Posts: 109
Threads: 8
Likes Received: 214 in 68 posts
Likes Given: 30
Joined: Feb 2019
Reputation:
7
முன் குறிப்பு:
கதையில் 4 முக்கிய கதாபாத்திரங்கள். ஒவ்வொருவரும் பேசுவது போல கதை நகரும். சில காட்சிகளில், ஒருவர் தன் தரப்பை சொன்னது போல, அதே சம்பவத்தை இன்னொருவர் தன் கண்ணோட்டத்தில் சொல்வது போலவும் வரலாம். விருமாண்டி படத்தை போல.
Posts: 109
Threads: 8
Likes Received: 214 in 68 posts
Likes Given: 30
Joined: Feb 2019
Reputation:
7
24 வருஷமா நான் பாதுகாத்துவந்த ரகசியம் இன்னைக்கு உடைஞ்சிடுச்சி.
ஹ்ம்ம்ம்.... இப்போ எவன் என்னை கேள்வி கேட்க முடியும். போங்கடா மயிறுன்னு போய்க்கிட்டே இருக்க வேண்டியது தான். இந்த சுந்தர் யாருன்னு காட்டவேண்டியது தான்.
24 வருஷத்துக்கு முன்ன....
மார்ச் 2001.
என்னோட முதல் மனைவியோட விவாகரத்து ஆகி என் கைக்கு கோர்ட் ஆர்டர் வந்தது பெரிய சந்தோசம். முழுக்க முழுக்க தோல்வி அடைஞ்ச கல்யாணம். நான் 'அப்பர் மிடில் கிளாஸ்'. நல்ல வசதி. தனியார் வேலை தான். இருந்தாலும் நல்ல சம்பளம். அப்பா ஓய்வு பெற்ற அரசு உயரதிகாரி.
முதல் மனைவி - அப்பாவின் நண்பரோட மகள். எங்களுக்கு சம அந்தஸ்து. ஆனால்.... அவள் விருப்பம் இல்லாமல் கல்யாணம் நடந்திருக்கு. எனக்கு முதலிரவுலதான் தெரியும். இப்போ மாதிரி கல்யாணத்துக்கு முன்னே பேசுறதெல்லாம் அப்போ பழக்கம் இல்லை.
அப்பா அம்மாவுக்கு இதில் பெரிய குற்ற உணர்ச்சி. நாங்களே உன் வாழ்க்கையை கெடுத்துட்டோமேன்னு ரொம்ப பீல் பண்ணுனாங்க.
தங்கை அமெரிக்காவுல இருந்தா. அவ பிரசவத்திற்கு அவங்க அங்கே போயிருந்தாங்க.
அடுத்த கல்யாணம் முழுக்க முழுக்க நான் பார்த்து முடிவு பண்ணுறது தான்னு சொல்லிட்டேன். அவங்களுக்கும் சம்மதம். நல்லா வாழ்ந்தா சரின்னு சொல்லிட்டாங்க.
என் தூரத்து சொந்தக்காரர் ஒரு கல்யாண புரோக்கர். பேரு துரை. அவர் கிட்டே சொல்லி வெச்சேன். என்ன மாதிரி பொண்ணு வேணும்னு கேட்டார். எனக்கே ரெண்டாம் கல்யாணம். அதனால, விதவையான இளம் பெண் வேணும்னு சொன்னேன். நல்லா அழகா இருக்கணும். நிறம் எந்த நிறமா இருந்தாலும் பரவாயில்லை. வசதி குறைந்த இடமா இருந்தா ரொம்ப நல்லது. ஜாதி / மதம் பேதமில்லை.
அவர் ஊர் கும்பகோணம். எங்க பூர்வீக ஊருக்கு பக்கம். அவர் எப்போதும் வாங்கும் தொகையை விட 2 மடங்கு தர்றேன்னு சொல்லி, அதுல கால்வாசி தொகையை அட்வான்சா கொடுத்துட்டேன். அவருக்கு ஏக சந்தோசம். மும்மரமா இறங்கிட்டார்.
அப்போ என் நண்பன் நம்பி வேறொரு ஆளை கூட்டி வந்தான். பேரு பொன்னுசாமி. சென்னையை சேர்ந்த கல்யாண புரோக்கர். அவர் கிட்டேயும் இதே கண்டிஷன் தான் சொன்னேன். கூடவே ஒரு எக்ஸ்டரா கண்டீஷன் சொன்னேன். பொண்ணுக்கு முதல் கணவன் மூலம் குழந்தை இருந்தாலும் பரவாயில்லை. நல்ல பொண்ணா இருந்தா சரி. இவருக்கும் fees துரை மாதிரியே தான் சொன்னேன். தாராளமா அட்வான்ஸ் கொடுத்த client நான் மட்டும்தான்னு ரொம்ப சந்தோஷப்பட்டார்.
அன்னைக்கு என் ஆபீஸ் அட்ரஸுக்கு ஒரு கவர் ரெஜிஸ்டர்ட் போஸ்ட்ல வந்திருந்தது. துரை அனுப்பி இருந்தார்.
ஒரு போட்டோ & கடிதம்.
"தம்பி, நீங்கள் கேட்ட அத்தனை அம்சங்களோடு கூடிய பெண். பெயர் லதா. கல்யாணம் ஆன ஒரே வாரத்தில் கணவன் ஒரு விபத்தில் இறந்துவிட்டான். அந்த துயரம் நடந்து 1 ஆண்டு முடியப்போகிறது. குடும்பத்திற்கு மூத்தவள். அப்பா ஒரு கூட்டுறவு சொசைட்டியில் வேலை. சிரமப்படும் குடும்பம் தான். இவளுக்கு 2 தங்கைகள். இவள் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ எலெக்ட்ரானிக்ஸ் படித்துவிட்டு, 2 ஆண்டுகள் சோழன் போக்குவரத்து கழகத்தில் அப்பிரண்டிஸ் டிரைனிங் முடித்துள்ளாள். வயது 21. கொஞ்சம் கருப்புதான். ஆனால் நல்ல அழகும் லட்சணமும். எந்த சீரும் செய்யும் நிலையில் குடும்பம் இல்லை. முதல் திருமணத்திற்கு வாங்கிய கடனையே இன்னும் அடைக்கவில்லையாம்."
போட்டோவை பார்த்தேன். அம்சமாக இருந்தாள். ரொம்ப பிடிச்சி இருந்தது.
அவருக்கு ஒரு PP நம்பர் உண்டு. சென்னை டு கும்பகோணம் அப்போதெல்லாம் எஸ்.டி.டி. கால். கால் செய்தேன். அது ஒரு மளிகை கடை நம்பர். அவர் ஒரு மணிநேரம் கழித்து கூப்பிட சொன்னார்.
போட்டோவையும் லேட்டரையும் என் பிரீப் கேசில் வைத்துவிட்டு நிமிரவும் இன்டர்காம் அடிக்கவும் சரியாக இருந்தது. "பொன்னுசாமின்னு ஒருத்தர் உங்களை பார்க்க வந்திருக்கிறார்" என்றாள் ரிஷப்ஷனிஸ்ட். உள்ளே அனுப்பச்சொன்னேன்.
வந்தார்.
"வாங்க பொன்னுசாமி. உட்காருங்க. நல்லா இருக்கீங்களா"
"நல்லா இருக்கேன் சார்" வாயெல்லாம் பல்லாக உட்கார்ந்தார். தான் பையில் இருந்து ஒரு போட்டோவை எடுத்து மேஜை மேல் வைத்தார். "பாருங்க சார்"
அட.... செமையா இருக்காள். நல்ல கலர். அம்சமாக இருந்தாள். குட்டி போட்டிருப்பாளோ?!
"ம்... நல்லா இருக்கா"
"தங்கமான பொண்ணு சார். பேரு மஞ்சுளா" லேசாக மஞ்சள் நிறத்தோடு இருக்கிறாள் என்று தோன்றியது.
"ம்" நான் போட்டோவையே பார்த்துக்கொண்டு இருந்தேன்.
"வயசு 25. ஆவடி. அம்மா, அண்ணன். அண்ணனுக்கு கல்யாணம் ஆகிடிச்சி"
"அவன் கதை அப்புறம். இவளை பத்தி சொல்லுங்க"
"கல்யாணம் ஆகி 5 மாசத்துல புருஷன் ஒரு ஆக்சிடெண்ட்ல இறந்துட்டான். பாவம் அப்ப இது புள்ளத்தாச்சியா இருந்திருக்கு."
"புள்ளையை பத்தி சொல்லுங்க"
"பொட்ட புள்ளை. 5 வயசு ஆகுது. பாவம் அப்பன் முகத்தை பார்த்ததே இல்லை"
"எப்போ பொண்ணு பார்க்க போகலாம்"
"நீங்க சரின்னா நாளைக்கே போகலாம்"
"வீட்டுல வேற யாரெல்லாம் இருக்காங்கன்னு சொன்னீங்க?"
"அம்மா. அண்ணன். அண்ணி. அண்ணனுக்கு 1 வயசுல குழந்தை இருக்கு. அப்புறம்...."
"ம்... சொல்லுங்க"
"ஜாதி மத பேதமில்லைன்னு சொன்னீங்க. மொழி?"
"ஏன்? எந்த ஊரு ஆளுங்க இதுங்க"
"சொந்த ஊர் ஆந்திரா ராஜமுந்திரி. இவங்க அப்பா காலத்துல இருந்தே இங்கே ஆவடியில் தான். அப்பா 10 வருஷம் முன்ன தவறிப்போயிட்டாரு. பசங்க படிச்சதெல்லாம் இங்கே தான்"
"எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. இந்த பொண்ணு விதவையாகி எத்தனை வருஷம் ஆகுது"
"5 வருஷத்துக்கு மேல... அவங்க குடும்பத்துல பொண்ணுங்களுக்கு ரெண்டாம் கல்யாணம் பண்ணிவைக்கிற வழக்கம் இல்லை போல... இப்போ வீட்டுக்கு வந்த மருமக கொடுக்குற டார்ச்சர் தாங்கலையாம். அதான் பொண்ணுக்கு ரெண்டாம் கல்யாணம் பண்ணி அனுப்பிட்டாளாவது குடும்பத்துக்குள்ள குழப்பம் இல்லைனு நினைக்கிறாங்க"
"ஓ! அண்ணன்காரன் என்ன வேலை பார்க்கிறான்."
"அவன் கார்மெண்ட்ஸ் கம்பெனியில சூப்பர்வைசர். அம்மா டைலர்"
"ம்..."
"பிடிச்சிருக்கா சார்"
"நாளைக்கு நேர்ல பார்த்துட்டு சொல்றேன்".
"அப்புறம் சார், வசதி குறைச்சல். ஏதும் எதிர்பார்க்காதீங்க"
"புரியுது"
அவர் கிளம்பினார். போட்டோ என்னிடம் கொடுத்திருந்தார்.
என் லாண்ட்லைன் போன் அடித்தது. கும்பகோணத்தில் இருந்து துரை. நானே திரும்ப கூப்பிடுறேன்னு சொல்லி போனை வைத்துவிட்டு, அவருக்கு திரும்ப கால் செய்தேன்.
விசாரிப்புக்கள் எல்லாம் முடிந்தது.
"சொல்லுங்க சித்தப்பா. பொண்ணு எப்படி"
"சொக்கத்தங்கம் தம்பி"
"நகை செஞ்சி போட்டுக்க வேண்டியது தானே"
"பாவம் குடும்பம் தான் வசதி இல்லாதது."
"அது கிடக்கட்டும். இந்த பொண்ணுக்கு குழந்தை இல்லைல"
"இல்லை. கல்யாணம் ஆகி முழுசா ஒரு வாரம் கூட அவன் இல்லையே"
"சரி சரி"
"எப்போ பார்க்க வர்றீங்க?"
"பொண்ணு ஊரு கும்பகோணமா"
"இல்லைங்க தம்பி. தஞ்சாவூர் பக்கத்துல ஒரு கிராமம்"
"இன்னைக்கு புதன். வெள்ளிக்கிழமை ராத்திரி கிளம்பி சனி காலையில திருச்சி. அங்கே இருந்து தஞ்சாவூர் வந்து ரூம் எடுத்து தங்குறேன். நீங்க வந்துடுங்க. சனிக்கிழமை சாயந்தரம் பொண்ணு பார்த்துடலாம்"
"ரொம்ப நல்லது தம்பி"
"இந்த பழம், பூ தட்டெல்லாம் நீங்க ஏற்பாடு பண்ணிடுங்க. நான் பணம் தந்திடுறேன்"
"அதுக்கென்ன தம்பி". போனை வைத்துவிட்டேன்.
இரண்டு போட்டோக்களையும் பக்கத்தில் வைத்து பார்த்தேன். இரண்டு பெரும் இரு விதங்களில் அழகிகள்.
தஞ்சாவூர்காரி சற்றே கருப்பு. ரொம்ப குடும்பப்பாங்கான இருந்தாள். அவடிக்காரி (ஆந்திராக்காரி) நல்ல கலர். இருந்தாலும் பாடிய தலைவாரி சின்ன ஸ்டிக்கர் போட்டு வைத்து ஹோம்லியாகத்தான் இருந்தாள். இவளுக்கு 5 வயதில் பெண்குழந்தை இருக்காமே.... ரெண்டு பேரையும் பார்ப்போம். பின்னாடி முடிவு செய்துக்கலாம்.
-------------
ஞாயிற்றுக்கிழமை காலையில் பஸ் பிடித்து சென்னை பயணமானேன்.
குழப்பம்.
ரெண்டு பெண்களையும் பார்த்தாயிற்று. ரெண்டுமே பிடித்து இருந்தது.
அப்போதெல்லாம் மபசல் பேருந்துகளில் வீடியோவில் புதுப்படம் போடும் வழக்கம் உண்டு. வீடியோவில் ரஜினி நடித்த வீரா படம் ஓடிக்கொண்டு இருந்தது.
மெல்ல சிரித்தேன்.
எதுக்கு குழப்பம். ரெண்டு பேருக்கும் வாழ்க்கை கொடுத்திட வேண்டியது தான்.
Posts: 1,336
Threads: 2
Likes Received: 629 in 481 posts
Likes Given: 134
Joined: Feb 2019
Reputation:
12
கதை ஒரு பலமான அஸ்திவாரத்துடன் ஆரம்பமாகியிருக்கிறது ! வாசிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது ! அடுத்த பாகத்தை தொடருங்க !
Posts: 1,685
Threads: 0
Likes Received: 760 in 648 posts
Likes Given: 3,254
Joined: Oct 2020
Reputation:
3
Interesting story thanks for your story please continue
Posts: 109
Threads: 8
Likes Received: 214 in 68 posts
Likes Given: 30
Joined: Feb 2019
Reputation:
7
"மஞ்சு இக்கட ரா" அம்மாவின் குரல் கிச்சனில் இருந்து. இந்த வீட்டுல இது ஒரு இம்சை. எப்போ பார்த்தாலும் சாமி, பூஜை.
"ஒஸ்தானு" என்றேன்.
நான் மஞ்சுளா. எங்கள் சொந்த ஊர் ராஜமுந்திரி பக்கம். அப்பா காலத்தில் இங்கே ஆவடிக்கு வந்தோம். நானும் அண்ணனும் படிச்சதெல்லாம் தமிழ் மீடியம் தான்.
இன்றைக்கு வீட்டில் பூஜை. அதற்கான ஏற்பாடுகள் நடக்குது. அம்மா அண்ணிக்காரியை தான் கைக்கு வெச்சிக்கிறா. நான் விதவையாம். அம்மாவும் விதவை தான். ஆனாலும் வீட்டில் சுமையாக நானும் என் மகளும் இருக்கோம். அதான் இப்படி.
நான் என்ன பண்ண. கல்யாணம் ஆகி 5 மாசம் கூட ஆகலை. கடல்ல பிரெண்ட்ஸ் கூட குளிக்க போனவரு. திரும்ப பிணமாத்தான் வந்தார். கர்ப்பிணியான என்னக்கு வாழ பிடிக்கலை தான். நல்ல மனுஷன். ரொம்ப சந்தோஷமா இருந்தோம். அம்மா வீட்டுல இருந்து 3 வீடு தள்ளி ஒரு வீட்டு மாடியில தனி குடித்தனம். அன்பான கணவன். தினம் தினம் தீபாவளி. யார் கண்ணு பட்டுச்சோ.
இப்போ வயசு 25. வாழ்க்கையே சூனியமா இருக்கு. எங்க சாதி சனத்துல பொண்ணுக்கு ரெண்டாம் கல்யாணம் கிடையாது. ஆனால் அண்ணி எனக்கு கொடுக்குற டார்ச்சர் தாங்காம எனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வெச்சிடணும்னு வீட்டுல முடிவு பண்ணிட்டாங்க. அண்ணி என்னை விட 4 வயசு சின்னவ. ஆனால் பெரிய வில்லி. அவ அம்மா வீடு 2 தெரு தள்ளித்தான். அவங்க சப்போர்ட் நிறைய. அதான் ஆடுறா.
இது வரை 3 இடம் பொண்ணு பார்க்க வந்துட்டாங்க. எல்லாம் என் அப்பா வயசு மாப்பிள்ளைங்க. ச்சீ.... செத்திடலாம் போல இருக்கு.
"அம்மா.... அம்மா.... இக்கட ரா" அண்ணன் வந்துட்டான். ஏன் இவ்வளவு பரபரப்பு?
விஷயத்தை சொன்னான். ப்ரோக்கர் பார்த்தாராம். நல்ல இடமாம். இப்போ தான் அவருக்கு டைவர்ஸ் ஆகி இருக்காம். வயசு 32 தானாம். அம்மாவுக்கு வரதட்சணை ஏதும் கேட்பாங்களோன்னு பயம். அண்ணன் சொன்னான் அதெல்லாம் வேண்டாம் நல்ல பொண்ணு தான் வேணுமாம். குழந்தை இருக்கேன்னு சொன்னா - பாப்பாவையும் நல்லா பார்த்துக்குவேன், படிக்கவைச்சு கல்யாணமும் பண்ணி வைப்பேன்னு சொல்றாராம்.
நல்ல விஷயம் தான். சந்தோஷப்படுறதான்னு தான் தெரியலை. நான் ஒரு அதிர்ஷ்ட கட்டை. முதல்ல நல்லபடியா முடியட்டும். அப்புறம் சந்தோஷப்படலாம்.
------
அவர் பெண் பார்க்க வந்தப்போ அசந்துட்டேன். இவர் என்ன கார்ல வர்றார்! ஆளும் செம handsome. இவரா நமக்கு கிடைக்கப்போறார்?
வந்தவர் என் மகளுக்கு தனியா சாக்லேட்களும், விளையாட்டு பொருட்களும் வாங்கி வந்திருந்தார். அண்ணனின் மகள் ஒரு வயது தான் ஆகிறது, அதற்கும் தனியாக விளையாட்டுப்பொருட்கள் வாங்கி வந்திருந்தார்.
என் கிட்ட தனியா பேசணும்னு சொன்னாராம். மொட்டை மாடிக்கு அண்ணன் கூட்டி போனான். எங்களை தனியா விட்டுட்டு கீழே போயிட்டான்.
"ஹாய் மஞ்சுளா"
அவரை ஏறெடுத்து பார்த்து வணக்கம் வெச்சேன்.
"ரொம்ப பார்மலா இருக்காதே. கேஷுவலா இரு." என்றார். குரல் கம்பீரமாவும் இனிமையாவும் இருந்தது. எனக்கு நம்பவே முடியலை.
அவரே சொன்னார்... "ஏதும் பேச மாட்டியா.... என்னை பிடிக்கலையா"
"அப்படி இல்லைங்க... "
"அப்படி இல்லைனா? பிடிச்சிருக்கா?"
"வீட்டுல பெரியவங்க என்ன சொல்றாங்களோ..."
"ஹேய்.... இது நம்ம ரெண்டு பேருக்கும் முதல் கல்யாணம் இல்ல. ஏற்கனவே வாழ்க்கையை தொலைச்சவங்க. பெரியவங்க பார்த்து ஜாதகம் பார்த்து பண்ண முதல் கல்யாணம் ரெண்டு பேருக்கும் தோல்வி இல்லையா... "
"ம்..."
"இந்த தடவை நாம தான் முடிவெடுக்கணும். சொல்லு. பிடிச்சிருக்கா?"
அவரை உற்றுப்பார்த்தேன். அப்பா.... என்னமா இருக்கார். "பயமா இருக்கு"
"ஏன் நான் என்ன அவ்வ்ளோ கொடூரமாவா இருக்கேன்"
"அய்யோ.... அது இல்லைங்க. எங்க நான் உங்கள பிடிச்சிருக்குன்னு சொல்லி.... உங்களுக்கு ஏதாவது ஆயிடுமோன்னு..."
"ஓ... சென்டிமென்ட்ஸ்... உன் முதல் புருஷனை பிடிக்குமா"
"ம்.."
"என்னை விட நல்லா இருப்பாரா"
இல்லை தான். அவர் கருப்பு. ஆளும் பார்க்க அப்படி ஒன்னும் நல்லா இருக்க மாட்டார். இருந்தாலும்... "எனக்கு பிடிச்சுது"
"ம்... குட். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பியா. நான் உன்னை நல்லா வெச்சுக்குவேன். உனக்கு ஒரு குழந்தை இருக்கில்ல.... என்ன படிக்குது"
"ஒண்ணாவது போக போகுது"
"குட்... நல்ல ஸ்கூல்ல சேர்த்திடுவேன். நல்லா படிக்க வைப்பேன். இது என் ப்ராமிஸ்"
எனக்கு அழுகை வந்தது.
"அழாத மஞ்சுளா. உன் குடும்ப சூழல் புரியுது. கல்யாண செலவெல்லாம் என்னுது. திருவான்மியூர்ல சொந்த வீடு இருக்கு. உன்னை ராணி மாதிரி வெச்சுக்குவேன்"
அவர் கால்ல விழுந்திட்டேன்.
"ஹேய்.... என்ன இது." தோள் பிடித்து எழுப்பி விட்டார்.
"ரொம்ப பட்டுட்டேங்க... வாழ்க்கை கொடுக்குறவருக்கு நாயாட்டம் இருப்பேன். பயம் மட்டும் தான். என் துரதிஷ்டம் உங்களை ஒன்னும் பண்ணிடக்கூடாது" கை கூப்பி சொன்னேன்.
அவர் அப்பா அம்மா இப்போ அமெரிக்காவுல தங்கச்சி வீட்டுல இருப்பதாவும், கல்யாணத்துக்கு அவங்க சைடுல சில சொந்தங்கள் மட்டும் தான் வரும்னும் சொன்னார். அவர் வேலை விஷயமா ஒரு வாரம் சென்னை, மறுவாரம் வெளியூர்ன்னு போக வேண்டி இருக்கும்னு சொன்னார்.
அவர் மேல இருந்து சென்ட் வாசம். அவர் வாயில இருந்து கூட ஒரு நல்ல வாசம். (ஐயோ என் வாய் ஏதும் நாறுமோ? அவர் முகம் சுழிக்கலை. அதுவரை சந்தோசம்).
கீழே போனோம். பாப்பாவை அவர் மடியில வெச்சிக்கிட்டார். பெரியவங்க பேசினாங்க. அவர் சித்தப்பா ஒருத்தர் வேலூர்ல இருந்து வந்திருந்தார். வர்ற வெள்ளி போக அடுத்த வெள்ளி கல்யாணம் வெச்சுக்கலாம். திருநீர்மலையில கல்யாணம். நல்ல ஓட்டல்ல சாயந்திரம் சிம்பிளா விருந்துன்னு முடிவாச்சு. இன்னைக்கு வியாழன். சரியா 9ம் நாள் கல்யாணம். இவ்வளவு சீக்கிரமாவா?
எனக்கு மலைப்பா இருந்துச்சி. கிளம்பும்போது என்னை தனியா கூப்பிட்டார்.
"உனக்கு ஓகே தானே?"
"ம்..."
"ஏதோ மனசுல வெச்சிருக்க போலையே"
"இல்லைங்க.... பூரண சம்மதம்" என்றேன் முக மலர்ச்சியாக.
"அப்போ சரி. ரெடியா இரு. விருந்து சாப்பிட"
"ம்..."
"நான் பகல் விருந்தை சொல்லலை. ராத்திரி விருந்தை"
எனக்கு வெட்கம் தாங்க முடியலை. தலை குனிந்தேன்.
"என்னடி கன்னிப்பொண்ணு மாதிரி வெட்கப்படுறே"
அதானே!
"நீங்க பத்திரமா போயிட்டு வாங்க"
"ம்... பயப்படாதே. ஆமாம்... தெலுங்குக்காரி தானே நீ... புருஷனை எப்படி கூப்பிடுவே?"
"ஏமண்டி-ன்னு"
"எமண்டி... என்னங்க மாதிரி இல்ல"
"ம்..."
"சிலுக்கு படத்துல வேற மாதிரி இல்ல கூப்பிடும். 'பாவா'ன்னு"
எனக்கு திரும்ப வெட்கம். "ம்... அப்படியும் கூப்பிடுவாங்க."
"அப்போ அப்படியே கூப்பிடு டி என் செல்லப் பொண்டாட்டி".
கிளம்பினார். எனக்கு உடலெல்லாம் காமத்தீ.
Posts: 1,484
Threads: 10
Likes Received: 4,085 in 882 posts
Likes Given: 2,522
Joined: Jun 2025
Reputation:
26
மஞ்சு இக்கட ரா
ஒஸ்தானு
மஞ்சுளாவின் அறிமுகம்
வீட்டில் பூஜை
விதவை அம்மா
மாடியில் தனி குடுத்தனாம்
அண்ணிக்காரி
கர்ப்பிணி
வயசு 25
ரெண்டாம் கல்யாணம்
டார்ச்சர்
பரபரப்பு
வரதட்சணை
அதிஷ்ட கட்டை
முதல் கல்யாணம்
சென்ட்டிமெண்ட்ஸ்
கருப்பு
நல்ல ஸ்கூல்
மஞ்சுளாவின் அழுகை
சொந்த வீடு
வெளியூர் வேலை
சென்ட் வாசனை
வாய் நாற்றம்
திருநீர்மலையில் கல்யாணம்
பூரண சம்மதம்
பகல் விருந்து
சிலுக்கு படம்
ப்ரோ மிக மிக அருமையான பதிவு ப்ரோ
அவர்கள் இருவரும் தனிமையில் பேசுவது சூப்பர்
அவன் அவள் முதல் கணவனை பற்றி கம்ப்பேர் பண்ணி கேள்விகள் கேட்பது செம ஹாட் ப்ரோ
பிறகு அவர்கள் கல்யாணம்
தெலுங்கு வார்த்தைகள் எல்லாமே சூப்பர் ஓ சூப்பர் ப்ரோ
உயிரோட்டமுள்ள கதை ப்ரோ
நன்றி
•
Posts: 200
Threads: 3
Likes Received: 163 in 121 posts
Likes Given: 12
Joined: Oct 2021
Reputation:
0
கதை ஆரம்பம் அமர்களமாக உள்ளது மனைவியை வெறுத்து ஒதுங்கிய ஒருவன் மறுமணம் புரிய முடிவு எடுத்து இருமணம் புரிய போகிறான் ஒரு வாரம் அங்கே ஒரு வாரம் இங்கே டகால்டி ஆட்டம் ஆட போகிறான் பயபுள்ள செம்ம மஜா கதை
•