும் பன்னிரெண்டு வயசுதான். ஆனா இப்பவே பெரிய ரவுடி மாதிரி ஏதேதோலாம் பண்றான். நம்ம வேலைய பார்த்துக்கிட்டு சும்மா இருக்குறதுதான் நமக்கு சரி" என்று தன் கணவன் கூற அவரை கண்கள் கலங்க அந்த பெண்மனி நோக்கினாள்.

" பாவங்க அந்த மிருகத்துக்கு அவளவிட 15 வயசு ஜாஸ்த்தி. இன்னைக்கு சாந்தி முகூர்த்தம் என்ற பெயருல அந்த கேடுகெட்டவன் என்னென்ன எல்லாம் பண்ண போறானோ தெரியல. இவன் ஏடாகூடமா ஏதும் பண்ணான்னா அவ செத்துப்போயிடுவா. அதான் ரொம்பவும் பயமா இருக்கு" என்ற தன் மனைவியின் கலக்கத்தை புரிந்து கொண்டான் அந்த கணவன். " நம்ம கையில எதுவுமே இல்லம்மா. ஏதும் பண்றதுன்னா கூட கொஞ்சம் நாள் ஆகும். அதுவரைக்கும் அந்த பொண்ணு உசிரோட இருந்திச்சின்னா ஏதாச்சும் பண்ணுவோம். இப்போ போய் தூங்கு" என்றான்.

பதினைந்து வருடங்களின் பின் அதாவது 2021 இல்..

ரோட்டோர கேயேந்தி பவனில் இசைஞானியின் ' மெளனமான நேரம், இள மனதில் என்ன பாரம்' பாடல் இசைத்துக்கொண்டிருந்தது. கண்களில் எரிச்சலுடனும் மனதில் நாள்பட்ட வலியுடனும் ஜீவா என்கின்ற ஜீவானந்தம் வீட்டின் காலிங்க் பெல்லை அடித்தான். மூன்று முறை அடித்தும் யாரும் கதவை திறக்கவில்லை. நான்காவது முறை பெல்லை அழுத்த அவனுக்கு தைரியமும் இல்லை. தனது போனை எடுத்து பார்க்க அது சார்ஜ் இல்லாமல் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தது. இதை பார்த்ததும் அவனுக்கு அந்த ரனமான நேரத்திலும் சிரிப்புத்தான் வந்தது. ' தன்னை விட மற்ற எலோரும் அமைதியாக தூங்குகிறார்கள்' என்ற எண்ணம் அவனை ஒரு பக்கம் வாட்டினாலும் மறுபக்கம் சிரிப்பை வரவழைத்தது. இதற்கு மேலும் இங்கு நிற்பதில் பயனில்லை என நினைத்தவன் அடுத்து என்ன செய்வது என யோசித்த வண்ணம் வீட்டின் வாசல் படியில் இருந்து இறங்கிய அதே சமயம் கதவு திறக்கப்பட்டது.

" ஏண்ணா இப்படி லேட்டா வர. உனக்குத்தான் நம்ம வீட்டு நிலமை தெரியும்ல. தெரிஞ்சிருந்தும் ஏன் இப்படி பண்ற. சரி சரி சத்தம் போடாம உள்ள வா" என்று தன் மீது உள்ள அக்கறையை அவனின் தங்கை ஆனந்தி வெளிக்காட்டிய விதத்திலேயே அவனுக்கு தெரியும் அவன் மீது அவளுக்கு எவ்வளவு அக்கறை என்று.

" சாப்பிட்டியான்னா" என்று ஆனந்தி கேட்டதற்கு ஜீவா அமைதியாக இருப்பதை கண்டவள் அவன் சாப்பிட்டு இருக்க மாட்டான் என்பது புரிந்தது. தன் அறைக்குள் அவனை அழைத்து சென்றவள் டேபிளின் அருகில் ஒரு கதிரைய போட்டு அவள் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த தோசை மற்றும் சட்னி இருந்த பிளேட்டை அவனிடம் கொடுத்தவள் " நீ சாப்பிட்டுகிட்டு இரு, நான் கிட்சன் போய் தண்ணீ எடுத்து வரேன்" என்றாள்.

சத்தமில்லாமல் கிட்சன் சென்ற ஆனந்தி தண்ணீர் எடுத்துகொண்டு தனது அறைக்கு செல்ல முற்பட அங்கு அவளின் சித்தி நின்றுகொண்டிருந்தார். " என்ன உங்க நொண்ணன் வந்துட்டாரா. எந்த ஆபீசுக்கு போய் வேலை முடிச்சிட்டு இப்படி லேட்டா வர்றாரு. வீட்டுல இரண்டு பொண்ணுங்க இருக்காங்க என்ற எண்ணம் கொஞ்சமாச்சும் இருக்கா. இன்னைக்கு எவ வீட்டுக்கு போய் கூத்தடிச்சிட்டு வந்திருக்காராம்" என்று கடுகடுத்தாள். அந்த இடத்தில் அவர்களின் சித்தியை ஆனந்தி எதிர்பார்க்கவில்லை. இன்றும் தன் அண்ணனை வார்த்தைகளால் குத்திக்கிழிக்காமல் விடமாட்டார் என்பது அவளுக்கு புரிந்தது.

" இல்ல சித்தி, அண்ணன் ஏதோ ஜாப் விசயமா போயிட்டு வர கொஞ்சம் தாமதமாகிடிச்சாம். வேற ஏதுமில்ல" என்று தட்டுத்தடுமாறி கூற அவளின் சித்தி கோபமாக முறைத்தால். " உங்கண்ணனுக்கு வக்காளத்து வாங்குறத கொஞ்சம் நிறுத்துறியா. அவன் ஒரு ஆளுன்னு. ராத்திரியில அவன் ரூமுக்கு தனியா போகாத. அப்புறமா அவன் தங்கச்சின்னும் பார்க்காம உன்ன ஏதும் பண்ணிடுவான்" என்று கூற ஆனந்திக்கு கண்கள் கண்ணீர் முட்டியது. தனது அறைக்குள் நுழைய அங்கு ஜீவா இல்லாததை கண்ட ஆனந்திக்கு அழுகை வந்தது. கிட்சனில் சித்தி பேசியது கண்டிப்பாக தன் அண்ணனுக்கு கேட்டிருக்கும். எந்த அண்ணனால்தான் தன் தங்கையுடன் இணைத்து பேசுவதை கேட்டுக்கொண்டு பொறுமையாக இருக்க முடியும்.

ஜீவா வேலை தேடிக்கொண்டிருக்கும் இருபத்தியேழு வயது இளைஞன். ஆனந்தி இப்போதுதான் காலேஜ் இரண்டாம் வருடம் படிக்கின்றாள். இவர்களின் தாய் ஆனந்தி பிறந்ததும் இறக்க தந்தை முருகன் தூரத்து சொந்தத்தில் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் இருந்த பெண்ணான வள்ளியை திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் வள்ளி மாற்றான் தாய் பிள்ளைகள் என்று ஜீவா, மற்றும் ஆனந்தி மீது வெறுப்பு எதுவும் காட்டவில்லை. ஆனால் மூன்று வருடங்களின் பின் அவளுக்கு சங்கவி பிறக்க எல்லாமே தலை கீழானது. அப்போதும் கூட வள்ளி இவர்களை கொடுமை எதுவும் படுத்துவதில்லை. ஆனால் ஏனோ தெரியவில்லிஅ ஜீவாவை மட்டும் அவளுக்கு பிடிக்கவே பிடிக்காது. 

ஜீவாவுக்கு படிப்பில் பெரிய நாட்டம் எதுவுமில்லை. ஆனால் விளையாட்டு மற்றும் இசையில் ஆர்வம் அதிகம். காலேஜ் முதல் வருடம் ஒரு போட்டிக்காக வெளியூர் சென்ற வேலை தனது சீனியர் மாணவர்களின் வற்புறுத்தலின் பெயரில் காசுக்கு உடலை விற்கும் பெண்ணின் இடத்துக்கு இவர்கள் எல்லோரும் செல்ல, இவர்களின் துரதிஷ்டம் போலீசில் மாட்டிக்கொண்டனர். இதை கேள்விபட்டதும் வள்ளிக்கு சும்மா இருந்த வாய்க்கு அவல் கிடைத்தது போல் ஆனது. அன்றிலிருந்து அவர் ஜீவாவை எப்போதும் திட்டிக்கொண்டே இருப்பார். அவன் ஆனந்தி மற்றும் சங்கவியிடம் அன்பாக பேசினால் கூட அவன் மனதை காயப்படுத்தி விடுவார். வார்த்தைகளில் விஷம் வைத்து பேச அவர் என்றுமே தயங்கியதில்லை.

இவை எல்லாம் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும் முருகனிடம் இந்த விடயங்கள் எதையும் வள்ளியோ அல்லது ஜீவாவோ கொண்டு சென்றதில்லை. வள்ளிக்கு ஜீவாவின் விடயத்தை முருகனிடம் கொண்டு சென்றால் அது கடைசியில் அவருக்கும் ஜீவாவுக்கும் இடையில் நின்று விடும். அதன் பின் வள்ளியால் ஜீவா விடயத்தில் தலை இட முடியாமல் போகும் என்பதாலேயே தன் கணவனிடம் எதுவும் கூறுவதில்லை. முருகன் மிகவும் கோபக்காரர். ஜீவாவுக்கு தன் தந்தை மீது சிறு வயதில் இருந்தே பயம் அதிகம். அதனாலேயே அவன் அவரிடம் எதுவுமே தேவைக்கு அதிகமாக பேசுவதில்லை. தன் சக மாணவர்கள் எல்லாம் அவர்களின் குடும்பத்துடன் ஒன்றாக சந்தோசமாக இருப்பதை பார்க்கும் போது அவனுக்கு மனதில் ஒரு ரணம் தோன்றும். இதனாலேயே அவன் கூட படித்த யாருடனும் நெருங்கிய தொடர்பில் இருப்பதில்லை. 

தன் அறைக்கு வந்த ஜீவா அங்கிருந்த பெட்டி ஒன்றில் வைக்கப்படிருந்த கோப்பைகள்,  பதக்கங்கள் என்பவற்றை தன் கைகளில் எடுத்து பார்த்துக்கொண்டிருந்தான். தான் படிக்கும் காலங்களில் விளையாட்டு மற்றும் இசையில் காட்டிய ஆர்வத்தை படிப்பில் காட்டியிருந்தால் இந்நேரத்துக்கு நல்ல ஒரு வேலை கிடைத்து இந்த நரக வாழ்க்கையில் இருந்து விடுபட்டு இருக்க முடியும் என்று தோன்றியது. கடவுளின் கணக்குதான் நம் யாருக்கும் தெரியாதே. அந்த கணக்கு தெரிந்தால்தான் நாம் கடவுளுக்கு நிகராக நம்மை நினைத்துவிடுவோம். அன்றைய இரவும் தூங்கா இரவாக மாறிப்போனது ஜீவாவுக்கு.
[+] 4 users Like me.you's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
My dear writer

Under age is not allowed

Pls edit it
 horseride  Cheeta    
Like Reply
#3
' ஹாலி ஏஞ்சல்ஸ்' பாடசாலை உங்களை அன்புடன் வரவேற்கின்றது' என்ற வரவேற்பு பலகையுடன் அந்த பாடசாலை தனது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களுடன் பிரம்மாண்டமாக நின்றது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு, இதுவரையில் எந்த சேதமோ அல்லது பாரிய பராமரிப்பு செலவுகள் எதுவுமே ஏற்படவில்லை. ஆனால் சுதந்திரத்தின் பின் கட்டப்பட்ட எல்லா கட்டிடங்களுமே பாதி இடிந்தும் அல்லது பாரிய பராமரிப்பு வேலைகளுக்கும் உட்பட்டது என்பது நம் தலைவர்கள் நம் சமூகத்துக்கு ஆற்றிய பங்கை பறைசாற்றியது.


பத்தாம் வகுப்பு மாணவர்கள் கணித பாட வகுப்பு முடித்து மிகவும் கலைப்புடன் காணப்பட்டனர். பாடசாலை முடிய இன்னும் இரண்டு பாடங்களே இருந்தன. ஆனாலும் அந்த வகுப்பில் ஒரு புத்துனர்ச்சி ஆரம்பமாக தொடங்கியது. காரணம் அடுத்த பாடம் தமிழ் இலக்கியம். பெரும்பான்மையான மாணவர்களுக்கு வேப்பங்காய் போல இருக்கும் தமிழ் இலக்கியம் இந்த பாடசாலையில் மாத்திரம் வேதம் படிப்பது போலாகும். அதற்கு முக்கிய காரணம் சாரதா.

" ஹேய் சைலண்ட் சைலண்ட். சாரதா மிஸ் வர்றாங்க. எல்லோரும் அமைதியா இருங்க" என்று வகுப்பின் மாணவத் தலைவி எல்லோருக்கும் எச்சரிக்கை விடுத்தாள். அவள் கூறியதும்தான் தாமதம் வகுப்பில் இருந்த அனைத்து மாணவ மாணவியரும் தங்கள் இருக்கையில் அமர்ந்து தங்கள் கைகளில் தமிழ் இலக்கிய புத்தகத்தை **, பகவத் கீதை, பைபிள் போல பய பக்தியுடன் வைத்திருந்தனர்.

யார் இந்த சாரதா? ஐம்பது வயதை அடைந்த தலைமை ஆசிரியரா? இல்லை எல்லா மாணவர்களையும் கண்டிப்புடன் நடத்தும் ஆசிரியையா?

அடர் சிவப்பு நிற ஜாக்கடுக்கு, பச்சை நிற புடவையில் மெரூன் நிறத்தில் பூ வேலைப்பாடு செய்த சேலை அணிந்து, இடை வரை இருக்கும் கூந்தலை அப்படியே கொண்டை இட்டு, கண்களுக்கு லேசான காஜல் பூசி, உதட்டுக்கு உதட்டுச்சாயம் பூசியுள்ளாரா இல்லையா என்று விவாதம் நடத்தும் அளவுக்கு உதட்டு சாயமும் இட்டு பத்தாவது வகுப்பு வந்தார் அந்த சாரதா டீச்சர்.

வகுப்புக்குள் வந்ததுமே எல்லோரும் " காலை வணக்கம் மிஸ்" என்று கூற எல்லோரின் வரவேற்புக்கும் புன்னகையுடன் சேர்த்த ஒரு வணக்கத்தை வைத்தால் அழகு பதுமை சாரதா. அழகுப்பதுமையா? ஆம் அழகுப்பதுமைதான். அவள் அழகு என்பது ஆரவாரம் இல்லாத அமைதியான ஒரு தெளிந்த நீரோடை. அந்த நீரோடையின் அமைதியில் ஒரு தடவை லயித்தவர்கள் அங்கிருந்த நகர விரும்பமாட்டார்கள்.

தமிழ் இலக்கிய ஆசிரியையான அவளை வைத்து அழகுக்கே இலக்கனம் எழுதலாம்.

பத்தாவது படிக்கும் மாணவர்கள் வெறுக்கும் பாடங்களில் ஒன்று தமிழ் இலக்கியம். அதையே இந்த மாணவர்கள் இவ்வளவு பயபக்தியுடன் படிக்க காரணம், சாரதா பழகிய சில நொடிகளிலேயே பல வருட பிணைப்பை ஏற்படுத்தும் ஆற்றல் உள்ளவள். ஆண் மாணவர்கள் மட்டுமன்றி பெண் மாணவிகளும் அவரின் நெருக்கத்துக்குரிய மாணவர்களாகிட வேண்டும் என்று தவம் இருக்கின்றனர்.

கண்களை உருட்டி அவள் பேசும் அழகுக்கு, இவள் இலக்கியம் படிப்பிக்கின்றாலா அல்லது கண்களால் இசை கச்சேரி நடத்துகின்றாலா என்ற சந்தேகம் மனதில் எழாமல் விட்டால்தான் அதிசயம். சிரிக்காமலேயே அவள் கன்னத்தில் குழி விழும். அந்த குழி படுகுழி அல்ல.

எல்லா மலரினிலும் ஒரு வாசம் இருக்கும். ஆனால் மகரந்தம் தாங்கும் மலரில் தனி ஒரு வாசம். எல்லா ஆசிரியருக்கும் ஒரு தாயின் குனம் இருக்கும். சாராதாவின் குனமும் மகரந்த மலரின் வாசம் போல தனியாக தெரியும். அதை உணர்ந்தவர் அதில் இருந்து வெளிவர விரும்பமாட்டார்கள்.

அந்த பாடசாலைக்கே செண்டர் ஆப் அட்றாக்சன் சாரதாதான். அவளின் உடைகளில் அவள் காட்டும் நளினமும், அவள் பேச்சில் இருக்கும் தெளிந்த நேர்மையும் ஆசிரியர்கள் மத்தியில் அவளுக்கு ஒரு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. அதனாலாயே அந்த பாடசாலையின் எந்த ஒரு விடயமாக இருந்தாலும் சாரதாவின் அங்கம் அதில் கண்டிப்பாக இருக்கும். ஏதும் போட்டிக்கு அவர்கள் பாடசாலை சென்றால் கூட அதற்கு பொறுப்பாக அவளே செல்வாள். ஒரு சிலர் அறிவை காட்டி தங்களின் இடத்தை உறுதி செய்து கொள்வார்கள். அறிவுடன் சேர்த்து அழகும் இருக்கும் சாரதா சென்றால் அந்த போட்டி நிகழ்வுக்கு வந்த எல்லோருமே சாராதாவையே பார்த்துக்கொண்டிருப்பார்கள். 

தனது வென்சிற்பி பற்கலை காட்டி புன்னகைத்தவள் " என்ன எல்லோரும் ரொம்ப டயர்டா இருக்கீங்க போல இருக்கு. வேணும்னா இன்னைக்கு கிளாஸ் எடுக்காம விடட்டுமா?" என்று கேட்க வகுப்பில் இருந்த எல்லா மாணவர்களும் ஒருமித்த குரலில்  " இல்லை மிஸ், இன்னைக்கு படிக்கலாம்" என்று கூறினர். வகுப்பில் இருந்த ஒரு மாணவன் மட்டும் " மிஸ், இன்னைக்கு சினிமா பாட்டு பத்தி படிக்கலாமா?" என்று கேட்க அவளது முகத்தில் ஒரு புன்னகை தவழ்ந்தது.

அதென்ன்ன இலக்கிய வகுப்பில் சினிமா பாடல் என்று குழப்பமாக உள்ளதா. நறுமுகையே, கண்ணா மூச்சி ஏனடா, மலர்களை கேட்டேன் வனமே தந்தனை, நல்லை அல்லை போன்ற பாடல்கள் எல்லாம் தமிழ் இலக்கியத்துக்குள் வரும் என்பது நம்மில் பல பேருக்கு தெரிவதில்லை. சாரதா எப்போதுமே மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுபவர். மதியத்துக்கு மேல் இருக்கும் வகுப்பு என்றால் இப்படியான சுவாரசியம் மிக்க வகையில் வகுப்பை எடுத்து மாணவர்களின் கவனம் பாடத்தில் இருந்து திசை திரும்பாமல் பார்த்துக்கொள்வார். இன்று கடைசிக்கு முதல் நேர பாடம் என்பதால் அவளுக்கு இந்த பாடல் வகுப்புத்தான் சரியாக பொருந்தும் என்று தோன்றியது.

இன்றைய பாடமாக ' கண்ணாமூச்சி ஏனடா' பாடலையும் அந்த பாடலுக்கான பொருளும், பாரதியை பற்றியும், பாரதி கண்ணம்மா என் காதலியை எப்படி எழுதினார் என்பது பற்றி பல சுவாரசியமான தகவல்களை சாரதா தனக்கே உரிய அழகிய பாணியில் சொல்லிக்கொண்டிருந்தார். பாடம் மிகவும் கலகலப்பாக போய்கொண்டிருந்தது. 

" மிஸ் உங்கள பிரின்ஸ்பால் மீட்டிங்க் ரூமுக்கு வர சொன்னாரு" என்று ப்யூன் கூற சாரதாவும் வகுப்பை பத்து நிமிடங்கள் முன்னராகவே முடித்துக்கொண்டாள். பொதுவாக ஆசிரியர்கள் தங்களது பாடத்துக்கு வராமல் போனாலோ அல்லது வழமையான நேரதை விட முன்னதாக முடித்துக்கொண்டாலோ மாணவர்களுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும். ஆனால் சாரதாவின் வகுப்பில் அது எதிர்மாற்றமாக இருக்கும். சாரதாவின் பாடசாலைக்கு வரவில்லை என்றாலோ அல்லது ஏதாவது காரணத்துக்காக அவரின் பாட நேரத்தின் அளவு குறைந்தாலோ மாணவர்களுக்கு மிகவும் கவலையாகி போகும். மற்ற ஆசிரியர்கள் எப்போதும் இவளை கேலி செய்வது உண்டு. அதிலும் குறிப்பாக வித்யா. " என்ன சாரதா, உன் கிளாஸ்னு சொன்னா மட்டும் பசங்க மட்டுமில்லாம பொண்ணுங்க கூட ரொம்ப எக்சைட் ஆகிடுறாங்க. டீச்சர் கொஞ்சம் அழகா இருந்தா ஆம்பள பசங்க சந்தோசப்படுறது நியாயம். அதுக்காக பொம்பள பிள்ளைங்களும் ஆர்வமா இருக்குறதுலாம் ரொம்ப ஓவர்பா" என்று அடிக்கடி கலாய்ப்பாள். இப்படியான கேலிகளை நேரடியாக தொடுப்பவள் வித்யா ஒருத்திதான்.

ஆறு வருடங்களின் முன் சாரதாவும் வித்யாவும் ஒரே நேரத்திலேயே இந்த பாடசாலையில் வேலைக்கு சேர்ந்தனர். பழகிய கொஞ்ச நாட்களிலேயே சாரதாவும் வித்யாவும் மிகவும் நெருங்கிய தோழிகள் ஆகினர். சாரதா தமிழ் இலக்கியம் என்றால் வித்யா கணிதம். வித்யா மிகவும் கெட்டிக்காரிதான். ஆனால் கோபம் அதிகம் வரும். கோபம் அதிகம் உள்ள ஆசிரியர்கள் என்றாலே மாணவர்களுக்கு வேப்பங்கனிதானே.  

" சார் நீங்க கூப்பிட்டிங்கன்னு ப்யூன் சொன்னாங்க. என்ன விசயம் சார்" என்று கேட்க பிரின்ஸிபல் அவளை கதிரையில் அமருமாறு சைகை செய்தார். " சாரதா, நம்ம ஸ்கூலுக்கு PT பாடத்துக்கு ஆள் தேவைன்னு விளம்பரம் கொடுத்திருந்தோம். ஒரு வேலைக்கு நூத்தி நாப்பது விண்ணப்பங்கள் வந்திருக்கு. இதுல இருந்து ஐந்து பேர மட்டும் கடைசி இண்டர்வியூவுக்கு கூப்பிடலாம்னு இருக்கேன். அதனால பைனல் காண்டிடேட்ஸ முடிவு பண்ற வேலைய உங்ககிட்ட கொடுக்கலாம்னு இருக்கேன். வேணும்னா நீங்க வித்யாவோட ஹெல்ப்பையும் எடுத்துக்கோங்க. ஆனா எனக்கு பைனல் லிஸ்ட் அடுத்த வாரமே வேணும்" என்று கூற அவளும் காண்டிடேட்ஸின் ரெஸ்யூமி அடங்கிய fபைலை வாங்க்கிக்கொண்டு நடக்க ஒரு ரெஸ்யூமி மட்டும் கீழே விழுந்தது. அதை கையில் எடுத்து பார்க்க " ஜீவானந்தம்" என்றிருந்தது.
[+] 5 users Like me.you's post
Like Reply
#4
Very good
Like Reply
#5
(07-02-2026, 02:46 PM)Kartikjessie Wrote: Very good

Thank u for the reply brother. I will complete this story even if i dnt have any comments.
Like Reply
#6
3

" விடாத, விடாத ஜனனி. gurad அ கீழ இறக்காத. எப்போமே டிபன்சிவ்ல இரு. இன்னும் முப்பது செக்கண்ட்தான்" என்று கோச் கிக்பாக்சிங்க் ரிங்கில் ஆக்ரோசமாக எதிராளியை பதம்பார்த்துக்கொண்டிருக்கும் ஜனனியை நோக்கி கத்திக்கொண்டிருந்தார். ஜனனிக்கும் எதிராளியான சனாவிற்கும் இரண்டு புள்ளி மட்டுமே வித்தியாசத்தில் இருந்தது. கடைசி ஐந்து வினாடிகளில் சனா ஜனனியின் முகத்தில் குத்து  விட போட்டி டிராவில் முடிந்தது. நடுவர் இருவரின் கைகளையும் பிடித்து போட்டி சமநிலையில் முடிவுற்றதாக கூற இருவருமே ஏமாற்றம் அடைந்த முகத்தோடு ரிங்கை விட்டு வெளியில் வந்தனர்.

ஜனனி கீழே வந்ததும் கோச் அவளை பார்த்து காச் மூச் என கத்தினார். " நீ என்ன பெரிய மேரி கோம் ஆ. உங்கிட்ட எத்தனை வாட்டி சொல்லிருக்கேன் உன்னோடா guard அ நீ கீழ இறக்காம ஆடனும்னு. ரொம்ப சுலபமா வெல்ல வேண்டிய போட்டிய நீ தோற்பது இதோடா சேர்த்தா  நாலு" என்று கூற ஜனனி அமைதியாக கோச்சை பார்த்தவள் " கோச் இந்த மேட்ச்ல நான் தோற்கல்ல. மேட்ச் டிரால முடிஞ்சிருக்கு" என்று பதில் கூற அவருக்கு கோபம் தலைக்கேறியது. " இது மட்டும் நல்ல வக்கனையா பேசு" என்றவர் அங்கிருந்த அவர்களின் உடமைகளை தங்களது பைகளில் எடுத்து வைக்க தொடங்கினர்.

இருவரும் ஹோட்டல் வந்ததும் ஜனனியை கைகளை பிடித்த கோச் " இங்க பாரு ஜனனி, இந்த வருசம் நீ எப்படியும் சாம்பியன்சிப் வாங்கிடனும். நான் உங்கம்மாகிட்ட சாலஞ்ச் பண்ணியிருக்கேன். நீ இப்படி பொறுப்பில்லாம ஆடினா எப்படிமா. உனக்கு நல்ல திறமை இருக்கு. உனக்கு ஒரு நல்ல ஸ்பான்சர் கிடைச்சா நீ இண்டர்நேஷனர் மேட்ச்ல விளையாட முடியும். அதுக்காக நான் எவ்வளவு கஷ்டப்படுறேன்னு தெரியுதா. நீ ஏம்மா இப்படி இருக்க. ப்ளீஸ்டா. உன்ன என் பொண்ணு மாதிரிதானே பார்த்துக்கிறேன். நீ என்னடான்னா இப்படி இருக்க" என்று கூற ஜனனிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

" கோச் என்ன எப்படி வேணா திட்டுங்க. ஆனா நான் உங்க பொண்ணு மாதிரி . நீங்க எனக்கு அப்பா மாதிரி அப்படின்னுலாம் பேசினீங்க எனக்கு செம்ம கோபம் வரும். நீங்க எனக்கு கோச் அது மட்டும்தான். எங்கம்மா உங்கள ரொம்ப நம்புறாங்க. அதுக்காக நான் உங்களுக்கு பொண்ணுன்னு ஆகிட முடியாது" என்று கண்கள் சிவக்க கூறினால்.

" சாரி ஜனனி, சும்மா ஒரு பேச்சுக்குத்தான் அப்படி கூறினேன். இனி அப்படி சொல்லல. சரி நீ உன் ரூமுக்கு போ. அப்புறம் அடுத்த மேட்ச்ல நீ ஜெயிக்கலன்னா நான் இங்கேயிருந்து போயிடுவேன். அப்புறமா நீ கோச் இல்லாம தனியாதான் ஆடனும். உனக்கே தெரியும், கோச் இல்லாம உன்ன ரிங்க்ல விடமாட்டாங்க. அப்புறம் நீ எக்சாமுக்கு படிக்க வேண்டி இருக்கும்" என்று கூற ஜனனி புன்னகைத்தால்.

" ஐய்யய்யோ எக்சாமா? நான் எப்படி சரி அடுத்த மேட்ச்ல வின் பண்ணிடுறேன். மதர் ப்ராமிஸ்" என்ற பதினான்கு வயது மங்கையான ஜனனியை பார்த்து புன்னகைத்தார். " சரிடா நீ உன் ரூமுக்கு போ. மார்னிங்க் ப்ராக்டிஸ்ல மீட் பண்ண்லாம்" என்றார்.

அறைக்குள் வந்த ஜனனி தனது மொபைலை எடுத்து ஆன் செய்ய வாட்ஸப்பில் இருந்து பல மெசேஜ்கள் வந்த வண்ணம் இருந்தது. அதை எல்லாம் ஒரு புறம் ஒதுக்கிவிட்டது தனது தாய்க்கு அழைப்பு எடுத்தால்.

" எப்படி இருக்க ஜனனி. இன்னைக்கு மேட்ச் என்னாச்சு" என்று ஆவலாக கேட்கும் தன் தாயை எண்ணி வியந்தாள். தான் படிப்பில் கவனம் செலுத்தாமல் இப்படி கிக் பாக்சிங்க், மியூசிக் என்று அலைவது தன் தாய்க்கு பிடிக்காது என்பது தெரியும். ஆனால் அவர் விரும்பியது போல ஜனனியால் பாடங்களில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் ஜனனி ஒன்றும் மக்கு கிடையாது. ஆவ்ரேஜ் ஆக பாஸ் செய்யும் ஒரு சாதரண மாணவி. " இன்னைக்கு மேட்ச் டிரால முடிஞ்சிடிச்சிமா. கடைசில செக்கன்ல டிரா பண்ணிட்டா" என்று கூற எதிர்முனையில் அவளின் தாய் அமைதியாக இருந்தால். 

" ஆப்பொனண்ட் யாரு சனாவா?" 

" ஆமாமா"

" இங்க பாரு ஜனனி, உனக்கும் அவளுக்கும் அடிக்கடி ஏதாச்சும் ஒரு வகையில மோதல் வந்துகிட்டே இருக்கு. இது எங்க போய் முடியும்னு தெரியல. பார்த்து கவனமா நடந்துக்க.நாளைக்கு உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஏதும் ப்ராப்ளம் வந்திச்சின்னா நீ ரொம்ப உடைஞ்சி போயிடுவ" என்று கூற மறுமுனையில் ஜனனி சிரித்தால்.

" நீ எங்க உடைஞ்சி போக போற. சனாதான் பாவம், அவதான் எங்கிட்ட வந்து அழுதுகிட்டு இருக்க போறா. சரிடா. ரொம்ப ஸ்ட்றைன் பண்ணிக்காத ரெஸ்ட் எடு. வரும் போது ஜெயிச்சிட்டு வா. உன்னால முடியலன்னா சனாவ ஜெயிக்க வெச்சிட்டு வா" என்றுகூறனார்.

" சரிமா பாய், நாளைக்கு பேசுறேன்" என்று காலை கட் செய்தால்.

சனாவின் குடும்பம் மிகவும் வச்தியானவர்கள். வரக்கூடிய ஐந்து தலைமுறைக்கு எந்த வேலையும் செய்யாமல் செலவு செய்ய போதுமான பணம் அவர்களிடம் இருந்தது. சனாவுக்கு மிகவும் பிடித்த இடம் பாடசாலைதான். ஏனென்றால் வீட்டிற்கு சென்றால் அவள் தனி மரமாகி விடுவாள். அவளது பெற்றோர் பிசினஸ், பிசினஸ் என்று அதன் பின்னாலேயே ஓடிக்கொண்டிருப்பார்கள். அதனால் அவள் ஆறுதல் தேடும் ஒரே இடம் பாடசாலை. சனா பாடசாலையில் விளையாட்டு, அறிவு சார்ந்த போட்டிகளில் கலந்து கொள்வது மட்டுமல்லாது படிப்பிலும் புலி. அவர்களின் வகுப்பில் அவள்தான் முதல் மாணவி. அதனாலேயே அவளுக்கு அங்கு எல்லா ஆசிரியர்கள் மத்தியிலும் செல்ல பிள்ளை போல வலம் வருவாள். சனாவும், ஜனனியும் இந்த வருடத்துக்கான பதினைந்து வயதுக்கு உட்பட்ட கிக்பாக்சிங் சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ள வந்துள்ளனர். ஜனனிக்கு அவர்கள் பாடசாலை PT மாஸ்டர்தான் கோச். ஆனால் சனாவின் வசதிக்கு அவர்கள் வெளியில் இருந்து ஒரு கோச்சை ஏற்பாடு செய்திருந்தனர். ஜனனியையும் தன்னுடன் சேர்ந்து பயிற்சி பெற சனா எவ்வளவு முயன்றும் அது கைகூடவில்லை. 

காராணம் ஜனனிக்கு சனா மீது பொறாமை. தாயின் பாசம் முழுவதும் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என நினைக்கும் சாதாரண ஒரு மகள் அவள். சனா எது செய்தாலும் அவளுடன் ஜனனியை அவள் தாய் ஒப்பிடமாட்டார். ஆனால் சனாவின் வெற்றிகளை அவர் மிகைப்படுத்தி கூறுவது அவளுக்கு எரிச்சலைக் கொடுக்கும். சில நேரங்களில் கிக் பாக்சிங்கில் ஜனனி சனாவை தோற்கடிப்பால். ஆனால் அதன் பிறகு வரும் பரீட்சைகளில் அவள் செய்யும் சாகசங்கள் ஜனனியின் வெற்றியை மழுங்கடிக்கச் செய்துவிடும். ஆனால் மியூசிக் என்று வந்துவிட்டால் அதில் ஜனனியை வெற்றி கொள்ள அவர்கள் பாடசாலையிலேயே ஆள் கிடையாது. இவை எல்லாம் இப்படி இருக்க சனாவும், ஜனனியும் உயிர்த்தோழிகள். அவர்கள் இருவருக்கும் இடையில் நெருங்கிய ஒரு அன்னியோன்னியம் இருக்கும். தங்களுக்குள் மூன்றாவது நபர் வருவதை எப்போதும் அவர்கள் விரும்பமாட்டார்கள். ஆனால் என்ன, அவர்களுக்குள் எப்போதும் புகைச்சல் வர காரணம் ஜனனியின் தாய் தான்.

" ஏய் ஜனனி, என்ன பண்ணி வெச்சிருக்க நீ. ஆமா உன் கோச் உனக்கு ஒழுங்க சொல்லிக்கொடுக்காரா இல்லையா? உன்ன யாரு லாஸ்ட் செக்கண்ட்ல உன் கார்ட்ட கீழ இறக்க சொன்னது. ஒரு ஐந்து செக்கண்ட் நீ டிபன்சிவ்வா ஆடி இருந்தேன்னா இன்னைக்கு நீதாண்டி வின்னர்" என்று தனக்கு கால் செய்து திட்டும் தன் தோழி சனாவை நினைத்து அவளுக்கு சிரிப்பு வராமல் இல்லை. இன்று ஜனனி வென்றிருந்தால் சனா தோற்றிருப்பால். ஆனால் அதை எல்லாம் மனதில் நினைக்காமல் சனா இப்படி பேசுவது அவள் தோழி மீதான அன்பை அதிகரிக்கச் செய்தது.

" இன்னும் ஒரு இரண்டு பாயிண்ட் அதிகமா எடுக்கலாம்னு நினைச்சுதான் டிபன்சிவ்ல இருந்து ஒஃபன்சிவ்வா அட்டாக் செய்யலாம்னு நினைச்சேன். ஆனா அதுக்குள்ள நீ ஸ்கோர்ர லெவல் பண்ணிட்ட. பரவாயில்லை விடு, இது ப்ராக்டீஸ்தானே. ஆனா டோர்னமண்ட்ல இப்படி அசால்டா இருப்பேன்னு நினைச்சிடாத. எதுக்கும் உங்கப்பாட்ட சொல்லி உன் முகத்துக்கு ஒரு இன்சூரன்ஸ் பாலிசி போட்டிரு, ஷேன் வார்ன் அவரு விரலுக்கு இன்சூரன்ஸ் போட்டது போல" என்று கூற மறுமுனையில் சனா கெக்கே பிக்கேன்னு சிரித்தால். 

" அம்மா கால் பண்ணாங்களா? நான் கால் பண்ணேன் கால எடுக்கவே இல்லை" என்று கூற ஜனனிக்கு பெருமையாக இருந்தது. " அம்மா கூட பேசினேன் சனா. மேட்ச்ச பத்தி கேட்டாங்க. ஜெயிச்சிட்டு வான்னு சொன்னாங்க" என்று கூற சனா, " உங்கம்மா என்ன பத்தி ஏதும் கேட்கல்லயா" என்று கவலையாக கேட்டால். இந்த ஒரு விடயத்தில் தன் தோழி கவலைப்பட்டால் கூட பரவாயில்லை என நினைத்தவள் " இல்லடி உன்ன பத்தி எதுவுமே கேட்கல, கேட்டா சொல்ரேன்" என்று கூற மறுமினையில் காலை கட் செய்தால்.
[+] 1 user Likes me.you's post
Like Reply
#7
4

" ரெஜிஸ்டர் போஸ்ட்" என்று தபால்காரர் கடிதத்தை ஜீவாவிடம் கொடுக்க அவன் போஸ்ட் ரெஜிஸ்டரில் கையெழுத்து இட்டு கவரை வாங்கியவன் ஆச்சரியமானான். தான் எந்த ஒரு வேலைக்கும் அப்ளை செய்யாதிருக்க, வேலைக்கான நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு வந்திருந்ததுதான் அந்த ஆச்சரியத்துக்கு காரணம். நேராக தன் தங்கையின் அறைக்கு சென்றவன் " ஆனந்தி இந்த போஸ்ட்டுக்கு நீயா அப்ளை பண்ண" என்று கேட்க அவள், " ஆமான்னா நாந்தான் பண்ணேன்" என்றால்.  

அவனின் முகத்தை ஆராயந்தவள் அதில் கலவையான உணர்ச்சிகளை கண்டால். " ஏண்ணா உனக்கு இந்த PT டீச்சர் வேலை பிடிக்கல்லயா?"  என்று கேட்டால். " பிடிக்காம எல்லாம் இல்ல. எனிவே தாங்க்ஸ்" என்றவன் தன் அறைக்கு உடனே சென்றுவிட்டான். அறைக்குள் வந்தவனால எவ்வளவு கட்டுப்படுத்தியும் அவன் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை தடை செய்ய முடியவில்லை. தன் தாய் இறந்த பிறகு அவன் தாய்க்கு தாயாக, தோழியாக நினைத்து எல்லாம் ஆனந்தியைத்தான். அதுவும் அவன் செய்த ஒரு தவறால் அவளிடம் நெருங்கி பழக முடியாமல் கடந்த சில வருடமாக தனிமையிலேயே இருக்கின்றான். சித்திக்கு அவன் மேல் மட்டும் என்ன கோபம் என்பது தெரியவில்லை. அவன் செய்த தவறுதான் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள அவன் மனது மறுத்தது. மாற்றான் தாரத்துக்கு பிள்ளைகள் என்பதனால் என்றால் அவர் ஆனந்தியையும் சங்கவியையும் ஒரு நாளும் பிரித்துப்பார்த்தது கிடையாது. என்மேல் மட்டும் ஏன் இந்த வெறுப்பு?அவனிடம் பதில் இல்லை,. அதை கேட்கும் தைரியமும் அவனிடம் இல்லை.

' ஹாலி ஏஞ்சல்ஸ்' பாடசாலை கோவையில் இருந்தது. ஜீவாவின் ஊருக்கும் அந்த பாடசாலைக்கும் தோராயமாக ஒரு எட்டு மணி நேர ரயில் பயணம். நாளை மறுதினம்தான் அவனுக்கு நேர்முகத்தேர்வு. ஆனால் அவன் இன்றே பயணம் செய்ய தீர்மானித்தான். அவன் கையில் கொஞ்சம் பணம் இருந்தது.  அவன் தந்தை அவனது செலவுக்கு கொடுக்கும் பணத்தில் அவன் சேமித்து வைத்திருந்ததுதான் அந்த பணம். வீட்டில் அவனுக்கு பணக் கஷ்டம் என்றுமே இருந்ததில்லை.

பகல் உணவு உண்ண எல்லோரும் மேசையில் அமர்ந்திருந்தனர். அன்று விடுமுறை நாள் என்பதால் முருகனும் வீட்டிலேயே இருந்தார். ஜீவாவுக்கு அப்பாவிடம் இந்த விடயத்தை எப்படி ஆரம்பிப்பது என்றுதான் புரியவில்லை. இந்த வேலைக்கு அவனின் தந்தை சம்மதிக்கவும் வாய்ப்பு உண்டு. சம்மதிக்காமல் விடவும் வாய்ப்பு உண்டு. அவன் மெதுவாக பேச்சை ஆரம்பித்தான். " அப்பா எனக்கு கோயம்புத்தூர்ல இருக்குற ஒரு ஸ்கூல்ல இருந்து டீச்சர் வேலைக்கு இண்டர்வியூ கால் செஞ்சிருக்காங்க. நான் போகட்டுமாப்பா" என்று கேட்க அவர் நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தார். பின்பு ஏதோ யோசனை செய்தவர் போல " கோயம்புத்தூர் ரொம்ப தூரமாச்சே. பக்கத்துலன்னா டெய்லி போயிட்டு வரலாம். இப்படி ரொம்ப தூரம்னா போயிட்டு வர்றதுக்கு ரொம்ப கஷ்ட்மா இருக்குமே" என்று கூறுவதை வள்ளி கேட்டுக்கொண்டிருந்தார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை 
 உடனே வள்ளி, " என்னங்க பேசுறீங்க. அவனவன் பாரீனுக்கு போய் வேலை பண்றானுங்க. இது இங்க பக்கத்துல இருக்குற கோயம்புத்தூர்தானே. ஜீவா போயிட்டு வரட்டும். அவனுக்கும் வந்திருக்குற முதல் இண்டர்வியூ இது. அதை நம்ம ஸ்பாயில் பண்ண வேண்டாம். அவன் முடிஞ்சா மாசத்துக்கு ஒரு தடவையாச்சும் வீட்டுக்கு வரட்டும். இல்ல நம்ம எல்லோரையும் திடீர்னு அவனுக்கு பார்க்கனும்னு தோனிச்சின்னா டிரெயின் ஏறி வரட்டும்" என்றார்.

" நீ சொல்ரதும் சரிதான் வள்ளி. சரி, ஜீவா அந்த இண்டர்வியூவுக்கு போகட்டும். ஆனா அவனுக்கு பிடிக்கலன்னா உடனே வந்துடட்டும்" என்று கூற ஜீவாவுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. ஆனால் இந்த சந்தோசம் எல்லாவற்றையும் விட அவனுக்கு அந்த வேலை கிடைப்பதுதான் மிகப்பெரிய சந்தோசம் என்பதும் தெரியும்.

இங்கு ' ஹாலி ஏஞ்சல்ஸ்' இல்..

" ஏய் சாரு, பைய்யன் செம்ம ஸ்மார்ட்டா இருக்கான்ல. என்ன வயசுதான் என்ன விட இரண்டு அதிகமா இருக்கு. இவன் ப்ரஷ்ஷா இருக்குற பொண்ணுதான் வேணும்னு சொல்வானா, இல்லைன்னா என்ன மாதிரி எக்ஸ்பீரியன்ஸ் ஆளு ஓக்கேன்னு சொல்வானா?" என்று கேட்க சாரதாவுக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்தது.

" வித்யா சும்மா சும்மா என்ன கடுப்பேத்தாதா. முதல்ல நீ என்ன  சாருன்னு கூப்பிடுறத நிறுத்துன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன். அதான் என் பேரு அழகா சாரதான்னு இருக்குள்ள. எதுக்கு என் பேர மாத்தி கூப்பிடுற. அப்புறம் நம்ம டீச்சர்ஸ். காலேஜ் பொண்ணுங்க கிடையாது. இப்படி பேசிக்கிறதுக்கு. we are matured womens. சோ ப்ளீஸ் பிஹேவ் யுவர்செல்ப். நாளைக்கே நான் அந்த பையன செலக்ட் பண்ணிட்டேன்னா எந்த முகத்த வெச்சிக்கிட்டு அவன் கூட பேசுவ. யோசிக்க மாட்டியா?" என்று கோபத்தில் தொடங்கி அக்கறையாக முடித்தால்.

வித்யா சாரதாவின் கைகளுக்குள் தன் கையை வைத்து அழுத்திக்கொண்டவள் " முடியலடி. என் லைப்ல மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டங்கள். வசதிக்கு எந்த குறைச்சலும் இல்ல. ஆனா என் வாழ்க்கை எப்படி ஆயிடிச்சி பார்த்தியா. வாழ்க்கைய இழந்துட்டு நிற்கிற வயசா எனக்கு. என்ன பத்தி தெரிஞ்சவன் எவனா இருந்தாலும் ஒரு மாதிரிதான் என்ன பார்க்குறானுங்க. நம்ம ஸ்கூல் பிரின்சிபல் மட்டும்தான் கொஞ்சம் கண்ணியமா இருக்காறு. ஒரு வேலை அவருக்கு வயசானதால இருக்கலாம். மத்த எல்லோரும் என்ன பார்க்குற விதமே சரியில்ல சாரதா. உன் கூட இருக்குறப்போ மட்டும்தான் கொஞ்சம் ரிலாக்ஸ்ட்டா பீல் ஆகுது. நீயும் இப்படி பேசினா எப்படி சாரதா. நான் என்ன மெஷினா? மெஷினுக்கு கூட சில நேரங்கள்ள மெயிண்டனன்ஸ், அப்டேட் எல்லாம் பண்ண வேண்டியிருக்கும். என் வாழ்க்கையி இது எதுவுமே இல்லாம ஓடிக்கிட்டு இருக்கு. இந்த மெஷின் ஒரு நாளைக்கு உடைஞ்சி போகும். அப்போ நீங்க எல்லோரும் இந்த மெஷின நினைச்சி அழுவீங்க" என்று கூற சாரதா ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றால்.

வித்யா மனதில் இருக்கும் கவலைகள் சாரதாவுக்கு தெரியாமல் இல்லை. ஆனால அவள் மனது இந்தளவுக்கு அழுத்தத்தில் இருக்கும் என நினைக்கவில்லை. சாரதா எல்லோரிடலும் சகஜமாக பழகுவாள். ஆனால் அவளுக்கு வித்யா கொஞ்சம் அல்ல ரொம்பவே ஸ்பெஷல். இருவரும் ஒருவருக்கு ஒருவர் எப்பொழுதும் ஆதரவாக இருப்பார்கள். வித்யா கொஞ்சம் ஓப்பன் டைப். ஆனால் சாரதா அப்படி கிடையாது. 

" சரிடி ரொம்ப பீல் பண்ணாத. பிரின்சிபல் சார் என்னையே இண்டர்வியூ வெச்சி யார செலக்ட் பண்ணனும்னு ரெக்கமண்ட் பண்ண சொன்னாரு. பைனல் இண்டர்வியூ அவரு கூட இருக்கும்னு சொன்னாரு. அந்த இண்டர்வுயூ வெறும் கண்துடைப்புத்தான். வேணும்னா நான் உன் ஆள, அதான் இந்த ஜீவானந்தத்த போங்காட்டம் ஆடி செலக்ட் பண்ணிடட்டா" என்று கண்ணடித்து கேட்க வித்யா சிரித்தால். அவள் முகத்தில் ஒரு குறும்புடன் கூடிய புன்னகை தவழ்ந்தது. என்னதான் சாரதா இப்படி தன்னை சமாதானம் செய்ய கூறினாலும் இண்டர்வியூ ப்ராசஸில் அவள் கொஞ்சம் கூட ஏமாற்று வேலை செய்ய மாட்டால் என்பது வித்யாவுக்கு தெரியும். சாரதாவுக்கு எப்போதும் நேரர்மை முக்கியம்.

" நீ மட்டும் இவன செலக்ட் பண்ணு, நான் உனக்கு என் ஒரு மாச சம்பளத்துல உனக்கு டிரீட் வைக்கிறேன்" என்றால். அவள் அப்போது உணரவில்லை அவளின் ஒரு மாத சம்பளம் யாரோ ஒரு ஹோட்டலுக்கு தாரை வார்க்கப்படப் போகின்றது என்று.

" ஹேய் வாக்கு கொடுத்துட்டு அப்புறம் மீற கூடாது. அப்புறம் கம்மியான ரேட்ல எல்லாம் டிரீட் கொடுக்க முடியாது. முதல்ல உன் சாலரி என்னான்னு சொல்லு. அதுக்க ஏத்த மாதிரி இப்பவே நான் ஹோட்டல செலக்ட் செய்யனும். ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல ஹோட்டல்ல ஓசி சாப்பாடு சாப்பிட சான்ஸ் கிடைச்சிருக்கு, விட்றுவேனா?" என்று கூற வித்யா " நீ மட்டும் அவன செலக்ட் பண்ணு. நான் உனக்கு என்ன என்னலாம் பண்ணுவேன்னு நீயே தெரிஞ்சிக்குவ" என்றாள். இரண்டு பாடசாலை ஆசிரியைகளும் கல்லூரி பெண்கள் போல மிக நீண்ட நாட்களுக்கு பின் சந்தோசமாக சிரித்து பேசிக்கொண்டனர். மனிதனின் சிரிப்பும் அழுகையுமே அவனுக்கு மனநிம்மதியை கொடுப்பவைதானே. கவலையில் இருக்கும் போது அளுவது மனநிம்மதியையும் சந்தோசமாக இருக்கும் போது சிரிப்பது மனநிம்மதியையும் கொடுக்கும்.
[+] 2 users Like me.you's post
Like Reply
#8
Super bro
Like Reply
#9
Awesome
Like Reply
#10
அழகான சுவாரஸ்யமான கதை, ஜீவா கொடுத்து வைத்தாரா பார்ப்போம்.
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
Like Reply
#11
Thank U for
Deva
alisabir
zulfique.
சிறிய கமண்ட் கூட எனக்கு பெரிய ஒரு ஊக்கம்.

5
ஜீவாவின் தனது பயணத்துக்கு தேவையானவற்றை தயார் செய்து கொண்டிருந்தவன் ஏதோ நினைவு வர ஆனந்தியின் அறைக்குள் சென்றான். 

" ஆனந்தி"

" எண்ணன்னா. பேக்கிங்க் செய்ய ஏதும் ஹெல்ப் பண்ணனுமா"

" இல்லை. எனக்கு .. எனக்கு" என்று ஏதோ கேட்டு தடுமாற அவளுக்கு குழப்பமாக இருந்தது. " எண்ணன்னா ஏன் தயங்குற எதுவானாலும் கேளுண்ணா" என்று கூற அவன் மூச்சை இழுத்து விட்டுக்கொண்டான்.

" பசங்களுக்கு எப்போமே அம்மான்னா ரொம்ப பிடிக்கும். ஆனா எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கல. சித்திக்கு என் மேல ஆரம்பத்துல கோவம் இல்லைன்னாலும் கொஞ்சம் தூரமாத்தான் இருப்பாங்க. ஆனா நான் பண்ண ஒரு தவறால அவங்க என்ன பார்க்குற பார்வையே வேற மாதிரி ஆகிடிச்சி. பசங்களுக்கு பொதுவா அவங்க அம்மா கூட இருக்கும் போது ரொம்ப கெத்தா இருக்கும். இது எங்க அம்மாடா அப்படின்னு சொல்ற மாதிரி. ஆனா எனக்கு அந்த கொடுப்பினை இல்லாததால நான் உன்ன அந்த ஸ்தானத்துல வெச்சிதான் பார்த்திருக்கேன். நான் கேட்க போறத தயவு செய்து தப்பா புரிஞ்சிக்காத. சித்திக்கிட்டயும் சொல்லிடாத. எனக்கு உன்னோட ஒரு துப்பட்டா கிடைக்குமா. என்கிட்ட அது இருக்கும் போது நீ என்கூடவே இருக்குற மாதிரி பீல் ஆகும். அம்மாகிட்ட பேசுறதா நினைச்சி அதுக்கூட பேசிக்குவேன்" என்று கூற ஆனந்திக்கு மிகவும் கவலையாகி போனது. அண்ணன் தன்னை அம்மா ஸ்தானத்தில் வைத்தி பார்த்திருக்கின்றான் எனும் போது அவளுக்கு மிகவும் பெருமையாகவும் இருந்தது.

ஜீவா பார்ப்பதற்கு சற்று அழகாகவே இருப்பான். ஆனந்தியின் தோழிகள் வீட்டுக்கு வந்தாலோ அல்லது அவனை எங்கும் வெளியில் கண்டாலோ சைட் அடிக்காமல் விட்டதில்லை. இதை ஆனந்தியிடமே அவர்கள் வெளிப்படையாக கூவார்கள். ஒரு சில தோழிகள் வெளிப்படையாகவே அவளை நாத்தனார் என்று கூப்பிடுவதும் உண்டு. அதிலும் குறிப்பாக சுபா ஒரு படி மேலே சென்று சில நாட்களாக இந்த விடயத்தில் சீரியசாகவே இருந்தால். இப்போது எப்படி என்று தெரியவில்லை.

ஜீவா இப்படி கேட்டதும் ஆனந்தியால அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. அவள் எதுவும் பேசாமல் தனது அறைக்குள் சென்றவள் தனக்கு மிகவும் பிடித்த ஒரு துப்பட்டாவை அவனிடம் கொண்டு வந்து கொடுத்தாள். " அண்ணா பொண்ணுங்க அவங்க டிறஸ்ல எதை வேணும்னாலும் மத்தவங்களுக்கு கொடுப்பாங்க. ஆனா துப்பட்டா மட்டும் கொடுக்க மாட்டாங்க. அதுலயும்  சில துப்பட்டாங்க அவங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கும். அதை எக்காரணாம் கொண்டும் கொடுக்கவும் மாட்டாங்க, ஏன் பழசானா கூட தூக்கி வீசமாட்டாங்க. அந்த மாதிரி ஒன்னுதான்னா இது. இதுல இருந்து உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன், நீ எனக்கு எவ்வளவு முக்கியம்னு. உனக்கு அந்த வேலை கிடைச்சதுன்னா நீ அங்கேயே தங்கிடுன்னா. எப்பவாச்சும் ஒரு பண்டிகைக்கு மட்டும் வீட்டுக்கு வா. சித்தி நல்லவங்கதான். ஆனா அவங்களுக்கு உன் மேல மட்டும் ஏன் கோபம்னுதான் தெரியல. சரி ஒவ்வொருத்தங்களும் ஒவ்வொரு விதம். அவங்க நம்ம அப்பாவோட பொண்டாட்டிதானே தவிற நம்மல பெத்த அம்மா இல்லையே. சரி அதை விடு. பெஸ்ட் ஆப் லக். நீ எப்போமே சந்தோசமா இருக்கனும்" என்றவள் அவன் அருகில் வந்து நெற்றியில் முத்தமிட்டால். 

எல்லா வீடுகளிலும் அண்ணன், தங்கை, அக்கா என அன்பை வெளிப்படுத்த முத்தமிடுவது வழக்கம். ஆனால் பெரியவன் ஆனது முதல் ஜீவாக்கு அந்த அன்பு கிடைக்கவில்லை. ஆனால் இன்று ஆனந்தியின் முத்தம் அவனை ஆச்சரியப்படுத்த அவளை நிமிர்ந்து பார்த்தான். " என்ன பார்க்குற, அதான் என்ன அம்மா மாதிரின்னு சொல்லிட்டேல்ல. அம்மா இருந்திருந்தா உனக்கு செல்லமா இப்படி முத்தம் கொடுத்திருக்க மாட்டாங்களா? அதுவும் இண்டர்வியூவுக்கு போற. உன் வாழ்க்கையில இது ஒரு முக்கியமான தருணம் . அம்மாவே தந்ததா நினைச்சிக்க. ஏதும் யோசிக்காம போயி இண்டர்வியூவ சக்சஸ் பண்ணிட்டு வாண்ணா. ஆனா தயவு செஞ்சி இண்டர்வியூ அன்னைக்கு தாடிய ஷேவ் பண்ணிட்டு போ" என்று புன்னகையுடன் கூறினால்.

தன்னை விட வயதில் மிகவும் இளையவள். தான் அவளை அம்மாவாக நினைப்பதாக கூறியதும் அம்மாகவாகவே மாறி போனது அவனுக்கு பெரிய ஆச்சரியம் எதுவுமே இல்லை. கடவுளால் பெண்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட உணர்வுதான் தாய்மை. அது அவர்களுக்குள் இயற்கையாக இருக்கின்றது. இங்கும் அதுதான் நடந்தது. தன்னிடம் எப்போதும் ஜீவா அதிகம் பேசுவதில்லை என்று ஆனந்திக்கு தெரியும். ஆனால் தான் அவனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதும் அவள் புரியாமல் இல்லை.

————————————-

" உட்காருங்க மிஸ்டர் ஜீவானந்தம்" என்று சாரதா கூற அவன் உட்கார்ந்தான். சாரதா மற்றும் வித்யாவையே சிறந்த காண்டிடேட்டை தெரிவு செய்ய பாடசாலை நிர்வாகம் அனுமதி அளித்து இருந்தனர். கூடவே வித்யாவும் இருப்பதால் சாரதாவுக்கும் இவ்வளவு பெரிய லிஸ்ட்டில் இருந்து நான்கு பேரை தெரிவு செய்வது கஷ்டமாக இருக்கவில்லை. பல காண்டிடேட்ஸ்களை சாரதாவுக்கு தெரியாமல் வித்யாவே போட்டோவை பார்த்து ரிஜக்ட் செய்தது வேறு கதை.

வேலை சார்ந்த கேள்விகள் முடித்த பின், பொதுவான கேள்விகள் ஆரம்பமானது. 

" சோ மிஸ்டர் ஜீவா, ஜீவான்னு கூப்பிடலாம்ல" என்று வித்யா கேட்க அவன் " யெஸ் மேம்" என்றான். இவன் அவளை மேம் என்று கூப்பிட வித்யா கடுப்பானால். இண்டர்வியூவில் வைத்து ' டோண்ட் கால் மீ மேம். கால் மீ வித்யா' என்று சொல்ல அவளுக்கும் ஆசைதான். ஆனால் எடுத்த எடுப்பிலேயே நாம் வழிவது அவனுக்கு தெரிய கூடாது என நினைத்தால். ஏனென்றால் இந்த வேலைக்கு அவன் மிகவும் பொருத்தமானவனாக இருந்தான். 

" நீங்க உன்க ரெஸ்யூமில அன்மேரீட்னு போட்டிருக்கீங்க. நிஜமாவே அன்மேரீட்டா இல்லைன்ன டைவோர்ஸ் ஏதும் ஆகியிருக்கா. ஏன்னா சில பேருக்கு டைவோர்ஸ் ஆனா கூட அன்மேரீட்தான் அப்படிங்கிற எண்ணம் இருக்கு" என்று கூற சாரதாவுக்கு சிரிப்பு வந்தது. சாரதாவுக்கும் ஜீவா இந்த வேலைக்கு பொருத்தமானவனாக இருப்பான் என்று தோன்றியது. ஆனால் வித்யா கேட்கும் கேள்விகள் இனி வரப்போகும் நாட்களில் அவனுடன் சகஜமாக பேச சங்கடமாக்கிவிடும் என்ற பயமும் இருந்தது.

அவனோ வித்யாவின் கேள்விக்கு எந்த ஒரு தயக்கமும் இல்லாமல், " அப்படி ஏதும் இருந்திருந்தா நான் டைவோர்ஸ் அப்படின்னு போட்டிருப்பேன். ஏன்னா சில கம்பனிங்களோட காரியர் சைட்ல மேரீட், அன்மேரீட், டைவோர்ஸீ அப்படின்னு போட்டிருப்பாங்க. ஆனா உங்க ரெஸ்யூமி பார்ம்ல அத சேர்க்காம விட்டதுதான் இந்த மாதிரி குழப்பத்துக்கு காரணமா இருக்கும்னு தோனுது. நீங்க பார்ம்ல கரக்டா போட்டிருந்தா இப்படியா குழப்பம் வராதுல்ல" என்று வித்யாவை அவன் கலாய்க்க சாரதாவுக்கு சிரிப்பு வந்தது. 

ஜீவாவிம் பல்ப் வாங்கிய வித்யாவால் கோபத்தை அடக்க முடியவில்லை. உடனே அவனை கேள்வியால் மடக்க நினைத்தவள் " அப்போ நாங்க பார்ம கரக்டா ரிலீஸ் பண்ணலன்னு சொல்ரீங்களா மிஸ்டர்?" என்று கோபமாக கேட்டால். " நான் அப்படி சொல்லல மேம், பொதுவா இப்படியான fபார்ம் எல்லாம் ஆன்லைன்ல இருந்து சுட்டு அப்படியே போட்றுவாங்க. அந்த நேரங்கள்ள இப்படியான தவறுகள் வருவது சகஜம்தான்" என்று கூற மீண்டும் அவன் தங்களை ஆன்லைனில் பார்மை திருடிய கூட்டம் என  மட்டம்தட்டி பேசுவது வித்யாவுக்கு கோபத்தை கொடுத்தது. நிலமை கொஞ்சம் சூடாகுவதை உணர்ந்தாள் சாரதா.

" சரி மிஸ்டர் ஜீவா, நாங்க இன்னைக்குள்ள ரிசல்ட் சொல்லிடுவோம். சோ வெயிட் பார் அவர் கால்" என்று கூற அவன் வெளியேறினான். ஜீவாவுக்கு தான் கொஞ்சம் அதிகமாக பேசிவிட்டோமோ என்ற எண்ணம் தோன்றியது. தனது பேச்சால் வித்யா கோபம் கொண்டதும் அதை சாரதா சரியாக கணித்து அதை கையாண்ட விதமும் அவனை ஆச்சரியப்படுத்தியது.

" சாரதா இவன் ரொம்ப திமிர் பிடிச்சவனா இருக்கான். இந்த வேலைக்கு இவன் வேணாம். அந்த ரமேஷ செலக்ட் பண்ணிடு. கல்யானம் ஆனவன்னாலும் ரொம்ப க்யூட்டா இருக்கான்" என்று கூற உடனே சாரதா, " ஹேய் அதெல்லாம் முடியாது. உன்னோட ஒரு மாச சம்பளத்துல எனக்கு டிரீட் கொடுக்குறேன்னு சொல்லிருக்க. பேச்சு மாற கூடாது. ஜீவாவத்தான் செலக்ட் பண்றோம். நீ எனக்கு டிரீட் கொடுக்குற. என் செல்ல வித்யா கேட்டு நான் செய்யாம இருப்பேனா" என்று அவள் காலை வாரிவிட வித்யா வாய் பிளந்து நின்றால்.
Like Reply
#12
6

வாழ்க்கை ஒரு விசித்திரமான கணக்கு. நாம் ஒரு கணக்கு போட, நம்மை சுற்றியுள்ள நல்லவர்கள் ஒரு கணக்கை போட, நம்மை சுற்றியுள்ள கெட்டவர்கள் ஒரு கணக்கை போட்டு ஆளாளுக்கு ஒரு கணக்கை போட்டு வைத்திருப்போம். நாம் போட்ட கணக்கு எல்லாவற்றையும் பூச்சியத்தால் பெருக்கல் செய்வதே கடவுளின் வேலை. நம் கணக்கெல்லாம் சரியாக இருக்குமேயானால் நாம் தான் கடவுள் என்ற எண்ணம் எல்லோருக்கும் வந்துவிடும்.

வித்யா எப்பொழுதும் தன்னை அறிவாளி என நினைத்துக் கொள்வால். அது நிஜமும் கூட. அவளின் கணக்கு எப்போழுதும் தப்பானதில்லை. அதனாலேயே அவளை மிஸ் புரபஷர்னு எல்லோரும் கூறுவார்கள். அது அவளுக்கு இன்னும் ரொம்ப பிடிக்கும். ஜீவா தன்னை முட்டாள் என மறைமுகமாக கலாய்த்ததை வித்யாவால் தாங்க முடியவில்லை. எது எப்படி எனினும் சாரதா அவனது பெயரை தெரிவு செய்து கொடுத்துவிட்டால் பள்ளி நிர்வாகம் அடுத்த கேள்வி இன்றி அவனையே தெரிவு செய்துவிடும் என்பது அவளுக்கு தெரியாமல் இல்லை. ஜீவாவின் தகமைகள் கூட எந்த விதத்திலும் குறைந்ததாக இல்லை. ஆனால் ரெஸ்யூமியை பார்த்த போது ஜீவா மேல் இருந்த க்ரஷ் இப்போது அப்படியே ஆப்போசிட்டாக வித்யாவுக்கு மாறி இருந்தது. 
' மவனே நீ எங்க கூடத்தானே வேலைக்கு செஞ்சாகனும். அப்போ உனக்கு இந்த வித்யா யாருன்னு காட்டுறேன்' என மனதுக்குள் கறுவிக்கொண்டால்.

வடிவேலு கூறுவது போல ' அடிச்சான்யா அப்பாய்ன்மண்ட் ஆடர்' என்று  ஜீவாவுக்கு அந்த நாளே அவன் இண்டர்வியூவில் தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு அடுத்த வாரம் அவனை வேலையில் சேரும்படி கூறியிருந்தனர். ஊருக்கு சென்று வரலாமா? வேண்டாமா? என யோசித்தவன் இறுதியில், ஊருக்கு ஒரு தடவை போய் வரலாம் என முடிவெடுத்தான்.

வீட்டிற்கு வந்த ஜீவாவை சங்கவியும், ஆனந்தியும் மிக சந்தோசமாக வரவேற்றனர். வள்ளி வழமை போல அவரின் பாராமுகத்தையே அவனுக்கு காட்டினார். முருகன் அவனை வாழ்த்தி அவனுக்கு பணத்தை கொடுத்து தேவையானவற்றை வாங்கும் படி கூறினார். இங்குதான் ஜீவா குழம்பி போனான். பணத் தேவையை பூர்த்தி செய்ய அவன் என்றுமே கஷ்டப்பட்டதில்லை. முருகன் அவனுக்கு தேவையான பணத்தை அவன் கேட்கும் முன்பே கொடுத்துவிடுவார். வள்ளியும் அதற்கு எந்த ஒரு தடையையும் சொல்ல மாட்டார். ஆனால் தன் மீது வள்ளிக்கு ஏன் இவ்வளவு கோபம் என்று மட்டும் அவனால் கணிக்க முடியவில்லை.

" அண்ணா, புது ஊரு. புது ஆளுங்க. நீ காலேஜ்ல அந்த ப்ராப்ளம் வர முன்னடி ரொம்ப ஜாலியா, எல்லோரையும் கலாச்சிக்கிட்டு இருப்ப. ஆனா அதுக்கு அப்புறமாத்தான் நீ இப்படி கவலையா, வாடிப்போன முகத்தோட திரியிற. எது எப்படியோ, போற இடத்துல கலகலப்பா ஜாலியா இருண்ணா. எனக்கு அதுதான் முக்கியம். நீ என்ன அம்மா இடத்துல வெச்சி பார்க்குறதா சொல்லிருக்க. நம்ம அம்மா சொல்றதா நினைச்சிக்கோண்ணா. தயவு செய்து இனிமே இப்படி பஞ்ச பரதேசி மாதிரி இருக்காத. நல்லதா நாலு டிறஸ் வாங்கிக்க. உனக்கு கேர்ல் fப்ரண்ட்னு யாரும் கிடையாதே. அதனால டெய்லி என்கூட பேசு. உனக்கு சமைக்க தெரியாதுன்னு தெரியும். சமைக்க கத்துக்கோ. அது வரைக்கும் நல்ல ஹோட்டல்ல சாப்பிடு. நீ உழைச்சித்தான் என்ன கரையேத்தனும்னு இல்ல. உன் சம்பாத்தியம் உனக்குத்தான். அதனால உன் வாழ்க்கைய இனிமே ரசிச்சி வாழு" என்று அவனுக்கு அறிவுரை கூறினால்.

தன் மீது ஆனந்திக்கு பாசம் இருப்பது அவனுக்கு தெரியும். ஆனால அவள் அவன் மீது இவ்வளவு பாசம் வைப்பாள் என்று கனவிலும் நினைத்ததில்லை. ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணின் பாசம், பரிவு என்பது மிகவும் முக்கியமானது. அது தாயாக, சகோகதரியாக, காதலியாக, மனைவியாக, மகள்களாக இருந்தால் அது அந்தந்த நபர்களின் கடமையாக பார்க்கப்படும். ஆனால் ஒரு சகோதரி தாயாக மாறுவதும், மனைவி தோழியாகுவதும், மகள் தாயாவாதும்; அவரவர் கதாபாத்திரத்த்தை விட்டு மற்ற பாத்திரமாக மாறுவது என்பது ஒரு வித்தியாசமான உணர்வு. ஜீவா கடந்த சில நாட்களாக ஆனந்தியிடம் தான் தவறவிட்ட தாயின் பாசத்தை உணர்ந்தான்.

ஆனந்தியை நெருங்கியவன் அவள் நெற்றியில் முத்தமிட்டான். ஆனந்திக்கு இது பெரும் ஆச்சரியமாக இருந்தது. ஜீவா அவளை என்றுமே நெருங்கி தொட்டதில்லை. இன்று அவனின் இந்த ஒற்றை முத்தம் அவளுக்கு தந்தையிடம் கிடைக்க வேண்டிய பாதுகாப்பையும் பரிவையும் காட்டியது. அவன் அவளை முத்தமிட்டு நிமிர வாசல் அருகில் வள்ளியும் சங்கவியும் நின்று கொண்டிருந்தனர். " சாப்பாடு ரெடியா இருக்கு. சாப்பிட வாங்க" என்று கூறி அவர் சென்றுவிட்டார். வழமையான நாட்களாக இருந்திருந்தால் வள்ளி அவனின் இந்த செயலுக்கு வார்த்தைகளால் குத்தி கிழித்திருப்பார். ஆனால் இன்று அவர் எதுவுமே கூறாதது இவர்கள் இருவருக்குமே பெரும் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இவர்கள் இருவரையும் சங்கவி முறைத்துக்கொண்டு நின்றால்.

" ஓஹ் உங்க தங்கச்சிக்கு மட்டும்தான் முத்தம் கொடுப்பீங்களோ? நானும் உங்க தங்கச்சிதான். என்னைக்காச்சும் ஒரு நாள் என்கிட்ட அன்பா பாசமா பேசியிருக்கியா" என்று அவள் கோபமாக கேட்க ஜீவா அமைதியாக நின்றான். அவள் கையில் இருந்த பார்சலை அவனிடம் கொடுத்து " இது உனக்காக நான் வாங்கினது. முதல் நாள் வேலைக்கு போகும் போது இதை போட்டு போண்ணா. நானும் உன் தங்கச்சிதான்னு தோனிச்சின்னா எப்பவாச்சும் எனக்கும் கால் பண்ணு. இல்லைன்னா ஆனந்தி அக்காகிட்ட பேசும் போதாச்சும் என்கிட்ட பேசு" என்று கூறி அங்கிருந்து சென்றுவிட்டால்.

ஜீவா வீட்டில் ஆனந்தியிடமோ அல்லது சங்கவியிடமோ பெரிதாக ஒட்டுதலுடன் இருக்கமாட்டான். அவனுடன் கூடப்படித்தவர்கள் எல்லாம் அவர்கள் வீட்டில் தாய், தங்கை, அக்காக்களுடன் எப்படி எல்லாம் மல்லுக்கு நிப்பார்கள் என்றும், அவர்களுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை கேட்கும் போது அவனுக்கு பொறாமையுடன் கூடிய கவலை ஏற்படும். ஆனால் என்ன செய்ய. அவனுக்கு அந்த கொடுப்பினை இல்லாமல் போனது பற்றி அவன் கவலைப்படுவதில்லை. இருந்தாலும் ஒரு வெறுமை அவன் மனதில் இருந்து கொண்டே இருக்கும்.

தங்கை என்பவள் ஒரு வித்தியாசமான உணர்வு. அவள் திடீரென்று தாயாகவும், அக்காவாகவும், தோழியாகவும், ஏன் சில நேரங்களில் செல்ல எதிரியாகவும் மாறிப்போகக்கூடிய ஒரு படைப்பு. எல்லா உறவுகளை விடவும் அண்ணன் தங்கை உறவென்பது விசித்திரமானதும் கூட. ஆனால் ஜீவாவுக்கு ஒன்றுக்கு இரண்டு தங்கைகள் இருந்தும் அவனால் அவர்களுடன் சகஜமாக பேசி பழக முடியவில்லை. இதனால் அவன் வாழ்க்கையில் அவன் இழந்தது என்ன என்பது அவனுக்கு தெரியவில்லை.

நாட்கள் நகர, முதல் வேலை நாள் வந்தது." ஹாலி ஏஞ்சல்ஸ்" பாடசாலையில் காலடி எடுத்து வைத்தவனுக்கு இந்த பாடசாலை அவன் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட போகின்றது என்பதை அப்போது அவன் உணரவில்லை. பல நாட்களாக கவனிப்பாரற்று இருந்த அவனது தாடியை  க்ளீன் ஷேவ் செய்து சங்கவி அவனுக்கு பரிசாக கொடுத்த காக்கி நிற சர்ட்டை அணிந்து இருந்தான். பாடசாலை வந்தவன் சாரதாவை தேடிக்கண்டுபிடித்து தனது சக வேலையாட்களுடன் தனது அறிமுகத்தை மேற்கொண்டான். 

" வித்யா, ஜீவா சாருக்கு அவரோட ரூம்ம காட்டு. அப்புறம் PT சாருக்கு அவரோட வேலைய செய்ய என்னென்ன தேவை என்பத கொஞ்சம் கேட்டு சொல்லு. நம்ம ஸ்கூல் எந்தெந்த ஸ்போர்ட்ஸ்ல இப்போ இன்வால்வ் ஆகி இருக்காங்க என்றும் சொல்லிடு. இப்பவே ஒரு அறிமுகத்த கொடுத்திட்ட்டா ஈசியா இருக்கும்" என்று சாரதா கூறினால். 

" இல்லை சாரதா, இன்னைக்கு எனக்கு முக்கியமா ரெண்டு கிளாஸ் எடுக்க வேண்டியிருக்கு. வேணும்னா நீயே அவருக்கு எல்லாத்தையும் சொல்லிக்கொடுத்திடு" என்றவள் சாரதாவின் பதிலுக்கு கூட காத்திராமல் சென்றுவிட்டால்.

நேர்முகத்தில் கலகலப்பாக பேசிய வித்யா அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசாதது ஜீவாவை சற்று வருத்தத்துக்குள் ஆக்கியது. இருந்தாலும் அவன் அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. " இவ ஒருத்தி, தேவையான நேரத்துல உதவி செய்ய மாட்டா. சரி சார் நீங்க வாங்க . நானே உங்களுக்கு எல்லாதையும் காட்டுறேன்" என்று அவனை அழைத்துச் சென்றால்.

[+] 2 users Like me.you's post
Like Reply
#13
கணக்கு

கடவுள்

மறைமுக கலாய்ப்பு

க்ரஷ்

அடிசான்யா அப்பாயிண்ட்மெண்ட்

இன்டெர்வியூ

குழப்பம்

புது ஊரு

வாடிப்போன முகம்

பஞ்ச பரதேசி

சமையல்

பாசம்

ஒற்றை முத்தம்

லூட்டி

கவலை

கிளீன் ஷேவ்

பாடசாலை

ஸ்போர்ட்ஸ்

ப்ரோ மிக மிக அருமையான பதிவு ப்ரோ

நன்றி
Like Reply
#14
வித்யா ஏதிரியானது சாரதா விடம் நேருங்கும் வாய்ப்பை எளிதில் அமைத்து கொடுக்கும் என நம்புகிறேன்.
பெரிய தங்கைக்கு கொடுத்த முத்தம், சிறிய தங்கை மனதில் பொராமை தீயை மூட்டி இருக்கும் என நம்புகிறேன்.
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
Like Reply
#15
7


"ஹாலி ஏஞ்சல்ஸ்" பாடசாலையில் ஆண் மாணவர்களை விட பெண்மாணவிகளே அதிகம் கற்றனர். ஆரம்பத்தில் அது பெண்கள்பாடசாலையாக மற்றுமே இருந்தது. சமீபத்திலேயே அது இரு பாலார்கற்கும் பாடசாலை ஆனது. அதனாலேயே அங்கு ஆண் ஆசிரியர்களை விடபெண் ஆசிரியைகளின் எண்ணிக்கை அதிகம்.

ஜீவாவுக்கு இந்த சூழ்நிலை மிகவும் புதியது. ஆசிரியர் பணி என்பதுஅவ்வளவு இலகுவானது கிடையாது. பயிற்சிகள் பல பெற்றால்தான்சரியாக அந்த வேலையை செய்ய முடியும். ஜீவா தனது கல்லூரி படிப்பைமுடித்தபின் சில நாட்கள் ஆசிரியர் பயிற்சி வகுப்புக்களுக்குசென்றிருந்தான். அதுமட்டுமில்லாமல் அவனுக்கு பிடித்தவிளையாட்டையே சொல்லிக்கொடுக்கும் வேலை என்பதால் ஜீவா மிகவும்சந்தோசமாக இருந்தான். 

ஜீவா பாடசாலைக்கு வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. வீட்டிலிருந்துதினமும் ஆனந்தி கால் செய்து அவனுடன் பேசுவாள். ஆனந்து பேசும்போது சங்கவி அவளிடம் போனை பிடுங்கி, சண்டை போட்டு பேசுவாள். 'நான் உனக்கு தங்கை இல்லையா' என கோபமாக கேட்பாள். இது எல்லாம்ஜீவாவுக்கு புதிதாக இருந்தது. ஆனால் மிகவும் பிடித்திருந்தது. இவ்வளவுநாட்களும் தான் இந்த அருமையான உறவை இழந்துவிட்டோமோ என்றுஎண்ணினான். ஜீவா தன் சகோதரிகளிடம் வித்யா மற்றும் சாரதா பற்றுகூறியிருந்தான். ஆனந்தி பெரிதாக எதுவும் கூறாவிட்டாலும் சங்கவிஅவனை கலாய்த்துவிடுவாள்.

தன் தங்கைகளின் எண்ணம் அவன் மனதில் ஓடிய அதே நேரம் அவனின்போன் சினுங்கியது. அவனுக்கு மிகவும் பிடித்த டைட்டானிக் பாடலையேஅவன் ரிங்க்டோனாக வைத்திருந்தான். " ஹலோ அண்ணாஎப்படியிருக்கீங்க" என்று கேட்க அது ஆனந்தி அல்ல சங்கவி என்றுபுரிந்தது.

" நல்லா இருக்கேன் சங்கவி"

" ஏண்ணா எப்ப பார்த்தாலும் என் பேர சொல்லியே கூப்பிடுற. ஒருசெல்லம், புஜ்ஜி, அம்முக்குட்டி, கண்ணம்மா இப்படி ஏதாச்சும் சொல்லிகூப்பிடலாம்ல" என்று கூற மறுமுனையில் அவன் மெளனம் காத்தான்.

"சரி சரி, உடனே சைலன்சர மாட்டிக்காத. ஆமா உன் ஆளு எப்படியிருக்கா" என்று கேட்க ஜீவா குழம்பி போனான். சங்கவி யாரை தன் ஆள் என்றுகூறுகின்றால் என்று புரியவில்லை.

" புரியல்ல, யாரு என் ஆளு" 

" ஓஹ் PT சாருக்கு புரியயா? அதுதான் அந்த வித்யா டீச்சர். அவங்கஉன்மேல கோபமா இருக்காங்கன்னு ரொம்ப கவலைப்பட்டியே. சரி உங்கஸ்கூல்ல மொத்தம் எத்தனை டீச்சர்ஸ் இருக்காங்க" 

" முப்பத்தி ஐந்து பேர் இருக்காங்க. ஆமா எதுக்கு இப்போ இந்த டீட்டைல்எல்லாம் கேட்குற"

" நான் கேட்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. அதுல ரொம்பஅழகானவங்க யாரு?"  என்று கேட்க சங்கவி இன்றைக்கு ஏன்சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்கின்றால் என்று புரியாமல்தவித்தான். ஆனால் அவளின் அந்த கேள்விக்கு அவன்யோசித்துக்கொண்டிருந்த தருணம் அவன் கண்களில் ஒரு அழகியின்பிம்பம் விழுந்தது.

அரக்கு நிற சேலைக்கு வெந்தேய நிறத்தில் ப்ளவுஸ் அணிந்து, தனதுசிறிய கூந்தலை இன்று கொண்டை இடாமல் காற்றில் அலைபாய விட்டவண்ணம் அவனை நோக்கி ஒரு தேவதை நந்தவனத்தேர் போலஅசைந்து  வந்தது.அந்த தேவதையை ஆவென்று வாய் பிளந்து ஜீவாபார்த்துக்கொண்டிருக்க போனில் சங்கவி கத்திக்கொண்டிருந்தால்.

" அண்ணா, அண்ணண்ணா, நொண்ணா லைன்ல இருக்கியா" என்றுகேட்க சுய நினைவுக்கு வந்தவன் தன்னையும் அறியாமல் "சாரதா" என்றான். உடனே சங்கவி " ஓஹ் அவங்கதான் ரொம்ப அழகா" என்றுகேட்க தான் என்ன காரியம் செய்துவிட்டோம் என்று கவலைப்பட்டவன் " சங்கவி நான் அப்புறமா கூப்பிடுறேன்.கொஞ்சம் வேலை இருக்கு" காலைகட் செய்தான்.

இன்று வரை அவன் எந்த பெண்ணையும் இப்படி அதிசயித்துபார்க்கவில்லை. ஆனால் சங்கவியுன் பேச்சு அவன் மனதை ஏதோசெய்தது. பொதுவாக காலேஜ், ஸ்கூலில் படிக்கும் மாணவர்கள் மத்தியில்காதல் பிறக்க முதல் காரணம் கூட இருப்பவர்களின் கிண்டல்பேச்சுக்கள்தான். சக மாணவனுடன் அல்லது மாணவியுடன்இன்னொருத்தரை இணைத்து கிண்டல் செய்யும் போது காதல் தானாகபூக்க ஆரம்பித்துவிடும். சும்மாவா சொன்னார்கள், ஒரு பொய்யை ஆயிரம்தடவை கூறினால் உண்மையாகிவிடும் என்று.

" என்ன ஜீவா சார், ரொம்ப யோசனையா இருக்கீங்க போல. எந்தகோட்டைய பிடிக்க போறீங்க?" என்று சாரதா கேட்க அவன் சுயநினைவுக்கு வந்தான். " அப்படிலாம் ஏதுமில்ல டீச்சர். வீட்டுல இருந்துகூப்பிட்டு இருந்தாங்க. அதான் பேசிக்கிட்டு இருந்தேன்" என்றான்.

" ஓஹ் சரி. வீட்ல எத்தனை பேரு சார் நீங்க"

" நான் இரண்டு தங்கச்சி, சித்தி, அப்பா" என்று கூற சாரதா " அப்போஅம்மா?" என்றவள் தான் கேட்ட கேள்வியில் இருந்த முட்டாள்தனத்தைபுரிந்து கொண்டு உடனே, " சாரி சார். தப்பா கேட்டதற்கு" என்றால். 

"இதுல என்ன டீச்சர் இருக்கு. என் தங்கச்சி பிறந்ததும் அம்மாஇறந்துட்டாங்க. சித்திக்கு ஒரு பொண்ணு இருக்கா" என்றான்.

" மிஸ், இந்த ஸ்கூல்ல ஆல்ரெடி ஒரு கோச் இருக்குறதா சொன்னாங்க. அப்புறம் எதுக்கு இன்னுமொரு PT மாஸ்டர்" 

" ஓஹ் அதை கேட்குறீங்களா. அந்த கோச் கிக்பாக்சிங்க் மட்டும்தான்சொல்லிக்கொடுப்பாரு. ஏன்னா எங்க ஸ்கூல்ல ரெண்டு கிக்பாக்சிங்க்சாம்பியன்ஸ் இருக்காங்க. அதுல ஒருத்தி ப்ரைவேட்டா கோச் வெச்சுஇருக்கா. மத்தவளுக்கு ஸ்கூலாலேயே அப்பாய்ண்ட் பண்ணியிருக்கோம். ஆனா ரொம்ப நாளா PT மாஸ்டர் இடம் காலியா இருந்தது. உங்ககுவாலிபிகேசன்ல ஸ்போர்ட்ஸ் சர்டிபிகேட் ஜாஸ்த்தியா இருந்திச்சா, அதான் உடனே அப்பாய்ண்ட் பண்ணிட்டோம். இனிமே தேவைப்பட்டா அந்தகோச் இருப்பாரு. இல்ல உங்களாலேயே அந்த ரெண்டு பேரையும் மேய்க்கமுடியும்னா அவர அனுப்பிடலாம். எதுக்கு தேவையில்லாத செலவு. ஆல்ரெடி மெனேஜ்மண்ட் எப்படி செலவை குறைக்கலாம்னுயோசிச்சிக்கிட்டு இருக்காங்க" என்று கூறினால்.

" இரண்டு பேரும் பொண்ணுங்களா?" என்று ஜீவா கேட்டான். " ஆமா சார்ரெண்டுமே பொண்ணுங்கதான். ஒருத்தி ஜனனி, இன்னொருத்தி சனா. சனா வீட்டாளுங்க ரொம்ப வசதியானவங்க. அவளுக்கு ப்ரைவேட் கோச்இருக்கு. இந்த ஜனனிதான் அவ அம்மாகிட்ட சண்டை போட்டு ஸ்கூல்மூலமா கோச் ஏற்பாடு செஞ்சிகிட்டா. ரொம்வ வாலுத்தனம் பிடிச்சவ. எதுக்கும் அவ கிட்ட கொஞ்சம் கவனமாவே இருங்க" என்று புன்னகைத்துசென்றால். சாரதா கூறியதில் இருந்து சனா மற்றும் ஜனனியை கானவேண்டும் என்ற ஆவல் அவன் மனதில் உதயமாகியது.

——————————————————————————-

" என்னங்க சொல்ரீங்க. சரி விடுங்க பார்த்துக்கலாம். கொஞ்ச நாள்தானே.அது வரைக்கும் என் சம்பளம் வரும். நம்மகிட்டயும் கொஞ்சசேவிங்க்ஸ் இருக்கு. அதுக்கிடையில எப்படியும் உங்களுக்கு வேலைகிடைச்சிடும்" என்று வித்யா தன் கணவனிடம் கூறிக்கொண்டிந்தால். வித்யாவின் கணவன் ரவீந்தர் செலவைக் குறைக்கின்றோம் என்றபெயரில் தன் தொழிலை இழந்துவிட்டிருந்தான். ரவீந்தர் ஒரு ஐடிகம்பனியில் கடந்த சில ஆண்டுகளாக தொழில் புரிந்து வருகின்றார். தான்வேலை இழந்ததை தன் மனைவி எப்படி புரிந்து கொள்வால் எனயோசித்த வண்ணம் வீடு வந்தருக்கு வித்யாவின் வார்த்தைகள்இனிப்பாக இருந்தது.

கணவனுக்கு ஒரு கஷ்டம் வரும் போது மனைவி கொடுக்கும் ஆறுதலானவார்த்தைகள் அவன் கஷ்டத்தை காற்றில் அடிபட்டு செல்லும்சருகைப்போல ஆகிவிடும். ரவீந்தருக்கு இப்போது அதுவே நடந்தது. தன்மனைவியை இறுக்க அணைத்தவன் " ஐ லவ் யூ சோ மச் டீ பொண்டாட்டி. உன்ன மாதிரி ஒரு பொண்டாட்டி எல்லோருக்கும் கிடைச்சா ஆம்பளைங்கஎல்லாம் நிம்மதியா சந்தோசமா வாழுவாங்க" என்று கூற அவனை பார்த்துகுறும்பாக புன்னகைத்தவள், ஹலோ மிஸ்டர், என்ன மாதிரி இந்தஉலகத்துல நான் மட்டும்தான் இருக்கேன். சோ நீங்க ரொம்ப லக்கி. அந்தஒரே ஒரு பீசும் உங்களுக்கு கிடைச்சதுக்கு" என்று கூறிகண்ணடித்தவளை அவள் கணவன் இறுக்கி அணைத்தான். அந்த இரவுநேர குளிருக்கு அந்த அணைப்பு இதமாக இருந்தது. ஆனால் நிஜத்தில்அவள் உடல் குளிரில் நடுங்க சட்டென்று முழிப்பு வந்தது அவளுக்கு. அவள்படுக்கையில் அவள் மட்டுமே இருந்தால். பக்கத்து இடம் காலியாகஇருந்தது. அதில் தன் கணவனும் இல்லை. தான் காதலித்தவனும்இல்லை. எல்லாம் கனவாக இருந்தது.
Like Reply
#16
8

வித்யாவுக்கு இனிமேல் இந்த இரவு தூங்கா இரவாக போகின்றது என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. நேரத்தை பார்க்க அது இரவு ஒரு மணி என்று கூறியது. தனது செல்போனை எடுத்தவள் தான் மன அமைதி தேடும் ஒரே ஜீவனான சாரதாவுக்கு கால் செய்ய அது முதல் ரிங்கிலேயே ஏற்கப்பட்டது.

" என்ன சாரதா தூங்கல்லயா?" என்̀று கேட்க மறுமுனையில் சாரதா அமைதியாக இருந்தால். " ஏய் உன்னத்தான்" என்று சற்று சத்தமாக கூற சாரதா, " நீ தூங்கல்லயா வித்யா?" என்று கேட்டதும்தான் தாமதம் வித்யா அழத் துவங்கினால்.

" நான் யாருக்கு என்ன பாவம்டி பண்ணேன். எனக்கு தெரிஞ்சி நான் இதுவரைக்கும் யாரு வாழ்க்கையயும் கெடுத்ததில்ல. ஆனால் எனக்கு மட்டும் ஏன் இப்படில்லாம் நடந்துச்சி. பேசாம சாகலாமான்னு பார்த்தா அதுக்கும் தைரியம் இல்ல எனக்கு" என்று அவள் மனதில் இருக்கு ஆதங்கத்தை கூறினால்.

" வித்யா நல்லா யோசி. யார் வாழ்க்கையையும் நீ கெடுத்ததில்லயா? அப்போ ரவீந்தர் வாழ்க்கைய யாரு கெடுத்தா. உன் வாழ்க்கை ரவீந்தர் கூட நல்லா தானே போயிட்டு இருந்திச்சி. அப்புறமா எதுக்கு நீ சித்தார்த் கூட காண்டாக்ட் வெச்சிக்கிட்ட"

" என்ன சாரதா குத்தி காட்டுறியா. என்ன குத்திக்காட்டுறியான்னு கேட்கிறேன். ஆமா நான் காண்டாக்ட் வெச்சிக்கிட்டேன். எப்போ? கல்யாணம் ஆனதுமா? இல்லையே. ரவீந்தர் என்ன சந்தேகப்பட ஆரம்பிச்சதும்தானே. எதுக்கு எடுத்தாலும் சந்தேகம். ஸ்கூலுக்கு போகும் போது அழகா சாரி கட்டினா தப்பு. வரும் போது சாரி கசங்கி இருந்தாலும் தப்பு. ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் கூட சிரிச்சு பேசினாலும் தப்பு. அதுவும் பசங்ககிட்ட பேசினா சொல்லவே வேணாம். வெளியில சொல்லவே வாய் கூசுது. உனக்கே தெரியும்ல தினேஷ், அவன் அப்போ பத்தாவது படிச்சிக்கிட்டு இருந்தான். அவன் அப்பா போன்ல இருந்து ஏதோ சந்தேகம் கேட்க நைட்டு கால் பண்ணான். அத ரவீந்தர் எப்படி எல்லாம் சொல்லி திட்டினான் தெரியுமா. உனக்கு சொன்னா புரியாது சாரதா, அந்த இடத்துல நீ இருந்திருக்கனும். நல்ல வேலை அவரு தினேஷ்கிட்ட எதுவும் சொல்லல. ஆனா எனக்குத்தான் அடுத்த நாள் தினேஷ் முகத்த பார்க்க முடியாம போயிடிச்சி. நின்னா குத்தனம், இருந்தா குத்தம், நடந்தா குத்தம், படுத்தா...... ஹ்ம்ம் சொல்ல வேணாம். எவன நினைச்சிக்கிட்டு படுக்குறன்னு ஒரு கேள்வி" என்று அழுதபடியே பேசினால்.

" வித்யா, அதுக்காக நீ சித்தார்த்த கூப்பிடுவியா. அதனால உன் வாழ்க்கை என்னாச்சி பார்த்தியா?"  என்று சாரதா கேட்க வித்யா, " சரி சாரதா அது நான் பண்ண பெரிய முட்டாள்தனம்தான். எதேர்ச்சையா ஒரு நாள் அவன கடைவீதியில பார்த்தேன். சும்மாதான் பேசிக்கிட்டோம். ஆரம்பத்துல அவன் எங்க பழைய ரிலேசன்ஷிப் பத்தி எல்லாம் எதுவுமே பேசல்ல. ஒரு நாள் போன்ல அவன் அவசரமா ஏதோன்னு கூப்பிட்டான். அன்னைக்கு அவன் கூட பேசும் போது ரவீந்தர் கத்த ஆரம்பிச்சிட்டாரு. அது சித்தார்த்துக்கு கேட்டுடிச்சி. அடுத்த நாள் அவன் என்கிட்ட என்ன நடத்திச்சின்னு கேட்க, நான் என் மனசுல இருந்த எல்லாத்தையும் அவன் கிட்ட கொட்டிட்டேன். ஆரம்பத்துல அவனும் அன்பாத்தான் இருந்தான். வெறும் பேச்சு மட்டும்தான் எங்களுக்குள்ள இருந்திச்சி. போகப்போக வெறும் பேச்சா இருந்த எங்க அன்பு தொட்டு பேசுற அளவுக்கு முன்னேறி எல்லாம் கை மீறி போயிடிச்சி. சித்தார்த் என்ன கல்யாணம் பண்ணிக்குவான்னு நினைச்சேன். ஆனா அவன் கடைசியா என்ன கேட்ட வார்த்தை இன்னும் கொல்லுது. 'ஆறுதல் தேட எங்கிட்ட மட்டும்தான் வந்தியா இல்லை இன்னும் வேற ஆளுங்களும் இருக்காங்களா'ன்னு கேட்டான். அப்போதான் புரிஞ்சது எல்லா ஆம்பளைங்களும் ஒன்னுதான்னு. அவனுங்களுக்கு தேவை இந்த உடம்பு. அது கிடைக்கிற வரைக்கும் தான் மானே, தேனே, பொன்மானே. கிடைச்சிடிச்சின்னா ஸ்லட், ஹோர், பிட்ச்" என்றவள் சத்தமாக சிரித்தாள். 

" நீ தூங்கு சாரதா. இப்போதான் எனக்கு மனசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனா மாதிரி இருக்கு. நான் ஒரு பெக் போட்டுட்டு தூங்க போறேன்" என்றவள் காலை கட் செய்தால்.

இரவு நேரங்களில் வித்யா சாரதாவை கால் செய்து கூப்பிடுவது வழமையான ஒன்று. அந்த இரவுகளில் இரவர்களுக்குள் சம்பாஷனை இது போலவே இருக்கும். கொஞ்சம் கூட மாறாது. காரணம், மனதில் இருக்கு ரணத்தை வெளியில் கொட்ட ஒரு ஜீவன் வேண்டும். வித்யாவின் மனதில் இருக்கும் ரணங்களை வாங்கிக்கொள்ளும் ஜீவன் தான் சாரதா. வித்யா 'நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன்' என்று ஆரம்பித்தால், சாரதா ' நீ ரவீந்தரை ஏமாற்றவில்லையா' என கேட்பால். ஆனால் சாரதாவுக்கு தெரியும் ரவீந்தர் அவளுக்கு செய்த கொடுமைகள். இருந்தாலும் அந்த சம்பாசனை தொடர சாரதாவுக்கு ஒரு பிடிமானம் தேவை. வித்யாவுக்கு தன்னுடன் சேர்ந்து ஒத்து ஊதும் நபர் தேவை இல்லை. அவளுக்கு சரி சமமாக எதிர்த்து பேசுபவர்களைதான் ரொம்பவும் பிடிக்கும். சாரதாவுக்கு அது தெரிந்ததால் வித்யா எப்போதெல்லாம் மன ஆறுதலுக்காக அவளை கூப்பிட்டாலும் இவள் அவளுடன் சரி சமமாக மல்லுக்கு நிற்பால். இதனாலேயே இவர்களின் நட்பு மிகவும் உறுதியாகவும் ஒருவருக்கு ஒருவர் உறுதுனையாகவும் இருந்தது.

————————————————————————————-

சங்கவியுடனான உரையாடலின் பின் ஜீவாவின் மனதில் ஒரு சலனம் ஏற்பட ஆரம்பித்திருந்தது. சாரதாவை பற்றிய அவனின் எண்ணங்கள் மாற்றம் பெற தொடங்கியது. காதலிக்க ஆரம்பித்துவிட்டானா? என்று கேட்டால் பதில் இல்லை. ஆரம்பத்தில் சங்கவி சாரதாவையும் அவனையும் இணைத்து பேசியதின் பின், எப்போது அவள் கால் செய்தாலும் சாரதாவை பற்றி கேட்காமல் இருக்க மாட்டாள். அவள் கேட்கும் முதல் கேள்வியே " உன் ஆளு எப்படி இருக்கா" என்பதுதான். ஆனந்தி  அவனுடன் பேசும் போது அவனுக்கு மரியாதை கொடுத்து பெசினாலும் சங்கவி அவனை நீ, வா, போ என்று கூறும் டிபிக்கல் தங்கையாக மாறி இருந்தால். அது அவனுக்கும் பிடித்திருந்தது. ஒரு நாள் அவள் " உன் ஆளு எப்படி இருக்கா" என்று கேட்க,

" என்ன எப்படி இருக்கான்னு ஒருமையில கேட்குற. எப்படி இருக்காங்கன்னு கேட்கனும். என்ன இருந்தாலும் நாளைக்கு உனக்கு அண்ணியா வரப்போறவங்க" என்று அவன் விளையாட்டாக கூற அவள் அதை ஆனந்தியிடம் கூறி இருவரும் சேர்ந்து ஜீவாவை ஒரு வழி பண்ணிவிட்டனர். அருகில் இருக்கும் போது கிடைக்காத தன் தங்கைகளின் அன்பை அவன் தூர இருந்து தேவைக்கு அதிகமாகவே எடுத்துக்கொண்டான். 

தன் தங்கைகள் தன்னையும் சாரதாவையும் சேர்த்து கேலி பேசுவது அவனுக்கு இப்போதெல்லாம் மிகவும் பிடித்திருந்தது. எந்த ஆணுக்குத்தான் தன்னை இன்னொரு பெண்ணுடன்  சேர்த்து கேலி பேசுவது பிடிக்காது. அப்படியான கேலிகள் சுகமான அவஸ்த்தைகள். அந்த அவஸ்த்தைகளை ஜீவா அனுபவிக்க தொடங்கியதுதான் அவன் செய்த தவறு. 

இப்போதெல்லாம் சாரதாவுடன் அவன் பேசும் போது அவள் முகத்தை மட்டும் பார்ப்பதில்லை. அவள் கண்கள் செய்யும் சேட்டைகள், அவள் காதில் ஆடும் ஜிமிக்கியின் நடனம், அவள் அலைபாயும் கூந்தலின் அழகு என அவன் அவளை அணு அணுவாக ரசிக்க ஆரம்பித்திருந்தான். இருந்தாலும் மனதின் ஓரத்தில் பார்த்து நான்கு நாட்களிலேயே காதலா? என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்வான். ஆனால் பதில்தான் அவனுக்கு கிடைக்காது.

" என்ன ஜீவா சார். எப்படி இருக்கீங்க. நம்ம ஸ்கூலோட லிட்டில் ப்ரின்ஸஸ் ரெண்டு பேரு இன்னைக்கு கிக்பாக்சிங்க் டூர்னமனண்ட் போயிட்டு வர்றாங்க. அத்தோட கிக்பாக்சிங்க் கோச்சிற்கும் இன்னையோட பெயார்வெல். இனிமே அந்த ரெண்டு ப்ரின்சஸ்கும் நீங்கதான் பொறுப்பு. பார்த்து சூதானமா நடந்துக்குங்க. ரெண்டுமே அறுந்த வாலுங்க" என்று சக ஆசிரியை ஒருவர் கூற அவன் அவரைப் பார்த்து புன்னகைத்தான்.

" சாரதா மிஸ் எங்க. ஆளவே கானோம்" என்று கேட்க அவர், " அவங்க இன்னைக்கு ரொம்ப பிசி. ஆள பிடிக்கவே முடியாது" என்று கூறி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

ஏற்கனவே ஜீவா, ஜனனி மற்றும் சனா பற்றி சக ஆசிரியர்கள் கூற பல விடயங்கள் அறிந்திருந்தான். இருந்தாலும் அவனுக்கு அவர்களை காண வேண்டும் என்ற ஆவல் மிகவும் அதிகமாக இருந்தது. போட்டியில் ஜனனி முதலாம் இடமும், சனா மூண்றாம் இடமும் ஜெயித்திருக்க அந்த ஸ்கூல் முழுவதும் அவர்களை வரவேற்க திரண்டிருந்தது. ஜனனியும் சனாவும் மேடை ஏற ஜனனியை கண்ட ஜீவா ஒரு கணம் அப்படியே ஸ்தம்பித்து நின்றான். அவன் மனது இது உண்மையாக இருக்க கூடாது என்று பிரார்த்தனையும் செயதது.
----------------------
[+] 1 user Likes me.you's post
Like Reply




Users browsing this thread: