Romance மெய்நிகர் பூவே
#1
மெய் நிகர் பூவே இந்த கதை xossip ல் நான் எழுதிய கதை. இதை இங்கு தொடரலாமா. ஆதரவு கொடுப்பீர்களா. உங்கள் கருத்துகளை கூறுங்கள் நண்பர்களே.
[+] 2 users Like bsbala92's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
welcome
plzzz ji seekirama aarambinga
Like Reply
#3
Welcome Bala.... continue please
Like Reply
#4
Welcome bro
Like Reply
#5
welcome welcome welcome Heart Heart Heart
Like Reply
#6
continue...
the site doesn't have the huge fan base like xossip...so response will be low
with regular updates you will get the response
Like Reply
#7
Continue bro
Like Reply
#8
welcome Bro... waiting for ur love stories
Like Reply
#9
நண்பரே உங்களை இங்கு கண்டதில் பெரும் மகிழ்ச்சி...
தொடருங்கள் ... எனது ஆதரவு உங்களுக்கு உண்டு...
மேலும் காதல் கதை பிரியர்கள் ஆதரவும் உங்களுக்கு நிச்சயம் உண்டு.

கார்த்தி ராஜியை காணும் ஆவலில் காத்திருக்கிறேன்....
Like Reply
#10
please continue soon...
still remember the phone conversation between Karthik and raji
liked raji boldly questioned Karthik what would you do if i doesn't Stop the marriage.

if you don't want to continue here, share it in your blog atleast
Like Reply
#11
கார்த்திக் உச்ச கட்ட கடுப்பில் இருந்தான். வாழ்க்கையில் கல்யாணம் என்ற ஒன்றே இல்லாமல் வாழ்வதே தன் லட்சியமாக கொண்டிருக்கையில் இவள் வேறு எதற்கு இடையில் வந்து குழப்பி விடுகிறாள். 

வேறு யாராக இருந்தால் இந்நேரம் தட்டி கழித்து விடலாம். பெற்ற தாயே தனக்கு எதிரில் இருக்கும் போது என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி கொண்டிருந்தான்.

ராஜியிடம் சொல்லி பார்த்தாயிற்று. அவளும் மசியவில்லை. ஏன் யாரும் என் நிலையை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள். இதற்கு வேறு வழியே இல்லையா. விடிந்தால் கல்யாணம். நாளை காலை வரை தான் டைம். யோசி கார்த்திக். பேசாம யார்ட்டையும் சொல்லாம நைட்டோட நைட்டா சென்னை போய்டலாமா. 

எஸ்.அது தான் கரெக்ட். இது என்னோட லைப். நான் ஏன் மத்தவங்களுக்காக யோசிக்கணும். கிளம்புடா கார்த்திக்.

உடுத்திய டீ ஷார்ட் மற்றும் ஷார்ட்ஸ் உடன் பர்ஸை மட்டும் எடுத்து கொண்டு வெளியே வந்தான்.

கார்த்திக் வெளியே வருவதை கண்ட அவன் தாய் அவனிடம் வந்து என்னடா மணி 11 ஆகுது இந்நேரம் எங்க போற.

அம்மா அது வந்து பக்கத்துல போயிடு வரேன்மா. பிரெண்ட்ஸ் எல்லாரையும் பாத்துட்டு வரேன்.

இந்நேரம் எங்கடா. அதான் எல்லாரும் நாளைக்கு கல்யாணத்துக்கு வருவங்கள்ல அங்க வச்சி பாத்துக்கலாம். இப்போ போய் நீ ரெஸ்ட் எடு.

அம்மா இல்லமா. பாலா எங்க. அவனை பாத்துட்டு வரேன்.

ப்ச். அவன் எங்க போக போறான். நான் தான் அவனை ஒரு வேலையா மண்டபம் வரை அனுப்பிருக்கேன். இப்போ வந்துடுவான். நீ முதல்ல ரூமுக்கு போ.

மண்டபத்துக்கு தான் போயிருக்கானா. சரிம்மா நான் அங்க போய்ட்டு அவனை பாத்துட்டு அவன் கூடவே வந்துடுறேன். சொல்லி விட்டு நிற்காமல் சென்றான்.

டேய் டேய் நில்லுடா. ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளுடா.

அப்போது வாசலில் பாலா டேய் மாப்ள எங்கடா போற. அம்மா கூப்பிடுறாங்கடா என்றான்.

கார்த்திக் கொலை வெறியுடன் நின்று திரும்பினான்.

அவனை பார்த்து சிரித்த முகத்துடன் என்ன மாப்ள நீ. அம்மா கூப்பிடுறாங்க. அதுவும் இல்லாம நாளைக்கு கல்யாணத்தை வச்சிக்கிட்டு இப்போ நீ எங்க அவசரமா போற. இங்க வா என்று கார்த்திக்கின் கையை பிடித்து கொண்டு இழுத்து வந்தான்.

அவனை வைத்த கண் வாங்காமல் முறைத்து கொண்டே அட சனியன் பிடிச்ச நாயே. எங்க இருந்துடா வருவீங்க. நல்ல டைமிங்கில வந்து என்ன மாட்டி விடுறீங்கடா. டேய் பாலா இந்த கல்யாணம் மட்டும் நடந்துச்சு நாளைக்கு விழுற முதல் டெட் பாடி நீதான் டா. மவனே. மனதிற்குள் நினைத்து கொண்டான்.

கார்த்திக்கின் ரியக்ஷனை ஓரளவு புரிந்து கொண்டவனாக அவன் அருகில் சென்று என்ன மாப்ள. நான் ஏதும் டைமிங்கில சொதப்பிட்டேனோ. கரெக்டா தாண்டா வந்துருக்கேன். நீ வெளிய போகவும் உன்ன வந்து காப்பாத்திட்டேன்ல. அப்போ ஏன் மொறைக்கிற. சன்னமாக கேட்டான்.

நீ ரூமுக்கு வா. உன்ன வச்சிக்கிடுறேன். மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்கும் படி சொன்னான்.

அப்புறம் என்னடா அவனே வந்துட்டான். டேய் பாலா அவனை கூட்டிட்டு ரூமுக்கு போ. நான் சாப்பாடு எடுத்துட்டு வரேன். போங்கடா ரெண்டு பெரும். இன்னும் ஏகப்பட்ட வேலை இருக்கு. போங்க சொல்லி விட்டு லட்சுமி சென்று விட கார்த்திக் பாலாவின் கழுத்தில் கையை போட்டு அவனை தன் மார்போடு இறுக்கி கொண்டு அவனை இழுத்தான்.

மாப்ள. நீதாண்டா என் உயிர் நண்பன். வா டா. உனக்கு இணைக்கு என்னோட மேரேஜ் ட்ரீட் இருக்கு. ரூமுக்கு வா. உனக்கு போதும் போதும்னு சொல்ற அளவுக்கு தரேன்.

மாப்ள மாப்ள நான் உன் பிரென்ட் டா. விற்றுடா . வீட்ல எல்லாரும் இருக்காங்க. யாராச்சும் பார்த்துட போராங்கடா.

யாரும் பாக்களை. நீ வா என்று ரூமுக்கு இழுத்து சென்று.கதவை தாளிட்டான்.

உள்ளே வந்த கட்டிலை அங்கும் இங்குமாக சுற்ற கார்த்திக் மறுமுனையில் துரத்தி கொண்டிருந்தான்.

மாப்ள நாளைக்கு இந்நேரம் உன் பொண்டாட்டிய இப்படி சுத்தி பிடிச்சி விளையாடுடா.என்ன விற்றுடா.

என்னது பொண்டாட்டியா. மவனே.முடிவே பண்ணிட்டியா. நான் பாட்டுக்கு ஜாலியா சென்னைல இருந்தவனை அதையும் இதையும் சொல்லி இங்க வரவச்சி கல்யாணம் பண்ணவா பாக்குறீங்க. மரியாதையா நின்று. மாட்டின செத்த.

மாப்ள சொல்றத கேளு. அம்மா தான் செய்ய சொன்னாங்க. நான் ஹெல்ப் பண்ணேன். அவ்ளோதான்.நீ எது கேக்கனும்னாலும் அம்மா கிட்ட கேளு.

முதல்ல நில்லுடா என்று ஒரே எட்டில் தாவி அவனை பிடித்து அவனை எட்டி உதைத்தான்.

பாலா வசமாக சிக்கி கொள்ள அம்மா அம்மா என கத்த தொடங்கினான்.

டேய் கத்தாதே. அவன் வாயை பொத்தினான்.

மம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

மீண்டும் அவன் வாயை பொத்திக்கொண்டு அடிக்க தொடங்கினான்.

ஒரு கட்டத்திற்கு மேல் திமிறி எழுந்த பாலா டேய் நிறுத்துடா. என்னடா. என்ன பார்த்தால் உனக்கு எப்படி தெரியுது. நான் எதுக்காக இதெல்லாம் பண்ணேன்னு தெரியுமா. என்று கார்த்திக்கை விட்டு விலகினான். 

எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. நானும் பாத்துட்டு இருக்கேன் ரொம்ப தான் ஓவரா போற.
Like Reply
#12
இதுக்கு மேல ஒரு அடி அடிச்ச. அவ்ளோதான் உனக்கு மரியாதை.

டேய் என்னடா சொல்ற. சாரி மச்சான். என்ன காரணம் அதை சொல்லு.

நானும் உங்கிட்ட மறச்சிடலாம்னு தான் பாத்தேன்.ஆனா கடைசில என் வாயலையே அதை சொல்ல வச்சிட்ட.

சரி என்னனு சொல்லு.

அத எப்படிடா என் வாயால சொல்லுவேன். மெதுவாக எழுந்து முடியை சரி செய்து கொண்டான். மெதுவாக கதவு பக்கம் சென்று முகத்தை சோகமாக வைத்து கொண்டான் பாலா.

டேய் எங்க போற. எதுக்காக இப்படிலாம் பண்ணின. சொல்லு.

மாப்ள அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. எல்லாம் அம்மா சொல்லி தான் இப்படி செஞ்சேன். வேற எந்த காரணமும் இல்ல. சொல்லி விட்டு கதவை தாளிட்டு ஓடினான் பாலா.

டேய் டேய். நில்லுடா கதவை திறந்து விடுடா. டேய் பாலா. நாயே.உன்னைத்தாண்டா. மவனே உனக்கு என் கைலதான்டா சாவு. டேய் டேய்.

மாப்ள பேசாம படுத்து தூங்கு. இப்போ நீ வெளியே வந்த நான் செத்தேன். மன்னிச்சிடுடா. குட் நைட். பாய்.

ச்சை. வெறுப்பாக உணர்ந்தான் கார்த்திக். ஐயோ. எல்லாம் முடிஞ்சுது. நாளைக்கு கல்யாணம். சோ இதான் என்னோட கடைசி bachilor day. நடக்கட்டும். என்ன நடக்குமோ நடக்கட்டும். கல்யாணத்துக்கு அப்புறமா தான இருக்கு. 

அடுத்து தான் செய்ய வேண்டிய அனைத்தையும் திட்டமிட்டு கொண்டு கட்டிலில் படுத்தான் கார்த்திக்.

காலை பொழுது விடிந்தது. கார்த்திக் ரூம் கதவு தட்டபட்டு கொண்டிருக்க கார்த்திக் முன்னமே குளித்து முடித்து ரெடி ஆகி இருந்தான்.

வெளியே நின்றிருந்த அவன் தாய்க்கு பெரிய ஆச்சர்யமாக இருந்தது. என்னடா இவன் கல்யாணமே வேண்டாம்னு அடம் பிடிப்பான்னு  பார்த்தால் கிளம்பி ரெடியா இருக்கான். கேட்டு விடலாமா. வேண்டாம். கேட்டு வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டால் காரியம் கெட்டு விடும். அவன் போக்கிலே போகலாம் என்று எண்ணி கொண்டு அடுத்த கட்ட சடங்குகளை செய்து விட்டு மண்டபத்திற்கு கிளம்ப தயார் ஆனார்கள்.

முதலில் மாப்பிளை வீட்டார் மண்டபத்திற்கு வந்து விட கார்த்திக் பட்டு வேஷ்டி சட்டை அணிந்து நேராக மணமகன் அறைக்குள் சென்றான்.

அவனை தனியாக இருக்க விட வேண்டாம் என எண்ணி துணைக்கு பாலாவை அவன் உடன் இருக்க சொன்னாள்.

கார்த்திக் முகத்தில் எந்த சலனத்தையும் காட்டாமல் பாலாவிடம் பேசிகொண்டிருந்தான். மச்சான் அந்த சீப்பு எடு. ஹேர் ஸ்டைல் நல்லா இருக்குல்ல. 

என்ன இவன் இப்படி மாறிட்டான். என்ன ஆச்சு.நேத்து பண்ணினதுக்கு பிடிச்சி குத்து குத்துன்னு குத்துவான்னு பார்த்தா சந்தோசமா இருக்கான்.

டேய் உங்கிட்ட தாண்டா. எடுத்து கொடுடா.

ஆங். இந்தா மாப்ள.

தலையை சீவி விட்டு அப்றம் மச்சான் முகம் கொஞ்சம் டல்லா இருக்க மாதிரி இருக்கு. அந்த பை இருக்குல்ல அதுக்குள்ள Fair and Handsome க்ரீம் இருக்கும். அதை எடுத்து கொடுடா.

மேக் அப் டேபிள் ல் அமர்ந்து கொண்டு கேட்க பாலா அவன் சொல்வதை மட்டும் செய்து கொண்டிருந்தான்.

டேய் மாப்ள நானே கேட்டுட்டு இருக்க முடியுமா. நீயெல்லாம் ஒரு பிரெண்டா டா. மாப்ள பிரென்ட் நீதானா நான் அழகா இருக்கு
கான்னு பாத்துக்கணும். எல்லாம் கேட்டா தான் செய்வியா. அந்த போதிய ஸ்ப்ரே எடு. 

பாலா பேசாமல் எடுத்து கொடுத்தான். தனது நண்பனின் மாற்றத்தை கண்டு சந்தோஷப்படுவதை இல்லை அவன் ஏதாவது திட்டத்தில் இருக்கிறான் என்று சந்தேக படுவதா. தெரியாமல் குழம்பினான்.

என்ன மாப்ள கல்யாண காலை வந்துடுச்சு போல.

ஆமா மச்சான். வாழ்க்கைல இது எவ்ளோ முக்கியமான நாள். பிடிக்குதோ பிடிக்கலையோ இணைக்கு மட்டும் சிரிச்ச மாதிரி இருக்கனும். ஏன்னா இன்னைக்கு மட்டும் தான் கடைசியா சிரிச்சிக்க முடியும். சொல்லிவிட்டு சிரித்தான் கார்த்திக்.

என்னமோ உலகத்துலயே இல்லாத புது ஜோக் சொன்னதா சிரிக்கிற. ப்ப்பா. எனக்கும் சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாகிடுச்சு. ஏன் இந்த திடீர் மாற்றம்.

என்னடா இது வம்பா போச்சு. கல்யாணம் வேண்டாம்னு சொன்னா கட்டாய படுத்துறீங்க. சரின்னு ஏத்துக்கிட்டு சந்தோசமா இருந்தாலும் இப்படி கேட்குறீங்க. என்ன தான் செய்யட்டும்.

அய்யயோ மாப்ள என்னடா இப்படி சொல்லிட்ட. நீ கல்யாணம் பண்ணினா சந்தோசப்படுற முதல் ஆள் நானேதான் இருப்பேன். நீ வா மாப்ள நான் உன்ன நம்ம தல மாதிரி ஆக்கி காட்டுறேன்.

நீ ஒரு ஆணியும் புடுங்க வேணாம். நான் ரெடி ஆகிட்டேன். 

சரி மாப்ள. நீ இரு உனக்கு குடிக்க ஏதாச்சும் கொண்டு வரேன். நீ பசியா இருப்ப. சொல்லி விட்டு வெளியேறினான் பாலா.

அங்கே மணமகள் அறையில் ராஜிக்கு மேக் அப் நடந்து கொண்டிருந்தது. உள்ளே வந்த கார்த்திக்கின் தாய் ராஜியை பார்த்தாள்.

மிதமான மேக் அப்பில் ராஜி லட்சுமி கடாட்சமாக இருந்தாள்.

வாங்க அத்தை.

ரொம்ப அழகா இருக்கமா. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு.

ராஜி வெட்கப்பட்டாள்.

அம்மா ராஜி உனக்கு ஏதும் இதுல வருத்தம் இல்லையே.

என்ன அத்தை சொல்றீங்க. எனக்கு புரியல.

இல்ல உன்கிட்ட எதுவும் கேட்காம உன் விருப்பம் இல்லாம எல்லாம் நடக்குதே. அதான் உனக்கு ஏதும் வருத்தம் இல்லையே.
Like Reply
#13
Interesting bro
Continue
Like Reply
#14
can you also post ஓகே கண்மணி @ https://xossip.com/showthread.php?t=1436637
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#15
அருமை நண்பரே.....
கார்த்திக்கின் மாற்றம் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
தொடர்ந்து எழுதுங்கள்....
Like Reply
#16
அருமை நண்பர் பாலா அவர்களுக்கு நன்றி.
இந்த கதையை நிறுத்திய இடத்தில் இருந்து மறுபடியும் தொடங்கியதற்கு
Like Reply
#17
Thanks for continuing

Karthik might have some backup plan to stop it, anyway it is going to fail.
Like Reply
#18
Continue please
Like Reply
#19
karthick etho plan panran ???????
Like Reply
#20
bala nega thirumba vanthaku romba and story continue pannathuku thanks bala ....
karthick yna tha plan pandrananu papom ...........
keep rocking bro.....
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)