Posts: 247
Threads: 11
Likes Received: 1,943 in 205 posts
Likes Given: 548
Joined: Oct 2024
Reputation:
141
காலேஜ் மூன்றாம் வருடம் படித்துக்கொண்டிருந்த நேரம். சினியர் ஜீனியர் ராக்கிங்கில் ஆரம்பித்த பிரச்சனை புகைந்துகொண்டிருந்த நேரம் அது ஒருநாள் பெரும் சண்டையாக வெடித்துவிடவே அதில் சிக்கிய அத்தனைபேரையும் ஒரு மாதத்திற்கு சஸ்பென்ட் செய்தது மதுரையைச் சேர்ந்த பிரபல பல் மருத்துவக்கல்லூரி..
சரி வீட்டில் சொல்லாமல் எப்படியாவது ஒரு மாதத்தை ஒப்பேத்திவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தநேரம் சஸ்பென்ட் செய்யப்பட்டவர்களுக்கு ஒரு மாதத்திற்கு ஹாஸ்டலில் அனுமதியில்லை என்றும் பெற்றோர்களுக்கு தகவல் சொல்லியும் அடுத்தடுத்த குண்டுகளைத் தூக்கிப்போட்டது. சரி வீட்டுக்குப் போகலாமென்று புறப்பட்டால் அங்கே அப்பா அருவாளுடன் காத்துக்கொண்டிருக்கிறார் என்று அம்மாவிடமிருந்து அவசரச்செய்தி வரவே வேறு வழியில்லாமல் காரியாப்பட்டியிலிருக்கும் என் சித்தப்பா வீட்டிற்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
எனக்கு முதலில் அங்கு போவதற்கு சுத்தமாக விருப்பம் இல்லை. சித்தப்பா சரியான போதைப் பேர்வழி.. நாள்முழுதும் தண்ணிதான்.. போதாததற்கு என்வயதுக்கு இணையான கஞ்சாக்குடிக்கி நண்பர்களும் அவருக்கு உண்டு. இதனாலேயே அவரிடம் நான் பேசியே ஆறு வருடங்கள் ஆகிறது. என் நிலைமையைக் கண்ட என் அம்மாவே சித்தப்பாவுக்கு போன்செய்து விபரத்தைச் சொல்லவே அடுத்த இரண்டு மணிநேரத்தில் காலேஜ் வாசலில் ஸ்கூட்டியுடன் வந்து நின்றார் என் சித்தப்பு.
வேறுவழியில்லாமல் அவருடன் சேர்ந்து அவர் வீட்டுக்குச் சென்று இறங்கினேன். காரியாப்பட்டி பஸ் ஸ்டான்டிலிருந்து இன்னும் மூன்று கிலோமீட்டர் உள்ளே செல்ல வேண்டும். மதுரைக்கே உரித்தான அழகும் கிராம வாசனையும் அந்த ஊருக்கு உண்டு. என்னை வீட்டின் முன் இறக்கிவிட்ட என் சித்தப்பா என்னைப்பார்த்து அவரது பொக்கைப் பற்களைக் காட்டி இளித்தவாறே..
எனக்கு கொஞ்சம் வேல இருக்குடா மவனே.. போய்ட்டு உடியாந்துட்றேன்.. ஒனக்கு என்ன எடுத்துட்டு வரட்டும்..? சிக்கனா மட்டனா..? என்று அக்கரையாய் கேட்ட என் சித்தப்பனை எரிச்சலுடன் பார்த்தபடியே பதிலேதும் சொல்லாமல் நான் வீட்டிற்குள் நுழைந்தேன்..
அட சொல்லிட்டுப் போடா...
நீ மோத தண்ணியப்போட்டு எங்கயும் விழுந்து கெடக்காம வீ்டுக்கு வந்துசேரு சித்தப்பு அதுவே.போதும். என்றுவிட்டு நான் வீட்டுக்குள் நுழைந்தேன்..
அது ஒரு மூன்று அறைகள் கொண்ட ஓட்டு வீடு. வெளியே தட்டிவைத்து மறைத்துக்கட்டிய பாத்ரூம். வீட்டுக்குப் பின்னால் சித்தியின் அப்பா சொத்தாக ஒரு ஏக்கர் தென்னந்தோப்பும் அதுக்குப் பின்னால் சுத்திலும் வயலும் இருக்கும். ஊருக்குப் பின்புறமாக ஒதுக்கமாகவே.இருக்கும் வீடென்பதால் சோப்பு வாங்கவேஏ்டுமென்றால்கூட சைக்கிளிலோ இல்லை நடந்தோதான் சென்று வாங்கிவர முடியும். குடும்த்தேவைக்கென ஒரு பசுமாடும் ஆறு ஆடுகளும் வீட்டின் பின்புறத்தை நிரப்பியிருந்தன..
வீட்டுக்குள் நுழைந்தநேரம் வீடேவெறிச்சோடிக் கிடந்தது.. மேஜையில் அம்மா பேன் ஒன்று அனாதையாக ஓடிக்கொண்டிருந்தது.. பின்னால் நிற்கவேண்டிய பசுமாடும் ஆடுகளும் தலைமறைவாய் இருந்தன.. அங்கே இருந்த சேரில் என் பேக்கை வைத்துவிட்டு பின்னால் இருந்த பாத்ரூமிற்குள் சென்று தென்னை ஓலையால் செய்த கதவை எடுத்து சாத்திவிட்டு யாரும் வந்து உள்ளே நுழைவதற்குள் அவசர அவசரமாய் பாத்ரூம் போய்விட்டு வெளியே வந்தேன்..
நான் வருவதையோ இல்லை காலேஜேில் நடந்த பிரச்சனையையோ எதையுமே அந்த கஞ்சாக்குடுக்கி என் சித்தியிடம் சொல்லியிருக்கவில்லை...வீடே வெறிச்சோடிக் கிடந்தது.. பேன்ட் போட்டுக்கொண்டு ஸ்கூட்டியில் வந்தது எனக்குவயிறு அழுத்தவே நேராக ஒரு ரூமிற்குள் சென்று எனது சட்டை பேன்ட்டை கழட்டிவிட்டு ஜட்டியையும் கழட்டிவிட்டு டீசர்ட் லுங்கிக்கு மாறினேன். ஜட்டியை அங்கிருந்த செல்பில் போட்டுவிட்டு மீண்டும் வெளியே வந்து பின்னால் இருந்த தென்னந்தோப்பிற்குள் என் சித்தியைத் தேடிச் சென்றேன்.
சரியாக கவனிக்காமல் நான் வேக வேகமாக நடந்ததன் பரிசாக இரண்டு முள் என் காலில் தைத்து நரகவேதனையைத் தந்ததும் என் சித்தப்பனைத் திட்டியபடியே வந்து செருப்பைப் போட்டுக்கொண்டு மீண்டும் தோப்பிற்குள் சென்றேன். அங்கும் சித்தி இல்லை. பின்னர் சித்தி சித்தி என்று சத்தமிட்டபடியே பக்கத்தில் இருந்த கம்பங்காட்டுக்குள் நுழைந்ததும்..
யாருப்பா அது...? என்று கேட்டபடியே எட்டாப்பார்த்தாள் என் சித்தி. அவள் பெயர் சூர்யகலா.. வீட்டில் எல்லாரும் அவளை சூப்பரு என்றுதான் அழைப்பார்கள். என்னைப் பார்த்தவள் எதிர்பாராத ஆச்சர்யத்துடனும் அதிர்ச்சியுடனும் தான் அறுத்துக் கட்டியிருந்த கம்பந்தட்டைக் கட்டை கீழே போட்டுவிட்டு என்னை நோக்கி ஓடிவந்தாள். என்மீது எப்போதும் அளவுகடந்த பாசம் வைத்திருக்கும் ஒரு ஜீவன். நான் வெகு வருடமாக அவள் வீட்டிற்கு வராததை அடிக்கடி என் அம்மாவிடம் பேசி அழுதிருக்கிறாள்.இதெல்லாம் எனக்கு பின்னாட்களில்தான் தெரிய வந்தது..
வாடா தமிழு.. நல்லாருக்கியா சாமி..? எத்தனெ வருசமாச்சு. ஆளே மாறிட்டியேடா.. பெரிய மனுசன் மாதிரி இருக்கடா.. என்றுவிட்டு தன் மண் அப்ிய கைகளால் என் நெற்றியில் ஆரத்தழுவி அவள் தலையில் வைத்து சொடக்கெடுத்தாள்.. எனக்கும் என் சித்தியை ரொம்பப் பிடிக்கும். அளவான மாநிறமும் வற்றிய தேகமும் கொண்டவள். சிறுவயதிலேயே என் சித்தப்பனைக் காதலித்து அவனையே நம்பி வந்தவள் அதற்கான பலனை இன்றுரை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள்.
அட போ சூப்பரு. எப்ப பாத்தாலும் தோட்டம் தொறவுனு ஒத்த ஆளா கெடந்து கஷ்டப்பட்டுட்டு இருக்க. அதப் பாக்கவே கஷ்டமா இருக்கும் அதான் வாரதில்ல.. ஒம்புருசன் அந்தக் கஞ்சாக்குடுக்கி உன்கிட்ட எதுவுமே சொல்லலயா..? இப்பக்கூட என்னய எறக்கிவிட்டுட்டு அவசர வேலனு பொய் சொல்லிட்டு தண்ணியடிக்கத்தான் ஓடிட்ருக்கான்..
அய்யோ அந்த மனுசன திட்டாதடா.. என்ன பன்றது.. டாக்டருக்கிட்ட கூட்டிட்டுப்போனா இனி நிறுத்தமுடியாது குடிக்கட்டும் விடுங்கனு சொல்லி்டாங். எல்லாம் என் விதினு போக வேண்டியதேன்..
ஆமா.. ஒடனே புருசனுக்கு வக்காலத்து வாங்கிட்டு வந்துரு. இன்னும் ஒரு மாசம் நா இங்க உன்கூடதான் இருக்கப்போறேன். நானும் உன்கூடத்தான் தோட்டவேல பாக்கப்போறேன். உம்புருசன எப்புடி மாத்துரேன்னு மட்டும் பாரு...
நெசமாத்தான் சொல்றியா..? இன்னும் ஒருமாசம் இங்க தங்கப்போறியா..?
நான் சொன்னதை நம்ப முடியாமல் கண்கள் விரிய ஆச்சர்யமாகக்கேட்டாள்..
ஆமா ஆமா.. சரி வேமா நட. எனக்குப் பசிக்குது எதாச்சும் வச்சுக்குடு வா.. என்றபடி அங்கே கட்டிருந்த கம்பந்தட்டையை தலையில் தூக்கிக்கொண்டு நான் அவள் பதிலை எதிர்பார்க்காமல் வீட்டுக்கு நடக்கத் தொடங்கினேன்..
டேய் டேய்.. நில்லுடா.. டாக்கடர் படிக்கிற புள்ளெ பில்லுக்கட்டுலாம் தூக்கக்கூடாது.. கீழபோடு நா தூக்கிட்டுவரேன் என்று கத்தியபடியே என்பின்னால் ஓட்டமும் நடையுமாக வீ்டுக்கே வந்து சேர்ந்துவிட்டாள்.
நான் கட்டுத்தறியில் போட்டுவிட்டு நேராக வீட்டுக்குள் நுழைந்தேன். அதற்குள் வேக வேகமாக அடுப்பில் பாலூற்றி.டிக்காசன்போட்டு விட்டு என்னை உட்காரச்சொல்லிவிட்டு சைக்காளை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடியவள் அடுத்த மூன்று நிமிடத்துக்குள் கையில் நான்கு முட்டையுடன் வந்து டீ ரெடியாவதற்குள் எனக்கு ஆம்ப்ளெட் போட்டு டீயூடன் பரிமாறினாள்.. எனக்கு டீயுடன் ஆம்ளெட் சாப்பிடுவதென்றால் அலாதிப் பிரியம்..
நீயும் உக்காரு சித்தி. வா டீ குடிப்போம்..
அட வேண்டாம் சாமி. எனக்கு இன்னும் காட்டுல வேல கெடக்கு. மாடு ஆடுலாம் புடிச்சாந்து கட்டனும்.. நீ குடி..
ப்ச்.. வா சூப்பரு. சொன்னாக் கேளு. மொதல்ல டீ குடி.. அப்றமா ரெண்டுபேரும் போய்ட்டு ஆடு மாடு ஓட்டியாரலாம்...
நான் அதட்டிச் சொன்னதும் சிரித்தபடியே என்னுடன் உட்கார்ந்து டீ குடிக்கத் தொடங்கினாள்.. டீக்கு இடையே எங்களது குடும்ப உரையாடல்களும் அவளது வாழ்க்கை நிகழ்வுகளும் மட்டுமே இருந்தன. ஆனால் எதற்காக நான் ஒருமாதம் தங்குகிறேன் என்பதை அவளும் கேட்கவில்லை நானும் சொல்லவில்லை.
சரி சித்தி எங்க அக்காவக் காணும்..? காலேஜ்ல லேட்டாத்தான் விடுவாங்களா..?
ஆமாடா.. காலேஜே் சீக்கிரம் முடிஞ்சுரும்.. ஒருகடைல பார்ட் டைம் வேல பாக்குறா.. சிலநேரம் நைட் எட்டு மணிக்கித்தான் கௌம்புவா.. வேலய விடுடி. வேற வேல பாக்கலாம்னா அதுக்கும் சண்ட போட்றா. சரினு கல்யாணம் ஆகுற வரைக்கும அவ போக்குலயே விட்ரலாம்னு நானும் ஒன்னும் சொல்றதில்ல..
மீனா.. என்னைவிட ஒரு வயது இளையவள்.. இருந்தாலும் நான் அவளை அக்காவென்றுதான் அழைப்பேன். என்மீது அதிகபாசமிருந்தாலும் நான் அவள் வீட்டுக்கு வராததால் என்மீது இப்போது கோபமாய் இருக்கிறாள். மதுரையில் மாவட்ட நீதிமன்றத்தின் பக்கத்தில் இருக்கும் ஒரு கல்லூரியில் படித்தாலும் அங்கேயே ஒரு கடையில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறாள்.
அளவான தேகம். ஒல்லியும் இல்லை குண்டும் இல்லை.. மாநிறம்.. முகத்தில் பவுடர்கூட அடிக்கமாட்டாள். கழுத்தில் ஒரு கருப்புக்கயிறு மட்டும் போட்டிருப்பாள். கிராமத்துப் பிள்ளைகளுக்கே உரிய வளைந்த மெல்லிய புருவம் மற்றும் தைரியமான நடை.. நெற்றியில் சிறிய திருநீறு பொட்டாய் வைத்திருப்பாள்.. பளீரென தெரியும் பல் வரிசை. அதில் சிங்கப்பல் மட்டும் கொஞ்சம் வரிசையில் இல்லாமல் திரும்பி நிற்கும். அவள் சிரிக்கும்போது அதுமட்டும் எப்போதும் அழகாய்த் தெரியும். இரண்டு மாதமாக என்னை வாட்சாப்பில் ப்ளாக் செய்திருக்கிறாள். காரணம் எனக்கும் அவளுக்கும் மட்டுமே தெரியும்.
டீ குடித்ததும் நானும் சித்தியும் சென்று மாடு ஆடுகளை ஓட்டி.வந்தோம். வரும் வழியிலேயே பக்கத்து தோட்டத்துப்பெண் என்னை யாரென விசாரிக்கவும் உடனே எங்கள் குடும்ப வரலாற்றை ஆரம்பித்துவிட்ட என் சித்தியைப் பார்த்து சிரித்துவிட்டு நான் ஆடு மாடுகளுடன் வீடு.வந்து சேர்ந்தேன்.
The following 21 users Like Kingtamil's post:21 users Like Kingtamil's post
• Ammapasam, flamingopink, Isaac, KILANDIL, KumseeTeddy, Lashabhi, Muralirk, Naveen111213, Navin0911, omprakash_71, Rajmagesh, rojaraja, Royal enfield, samns, Sanjukrishna, sexluver_007, sundarb, Taj.Raj, Tamilmathi, tamilstory1, viklovesu23
Posts: 1,347
Threads: 1
Likes Received: 742 in 599 posts
Likes Given: 2,475
Joined: Jan 2024
Reputation:
7
Good update bro
Keep rocking
Welcome to the new story
Posts: 1,717
Threads: 0
Likes Received: 777 in 665 posts
Likes Given: 3,299
Joined: Oct 2020
Reputation:
3
really interesting story thanks for your story please continue
Posts: 586
Threads: 10
Likes Received: 771 in 315 posts
Likes Given: 1,082
Joined: Apr 2023
Reputation:
31
அருமையான கிராமப்புற வர்ணனை...
யதார்த்தமான வசனம் !
Keep it up !
Posts: 942
Threads: 5
Likes Received: 610 in 407 posts
Likes Given: 4,524
Joined: Sep 2022
Reputation:
7
புதிய கதைக்களம் நன்றாக இருக்கிறது நண்பா. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
நன்றி
Posts: 335
Threads: 1
Likes Received: 128 in 118 posts
Likes Given: 320
Joined: Jan 2019
Reputation:
3
Nice start bro, super gramathu story, waiting for next update
Posts: 247
Threads: 11
Likes Received: 1,943 in 205 posts
Likes Given: 548
Joined: Oct 2024
Reputation:
141
எனக்கு அந்த ஊரும் சித்தி வீடு உள்ள இடமும் ரொம்பப் பிடிக்கும்.. நான் போகாததுக்கு முதல் காரணமே என் சித்தப்பன்தான். ஆனால் விதிவசம்.. நா இன்னும் ஒரு மாதம் இங்கதான் தங்கியாகனும். மாடு ஆட்டெல்லாம் கட்டுத்தறியில் கட்டிவிட்டு வீட்டுக்குள் நுழைந்து மணியைப் பார்த்தேன். மாலை ஆறு மணியாகிருந்தது.. பின்வாசல் வழியாக எட்டிப்பார்த்தபோது என் சித்தி இ்னும் எங்கள் குடும்ப புராணத்தை ஓட்டிக் கொண்டிருப்பது தெரிந்தது.. சற்றே எரிச்சல் வந்தவனாய்..
ஏய் சூப்பரு.. வீட்டுக்கு வருவியா இல்ல அங்கயே தூங்குவியா..? என்று நான் சத்தமிட்டேன்.
கதையில் மூழ்கியிருந்த இரண்டு பெண்களும் என் சத்தத்தால் திசைதிருப்பப்படவே. சித்தியின் தோழி சித்தியிடம்..
ஆத்தி.. என்டி ஒம் மவன் இப்புடி கடுகடுக்குறான்.. இனி ஒரு மாத்தெக்கி நம்மல பேசக்கூட விடமாட்டானாடி..?
அட அப்புடிலாம் இல்ல.. அவன் அவுக அம்மா மாதிரி சட்டு சட்டுனு கோவம் வரும். ஆனா தங்கமான புள்ள..
அதுசரி.. அப்ப இவனவச்சு ஒம்புருசன கட்டுக்குள்ள கொண்டாரப்பாரு.. இவனையும் விட்டுட்டா அப்பறம் அம்புட்டுத்தேன்.. பாத்துக்க.. என்றுவிட்டு அவள் நடையக்கட்டவும் சித்தியும் நான் தூக்கிவந்த கம்பங்கட்டில் சிதறி விழுந்த புற்களை அள்ளியெடுத்து வரத் தொடங்கினாள்..
ஏன் சித்தி.. உங்கூட்டுக்காரரு எப்ப வீட்டுப்பக்கம் வருவாப்டி..?
ஏன்டா கேக்குற..? அந்தாளு வரத்துக்கு எப்புடியும் பத்துமணி ஆயிரும்.. இல்லனா எங்கயாச்சும் குடிச்சுட்டு கெடந்துட்டு காலைலதான் வீட்டுப்பக்கம் வரும்.. என்று சொல்லிவிட்டு அப்பாவியாய்ச் சிரித்த என் சித்தியைப் பார்த்து எனக்கு பாவமாக இருந்தது..
கஷ்டமா இல்லையா சித்தி..? ஏன் இந்தாளப்போய் லவ் பன்னித் தொலச்ச.. ஊருல ஒனக்கு வேற ஆளுகளே கெடக்கலயா..?
டேய்.. ஒனக்குத்தான்டா உன் சித்தப்பனப் பத்தி ீதரியல.. முன்னாடிலாம் பாக்கு கூட போடமாட்டாரு. அவ்வளவு நல்ல மனுசன்டா.. இங்கெ மதுரக்கி வந்த நேரம் சேராதவன்கூடலாம் சேந்து உன் சித்தப்பன ஏமாத்தி எல்லாப் பணத்தையும் புடுங்கிட்டு விட்டுட்டானுக.. அதுல குடிக்க ஆரம்பிச்ச ஆளுதான்டா.. என்ன பன்னச் சொல்ற.. ஒரு பொம்புளப்புள்ளய பெத்துட்டேன்.. அத எப்புடியாச்சும் கர சேத்துட்டா அப்பறமா இந்த ஒடம்பு ஆத்துலபோனா என்ன கெணத்துல கெடந்தா என்ன..
சித்தி அப்படி சொல்லியதும் எனக்கு சுர் என்று இருந்தது.. ஏய் சனியனே அப்டிலாம் சொல்லாத... அக்காவ கல்யாணம் பன்னிக்குடுத்துட்டு நீ நேர எங்க வீட்டுக்கு வா.. நா ஒன்ன நல்லா பாத்துப்பேன்.. ஆனா சித்தப்பன கூட்டியாராத...
நான் சொன்னதைக்கேட்டு உருகியவளாய் கண்கள் கலங்கியபடி என்னைப்பார்த்து சிரித்தாள்.
சரி.சித்தி நா கடப்பக்கம் போய்ட்டு வரேன்.. வரப்போ வெய்ட் பன்னி அக்காகூட வந்துருவேன். அதனால என்னத் தேட வேணாம்.. சரி காய்கறி எதுவும் வாங்கிட்டு வரவா..?
அதெல்லாம் கெடக்கு நீ போய்ட்டு பத்ரமா வா..
சித்தியிடம் விடைபெற்று அங்கு ஒரமாய் நிறுத்தி வைத்திருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு கடைப்பக்கம் சென்று அங்கிருந்த ஒரு ப்ரவ்சிங சென்டரில் படம் பார்க்கத் தொடங்கினேன்.. படம் போர் அடிக்கவே கேம் விளையிடத் தொடங்கியதும் சுத்தமாக நேரம் போனதே தெரியாமல் உட்கார்ந்துவிட்டு எதேச்சையாக அங்கிருந்த வாட்சைப் பார்க்கவும் எனக்கு தூக்கிவாரிப்போட்டது. மணி எட்டு.. இன்னேரம் பஸ் ஸ்டாப்பில் மீனா வந்திருக்கவேண்டும். வேக வேகமாக காசைக் கட்டிவிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு பஸ் ஸ்டான்டிற்குச் சென்றால் அங்கே பஸ் வந்து சென்று பத்து நிமிடங்கள் ஆகிய செய்தி கேட்டதும் நானும் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வரும் ரோட்டில் வேகமாக வந்தேன்.
சிறிது தொலைவில் ஒரு அழகான இளம்பெண் சுடிதாரில் ரோட்டில் நடந்துசென்று கொண்டிருந்தாள். தூரத்திலிருந்தே அது யார் என்று எனக்குத் தெரிந்துவிட்டது. இருந்தாலும் அவளைப் பயமுறுத்த நினைத்து சைக்கிளை வேகமாக ஓ்டிக்கெிண்டு அவள் பக்கத்தில் சென்றதும் சத்தமாகக் கத்தினேன். இதை எதிர்பார்க்காதவளாய் அவளும் அதிர்ச்சியில் கத்தவே சிறிது நேரத்தில் அந்த இடமே அதிரும் அளவுக்கு ஆனது..
ஏய் ஏய்.. மீனா பயப்புடாத.. நான்தா.. தமிழு..
பட படப்புடன் நெஞ்சில் கை வைத்து தனது மூச்சு வாங்கலை குறைக்கப் போராடியவள் கோபமும் பாசமும் அதிர்ச்சியும் கலந்த பார்வையால் என்னைப் பார்த்து பக்கத்தில் ஓடி.வந்து வேகமாக அடிக்கத் தொடங்கினாள். ஆனால் அது பொய் அடி என்று எனக்குத் தெரியும். மறந்தும் வலிப்பதுமாதிரி.அடித்துவீடக்கூடாது என்பதில்மட்டும் அவள் கவனமாய் இருந்தாள்.
நாயே.. நாயே.. இப்பத்தான் என்ன கண்ணு தெரியிதா.. இருக்கேனா இல்ல செத்துட்டேனானு பாக்க வந்தியா..?
ஐயோ அக்கா.. ப்ளீஸ் அப்டிலாம் பேசாத. எனக்கு சித்தப்பன்மேலதான் கோவம்.. எனக்கு நீயும் சித்தியும்னா உயிரு..
நான் அப்படிச்சொன்னதும் என்னை அடிப்பதை நிறுத்தியவள் என் முகத்தைப் பார்த்தாள். மீனாவின் முகம் வேலையின் அசதியால் மிகவும் களைப்பாக இருந்தது. அவளது பவுடர் அடிக்காத முகத்தில் வியர்வை ஈரம் படர்ந்து பார்ப்பதற்கு அந்தநேரத்திலும் அழகாய் இருந்தது. அமைதியாக என்னைப்பார்த்தவளின் கண்களில் இப்போது கண்ணீர் கோர்த்து நிற்கவே.. அழுகையை அடக்க முயற்சித்தவளின் முக்கு விடைத்து அடங்கியது..
நானும் என் அம்மாவும் ஒனக்கு உயிருனா ஏன்டா இத்தன நாள் வீட்டுப்பக்கம் வரல..? தனி ஆளா நா இங்க எவ்வளவு கஷ்டப் பட்டுட்டு இருக்கேன் தெரியுமா..? இதே என்கூட ஒரு பொண்ணோ பையனோ பொறந்துருந்தா எனக்கு எவ்வளவு ஆறுதலா இருந்துருக்கும் தெரியுமா..? பேசாம போயிரு. இனிமே அக்கா நொக்கானு வீட்டுப் பக்கம் வந்துராத.. என்றவளின் கண்கள் இப்போது கண்ணீரைத் தாரை தாரையாய் சிந்தத் தொடங்கியது. என் பதிலை எதிர்பார்க்காதவள் இப்போது திரும்பி நடக்கத் தொடங்கினாள்.அது அத்தனையும் அவளது மனதில் இருந்து வந்த வார்த்தைகள். அதைக்கேட்டதும் நான் உடைந்து அங்கேயே நின்றுவிட்டேன். என் சித்தப்பன்மேல் இருந்த கோபத்தில் நான் வீட்டுக்கு வராமல் இருந்தது எவ்வளவு பெரிய தவறு என்று எனக்கு இப்போது புரிந்தது.
மீனா நீண்டதூரம் நடந்துபோய் விட்டாள். அவள் பெரிய வைராக்கியக் காரி.இருந்தாலும் இப்போதுவரைக்கும் என்மீது பாசம் குறையாதவள்..
ஏய் மீனா.. எனக்கு இருட்டுக்குள்ள நிக்கிறதுக்கு பயமா இருக்கு. இப்ப நா உன் வீட்டுக்கு வரவா இல்ல இங்கயே உக்காரவா..?
நான் சத்தம்போட்டு கத்தவும் என்னைத் திரும்பிப்பார்த்தவள்..
இப்பமட்டும் நீ ஒழுங்கா வீட்டுக்கு வரலனா செருப்பாலயே அடிப்பேன் என்று பதிலுக்கு சத்தம்போட்டு கத்தினாள்.
அவள் வீட்டுக்கு வரச்சொல்வாள் என்று எனக்குத் தெரியும். சிரித்தபடி வேகமாக சைக்கிளை ஓட்டிச் சென்று அவள் பக்கத்தில் நிறுத்தி பெல் அடித்ததும் பலமாகவே.முதுகில் ஒரு அடி அடித்துவிட்டு சைக்கிளில் ஏறி உட்கார்ந்தாள். இருவரும் பல கதைகளைப் பேசியபடியே வீடு சேர்ந்தோம்.
The following 18 users Like Kingtamil's post:18 users Like Kingtamil's post
• Ammapasam, flamingopink, jil thanni, KILANDIL, KumseeTeddy, Muralirk, Naveen111213, Navin0911, omprakash_71, Rajmagesh, raspudinjr, Royal enfield, samns, Sanjukrishna, sexluver_007, sundarb, Tamilmathi, tamilstory1
Posts: 1,717
Threads: 0
Likes Received: 777 in 665 posts
Likes Given: 3,299
Joined: Oct 2020
Reputation:
3
Interesting story bro sema superrrrrrbb update please continue thanks for your story
Posts: 2,155
Threads: 1
Likes Received: 1,240 in 830 posts
Likes Given: 1,133
Joined: Jun 2021
Reputation:
16
வித்தியாசமான கதை ஆரம்பம். கதை தலைப்பை சொல்பவள் சித்தியா அல்லது அவள் மகளா? வயதில் சின்னவளை ஏன் அக்கா என அழைக்க வேண்டும்? வாட்ஸப்பில் ஏன் அவள் ப்ளாக் செய்து இருக்கிறாள்? என்று ஏகப்பட்ட கேள்விகளுக்கு இனி பதில் கிடைக்கும். ப்ளீஸ் கண்டீனூ நண்பா
இங்கே என் முதல் முயற்சி
மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)
Posts: 1,347
Threads: 1
Likes Received: 742 in 599 posts
Likes Given: 2,475
Joined: Jan 2024
Reputation:
7
Good update bro
Keep rocking
Posts: 335
Threads: 1
Likes Received: 128 in 118 posts
Likes Given: 320
Joined: Jan 2019
Reputation:
3
Posts: 247
Threads: 11
Likes Received: 1,943 in 205 posts
Likes Given: 548
Joined: Oct 2024
Reputation:
141
ரெண்டுபேரும் கதைபேசிச் சிரித்தபடியே சைக்கிளில் மெதுவாக வந்துகொண்டிருந்தோம்.. 100 அடிக்கு ஒரு மின்கம்ப விளக்கு வெளிச்சம் மட்டுமே அந்தப் பாதைக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருந்தது. அங்கிருந்து என் சித்தி வீட்டுக்கு இடையி் ஒரேயொரு வீடு மட்டும்தான். மத்தபடி சுற்றிலும் விவசாய நிலங்களும் சாலையோரமாக ஒரு கால்வாயும் இருந்தது. இரவு நேரத்தில் ஒரு ஆண்பிள்ளையே தனியாக நடந்துசெல்லப் பயப்படும் இடம் அது. இத்தனை வருடங்களாக மீனா மட்டும்தான் அந்த இடத்தைத் தனியாய் கடந்து வீட்டுக்குச் செல்கிறாள் என்று நினைக்கவே.எனக்கு திக் என்றிருந்தது..
ஏன் மீனா...? நீ இவ்வளவு தூரமும் நைட் தனியாவே நடந்து வீட்டுக்குப் போவியா..?
சே சே இல்லடா.. எப்பயும் அம்மா வந்துரும். சைக்கிள் எடுத்துட்டு பஸ் வாரதுக்கு முன்னாடியே வந்துரும். ஒருசில நாள் பஸ் சீக்கிரம் வந்துட்டா நா நடக்க ஆரம்பிச்சுருவேன். வர்ர வழியில அது வந்து பிக் அப் பன்னிக்கிரும்..
சரி... ஒனக்கு நைட் இந்த வழில வரதுக்கு பயமா இல்லயா..?
அடப் போடா.. யாரு என்ன பன்னிரப்போறாங்க. இந்த மூஞ்சிக்கெல்லாம் எவனும் அவ்வளவு மெனக்கெட மாட்டான்..
அவள் அப்படிச்சொன்னதும் ஓட்டிக் கொண்டிருந்த சைக்கிளை சடாரென ப்ரேக் போட்டு நிறுத்தினேன்.. சைக்கிள் நின்ற வேகத்தில் என் முதுகில் இடித்து பின்னர் சுதாரித்து உட்கார்ந்தவள் ஏன் என்பதேபோல் என் முகத்தைப் பார்த்தாள். சரியாக அந்த இடத்தில் தெருவிளக்கு வெளிச்சமும் பக்கத்தில் கால்வாய் தூம்பும் இருந்தது. அந்த விளக்கு வெளிச்சத்தில் அவள் அம்சமாகவே இருந்தாள்.. இன்னும் அவள் முகம் கழுவவில்லை.. நாள்முழுதும் வெயில் அலைச்சலில் படிந்த எண்ணைப்பிசுக்கு அடள் முகத்தை மேலும் அழகாய்க் காட்டியது..அப்படியே அவளது மூக்கின் கீழ் முளைத்திருந்த சிறு சிறு மெல்லிய பூனை முடிகளும் கழுத்தில் போட்டிருந்த வெள்ளி நூல் செயினும் காற்றில் கலைந்து நெற்றியில் ஆடிக்கொண்டிருந்த சிறு சிறு கூந்தல் முடிகளும் மூக்கின் நுனியில் தெரிந்த சிறு மச்சமும் அந்த தெருவிளக்கு வெளிச்சத்தில் அவள்ளவு அழகாய்த் தெரிந்தது. மொத்தத்தில் அவள் அப்போது எனக்குப் பேரழகியாய்த் தெரிந்தாள்..
நான் விடாமல் அவளது தலைமுதல் கழுத்து வரை பாராப்பதைக் கவனித்தவள் பெண்களுக்கே உரிய அந்த எச்சரிக்கை உணர்வில் தன்னிச்சையாக அவளது சாலை இழுத்துச் சரி செய்தவள் என்ன என்பதுபோல் என்னையே பாரத்தாள்..
என்னடா திடீர்னு அப்டிப் பாக்குற..?
ஒன்னுல்ல.. ஒன்னெல்லாம் எவன் பாப்பான்னு சொன்னியே.. ஒன்னையப் பாக்கலனா அவன்லாம் ஆம்பளயே கெடையாது. நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா மீனா..?
யாரு நா..? போடாங்ங்ங்... இன்னும் மூஞ்சியே கழுவல.. தலைமுடிலாம் பரட்டையா பறந்துட்டு கெடக்கு. நானே டென்சன்ல இருக்கேன். கடுப்ப கெழப்பாம போ மொத..
ப்ச்.. நா ஒன்னும் ஒனக்கு ஆறுதலாப் பேசனும்னுலாம் அப்டி சொல்லல.. நெசமாவே நீ அழுகு மீனா.. கோயில்ல சாமிகூட கருப்பாத்தான இருக்கு.. ஆனா பாக்க எவ்வளவு அழகா இருக்கும்..?நல்லவேல என் சித்தி சாயல் ஒனக்கு இருக்கு. என் சித்தப்பன ஜெராக்ஸ் எடுத்தமாதிரி பொறந்துருந்தனா நாய்கூட ஒன்னயத் திரும்பிப் பாத்துருக்காது..
டேய்.. மிதி.வாங்கப்போற.. அக்கா காரிட்டப் பேசுறமாதிரியாடா பேசுற..? அழகு சைட்டுனு..?
அழகு எங்கருந்தாலும் ரசிக்கலாம் தப்பில்ல.. இனிமே நா அழகில்ல எவனும் பாக்க மாட்டான் அது இதுனு வெட்டிசீன் போடாத.. எவன் பாக்காட்டியும் நா பாப்பேன் மீனா.. சோ டோன்ட் வொரி... வா வீட்டுக்குப் போலாம்.. இனிமே டெய்லி நானே வந்து ஒன்ன கூட்டிட்டுப் போவேன்..
ஓகோ.. என்ன தொரக்கி திடீர்னு அக்காமேல இவ்வளவு அக்கர..? இத்தன நாளா நாந்தான வந்தேன். இனிமே நானே வந்துப்பேன்.. நீ ஒன்னும் வரத் தேவயில்ல..
அனத்தாம சைக்கிள்ல உக்காரு.. இல்லனா அப்டியே காவாக்குள்ள தள்ளிவிட்ருவேன்..
எங்களது சண்டை வழக்கம்போல அங்கேயே ஆரம்பித்துவிடவே அவள் பேசுவதற்கு நானும் நக்கல்பேச்சு பேசிக்கொண்டே சைக்கிள் ஓட்டவும் பதிலுக்கு அவள் என் முதுகில் படாரென அடிக்கவும் இப்போது கலகலப்பான மனநிலைக்கு மாறியிருந்தாள் மீனா.. மீனா இயல்பிலேயே ரொம்ப சுறுசுறுப்பானவள்.. சின்ன வயதிலேயே அதிக பொறுப்புடன் இருந்தவள்.. இப்படியொரு தகப்பன் அமைந்ததிலிருந்து அவள் வாழ்க்கை முழுதுமே பாரமும் கவலையுமாய் மாறி அவளது மொத்த ஆசைகளிலும் மண்ணள்ளிப் போட்டிருந்தது. முட்டாள்த் தனமாய் இத்தனை ஆண்டுகள் வராமல் இருந்தது எவ்வளவு பெரிய தவறு என்று அப்போதுதான் எனக்கு உரைத்தது..
வீட்டு வாசலில் அவளை இறக்கிவிட்டு சைக்கிளைத் தாவாரத்துக்குள் நிறுத்தி வீட்டுக்குள் நுழையும்போது மீனா அவசர அவசரமாக பாத்ருமுக்குள் நுழைவதைப் பார்த்தபடி எனது பாக்கெட்டில் இருந்த போனை சேரில் வைத்துவிட்டுத் திரும்பினேன்.. அங்கே சித்தி என் அம்மாவிடம் போன் பேசிக்கொண்டிருந்தாள் என்னைப் பற்றித்தான் பேச்சு ஓடிக் கொண்டிருந்தது.. வாசலில் எட்டிப் பார்த்தபோது ஸ்கூட்டி இன்னும் வீடு வந்து சேரவில்லை..
அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்த சித்திக்குமுன் ீசன்று நின்றுகொண்டேன்..
ஏஞ் சித்தி..? உம் புருசன் இன்னும் வர்லயா..?
இல்லையென்று சைகை செய்தவாறு என் அம்மாவிடம் பேசுவதிலேயே குறியிய் இருந்தாள். வெடுக்கென போனைப் புடுங்கியபடி சித்தியிடம் டீ வைக்கச் சொல்லிவிட்டு சிறிது நேரம் போனில் என் அம்மாவிடம் பேசிவிட்டு கிட்சன் பக்கம் நுழைந்தேன். அங்கே சித்தி டீ வைத்துக் கொண்டிருந்தாள். அந்தநேரம் பாத்ரூமிலிருந்து வெளியே வந்தவள் ஈர உடைகளுடன் மீண்டும் நான் என் பேக்கை வைத்திருக்கும் ரூமிற்குள் நுழைந்துகொண்டாள். காக்கா குளியல் போடும் பழக்கம் மட்டும் இன்னும் மாறவே இல்லை..
என்ன சித்தி டீதான போட்ற..? நாளக்கிலயும் தந்துருவியா..?
அட சும்மா அனத்தாம போய் உக்காருடா.. அஞ்சு நிமிசத்துல ரெடியாயிரும்.. அப்புடியே உஞ் சித்தப்பாவ மாதிரி அவசரப்படுத்தாத..
வந்து சேரில் உட்காரந்துகொண்டு போன் நோண்டிக்கொண்டிருக்கும்போது பட்டென ஒரு ஜட்டி பறந்துவந்து என் மூஞ்சியில் விழுந்தது. விழுந்த அடுத்த நொடியே ஜட்டியில் இருந்த ஆண்வாசம் என் மூக்கில் ஏறவே ஜட்டியை விலக்கித்தள்ளிவிட்டு முகத்தை நிமிர்ந்து பார்த்தபோது அங்கே மீனா நைட்டியில் நின்றுகொண்டிருந்தாள். அவள் உடம்புக்கு அப்படியே ஒட்டினாற்போல் இருந்த நைடடியில் கைகட்டி நக்கலாய்ச் சிரித்தபடி என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள்..
ஏன்டா எரும.. அதென்ன அவார்டா..? கழட்டுனா ஒரு ஓரமா போட மாட்டியா..? அப்டியே ஆணில விரிச்சு தொங்கப் போட்ருக்க...? சரி அதத் தொவச்சு எத்தன வருசமாச்சு. மரியாதையா கொண்டுபோய் வெளிய வீசிட்டு வந்துரு..
அப்போதுதான் கவனித்தேன்.. நேற்று இரவு ஜட்டிபோட்டு கையடித்துவிட்டு விந்தையும் அதிலேயே தெரிக்க விட்டு அப்படியே தூங்கிவிட்டேன்.. சித்தப்பு வீட்டுக்கு வரப்போகிற அவசரத்தில் அதே ஜடடியைப் போட்டுக்கொண்டு வந்திருந்தேன். அவள் அதைத்தான் சொல்லியிருக்க வேண்டும்.. என்னால் திரும்பிப் பதில் சொல்ல முடியாமல் அவளை முறைத்துக் கொண்டே ஜட்டியை எடுத்து வெளியில் இருந்த கொடியில் போட்டுவிட்டு மீண்டும் வந்து உட்காரந்துகொண்டேன். அவள் அதுவரைக்கும் என்னை நக்கல் சிரிப்பில் பாரத்தபடியே இருந்தாள்..
அவள் என்னை அப்படிப் பார்த்து சிரித்தது எனக்கு எரிச்சலைக் கிளப்பவே.. அவளுக்கு கேட்காதமாதிரி... அதையும் எடுத்து மோந்து பாத்தியாக்கும் என்று முனகினேன்.. சட்டென நான முனுகுவது கேட்டதுபோல்..
டேய்.. டேய்.. இப்ப என்ன சொன்ன..?
நா என்ன சொன்னேன் ...? அதெல்லாம் ஒன்னும் சொல்லல..?
பொய்சொல்லாத.. இப்ப என்ன சொன்ன..? நா அந்த கருமத்த எடுத்து பாத்தேனா..?
என்னது கருமமா..? ஏன் நீயெல்லாம் போடமாட்டியா..? சும்மா கடுப்பக் கௌப்பாத...
ஏய் மூடு.. நா டெய்லி தொவச்சுதான் போடுவேன்.. ஒன்னமாதிரி அப்புடியே கழட்டி அப்புடியே போட்ற ஆளு நா இல்ல.. டாக்கடராடா நீ... ? இப்புடி கருமக் கவுச்சியா இருக்க...
ப்ப்ச்ச்.. இப்ப என்ங்கிற..? நீ மட்டும் யோக்கிய மயிறா..? இந்தாத்தான் போன.. போன ஒடனேயே குளிச்சு முடிச்சுட்டு வர்ர.. காக்கா குளியல் போட்டுட்டு வந்து என்ன கிண்டல் பன்ற.. அங்கமட்டும் என்னவாம்..? எனக்காச்சும் ஜட்டிதான் கவுச்சி அடிக்கும் ஒனக்கு ஒடம்பே கவுச்சிதான் அடிக்கும்.
செருப்பாலயே அடிப்பேன் நாயே... அங்கருந்து வரப்ப கோவிலு தேவத அழுகுனு உருட்டிட்டு வீட்டுக்குள்ள நொழஞ்சதும் காக்கா குளியல் கவுச்சினு பேசிட்ருக்க..?
ஆமாமா.. அதுவும் உண்மதான் இதுவும் உண்மதான்.. நீதான மொதல்ல ஆரம்பிச்ச..
அதுக்கு..? என்னய காக்கா குளியல்னு பேசுவியா..? முதல்ல எதாச்சும் சேட்ட செஞ்சா செஞ்சு முடிச்சதும் ஜட்டியத் தொவைச்சுப்போட பழகிக்க.. உள்ள நொழஞ்சதுமே குப்புனு அடிக்கிது.. நாரக் கவுச்சி..
மீனா திடுதிப்பென அப்படிச் சொல்வாள் என் நான் எதிர்பார்க்கவில்லை..அது விந்துவாசம்தான் என்று அவள் உறுதியாய்ச் சொன்ன விதம் எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது.. அவள் அப்படிச் சொன்னதும் பதில்சொல்ல முடியாமல் திணறியநேரம் சித்தி சொம்பில் டீயும் மூன்று டம்ளரையும் எடுத்துக்கொண்டு எங்கள் வாக்குவாதத்துக்கு இடையில் உட்காரந்துகொண்டு டீ ஆத்தத் தொடங்கிவிட்டாள்..
ஏய் .. இப்ப ஏன்டி எம்புள்ளய பேசுற...? வந்ததும் வராததுமா அவனக் கரிச்சுக் கொட்டாத..
ஆமாமா. ஒம்புள்ள லட்சணத்துக்கு என்று முனகியபடியே கையில் ஒரு டம்ளரை எடுத்துக்கொண்டு எனக்குப் பக்கத்தில் சேரைப்போட்டு உட்கார்ந்துகொண்டு டீவிை ஆன் செய்து நாடகம் பார்க்கத் தொடங்கினாள்.. ஆனால் எனக்கோ மனதுக்குள் ஒரு புயலே அடித்துக் கொண்டிருந்தது. ஜட்டியில் அடித்தது விந்து வாடைதான் என்று எப்படி அவ்வளவு உறுதியாய் மீனாவால் சொல்ல முடிந்தது என்ற கேள்வியே எனக்குள் புயலாய் அடித்தது..
அந்த நேரம பார்த்து வாசலில் ஸ்கூட்டி வந்து நிற்கவே அதில் சித்தப்பா பின்னாடி போதையில் கண்கள் சொறுகியநிலையில் இருக்க முன்னால் ஒரு 25 வயது மதிக்கத்தக்க ஒருவன் ஓட்டிக்கொண்டு வந்திருந்தான். அவனும் போதையில்தான் இருந்தான்.. நான் இருப்பதையும் கண்டுகொள்ளாமல் மீனாவைப் பார்த்து அவனது கறைபடிந்த பற்கள்தெரிய சிரித்தான். நான் மீனாவைப் பார்க்கும்போது அவள் அருவருப்புடன் அவன் சிரிப்பதைப் பார்த்து சட்டென முகத்தைத் திருப்பிக் கொண்டாள்..
எனக்கு கோபம் தலைக்கேறவே உட்கார்ந்திருந்த சேரிலிருந்து வெடுக்கென எழுந்து வேக வேகமாக ஸ்கூட்டி நின்ற இடத்திற்குச் சென்றேன். நான் கோவமாக எழுந்து செல்வதைப் பார்த்த சித்தி கலவரத்துடன் அவளும் என் பின்னால் எழுந்து ஓட்டமும் நடையுமாய் வந்தாள்.. மீனா அமைதியாய் நான் எழுந்துசெல்வதைப் பார்த்தபடி இருந்தாள்.
The following 14 users Like Kingtamil's post:14 users Like Kingtamil's post
• flamingopink, ghostman_, KILANDIL, KumseeTeddy, Muralirk, Naveen111213, omprakash_71, Rajmagesh, raspudinjr, rojaraja, Royal enfield, samns, Sanjukrishna, Tamilmathi
Posts: 335
Threads: 1
Likes Received: 128 in 118 posts
Likes Given: 320
Joined: Jan 2019
Reputation:
3
•
Posts: 1,717
Threads: 0
Likes Received: 777 in 665 posts
Likes Given: 3,299
Joined: Oct 2020
Reputation:
3
Very interesting story thanks for update please continue waiting for next update
•
Posts: 247
Threads: 11
Likes Received: 1,943 in 205 posts
Likes Given: 548
Joined: Oct 2024
Reputation:
141
[img]<a href=[/img]
மீனாவின் உருவகம் இதுதான்..
•
Posts: 247
Threads: 11
Likes Received: 1,943 in 205 posts
Likes Given: 548
Joined: Oct 2024
Reputation:
141
நான் உண்மையாகவே கோபமாகச் சென்றது என் சித்தப்பனைப்பார்த்துதான்...கூட அந்த அவனை எனக்கு யாரென்றே தெரியாது.. ஆனால் சித்தியோ நான் அவரைக்கூட்டிவந்தவனை திட்டத்தான் போகிறேன் என்று பதறியபடி பின்னாலேயே ஓடிவந்தாள்.. என் அருகில் சித்தி வருவதைப்பார்த்த அந்த ஆள் சித்தியைப் பார்த்தும் அதே கேவலமான சிரிப்பை்சிரித்தபடி..
அக்கா... வாக்கா.. நல்லாருக்கியா..? மீனாப்புள்ளெ என்ன பன்னுது..?
சித்தியை அவன் உறவு சொல்லி அழைத்ததும் மீனாவை அவன் உரிமையுடன் விசாரித்ததும் எனக்கு எரிச்சலைத்தரவே.. அவனை சற்று கடுப்புடன் முறைத்துக்கொண்டே..
ணே.. நீ யாரு மொத..? என் சித்திய அக்கான்ற.. வீட்ல இருக்க வயசுப்புள்ளய அது இதுன்ற.. யாரு நீ..?
நான் அப்படிக் கே்பேன் என்பதை எதிர்பார்க்காத அவன் என்னை மேலும் கிழும் பார்த்துவிட்டு எனக்கு பதில் சொல்லாமல் ஒரு நக்கல் பார்வையைப் பார்த்தவாறே.. சித்தியைப் பார்த்தான். அவளும் சற்று கலவரத்துன் இருக்கவே அதையும் பொருட்படுத்தாமல்..
ஏங்க்கா.. தம்பி யாரு..? உன் தூரத்து சொந்தமா..? ரொம்ப சூடா இருக்காப்டியே...?
ஆமா மா சூடாத்தான் இருக்கேன். நீ யாருனே சொல்லலயேணே.. யாரு நீ..? அந்தாள எறக்கிவிடத்தான வந்த..? இனி நீ கௌம்பு.
மறுபடியும் எனது பேச்சால் கடுப்பானவன் இப்போது தள்ளாடியபடி சித்தபனை அப்படியே சித்தயிடம் சாத்தி ஒப்படைத்துவிட்டு கஷ்டப்பட்டு சைடு ஸ்டான்டைப் போட்டுவிட்டு தனது பாக்கெட்டில் இருந்த சிகரெட்டைப் பற்றவைத்தவாறு மெல்ல.புகையை இழுத்து ஊதியபடி நின்றான். அவனால் நேராகக்கூட நிற்கமுடியவில்லை.. அவனது உடம்பில் இருந்து வந்த முட நாற்றம் இப்போது எனக்கும் அருவறுப்பாய்த் தெரிந்தது.. அப்படியே நேராக வீட்டுக்குள் எட்டிப் பார்த்தவன் அங்கே மீனா பேசாமல் உட்காரந்துகொண்டு என்னையே பார்த்தபடி இருப்பதைக் கவனித்தான்..
ஏய்.. என்ன மீனா.. மாமன ஒருத்தன் மரியாதக் கொறவா பேசிட்ருக்கான்.. நீ சேர்ல உக்காந்துட்ருக்க.. வெளிய வாடி மொத...
அவன் பேசி முடித்த அடுத்த நொடி அவனே எதிர்பார்க்காத வண்ணம் அவன் மூக்கிலும் பின்னர் அன் கன்னத்திலும் இடியென இரண்டு குத்துக்கள் இறங்கவே..சற்று நேரத்தில் நிதானம் இழந்தவன் அப்படியே தரையில் சரிந்தன். அவனது மூக்கிலும் வாயிலும் ரத்தம் வழிந்தபடி இருந்தது... பேச்சு மூச்சில்லாமல் கிடந்தவனைப் பார்த்து திடு்க்கிட்ட என் சித்தி அப்படியே தான் தாங்கியிருந்த சித்தப்பனை கீழே போட்டுவிட்டு என்னை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.. அவளது வாய் அப்படியே பிளந்தபடி இருந்தது.. கண்களில் கண்ணீர் கசிந்து எட்டிப் பார்த்தபடி இருந்தது..
கீழே விழுந்தவனுக்கு மறுபடியும் முழிப்பு வரவே இந்தமுறை தள்ளாடி எழுந்து நின்று தனது கழன்டுவிழுந்த கைலியை எடுத்துக் கட்டியபடி மீண்டும் என்னை அடிக்கக் கை ஓங்கியவனின் வயிற்றில் இறங்கிய குத்தால் வாந்தியெடத்தபடி அப்படியே உட்கார்ந்துகொண்டான். இவ்வளவு நடந்தும் மீனா சிறிய அசைவைக்கூட காட்டவில்லை.. அப்படியே சேரில் உடனகார்ந்தபடி அவன் வலியில் துடிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது முகத்தில் ஒரு பரம திருப்தியுடன்கூடிய அமைதி நிலவியது. ஆனால் அந்த இடத்தில் அவளது அமைதி எனக்கு இன்னும் ஆத்திரத்தைத்தான் கூட்டியது.
ஐயோ தமுழு.. ஒன்ன கையெடுத்துக் கும்புட்றேன்.. வீட்டுக்குள்ள போ.. வந்ததும் வராததுமா இங்க வம்புழுத்துறாத.. என்றபடி உண்மையாக்வே கையெடுத்துக் கும்பிட்டபடி அழத்தொடங்கிவிட்டாள் சித்தி..
சித்தி என்முன்னால் அழுவதைத் தாங்கமுடியாமல் அவளையும் தர தரவென்று இழுத்துக்கொண்டு நானும் வீட்டுக்குள் நுழைந்தேன். வாசலில் சித்தப்பனும் கூட வந்தவனும் போதையில் படுத்துக் கிடந்தனர்.. வீட்டுவாசலில் நடந்த இந்த ஆரவாரத்தால் எங்கிருந்தோ இரண்டு மூன்று நாய்கள் ஒன்றுகூடி எங்கள் வீட்டுவாசல்முன் நின்று சத்தமிடவே.. சத்தம் கேட்டு 100 மீட்டர் தொலைவில் இருந்த ஒரே ஒரு வீட்டிற்குள் இருந்து ஒரு 40 வயது மதிக்கத்தக்க ஒருவரும் 30 வயது மதிக்கத்தக்க அவரது மனைவியும் கையில் டார்ச் லைட்டுடன் எங்கள் வீட்டை நோக்கி வரத்தொடங்கினர்.. இதைக் கவனித்த கீழே வலியில் முனகிக் கொண்டிருந்த அந்த குடிகாரன் அப்படியே எழுந்து தள்ளாடியபடி இடத்தைக் காலி செய்தான். இருட்டில் அவன் எங்கு சென்றான் என்று தெரியவில்லை..
ப்ப்ச்ச்.. சும்மா அழுதுட்ருந்தனா ஒனக்கும் ரெண்டு விழுந்துரும் பாத்துக்க.. யாரு அந்தப் புண்டமவன்..? ஒன்ன வாபோன்றான் மீனாவ வாடி போடின்றான்.. நீ அவனத் திட்டாம என்னப்பாத்து வம்பிழுக்காதன்ற..? என்னதான் நடக்குது இங்க..?
ஆதுவரை அமைதியாக இருந்த மீனாவைப் பார்த்தால் அவள் இப்போது என்னை நக்கலாக ஒரு பார்வை பார்த்தபடி சிரித்தாள்..
யப்பா ஹீரோ கொஞ்சம் அடங்கு.. இத்தன வருசம் இல்ாம இப்பத்தான இந்த வீட்டுப்பக்கம் வந்துருக்க..? இன்னும் ஒரு மாத்தைல கௌம்பி நீம்பாட்டுக்கும் போயிருவ.. அதுவரைக்கும் அடக்கி வாசிச்சுட்டு போங்க சார்.. சும்மா என்ன ஏதுனு தெரியம குதிக்காம..
மீனாவின் இந்தப் பேச்சு என்னை இன்னும் சூடாக்கியது.. ஆத்திரம் தாங்காமல் அவள் உட்கார்ந்திருந்த சேரை ஓங்கி ஒரே உதை உதைத்தேன். நான் அப்படியெல்லாம் செய்யமாட்டேன் என்கிற நினைப்பில் இருந்த மீனாவும் சேருடன் சேர்ந்து தரையில் உருண்டு கிடந்தாள். வேக வேகமாக ரூமுக்குள் சென்று என் பேக்கை எடுத்துத் தோளில் மாட்டியபடி காரியாப்பட்டி பஸ் ஸ்டான்ட் நோக்கி நடக்கத் தொடங்கினேன்..
சின்ன அழுகையாக அழுதுகொண்டிருந்த சித்தி இப்போது ஒப்பாரியே வைக்க ஆரம்பித்துவிட்டாள்.. என்னைப் போக விடாமல் என் பேக்கைப் பிடித்து இழுத்தபடி என் பின்னாலேயே கெஞ்சிக் கொண்டு வந்திருந்தாள்.
ஏ.. என்னவிடு.. இந்த வீட்டுக்கு நா வந்தது தப்புதான். இனியே இந்த வீட்டுக்குள்ள நா காலெடுத்து வச்சா என்ன செருப்பாலேயே அடி.. என்றுவிட்டு என் சித்தியை உதறித்தள்ளிவிட்டு மீனாவைத் திரும்பிக்கூட பார்க்காமல் நடக்கத் தொடங்கினேன்..
இவ்வளயைும் பார்த்துக்கொண்டே வந்த அந்தத் தம்பதியர் இரண்டுபேரும் என்னை மறித்து நிறுத்தினர்.. அவருக்கு பார்த்தவுடனேயே நான் யார் என்று தெரிந்ததும் அவரது மனைவியை அழுதுகொண்டிருந்த என் சித்தியை சமாதானம் செய்ய அனுப்பிவிட்டு என்னை என் விருப்பத்தையும் மீறி அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.. போகும்போது எதேச்சையாக திரும்பிப் பார்த்தேன்.. அங்கே மீனா சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தபடி தன் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள். அவளது கண்ணீர் எனது மொத்த கோபத்தையும் ஒரு நொடியில் குழிதோண்டிப் புதைத்திருந்தது.
The following 14 users Like Kingtamil's post:14 users Like Kingtamil's post
• Ammapasam, flamingopink, KILANDIL, KumseeTeddy, life21man, Muralirk, Naveen111213, omprakash_71, Rajmagesh, Royal enfield, samns, Sanjukrishna, Tamilmathi, Vkdon
Posts: 1,347
Threads: 1
Likes Received: 742 in 599 posts
Likes Given: 2,475
Joined: Jan 2024
Reputation:
7
Good update bro
Keep rocking
•
Posts: 1,717
Threads: 0
Likes Received: 777 in 665 posts
Likes Given: 3,299
Joined: Oct 2020
Reputation:
3
Very interesting update bro really superrrrrrrrrpp story please continue thanks for update
•
Posts: 2,155
Threads: 1
Likes Received: 1,240 in 830 posts
Likes Given: 1,133
Joined: Jun 2021
Reputation:
16
story moving good. new drunkard character is irritating and so the boy kicked him. But what is more irritating is both mom and daughter just NOT telling who he is and irritating the boy who is trying to help them
இங்கே என் முதல் முயற்சி
மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)
•
Posts: 2,856
Threads: 0
Likes Received: 1,401 in 1,127 posts
Likes Given: 1,602
Joined: May 2019
Reputation:
20
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக மீனா ஒருவன் பேசி நினைத்து அவனுடன் சண்டை போட்டு தன் சித்தி கோவமாக பேசும் போது மீனா அவள் உள்ளே இருக்கும் ஆதங்கத்தை சொல்லியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது.
•
|